மத்திய அரசில் இருந்து விலகுவது பற்றி தன்னிடம் விவாதிக்கப்படவில்லை என்று அழகிரி வருத்தம் தெரிவித்துள்ளார். கவலை வேண்டாம் தலைவரே ! மிரட்டுவதும் பல்டி அடிப்பதும் நமக்கு புதுசா என்ன? ஒரு வாரம் பொறுங்கள். கனிமொழி மீது மீண்டும் விசாரணை துவங்கும். அப்போது ‘மதவாத ஹிந்துத்வா சக்திகளை’ விலக்கி, மதச்சார்பின்மையை நிலை நிறுத்த தியாகச் செம்மல் அன்னை சோனியா அவர்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம் உண்டாகும்.
அப்போது மீண்டும் மத்திய மந்திரி பதவி கிடைக்கும். நீங்களும் மதுரையில் ஓய்வு எடுக்கலாம்.
காலம் விரைவில் மாறும், உங்கள் கவலைகள் எல்லாம் தீரும்.