மனித இனத்திற்கு முந்தைய பருவம் குரங்கு என்று நாம் அறிவோம். பகுத்தறிவு மிகுதியால் பரிணாம வளர்ச்சி காரணமாக மனிதனானான் என்று அறிகிறோம்.
குரங்குகள் தங்களுக்குள் பேசுவதற்கு ஒரு மொழி வைத்துள்ளன. அதே போல் ஓராங் உட்டான், சிம்பன்சி, கொரில்லா போன்ற குரங்குகளும் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஒரு மொழி வைத்துள்ளன.
ஆனால் குரங்குகள் தங்களுக்குள் மொழி வேற்றுமையால் சண்டையிடுவதில்லை.அன்பு பரிமாற, உணவு வேண்ட, தத்தம் தொகுதி வரையறுக்க – இதற்கு மட்டுமே அவற்றிற்கு மொழி தேவைப் படுகிறது.
ஒரு குரங்கு இனம் ஒரு நாளும் பிறிதொரு குரங்கு இன மொழியைத் தாழ்த்திப் பேசியதில்ல்லை. மொழி காரணமாக வெறி அடைவதில்லை.
குரங்கோ அல்லது மற்ற மிருகமோ தனது மொழி தான் உயர்ந்தது என்று மார் தட்டியதில்லை.
ஏன் என்றால் அவற்றிற்குப் பகுத்தறிவு இல்லை.
பகுத்தறிவு படைத்த மனிதன் அப்படி அல்ல.
முன்னேறிய வகுப்பினரன் முதல் பின்னேறவே விரும்பும் வகுப்பினரன் வரை மொழி, சம்பிரதாயம் முதலான தனது படைப்புகளைக் கொண்டே வேற்றுமைகளை உண்டாக்கி சண்டை போடுகிறான். தார் பூசிவிடுவதால் ஒரு மொழியை அழித்துவிட முடியும் என்று நம்புகிறான். மொழியின் தொன்மை குறித்து பெருமை அடைகிறான். அதனால் வெறி பிடித்து அலைகிறான்.
மொழி தவிர மதம், இனம் , தோல் நிறம் என்று புதிது புதிதான காரணங்கள் கற்பித்து சண்டை போடுகிறான்.
ஏன் என்றால் மனிதன் பகுத்தறிவு படைத்தவன்.
மேலே சொன்ன கருத்துகள் மிகவும் முன்னேறிய வகுப்பினரான அந்தண வைஷ்ணவர்கள் தங்களுக்குள் தென்கலை- வடகலை வேறுபாடு, ராமானுஜ தயாபாத்ரம் – ஸ்ரீ சைலேச தயா பாத்ரம், வடகலை க்குள் உள்ள வீராப்பு வேறுபாடு முதலான புண்ணாக்கு வேறுபாடுகள் பற்றின அல்ல.
திவ்யப் பிரபந்தத்தில் எந்தப் பாசுரம் தொடங்குவது, எந்த தொனியில், ராகத்தில் தொடங்குவது, எந்த ஆச்சாரியனை- குரு பரம்பரையை முன்னிலைப்படுத்துவது , திருமண்ணை எந்த அகலத்தில் இட்டுக்கொள்வது, முதல் தீர்த்தம் யாருக்கு அளிப்பது என்று தற்கால மனித வாழ்வுக்கு ஆதாரமான பிரச்சினைகளை அலசும் ஐயங்கார் அறிவு ஜீவிகளைப் பற்றி நான் பேசவில்லை.
தயிர்வடை உசத்தியா, புளியோதரை உசத்தியா, அக்கார அடிசில் உசத்தியா என்ற ரீதியில் மட்டுமே வாதிடும் அளவுக்கு தத்துவ அறிவு படைத்து ஆனாலும் எதுடா காரணம் சண்டை போட என்று அலையும் தற்கால ஐயங்கார்களைப் பற்றி இங்கு பேசி குரங்குளை அவமானப் படுத்த விரும்பவில்லை.
நிஜமான குரங்குகளைப் பற்றி மட்டும் பேசுகிறேன். அவைகள் தங்களுக்குள் மேல் சொன்ன அற்ப காரணங்களுக்காக ஒரு போதும் சண்டை போடுவதில்லை.
அன்பார்ந்த ஸ்ரீமான். உ.வே……அவர்களுக்கு.
நான் சிறு வயதில் முதலில் கேட்ட காலக்ஷேபம் உ.வே.ஸ்ரீ.முக்கூர் லக்ஷ்மி ந்ருஸ்ம்ஹாசார்ய ஸ்வாமி அவர்களுடையது. நான் ஸ்ரீ வைஷ்ணவன் அல்லன். ஆனால் ஸ்ரீ வைஷ்ணவத்திலும் ஸ்ரீவைஷ்ணவர்கள் பாலும் மிகவும் மதிப்புடையவன்.
வைஷ்ணவம் என்றாலே என் நினைவுக்கு வரும் விஷயம்.
கொக்கைப் போல் இருப்பான் கோழியைப் போல் இருப்பான் உப்பைப் போல் இருப்பான் உம்மைப் போல் இருப்பான் என்று முக்கூர் ஸ்வாமி சொல்லியது. வ்ருத்தாந்தம் நினைவில் உள்ளது. ஆனால் யாரைப் பற்றி என்று நினைவில் இல்லை.
வடகலை தென் கலையார் தங்கள் தங்கள் சித்தாந்த வித்யாசங்களைப் பேணுவதில் ஹாஸ்யமான விஷயம் ஏதுமில்லை என்பது சிறியேனின் அபிப்ராயம். சித்தாந்த வித்யாசங்கள் இருக்கின்றன தானே.
ஆம். நீங்கள் சொல்லும் விஷயங்களை வாசிக்கையில்…. யானைக்கு எந்த நாமம் போடுவது…..ப்ரபந்தங்களை அடுத்தவர் காதில் தெளிவாக விழாத படிக்கு ஒருவரை ஒருவர் முந்தி உரக்கச் சொல்ல முயற்சித்தல்…..இத்யாதிகள் நான் வைஷ்ணவம் என்று மிக உயர்வாக மதிக்கும் விஷயத்திலிருந்து வித்யாசமாகவே தெரிகிறது. பின்னும் ஹரிபக்தர்கள் பால் தோஷாரோபணம் செய்ய மனம் மறுக்கிறது.
ஒருக்கால் எங்கள் வள்ளல் அருணகிரிப் பெருமானின் திருப்புகழில் (ஓதுவித்தவர் கூலிகொடாதவர்)
ஈசர் விஷ்ணுவை சேவைசெய்வோர் தமை இகழ்வோர்கள்
நரகுழல்வாரே
என்று இடித்துறைத்தமை ஹேதுவாக இருக்கலாம்.
தோஷங்கள் மட்டிலும் தென்பட்டால் குணங்கள் தென்படாதே.
குணங்களைப் போஷித்து தோஷங்களைச் சான்றோர்கள் வெளிப்படையாக உணர்த்தாது குறிப்பாலுணர்த்திப் பாமரர்களை உத்தாரணம் செய்வர் என்று கேட்டிருக்கிறேன். தேவரீர் வடகலை தென் கலையார் தோஷங்களைப் பெரிசாகச் சொல்லி குணங்களை சொல்லாது விட்டீர்கள் என்று சிறியேனுக்குத் தோன்றுகிறது.
இருவரிடமும் உள்ள போற்றத் தகுந்த குணங்களைத் தேவரீர் தனியொரு வ்யாசமாக சமர்ப்பித்தால் வைஷ்ணவத்தின் மீது மதிப்புடைய சிறியேன் போன்றோர் உகப்புடன் வாசித்து எங்கள் வைஷ்ணவ அபிமானத்தை அபிவ்ருத்தி செய்து கொள்ளலாமே.
ஆழ்வார் திருவடிகளே சரணம். அடியேன் சரணம்.
LikeLike