“மீண்டெழும் பாண்டியர் வரலாறு ” புத்தகம் தடை செய்யக்கூடாது என்று பலர் கூறுகின்றனர். நானும் ஆமோதிக்கேறேன்.
தடை கூடாதென்று இன்று முழங்குபவர்கள் சில மாதம் முன்பு அம்பேத்கார் — நேரு சம்பந்தப்பட்ட கேலிச்சித்திரம் தொடர்பாக என்ன கூறினார்கள் என்று பார்ப்பது நம் பகுத்தறிவுக்கு நல்லது.
ஹிந்தி எதிர்ப்பைக் கேலி செய்யும் இன்னொரு கேலிச்சித்திரத்தை நடுவணரசுப் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் சில அறிவு ஜீவிகள் கூறினார்கள்.
இவர்கள் பின்வருமாறு :
கருணாநிதி , வைகோ, தா.பாண்டியன், வீரமணி, ராஜா ( சி.பி.ஐ-எம் ), திருமாவளவன், விஜயகாந்த்.
இவர்கள் இப்போது தடை கூடாது என்கிறார்கள் என்று அறிகிறேன்.
இப்படி இரண்டு நாக்குடன் பேசுவது பகுத்தறிவின் அடுத்த பரிணாம வளர்ச்சி என்று நாம் எல்லாரும் அறிய எல்லாம் வல்ல பகுத்தறிவை வணங்குகிறேன்.