தலைப்பைப் பார்த்தவுடன் நீங்கள் ஊகித்திருக்க முடியும். ஆமாம். பா.ஜ.க.வின் தமிழகக் கூட்டணியைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
கூட்டணியில் இருப்பதில் வை.கோ. தவிர ம.தி.மு.க. வில் யாரும் இல்லை. அவர் நல்ல மனிதர் தான். ஆனால் கொஞ்சம் இந்தியாவைப் பார்த்தால் நல்லது. எப்போதுமே இலங்கையையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்றால் தன் பெயரை ‘அரங்கநாதன்’ என்று மாற்றிக்கொள்ளலாம். விபீஷணன் ஆட்சி செய்வதைக் கண்காணிக்க தெற்கு நோக்கிப் படுத்திருக்கிறார் ஸ்ரீரங்கம் ரங்கனாதர்.
வை.கோ. வெற்றி பெற்று அவருக்குக் கல்வி அல்லது கலை அல்லது சுற்றுப்புறச் சூழல் அமைச்சுகள் அமைந்தால் நாட்டுக்கு நல்லது.
பா.ஜ.க.வின் கூட்டணியில் இருக்கும் ஒரே நல்ல கட்சி இவரது தான். ஆனால் இவர் மட்டுமே தான் கட்சியில் இருக்கிறார் என்பது ஒரு வருத்தம்.
மற்ற இரண்டு கூட்டணிக் கட்சிகள் பற்றிப் பேசுவதற்கு முன்னால் கொஞ்சம் அஜீரண மருந்து உட்கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது.
சாதியை மட்டுமே முன் நிறுத்தும் வன்முறை இயக்கம் ஒன்று. தரம் தாழ்ந்த வசை பாடிக் கட்சி இன்னொன்று. இந்த இரண்டினால் பா.ஜ.க. அடையப் போவது என்ன ?
இலக்கு முக்கியம் என்றால் அதற்கான வழிமுறையும் முக்கியமே. வெற்றி பெறுவது அவசியம் தான். ஆனால் யாருடன் கூட்டு வைப்பது என்று ஒரு தரம் வேண்டும் என்பது என் கருத்து.
ஒரு பக்கம் மோதி, அத்வானி, வாஜ்பாய் என்று சொல்லிக்கொண்டு இன்னொறு புறம் இந்த இரண்டு கூட்டங்களுடன் சேருவது என்ன நேர்மை என்று தெரியவில்லை.
பேசாமால் இடது சாரியுடன் சேர்ந்திருக்கலாம். பெரிய வித்யாசம் இல்லை. தேசத்துரோகம் என்று ஆகிவிட்டது. கொஞ்சம் பழைய தேசத் துரோகிகளுடன் சேர்ந்திருக்கலாம்.
ஒரு வேளை பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அதில் தேசத் துரோகம் என்னும் கறை இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
‘கண்கள் இரண்டிருந்தும் காணும் திறமை அற்ற பெண்களின் கூட்டமடி..’ என்று பாரதியார் பாடியது பா.ஜ.க.பற்றித்தானோ ?