இலக்கிய வட்ட ஆஸ்தான புலவர் திரு.வரதராசன் அவர்கள் காரைக்குடி கம்பன் கழக விருது பெற்றதற்குப் பாராட்டு நடந்தது.
திரு.வரதராசன் அவர்கள் ‘அன்னையின் ஆணை’ என்னும் பெயரில் கம்பன் இலக்குவனைப் பற்றி எழுதியது என்ன என்பது பற்றி ஒரு நூல் எழுதியிருந்தார். காரைக்குடி கம்பன் கழகம் அந்த நூலைப் பார்த்து அதற்குப் பாராட்டு தெரிவித்து அவருக்கு விருது அளித்தது.
வெண்பாப் புலவர் என்றே நாங்கள் அறிந்த திரு.வரதராசன் அவர்கள் இவ்வாறு பாராட்டு பெற்றது எமது இலக்கிய வட்டத்திற்குக் கிடைத்த விருது என்று கருதுகிறோம்.
முனைவர் மோகன் ,முனைவர். திண்ணப்பன் ஆகியோர் இன்னொரு விருது வழங்கி அன்னாரைக் கௌரவித்தனர்.