பொதுவாக நான் காப்பி அடிப்பதில்லை. ஆனால் இந்த முறை ‘துக்ளக்’ இதழ் அட்டைப்பட கார்ட்டூன் ரொம்பவும் அட்டகாஸம். எதனால் அடி விழுந்தது என்று தெரியவில்லை; இவ்வளவு பலமான அடி இதுவரை விழுந்ததில்லை; ஆ.ராசாவுக்கு எதிராக இந்தியாவிலேயே அதிகமான அளவில் நோட்டா விழுந்துள்ளது. ஊழல் முதலைகள் தயாநிதி,பாலு, ராசா என்று அனைவரும் பலமான அடி வாங்கினர்.
பா.ஜ.க.அலை வீசியது என்று காரணம் சொன்னால் மதவாத தீட்டு வந்து விடும்; காங்கிரஸ் கூட்டணி இல்லாததால் தான் இந்த அடி என்றால் இலங்கை தீட்டு வந்துவிடும். ஊழல் வெற்றி பெற்றது என்று சொல்ல முடியவில்லை. ஜெயலலிதாவின் வெற்றி பா.ஜ.க.வினால் தான் என்றும் சொல்ல முடியாத வகையில் அவர்களுக்குள் கூட்டணியே இல்லை. தனியாக நின்று அம்மையார் வெற்றி பெற்று மிகப்பெரிய தோல்வியை வழங்கியுள்ளார். வரலாறு காணாத தோல்வி இது.
கட்சியே கல கலத்துப்போய் இருக்கிறது. இப்படி இருக்கும் வேளையில் வீரமணியின் நகைச்சுவை வடிவேலுவை மிஞ்சுகிறது. அவருக்குக் காசா பணமா. பகுத்தறிவு மானம், தமிழ் இன மானம், திராவிட மானம் என்று எதையாவது சொல்லிக் காலட்சேபம் செய்ய வேண்டும்.
அதனால் மிச்சம் மீதி உள்ள தி.மு.க.வை சீண்டிப் பார்க்கலாமே என்று எண்ணுகிறார் போலும் வீரமணி.
விஷம், நெருப்பு, வியாதி, பகை – இவை நான்கையும் வேரும், வேரடி மண்ணும் இல்லாமல் அழிக்க வேண்டும். தி.மு.க., தி.க., இடது சாரி, சாதிக் கட்சிகள் என்பவையே இந்த நான்கும் என்பது என் கருத்து.