உங்களுக்கு ( 'பஹுத்' ) அறிவு இருக்கா ?

“அது ஒரு உடம்பு. உளறுவது என்பதே அந்த உடம்பு.

பொதுவாக திராவிடக் கட்சிகளுக்கே இந்த உடம்பு வரும். வாயில் வந்ததைப் பேசுவார்கள். கேட்டால் சமூக நீதி என்பார்கள். இதற்கு ‘பகுத்தறிவு’ என்றும் பெயர் உண்டு.

20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் கன்னடம் பேசும் தமிழ்நாட்டுத் தமிழர் ஒருவர்  ‘பகுத்தறிவு’ என்பதைக் கண்டுபிடித்து உலகிற்கு வழங்கினார். அன்றிலிருந்து மக்களுக்குப் பகுத்தறிவு ஏற்பட்டது. அதுவரை வெறும் மண் உருண்டைகளாக இருந்தவர்கள் திடீரென்று உயிர் பெற்றனர். அறிவும் சேர்ந்து பெற்று நன்மை அடைந்தனர்.

அந்தக் கண்டுபிடிப்பாளரின் பேரன் தற்போது ஒரு  விஷயத்தைக் கண்டுபிடித்துள்ளார். இது மாபெரும் கண்டுபிடிப்பு என்பதால் அனேகமாக ‘நோபல்’ பரிசு கிடைக்க வழியுண்டு. ஆக அடுத்த நோபல் பரிசு தமிழகத்துக்கே.

அப்படி அவர் என்ன கண்டுபிடித்தார் ?

60 வயதிற்கு மேல் உள்ள ஒரு ஆணும் பெண்ணும் ஒரு மணி நேரம் பேசினால் அவர்களுக்குள் வேறு ஒன்றும் நடந்திருக்காது. அதில் ஆண் நாட்டின் பிரதமர். பெண் மாநிலத்தின் முதல்வர். கண்டுபிடித்த அறிவியல் அறிஞர் தேர்தலில் டெப்பாசிட் இழந்த கட்சியின் தலைவர்.

இப்படி ஒரு கண்டுபிடிப்பைக் கண்டு பிரின்ஸ்டன் பல்கலைக் கழகம் விழிபிதுங்கி நிற்கிறது. ஹார்வார்ட் பல்கலைக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிடும் போல் உள்ளது. ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் எல்லாம் ஆடிப்போய் உட்கார்ந்துவிட்டன. இவ்வளவு செலவு செய்கிறோம் ஆனால் இம்மாதிரி கண்டுபிடிக்க முடியவில்லையே என்று இவை கசிந்து உருகுகின்றன.

ஆனால் இவற்றால் ஒன்றும் செய்ய முடியாது. எத்தனை டாலர் செலவழித்தாலும் இம்மாதிரியான கண்டுபிடிப்பை இவர்களால் நிகழ்த்த முடியாது.

ஏனெனில் இப்படிக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு மரபணு ( ஜீன்) வேண்டும். அந்த ஜீன் இந்த நவீன அறிவியலாளரிடம் உள்ளது. அவரிடம் மட்டுமே உள்ளது.

அது தான் ‘பகுத்தறிவு’ ஜீன்.

ஹிந்தியில் ‘பஹுத்’+ ‘அறிவு’ என்று அறியப்படும் அளவுக்கு அதிகமான அறிவு. இந்திய வம்சாவளியில் ‘கள்’ தோன்றி மண்ணாந்தைகள் தோன்றாத காலத்திலேயே ‘வாலோடு’ முன் தோன்றி மானத்தை வாங்கிய மூட குடியில் ஈரோட்டுப் பாசறையில் தோன்றியிருந்தால் மட்டுமே இப்படியெல்லாம் கண்டுபிடிக்க முடியும்.

இந்தக் கட்சியின் சவப்பெட்டியில் அனேகமாக எல்லா ஆணிகளுமே அடிக்கப்பட்டு விட்டன. டெல்லியில் ஒருவர் அந்தத் திருப்பணியைத் திறம்படச் செய்து வருகிறார். தமிழ் நாட்டில் இன்னும் வேகமாக ‘பஹுத்’ அறிவின் பேரன் செயதுள்ளார்.

அனேகமாக கட்சியைக் கலைக்க வேண்டும் என்னும் காந்தியின் கனவை இவர்கள் ‘பஹுத்’ அறிவுப் பரட்சி மூலம் செய்து முடிக்க எல்லாம் வல்ல இத்தாலியம்மனை வேண்டுகிறேன்.”

Disclaimer :

I hereby declare that I have not made the above statements. When I sat in front of the computer, I heard a voice that commanded me to write whatever I heard. My hands automatically moved over the keyboard and I saw the characters appear on the screen.

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

One thought on “உங்களுக்கு ( 'பஹுத்' ) அறிவு இருக்கா ?”

  1. ……இந்திய வம்சாவளியில் ‘கள்’ தோன்றி மண்ணாந்தைகள் தோன்றாத காலத்திலேயே ‘வாலோடு’ முன் தோன்றி மானத்தை வாங்கிய மூட குடியில் ஈரோட்டுப் பாசறையில் தோன்றியிருந்தால் மட்டுமே இப்படியெல்லாம் கண்டுபிடிக்க முடியும்….

    அருமையான கண்டுபிடிப்பு :)))))

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: