'புத்தகத்தின் பெருநிலம்' -ஒரு பார்வை

puthakathin_perunilam

மார்க்ஸீய எழுத்தாளர் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய ‘புத்தகத்தின் பெருநிலம்’ நூலைத் தவறவிடாதீர்கள்.

‘உங்கள் நூலகம்’ என்று ஒரு இதழ் வருகிறது அல்லவா?  அதில் வந்த பல நூல்களைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

சமூகம், சமயம், சார்ந்த கட்டுரைகள் பல இருந்தாலும் எனக்குப் பிடித்தது தமிழகத்தில் நூல்கள் அச்சடிக்கப்பட்ட வரலாறு பற்றிய கட்டுரை. தமிழில் நூல்கள் வருவதற்கு உதவிய பெரியவர்கள், அவர்கள் சார்ந்த சமூகங்கள். சில பழைய எழுத்தாளர்கள், நூல்களைப் பதிப்பிக்க நம் முன்னோர் செய்த முயற்சிகள்  முதலியன  குறித்த செய்திகள் நம்மைப் பெருவியப்பில் ஆழ்த்துவன.

சமூகம் சார்ந்த கட்டுரையில் ‘அந்தர்ஜனம்’ என்ற நம்பூதிரி பிராம்மணப் பெண்கள் பற்றிய கட்டுரை மனதை ஏதோ செய்கிறது.

‘புத்தகத்தின் பெருநிலம்’ – நூல்களை விரும்புபவர்களுக்கு நல்ல விருந்து.

'நம்ம கிராமம்' – என் பார்வை

namma kiraamamதிரைப்படங்கள், டி.வி. பார்ப்பதில்லை என்று சில வருடங்களாக இருந்து வருகிறேன். மன நிம்மதி வேண்டும் என்பதற்கான நடவடிக்கை இது. இதையும் மீறி, ‘நம்ம கிராமம்’ என்னும் திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது.

மிகுந்த மன உளைச்சலையும் பாதிப்பையும் ஏற்படுத்திய படம் ‘நம்ம கிராமம்’. இப்படி ஒரு படம் வந்தது தெரியாமல் நான் இருந்திருக்கிறேன்.

50-60 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாலக்காட்டு பிராமணக் கதை. தமிழ் நாட்டிலும் பரவலாக இருந்த விதவைக் கோலங்கள் பற்றிய கதை இது. பல நிகழ்வுகள் நாடகத்தன்மையுடன் இருந்தாலும் ஒரு மாபெரும் கொடுமையை சித்தரிக்கும் இந்தப் படம் தமிழ் நாட்டில் ஓடியதா என்று தெரியவில்லை. ஓடியிருக்க வாய்ப்பில்லை.

கதையில் சித்தரிக்கப்பட்ட ‘பெண்ணின் தலைமுடியை எடுத்தல்’ என்னும் நிகழ்வு 1955-ல் என் வீட்டிலும் நிகழ்ந்தது. என் பாட்டி தனது 36-வது வயதில் இந்தக் கொடுமைக்கு ஆளானார். இது நிகழவில்லை என்றால் இறந்த அவரது கணவருக்கு ( என் தாத்தாவிற்கு) மாதாந்திர திவசக் காரியங்களுக்கு வைதீகர்கள் வரமாட்டார்கள். ஊரிலிருந்தும் ஒதுக்கப்படுவோம் என்னும் நிலையில் இந்தக் கொடுமையை என் பாட்டி ஏற்றுக்கொண்டார். 87 வயது வரை வாழ்ந்த அவரை நாங்கள் வெள்ளை நார்மடிப் புடவையில் தான் பார்த்துள்ளோம்.

ஒவ்வொரு முறை தீபாவளியின் போதும் நாங்கள் எல்லாம் வண்ண வண்ண ஆடைகளைப் பாட்டியிடம் கொடுத்து வாங்கி அணியும் போது, அவர் தீபாவளி முடிந்தபின் எங்கள் வற்புறுத்தலின் பேரில் புதிய வெள்ளை  நார்மடிப் புடவை அணிவார். அந்தக் கொடுமை ரொம்ப நாள் வரை எனக்குப் புரிந்ததில்லை. புரிந்த போது பாட்டிக்கு அது எதுவும் உறைப்பதில்லை என்று ஆனது.

ஓரளவு வயது வந்த பின் நான் இதுபற்றிப் பாட்டியிடம் கேட்டுள்ளேன்.

‘போடா. அது அந்தக் கால வழக்கம். வேற யாருக்கும் இந்த நிலை இனிமே வரக்கூடாது. நன்னா படி போ’ என்று ஆழ்ந்த பெருமூச்சுடன் சொல்லியிருக்கிறார். 36ல் இருந்து 87 வரை அந்த மனதில் எத்தனையோ ஆசாபாசங்களைப் பூட்டி, குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணிய அந்த ஆத்மாவை இந்தப் படம் நினைவூட்டடியது.

படத்தில் ஒரு கேள்வி உண்டு. வேடிக்கை என்கிற பெயரில் வரும் ஒய்.ஜி.மகேந்திராவின் காமெடி டிராக் எதற்கு?

பகுத்தறிவு ராசி

‘சம்ஸ்கிருதத்தை விரட்டுவோம்’ என்பவர்கள் கம்பனின் இந்தப் பாடலை ஒருமுறை படிக்கவும்.

“தேவபாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும் முந்திய
நாவினான் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்புஅரோ”

‘தேவ பாஷையில் மூவர் இராமனின் கதையைச் செய்தனர் ( வால்மீகி, வஸிஷட்டர், போதாயனர்). இவர்களில் முதன்மையானவராக வாழ்மீகியின் வாக்கினை நான் தமிழில் தருகிறேன்’ என்கிறார் கம்பர்.

அவர் சம்ஸ்கிருதம் அறிந்திருக்காவிடடால் இன்று கம்பராமாயணம் நமக்குக் கிடைத்திருக்குமா பெரியோர்களே. சொல்லும் முன் சற்று சிந்திக்க வேண்டாமா? கம்பன் இராமாவதாரம் செய்திருக்காவிடடால் பாரதி,

“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வாள்ளுவர்போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை”
என்று பாடியிருக்க முடியுமா? கோட்டை விட்டீரே ஐயா. வீட்டில் பிரச்சினை தான். தெரிகிறது. இப்படி அவசரப்பட்டிருக்க வேண்டாம் இல்லையா?

அது மட்டுமா கம்பன் சொன்னான்? ‘இராம காதை ஏன் எழுதினேன்’ என்பதையும் சொல்லிவிட்டான்.

பகுத்தறிவாளர் யாராகிலும் வந்து,’ கம்பன் பணம் பண்ணுவதற்காகத்தான் சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழில் இராம காதையை எழுதினான்’ என்று சொன்னால் என்ன செய்வது என்பதாலோ என்னவோ தான் எழுதிய காரணத்தையும் சொல்லிவிட்டான்.
“ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை, முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன்மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ”

“பெரிய ஓசை உடைய பாற்கடலைக் காண்கிற பூனை அதனை முழுவதும் நக்கிக் குடித்துவிட வேண்டும் என்று விரும்புவதைப் போல, குற்றமற்ற புகழுடைய இராமனது கதையை நான் என்னுடைய ஆசையினாலே சொல்லத் துவங்குகின்றேன்”

ஆக உங்களுக்கு இங்கும் முட்டுக்கட்டை தான்.  தமிழைச் சரியாகப் பயின்றிருக்க வேண்டும். அல்லது பயின்றவர் யாரிடமாவது சென்று கேட்டிருக்க வேண்டும். இரண்டும் இல்லை என்றால் ‘மௌன விரதம்; இருக்கலாம் . மன்னிக்கவும். விரதம் இல்லை. நோன்பு, பேசா நோன்பு.

ஆனால் ஒன்று. நீங்கள் ஆதரிப்பது (அ) ஆதரிப்பது போல் காட்டிக்கொள்வது  உருப்படுவதில்லை. உதா: இலங்கை. நீங்கள் எதிர்ப்பது வளர்கிறது. உ.தா: விநாயகர் வழிபாடு. என்ன செய்வது? ராசி அப்படி.

எனவே கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். ஒரேயடியாக சம்ஸ்கிருதத்தை எதிர்த்தால் அது வளர்ந்துவிடும். பகுத்தறிவு ராசி அப்படி.

எப்படி வசதி?

'ஆளண்டாப் பட்சி' -என் பார்வை

Alanda patchi - perumalகவுண்டர்கள் வாழ்க்கை முறை, அவர்களது வேளாண்மை குறித்த புரிதல்கள், கொங்கு மண்டல சாதி அடுக்குகள், வெகு நாட்கள் கழித்துக் கேட்கும் கொங்கு மண்டல வட்டார மொழி – இவை அனைத்தும் சேர்ந்த நல்ல படைப்பு ‘ஆளண்டாப் பட்சி’ என்னும் இந்த நாவல்.

பெருமாள் முருகன் கொங்கு மண்டல வார்த்தையாடல்களை மனக்கண் முன் கொண்டு வருகிறார். விறு விறுவென்று முன்னேறும் இந்த நாவல், குடும்பம் உடைவதால் கொங்கு மண்டல வேளாணமைக்  குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்களை வேகம் குறையாமல் காண்பிக்கிறது.

நான் சேலத்தில் சில ஆண்டுகள் இருந்து படித்தவன். வேளாண்மைத் தொழில் செய்யும் சில கவுண்டர் குடும்பங்களை அறிவேன். அவர்களது கடின உழைப்பை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன். அந்தப் பழைய நினைவுகளை இந்த நாவல் மீட்டுக் கொண்டுவந்தது.

நாவலின் பெயர்ப்பொருத்தம் அபாரம். தமிழ் மொழியின் அழகே அதன் வட்டார வழக்குகள் தான் என்பது என் எண்ணம். உங்களுக்குத் தமிழின் வட்டார வழக்குகளில் விருப்பம் இருந்தால் இந்த நாவல் உங்களை மகிழ்விக்கும்.

பெரியார் பற்றிய ஒரு பேச்சு கதைக்கு ஓடடாமல் வருகிறது. திணிக்கப்பட்ட ஒன்று என்று தெரிகிறது. போனால் போகட்டும். சாதி, ஆசிரியரின் ஆழ்மனதில் உறைந்துகிடப்பதைக் கதை முழுவதும் உணர முடிகிறது. வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்பது சொல்லாமல் சொல்லப்படுகிறது. நல்ல விஷயம் தான்

பி.கு. : ஆசிரியரின் அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அவர் தமிழ் எழுத்தாளர் என்கிற முறையிலும், கொங்கு வடடார எழுத்தின் ஒரு பிரதிநிதி என்னும் அளவிலும் இந்த நாவலை நான் விரும்புகிறேன்.

கலைஞருக்குக் கடிதம்

மஹாமஹோபாத்யாய ஶ்ரீ.உ.வே. கருணாநிதி ஸ்வாமி சன்னிதியில் அடியேன் அசட்டு அம்மாஞ்சி அனேக தெண்டன் சமர்ப்பித்த விஞ்ஞாபனம். உபய க்‌ஷேமம்.

மன்னிக்கவும். ‘ஸ்வாமி’ என்று போட்டது தவறு தான். அது தமிழ் இல்லை. ஆகையால் ‘சுவாமி’ என்று போடலாம் என்று பார்த்தால் அது சுப்பிரமணிய சுவாமியை நினைவு படுத்துவது போல உள்ளது. எனவே ‘ஸ்வாமி’ தான். வேறு வழி இல்லை. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.

மறுபடியும் மன்னிக்கவும். ‘உ.வே’ என்று போட்டது தவறா இல்லையா என்று தெரியவில்லை. ‘உபய வேதாந்த’ என்பதன் சுருக்கம் அது. சமஸ்கிருத வேதாந்தம் தமிழ் வேதாந்தம் என்று இரண்டு வேதாந்தங்களிலும் சிறந்தவர்களை அப்படிச் சொல்வது வழக்கம். ஆனால் தாங்களோ மிகப்பெரியவர். தங்களுக்கு எவ்வளவு மொழிகளில் பாண்டித்யம் என்று அளவிட முடியாது. எனவே ’N வே’  ‘where N tends to Infinity’ என்று வைத்துக்கொள்வோம். சரி தானே?

அதிருக்கட்டும். சமஸ்கிருதம் வேண்டாம் என்கிறீர்களாமே. ராமானுசர் பற்றி எழுதுகிறீர்கள் என்று சொன்னார்கள். ராமானுஜன் என்பது சமஸ்கிருதம். ஆமாம், ராமானுசர் எத்தனை தமிழ் நூல்கள் எழுதினார்? அவர் எழுதியதெல்லாம் சமஸ்கிருதம் தானே? நீங்கள் தான் அந்தத் தொடர் எழுதுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம்.

இல்லை இல்லை. யாரோ எழுதிக்கொடுத்து நீங்கள் பெயர் போட்டுக்கொள்கிறீர்கள் என்கிற பொருளில் நான் சொல்லவில்லை. வயதானதால் உங்களால் எழுத முடியாதே என்பதால் சொல்கிறேன். அவர் சொன்னதெல்லாம் சமஸ்கிருதத்தில் இருப்பதால் உங்களுக்கு எப்படிப் புரிகிறது?

ஆனால் ஒன்று. உங்களுடன் பெரியாரும் அண்ணாவும் அடிக்கடி கனவில் வந்து உரையாடுவார்கள். ஒருவேளை அவர்கள் சொல்லியிருக்கலாம். ஏனெனில் ‘அண்ணா அன்றே சொன்னார்..’ என்று சொல்லிவிட்டால் ஒரு பயல் கேள்வி கேட்க முடியாது இல்லையா?

சரி போகட்டும். நீங்கள் காலையில் யோகாசனம் செய்கிறீர்கள் என்று படித்தேன். யோகம் என்பதும் ஆசனம் என்பதும் சமஸ்கிருதம் அல்லவா? நீங்கள் நியாயப்படி பார்த்தால் காலையில் சிலம்பம் சுற்றியிருக்க வேண்டும். எழுந்து நிற்க வேண்டாம். அமர்ந்தபடியே சுற்றலாம். எதற்குச் சொல்கிறேன் என்றால் யோகாசனம் செய்யச் சொல்லி ஆர்.எஸ்.எஸ். உங்களை அவர்கள் வழிக்குக் கொண்டுவந்து விடுவார்கள். எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கள். மன்னிக்கவும். சாக்கிரதையாக இருங்கள்.

இன்னொரு விஷயம். இல்லை, இன்னொரு செய்தி. ரூபாய் நோட்டில் இந்தியில் எழுதியுள்ளார்கள். எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். மெல்ல மெல்ல இந்தியை உங்களிடமும் திணிக்கிறார்கள். ஒன்று செய்யலாம். அந்த இந்தி எழுத்தின் மேல் தார் பூசிவிடலாம். தெரிந்த கலை தானே. இல்லாவிட்டால் டாலர் நோட்டு மட்டுமே பயன்படுத்துங்கள். சேமிப்பில் உள்ளதை எடுத்த மாதிரியும் இருக்கும்; இந்தியை யாரும் திணிக்கவும் முடியாது. என்ன இருந்தாலும் ஆங்கிலம் நம் பாட்டன் மொழி அல்லவா? எப்படி அடியேனின் பகுத்தறிவு? எல்லாம் நீங்கள் போட்ட பிச்சை.

ஸ்டாலின் என்னும் பெயரை எப்படித் தமிழில் எழுதுவது என்று மட்டும் கொஞ்சம் சொல்லிவிடுங்கள். ‘சுடாலின்’ என்று எழுதினால் என்னவோ போல் இருக்கிறது. சரி. ரொம்ப யோசிக்க வேண்டாம். ‘அண்ணா கனவில் சொன்னார். ஸ்டாலின் என்பது தமிழ் தான்,’ என்று ஒரு போடு போட்டுவிடுங்கள். கனவில் கருத்து வருவதுதான் பகுத்தறிவு ஆயிற்றே.

இன்னொரு விஷயம். தாம்பரத்தில் ஒரு மாதா கோவில் உள்ளது. தமிழக, திராவிட இனம் சார்ந்த கலை அம்சங்களுடன் அது பெரிய கூம்பு கோபுரமும் அதன் மேல் சிலுவையும் இருக்கும். அப்படி இருப்பது பகுத்தறிவும் கூட. ஆனால் சமீப காலமாக அங்கு பிற்போக்கு பாசிச இந்துத்வ முறைப்படி தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரம், மணி முதலியன வைத்துள்ளார்கள். இது எத்தனை கொடூரம்? எந்த வழிபாட்டு முறைகளை நீங்கள் ஒழிக்க முற்பட்டீர்களோ அவையே இன்று மாதா கோவில்களிலும் தென்படுகின்றன. இதற்குப் பின்னும் ஆர்.எஸ்.எஸ். இருக்கலாம். தேர்தலில் உங்களுக்கு ஆதரவளித்த பேராயர்களிடம் சொல்லி வையுங்கள்.

அது இருக்கட்டும். ‘ரகுராம் ராஜன்’ விவகாரத்தில் நீங்கள் இன்னமும் போராட்டத்தில் குதிக்காதது ஏன்? அவர் தமிழர் மாதிரிதான் தெரிகிறார். ப.சிதம்பரம் கூட அவருக்குக் குரல் கொடுக்கிறார். அவரது பெயரில் ‘ராம்’ இருப்பதால் நீங்கள் இன்னமும் போராட்டத்தில் குதிக்கவில்லையா? மோதி அரசு அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கவில்லை. எதற்கும் இருக்கட்டும். நீங்கள் ஒரு போராட்டம் அறிவியுங்கள். ஒரு அரை மணி நேரம் கடற்கரையில் அமர்ந்தது போலவும் இருக்கும். போராட்டம் நடத்தினது போலவும் இருக்கும். வீரமணியும் சும்மாதான் இருக்கிறார். அவர் வந்து பழச்சாறு கொடுத்து உங்கள் அரை மணி நேர கால வரையற்ற சாகும்வரை உண்ணா விரதத்தை முடித்து வைப்பார். மன்னிக்கவும். ‘விரதம்’ வட மொழி. ‘நோன்பு’ சரியாக இருக்குமா?

‘ஆயுர்வேதம்’ என்றொரு முறையைக் கொண்டுவரப் பார்க்கிறார்கள். பெயரிலேயே ‘வேதம்’ இருக்கிறது. நமக்கு ஆகாது. ‘ஆயுர்’ என்பதும் வடமொழி தான். எனவே இதுவும் சமஸ்கிருதத் திணிப்பே. உடனே போராட்டம் துவங்குங்கள். கொஞ்சம் விட்டால் வை.கோ. முந்திக்கொண்டு விடுவார். பாரதியாரை விடுங்கள். ‘வேதம் வளர்த்த தமிழ் நாடு’ என்று சொல்லிவிட்டார் என்பதால் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கட்டாயமா என்ன? வள்ளுவர் கூட ‘கள் உண்ணாமை’ என்று ஒரு அதிகாரம் வைத்தார். அவர் பெயரைச் சொல்லிக்கொண்டே நீங்கள் மது விற்பனை செய்யவில்லையா என்ன?

‘சித்த மருத்துவம்’ தமிழர் முறை என்று சொல்கிறார்கள். ஆனால் ‘சித்த’ என்பது வடமொழியிலும் வருகிறது என்கிறார்கள். எதற்கும் தமிழறிஞர் வீரமணியைக் கேட்டுவிடுங்கள். அல்லது இருக்கவே இருக்கிறது ‘கனவு’ வழி. அண்ணா, பெரியார் யாராவது கனவில் வருவார்கள். கேட்டுப் பாருங்கள். இல்லையென்றால் சில ‘சித்த சுவாதீனம்’ இல்லாதவர்கள் இதைப் பற்றி எழுதுவார்கள்.

‘திருமங்கையாழ்வார்’ என்று ஒரு பழைய ஆள் இருந்தார். இவர் கள்ளர் மரபினர். ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாசுரங்களை அவர் பாடியுள்ளார். 9-ம் நூற்றாண்டுக்காரர். எனவே பெரியார் வழி, அண்ணா வழி நடக்க அவருக்கு வாய்ப்பில்லை. அதனால்தான் ‘செந்தமிழும் வடகலையும் நவின்ற நாவர்..’ என்று தேரழுந்தூர்ப் பாசுரத்தில் சொல்கிறார். தமிழையும் சமஸ்கிருதத்தையும் சரளமாகப் பேசிய மக்கள் இருந்த ஊர் என்னும் பொருளில் சொல்கிறார்.

எதற்குச் சொல்கிறேன் என்றால் ‘ஆழ்வார்களை மீட்டெடுப்போம்’ என்று போராட்டம் துவங்கலாம். திருமங்கையாழ்வார், ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலால் இப்படி எழுதினார் என்று வீரமணியிடம் ஒரு வார்த்தை சொல்லுங்கள். பொங்கி எழுந்து அவரும் வந்து விடுவார். வயதான காலத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அவரும் குழம்பியுள்ளார். கொஞ்சம் பார்த்துச் செய்யுங்கள்.

‘கச்சத் தீவை மீட்டெடுப்போம்’ என்று ஒரு நல்ல காமெடி நாடகம் நடத்துவது போல ‘ஆழ்வார்களை மீட்டெடுப்போம்’ என்று சொன்னால் கொஞ்ச காலம் காலட்சேபம் ஓடும். ‘காலட்சேபம்’ தமிழ் இல்லை தான். ‘பிழைப்பு’ என்று சொல்வது ரொம்பவும் ஒரு மாதிரி இருக்கிறது.

தொல்காப்பியர் வடமொழி பற்றிச் சொல்கிறார். அவ்வையார் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்கிறார். பிதா, தெய்வம் எல்லாம் சமஸ்கிருதம் என்று கூட தெரியாத அளவிற்கு ஆர்.எஸ்.எஸ். அவர்களையும் மாற்றிவிட்டது. ‘தொல்காப்பியத்தை மீட்போம்’, ‘அவ்வையைக் காப்போம்’ என்றும் துவங்கலாம். கச்சத்தீவு மாதிரி இவையும் ‘விளங்கும்’. உங்களுக்கும் இன்னும் 2-3 ஆண்டுகளுக்கு பிழைப்பு ஓடும். பிழைப்பதற்கு சொல்லியா தரவேண்டும் ?

வடிவேலுவும் இப்போது இல்லை. சந்தானம், பரோட்டா சூரி எல்லாம் சகிக்கவில்லை. நீங்கள் தான் ஒரே கதி. எங்கள் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போட்டுவிடாதீர்கள். அவ்வளவு தான்.

உங்களை நகைச்சுவைக்கு என்றும் நம்பியுள்ள,

அசட்டு அம்மாஞ்சி.

நான் இராமானுசன் – சில விளக்கங்கள்

நான் இராமானுசனை பக்திக் கண்ணோட்டத்துடன் படிப்பது சிரமம் தான். இராமானுசரையோ திருமாலையோ மிக மிக உயர்த்திப் பேசும் சம்பிரதாயப் பேச்சுக்களும் வழக்குகளும் இதில் இருக்காது. இது கொஞ்சம் கதை, நிறைய தத்துவம் என்கிற அளவில், ‘விசிட்டாத்வைதம்’ குறித்த புரிதலுக்கும் அறிமுகத்திற்கும் ஒரு வழி.

சம்பிரதாயமான நூல்களில் அதீதமான மிகைப்படுத்தல்களும், நம்ப முடியாத, நம்பத் தேவை இல்லாத புனை கதைகளும் தென்படும். அவை ‘நான் இராமானுசனில்’ இருக்காது. நடைமுறை விசிட்டாத்வைதம் என்னும் அளவில் அந்த சித்தாந்தம் குறித்த புரிதல் ஏற்படுவதற்காக, விசிட்டாத்வைதத்தின் சமன்வயப் பார்வை வெளிப்படும்படியாக எழுதப்பட்ட நூல் இது.

இந்தியச் சிந்தனை மரபின் ஊற்றுக்கண் தர்க்கமே என்றும் நிறுவும் ஒரு முயற்சி இது. இந்த நூலை மேற்சொன்ன கண்ணோட்டத்துடன் பார்ப்பது நல்லது.

“ ‘நான் பிரபத்தி நெறியை முன்வைத்தேன்’ என்றோ, ‘நான் விசிட்டாத்வைதம் என்னும் முறையைத் துவக்கினேன்’, என்றோ இராமானுசர் சொல்லியிருப்பாரா?” என்று கேட்பதில் இந்த நூலின் புனைவுத்தன்மை அடிபடுகிறது. வைஷ்ணவ ஆச்சாரியர்கள்,’நான் செய்தேன் என்று சொல்ல மாட்டார்கள்,’ என்றும் ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இருக்கலாம். ஆதலால் இராமானுசன் இப்படி சொல்லக்கூடாது என்று எப்படிச் சொல்வது?

‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கூறப்படும் புனைவில் இன்றைய அளவுகோல்களை எப்படிப் புகுத்துவது?’ என்பதே என் பதில்.

ஒருவேளை இராமானுசர் சொல்லாவிட்டால் ஆளவந்தார் சொல்லியிருக்கலாம். அல்லது அதற்கும் முன்னர் நாதமுனிகள் சொல்லியிருக்கலாம். இதற்கு ஏதாவது ஒரு மூலம் இருந்திருக்க வேண்டும். நான், இராமானுசரை மூலமாகக் கொண்டு அவர் சொன்னதாகச் சொல்லியிருக்கிறேன். அதிலும் அவர் ‘நான் ஆழ்வார் சொன்னதையே சொல்கிறேன்’ என்றும் சொல்கிறார்.

மறுபடியும் : இது சம்பிரதாய நூல் அல்ல. வாழித் திருநாமங்கள் இருக்காது. நிறைய தர்க்கம், தத்துவம், அறிவுத்தேடல், இவற்றின் ஊடே கொஞ்சம் பொதுவாக அறியப்பட்ட வரலாறு. அவ்வளவே. நன்றி.

அ.முத்துலிங்கத்தின் 'நிலம் என்னும் நல்லாள்' சிறுகதை

அ.முத்துலிங்கத்தின் ‘நிலம் என்னும் நல்லாள்’ சிறுகதை கன்னத்தில் ஓங்கி அறைந்து உண்மையை உணர்த்தி, நிதர்சன உலகத்தைக் காட்டும் முயற்சி. இரண்டு விஷயங்கள் சொல்லப்படுகின்றன. நீண்ட நாள் போராளிகளாக இருப்பவர்கள் அந்தப் போராடடம் முடிவுற்று, பின் அந்தச் சூழலில் இருந்து விலகினால் யதார்த்த உலகத்தை எதிர்கொள்வது முடியாத ஒன்று.

இரண்டாவது: தான் எதற்காக தன்னையே அழித்துக்கொண்டு போராடினானோ, அந்தப் பிரக்ஞையே இல்லாமல் புலம் பெயர்ந்த மக்கள் படாடோப்பமான வாழ்வு வாழ்வதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. போராளிகள் எப்போதும் போராளிகளாகவே இருக்கிறார்கள். மண்ணுக்காகப் போராடியவர்கள் எந்த நாட்டினதாக இருந்தாலும் அந்த நாட்டின் மண்ணுக்கு விதையாகிறார்கள் என்பதாக அந்தக் கதை முடிகிறது. கதையின் முடிவு உணர்த்திடும் நிதர்சனம், ஒன்றரை டன் எடை திடீரென்று விழுந்தால் ஏற்படுத்தும் அதிர்வலைகளை மனதில் ஏற்படுத்துகிறது.

பிரபாகரன், ஈழம், புலிகள், மற்ற ஈழக் குழுக்கள், ஈழப் போராட்ட அரசியல் என்று ஆறு அதி-தீவிர புத்தகங்களைப் படித்தபின் இந்தக் கதையைப் படிக்க நேர்ந்தது. ஒரு நிஜமான போராளி இப்படித்தான் நடந்துகொண்டிருப்பான் என்னும் எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

தனி மனிதனின் பிடிவாதத்தின் காரணமாக மாண்டொழிந்த ஒரு லட்சம் மக்கள், கரு சுமக்க வேண்டிய பெண்டிர் வெடி சுமந்து அழிந்த  அவலம், பென்சில் பிடிக்கும்    பொடியன்கள் எரிகுண்டு கையாண்ட கொடுமை, இந்தப் படுகொலைகளுக்கு உரமளித்த புலம் பெயர்ந்தோர் மற்றும் அந்நிய அரசுகள், இவர்கள் அனைவரையும் வைத்து அரசியல் நடத்திய தமிழினத் தலைவர்கள் – இவை எல்லாம் ஒருசேரக்  கண் முன் வந்து சென்றன(ர்) இக்கதையைப் படித்து முடித்த போது.

‘பிள்ளை கடத்தல்காரன்’ என்னும் கதைத்தொகுப்பில் உள்ளது இக்கதை.

மோதியைக் கும்பிடடி பாப்பா – 2

எப்போதுமே அதிகார வர்க்கம் பெரிய பண்ணையார்களிடமும் பெருமுதலாளிகாளால் ஆட்டுவிக்கப்படும் மேட்டுக்குடிகளிடமும் மட்டுமே அடிபணியும். ஆனால் இப்போது ஒரு முன்னாள் தேநீர் தொழிலாளி அதிகாரம் செலுத்துகிறார். அவரிடம் அடிபணிய வேண்டியுள்ளது. அரசு அதிகாரிகளை மட்டும் சொல்லவில்லை. அதிகாரம் பரவலாக உள்ள இடைத் தரகர்களும் மோதியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதிகாரிகள் இட மாற்றம் என்பது மிக லாபகரமான தொழில். ஒரு அரசு அதிகாரி ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பணி மாற்றம் பெற வேண்டும் என்றால் நேரே தனது உயரதிகாரியைப் பார்க்க மாட்டார். அந்த உயரதிகாரியைக் கைக்குள் போட்டுக்கொண்டுள்ள பத்திரிக்கையாளரைப் பார்ப்பார். அவருக்குச் செய்யவேண்டிய சம்பாவனைகளைச் செய்தபின் அதிகாரியின் பணிமாற்றம் தானாக நடக்கும்.

இது இப்போது நடப்பதில்லை. ஏனெனில் இந்த ‘பணியிட மாற்ற’ தொழில் அடியோடு நின்றுவிட்டது. ஏனெனில் அந்தப் பத்திரிக்கையாளர்களுக்கு அதிகார வர்க்கத்திலும், அரசின் உயர் இடங்களிலும் செல்வாக்கு இல்லை. ஏனெனில் இந்தப் பத்திரிக்கையாளர்கள் தில்லியில் தங்குவதற்கு இடமில்லை. ஏனெனில் இந்தப் பத்திரிக்கையாளர்கள் தங்கும் அரசுக்குச் சொந்தமான லுட்யென்ஸ் பூங்காப் பகுதியில் இருந்து அந்தப் பத்திரிக்கையாளர்களை வெளியேறச் சொல்லிவிட்டது மோதி அரசு. குறிப்பாக வெங்கையா நாயுடு.

இதனால் பத்திரிக்கையாளர்கள் தங்கள் பகுதி நேரத் தொழிலான தரகர் வேலை பார்ப்பது இல்லாமலாகிவிட்டது. பண வரத்து நின்றுவிட்டது. இருக்கவும் இலவச இடம் இல்லை. வராதா கோபம். அதனால் பத்திரிக்கையாளர்கள் பொங்குகின்றனர்.

முந்தைய அரசின் அமைச்சரவை உருவாக்கத்தின் போது பர்க்கா தத், வீர் சங்வி, கனிமொழி, நீரா ராடியா முதலியோர் நடத்திய பேரங்கள் நினைவிற்கு வரலாம். அப்படியான பேரங்கள் இப்போது இல்லை. மானம் கெட்டு சந்தி சிரித்தபின் வீர் சங்வியும் பர்க்கா தத்தும் இன்னமும் ஊடக வெளியில் நல்ல தங்காள் வேஷம் போடுவது இந்திய ஆங்கில ஊடகங்களின் பத்தரை மாற்றுத் தங்கத் தன்மைக்கு உதாரணம். இம்மாதிரியான பேரங்கள் பா.ஜ.க. அரசில் இல்லை. எனவே பத்திரிக்கைப் பகலவன்களுக்கு வரும்படியும் இல்லை.

இன்னொன்றும் உண்டு. மோதி பதவி ஏற்றவுடன் வெளி நாடுகள் செல்ல ‘ஏர் இந்தியா ஒன்’ எனப்படும் அரசு விமானத்தில் எந்தப் பத்திரிக்கயாளர்களுக்கும் இடம் இல்லை என்று அறிவித்துவிட்டார். பிரதமருடன் பயணம் செய்ய தூர்தர்ஷன், ஆகாசவாணி என்று அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்றும் சொல்லிவிட்டார். அரசுப் பணத்தில் தனியார் தொலைக்காட்சிகள் கொழித்த நிலை மாறியது. தனியார் தொலைக்காட்சிகளில் பிரதமரின் பயணம் குறித்த செய்தி வரவேண்டுமானால், அவர்கள் அரசுத் தொலைக்காட்சியிடம் பணம் கொடுத்துக் காணெளிகளைப் பெறலாம் என்றும் ஆனது.

அடி மேல் அடி. அரசுப் பணத்தில் இலவசமாய் ஊர் சுற்ற முடியாது; தில்லியில் தங்கி வியாபாரம் நடத்த முடியாது. எனவே ‘பொங்கி எழுந்தன புல்லர் கூட்டம்’. ‘சகிப்புத்தன்மை அற்ற அரசு’ என்று பெயர் சூட்டின. ஊரான் வீட்டுக் காசை எடுத்து வயிறு வளர்க்க வழி இல்லை என்றால் ‘சகிப்புத்தன்மை இல்லை’. இது என்ன பகுத்தறீவோ என்ன கண்றாவியோ!

125 கோடி மக்களில் நான் எப்போதுமே ஆட்டுப் புழுக்கையைப் போலவே நடத்தப்பட்டுள்ளேன். நான் மட்டும் அல்ல, எல்லா சாதாரணக் குடிமகன்களுமே அப்படித்தான். பைசா பிரயோசனமில்லாத கவுன்சிலர்கள் முன் கூட மரியாதையாக நின்று பேச வேண்டிய நிலையிலேயே இருந்திருக்கிறேன். அப்படி இருக்கையில் ஒரு நாள் பிரதமரிடமிருந்து இந்த வாழ்த்து வந்தது. எனக்குப் பிறந்த நாளாம்.

img_0353 125 கோடியில் ஒருவன், அரச வர்க்கங்களாலும் சாதாரண மின் ஊழியர்களாலுமே கூட உதாசீனப்படுத்தப்பட்டுள்ள எனக்குப் பிரதமர் வாழ்த்து அனுப்புகிறார். அது பிரதமரின் இணையச் செயலி வழியாக, தானியங்கித் தொழில் நுட்பத்தில் வந்த வாழ்த்து தான். ஆனால் வாழ்த்து வந்தது. 125 கோடியில், ஒரு கோடியில் உள்ள எனக்கு என் நாட்டுப் பிரதமர் வாழ்த்து அனுப்புகிறாரே, இப்படியும் ஒரு பிரதமரா! என்று எண்ணக் கூடாதாம். ஏனெனில் அவர் பாசிஸ்டாம். சொல்கின்றன பத்தரை மாற்றுத் தங்கங்கள்.

பிரதமர் என்ன சொன்னார்? ‘சுத்தமான பாரதம்’ என்றார். ‘ஸ்வச்ச பாரத்’ என்றார். இதில் என்ன தவறு? இதில் என்ன ஹிந்துத்வா வெறி வந்தது? வேஷம் போடுகிறாராம். நாட்டைத் திருத்துவது போல் நடிக்கிறாராம். 65 ஆண்டுகளாக நடித்தே நாசமாக்கிய நடிகர் திலகங்கள் சொல்கிறார்கள்.

வேறென்ன சொன்னார் பிரதமர்? ‘பெண்களைப் படிக்க வையுங்கள்’ என்றார். பெண் குழந்தைகளுக்காக அதிக வட்டி தரும் வைப்பு நிதியை அறிவித்தார். இதில் என்கு வந்தது ஹிந்துத்வ வெறி?  ‘சுகன்யா சம்ரித்தி’ என்கிற இந்தத் திட்டம் என்ன பாசிசத் திட்டமா? 65 ஆண்டுகளாக ‘நடு-நிலை’ காங்கிரஸ் ஏன் இப்படி எதையும் கிழிக்கவில்லை? காங்கிரஸ் கிழிக்காததைப் பற்றி ஊடகங்கள் மூச்சு விட வேண்டுமே!  உளறுவதற்கு எதுவும் இல்லையென்றால் இப்படியா இந்தத் திட்டத்தையும் பழிப்பது?உங்கள் மதச் சார்பின்மையில் மண்ணை வாரிப் போட.

வங்காளத்தில் சேர்ந்து கொள்வார்களாம் கேரளத்தில் எதிரணியில் நிற்பார்களாம். நாசகார காங்கிரசும் நபும்சக கம்யூனிஸ்டும் சேர்ந்தும் பிரிந்தும் நாட்டைக் கெடுக்கிறார்கள். இந்த இரட்டை நிலையைக் குடைவது தானே பார்க்கா தத்தும், வீர் சங்வியும். மதச்சார்பின்மை கெட்டுவிடுமே, அதனால் மௌன விரதம்.
sonia_karuna
இந்த அழகில் தி.மு.க.வுடன் கூட்டு. நல்ல கூத்து. கூடா நட்பு என்று வாய் கிழிந்து இரண்டு வருடம் ஆகவில்லை. வாய் எச்சில் உலர்வதற்குள் கேடுகெட்ட கூட்டணி. இதைக் கேட்க மாட்டார்கள் ஊடகத்தினர். மதச்சார்பின்மை கெட்டுவிடுமே.
இதையெல்லாம் கேட்க ஊடகத்தில் நடுநிலையாளர்கள். இல்லை. அவர்கள் இருந்த இடத்தில் நடுகற்கள் நிமிர்ந்து நிற்கின்றன.
என்னவாவது சொல்லியே ஆக வேண்டும். அதில் பொருள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உளறுவதை நிறுத்தக் கூடாது. வாங்கிய காசுக்கு விடாமல் குரைக்க வேண்டும். அது தான் பகுத்தறிவு, மதச்சார்பின்மை.

(தொடரும்)

Letter to God

My dear God,

My name is Ramya of class IV. Sorry, you are God and so you know who I am. Anyway let me tell you what I want to tell you.

You know today, Patti cried. Oh sorry I don’t know if you know English. But I know English only and so am writing to you in English. In case you don’t know English, please come in my English miss’s dream and she will explain this to you.

Now why I write to you, I will tell you. You know, Patti cried. I like Patti very much. So I also cried. But I don’t know why she cried.

In the morning, Patti was very cheerful. She wore a beautiful sari, had lots of flowers in her hair and drew a ‘Kolam’ in front of the new house that Appa has bought.

Yes, Appa bought a new flat that is very near Chennai. It is just twenty kms from Tambaram. And Tambaram is only thirty kms away from Chennai. So, Tambaram is near Chennai, flat is near Tambaram and so flat is near Chennai. You got it, right ?

No, she didn’t cry because of the house.  Appa and Thatha brought a ‘cow’ inside the house and some more ‘thathas’ who had naamam (or thiruman) all over their body told some mantras. And Thatha declared ‘House Warming’ was done.

After all the functions were over, Thatha and Patti were speaking to some other guests. And that was when two Thathas who had large naamams on their forehead, came.

They started saying,’ You did not welcome us properly’.

They were expecting Thatha and Patti to come rushing and say,’Welcome, Welcome’ thousand times. Patti’s eyesight is not good. Doctor has said that she had some disease called ‘cataract’.

She said she didn’t see the two thathas. See, I forgot to tell you. Last week when Patti was taking me to the bus stop, she was almost hit by an uncle on cycle. She didn’t see the cycle coming.

There were two ‘thathas’ right?

One of them said, “You asked me to come. But you didn’t welcome me when I came inside the house’, in a loud voice. Then the Pattis who had come along with the thathas also started to say the same thing. It was like uncles who shout at each other in front of some shop near my school. Mother has asked me not to go near that shop. The shop’s name starts with something like ‘TAS’.

In short I heard these:

  1.  ‘You didn’t welcome us’.
  2.  ‘You have become wealthy and so you didn’t welcome us’.
  3.  ‘We should not have come’.
  4. ‘We are going back’.
  5.  ‘No respect for us’.

God, I have some doubts.

My teacher once said there was something called ‘Atma’ or soul inside the body and so the body was just like a shirt. So, if a person died, the body only is destroyed and not the atma. If that is so then why these Thathas were shouting for respect? Why don’t they know that respect is for the Atma or soul and not for the body?

Also I read a book by Stephen Hawking, in which he says ‘, Man is an insignificant object on an average planet powered be a dying star’. Just the other day, my science teacher said that a meteor the size of a football ground was enough to wipe out most of the living things on earth.

If these are true, then why do these Thathas who seem to know all about atmas, souls etc quarrel about respect to the body? I thought they knew about these as they were wearing namams on their foreheads.

  1. Don’t thathas who were namams know that respect is something you earn and not you demand?
  2. Don’t these thathas know that shouting like this, when we were going into our new house, will make us sad?
  3. Don’t these thathas know that shouting like this, in front of strangers like plumber, watchman etc, is not done by good thathas ?

Please appear in my dream and reply. If you reply tonight, I will break one coconut in front of Lord Ganesh on my way to school.

Expecting your answer.

Yours’ Obediently,

Ramya, Class IV

Legend :

Namam – the markings on the forehead of a particular sect of hindus wgo worship Lord Vishnu in India. The markings are are of two colors – white and yellow / red. The white mark would resemble a parabola and the yellow / red mark would be drawn inside the parabola.

Thatha – Grandpa

Patti – Grandma

மோதியைக் கும்பிடடி பாப்பா

மோதியைக் கும்பிடுகிறார்கள். மோதி பக்தர்கள். சங்கிகள். பாசிச துதிபாடிகள். இந்துத்வ முட்டாள்கள். அடிப்படைவாதிகள். காவிகள். பண்டாரப் பரதேசிகள்.

இந்தியாவைப் புகழ்ந்து அல்லது பிரதமர் மோதியின் ஏதாவது ஒரு செயல்பாட்டைப் புகழ்ந்து நீங்கள் எழுதியிருந்தால் உங்களை மேற்சொன்ன அடைமொழிகளால் அழைத்திருப்பார்கள்.  கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்தால் ‘Howling Brigade’ என்று அழைப்பர்.

மோதியைப் புகழ்வதும் பாரதத்தைப் புகழ்வதும் ஒன்றில்லை என்றும் அறிவுறுத்துவர். மோதி குஜராத்தை இந்துத்வப் பாசறையாக்கினார் என்பர். கொலைஞர் என்பர்.

யார் இவர்கள்? ஏன் இப்படிச் சொல்கிறார்கள்?

சாதாரண தேநீர் விற்பவர் தேசத்திற்குத் தலைவனானதை சீரணிக்க இயலாத கயவர்கள். ஒளியிழந்த தேசம் பொலிவுருவதை விரும்பாத புல்லர்கள். பாழ்பட்டு நின்ற தேசம் பேரொளி பெறுவதைப் பொறுக்காதவர்கள். பூசணிக்காயளவு ஊழலையே பார்த்துப் பழகிய நமக்கு நெல்லியளவு கூட ஊழல் இல்லாமல் அரசு நடத்த முடியும் என்று காட்டியதைப் பொறுக்க முடியாதவர்கள்.

இவர்கள் குற்றச்சாட்டுகள் என்ன?

மோதி கறுப்புப் பணத்தை மீட்கவில்லை. சுவிட்சர்லாந்து சென்று ஆல்ப்ஸ் மலையைப் பார்த்தார். வேறென்ன செய்தார்? கருப்புப் பணம் வரவில்லையே?

இப்படிச் சொல்பவர்கள் ஒரு விஷயத்தை மறந்துவிடுவார்கள். அல்லது மறந்தது போல் நடிப்பார்கள். ஒரு நிறுவனத்தின் மேல் கடும் நடவடிக்கை வந்துள்ளது. அதில் பல வெளி நாட்டு அரசு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. ‘வாசன் ஐ கேர்’ எனப்படும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்தி சிதம்பரம். அவரது தந்தை ப.சிதம்பரம், முன்னாள் இந்திய நிதியமைச்சர். இதில் என்ன விசேஷம்? தற்போது வாசன் ஐ கேர் மீது கருப்புப் பண விசாரணை நடைபெறுகிறது. கண்ணில் எண்ணெய் விட்டுக்கொண்டு செயல்படும் பல வெளி நாட்டு அரசு முதலீட்டு நிறுவனங்கள் இவரது பெயரில் நம்பிக்கை கொண்டு முதலீடு செய்துள்ளன. வெளி நாட்டு நாடுகளின் அரசு நிறுவனங்களையே ஏமாற்றிய சிதம்பரத்தின் பெயர் இந்த நடு நிலையாளர்களால் உச்சரிக்கப்படாது.

அதை மட்டும் பேச மாட்டார்கள். கனிமொழி பற்றியும் இந்த நடுநிலையாளர்கள் பேச மாட்டார்கள். அவர்களின் முதலீடுகள் பல இடங்களில் உள்ளன.  இன்று தமிழ் எழுத்தாளர்கள் என்ற பெயருடன் உலவுபவர்கள் பலர், பல சமயங்களிலும் கலைஞர் குடும்பத்துடன் தொடர்பில் இருந்தவர்கள். அக்குடும்பத்தால் சில / பல ஆதாயங்கள் அடைந்தவர்கள். இல்லை என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

சரி. இப்படிச் சொல்பவர்களின் தரம் என்ன?

தமிழர்களைக் கொன்று குவித்த, தன் சுயநலத்திற்காக இளம் பெண்களை வெடிகளாக்கி வெடிக்க வைத்த ‘வீரனை’ தலைவன் என்று போற்ற வேண்டும் என்று வாதிடுபவர்கள் ஒரு புறம். இந்தியா என்பதே இல்லை; அப்படி இருப்பின் அதனைத் துண்டாட வேண்டும் என்று சொல்லும் இடதுசாரி, மார்க்ஸீய மண்டூகர்கள் இன்னொருபுறம்.

சிறுபான்மையினரை பயமுறுத்தியே வைத்துள்ள ‘நடு நிலையாளர்’ ஒருபுறம். அதாவது -‘ நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம். உங்கள் மத நம்பிக்கைகள் தகர்க்கப்படலாம். எனவே எங்களுக்கே வாக்களியுங்கள். நாங்கள் அப்படி எதுவும் நடந்துவிடாமல் பாதுகாக்கிறோம்,’ என்று சொல்லி, பயமுறுத்தி, அவர்களைச் சுயமாகச் சிந்திக்கவிடாமல் ஒரு மந்தையாகவே பாவித்து, அவ்வாறே நடத்தி வரும் இடது சாய்வுள்ள காங்கிரஸ் ஒருபுறம். இதே கருத்தை முன்வைக்கும் ஊடகங்கள் இன்னொருபுறம்.

சில ‘முற்போக்கு’களைப் பார்ப்போம்.

பகுத்தறிவுப் பகலவனின் கொள்ளுப் பேரன் ஈ.வி.கெ.எஸ். இளங்கோவன், ஜெயலலிதாவைத் தனிப்பட்ட முறையிலும், ஜெயலலிதாவையும் மோதியையும் சேர்த்தும் ஆபாசமாகப் பேசியதை எத்தனை முற்போக்குத் தமிழ் எழுத்தாளர்கள் கண்டித்தார்கள்? எத்தனை ஊடகங்கள் கண்டித்தன? முற்போக்கு முகமூடி கிழிந்துவிடும் என்பதால் வாயை மூடிக்கொண்டிருந்தார்கள் என்று கொள்வோம்.

கலைஞரையும் குஷ்புவையும் இணைத்து ஒரு வதந்தி வந்த போது பொங்கி எழுந்த பொங்கல்கள் இப்போது எங்கே என்று கேட்கக் கூடாது. அது பகுத்தறிவுப் பொங்கல். அவ்வப்போது தான் பொங்கும். அவ்வப்போது அப்படிப் பொங்குவது தமிழ் எழுத்தாளன் என்பதற்கான அடையாளம் போல.

ஜெயலலிதாவை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அவர் சாதி அப்படி. மோதியை என்னவேண்டுமானாலும் சொல்லலாம். அவர் கட்சி அப்படி. இதற்கெல்லாம் பொங்க பொங்கல்கள் இல்லை. பொங்காமல் இருப்பது ஊடக தர்மம்.

சுப்பிரமணிய சுவாமி ஒரு முறை பிரபாகரனை ‘International Pariah’ என்றார். உடனே பொங்கல்கள் பொங்கின. ‘சாதி’யைச் சொல்கிறார் என்றன. அந்த வார்த்தை ஆங்கில அகராதியில் ‘out cast, persona non grata’ என்கிற பொருளில் உள்ள சொல். இதில் பொங்கல்கள் மறைத்த உண்மை என்னவென்றால் பிரபாகரன் அந்த சாதியைச் சார்ந்தவர் அல்லர் என்பது மட்டும் அல்ல, ஈழத்தில் கிழக்கு வடக்கு மாகாணங்களுக்குள் சாதி வேறுபாட்டால் கொடுக்கல் வாங்கல் கூட இருப்பதில்லை என்பதையும் தான். இதைப் பல ஆண்டுகள் கழித்து ஈழ நண்பர் ஒருவர் எதேச்சையாக சொன்ன ஒரு சொல்லின் மூலம் அறிந்துகொண்டேன். ஆனால் இவை எதையும் நம் முற்போக்குத் தமிழ் எழுத்தாளர்கள் சொல்லமாட்டார்கள். சாதி என்பதே இல்லை என்று பம்மாத்து, வெளிப்பூச்சு வேலை செய்து ஊடகங்களில் பெயர் வாங்கி காலட்சேபம் செய்வது மட்டுமே இவர்களது நோக்கம்.

எந்த முற்போக்குத் தமிழ் எழுத்தாளராவது குறிப்பிடும்படியான ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளார்களா? புலனாய்வு என்கிற பெயரில் நடிகைகளின் அந்தரங்கங்களை வெளிக்கொணர்கிறார்கள். இப்படி ஒரு பிழைப்பு பிழைப்பதற்கு குட்டிச் சுவராகப் பார்த்து முட்டிக் கொள்ளலாம்.

தமிழக சட்ட சபையில் ஒருமுறை எம்.ஜி.ஆர். கலைஞரிடம்,’கனிமொழி யார்?’ என்று கேட்டாராம். அதற்குக் கலைஞர்,’அவள் ராசாத்தி அம்மாளின் புதல்வி’ என்று சாமர்த்தியமாகப் பதில் அளித்தார் என்று சில எழுத்தாளர்கள் கலைஞரின் ‘அறிவாற்றல்’ பற்றிப் பேசுவார்கள். இந்த வெட்கக்கேட்டை ஒருவர் சபையில் கேட்டதே மானக்கேடு. அதற்கு ‘சாமர்த்தியமாக’ பதில் அளித்தது அதனினும் கீழ்மை. இதை எழுதினால் பெரிய எழுத்தாளன் என்று கொண்டாடிக் கொள்ளலாமா? பகுத்தறிவுப் பாசம் என்னவெல்லாம் செய்ய வைக்கிறது?

மோதி அமெரிக்காவில் என்ன செய்யச் சென்றார் என்று கேட்பதை ஒரு சொலவடையாகக் கொண்டுள்ளார்கள். ஊர் சுற்றுகிறார் என்று சொல்கிறார்கள். ஊர் மேய்வதைக் காட்டிலும் சுற்றுவது ஒழுக்கக் கேடானதல்ல. ஒவ்வொரு முறையும் சில ஆயிரம் கோடிகள் அன்னிய முதலீடு வருகிறதே. அதைக் காணாமல் இருப்பது பகுத்தறிவு தான். தெரிகிறது.

பிரும்மச்சாரி ஞானி ஒருவர் இருக்கிறார். நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம். ஆனால் அந்த ஞானி தாய்லாந்து போனார். ஓய்வு எடுக்கிறாராம். நாட்டின் பிரதான எதிர்க்கட்சியின் தலைவர், நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது தாய்லாந்தில் ஒய்வெடுக்கிறார். நாளைய பிரதமராம். நம்மைக் காக்கப் போகிறாராம். தலை எழுத்து. இது பற்றி வெட்கம் இல்லாமல் கட்சியின் தலைவர்கள் பேசிய பேச்சும், நழுவிய நழுவலும். முனிசிபாலிட்டி வேண்டாம், ஒரு பஞ்சாயத்துக்குக் கூட தலைவராகத் தகுதி இல்லாத ஒருவரை நம்பி பெரிய கட்சி நடக்கிறது. ஊடகங்கள் ஊமையான கதை அது.

மோதி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது ஒரு முறை,’அவரவர்கள் செய்யும் தொழிலில் கவனம் செலுத்த வேண்டும்,’ என்று சொன்னார். அதை ‘துப்புறவுத் தொழிலாளர்’ குறித்து சொன்னார் என்று தமிழ் மெகா அறிவாளியும் ஈரோட்டின் வாரிசுமான சத்தியராஜ் என்னும் நடிகர் வானுக்கும் மண்ணுக்கும் குதித்தார். ‘விடுதலை’ என்னும் தமிழ் நாட்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை பொரிந்து தள்ளியது.  அவர் சொன்னது என்னவென்று கேட்காமலே உளறுவது என்பதே தமிழ் நாட்டு முற்போக்குப் பத்திரிகை தர்மமாகையால் அவ்வாறு பொரிந்தன(ர்) என்று கொள்ளலாம்.

அப்படி குரைத்தே ஆக வேண்டிய கட்டாயம் என்ன?

வேறென்ன? கூலி தான்.

நாணம் இன்றி, அன்னிய மதமாற்றுச் சக்திகளிடம் பணம் பெற்று, கூலிக்கு மாரடிக்கும் கூத்தாடிக் கும்பல்களுக்கு வேறென்ன நோக்கம் இருக்க முடியும்? தில்லிக்குச் சென்று, இலவசமாய் உண்டு, உறங்கி, பின் எழுந்து  அரசை வசைபாட லுட்யென்ஸ் பூங்காவில் இடம் இல்லையே. ஓலமிட இடம் இல்லாமல் செய்துவிட்டாரே மோதியின் அமைச்சர் வெங்கைய நாயுடு. ஆக இருக்கும் இடங்களில் இருந்தே உரக்க ஓலமிடுவோம் என்று முழங்குகின்றன வெற்று ஊளைகள். ஆனால் ஒன்று. இந்த ஊளைகள் கொடுத்த காசுக்கு விசுவாசமானவர்கள். விலையைக் காட்டிலும் அதிகமாக ஊளை இடுவார்கள். சில ஆங்கில நாளேடுகளைக் கண்டாலே தெரியும்.

எத்தனை குரைத்தாலும் இன்றைய நிதர்ஸன நிலை என்ன? அணு உலைகளுக்கு யுரேனியம் வழங்க மறுத்த ஆஸ்திரேலியா இன்று நமக்கு ஏற்றுமதி செய்கிறது. உறவு துண்டிக்கும் நிலையில் இருந்த ஜப்பான் இன்று இந்தியாவில் அதிவேக ரயில் திட்டங்களில் 0.1% வட்டியில் கடன் கொடுத்து தொழில் நுட்ப உதவியும் செய்கிறது. ஹைதராபாத்தில் புதிய தலை நகரம் அமைய சிங்கப்பூர் வடிவமைப்பு செய்கிறது, ஜப்பான் கட்டுகிறது. அமெரிக்கா அணு ஒப்பந்தங்களில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு அளிக்கிறது. ஏவுகணை ஒப்பந்தத்தில் சேர்க்கை. நிலக்கரி இறக்குமதி குறைகிறது அயினும் மின் உற்பத்தி கூடுகிறது. நிலக்கரி ஏலம் கணிணி முறையில் வெளிப்படையாகிறது. 2ஜி அலைக்கற்றை ஏலத்தால் அரசுக்குப் பணம்.

Modi_1அபுதாபியில் கோவில் கட்ட நிலம் தருகிறார்கள். அவர்கள் நாட்டில் இருந்து எண்ணெய் எடுத்து இந்தியாவில் வைக்கச் சொல்கிறது அபுதாபி அரசு. ஈரானில் புதிய துறைமுகம்.  ஆப்கானிஸ்தானில் அணை கட்டுகிறது இந்தியா. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்கிறது. இலங்கைக் கடற்படை இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை நிறுத்தியுள்ளது.

பிரதமர் கேட்டுக்கொண்டார் என்பதற்காக எரிவாயு மானியம் பெறுவதை மக்களாகவே முன்வந்து கைவிடுகின்றனர். பல ஆண்டுகள் கழித்து ஏர் இந்தியா நிறுவனம் லாபத்தில் இயங்குகிறது. ஏமனில் இருந்து இந்தியர்களை நாட்டுக்குப் பாதுகாப்பாக அழைத்துவந்தது, சவூதி அரசு பணிந்து செயல்படுவது – இவை எதுவுமே காதில் விழாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இன்னும் ஒரு படி மேலே போய், இப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பது போல் நடிக்க வேண்டும். பேசாமல் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் இப்படி வேடம் போடுவதற்குப் பதில். மீறிப் பேசினால் நீங்கள் ‘பாஸிச அபிமானிகள்’.

மோதி அமெரிக்கப் பாராளுமன்றத்தில் பேசியதைக் கூட பாராட்டக் கூடாது என்கிறார்கள். அவர் டெலிபிராம்ப்டரில் பார்த்துத்தான் பேசினார் என்று சொல்ல வேண்டுமாம். பாங்காக்ல் ஓய்வெடுத்த ஞானி இரண்டு வார்த்தை பேசினால் நோபல் பரிசு கொடுக்க வேண்டிய அளவு பாராட்டச் சொல்கிறார்கள். ஞானியின் தாயார் ஒரு வார்த்தை பேசினால் ‘அக்‌ஷர லட்சம்’ பெறும் என்று பாராட்டச் சொல்கிறார்கள். அதை ‘மதச்சார்பின்மை’ என்கிறார்கள். இதுவே ஊடக தர்மம் என்றும் அறியப்படுகிறது. இந்தப் பிழைப்பு பிழைப்பதற்கு நல்ல குட்டிச் சுவற்றில் முட்டிக்கொள்ளலாம். அல்லது காங்கிரசில் சேர்ந்துவிடலாம்.

வெகு நாட்கள் பேசாமல் இருந்த சோனியா அம்மையார் பாராளுமன்றத்தில் ஒரு நாள் வாய் திறந்தார். ‘Sonia lamblasts the govt’ என்று ஹிந்து தலைப்புச் செய்தி. அப்படி என்ன ‘லாம்பிளாஸ்ட்’ செய்தார்? வாய் திறந்து பேசினார். அதற்கு அவ்வளவு ஒலிப் பெருக்கம்.

மோதி பல விஷயங்களைப் பேசிவிட்டு ‘தீவிரவாதமும் மதமும் தொடர்பற்றவை’ என்று போகிற போக்கில் சொல்லி வைத்தார். மறுநாள் ஹிந்துவில் “‘De-link religion from terror’ says Modi” தலைப்புச் செய்தி. மோதி விவேகானந்தர் பற்றி, வாஜ்பாய் பற்றி காந்தி பற்றி லிங்கன் பற்றி,  மார்ட்டின் லூதர் கிங் பற்றியெல்லாம் பேசியது விஷயம் இல்லையாம். இது என்ன ஊடக தர்மமோ என்ன கண்றாவியோ.

ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத இலக்கியம், நூல் ஆய்வுகள், பண்டைய நூல்களில் உள்ள விஞ்ஞானச் செய்திகளை வெளிக்கொணர்தல் என்கிற அளவில் ஆராய்ச்சிகள் செய்யலாம் என்று மனிதவள அமைச்சு பேசத்துவங்கியது. உடனே பொங்கல் வைக்கத் துவங்கிவிட்டனர். ஏற்கெனவே சீன மொழி அங்கு பயிற்றுவிக்கபடுகிறது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் வெற்றுச் சூளுரைகள் பறக்கத் துவங்கிவிட்டன. தேர்தலில் மண்ணைக்கவ்விய தன்மானத் தலைவர்கள் பொங்கல் வைக்க அரிசி வாங்கச் சென்றுவிட்டனர்.

ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருதம் இருக்கட்டும். தருண் விஜய் என்னும் பா.ஜ.க. எம்.பி. திருக்குறளுக்காக வாதிடுகிறார். கங்கைக்ரையில்  திருவள்ளுவருக்குச் சிலை வைக்கப் போகிறார். திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்கிறார். நாடாளுமன்றத்தில் திருக்குறளை இசைக்கச் செய்கிறார். இத்தனைக்கும் ஹிந்திக்கார எம்.பி. அவர். இத்தனை வருடங்கள் தமிழினத் தலைவர்கள் ஆட்சியில் இருந்தனரே என்ன கிழித்தார்கள்? தமிழ் எம்.பி. என்றாலே ஊழல் பெருச்சாளி என்கிற முத்திரையைப் பெறுவதைத் தவிர கிழித்த கிழி என்ன? தமிழனின் கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கியதைத் தவிர சாதித்தது என்ன? ஹிந்தி பேசும் எம்.பி.க்குத் திருக்குறள் மேல் இருக்கும் அக்கறை இரு கழகக் கண்றாவிகளுக்கும் இல்லாமல் போனது ஏன்?

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.ல் இருப்பதற்குத் தடை இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. எனவே அந்த அரசாணையை நீக்கலாம் என்று அரசு சிந்தனை செய்கிறது என்கிறது ஒரு செய்தி. உடனே முற்போக்குகள் பொங்கத் துவங்கிவிட்டன. போகப்போக அது பொங்கலா அல்லது பழங்கஞ்சியா என்று தெரியவரும்.

‘மன் கி பாத்’ என்று பிரதமர் வானொலி மூலமாக மக்களிடம் பேசுகிறார். நேருவுக்குப் பிறகு வேறு எந்தப் பிரதமர் இப்படிப் பேசியுள்ளார்?  அதிலும் மக்களைப் பாதிக்கும் அன்றாட நிகழ்வுகள் குறித்துப் பேசுகிறார். மாணவர்களுக்கு தேர்வுகள் நேரத்தில் அறிவுரை வழங்குகிறார். மாநில முதல்வர் மகாராணியைப் போல் இருக்க, ஒன்றுக்கும் உதவாத கவுன்சிலர்கள் கூட குறுநில மன்னர்கள் போல் செயல்பட, அப்படியெல்லாம் இல்லாமல், பெற்ற தந்தை போல் செயல்படும் பிரதமரை வாழ்த்த வேண்டாம் ஐயா, குறை கூறாமல் இருக்கலாம் தானே!

மோதியை எதிர்ப்பது ஒரு மனநோய். அந்த நோய் வராமல் பாதுகாக்க அந்தப் பராசக்தி துணைபுரிய வேண்டும்.

(தொடரும்)

%d bloggers like this: