மோதியைக் கும்பிடுகிறார்கள். மோதி பக்தர்கள். சங்கிகள். பாசிச துதிபாடிகள். இந்துத்வ முட்டாள்கள். அடிப்படைவாதிகள். காவிகள். பண்டாரப் பரதேசிகள்.
இந்தியாவைப் புகழ்ந்து அல்லது பிரதமர் மோதியின் ஏதாவது ஒரு செயல்பாட்டைப் புகழ்ந்து நீங்கள் எழுதியிருந்தால் உங்களை மேற்சொன்ன அடைமொழிகளால் அழைத்திருப்பார்கள். கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்தால் ‘Howling Brigade’ என்று அழைப்பர்.
மோதியைப் புகழ்வதும் பாரதத்தைப் புகழ்வதும் ஒன்றில்லை என்றும் அறிவுறுத்துவர். மோதி குஜராத்தை இந்துத்வப் பாசறையாக்கினார் என்பர். கொலைஞர் என்பர்.
யார் இவர்கள்? ஏன் இப்படிச் சொல்கிறார்கள்?
சாதாரண தேநீர் விற்பவர் தேசத்திற்குத் தலைவனானதை சீரணிக்க இயலாத கயவர்கள். ஒளியிழந்த தேசம் பொலிவுருவதை விரும்பாத புல்லர்கள். பாழ்பட்டு நின்ற தேசம் பேரொளி பெறுவதைப் பொறுக்காதவர்கள். பூசணிக்காயளவு ஊழலையே பார்த்துப் பழகிய நமக்கு நெல்லியளவு கூட ஊழல் இல்லாமல் அரசு நடத்த முடியும் என்று காட்டியதைப் பொறுக்க முடியாதவர்கள்.
இவர்கள் குற்றச்சாட்டுகள் என்ன?
மோதி கறுப்புப் பணத்தை மீட்கவில்லை. சுவிட்சர்லாந்து சென்று ஆல்ப்ஸ் மலையைப் பார்த்தார். வேறென்ன செய்தார்? கருப்புப் பணம் வரவில்லையே?
இப்படிச் சொல்பவர்கள் ஒரு விஷயத்தை மறந்துவிடுவார்கள். அல்லது மறந்தது போல் நடிப்பார்கள். ஒரு நிறுவனத்தின் மேல் கடும் நடவடிக்கை வந்துள்ளது. அதில் பல வெளி நாட்டு அரசு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. ‘வாசன் ஐ கேர்’ எனப்படும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்தி சிதம்பரம். அவரது தந்தை ப.சிதம்பரம், முன்னாள் இந்திய நிதியமைச்சர். இதில் என்ன விசேஷம்? தற்போது வாசன் ஐ கேர் மீது கருப்புப் பண விசாரணை நடைபெறுகிறது. கண்ணில் எண்ணெய் விட்டுக்கொண்டு செயல்படும் பல வெளி நாட்டு அரசு முதலீட்டு நிறுவனங்கள் இவரது பெயரில் நம்பிக்கை கொண்டு முதலீடு செய்துள்ளன. வெளி நாட்டு நாடுகளின் அரசு நிறுவனங்களையே ஏமாற்றிய சிதம்பரத்தின் பெயர் இந்த நடு நிலையாளர்களால் உச்சரிக்கப்படாது.
அதை மட்டும் பேச மாட்டார்கள். கனிமொழி பற்றியும் இந்த நடுநிலையாளர்கள் பேச மாட்டார்கள். அவர்களின் முதலீடுகள் பல இடங்களில் உள்ளன. இன்று தமிழ் எழுத்தாளர்கள் என்ற பெயருடன் உலவுபவர்கள் பலர், பல சமயங்களிலும் கலைஞர் குடும்பத்துடன் தொடர்பில் இருந்தவர்கள். அக்குடும்பத்தால் சில / பல ஆதாயங்கள் அடைந்தவர்கள். இல்லை என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
சரி. இப்படிச் சொல்பவர்களின் தரம் என்ன?
தமிழர்களைக் கொன்று குவித்த, தன் சுயநலத்திற்காக இளம் பெண்களை வெடிகளாக்கி வெடிக்க வைத்த ‘வீரனை’ தலைவன் என்று போற்ற வேண்டும் என்று வாதிடுபவர்கள் ஒரு புறம். இந்தியா என்பதே இல்லை; அப்படி இருப்பின் அதனைத் துண்டாட வேண்டும் என்று சொல்லும் இடதுசாரி, மார்க்ஸீய மண்டூகர்கள் இன்னொருபுறம்.
சிறுபான்மையினரை பயமுறுத்தியே வைத்துள்ள ‘நடு நிலையாளர்’ ஒருபுறம். அதாவது -‘ நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம். உங்கள் மத நம்பிக்கைகள் தகர்க்கப்படலாம். எனவே எங்களுக்கே வாக்களியுங்கள். நாங்கள் அப்படி எதுவும் நடந்துவிடாமல் பாதுகாக்கிறோம்,’ என்று சொல்லி, பயமுறுத்தி, அவர்களைச் சுயமாகச் சிந்திக்கவிடாமல் ஒரு மந்தையாகவே பாவித்து, அவ்வாறே நடத்தி வரும் இடது சாய்வுள்ள காங்கிரஸ் ஒருபுறம். இதே கருத்தை முன்வைக்கும் ஊடகங்கள் இன்னொருபுறம்.
சில ‘முற்போக்கு’களைப் பார்ப்போம்.
பகுத்தறிவுப் பகலவனின் கொள்ளுப் பேரன் ஈ.வி.கெ.எஸ். இளங்கோவன், ஜெயலலிதாவைத் தனிப்பட்ட முறையிலும், ஜெயலலிதாவையும் மோதியையும் சேர்த்தும் ஆபாசமாகப் பேசியதை எத்தனை முற்போக்குத் தமிழ் எழுத்தாளர்கள் கண்டித்தார்கள்? எத்தனை ஊடகங்கள் கண்டித்தன? முற்போக்கு முகமூடி கிழிந்துவிடும் என்பதால் வாயை மூடிக்கொண்டிருந்தார்கள் என்று கொள்வோம்.
கலைஞரையும் குஷ்புவையும் இணைத்து ஒரு வதந்தி வந்த போது பொங்கி எழுந்த பொங்கல்கள் இப்போது எங்கே என்று கேட்கக் கூடாது. அது பகுத்தறிவுப் பொங்கல். அவ்வப்போது தான் பொங்கும். அவ்வப்போது அப்படிப் பொங்குவது தமிழ் எழுத்தாளன் என்பதற்கான அடையாளம் போல.
ஜெயலலிதாவை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அவர் சாதி அப்படி. மோதியை என்னவேண்டுமானாலும் சொல்லலாம். அவர் கட்சி அப்படி. இதற்கெல்லாம் பொங்க பொங்கல்கள் இல்லை. பொங்காமல் இருப்பது ஊடக தர்மம்.
சுப்பிரமணிய சுவாமி ஒரு முறை பிரபாகரனை ‘International Pariah’ என்றார். உடனே பொங்கல்கள் பொங்கின. ‘சாதி’யைச் சொல்கிறார் என்றன. அந்த வார்த்தை ஆங்கில அகராதியில் ‘out cast, persona non grata’ என்கிற பொருளில் உள்ள சொல். இதில் பொங்கல்கள் மறைத்த உண்மை என்னவென்றால் பிரபாகரன் அந்த சாதியைச் சார்ந்தவர் அல்லர் என்பது மட்டும் அல்ல, ஈழத்தில் கிழக்கு வடக்கு மாகாணங்களுக்குள் சாதி வேறுபாட்டால் கொடுக்கல் வாங்கல் கூட இருப்பதில்லை என்பதையும் தான். இதைப் பல ஆண்டுகள் கழித்து ஈழ நண்பர் ஒருவர் எதேச்சையாக சொன்ன ஒரு சொல்லின் மூலம் அறிந்துகொண்டேன். ஆனால் இவை எதையும் நம் முற்போக்குத் தமிழ் எழுத்தாளர்கள் சொல்லமாட்டார்கள். சாதி என்பதே இல்லை என்று பம்மாத்து, வெளிப்பூச்சு வேலை செய்து ஊடகங்களில் பெயர் வாங்கி காலட்சேபம் செய்வது மட்டுமே இவர்களது நோக்கம்.
எந்த முற்போக்குத் தமிழ் எழுத்தாளராவது குறிப்பிடும்படியான ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளார்களா? புலனாய்வு என்கிற பெயரில் நடிகைகளின் அந்தரங்கங்களை வெளிக்கொணர்கிறார்கள். இப்படி ஒரு பிழைப்பு பிழைப்பதற்கு குட்டிச் சுவராகப் பார்த்து முட்டிக் கொள்ளலாம்.
தமிழக சட்ட சபையில் ஒருமுறை எம்.ஜி.ஆர். கலைஞரிடம்,’கனிமொழி யார்?’ என்று கேட்டாராம். அதற்குக் கலைஞர்,’அவள் ராசாத்தி அம்மாளின் புதல்வி’ என்று சாமர்த்தியமாகப் பதில் அளித்தார் என்று சில எழுத்தாளர்கள் கலைஞரின் ‘அறிவாற்றல்’ பற்றிப் பேசுவார்கள். இந்த வெட்கக்கேட்டை ஒருவர் சபையில் கேட்டதே மானக்கேடு. அதற்கு ‘சாமர்த்தியமாக’ பதில் அளித்தது அதனினும் கீழ்மை. இதை எழுதினால் பெரிய எழுத்தாளன் என்று கொண்டாடிக் கொள்ளலாமா? பகுத்தறிவுப் பாசம் என்னவெல்லாம் செய்ய வைக்கிறது?
மோதி அமெரிக்காவில் என்ன செய்யச் சென்றார் என்று கேட்பதை ஒரு சொலவடையாகக் கொண்டுள்ளார்கள். ஊர் சுற்றுகிறார் என்று சொல்கிறார்கள். ஊர் மேய்வதைக் காட்டிலும் சுற்றுவது ஒழுக்கக் கேடானதல்ல. ஒவ்வொரு முறையும் சில ஆயிரம் கோடிகள் அன்னிய முதலீடு வருகிறதே. அதைக் காணாமல் இருப்பது பகுத்தறிவு தான். தெரிகிறது.
பிரும்மச்சாரி ஞானி ஒருவர் இருக்கிறார். நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம். ஆனால் அந்த ஞானி தாய்லாந்து போனார். ஓய்வு எடுக்கிறாராம். நாட்டின் பிரதான எதிர்க்கட்சியின் தலைவர், நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது தாய்லாந்தில் ஒய்வெடுக்கிறார். நாளைய பிரதமராம். நம்மைக் காக்கப் போகிறாராம். தலை எழுத்து. இது பற்றி வெட்கம் இல்லாமல் கட்சியின் தலைவர்கள் பேசிய பேச்சும், நழுவிய நழுவலும். முனிசிபாலிட்டி வேண்டாம், ஒரு பஞ்சாயத்துக்குக் கூட தலைவராகத் தகுதி இல்லாத ஒருவரை நம்பி பெரிய கட்சி நடக்கிறது. ஊடகங்கள் ஊமையான கதை அது.
மோதி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது ஒரு முறை,’அவரவர்கள் செய்யும் தொழிலில் கவனம் செலுத்த வேண்டும்,’ என்று சொன்னார். அதை ‘துப்புறவுத் தொழிலாளர்’ குறித்து சொன்னார் என்று தமிழ் மெகா அறிவாளியும் ஈரோட்டின் வாரிசுமான சத்தியராஜ் என்னும் நடிகர் வானுக்கும் மண்ணுக்கும் குதித்தார். ‘விடுதலை’ என்னும் தமிழ் நாட்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை பொரிந்து தள்ளியது. அவர் சொன்னது என்னவென்று கேட்காமலே உளறுவது என்பதே தமிழ் நாட்டு முற்போக்குப் பத்திரிகை தர்மமாகையால் அவ்வாறு பொரிந்தன(ர்) என்று கொள்ளலாம்.
அப்படி குரைத்தே ஆக வேண்டிய கட்டாயம் என்ன?
வேறென்ன? கூலி தான்.
நாணம் இன்றி, அன்னிய மதமாற்றுச் சக்திகளிடம் பணம் பெற்று, கூலிக்கு மாரடிக்கும் கூத்தாடிக் கும்பல்களுக்கு வேறென்ன நோக்கம் இருக்க முடியும்? தில்லிக்குச் சென்று, இலவசமாய் உண்டு, உறங்கி, பின் எழுந்து அரசை வசைபாட லுட்யென்ஸ் பூங்காவில் இடம் இல்லையே. ஓலமிட இடம் இல்லாமல் செய்துவிட்டாரே மோதியின் அமைச்சர் வெங்கைய நாயுடு. ஆக இருக்கும் இடங்களில் இருந்தே உரக்க ஓலமிடுவோம் என்று முழங்குகின்றன வெற்று ஊளைகள். ஆனால் ஒன்று. இந்த ஊளைகள் கொடுத்த காசுக்கு விசுவாசமானவர்கள். விலையைக் காட்டிலும் அதிகமாக ஊளை இடுவார்கள். சில ஆங்கில நாளேடுகளைக் கண்டாலே தெரியும்.
எத்தனை குரைத்தாலும் இன்றைய நிதர்ஸன நிலை என்ன? அணு உலைகளுக்கு யுரேனியம் வழங்க மறுத்த ஆஸ்திரேலியா இன்று நமக்கு ஏற்றுமதி செய்கிறது. உறவு துண்டிக்கும் நிலையில் இருந்த ஜப்பான் இன்று இந்தியாவில் அதிவேக ரயில் திட்டங்களில் 0.1% வட்டியில் கடன் கொடுத்து தொழில் நுட்ப உதவியும் செய்கிறது. ஹைதராபாத்தில் புதிய தலை நகரம் அமைய சிங்கப்பூர் வடிவமைப்பு செய்கிறது, ஜப்பான் கட்டுகிறது. அமெரிக்கா அணு ஒப்பந்தங்களில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு அளிக்கிறது. ஏவுகணை ஒப்பந்தத்தில் சேர்க்கை. நிலக்கரி இறக்குமதி குறைகிறது அயினும் மின் உற்பத்தி கூடுகிறது. நிலக்கரி ஏலம் கணிணி முறையில் வெளிப்படையாகிறது. 2ஜி அலைக்கற்றை ஏலத்தால் அரசுக்குப் பணம்.
அபுதாபியில் கோவில் கட்ட நிலம் தருகிறார்கள். அவர்கள் நாட்டில் இருந்து எண்ணெய் எடுத்து இந்தியாவில் வைக்கச் சொல்கிறது அபுதாபி அரசு. ஈரானில் புதிய துறைமுகம். ஆப்கானிஸ்தானில் அணை கட்டுகிறது இந்தியா. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்கிறது. இலங்கைக் கடற்படை இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை நிறுத்தியுள்ளது.
பிரதமர் கேட்டுக்கொண்டார் என்பதற்காக எரிவாயு மானியம் பெறுவதை மக்களாகவே முன்வந்து கைவிடுகின்றனர். பல ஆண்டுகள் கழித்து ஏர் இந்தியா நிறுவனம் லாபத்தில் இயங்குகிறது. ஏமனில் இருந்து இந்தியர்களை நாட்டுக்குப் பாதுகாப்பாக அழைத்துவந்தது, சவூதி அரசு பணிந்து செயல்படுவது – இவை எதுவுமே காதில் விழாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இன்னும் ஒரு படி மேலே போய், இப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பது போல் நடிக்க வேண்டும். பேசாமல் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் இப்படி வேடம் போடுவதற்குப் பதில். மீறிப் பேசினால் நீங்கள் ‘பாஸிச அபிமானிகள்’.
மோதி அமெரிக்கப் பாராளுமன்றத்தில் பேசியதைக் கூட பாராட்டக் கூடாது என்கிறார்கள். அவர் டெலிபிராம்ப்டரில் பார்த்துத்தான் பேசினார் என்று சொல்ல வேண்டுமாம். பாங்காக்ல் ஓய்வெடுத்த ஞானி இரண்டு வார்த்தை பேசினால் நோபல் பரிசு கொடுக்க வேண்டிய அளவு பாராட்டச் சொல்கிறார்கள். ஞானியின் தாயார் ஒரு வார்த்தை பேசினால் ‘அக்ஷர லட்சம்’ பெறும் என்று பாராட்டச் சொல்கிறார்கள். அதை ‘மதச்சார்பின்மை’ என்கிறார்கள். இதுவே ஊடக தர்மம் என்றும் அறியப்படுகிறது. இந்தப் பிழைப்பு பிழைப்பதற்கு நல்ல குட்டிச் சுவற்றில் முட்டிக்கொள்ளலாம். அல்லது காங்கிரசில் சேர்ந்துவிடலாம்.
வெகு நாட்கள் பேசாமல் இருந்த சோனியா அம்மையார் பாராளுமன்றத்தில் ஒரு நாள் வாய் திறந்தார். ‘Sonia lamblasts the govt’ என்று ஹிந்து தலைப்புச் செய்தி. அப்படி என்ன ‘லாம்பிளாஸ்ட்’ செய்தார்? வாய் திறந்து பேசினார். அதற்கு அவ்வளவு ஒலிப் பெருக்கம்.
மோதி பல விஷயங்களைப் பேசிவிட்டு ‘தீவிரவாதமும் மதமும் தொடர்பற்றவை’ என்று போகிற போக்கில் சொல்லி வைத்தார். மறுநாள் ஹிந்துவில் “‘De-link religion from terror’ says Modi” தலைப்புச் செய்தி. மோதி விவேகானந்தர் பற்றி, வாஜ்பாய் பற்றி காந்தி பற்றி லிங்கன் பற்றி, மார்ட்டின் லூதர் கிங் பற்றியெல்லாம் பேசியது விஷயம் இல்லையாம். இது என்ன ஊடக தர்மமோ என்ன கண்றாவியோ.
ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத இலக்கியம், நூல் ஆய்வுகள், பண்டைய நூல்களில் உள்ள விஞ்ஞானச் செய்திகளை வெளிக்கொணர்தல் என்கிற அளவில் ஆராய்ச்சிகள் செய்யலாம் என்று மனிதவள அமைச்சு பேசத்துவங்கியது. உடனே பொங்கல் வைக்கத் துவங்கிவிட்டனர். ஏற்கெனவே சீன மொழி அங்கு பயிற்றுவிக்கபடுகிறது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் வெற்றுச் சூளுரைகள் பறக்கத் துவங்கிவிட்டன. தேர்தலில் மண்ணைக்கவ்விய தன்மானத் தலைவர்கள் பொங்கல் வைக்க அரிசி வாங்கச் சென்றுவிட்டனர்.
ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருதம் இருக்கட்டும். தருண் விஜய் என்னும் பா.ஜ.க. எம்.பி. திருக்குறளுக்காக வாதிடுகிறார். கங்கைக்ரையில் திருவள்ளுவருக்குச் சிலை வைக்கப் போகிறார். திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்கிறார். நாடாளுமன்றத்தில் திருக்குறளை இசைக்கச் செய்கிறார். இத்தனைக்கும் ஹிந்திக்கார எம்.பி. அவர். இத்தனை வருடங்கள் தமிழினத் தலைவர்கள் ஆட்சியில் இருந்தனரே என்ன கிழித்தார்கள்? தமிழ் எம்.பி. என்றாலே ஊழல் பெருச்சாளி என்கிற முத்திரையைப் பெறுவதைத் தவிர கிழித்த கிழி என்ன? தமிழனின் கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கியதைத் தவிர சாதித்தது என்ன? ஹிந்தி பேசும் எம்.பி.க்குத் திருக்குறள் மேல் இருக்கும் அக்கறை இரு கழகக் கண்றாவிகளுக்கும் இல்லாமல் போனது ஏன்?
அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.ல் இருப்பதற்குத் தடை இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. எனவே அந்த அரசாணையை நீக்கலாம் என்று அரசு சிந்தனை செய்கிறது என்கிறது ஒரு செய்தி. உடனே முற்போக்குகள் பொங்கத் துவங்கிவிட்டன. போகப்போக அது பொங்கலா அல்லது பழங்கஞ்சியா என்று தெரியவரும்.
‘மன் கி பாத்’ என்று பிரதமர் வானொலி மூலமாக மக்களிடம் பேசுகிறார். நேருவுக்குப் பிறகு வேறு எந்தப் பிரதமர் இப்படிப் பேசியுள்ளார்? அதிலும் மக்களைப் பாதிக்கும் அன்றாட நிகழ்வுகள் குறித்துப் பேசுகிறார். மாணவர்களுக்கு தேர்வுகள் நேரத்தில் அறிவுரை வழங்குகிறார். மாநில முதல்வர் மகாராணியைப் போல் இருக்க, ஒன்றுக்கும் உதவாத கவுன்சிலர்கள் கூட குறுநில மன்னர்கள் போல் செயல்பட, அப்படியெல்லாம் இல்லாமல், பெற்ற தந்தை போல் செயல்படும் பிரதமரை வாழ்த்த வேண்டாம் ஐயா, குறை கூறாமல் இருக்கலாம் தானே!
மோதியை எதிர்ப்பது ஒரு மனநோய். அந்த நோய் வராமல் பாதுகாக்க அந்தப் பராசக்தி துணைபுரிய வேண்டும்.
(தொடரும்)
மிக அருமையாக எழுதி உள்ளீர்கள். அப்பட்டமாக அப்படியே எழுதி உள்ளீர்கள். இப்படிப்பட்ட பதிவு எழுத தமிழ் நாட்டில் ஏன் பயப்படுகிறார்கள்? அருமையான பதிவு.
LikeLike
நன்றி ஐயா. இதை ஒரு தொடராக எழுத உள்ளேன். பகிர்ந்து உதவுங்கள்.
LikeLiked by 1 person
நிச்சயம் சார்.
LikeLike
Super Ravi.. The harsh reality of our country.. ..
A small suggestion….Translate in English.. So tht more people come to know about Modi & his achievements ..
LikeLike
மிகவும் அருமை! நன்றாக விவரித்திருக்கிறீர்கள். தொண்டு தொடரட்டும்.
LikeLike