இன்னும் சிவக்குமாரு அண்ணாச்சி அங்கிட்டு போகாம இருக்காகளே.., அது ஏன்னு தெரில வாத்யாரே …
வெளங்காத வெறும்பயலுக, சகிக்க முடியாத சினிமா எடுக்கறவுக, பாட்டக் கேட்டா எழுந்து ஓட வெக்கறவுக, சொந்த ஊர்ல நின்னா பொண்டாட்டி கூட ஒட்டுப் போடாத உண்டியல் பார்ட்டிக, 10 வருஷமா பி.எச்.டி. படிக்கறவுக, புலிகாசத் திருடி வியாபாரம் பண்றவுக, இலங்கை இலங்கைன்னு எளவெடுத்து அங்ஙன இருந்த தம்பிகளை உசுப்பேத்தி உசுப்பேத்தி பரலோகம் அனுப்பினவுக, யாரோட சேர்ந்தாலும் அவுகள வெளங்காம செய்யிறவுக, இம்புட்டு மண்ணாங்கட்டிகளும் ஒட்டுக்கா சேர்ந்து நிக்கயில, கம்ப ராமாயணம் பாட்டு படிச்சு ராக்கெட் சயிண்டிஸ்டு டிகிரி வாங்கின சிவக்குமாரு இன்னும் வரல்லியே, அடுத்த எலிக்சன்ல நிக்க வாணாவா? சிங்கம் 3 புள்ளாண்டான் பட வசூல் பாக்க ஆளு வாணாவா? என்ன ஒரு பொறுப்பில்லாம கீறாரேன்னு ஒரு சங்கடமாக் கீது வாத்யாரே.
சொன்னா நம்ப மாட்ட. பரவாலங்காட்டியும் சொல்றேன். நம்பாளுக்கறாரே அதாம்பா ஒலக்க நாயரு ..ஐயோ ஒலக நாயிக்கரு…. என்னெளவோ அவுருக்குத் தெரியாத சயின்சா? அர்சில்ல வரமாடடேன், பயமாக்கிது, ஆயிதம் எட்த்துருவேன், வர வெக்காத, ஊர உட்டு பூடுவேன்னு பீலா உட்டுக்குனே அட்த்த பட்த்துக்கு தெரூல சமுக்காளம் விரிப்பாரே அவுருதான்.. அந்தாளு ஏன் இன்னுங்காட்டியும் வரலேன்னு ஒரே பேஜாராகி கீது வாத்யாரே
மாயாரத்துல 20 வருசமா ஓ.என்.ஜி.சி. காத்து எடுத்துகினு கீறானே அங்கிட்டு வெள்ளாம பூட்ச்சா? அத்த ஆரம்பிச்சது மணி சங்கர அய்யிரு தான? அய்யிருகிடட சொல்லி காஸ் ஏஜென்சி எடுத்த பயலுகள்ளாம் இப்ப காஸ் உடறானுகளே, அவுக பேரெல்லாம் எட்த்து உட்ரலாமான்னு தோணுது வாத்யாரே…
இர்ந்தாலும் சிவக்கொமாரு அண்ணாச்சி வராம இருக்கறதுதான் ஏன்னு புரீல வாத்யாரே.. வாயால காஸ் உட்றது வளக்கம் தானே ? இப்பிடி வராம கிறாரே மன்சன்…ஒரே பேஜாரா கீதுப்பா..
செல்போன் டவரு வெச்சா சிட்டுக்குருவி சாகுதாமா. அத்தால டவர கழட்டிடலாம். இன்னான்ற நீயி? டவரு வெக்க மட்டும் நிலத்துல இடம் குடுக்கற?
அப்ப அந்த 2ஜி கேஸ மூடிடரலாம் இல்லியா அண்ணாச்சி? டவரு இருந்தாதானே தவறு ? டவர தூக்கிட்டா ? அட பகுத்த்தறிவுல இவ்ளோ கீதே ..
ரொம்ப கெளப்பினா பாரதிராசா திரும்பவும் படம் எடுக்கறேன்னு துவங்கிருவாக. உலகம் தாங்காது கேட்டுக்க அண்ணாச்சி.
நெய்வேலில கரி எடுக்க சொல்ல கரண்டு வருது. அதால வெவசாயம் வெளங்காம போகுது. அட்த்தபடியா நெய்வேலிக்கு போயி கரண்டு கம்பியை புடிச்சு தொங்கி எதிர்ப்பு தெரிவிக்கலாம் இல்லியா. ஒலக்க நாயரு வரங்காட்டி எப்புடி ?
சரி நெய்வேலிய மூடிடடம்னு வெய்யி. அட்த்த்தாப்ல எண்ணூர் கரண்டு கம்பி கீது. பொறவு கூலிங்க் டவருக்குள்ள தொம்மு தொம்முனு குதிச்சு வீரம் காட்ட வாணாவா?
அப்பால தூத்துக்குடி? அங்கிட்டும் கரண்டு வருதே. அங்ஙன சிய்மான் அண்ணாச்சி கேராக. அவுக பாத்துப்பாக. தொங்கி தொங்கி உயிரை வாங்கறதுல அவுக ரெவலே தனிதான்.
பொறவு கூடங்குளம் இருக்கு. அங்ஙன உதயகுமாரு அண்ணாச்சி கேராறு. பரலோவம் போவ நல்ல வளியில்லா? என்ன செய்வாகளா? ஓலைல இறங்கிட மாட்டாக? வாங்குன பணத்துக்கு சாமிமாரு கணக்கு கேப்பாகல்லா?
மேட்டுர்ல தண்ணிலேர்ந்து கரண்டு எடுக்காகன்னு யாரும் சொல்லிடாதீக. ‘தண்ணி’ கெடைக்குதுன்னு நம்ம விசயகாந்து அண்ணாச்சி போயிருவாக. இருக்கத்துலயே வெஷம் இல்லாத, வெள்ளந்தியான மனுஷன் அவுக்க ஒருத்தருதேன்.
அப்ப எல்லாத்தையும் மூடிடடா அல்லாம் சரியாயிருமா?
ஆமாம்ல. ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே’ போக வாணாவா ? என்னெளவு சன் டி.வி. தெரியாது. மக்கழ் டிவி தெரியாது. டிவில வரல்லேன்னது அம்புட்டுப் பேரும் ஊட்டுக்குப் போயிருவாக..
இன்னொண்ணு. ஓ.எம்.ஆர். ரோட்டுல ஐ.டி. கம்பெனிகள்ள உக்காந்துகிட்டு நெடுவாசலுக்காக பேஸ்புக்குல போராட முடியாது. ஏன்னா அத்தனையம் வெவசாய நெலமுல்லா ? கம்பெனியை மூட வாணாமா ?
அட ஆமா. இன்னொரு ப்ராப்ளம் இருக்கு வாத்யாரே. கரண்டு இல்லேன்னா அமெரிக்கன் கான்சுலேட் மெட்றாஸ்லேருந்து போயிருவான். அப்ப எங்கிட்டு போயி காலைலேர்ந்து நிக்குறது? அமெரிக்கால உக்காந்துகிட்டு #நெடுவாசல்#வாடிவாசல் போராட மாணாவா? ஒரு தமிளனா தமிள வளக்க அமேரிக்கா போக மாணாமா? என்ன வாத்தியாரே இடிக்குதே ..
இர்ந்தாலும் சிவக்கொமாரு அண்ணாச்சி வராம இருக்கறதுதான் ஏன்னு புரீல வாத்யாரே.. நெடுவாசல்லேர்ந்து ராக்கெட் உட்டு பாக்கலாமோ ?
‘கண்ட நியூஸெல்லாம் பாக்காதீங்கன்னு சொன்னா கேட்டாதானே? தூக்கத்துல எவ்வளவு உளறல்?’ என்ற பேச்சு கேட்டு கண் விழித்தேன்