இராமானுசர் – பாதை மாற்றிய பெருமகனார்

இமு, இபி – வைணவ ஆச்ச்சாரியர்களை இப்படி இரண்டு வகையாகப் பிரிக்கலாம் – இராமானுசருக்கு முன், இராமானுசருக்குப் பின்.

இமு – நாதமுனிகள், ஆளவந்தார், பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி.. இவர்கள் ‘அனுவிருத்தி பிரசன்னாச்சார்யர்கள்’. அடிப்படை ஞானம், அனுஷ்டானம் முதலியவை உடையவர்களுக்கு மட்டுமே உய்வதற்கான வழியை உபதேசிப்பது என்று கொண்டிருந்தார்கள். இதனை ஓரண்வழி என்றும் சொல்வர்.

இதனை ஶ்ரீமத் இராமானுசர் மாற்றினார். ‘க்ருபா மாத்ர ப்ரசன்னாச்சார்ய’ வழி என்பதாக விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை அறிந்துகொள்ள ஆசை ஒன்றே போதும் என்பதாகக் கொண்டுவந்தார். இதனால் உய்ந்தவர் பலர். திருக்கோஷ்டியூரில் அனைவருக்கும் உபதேசம் செய்து இந்த வழியைத் துவக்கி வைத்தார் உடையவர்.

இபி – 74 சிம்மாசனாதிபதிகள், தேசிகர், மணவாள மாமுனிகள், பிள்ளை லோகாச்சாரியார் முதலான இராமானுசருக்குப் பின்னர் வந்த ஆச்சாரியர்கள் இவ்வழியில் மக்களுக்கு உய்யும் வழி காட்டினர்.

இந்தப் பாதை மாற்றமே ஶ்ரீவைஷ்ணவ தரிசனத்தை மிகப் பெரிய எண்ணிக்கையிலான சாதாரண மக்களுக்கும் கொண்டு சேர்த்தது. Transformational Leadership, Pathbreaking Leadership என்று நாம் இன்று சொல்வதை 1000 ஆண்டுகளுக்கு முன் செய்து காட்டியர் எம்பெருமானார்.

இதனை ‘உபதேச ரத்தின மாலை’ என்னும் நூலில் மணவாள மாமுனிகள் இவ்வாறு சொல்கிறார்:

ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர்

ஏரார் எதிராசர் இன்னருளால் – பாருலகில்

ஆசை உடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூருமென்று

பேசி வரம்பறுத்தார் பின்

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

2 thoughts on “இராமானுசர் – பாதை மாற்றிய பெருமகனார்”

  1. Sri Ramanujar indeed a revolutionary leader and also a true reformer. We are all indebted to Sri Udaya are.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: