ஆசிரியர்கள்

திராவிட தேசத்தவர்கள், எந்த சம்பிரதாயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவசியம் கண்ணீருடன் நன்றி சொல்ல வேண்டியவர்கள் இருவர். 

முதலாமவர் சங்கர பகவத்பாதர்.

சங்கரர் இல்லையெனில் சிருங்கேரி மடம் இல்லை. மடம் இல்லையெனில் வித்யாரண்ய தீர்த்தர் இல்லை. வித்யாரண்யர் இல்லையெனில் ஹரிஹரன், புக்கன் இல்லை. இவர்கள் இல்லையெனில் கிருஷ்ணதேவராயர் இல்லை, விஜய நகர சாம்ராஜ்யம் இல்லை. அது இல்லையெனில் அஹோபிலம், ஶ்ரீரங்கம், திருமலை, மதுரை, சிதம்பரம் முதலான க்ஷேத்ரங்கள் இல்லை. நாயக்கர் ஆட்சி இல்லை, மன்னார்குடி, திருவண்ணாமலை, கும்பகோண க்ஷேத்ரங்கள் இல்லை, அவற்றின் கோவில்கள் இல்லை.

இன்னொருவர், பின்னர் தோன்றிய ஶ்ரீமத் இராமானுசர். அவர் இல்லையைனில் ஶ்ரீவைஷ்ணவம் மட்டுமில்லாமல், பாரதமெங்கும் பெரும் பண்பாட்டுப் புரட்சிகளும் இல்லை, ராமதாசர் இல்லை, குரு நானக் இல்லை, பாரதம் காத்த சீக்கியமும், மராட்டிய அரசுகளும் இல்லை.

மொத்தத்தில் நாம் ஒருவரும் இல்லை. 

ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர்களான இந்த இரு ஆச்சார்யர்களையும் வணங்கி, இன்றைய ஆசிரியர் தினத்தில் இவர்கள் வழியாக நமது ஆசிரியர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைப்போம்.

பி.கு 1: திராவிட தேசம் = தமிழ் நாடு + ஆந்திரம் + கேரளம் + கர்நாடகம்.

பி.கு 2: வித்யாரண்யர் ஹரிஹரனையும் புக்கனையும் சந்திக்கவில்லை, அவர் வேறு என்று ‘முற்போக்கு’பவர்கள் வேறு பாத்திரக்கடை பார்க்கவும்.

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

2 thoughts on “ஆசிரியர்கள்”

  1. இரண்டு ஆசார்யன்களுக்கும் மிகச் சிறப்பான வந்தனைகளை செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: