ராக்கெட்

யார் என்ன சொன்னாலும்,கிஞ்சித்தும் காதில் போட்டுக் கொள்ளாமல் போய்க்கொண்டேயிருக்கிறார்கள்.

முன்னர் அரசு வேலையென்றால் பின்னர் அது மறுக்கப்பட்டவுடன் வங்கிகளிலும்,வடக்கே தனியார் நிறுவனங்களிலும் பெருமளவில் நுழைந்தார்கள்.பின்னர் அரசு வங்கிகளில் இல்லைஎன்று ஆனவுடன்,தனியார் வங்கிகள். இன்னொரு குழு பெருமளவில் வெளி நாடு சென்றது.காரணம் கல்வி.அந்த நேரத்தில் வந்து சேர்ந்த ஐ.டி.துறைபெருமளவில் கைகொடுத்தது.இன்று உலகெங்கிலும் பரவியுள்ளார்கள்.

போகும் இடங்களில் எல்லாம் தங்களைநிறுவிக்கொண்டேஇருக்கிறார்கள்.வெறி,வேகம் என்றெல்லாம் இல்லை.எப்போதும் செய்வதையே,இன்னும் கொஞ்சம் முனைப்புடனும்,ஊக்கத்துடனும் செய்துகொண்டேயிருக்கிறார்கள்.செய்யச் செய்ய மேலேறிக்கொண்டேயிருக்கிறார்கள்.
போகும் இடங்களில் எல்லாம் கலைகளில் ஈடுபடுகிறார்கள்.ஏதோவொரு சங்கீதம்,நாட்டியம்,வாத்யம் என்று தொடர்ந்து செயலாற்றிக்கொண்டேஇருக்கிறார்கள்.எந்த நாட்டிலும் இந்தியச் சங்கீதக் குழுவென்றால் ஓரிருவராவது தென்படுவர்.ஏதோவொரு விதத்தில் செயலாற்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.நுண் கலைகளையும் தங்களுடன் மேலெடுத்துச் சென்றுகொண்டேயிருக்கிறார்கள்.
இதில் தங்களுக்குள் சண்டை,பொறாமையென்று எல்லாமும் உண்டு. ஆனாலும் கலை,கோவில்,பண்பாடு என்றால் எல்லாநாடுகளிலும் ஒன்றுகூடிவிடுகிறார்கள்.

தற்போதெல்லாம் தங்களுக்குத் தாய் நாட்டில் இழைக்கப்படுவதாகக் கூறப்படும் எந்த அநீதியைப் பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்வதில்லையென்று தோன்றுகிறது.ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு மாதிரி எதிர்ப்பு இருக்கும்.இப்போது வேறொரு மாதிரி.அவ்வளவுதான் என்கிற நினைப்பாக இருக்கலாமென்று நினைக்கிறேன்.எதையும் மாற்றவியலாது,எனவே,அதற்காக
எதற்கும் தயாராகவும்,எந்த நிலையிலும் கையைஊன்றிக் கொண்டு மேலெழும்பவும் தயாராக இருக்கிறார்கள்.புதியதாகவொரு தேர்வு வருகிறதென்றால்,ஈராண்டுகளுக்கு முன்னர் திட்டமிடத் துவங்குகிறார்கள்.புதிய வாய்ப்புகள் தோன்றும் பட்சத்தில் அதைப் பற்றிய விழிப்புணர்வையேற்படுத்திக் கொண்டு,அவற்றுக்கான தயாரிப்புகளில் இறங்குகிறார்கள்.குறிப்பாகக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.

இவர்களில் பெரும்பாலோர் தற்போதைய பள்ளிக் கல்வியை நம்பாதவர்களாகத் தென்படுகின்றனர். பள்ளியென்று பெயருக்கு ஒன்றில் போட்டு,பின்னர் அத்தனைத் தேர்வுகளுக்கும் உதவும் பயிற்சி மையங்களில் சேர்க்கின்றனர்.வீடுகளில் அவற்றைப் பற்றிய பேச்சாகவேயுள்ளதைக் காண முடிகிறது.

இவர்கள் தங்களுக்குள் அதிகம் அரசியல் பேசிக்கொள்வதில்லை.முக்கியமாகப் பெரும்பாலானோர் சமூக ஊடகங்களில் இல்லை.அதையொரு அழுக்காகவேயெண்ணுகின்றனர்.பேஸ்புக்கை,இந்தக் குழுவில் உள்ள பெரும்பாலோர் பெரும் தீட்டு போலவேபார்க்கின்றனர்.’நான் அதில் எல்லாம் இல்லை.எதாயிருந்தாலும் மெயில் அனுப்புங்கோ’என்று சொல்பவர்களாக இருக்கின்றனர்.
இவர்களைப் பின்பற்றி,இன்னும் சில குழுக்களும் இப்படியேசெய்ய முனைவதைக் காண முடிகிறது.

வேகமாக மாறிவரும் உலகில் தங்களையின்னமும் மேம்மடுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இன்னும் சில சமூகங்களிலும் பரவி வருவதைக் காண முடிகிறது.இந்தப்போக்கு நாடு என்னும் அளவில் நன்மையளிக்கும் செயல்பாடே.

எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல்,கலை,பண்பாடு,கல்வி என்று மேம்பாடான செயல்களில் எல்லாச் சமூகங்களும் ஈடுபட வேண்டும்.அதுவேஅனைவர்க்கும் நன்மையளிப்பதாக அமையும்.

‘வாழிய செந்தமிழ்,வாழ்க நற்றமிழர்,வாழிய பாரத மணித்திரு நாடு.’

நன்றி சிங்கப்பூர்

சிங்கப்பூர் வாசக நண்பர்களே,

அடியேனின் சிங்கப்பூர் வாசம் விரைவில் நிறைவுறுகிறது. பணி இட மாற்றம் வேண்டி ஒன்றரை ஆண்டுகட்கு முன் விண்ணப்பித்திருந்தேன். விரைவில் பாரதம் செல்கிறேன்.

கடந்த 9 ஆண்டுகளாக சிங்கப்பூர் எனக்கு அபரிமிதமான ஆதரவையும், ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்து, எனது வாழ்வில் நீங்காத இடம் பிடித்துவிட்டது. சிங்கை வரும் வரை, ஒரு நாட்டில் கூட இரண்டாண்டுகளுக்கு மேல் தங்கியதில்லை. பல தீபாவளிகள், பொங்கல்கள் விமானப் பயணத்திலேயே நடந்திருந்தன. ஆனால், சிங்கை வந்த பிறகு, ஒவ்வொரு பண்டிகையும் குடும்பத்துடனே இருக்கும் படி நடந்தது. பெரும் மன அமைதியையும், வளத்தையும் ஏற்படுத்தியது சிங்கப்பூர்.

பொருளியல் முன்னேற்றம் மட்டும் அன்று. இலக்கிய உலகிலும் எனக்கு நல்ல வாய்ப்பளித்தது சிங்கப்பூர். அது வரை ஆங்கிலத்திலேயே எழுதி வந்த நான், தமிழில் எழுதத் துவங்கினேன். காரணம்: சித்ரா ரமேஷ் அளித்த ஊக்கம். வாசகர் வட்டம், இலக்கிய வட்டம், தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம், வளர் தமிழ் இயக்கம், பேச்சாளர் மன்றங்கள், வசந்தம் ஒளிவழி என்று எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் ஏராளம்.
இவற்றால் உந்தப்பட்டு, சங்கப்பலகை வாசகர் வட்டம் துவங்கினேன். முடிந்த அளவு பங்களித்தேன். பல சிறப்பான இலக்கிய, பண்பாட்டுப் பேச்சுகள் நிகழ்ந்தன. தேசிய நூலக வாரியம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மற்றொரு வீடாகவே திகழ்ந்தது.

சங்கப்பலகையைத் தேர்ந்த பேச்சாளரும், தமிழாசிரியருமான நண்பர் ஒருவர் தொடர்ந்து நடத்துவார். விரைவில் அது தொடர்பான அறிவிப்பைத் தேசிய நூலக வாரியம் வெளியிடும்.

எனது மூன்றாவது நூலின் (‘நான் இராமானுசன்’) அனைத்துத் தரவுகளும் விக்டோரியா தெரு தேசிய நூலகத்திலேயே கிடைத்தன. நூலகத்திற்கும் அதை அளித்த இந்த நாட்டின் முன்னோடிகளுக்கும் நன்றி.

நான்கு நூல்கள் வெளியிட்டேன். பிள்ளைகள் நல்ல கல்வி பெற்றனர். கோவில்கள் ஆன்மிக வாழ்விற்கும் வழி வகுத்தன. ஆனாலும் பாரதம் செல்ல வேண்டிய நேரம் வந்துள்ளது.

பல நண்பர்களை / ஆன்றோர்களை விட்டுச் செல்ல மனம் வலிக்கிறது. கண்ணன் சேஷாத்ரி, சித்ரா ரமேஷ், சிவானந்தம் நீலகண்டன், அழகுநிலா, பாரதி, விஜயபாரதி, ஹரிகிருஷ்ணன், அ.கி.வரதராசன், சுப.திண்ணப்பன், அன்பழகன், செல்லகிருஷ்ணன், மாதங்கி, ஜெயந்தி சங்கர், கன்னா சிங், சபாபதி, மீனாட்சி சபாபதி, ராஜ்மோகன், உஷா சுப்புசாமி, ஏ.பி.ராமன், புருஷோத்தமன், ராம்குமார் சந்தானம், ரங்கபிரசாத் கோபாலகிருஷ்ணன், கல்பனா நாகேஸ்வரன், விஜய குமார், தேசிய நூலகத்தின் நிர்மலா, அருண் மகிழ்நன், அலுவலக நண்பர்கள் என்று இப்படி எத்தனையோ பேர் என்னை வழி நடத்தியுள்ளனர். அனைவருக்கும் நன்றி.

பாரதி ஷாகாவின் உடன்பிறப்புகள் – ராஜா, உதயகுமார், ஜோதிகுமார், மதன், கேசவ ராமன், காளிராஜன் மற்றும் பலர். இவர்களுக்கும் எனது நன்றி.

என்றும் நினைவில் இருந்து நீங்காது சிங்கப்பூர். அதன் 75வது பிறந்த நாளில் பங்கெடுக்க வேண்டும் என்று விருப்பம். இறையருள் இருந்தால் பார்க்கலாம்.

வாழ்க நாடு, வளர்க மாந்தர், ஓங்குக செல்வம், பெருகுக அமைதி. நன்றி.

Mission Shakthi

George Perkovich, in his book ‘India’s Nuclear Bomb’, clearly says Nehru tacitly approved India developing a nuclear bomb.

Nehru ensured that the Indian Space Programme and Department of Atomic Energy directly report to the PMO and not to any ministry. This ensured that approvals required for such programmes don’t get stuck in bureaucratic hurdles. These are clearly elucidated by Dr.Aravamudhan in his book ”ISRO: A personal history”. The more you read these, the more you understand the complexities involved and geo-political pressures in such programmes.( For more on political and global pressures, read ‘Ready to fire’ by Nambi Narayanan.)

Vikram Sarabhai, Satish Dhawan, Homi Bhabha and others who headed the prestigious missions, would not have achieved what they did, had it not been for the unhindered support of and access to the PMO.

So, starting from Nehru, Prime Ministers have played their role in the development of India’s space and atomic programmes.

However there were some who did absolutely nothing to further these interests. Let us not waste time talking about them.

Nehru prepared the ground, Indira Gandhi took it further, Rajiv Gandhi supported many initiatives, especially the Agni Missile Programme, Narasimha Rao lent full support though he backed off from Pokhran-II, Vajpayee fell head over heels to support these initiatives and Modi continues Vajpayee’s work.

Therefore, Prime Minister Narendra Modi deserves as much credit as does Indira Gandhi for Pokhran-I and Vajpayee for Pokhran-II. One can’t deny this to the current PM just because he is Narendra Modi, a man who sold tea once upon a time and hence doesn’t belong to the aristocracy.

The scientific establishment is the same, the institutions are the same, but the political and executive leadership is the one that changes and thus plays a decisive role in such missions. And the current one excels.

Kudos to India and her dedicated engineers, scientists and the honourable Prime Minister who had the spine to proceed with the test.#MissionShakthi

Jai Hind.

முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்

ஶ்ரீவைஷ்ணவத்துடனும் நெருங்கிய உறவு கொண்டவர்கள் அம்மக்கள். கொங்குப் பிராட்டி, கொங்கிலாச்சான் என்று சுமார் 1000 ஆண்டுகள் இராமானுஜ சம்பிரதாயத் தொடர்புடையவர்கள் அவர்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களே,
‘எப்படியாவது கொங்கு மக்களை அவமானப்படுத்த வேண்டும். மத மாற்றத்திற்குக் கடைசித் தடையாக உள்ளவர்கள் கொங்கு பிரதேச மக்கள். என்ன கொடுத்தாலும் மாற மறுக்கிறார்கள். இன்னும் கண்ணன் கூட்டம், சிவன் கூட்டம் என்று வாரம் தவறாமல் ஏதாவது விழாவைக் கொண்டாடிக்கொண்டே இருக்கிறார்கள்,’ என்கிற எண்ணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
 
சிவராத்ரி அன்று திருச்செங்கோடு சென்று அர்த்த நாரீஸ்வரருக்குக் கட்டளைகளை நடத்திவிட்டு வந்துள்ளார் உடன் பணியாற்றும் கொங்கு நாட்டு நண்பர். அந்த அளவுக்கு ஆன்மீகப் பற்றுக் கொண்டவர்கள் அம்மக்கள்.
 
ஶ்ரீவைஷ்ணவத்துடனும் நெருங்கிய உறவு கொண்டவர்கள் அம்மக்கள். கொங்குப் பிராட்டி, கொங்கிலாச்சான் என்று சுமார் 1000 ஆண்டுகள் இராமானுஜ சம்பிரதாயத் தொடர்புடையவர்கள் அவர்கள்.
 
இந்த மக்கள் சம்பிரதாயப் பற்றுடன் இருக்கும் வரை மதமாற்றம் நிகழ வாய்ப்பில்லை. எனவே இவர்களின் சம்பிரதாயப் பற்றையும், அவர்கள் கொண்டுள்ள ஆன்மீக, மத நம்பிக்கைகளையும் இழிவு படுத்த வேண்டும், அவர்களை அவர்களின் சம்பிரதாயத்தின் மீது கொண்ட நம்பிக்கையை, மரியாதையைக் குலைக்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டுக் கூட்டுச் சதியாகப் பெருமாள் முருகன் போன்ற எழுத்துலகச் சதிகாரர்களை ஊக்குவித்து, கொங்கு வட்டார மக்களை இழிவுபடுத்திப் பார்த்தன இடதுசாரி ஊடகங்கள், மற்றும் இடதுசாரி, மதமாற்றச் சக்திகளிடம் உணவு வாங்கி உண்ணும் அரசியல் வியாதிகள்.
 
இந்தப் பிராந்திய மக்கள் பெரும்பாலும் அதிமுக சார்பாக இருப்பதால் அவர்களை மேலும் இழிவு படுத்த வேண்டும், அத்துடன் தேசியச் சிந்தனை உள்ள பாஜகவுடன் சேர்ந்திருப்பதால் மேலும் அவமானப் படுத்த வேண்டும் என்பதற்காகவும் மேற்சொன்ன சக்திகள் ஊடகப் பண்ணையார்களிடம் பணம் பெற்று அவதூறுப் பிரச்சாரம் செய்கின்றன.
 
பொள்ளாச்சி விவகாரம் கண்டிக்கத்தக்கது. அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கைதுகள் நடந்துள்ளன. சி.பி.ஐ. என்றும் சொல்கிறார்கள். இந்த நேரத்தில் எதற்காகப் போராட்டம்? யாரை எதிர்த்துப் போராட்டம்?
 
இதே வியாபரிகள் சில நாட்களுக்கு முன் பொது இடத்தில் ஆணும் பெண்ணும் அந்தரங்கச் செயல்களில் ஈடுபடுவது அவர்களது உரிமை என்றனர். திடீரென்று எங்கிருது வந்தது மானம்? விருப்பத்துடன் திருமணம் இன்றி ‘லிவ் இன் ரிலேஷன்’ கொள்ளலாம் என்று ‘முற்போக்கு’ நீதி மன்றம் கூறியவுடன் வரவேற்று அறிக்கை விட்ட கயவர்கள் இன்று மய்யம் என்ற பெயரில் போராட்டம் என்று ஜல்லியடிக்கிறார்கள். யாரை ஏமாற்றுகிறது இந்தக் கூட்டம்?
 
ஆனால் ஒன்று. ஈரோட்டுப் பாதை என்று சொல்லிச் சொல்லியே வளர்ந்தவர்கள் இவர்கள். ‘காப்பிக்கடையில் விருப்பப்பட்டதை வாங்கி உண்பது போல பெண்கள் தங்கள் துணையைத் தேடிக்கொள்ளலாம்’ என்று முழங்கிய கயவர் தலைவரைத் தமிழர் தலைவர் என்று கொள்பவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
 
பொள்ளாச்சி நிகழ்வு அராஜகம் தான். கூப்பாடு, கதறல் தேவை தான். ஆனால், இதே கூப்பாடும், கதறலும் எல்லா நேரங்களிலும் வேண்டாமா? எங்கே போயினர் இவர்கள் அனைவரும்?
 
ராஜீவ் காந்தியையும் 17 அப்பாவித் தமிழர்களையும் கொன்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வெட்கமின்றிச் சொல்லும் நயவஞ்சகர்கள், கடத்தல்காரன் வீரப்பனைப் போராளி என்று சொல்லும் பச்சோந்திகள், நுங்கம்பாக்கம் கொலையை நியாயப்படுத்திய நரிகள், காஞ்சி ஸ்வாமிகள் விஷயத்தில் மிஷனரிகளிடம் பணம் பெற்று நடித்த ஊடக வியாபாரிகள், தேசத் துரோகிகளுக்கு வக்காலத்து வாங்கும் விதமாகப் பாக்கிஸ்தானின் மீதான தாக்குதலை இழிவுபடுத்தும் படுபாவிகள், தம்பரம் ‘கருணை இல்லம்’ என்ற பெயரில் நடந்த அக்கிரமத்தைக் கண்டுகொள்ளாத நடு நிலையற்ற நடுவர்கள்- இவர்கள் அனைவரும் சேர்ந்து சம்பிரதாயம் காக்கும் கொங்கு மக்களை இழிவுபடுத்துகிறார்கள்.
 
கே.என்.சிவராமன் என்னும் ஊடகவியலாளர் கோயம்புத்தூர் ஈஷா சிவராத்ரி நிகழ்வையும் பொள்ளாச்சி நிகழ்வையும் தொடர்பு படுத்துகிறார். இது என்ன மாதிரியான மன நிலை? கடும் வெறுப்பு, சுடர் விடாத அறிவால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை, பிரகாசிக்காத எழுத்துக்கள், உள்ளத்தில் பதிந்து கிடக்கும் தமிழ்ச் சூழ்நிலை கொடுத்த வெறுப்புப் பாலால் விளைந்த விஷத் தன்மை கொண்ட உள்ளம் என்பதைத் தவிர வேறு எப்படிப் பார்ப்பது?
 
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் தமிழகமாக இருந்த பிரதேசம், தீராவிடக் கூச்சல் காரணமாக ஏற்பட்டுள்ள பாலை நில மிகுதியால் ஆப்கானிஸ்தானை விடக் கீழே சென்றுகொண்டிருக்கிறது என்பது நிதர்ஸனம்.
 
முதல்வர் Edappadi K Palaniswami அவர்களே,ஜெயலலிதாஇருந்திருந்தால் பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட கயவர்களைஎன்ன செய்திருப்பார் என்று எண்ணிப் பாருங்கள்.அவர்களுடன் சேர்த்து அவர்களுக்கு உதவியவர்களைஎன்ன செய்திருப்பார் என்றும் எண்ணிப் பாருங்கள்.இவற்றுக்குக்கெல்லாம் ஒத்து ஊதிக்கொண்டிருக்கும் ஊடக வியாபரிகள்,மனித உரிமைக் காவலர்கள் -இவர்களுக்கெல்லாம் என்ன நடந்திருக்கும் என்றும் சற்று எண்ணிப் பாருங்கள்.நீங்கள் அடுத்த ஜெயலலிதாவாக ஆக வேண்டுமென்றால், அவர் செய்திருக்கக்கூடிய செயல்களைச் செய்யுங்கள்.சான்றோர்கள் நடந்த தமிழ் நாட்டை,விஷக்கிருமிகளிடமிருந்து மீட்டுத் தாருங்கள்.
 
சிறுவர்கள் பெண்கள் தொடர்பாக நிகழ்ந்துள்ள அனைத்து நிகழ்வுகளிலும் இதேஅணுகுமுறையைக் கையாளுங்கள்.
 
தமிழ்நாடு ஆப்கானிஸ்தானாக மாறாமல் காத்துத் தாருங்கள்.
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு.
வந்தே மாதரம்.
%d bloggers like this: