சோஷியல்பிராப்ளம், பொலிடிக்கல் பிராப்ளம், மாரல் பிராப்ளம் எல்லாம் எகனாமிக் பிராப்ளம் அல்ல என்ற தெளிவை அடையவைப்பார்கள். மோடி என்ற ஒரே மனிதர் நான்கு பிராப்ளமாகவும் ஒரேசமயம் ஆகமுடியும் என்று உணர லைசாண்டர் சார் உயிருடன் இல்லை.
”கல்வி’ என்னும் தலைப்பில் ஜெயமோகனின் நகைச்சுவைக் கட்டுரையில் மேற்சொன்ன வரிகள்.பிரதமர் மோதி, போகிற போக்கில் எழுத்தாளர் பயன்படுத்தும் ஒரு சொல்லாக மாறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அன்றாட வாழ்வியலில் ஒன்றாக மோதியின் பெயர் உருப்பெற்று வந்துள்ளது நல்லதே.
ஆனால், ‘மோடி’க்குப் பதிலாகக் கழகத்தின் கடைக்கோடி வட்டச்செயலாளர் பெயர் இருந்திருந்தால், கருத்துரிமை இந்நேரம் பிணை கோரி நின்று (பாலிமர் நினைவிருக்கலாம்), நிற்கும் நேரத்தில் ‘ஒற்றை இந்துத்துவ எதிர்ப்பு’ பிரசங்கம் நிகழ்த்தியிருக்கும். இது நிதர்ஸனம்.
‘மோடி’யின் பெயரைப் பயன்படுத்தக் கூடாதா என்பதன்று. வேறு யார் பெயரையும் பயன்படுத்த முடியாது என்பதே நிதர்ஸனம் என்பதே இங்கு நிலை.
நேருவைப் பற்றி ஷங்கர் கார்ட்டூன் வரைந்தார், அவர் இருந்த காலத்திலேயே. சுமார் 4000 கார்ட்டூன்கள். அதைப் பற்றி நேரு சொன்னது: ‘Shankar has that rare gift… he points out, with an artist’s skill, the weaknesses and foibles of those who display themselves on the public stage. It is good to have the veil of our conceit torn occasionally’.
ஆனால், தமிழகத்தில் யாரைப் பற்றியும் எழுத, வரைய முடியாது.
உளறிக்கொட்டும் அமைச்சரைக் கேள்வி கேட்டால் ப்ளாக் செய்கிறார். அடிப்படைப் பொருளாதார அறிவில் சிக்கல். நிதித்துறை கோவில் துறை பற்றிப் பிதற்றல் மற்றும் தனிநபர் அவதூறு. கோவில் துறை வட மாநிலத்தவரைப் பழிக்கிறது. கல்வித்துறை, அரசு உதவி பெறாத, நடுவண் அரசப் பாடத்திட்டத் தனியார் பள்ளியை அரசு கைகொள்ளும் என்கிறது. அகில இந்திய நுழைவுத் தேர்வு தமிழகத்திற்குக் கிடையாது என்கிறது. உச்ச் நீதி மன்ற ஆணை தெரிந்துதான் சொல்கிறார்களா? குடிமைப் பணி செயலர்கள் என்று படித்தவர்கள் யாருமே இல்லையா?
பொறுப்பு கண்ணியத்தை அளிக்க வேண்டும். அதுவும் பொதுவெளியில் வார்த்தைகள் மீது அதிகக் கவனம் தேவை. இவர்களுக்கு யார் புரிய வைப்பது? இவற்றை அரசியல் தலைவர்கள் உணர, அவர்களையும் ஜெயமோகன் தனது கட்டுரைகளில் சேர்த்துக் கொண்டு கௌரவிக்க வேண்டும். வெண்முரசியற்றியவர் செய்யாமல் யார் செய்வது?
ராஹுல் காந்தியின் சொற்களைக் கொண்டு மற்றுமொரு நகைச்சுவை நாவல் கூட எழுதலாம். கேஜ்ரிவாலின் 180 டிகிரி பல்டிகளைச் சுட்டி ‘தலைகீழ் பார்வைகள்’ என்னும் தலைப்பில்கட்டுரைகள் புனையலாம். மம்தா பானர்ஜியின் ஆட்டங்களைக் கொண்டு ‘சாக்த பூமியில் ஊழியாட்டங்கள்’ என்றோ, பெண் அமைச்சருக்கு முதல்வர் பதவி வழங்க மறுத்த முன்னேறிய கேரளத்தைப் பற்றி ‘ஷைலஜ மஹாத்மியம்’ வரையலாம். இன்னும் எவ்வளவோ.
எந்தத் தலைவரின் பெயரைப் பயன்படுத்தியும் பகடி செய்ய உரிமை உள்ளது. தரக்குறைவாக, மரியாதைக் குறைவாக இருக்கலாகாது. அவ்வளவே.
நேருவின் சொற்களின் படி ‘அகம்பாவம் என்னும் முகத்திரை அவ்வப்போது கிழிக்கப்படுவது நல்லது’.
மோடிக்குப் பொருந்துவது எந்தத் தாடிக்கும் பொருந்துமன்றோ?
ஜெயமோகனின் கட்டுரை இங்கே
ஜெயமோகன்..அவர்கள் கட்டுரை பதிவிட்டு…இரண்டு நாட்கள் தானே ஆகிறது…சற்று பொறுங்கள்…படிக்க வேண்டியவர்கள் படித்தபின்….பின்னூட்டம்..வரலாம்! ஆனால் மோதி…இதைப்பற்றி யெல்லாம்…கவலைப்படாமல்…என் கடன் பணிசெய்து கிடப்பதே(?!)….என்றிருப்பார் என நினைக்கிறேன்!
LikeLike