இந்து அறம் நிலையாத் துறையின் கீழ் உள்ள கோவில்களின் உண்டியலில் பணம் போட வேண்டாம் என்று சொல்லியிருந்தேன். அதற்காக வழக்கு போடுவேன் என்று கழக வழக்குரைஞர் சொல்லியிருந்தார். அவருக்கு என் பதில் ஃபேஸ்புக்கில்...
Month: October 2021
A new apartheid?
This is new apartheid – the one that the post-2014 hindutvaites and current liberalism vendors practise in equal measure.
Veer Savarkar was a tyagi beyond all means. The kind of torture he had endured in Andaman cannot be visualised now-a-days. He was a hero and will continue to be one of our greatest heroes.
Mahatma Gandhi is yet another hero that has no parallel, yet. Same goes for Sardar Patel and equally for Netaji. And Pt. Nehru doesn’t fall behind. All are our national heroes, satyagrahis are role models in their own ways.I fail to understand why, as a citizen, I cannot admire all the above leaders. How to glorify Gandhi and deride Savarkar? How to eulogise Rajaji, yet talk ill of Nehru?
Who decides that a citizen who praises Pt. Deen Dayal Upadyaya should only cast aspersions on, say, VOC?
Why should we look at the world in binary? I might have a different opinion on the Mahatma’s views on Jews. Yes, he was wrong on his advice to Jews that they should surrender themselves to Hitler. But how can I forget his strong adherence to the dharmic way of life? How can I not take cognisance of his lasting love for Ram? How can I forget that, but for Gandhi who made the freedom struggle a mass movement, people’s participation, more so women’s participation, would not have happened?
If there was one person who had a magnificent, yet, saintly appeal to the largely illiterate masses during the pre-independence era, it was Mahatma Gandhi. He symbolised the austere practices of Jainism and the devotion of Vaishnavism. Not only did he transmute these philosophies of yore into the national stream, but also ensured that such thoughts and practices were used as tools to fight the British.
A casual reading of Bharathi’s works shows the intensity of his love for Bharat. VOC’s sacrifices cannot be replicated yet again. Jai Hind Chempakaraman Pillai is a legend. Vanchi is a hero. Period.
For me, all those who fought for freedom are national heroes and merit my admiration and respect. There could be a variation in their contribution, but each one contributed and sacrificed their lifetime in jails and endured other discomforts.
Any talk of disrespect to any tyagi of yore, including Tirupur Kumaran, Vanchi nathan, VOC, Bharathi, VVS Iyer., Arvind Ghosh, is only a reflection of skewed education and malicious propaganda. Not to mention mortgage of intellectual capacity to intellectual mediocrity.
Love of Tamil doesn’t mean any national leader can be insulted.
ஓர் நூல்
தென்காசியில் இருந்த அந்த இளைஞன் தீக்ஷை வைத்திருந்தான்.
பெண் குழந்தை பிறந்து இறந்த விஷயம் தெரியாமல் வேலையாக இருந்த அவனிடம் தந்தையார் ‘புண்யாகவாசனம் பண்ணனும். ஊருக்கு வா’ என்று அழைக்கிறார்.’இப்போ என்னால எங்குமே வர முடியாது. புண்யாகவாசனமாம், புண்யாகவாசனம்’
‘அப்படிச் சொல்லலாமா? உனக்குக் குழந்த செத்துப் போனதுக்கு, குழந்தைக்கு அப்பா நீ தான் புண்யாகவாசனம் பண்ணனும். ஊருக்கு வா”அப்படியா. நானும் செத்துப் போயிட்டேன்னு நினைச்சு, எனக்கும் சேர்த்து அதையும் நீங்களே பண்ணிடுங்கோ’
‘எதுக்குடா இப்பிடி அபசகுனமா சொல்லற? ஊருக்கு வா. வந்து தீக்ஷைய க்ஷவரம் ப்ண்ணிக்க வேணும்’
‘அப்பா, நான் இதைக் கர்ப்ப தீக்ஷையாக வளர்க்கவில்லை. இந்த வெள்ளைக்காரன்களை நம் பாரத நாட்டை விட்டே துரத்தி, நம் பாரத தேசம் சுதந்திரம் அடையவே வளர்த்த சுப தீக்ஷை. அந்தக் காரியம் நிறைவேறும் வரையில் இதனை எடுக்கப் போவதில்லை. இது சத்தியம்’
அந்த மகன் வீர வாஞ்சிநாதன்.
நூல்: வீர வாஞ்சி. ஆசிரியர்: ரகமி. ரூ: 100.
நூல் வேண்டுவோர் இந்த எண்ணில் அழைக்கவும்: நரசிம்மன் +91-63812-30158 நூல் விலையில் ஒரு பகுதி, காணிக்கையாக, ஆசிரியரின் மனைவிக்குச் சென்று சேர்கிறது.
செய்தி நோக்காப் பேராண்மை
‘நான்கு ஆண்டுகளாக செய்திக்காக எந்தப் பத்திரிக்கையையும் வாசிப்பதில்லை. எனக்குத் தெரிய வேண்டிய செய்திகள் எப்படியும் என்னிடம் வந்து அடைகின்றன’ என்கிறார் ஜெயகாந்தன்.தெரியாமலே நான் இவரது பாணியைச் சில ஆண்டுகளாகப் பின்பற்றுகிறேன்.
இதற்கு News Fast (செய்தி கேளா விரதம்) என்று பெயரிட்டுள்ளார்கள். பலருக்கும் இந்த வியாதி இருக்கும் போல.
இந்த விரதத்தால் மனம் ஒரு நிலையில் இருப்பதாகவே உணர்கிறேன். அதிகம் வாசிக்க முடிகிறது. தனியாக அமர்ந்து சிந்தித்து எழுதவும் நேரமும், ஊக்கமும் கிடைக்கிறது என்பது என் அனுபவம். நடைப் பயிற்சியின் போது யாருடனும் பேசாமலும், காதில் கணடதையும் மாட்டிக்கொண்டு அலையாமலும், வெறும் சிந்தனைகள் மட்டுமே கொண்டு நடப்பது என் வழக்கம். அப்படியே கேட்டாக வேண்டுமென்றால் சில Podcastகள் உள்ளன. சுமார் 20 மணித்துளிகள் ஓடக்கூடியவை.
தொடர் செய்திகளால் மனித மனம் அல்லல்படுகிறது என்று தோன்றுகிறது. ஒரு பிரச்னையில் இருந்து அடுத்த பிரச்னைக்குத் தாவிக்கொண்டே இருப்பது நமது மூதாதையர்களை ஜினைவுபடுத்த உதவலாமே தவிர வேறொரு பலனும் இருப்பதாகத் தெரியவில்லை. இது விஷயமாக ‘Deep Work’ என்றொரு நூல் உள்ளது. வாசித்துப் பாருங்கள்.
காஞ்சி பரமாச்சாரியார் அன்றைய நாளிதழை இரவில் வாசிப்பாராம். ‘காலம்பரயே தெரிஞ்சுண்டு ஆகப்போறது என்ன? நாள் முழுக்க அந்த சிந்தனையே மனசுல உக்காண்டு, நம்ம ஆண்டுண்டு இருக்கும். கார்த்தாலயே நான் தெரிஞ்சுண்டதால செய்தி மாறப் போறதா என்ன?’ என்று குருமூர்த்தியிடன் சொன்னதாகத் தெரிகிறது.
இந்த நாளிதழ் தான் என்று இல்லை, எல்லாவற்றிலுமே நம்பகத்தன்மை இல்லாததும், போலியான கருத்துரைகளை உருவாக்குவதும் அவற்றில் இருந்து ஒரு மன விலகலை ஏற்படுத்திவிட்டதோ என்று நினைக்கிறேன்.உதா: நீட் மற்றும் நியூட்றினோ. உண்மை எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் இந்தப் பாசாங்கு எதற்கு? பாசாங்கே உண்மை என்பது போல் பேசிக்கொண்டே இருந்தால் செய்தித்தாள்களும் சரி, செய்திகளை உருவாக்குபவர்களும் சரி, எப்படித்தான் மன அமைதி பெறுகிறார்கள் என்று எண்ணியதுண்டு.
தொடர்ந்து உண்மைக்கு மாறானதையே சொல்லி வந்ததைக் கண்டு எல்லா பத்திரிக்கைகள் மீதுமே ஒரு வகையான ஒவ்வாமை வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது.தொலைக்காட்சி பேச்சே வேண்டாம். நேரம், மன அமைதி, அறிவு எல்லாம் பாழ். தொலைக்காட்சியில் செய்தி பார்ப்பது முட்டாள்தனம். அதிலும் நான்கு பேர் அமர்ந்து கொண்டிருந்தால் உடனே மூடிவிட்டுச் சென்றுவிடுவது உத்தமம்.
சரி. வேறு என்னதான் செய்வது என்று கேள்வி வரலாம்.காலையில் உடற்பயிற்சி / நடைப்பயிற்சி முடிந்தபின் வாசிக்கலாம். புரிவதற்குக் கடினமான கட்டுரைகள், கீதை வியாக்கியானம், பாசுர விளக்கம், அறிவியல் நூல்கள் இன்ன பிற. ஏதோ பைத்தியம் உளறுகிறது என்ற எண்ணம் வரலாம். ஆனால், நான் இதைத்தான் செய்கிறேன். ( ஆக, ஆமருவி பைத்தியம் தான், ஹையா !!)
Jokes apart. உழப்பட்டு, உரங்கள் இடப்பட்ட நல்ல விளை நிலத்தில் எருக்கஞ்செடியை விதைப்பது எப்படியோ, அப்படியானது செய்தி அலைவரிசைகளில் காலத்தைக் கழிப்பது.
காந்தியடிகளின் பிறந்த நாளில் இருந்து செய்தி நோக்கா / கேளா விரதம் அனுஷ்டிக்கலாமா?
–ஆமருவி தேவநாதன்.02-10-2021
கொஞ்சம் பேசலாமா சார்?
விஷயம் கொஞ்சம் சீரியஸ் தான்
கொஞ்சம் ஊன்றி வாசிக்க வேண்டும். பொறுமை அவசியம். சினிமா, அரசியல் முதலியவை இருக்காது. இவை வேண்டுவோர் இங்கேயே நிறுத்திக் கொள்ளலாம்.
மேலே வாசிப்பதென்று முடிவெடுத்துவிட்டீர்களா? சரி. தேச நலனில் அக்கறை கொண்டவர் போல. அப்புறம் உங்கள் இஷ்டம்.
பேராசிரியர் சுகாத்மே என்றொருவர் ஐஐடி மும்பையில் இருந்தவர். 1994ல் நூலொன்று எழுதினார். ‘The Real Brain Drain’ என்பது அந்த நூலின் பெயர். அவரது ஆராய்ச்சி சொல்பவை:
1973-77 காலகட்டத்தில் ஐஐடி மும்பையில் பயின்றவர்களில் 30.8% வெளி நாடுகளில் இருந்தனர். அவர்களில் 82.6% பேர் அமெரிக்காவில். 10% பேர் ஐஐடியில் சேரும் முன்னரே நாட்டை விட்டுச் சென்றுவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்துள்ளனர். 35% ஐஐடியில் பயிலும் போது முடிவெடுத்துள்ளனர். 50% பேர் ஐஐடியில் பயின்று, இந்திய நிறுவனங்களின் வேலைக்குச் சேர்ந்து, 2-3 ஆண்டுகள் கழித்து, பாரதத்தை விட்டு வெளியேற முடிவெடுத்தனர். இவர்களில் இந்த 50% பேரைப் பற்றி அரசு கவலை கொள்ள வேண்டும் என்கிறார் பேரா.சுகாத்மே.
மேற்சொன்னவர்களில், 25% பேர் மீண்டும் பாரதம் வந்து பணியாற்றியுள்ளனர். சிறிது காலத்திலேயே மனம் வெறுத்து, மீண்டும் மேலை நாடுகளுக்குச் சென்றுவிட்டனர் என்கிறார் பேராசிசியர்.
ஐஐடியில் பயின்று அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் சௌரப் ஶ்ரீவஸ்தவா சொல்வது : ‘நீங்கள் இந்த அதிபுத்திசாலி, அதிகத் திறமை கொண்ட பொறியாளர்களை உருவாக்கிவிட்டீர்கள். ஆனால், யானைக்குத் தீனி போடாவிட்டால் அது அமைதியாக இருக்குமா?’ அவர் தீனி என்று சொல்வது பணத்தைப் பற்றி இல்லை.
அமெரிக்காவில் இருந்து பாரதத்தில் பணி புரிய விருப்பம் தெரிவித்து மீண்டும் வந்த பொறியாளர்கள் மனம் ஒடிந்து திரும்பியதன் காரணங்களாகப் பேரா.சுகாத்மே சொல்வன: ‘the apathy, vagueness, arrogance, noncommittal atitude and corruption and nepotism in Indian organizations’. மற்றுமொரு காரணத் தொகுப்பு ‘the job content in private firms would be too poor to provide any job satisfaction, while material rewards in public sector organisations were felt to be too inadequate’
மீண்டும் மீண்டும் நாம் புரிந்துகொள்வது: திறமைக்கு, தொழில் அறிவுக்கு, செயல் ஊக்கத்திற்கு மதிப்பில்லை என்பதே.
இதைப் பற்றி ‘The IITians’ என்றொரு நூல் உள்ளது. முன்னாள் ஐஐடி மாணவரும் அவுட்லுக் இதழாசிரியருமான சாந்தீபன் தெப் எழுதியது. ஐஐடி சிஸ்டத்தின் வழியாகச்செல்பவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களின் நிதி நிலைமை யாது, அவர்தம் பெற்றோரின் பொருளாதார நிலை என்ன, சிஸ்டத்தால் வடிவமைக்கப்பட்டபின் அவர்களது நிலை என்ன, அவர்கள் அடையும் உயரங்கள் எத்தகையவை என்பது பற்றி நுணுக்கமாக அலசி ஆராய்கிறது இந்த நூல். கடுமையான வறுமையில் இருந்து வரும் சிறுவர்கள் அமெரிக்காவில் எத்தகைய உயர் நிலையை அடைகிறார்கள் என்பதையும் சான்றுகளுடன் சொல்லிச் செல்கிறது இந்த நூல்.
ஆனால், அப்படியான ஐஐடி சிஸ்டம், ஆராய்ச்சிப் பிரிவில் பின் தங்கியுள்ளது ஏன் என்றும் ஆராய்கிறது சாந்தீபன் தெப்பின் அருமையான நூல். அங்கு ஒரு முக்கிய அறிக்கையை நாம் காணவேண்டியுள்ளது.
மெக்கின்ஸி அறிக்கை
2000ம் ஆண்டு, மெக்கின்ஸி நிறுவனம் பாரத அரசிடம் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தது. ‘Shaping the Knowledge Economy in India : The need to set up a national mission for technology education’ என்பது அதன் பெயர்.
பாரதத்திற்கு ஆண்டொன்றுக்கு எத்தனை பொறியாளர்கள் தேவை, எத்தனை பொறியியல் மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்க வேண்டும் என்று கள ஆய்வுக்குப் பின் நீண்ட அறிக்கை சமர்ப்பித்த மெக்கின்ஸி நிறுவனம், பாரதத்தின் ஐஐடிக்களின் மிகப்பெரிய பிரச்னையே அதிக அளவில் தரமான ஆசிரியர்கள் கிடைப்பதில்லை என்பதே என்று தலையில் அடித்தாற்போல் சொன்னது.
மற்றுமொரு அதிர்ச்சித் தகவல் ஒன்றுண்டு. 1993-98 வரை, அமெரிக்காவின் எம்.ஐ.டியில் ஒவ்வொரு ஆசிரியரும் தத்தம் துறை சாந்து 45 ஆய்வுக்கட்டுரைகள் ஆண்டொன்றுக்கு வெளியிட்டுள்ளனர். ஸ்டான்ஃபோர்டின் பொறியியல் கல்லூரியில் 52 ஆய்வுக் கட்டுரைகள் சர்வதேச அறிவியல் இதழ்களில் வெளியிட்டுள்ளனர். ஆனால், ஐஐடி ஆசிரியர் இரண்டு அல்லது மூன்று கட்டுரைகளே வெளியிட்டுள்ளார். 1996-97ல் எம்.ஐ.டி.யின் ஆசிரியர்கள் / மாணவர்களுக்கு 102 காப்புரிமைகள் கிட்டியுள்ளன. ஐஐடியி மூன்றிலிருந்து ஆறு வரை மட்டுமே.
ஐஐடியின் தரம் ஏன் இவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்த மெக்கின்ஸி நிறுவனம், ஐஐடியின் இயக்குநர்கள் மற்றும் பேராசிரியர்கள் தத்தம் துறை சார்ந்து பணியாற்றுவதைக் காட்டிலும், பொதுவான பணிகள் (Administration etc) செய்வதில் தங்களது நேரத்தின் பெரும் பகுதியைச் செலவிடுகின்றனர் என்று பல சான்றுகளுடன் சொல்லியுள்ளது.
குற்றம் மட்டுமே சொல்லாமல், முன்னேறுவதற்கான வழிகளையும் சுட்டி, பின்வரும் பரிந்துரைகளைத் தெரிவித்தது மெக்கின்ஸி நிறுவனம்:
- ஐஐடிக்களின் எண்ணிக்கையை மும்மடங்காக்க வேண்டும்
- முனைவர் ஆய்வுப் பட்டம் பெறுவோர் எண்ணிக்கை மும்மடங்காக வேண்டும்
- ஆய்வுகளின் தரம் உயர வேண்டும்
- ஐஐடி இயக்குநர்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்
- இயக்குநர்களைக் கட்டிப் போடும் சிவப்பு நாடாக்கள் நீங்க வேண்டும்
- ஐஐடிக்களின் நிதி நிலை அதிகரிக்கப்பட வேண்டும். பணம் மத்திய அரசிடம் இருந்து மட்டும் வரக் கூடாது
- ஐஐடிக்களில் தனியார் முதலீடுகள் அதிகமாக வேண்டும்
- ஐஐடி மாணவர் கட்டணம் + தனியார் வேலைக்கு எடுக்கும் போது ஐஐடிக்குக் கொடுக்கும் கட்டணம் உயர வேண்டும்
- ஐஐடி ஆசிரியர்களின் சம்பளம் அரசு சம்பள விகிதத்தில் இருந்து நீங்க வேண்டும்
- ஆசிரியர்கள் தரத்திற்கு ஏற்ப சம்பளம் அமைய வேண்டும். தனியார் நிறுவனங்கள் கூட சம்பளம் வழங்கலாம்
- திறமை இல்லாதவரைப் பணி நீக்கம் செய்யலாம்
மெக்கின்ஸி அறிக்கைக்கு முன்னர் பல முறைகள் இவ்வகையான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. உதாரணமாக, 1995ல் தொழில் அதிபர் வி.கே.மோதி குழு அளித்த அறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சீனா ‘Trans-Century Project’ என்றொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் அறிவியல் மற்றும் பொறியியலில் சீனாவை இந்தியாவைக் காட்டிலும் பன்மடங்கு முன்னெடுத்துச் செல்லும் திட்டமாக உருவாக்கப்பட்டது. நாடெங்கிலும் உள்ள பொறியியல் சார்ந்த பல்கலைகளுக்கு $200 மில்லியன் வழங்கியது அந்நாடு. அதே சமயம், ஒவ்வொரு ஐஐடியும் ஆண்டொன்றுக்கு $10 மில்லியன் பெறுவதே பெரும் பாடாக இருந்தது. இந்த நிலையில் ஐஐடிக்கள் முன்னேறுவது எங்ஙனம்?
பேரா.சுகாத்மே சொல்லும் பரிந்துரை அவசியம் அமல்படுத்தப் பட வேண்டியது.
பள்ளி மாணவர்கள் NTSE – National Talent Search Exam எழுதுகிறார்கள். அவர்களில் முதல் 10,000 மாணவர்களை அரசு கவனிக்க வேண்டும். அவர்களில் கல்லூரிகளில் இருந்து வெளியாகும் 500 மாணவர்களை ‘தலைசிறந்த அறிஞர்கள்’ (Outstanding Scholars) என்று அறிவித்து, அவர்கள் மேற்கல்வி பயில எவ்வித இடையூறுகளும் இல்லாமல் அரசு செய்ய வேண்டும். அவர்கள் மேற்படிப்பிற்காக வெளி நாடுகளுக்குச் சென்றால், ஊக்குவித்து, அவர்களை மீண்டும் அழைத்துக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். மீண்டும் பாரதம் திரும்பும் அவர்களுக்கு, மற்றவர்களைக் காட்டிலும் சற்று கூடுதலான சம்பளம் கொடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். இதன் மூலம், அவ்வகையில் சுமார் 50% அறிஞர்கள் பாரதம் திரும்பி வந்து அறிவியல் முன்னேற்றத்திற்கு வழி கோலுவார்கள் என்கிறார் பேரா.சுகாத்மே.
நான் அறிந்தவரையில், இந்த நடைமுறை சிங்கப்பூரில் அமலில் உள்ளது. சிறந்த மாணவர்கள் தங்களது 8ம் வகுப்பில் இருந்தே கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு மேற்படிப்புக்கான உதவித்தொகைகள் தாராளமாகக் கிடைக்கின்றன. வெளி நாடுகளில் பயிலும் பலர், திரும்பி வந்து சிங்கப்பூரில் பணியாற்றுகிறார்கள். இதைப் பற்றி மறைந்த திரு. லீ குவான் யூ அவர்கள் தனது நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார்.
தற்சமயம் பாரத அரசு IISER – Indian Institute of Science Education and Research என்று பல ஆராய்ச்சிக் கழகங்களை நிறுவியுள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் மட்டுமே இவற்றில் சேர்ந்து பயில்கின்றனர். அவ்விடத்தில் பயிலும் 60% பேர் அமெரிக்காவில் மேற்படிப்பத் தொடர்ந்து முனைவர் பட்டம் பெறுகின்றனர். அந்த வகையில் முன்னேற்றம் தான். ஆயினும், IISERல் பயில KVPY – Kishore Vaignyanik Protshashan Yojana, JEE, SCB முதலிய நுழைவுத் தேர்வுகள் உள்ளன. இவற்றில், அறிவியலில் மிகச்சிறந்த அடிப்படை அறிவு கொண்ட மாணவர்களாலேயே வெற்றி பெற முடிகிறது. இதற்குத் தயார் செய்ய, மாணவர்களுக்கு மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும். ஏனெனில், பள்ளிக் கல்வி மாநிலங்களிடமே உள்ளது.
வறுமைக் கோட்டிற்குக் கீழே இருந்து வந்து, ஐஐடியில் சேர்ந்து பயின்று, இன்று அமெரிக்காவில் தொழில் அதிபர்களாகக் கோலோச்சி, தாங்கள் பிறந்த கிராமங்களுக்கும், படித்த பள்ளிகளுக்கும் பெரிய அளவில் தொண்டாற்றும் பலரைப் பற்றியும் ‘The IITians’ நூல் பேசுகிறது. மாநிலப் பாடத்திட்டம் சரியானதாக இருந்தால் ஏழ்மையில் உள்ள மாணவர்கள் இன்றும் ஐஐடிக்களுக்குள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது இந்த நூல்.
நமது கேள்விகள்:
- மாநில அரசுகள் செய்ய வேண்டியதைச் செய்வார்களா?
- மேற்சொன்ன தேர்வுகளுக்குத் தத்தமது மாணவர்களைத் தயார் செய்வார்களா?
- அவற்றிற்கான பாடத்திட்டங்களை வகுப்பார்களா?
- குறிப்பாகத் தமிழகத்தில் ஜவகர் நவோதயா பள்ளிகளை அனுமதிப்பார்களா?
- மெக்கின்ஸி அறிக்கையின் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று வெள்ளை அறிக்கை வெளியிடுமா?