சென்ற ஆண்டு அக்டோபர் இறுதியில் தேரழுந்தூர் கம்பர் மேடு குறித்து ஓர் காணொளி வெளியிட்டிருந்தேன். கம்பர் மேட்டின் தற்போதைய நிலை, மத்திய தொல்லியல் துறையின் அலட்சியம், மாநில அரசு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்த அளித்துள்ள கோடிகள், தமிழகத்தில் தமிழ் வாழ்ந்த, தேரழுந்தூரில் உள்ள கம்பர் வாழ்ந்த கம்பர் மேடு பகுதியின் சீரழிந்த நிலை என்று பலதையும் சொல்லி வருத்தப்பட்டிருந்தேன்.
நண்பர் கண்ணன் சேஷாத்ரி உடனே தொடர்பு கொண்டார். ‘இந்த ஆண்டு கம்பர் விழா செய்யலாமா, என்ன செய்யணும்?’ என்று கேட்டார். பெரும் பொருட்செலவு ஆகும் விஷயம் அது என்று அறிந்திருந்தேன். ஆதலால் சற்று தயக்கத்துடன் ‘பண்ணலாம். ஆனா..’ என்று பின்வாங்கிப் பேசியிருந்தேன்.
கண்ணன் புதுக்கோட்டை கம்பன் கழகத்தைத் தொடர்புகொண்டார். அதன் செயலர் திரு.சம்பத்குமார் அவர்கள் தேரழுந்தூர் கம்பர் கழகத்தின் ஜானகிராமனைத் தொடர்புகொண்டு இரு கழகங்களும் இணைந்து விழா செய்யலாமா என்று ஆராய்ந்தார்.
பின்னர் சம்பத்குமார், கண்ணன், பாரதி ( புதுகை கம்பன் கழகக் கூடுதல் செயலாளர் ) மூவரும் என்னுடன் கான்ஃபரன்ஸ் முறையில் பேசினர். ‘உங்க காணொளி பார்த்தேன். நீங்க என்ன செய்யணும்னு நினைக்கறீங்க?’ என்று வெளிப்படையாகவே கேட்டார் சம்பத்குமார்.
திடீரென்று 2023 ஜனவரி 7,8 வார இறுதி விடுமுறையில் நடத்தலாம் என்று முடிவெடுத்தோம்.
பின்னர் பல தொலைபேசி காஃபரன்ஸ்கள். ஒருமுறை தேரழுந்தூர் சென்று இடங்களைப் பார்வையிடலாம் என்று முடிவானது. ஆனால், இரு பெரும் புயல்கள் வந்தன. பயணம் ஒத்திப்போடப்பட்டது.
நவம்பர் மாத இறுதியில் சம்பத்குமார் மற்றும் பாரதியுடன் தேரழுந்தூர் சென்றேன். கம்பர் மேடு, கம்பர் கோட்டம் முதலியனவற்றைக் கண்டு விழா எவ்விடத்தில், எங்ஙனம் நடத்துவது என்று எங்கள் வீட்டில் சந்தித்துப் பேசினோம். ஜானகிராமன் ஊரில் பெரிய விழா நடத்துவதில் உள்ள நிதர்சனச் சிக்கல்களைத் தெரியப்படுத்தினார். உடன் ஓய்வு பெற்ற ஆசிரியர் அரங்கராசன் இருந்து ஆலோசனைகளை வழங்கினார். மயிலாடுதுறை தருமையாதீனக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் திருமது. முத்துலட்சுமி அவர்கள் கிராமத்தில் நடத்துவதில் உள்ள சாதக பாதக அம்சங்களைச் சொல்லி நெறிப்படுத்தினார்.
பின்னர் விழா வேலைகள் மும்முரமாகத் துவங்கின. வாட்ஸாப் குழு துவங்கப்பட்டு, நாங்கள் ஐவரும் அடிக்கடி கலந்துரையாடினோம்.
யார் யாருக்கு என்னென்ன வேலைகள் என்பதைப் பகிர்ந்து கொண்டோம். என்னென்ன நிகழ்வுகள் இருக்க வேண்டும், அவற்றிற்குத் தகுதியானவர்கள் யாவர் என்பதைப் பலமுறை பேசி முடிவெடுத்தோம்.
நாங்கள் தேர்வு செய்த சிலர் வரமுடியாமல் ஆனதால் அழைப்பிதழ் அச்சடிக்கும் வேலை தடைப்பட்டது. நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால், வேலைகள் ஸ்தம்பித்தன.
அதே நேரம் சம்பத்குமார் அவர்கள் அயராமல் பணியாற்றி, மாற்றுப் பேச்சாளர்கள், விருந்தினர்கள் என்று கொடுத்துக்கொண்டே இருந்தார்.
இதற்கிடையில் பணிச்சுமை, உறவினர் உடல் நலக் குறைவு என்று பல சிக்கல்கள்.
சிங்கப்பூரில் இருந்து ஜோதி மாணிக்கவாசகம், தி.ரா. வரதராஜன், கண்ணன், ராஜா ராமச்சந்திரன், அமெரிக்காவில் இருந்து கிருஷ்ணன் சேஷசாயி, சென்னை டிரேடிங் ராமமூர்த்தி, புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் தலைவர் திரு.ச.ராமச்சந்திரன் மற்றும் ‘கம்பன் பாக்களின் அடிமை’ என்று மட்டுமே தன்னைக் குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட கொடையாளர் உட்பட பலர் நிதியுதவி அளித்துள்ளனர். தேரழுந்தூர், மயிலாடுதுறை சார்ந்த பலரும் கொடையளித்துள்ளனர். நாஞ்சில் பாலு அவர்களின் பேருதவி மற்றும் உழைப்பு அளவிடற்கரியது.
ஜனவரி 5ம் தேதி அன்றே நான் கிளம்பித் தேரழுந்தூர் சென்றூவிட்டேன். களத்தில் ஜானகிராமன் அயராது ஓடிக்கொண்டிருந்தார். பஞ்சாயத்து ஒன்றியம், காவல் துறை, தீயணைப்புத் துறை, மண்டப அலங்காரங்கள், ஒலி ஒளி அமைப்புகள் என்று அவர் பம்பரம் தோற்கும் விதமாகச் சுழன்று வேலை செய்துகொண்டிருந்தார்.
எல்லாவற்றின் பலனாக, முதல் நாள், ஜனவரி 7, ஆமருவியப்பன் திருக்கோவிலில் கம்பர் மூர்த்தி முன் ஒரு வழிபாட்டுடன் துவங்கியது. கோ பூஜையுடன் கம்ப ராமாயண நூல்களின் ஊர்வலமும் நடந்தேறியது. அதற்கு முன்னர் கம்பர் மேட்டில் சிறிய அளவிலான அஞ்சலி செய்தோம்.
சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் சுரேஷ் குமார், எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன், புதுவை முன்னாள் சபா நாயகர் சிவக்கொழுந்து, பேச்சாளர்கள் ஜடாயு, மை.பா.நாராயணன், முனைவர். கலியபெருமாள், ரா.சம்பத்குமார், புதுகை பாரதி, முத்துலட்சுமி பாலு, திருச்சி ரா. மாது, ஶ்ரீ.உ.வே. கோஸகன் பட்டாச்சாரியார், திரு.சிவகுமார் , பத்மா மோஹன்என்று பல அருமையான சொற்பொழிவுகள், பட்டிமன்றம், வழக்காடுமன்றம் என்று இரண்டு நாட்களும் வெகு விமரிசையாகக் கம்பன் தன் ஊரில் திளைத்து மகிழ்ந்தான்.
தினமலர் நாளிதழ் நிகழ்வுகள் அனைத்தையும் இரண்டு நாட்களும் வெளியிட்டது. மெட்ராஸ்மிக்ஸ்சர் என்னும் நிறுவனம் நிகழ்வுகள் அனைத்தையும் பதிந்துள்ளது. விரைவில் காணொளியாகக் கிடைக்கும்.
விழாவில் தேரழுந்தூர் கம்பர் கழகத்துடன், புதுக்கோட்டை, புதுச்சேரி, கோவில்பட்டி, ராமேஸ்வரம், திருச்சி, சென்னை கம்பன் கழகங்கள் பங்கேற்று, விழா சிறப்பாக நடந்தேறியது.
மாயூரத்தில் இருந்து சென்னை வரும் ரயிலில் இந்தப் பதிவை எழுதுகிறேன். நினைத்தாலே பிரமிப்பாக உள்ளது. ஆனால், நிகழ்வு உண்மை என்பதால் கம்பன் வானுலகில் இருந்து அருள் புரிந்துள்ளான் என்பதை உணர முடிகிறது.
விழா தொடர்பான காணொலி தயாரானவுடன் வெளியிடுகிறேன்.
விழா முடிந்து மறு நாள் காலை கம்பர் கோட்டத்தில் கம்பர் திரு உருவத்தை வணங்கி வரச் சென்றேன். கம்பன் திருமுகத்தில் நிறைவான மகிழ்ச்சி இருந்ததாக உண்ரந்தேன். அந்தப் படம் இதோ:

வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய பாரத மணித்திரு நாடு.
வந்தே மாதரம்.
-ஆமருவி
Great
Sent from my Verizon, Samsung Galaxy smartphone
Get Outlook for Androidhttps://aka.ms/AAb9ysg
LikeLike
அருமை ஆமருவி!
LikeLike
Vanakam Sir. தெய்வப்புலவன் கம்பன். ஶ்ரீநரசிம்மராலும் கலைவாணியாலும் காளிதேவியாலும் ஶ்ரீசீதாராமனாலும் அருள்செய்யப்பெற்றவன்.
ஆனால் தன் ஒரே மகன் அம்பிகாபதியை காக்க இறைவனும் புலமையும் உதவாமல் போய்விட்டதை நினைத்து விதியின் வலிமையை என்னென்பது.
20 ஆண்நாடுகளுக்ட்டகு முன்னர் நாட்டரசன்கோட்டை அருகில் உள்ள சிற்றூரில் கம்பரின் ஜீவசமாதியை பார்த்து வந்தேன்.
சிறு செந்நிற கற்களையும் மண்ணையும் கொண்டுவந்து பூஜையில் வைத்தேன்.
கச்சி ஏகம்பனும் கம்பத்தில் உதித்த நரசிம்மனும் கம்பனை உயர்த்து வளர்கட்டும்.
நன்றி , வணக்கம்.
LikeLike
மிக்க நன்றி
LikeLike
Very glad.Thanks to all concerned.
LikeLike
நன்றி
LikeLike