தொல்காப்பியம் ஒரு இந்துத்வ நூல் ?

thol

சில நேரங்களில் நம்மையும் அறியாமல் சில நல்லது நடந்துவிடுகிறது. அது போல் நடந்தது தான் “தொல்காப்பியத் தமிழர்” என்ற நூல் என் கண்ணில் பட்டது. வாழ்க சிங்கை தேசிய நூலக மலிவு விலைப் பிரிவு.

ஈ.வே.ரா.வின் சீடர்களில் ஒருவர் அவரிடமிருந்து பிரிந்து சென்று நல்ல வழிக்குத் திரும்பினார்களா என்று சில காலமாகவே ஆராய்ந்து கொண்டிருந்தேன். சிங்கை தேசிய நூலகத்தில் அறிஞர் அண்ணாவின் “சரிந்த சாம்ராஜ்யம்”,”வருத்தப்பட வைத்த சம்பவங்கள்” முதலிய சில நூல்கள் எனக்கு வரப் பிரசாதமாய் அமைந்தன. அதைப்போல் அமைந்தது தான் இந்த சாமி.சிதம்பரனாரின் நூல்.

சாமி.சிதம்பரனார் பெரியார் கொள்கையில் ஊறியவர். அவருடன் மலேயா முதலான இடங்களுக்குச் சென்றவர்.ஆனால் மிகச் சிறந்த தமிழறிஞர். எங்கள் ஊர் மயிலாடுதுறைக்கு அருகில் கடகத்தில் பிறந்தவர்.  பெரியாரின் சரிதையை “தமிழர் தலைவர்” என்ற பெயரில் எழுதியவர். பின்னர் அவரது கொள்கைகள் பிடிக்காததால் வெளியேறி கம்யுனிஸ்ட் கட்சியில் இணைந்தார் என்று நினைக்கிறேன்.

இப்படிப்பட்ட ஒரு தமிழ் அறிஞர் பெரியார் கட்சியினர் “ஆரியரும் திராவிடரும் வேறானவர்” என்று கூறியதை ஏற்கவில்லை. திருக்குறள் முதலியவற்றைப் பெரியார் கட்சியினர் கேலி பேசியதை விரும்பவில்லை. அதனால் அவர்களிடமிருந்து வெளியேறிப் பல நூல்கள் எழுதினார். அதனாலோ என்னவோ தமிழகத்தில் “மறக்கடிக்கப்பட்ட” ஒரு நூல் “தொல்காப்பியத் தமிழர்” என்னும் நூல்.

இந்த நூலின் முன்னுரையை அவரே எழுதியுள்ளார். இப்போதுள்ள “பகுத்தறிவாளருக்கு” ஒவ்வொரு வரியும் சாட்டையடி.

“ஆரியர்” படை எடுப்பு என்று கூறி காலட்சேபம் செய்து வந்துள்ள தமிழ்த் தலைவர்களுக்கும் இந்த நூல் ஒரு சரியான பதிலடி. வேறு யாராவது எழுதி இருந்தால் “பார்ப்பனக் கைக்கூலி ” என்றும் “மவுண்ட் ரோடு மகா விஷ்ணு” என்றும் சொல்லித் தப்பிக்கலாம். ஆனால் பெரியாருடனேயே இருந்து அவரைப்பற்றிய புத்தகங்கள் எழுதி, கொள்கை வேறுபாட்டால் வெளியேறிய ஒரு தமிழ் அறிஞர் எழுதியதைப் புறந்தள்ள முடியாதே !

இந்திய மக்களுக்கு ஒரே பண்பாடு இருந்தது, மொழியால் வேறுபாடு இருந்ததே ஒழிய, கலையால், கலாச்சாரத்தால் ஒன்றாகவே இருந்தார்கள் என்று கூறுகிறார். நான் கூறினால் இந்துத்துவவாதி என்று திட்டலாம். சாமி.சிதம்பரனார் அப்படி இல்லையே. பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வந்தவரே !

பண்பாட்டால் ஒன்றுபட்டது இந்தியா என்கிறார்.அதற்கு தொல்காப்பியத்தை உதவிக்கு அழைக்கிறார். தற்போதைய “அறிவாளிகளுக்கு” இது வேப்பங்காய். “தமிழ் இனம்” என்று இவர்கள் போடும் கூப்பாடு காது கிழிகிறது.

அவர் முன்னுரையில் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். முன்னுரையை மட்டுமே ஒரு புத்தகமாகப் போடலாம் என்று தோன்றுகிறது. பல ஆண்டுகள் கழிந்தாலும் அவருடைய சொற்கள் இன்றைய தமிழகத்திற்கு அப்படியே பொருந்துகின்றன. ( நூலை முழுவதும் படிக்க வில்லை. அதற்குள் இன்னொரு நண்பர் கடன் வாங்கிச் சென்றுவிட்டார். படித்தபின் விரிவாக எழுதுகிறேன்).

—————–

“தமிழர்களைப் பற்றித் தமிழ் இலக்கிய உண்மைகளை உணராதவர்களால் எழுதப்பட்ட வரலாறுகளே இன்று மலிந்து கிடக்கின்றன. தமிழர் வரலாற்றைப் பற்றி வெளிநாட்டினர் பலவாறு கூறுகின்றனர். பழந்தமிழ் இலக்கியங்களிலே பயிற்சியில்லாத சரித்திரக்காரர்கள் என்னென்னவோ சொல்கின்றனர்..

“தமிழகத்திலே இன்று இனவெறுப்பு தலைவிரித்தாடுகிறது. மொழிவெறுப்பு முறுக்கேறி நிற்கின்றது. நாகரிக வெறுப்பு நடனமாடுகின்றது. வரலாறு, நாகரிகம், பண்பாடு என்ற பெயர்களைச் சொல்லித் தமிழ்மக்களிடையே கலகத்தீயை மூட்டிவிடுகின்றனர் சிலர். இத்தகைய வெறுப்புத்தீ அணைக்கப்பட வேண்டும்.    

“…பண்டைய மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் சிலவற்றை மூடநம்பிக்கைகள் என்று மொழிகின்றோம். விஞ்ஞான அறிவுக்கு ஒத்துவராத சில பழக்கங்களும் நம்பிக்கைகளும் பண்டைக்கால மக்களிடம் இருந்தன. நாகரிகம் பெற்ற எல்லா இனத்தினரிடமும் இவைகள் இருந்தன. தமிழர்களிடமும் இத்தகைய பழக்கங்களும், நம்பிக்கைகளும் இருந்தன என்பதில் வியப்பில்லை.

‘தமிழர்களிடம் எவ்விதமான பொருந்தாப் பழக்கமும் இருந்ததில்லை. எந்தக் குருட்டு நம்பிக்கையும் இருந்ததில்லை. இன்றைய விஞ்ஞான அறிவுபெற்ற பகுத்தறிவாளர்களைப் போலவே அன்றும் வாழ்ந்தனர். ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும் மூடநம்பிக்கைகளையும் தமிழரிடையே புகுத்தினர் என்பது உண்மையன்று.

“… இவர்கள் கூற்று வெறுப்பையே அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் வடமொழியில் கொண்டிருக்கும் வெறுப்பும் இதற்கொரு காரணம்.  தமிழ் இலக்கியங்கள் நன்றாகக் கற்றவர்களுக்கு இவ்வுண்மை தெரியும். இவ்வுண்மையை உணர்ந்த புலவர்களில் கூடச் சிலர் இதை மறைக்கின்றனர். 

“…. அந்த நாகரிகம் ஆரியருக்கும், தமிழருக்கும் ஒத்த நாகரிகமாகத்தான் காணப்படுகின்றது. தொல்காப்பியத்தில் ஆரியர் என்ற பெயரோ, திராவிடர் என்ற பெயரோ காணப்படவில்லை.”

 “இந்தியமக்கள் வணங்கும் தெய்வங்கள், பிறப்பு, இறப்பு பற்றிய நம்பிக்கைகள், நீதி, அநீதி இவைகளைப் பற்றிய முடிவுகள், பாவபுண்ணியம், மோட்சம், நரகம் பற்றிய கொள்கைகள் இவைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன. இந்திய மக்கள் அனைவருக்கும் இவைகளைப் பற்றிய கருத்து ஒன்றுதான். இவைகள்தாம் பண்பாட்டுக்கு அடிப்படையானவை. அவரவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்து நடை, உடை, பாவனைகளும், மொழிகளும் வேறுபட்டிருக்கலாம். இதனால் இந்தியமக்களின் பண்பாடு வெவ்வேறு என்று சொல்லிவிட முடியாது ‘ என்பதே இச்சரித்திராசிரியர்களின் கொள்கை. இந்தக் கொள்கைக்குத் தொல்காப்பியம் ஆதரவளிக்கிறது.”

—————

இந்தியா, பண்பாடு, கலாச்சாரம் என்று கூறுவதாலும், அதற்கு தொல்காப்பியத்தை உதாராணம் காட்டுவதாலும் ஒன்று தொல்காப்பியம் இந்துத்துவ நூலாக இருக்க வேண்டும், அல்லது சாமி.சிதம்பரனார் ஆர்.எஸ்.எஸ். காரராக இருக்க வேண்டும். இப்படி நம்புவதுதான் தற்காலத்திய பகுத்தறிவு.

"நாளும் பொழுதும் "- ஜெயமோகன் – ஒரு பார்வை

Naalum

சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘நாளும் பொழுதும்’ வாசித்தேன்.   சமூகம், சினிமா, நான் என்று மூன்று பிரிவுகளில் அமைந்துள்ள இந்த நூலில் பல கட்டுரைகள், அவர் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகள் முதலியன உள்ளன.

“பந்தி” என்ற கட்டுரை நெஞ்சைத் தொட்டது. குமரி மாவட்டத்தில் திருமணம் முதலிய விழாக்களில் விருந்தினர்களை எப்படி பந்தி உபசரிப்பது என்று அருமையாக விவரித்துள்ளார். அம்முறையில் உள்ள வழக்கங்கள், ஒவ்வொரு வழக்கத்தின் பின்புலம், அதன் தேவை என்று அழகாக இருந்தது. ஒவ்வொரு சமூகத்தவரின் பந்தி உபசரிப்புக்களும் அப்படியே. ஆனால் தற்போது எப்படி உள்ளது என்பதையும் சொல்லியுள்ளார். நாம் தினமும் காணும் ஒன்று தான். இருந்தாலும் படிக்கும் போது வலிக்கிறது.

எல்லாக் கட்டுரைகளையும் விட என்னை மிகவும் பாதித்த ஒன்று தற்கால இளைஞர்களைப் பற்றியது. “யூத்து” (Youth) என்பது பெயர். எனது கருத்துக்கு ஒத்துப் போவதாக அமைந்துள்ளதால் கவரப்பட்டேன் என்பது உண்மை என்றாலும், அவரது சில எண்ணங்கள் மிகவும் உண்மை.

யூத் என்ற போர்வையில் பொறுப்பற்ற ஒரு கூட்டம் செயல்படுவதையும், அவர்களுக்கு எப்படிக் கலைகள் பற்றியும் வாசிப்பு பற்றியும் ஒரு அறிமுகமே இல்லாமல் இருப்பது பற்றியும் மிகவும் கவலை கொண்டு எழுதியுள்ளார். இந்த சில கருத்துக்கள் என் ஒரு கட்டுரையில் முன்னமே சொல்லிருந்தேன்.

http://ammanji.wordpress.com/2013/07/20/futureindia/ )

சுய தம்பட்டம் இருக்கட்டும். ஜெயமோகனுக்கு வருவோம்.

“யானை டாக்டர்” என்று முன்னம் எழுதிய கதையில் இளைஞர்கள் காடுகளில் பீர் பாட்டில்களை உடைத்து வீசுவதால் யானைகள் எப்படி உயிர் இழக்கின்றன என்று எழுதி இருந்தார். அதிலிருந்து தொடங்குகிறார். ஒரு மலை உச்சியில் இளைஞர்கள் சட்டையைக் கழற்றி ஆடியபடி, குடித்தபடி, கத்தியபடி இருந்திருக்கிறார்கள். அதைப்பற்றிக் கூறுகிறார் :

“அந்த இளைஞர்களுக்கு அந்த இடத்தின் அழகும் முக்கியத்துவமும் உண்மையிலேயே தெரியவில்லை. அங்கே எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்று அவர்களுக்குப் புரியவில்லை. அதைப்போன்ற விஷயங்கள் அவர்களுக்குப் பழக்கமே இல்லை. அது தான் பிரச்சினை. இவர்கள் அறிந்தது தமிழ் சினிமா.அதில் என்ன செய்கிறார்களோ அதைச் செய்கிறார்கள்.”ஜாலியாக” இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

நம்முடைய இளைஞர்கள் வளர்ப்பு இதற்கு முக்கியமான காரணம். ரசனை, அழகுணர்வு, குடிமைப்பண்பு, அறிவார்ந்த நோக்கு ஆகியவை குடும்பம், கல்வி நிலையம் என்னும் இரு அமைப்புகள் வழியாக வர வேண்டும்.

நம்முடைய குடும்பங்கள் பெரும்பாலும் சேர்ந்து சமைத்துத் தின்று, உறங்குகிற இடங்கள் மட்டுமே.. நம் குடும்பங்கள் அதன் பிள்ளைகளுக்குப் பணம் சம்பாதிப்பதற்கான உந்துதலை மட்டுமே உருவாக்குகின்றன.கல்வி அப்படி பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழிமுறையாகவே முன்வைக்கப்படுகிறது.

பல குடும்பங்களில் பண்பாடு என்று நாம் நம்பும் எதனுடைய அடையாளமும் இருக்காது.ஒரு சில சாமிப் படங்கள், பாட புத்தகங்கள், ஒரு டி.வி.-அவ்வளவுதான். அவர்களுக்கு எந்த ஒரு பண்பாட்டுப் பயிற்ச்சியும் இருப்பதில்லை.

நாம் மரபாகக் கொண்டிருந்த எல்லா பண்பாட்டுக்கூறுகளும் “வாழ்க்கை வளர்ச்சிக்கு” உதவாதவை எனத் தூக்கி வீசப்பட்டு விட்டன. யோசித்துப் பாருங்கள், நம்முடைய சராசரி இளைஞனுக்கு ஏதாவது ஒரு ஊடகத்திடமாவது தொடர்புள்ளதா என்று? அவனுக்கு இசை, ஓவியம் என்று எந்த ஒரு நுண் கலையிலும் அறிமுகமில்லை. அவனால் ஒரு நூலை வாசித்துப் புரி ந்துகொள்ள முடியாது.    அவனுக்குச் சின்ன வயது முதலே தெரிந்த ஒரே ஊடகம் தமிழ் சினிமாவும் அந்தச் சினிமாவிலேயே மொண்டு சமைத்த டி.வி.யும்…”

ஒரு பொது இடத்தல் நாலைந்து “யூத்து” வந்துவிட்டால் கிட்டத்தட்ட ஒரு குரங்குக் கூட்டம் வந்து விட்டது போலத்தான். இங்கே “யூத்து” என்றால் எதிலும் நிலையான ஆர்வமில்லாத, எந்த அடிப்படைப் பயிற்சியும் இல்லாத, மேலோட்டமான ஆசாமி என்று தான் அர்த்தம்.

என் தரிசனம் : பள்ளியோ கல்லூரியோ சென்று வந்த பிறகு என்ன செய்வதென்றே நம் இளைஞர்களுக்குப் புரிவதில்லை. கும்பலாகச் சேர்ந்து நக்கல் அடிப்பதும், சினிமாப் படங்களைப் பார்த்து அதன் வசனங்கள் பேசி மகிழ்வதுமே அவர்கள் பொழுதுபோக்கு. வீட்டிற்கு அருகில் நூலகங்கள் இருந்தால் அங்கே சென்று என்ன இருக்கிறதென்று பார்க்கவாவது பார்ப்பான். ஆனால் வீதிக்கொரு கள்ளுக் கடை இருந்தால்? அதையும் அரசே செய்தால்?

Facebook, Twitter முதலிய சில தளங்களில் தமிழ் மக்கள் உரையாடுவது அவர்களின் தரத்தை மேலும் பறைசாற்றுகிறது. எங்கும் ஒரு வரி விமரிசனங்கள். அதுவும் அரசியல் மற்றும் சினிமா பற்றி மட்டுமே. பல நேரங்களில் வசை மொழிகள். மிகப் பல நேரங்களில் சாதி சொல்லி வைவது. சாதியை ஒழித்துவிட்டதாக மார் தட்டிக்கொள்ளும் ஒரு சமூகத்தில் சாதியை இழுக்காமல் யாராலும் பேச முடியவில்லை. புத்தகங்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை. படித்தால்தானே பேசுவதற்கு?

சில மாதம் முன்பு பெரியார் தமிழ் பற்றியும், சிலப்பதிகாரம் பற்றியும் சொல்லிருந்ததைப்பற்றி  பற்றி எழுதி இருந்தேன். இணையத்தில் ஒரே வசை மொழி. வேறு ஒரு பதிவின் போது அவர்களுக்கு ஒரு பதில் அனுப்பினேன் – ” இவை என் கருத்துக்கள் அல்ல. அறிஞர் அண்ணா “சரிந்த சாம்ராஜ்யம்”, “மனதை வருத்திய சம்பவங்கள்” என்று இரண்டு நூல்களில் சொல்லியுள்ளவை”, என்று ஆதாரம் காண்பித்தேன். ஒரு பயலும் பேசவில்லை.

ஜெயமோகனின் வார்த்தைகள் நம் தமிழ் சமுதாயத்தின் மீது சொடுக்கப்பட்ட சாட்டை வீச்சுக்கள். இந்த வீச்சுக்களால் புண்பட்டு அதனால் நம் வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்படுமானால் நல்லது தான்.

ஆனால் இந்த சாட்டை வீச்சும் நம்மை ஒன்றும் செய்யாமல் நமது தோல் அவ்வளவு தடிமனானதாக இருந்தால் இந்த தமிழ்ச் சமுதாயம் போகும் பாதை அதல பாதாளம் என்பது புரிய பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை.

பி.கு: – ஒரு ஆறுதல்:  தமிழ் நாட்டிலிருந்து சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் குடியேறியுள்ள பல தமிழர்கள், தமிழ் நாட்டின் ஊடக ஆக்கிரமிப்பிலிருந்து மீண்டு தங்கள் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்கிறார்கள். சிங்கையில் தமிழ் நுண் கலைகள் அமைப்புகள் பல உள்ளன. தமிழ்க் குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை அவ்விடங்களுக்கு அனுப்புகிறார்கள். இலங்கைத் தமிழர் கோவில்களிலும் செட்டியார் சமூகத்தவர் நடத்தும் கோவில்களிலும் தமிழ்த் திருமுறை வகுப்புகள்  நடத்தப் படுகின்றன. பிள்ளைகளுக்குத் திருமுறைகளில் போட்டிகள் வைத்துப் பரிசுகள் வழங்குகிறார்கள்.

காதில் விழுந்தவை..

“பிரும்மச் சாரிகள் இந்தப் பக்கம ஒரு வரிசையா உக்காண்டுக்கோங்கோ “.

“தீர்த்தம், பஞ்ச பாத்தரம் எல்லாம் இருக்கா?”

“ஆசமனம் பண்ணியாச்சா?”

“Dude, where do I get some water from?”

“மாமா, தீர்த்தம் வேணுமா?”

“என்னடா, உத்திருணி இல்லையா? ஓ நீ ஐயங்காரா?”

“yes, am in NUS for my doctorate in Bio-Inforrmat

ics”

“ஓம் பூ ஹூ பண்ணுங்கோ ”

“யாருக்கெல்லாம் அய்யர் பூணல் வேணும்? ஒண்ணா ரெண்டா? ”

“மாமா இங்கே மூணு பூணல். ”

“அப்பா, why is his பூணல் so thick?”

“உஷ், he seems to be an ஐயங்கார். That’s why”.

“இன்னிக்கி Scott Bruce Lecture 9 மணிக்கு. அதுக்குள்ளே ஆயிடுமா?”

“முன்னை போகணும்னா First batch 5:30க் கே வந்திருக்கணும் மாம்ஸ்”.

“Ph.D Thesis Sumbit பண்ணின உடனே ஜகா வாங்கிடணும் டா. இல்லே P.R. குடுத்துடுவான்”.

“ஸ்ரீ பகவ தாஞியா .. பரமேசுவரப் ப்ரீர்த்தியர்த்தம்…”

“பாவமே, வாத்தியார் ஐயர் சாஸ்திரிகள். நாராய

ணப் பிரீர்த்தியர்த்தம்  சொல்லுங்கோ ..”

“மாத்வாளுக்கும் இந்த சங்கல்ப மந்த்ரம் உண்டா?”

“ஐங்கார் எல்லாம் ஸ்ரீமன் நாராயணப் ப்ரீர்த்தியர்த்தம் னு சொல்லுங்கோ”

“நாளைக்கி NTU லே Yale Ph.D. பத்தி Road Show இருக்கு, நீ வர்றியா டா?”

“Google Internship முடிஞ்சதும் VC யோட meeting இருக்கு”.

“V.C.- யாரு? Blackrock Capital தானே? அவன் ஒரு fraud டா. Ideas சுட்டுடுவான்”.

“மாமா, இங்கே அட்சதை குடுங்கோ”.

“தீர்த்தம் ஆயிடுத்து. கொஞ்சம் விடுங்கோ “.

“இப்போ காண்டரிஷி தர்ப்பணம். சொல்லுங்கோ – சாம வேதம் தர்ப்பயாமி..”

“U.C. Berkeley லே ஏண்டா Research Associate வேண்டான்னுட்டே. அப்பா ரொம்ப வருத்தப்பட்டார்”.

“இல்ல ராமு, NUS-லே Scholarshipலே Ph.D குடுக்கறான். U.C.ல Aid  கிடைக்கலே. இது betterனு தோணித்து”.

“யக்நோபவீத தாரணம் கரிஷ்யே ..எல்லாரும் ஆசமனம் பண்ணுங்கோ “.

“என்ன இருந்தாலும் Pilani Dual Degreeக்கு NUS M.S. better இல்லே?”

“நேத்திக்கி DC லே Conference. இன்னிக்கி ஆவணி அவிட்டத்துக்கு வருவேன்னே நினைக்கலே”.

“இப்போ வேத பாடம் ஆரம்பம். கை கூப்பிககோங்கோ . சொல்றபடியே திருப்பிச் சொல்லுங்கோ”

“மாமா காயத்ரி ஜெபம் எப்போ? நாளைக்கி தானே? நீங்க Los Angeles Presentationக்குப் போறேளோல்லியோ?”

“ஆமாம். நல்ல வேளை. பவித்ரம் வாங்கிக்கணும். நாளைக்கு SQ – Airbus A-380ல் காயத்ரி ஜெபம். ஆமாம், போன வாரம் Raghuram Rajan போன் பண்ணினாரா?”

“வேத பாடம் ஆயிடுத்து. வரிசைலே நின்னு நமஸ்காரம் பண்ணுங்கோ. எல்லாரும் தீர்காயுசா இருக்கணும் “.

“சார் நீங்க …. SMUல Design Professor தானே? நான் போன மாசம் உங்க TED Talk பார்த்தேன்”.

“ஓ அது நான் இல்லையாக்கும். என்னோட அண்ணா. நான் Barclays ல SVPயா இருக்கேன்”.

“ஒ ஐ ஸீ ”

avani sing
செட்டியார் கோவில் சிங்கப்பூர்

“Why so many Indian coming with white robe today to Tank Road Chettiyaar Temple lah?”

“Today Indian religious festival lah”.

“So what is the symbol on forehead lah ? sorry just to know”

“Ok. Let me begin. Once upon a time there lived a sage called Vyas”.

“Sorry ya, where you want to go already ?”

“Changi Biz Park”.

“Ok lah, another Little India aleady!”

” ”

“So all Indian come out of India. What happen to economy?”

“All Indian stay in India, so what happen to world economy?”

“You tell Indian story lah, that is better already “

%d bloggers like this: