வாழத்தெரியாதவர்கள் – 2

வாழத்தெரியாத ஒருவரைப் பற்றி சோ ஒருமுறை சொன்னது:

அவர் முதல்வராக இருந்தபோது இந்தியா பங்கேற்கும் கிரிக்கெட் மாட்ச் நடந்துள்ளது. வீட்டில் அலுவலர்களுடன் அவர் அரசு அலுவல்கள் பற்றிக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரது பேரனோ உறவினர் பேரனோ வருகிறான்:
‘தாத்தா, கிரிக்கெட் மேட்ச் போகணும்.’
‘போயிட்டு வாயேன்’
‘இல்ல, உங்களுக்கு பாஸ் இருக்குமோனோ அதைக் குடுங்கோ. நான் போயிட்டு வரேன்’
‘காசு குடுத்து வாங்கிண்டு போ’
‘உங்ககிட்ட தான் பாஸ் இருக்கே. தாங்களேன்’
‘அது பிரீமியருக்கு வந்த பாஸ். உனக்கு வேணும்னா காசு குடுத்து டிக்கட் வாங்கிண்டு போ. நான் பணம் தரேன்.’

அந்த பிரீமியர் ராஜாஜி. #வாழத்தெரியாதவர்கள்

வாழத்தெரியாதவர்கள் – 1

ராஜாஜியைப் பற்றி சமீபமாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். சோ சொன்ன ஒரு செய்தி:

ராஜாஜி உடல் நலமில்லாமல் இருந்துள்ளார். இறுதிக்காலம். எம்.எஸ் மற்றும் சதாசிவம் வந்து பார்க்கின்றனர்.

‘மனசுல எதோ பாரம் இருக்கறாப்ல தெரியறதே’ – இது எம்.எஸ்.
‘ஒண்ணும் இல்லை’ ராஜாஜி.
‘சொல்லுங்க பரவாயில்ல.’
‘ஒண்ணும் இல்லை. சாகறச்சே பிள்ளைக்கு சொத்து ஒண்ணும் சேர்த்து வெக்கல. சம்பாதிச்தெல்லாம் கரைஞ்சு போச்சு’
‘அவ்ளோ தானே? எவ்வளவு வேணும் சொல்லுங்க’ இது சதாசிவம்.
‘சுமாரா ஒரு 6000 ரூபாய் இருந்தா பிள்ளைக்கு கொடுக்கலாம். இனிமே எங்க சம்பாதிக்கறது?’
‘உங்கிட்ட தான் பியட் கார் இருக்கே. அதை வித்தா 6000 சுலபமா கிடைக்கும்’
‘அது எப்படி? அது சுதந்திரா கட்சியோடதுன்னா? நீங்க கட்சிக்குக் கொடுத்ததுன்னா அது?’ ராஜாஜி.
‘காட்சியோடதா? அதை நான் உங்குக்காகன்னா கொடுத்தேன்’ சதாசிவம் சொல்கிறார்.

இப்படியாக ராஜாஜி ரூ.6000 சொத்து சேர்த்து வைத்தார். #வாழத்தெரியாதவர்கள்

இடதுசாரிகள் ஒரே ரகம்

இந்திய இடதுசாரிகள் மட்டுமே இந்தியாவிற்கு எதிரானவர்கள் என்று பார்த்தால் வெளி நாட்டு இடதுசாரிகளும் அப்படியே உள்ளனர். நேபாள இடது சாரித் தலைவர்கள் ‘இந்தியா குறித்து எச்சரிக்கயுடன் இருக்க வேண்டும். இந்திய உதவிகள் சீனாவிற்கு எதிரானதாக இருக்கலாம்’, என்று கவலை தெரிவித்து உள்ளனர்.

நம் நாட்டு இடதுசாரிகளுக்கு மட்டும் தான் எல்லை தாண்டிய தேசபக்தி இருக்கும் என்று நினைத்திருந்தேன். நேபாள இடதுசாரிகளுக்கும் அவர்கள் நாட்டு எல்லையில் துவங்கி தங்கள் நாடான சீனாவில் முடிகிறது அவர்களது தேச பக்தி.

இடதுசாரிகள் அனைவரும் ஒரே ரகம்.

இதில் பிரசண்டா என்கிற தலைவரை தமிழகத்தின் ஹிந்து நாளிதழ் பல ஆண்டுகள் தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்தது. இப்போதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரது நேர்காணலை வெளியிடுகிறது.

‘கம்யூனிஸ்டுகள் என் முதல் எதிரிகள்’ என்று இராஜாஜி சொன்னார். எவ்வளவு உண்மை ?

இதோ தினமணியில் வந்துள்ள செய்தி :

“நிலநடுக்க நிவாரணம், மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளால் நேபாளத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பிரதமர் சுஷீல் கொய்ராலா எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” என்று அந்நாட்டு இடதுசாரி தலைவர்கள் கூறினர்.

நேபாள காங்கிரஸ் தலைவர் சுஷீல் கொய்ராலா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களான நேபாள ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தலைவர் பிரசண்டா, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தலைவர் மோகன் வைத்யா, நேபாள விவசாயக் கட்சித் தலைவர் நாராயண் மான் பிஜுக்சே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது மேற்கண்ட 3 தலைவர்களும் பேசியதாவது:

நிலநடுக்கத்துக்குப் பிறகு இந்தியாவின் தலையீடு அதிகரித்து வருகிறது. இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை நேபாளத்தின் கட்டுப்பாட்டை மீறி சென்று கொண்டிருக்கிறது.

சீனாவுடனான நேபாளத்தின் வடக்குப் பகுதி எல்லை மீதும், காத்மாண்டுவில் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் மீதும் இந்தியாவின் கவனம் உள்ளது. இது சீனாவுக்கு கவலையை ஏற்படுத்தக் கூடும். எனவே பிரதமர் கொய்ராலா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

%d bloggers like this: