‘பத்மநாபா படுகொலை’ – நூல் விமர்சனம்

.. விடுதலைப் புலிகளை இந்தியாவில் ஆதரிப்பவர்கள் ஒன்று கோழைகளாக இருக்க வேண்டும் அல்லது அவர்களிடம் கைக்கூலி வாங்கிக்கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டும் – jeyakanthan

 பத்மநாபாவையும் சேர்த்துப் பதினான்கு பேரைப் புலிகள் படுகொலை செய்தனர். செய்யப்பட்ட இடத்தில் இருந்து ஆறு தெரு தள்ளி நான் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தேன்.

பத்மநாபா என்றொருவர் இருந்தார், ஈழப் போரில் பெரும் பங்கு ஆற்றினார், விடுதலைப் புலிகளுடன் சமரசம் செய்துகொள்ள மறுத்தார், இந்திய இலங்கை ஒப்பந்தத்தை வரவேற்றார், ஆகவே சென்னை கோடம்பாக்கத்தில் வைத்துப் புலிகள் அவரையும் வேறு 14 பேரையும் படுகொலை செய்தனர்.

மேற்சொன்ன தகவல்கள் அனேகமாக இப்போது யாருக்கும் நினைவில் இருக்க வாய்ப்பில்லை. அப்படி ஒருவர் இருந்தார் என்பதே கூட பலருக்கும் தெரியாமல் இருக்கவே வாய்ப்புள்ளது. ஈழ விடுதலைப் போர் என்றால் ஏதோ விடுதலைப் புலிகள் மட்டுமே என்றொரு பிம்பமே தற்போது அனேகமாகப் பலருக்கும் உள்ளது. 

ஈழத்திற்கான போர் என்பதில் பிரபாகரன் தலைமையிலான புலிகள் தவிர பல போராளிக்குழுக்கள் இருந்தன என்பதையே நம் தமிழ் மக்களுக்கு நினைவு படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறான சூழலில், ‘பத்மநாபா படுகொலை’ என்னும் நூல் சரியான நேரத்தில் வெளிவந்துள்ளது. எழுதிய ஜெ.ராம்கி, வெளியிட்ட சுவாசம் பதிப்பகம் நீடூழி வாழ்க. 

இனி கொஞ்சம் வரலாறு. நிறைய  படுகொலைகள் என்று பயணிப்போம்.

பத்மநாபா படுகொலை என் மனதில் ஆழப் பதிந்த ஒன்று. அவர் கோடம்பாக்கத்தில் கொலையான அன்று, மாம்பலத்தில் என் மாமா வீட்டில் நான் தங்கியிருந்தேன். பொறியியல் நுழைவுத் தேர்வு எழுத சென்னை வந்திருந்தேன். அத்துடன், 1983 முதல் ஈழத்திற்கான போர் பற்றிய செய்திகள், போராளிக்குழுக்கள் பற்றிய தகவல்கள், இந்திய இலங்கை ஒப்பந்தம் என்று மிகவும் ஊன்றிப் படித்துக்கொண்டிருந்தேன். இந்திய அமைதிப் படை இலங்கை சென்ற போது மாலை 5:30 மணி அளவில் ஆல் இந்தியா ரேடியோவின் பிரத்யேக ஒலிபரப்பையும் விடாமல் கேட்டிருந்ததுண்டு. ஆகவே, இலங்கை நடவடிக்கைகள் அனேகமாக அத்துப்படி. ( ‘நெய்வேலிக் கதைகள்’ நூலில் இதைப் பற்றி நிறைய எழுதியுள்ளேன்). 

   விடுதலைப் புலிகள் தவிர, ஈரோஸ், பிளாட், டெலோ, ஈபிஆரெல்எஃப் என்று பல போராளிக் குழுக்கள் அன்று செயல்பட்டு வந்தன. அனைத்துப் போராளிக்குழுக்களையும் அழித்தொழித்து, புலிகள் பயங்கரவாதக் குழுவாகப் பரிணாம உருமாற்றம் அடையத் துவங்கிய காலம் அது. ராஜீவ் காந்தி அப்போது உயிருடன் இருந்தார்.

பத்மநாபா இடதுசாரிச் சிந்தனை கொண்டவராக ஈபிஆர்எல்எப் இயக்கத்தை நடத்தி வந்தார். யுத்தம் என்பது எப்போதாவது நிறுத்தப் பட வேண்டிய ஒன்று என்பதை உணர்ந்தவராக, ஒரு புள்ளியில் யுத்தம் நின்று சமாதானம் துளிர்த்தாலே மக்கள் அதிகாரம் பெற்று வாழ முடியும் என்பதை உணர்ந்தவராக, தன் போராளிக்குழு இளைஞர்களுக்கு ஒரு மார்க்கதரிசியாகத் திகழ்ந்தார் பத்மநாபா. யுத்தம் தீர்வல்ல என்பதை உணர்ந்தவராக இருந்த அவர், சமாதானம் துவங்க வேண்டிய கட்டம் எது என்பதையும் அறிந்திருந்தார். இதற்கு அவரது வாசிப்பு ஒரு காரணம்.

நிதர்ஸனத்தை உணர்ந்தவராக இருந்த பத்மநாபா தனது குழுவில் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்து, போராளிகளுக்கு அரசியல் பயணத்திற்கான வழி காட்டும் சிந்தனையாளராகச் செயல்பட்டு வந்தார். அதனாலேயே, ஆயுதப் போராட்டம் முடிவடைய வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்தார். 

ஆனால், அரசியல் பயணத்திற்குப் புலிகள் தயாராக இருக்கவில்லை. ஆயுதப் போராட்டம் மூலம் ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்று அவர்கள் நம்ப வைக்கப் பட்டார்கள். இதற்கு, இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து பண உதவி செய்துவந்த குழுக்கள் முக்கிய காரணம். யுத்தம் நின்றால் பணப்புழக்கம் நின்றுவிடும் என்று நம்பிய பல குழுக்கள் ஈழத்தில் யுத்தம் நிற்காமல் பார்த்துக் கொண்டன. அந்தச் சதியில் பத்மநாபா, உமா மகேஸ்வரன், பாலகுமார் முதலான தங்கள் சகோதரப் போராளிகளை ஹவிசுகளாக கொடுத்த புலிகள், இறுதியில் ஆத்ம சமர்ப்பணம் செய்துகொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பத்மநாபா கொல்லப்பட்ட நேரத்தில் புலிகள் இலங்கை அரசுடன் சமாதானத்தில் இருந்தனர். பிரேமதாசா அரசுடன் கூட்டுச் சேர்ந்து, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேர்தல் முறையால் ஆட்சிக்கு வந்த ஈபிஆர்எல்எஃப் அமைப்பின் அரசைக் கவிழக்க அனைத்து வன்முறைச் செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். ‘சிங்களவர்களும் நாங்களும் சகோதரர்கள். இந்திய ராணுவத்துக்கு இங்கே என்ன வேலை’ என்று கேட்டு, கருணாநிதி அரசின் ஆசியுடன், முதுகெலும்பற்ற வி.பி.சிங் அரசின் நபும்ஸகத் தன்மையைப் பயன்படுத்திக் கொண்டு இந்திய ராணுவத்தைத் திருப்பி அனுப்பினர். 

இதன் பலன் : ஈபிஆர்எல்எஃப் அரசு முறிந்தது. தமிழர்களுக்குக் கிடைத்த ஒரே வெற்றியும் பறிபோனது. சகோதரர்கள் என்றும் பாராமல் சக போராளிகளைப் புலிகள் கொன்றனர். அதன் தொடர்ச்சியாக பத்மநாபா சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். 

பத்மநாபா சென்னையில் கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னர், தமிழக முதல்வர் கருணாநிதி ‘புலிகள் தங்கள் நாட்டில் சுதந்திரமாக உலவி வருகின்றனர். அவர்கள் தமிழகத்தில் இருக்க வேண்டிய தேவை என்ன? தமிழ் நாட்டில் புலி என்று யாரும் இல்லை’ என்று பேட்டியளித்திருந்தார். 

பத்மநாபாவையும் அவரது கூட்டாளிகளையும் கோழைத்தனமாகக் கொன்ற கூட்டத்தின் சூத்திரதாரியான ஒற்றைக் கண் சிவராசன் பின்னர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கும் காரணமானான். 

தேர்தல் மூலம் இலங்கையில் தமிழ் மாகாணங்களுக்குத் தமிழர் ஒருவர் ( வரதராஜ பெருமாள் ) முதல்வரானார். இதற்குக் காரணம் ராஜீவ் காந்தி மற்றும் எம்.ஜி.ஆர். இவர்களுக்குப் பிறகு, பத்மநாபா தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழு. ஆனால், அத்தனை முன்னேற்றங்களையும் தவிடு பொடியாக்கித் தங்களையும் தம் மக்களையும் அழித்தொழித்த பெருமை விடுதலைப் புலிகளுக்கு உண்டு. 

இந்தப் பின்புலத்தில் இருந்து ‘பத்மநாபா படுகொலை’ நூலை வாசித்துப் பார்த்தால் தற்கால இளைஞர்களுக்கு அன்னாளைய நிதர்ஸனச் சித்திரங்கள் புரிய வாய்ப்புண்டு. பத்மநாபா கொலைக்குப் பின் ஒற்றைக் கண் சிவராசன் முதலான புலிகள் எவ்வாறு தப்பினர், காவல் துறையின் அக்கறையின்மை மற்றும் செயல் அற்ற தன்மை, ஆயுதங்கள் போதாமை, முதல்வரின் அலட்சியம், அதனால் பின்னாளில் விளைந்த ராஜீவ் கொலை என்று வரலாற்றுப் பின்னணியை மனதில் நிறுத்தும் நூல் ‘பத்மநாபா படுகொலை’. 

பத்மநாபா படுகொலைக்குப் பின்னர் இரங்கல் கூட்டத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தன் பேசியது :

‘பத்மநாபாவைக் கொன்றவர்களைப் போராளிகள் என்றோ, புரட்சிக்காரர்கள் என்றோ உலகம் ஒப்புக் கொள்ளாது. அவர்கள் வெறும் வன்முறையை வழிபடுகிற ஃபாசிஸ்டுகள். அவர்களுக்குத் தேசம் இல்லை, இனம் இல்லை, மொழி இல்லை, தாய் இல்லை, தந்தையும் இல்லை.. கொள்கையும் கோட்பாடும் இல்லாத ஒரு கூட்டத்திடம் நம் இளைய சமுதாயம் பலியாவதும், அதை எதிர்த்தும் பலியாவதும் பரிதாபத்திற்குரியது. 

.. விடுதலைப் புலிகளை இந்தியாவில் ஆதரிப்பவர்கள் ஒன்று கோழைகளாக இருக்க வேண்டும் அல்லது அவர்களிடம் கைக்கூலி வாங்கிக்கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டும்’  

நூல்: ‘பத்மநாபா படுகொலை’. ஆசிரியர் : ஜெ.ராம்கி. சுவாஸம் பதிப்பகம். விலை: ரூ: 160. +91-81480-66645 www.swasambookart.com

இலங்கைத் தமிழர் விஷயமாக வந்துள்ள எனது பிற நூலாய்வுகள்.

https://amaruvi.in/2015/12/20/இந்தச்-சாவுகளுக்கு-மன்னிhttps://amaruvi.in/2015/12/20/இந்தச்-சாவுகளுக்கு-மன்னி//

  1. Still Counting the Dead – a review
  2. Rise and fall of Prabhakaran – a review
  3. A fleeting moment in my country – a review
  4. This divided island – a review

இராமானுசர் – ஒரு செய்தி

ராமானுஜரைப்பற்றி திரு.கருணாநிதி வசனம் எழுதி ஒரு திரைக் காவியம் வர இருக்கிறது. என்ன செய்வது ? மாநில முதல்வராக இருந்த போதே திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் இவர். இப்போது வேறு வேலை ஒன்றும் இல்லை. குடும்பத்தைப் பார்க்கலாம் என்றால் ஒரே குளறுபடி. வீட்டின் ஒவ்வொரு அங்கத்தினரும் நவக்கிரஹம் போல் ஒவ்வொரு திசை நோக்கி இருக்கின்றனர்.
என்ன தான் செய்வார் மனுஷன் ? கதை எழுதத் துவங்கிவிட்டார்.
விரைவில் நல்ல நகைச்சுவையுடன் கூடிய மெகா தொடர் காணீர், காணீர், காணீர்.

இதை சிலர் எதிர்க்கின்றனர். அதுதான் புரியவில்லை. இராமானுசரைப் பற்றி திரு.கருணாநிதி எழுதினால் என்ன ? ‘நான் இராமானுசரின் ஆன்மீகத்தையும், அவரது இறைக் கொள்கைகளையும் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் பிராமண வகுப்பினராக இருந்தாலும் அவரது சமூக நீதிக் கொள்கைகள் எனக்கு ஏற்புடையவையே’, என்றெல்லாம் கூறியுள்ளார் திரு.கருணாநிதி. நல்ல நகைச்சுவை உணர்வுடன் பேசக்கூடியவர் அவர். அவரது அச்சுவையை இராமானுசர் பற்றிய அவரது எழுத்தில் விரைவில் காணலாம்.

அடுத்த ஆண்டு வெளிவர இருக்கும் எனது ‘நான் இராமானுசன்’ நூலிற்கு திரு.கருணாநிதியின் இந்த வசன நாடகம் ஒரு நல்ல விளம்பரமாக அமையும் என்று எண்ணுகிறேன். இரண்டையும் ஒப்பீடு செய்ய ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் நினைக்கிறேன்.

இறை அருள் இருப்பின் நூல் வெளி வரும்.

முற்போக்கு வியாதிகள் கவனத்திற்கு..

டி.ஸி.எஸ். நிறுவன பெண் ஊழியர் பாலியல் வன்முறையில் இறந்துள்ளார். சில மிருகங்கள் செய்துள்ள அட்டூழியம் இது.

  1. இந்த மிருகங்களுக்கு மரண தண்டனை விதித்தால் அது நிறைவேற்றப்பட வேண்டுமா கூடாதா ?
  2. இந்த மிருகங்களுக்கு மனித உரிமைகள் உண்டா இல்லையா ?
  3. இவர்களின் சமுதாய, பொருளாதாரப் பின்னணியைப் பார்த்துப் பின்னரே தான் அவர்களை தண்டிக்க வேண்டுமா ?
  4. மென்பொருள் எழுதும் அமெரிக்க ஆதிக்கம் உள்ள ஒரு நிறுவனத்தில் பணி புரிந்ததால் அந்தப் பெண்ணிற்கு வாழ உரிமை கிடையாதா ? கம்ரேடுகள் என்ன சொல்கிறார்கள் ?
  5. அருந்ததி ராய், ஞானி, ராம்சந்திர குஹா, கருணாநிதி, ‘பேராசிரியர்’ கனிமொழி, என்.ராம் போன்ற தலை சிறந்த முற்போக்கு ‘சிந்தனையாளர்கள்’ என்ன திருவாய் மலர்ந்து அருள்கிறார்கள் ? குற்றவாளிகளைத் தண்டிக்கலாமா கூடாதா ?

வழக்கம் போல் வாய் மூடி மௌனியாக இருக்க உங்களுக்கு லெனின், ஸ்டாலின், மாவோ, சே குவேரா முதலிய தெய்வங்கள் அருள் புரிய வேண்டுகிறேன்.

ராவணன் – சில கேள்விகள்

இலங்கையில் சீதைக்குக் கோவில் கட்ட பாரதீய ஜனதா கேட்டுள்ளது.( அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடித்து விட்டார்கள் அதனால் சீதைக்குக் கோவில் இலங்கையில் ). இந்த சீதைக் கோவில் வந்தாலும் வந்துவிடும் ஆனால் ராமர் கோவிலுக்கு “மதச்சார்ற்ற” முற்போக்கு மாந்தர் ( போலிகள் என்று படிக்கவும் ) எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.

அது ஒரு புறம். சீதை கோவிலுக்கு முன் இலங்கையில் ராவணனுக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று “ராவண பாலய” என்ற பௌத்த இயக்கம் கேட்டுள்ளது. அதுவும் இந்தியா கட்டித் தர வேண்டுமாம். ராவணன் இலங்கையின் நாயகனாம். அதனால் அவனுக்குக் கோவில் வேண்டுமாம்.

ராவணன் உண்மையில் நல்லவன் தான். சாம வேதத்தில் ஒரு பெரிய பண்டிதன். சிவ பெருமான் இவன் சாம வேதம் இசைத்தால் தன் நடனத்தை மறந்து கேட்பான் என்று இதிஹாசம் கூறுகிறது.

அதுவும் தவிர அவன் பெரும் போராளி. “வாரணம் பொருத மார்பன்” என்று கம்பர் அவனை வருணிக்கிறார். ( வாரணம் – யானை ).

இந்த ராவண கோவில் கோரிக்கை கவனிக்கப் பட வேண்டியது.

  • கடவுள் இல்லை என்று கூறும் தமிழ்த் தலைவர்கள் தாங்கள் ராவணன் இனம் என்று கூறுவர். ஆரியனான ராமன் திராவிடனான ராவணனை வென்றது ஆரிய ஆதிக்க வெறி என்று பகுத்தறிவு பகருவர். ராவணன் குழுமம் என்று தமிழ் நாட்டில் ஒரு கூட்டம் உள்ளது. இந்தத் திராவிடத் தமிழ்த் தலைவர்கள் ராவண கோவிலுக்கு என்ன சொல்லப் போகிறார்கள் என்று கவனிப்பது நல்ல  நகைச்சுவையாக இருக்கும்.
  • ராவணன்  புலஸ்திய முனிவரின் மகன். எனவே அவன் அந்தணன். சாம வேதத்தில் தேர்ந்தவன். இவனத் தங்கள் முன்னோர் என்று கூறும் தி.க. முதலிய “பகுத்தறிவு” சிங்கங்கள், தாங்கள் அந்தண மரபினர் என்று கூறுவரா?  ( ராமன் அந்தணன் அல்லன் )
  • ராமாயணம் பொய், ராமன் கடவுள் இல்லை, ராமன் எந்தக் கல்லூரியில் படித்தான் என்று கேட்ட “பண்பாளர்கள்”, தங்களை ராவண இனம் என்று கூறுவது பகுத்தறிவில் எந்தக் காண்டத்தில் பொருந்தும் ?
  • ராமாயணம் இல்லை அது பொய். ராமன் இல்லை அவன் கட்டுக்கதை. ஆனால் ராவணன் உண்மை. நாங்கள் அவனது இனம் என்பது தற்போது வடிவேலு காமெடியை விட நல்ல தமாஷ்.
  • சிதம்பம், ஸ்ரீரங்கம் கோவிலை உடைக்க வேண்டும் என்று முழங்கிய பகுத்தறிவுப் பகலவன்கள் ராவணனுக்குக் கோவில் கட்டுவதை வரவேற்பார்களா ? அதற்கு இந்திய அரசு பணம் செலவிடும் பட்சத்தில், ராமர் பாலம் ராமர் கட்டியது தான் என்று ஆகாதா ? அப்போது “பகுத்தறி”வின்  நிலை என்ன ?

இப்படியெல்லாம் லாஜிக் கேள்விகள் கேட்காமல் “உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக” மானாட மயிலாட கண்டு தமிழ் வளர்ப்போம்.

பகுத்தறிவு பொங்கி வழிந்தது

புதிய போப் தேர்வு குறித்து கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் அவர் வாழ்த்தியுள்ளார். சகுனமே சரி இல்லையே. போப்பை ஆண்டவர் ரட்சிக்கட்டும். அது போகட்டும். பகுத்தறிவுப்படி கடவுள் தான் கிடையாதே, போப் வந்தால் இவருக்கு என்ன ? போனால் இவருக்கு என்ன ? ஓஹோ, ஹிந்துக்களுக்குத்தான் கடவுள் கிடையாதோ! கிறிஸ்தவர்களுக்கு கடவுள் உண்டோ! அதானே பகுத்தறிவு!

இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்

Image

பெயர்                           :  மு.கருணாநிதி

வயது                           :  ஓய்வு பெரும் வயது அல்ல ( இந்திய அரசியலில்)

தொழில்                      : கதை எழுதுவது (தேர்தல் அறிக்கை என்றும் கூறலாம்)

உப தொழில்               : போராட்டம் நடத்துவது

தினமும் செய்வது    : பிள்ளைகளுக்குள் சண்டை விலக்கல்

பொழுதுபோக்கு        : அவ்வப்போது முதலமைச்சராக இருப்பது

விரும்பும்

பொழுதுபோக்கு       : பொதுக்குழு கூட்டுவது

வாழ்நாள் சாதனை  : குடும்பப் பராமரிப்பு

சமீப சாதனை           : தமிழ் ஈழ ஆதரவு (சிரிப்பு வராமலே)

வாழ்நாள் தமாஷ்     : 15 நிமிட உண்ணாவிரதம்

மிகச்சிறந்த  தமாஷ் : தனித் தமிழ் நாடு அடைந்தது

நல்லா மனிதர். குடும்பப் பொறுப்புள்ளவர். குடும்பத்தினர் சண்டை போடாமல் பார்த்துக்கொள்ள பல அரசியல் போராட்டங்கள் நடத்துவார்.தமிழ் நாட்டின் பிரச்சினைகள் தீர கடிதம் எழுதியே சாதனை படைத்துள்ளார். கடிதம் எழுதுவதோடு அவர் கடமை முடிந்து விடும். சொந்த பிரச்சினைகள் என்றால் தவறாமல் டெல்லி செல்வார் ( சக்கர நாற்காலியில் இருந்தாலும் ).

பொழுதுபோக்க பல முறை முதலமைச்சர் பதவியில் இருந்துள்ளார். அப்போது பொழுது போக்க பாராட்டு விழாக்களில் பங்கு கொண்டுள்ளார்.இது வரை ஆக அதிகமான பாராட்டு விழாக்களில் பங்கு பெற்றதற்காகவும் ஒரு பாராட்டு விழா நடந்தது.அதற்க்கும் தலைமை தாங்கினார் என்றும் ஒரு பேச்சு.

உலகத் தமிழர்களின் தலைவராக இவரை அண்ணாவும் பெரியாரும் கனவில் வந்து நியமித்ததால் அயராது உழத்துக்கொண்டே இருக்கிறார். தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தைக் கண்டாலே இவரது தலைமைப்பண்பை அறியலாம்.

தான் பதவிக்காலத்திற்குள் தமிழ் மொழியைக் காத்தே ஆக வேண்டும் என்பதால் செம்மொழி மாநாடு நடத்தினார்.அதன் பிறகு தமிழ் மொழி செவ்வாய்க் கிரகம், நிலா முதலிய வேற்று கிரகங்களிலும் பேசப்படுகிறது என்று அறிந்து மனம் மிகவும் ஆனந்தப்படுகிறது.

சோழச் சக்கரவர்த்திகளுக்குக்பிறகு கவி பாடும் புலவராக இருக்கும்  ஒரே தலைவர் இவரே.

கலைத்துறையில் தனது வாரிசாக அவ்வையாரின் அவதாரமாம் கவிஞர் கனிமொழியைத் தமிழ் நாட்டிற்கு அளித்துள்ளார்.

அரசியலில் வாரிசாகவும் தனது சேவையைத் தொடரவும் தனது மகன்களான  இரு சிறந்த கல்வி மான்களை நாட்டிற்கு அளித்துள்ளார். இருவரும் தமிழகத்திற்கும் இந்தியத் திருநாட்டிற்கும் ஆற்றி வரும் பணி அளவிடமுடியாதது.

பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சியின் அறிகுறியாகத் தன் மகன் ஸ்டாலின் 60 ம் கல்யாணத்தை தாலி கட்டிக் கொண்டாடுவதைக் கண்டு ஆனந்தப்பட்டார். அவரது பகுத்தறிவுப் பற்றைக் கண்டு கண் கலங்காதவர் எவரும் இல்லை.

%d bloggers like this: