கலாப்ரியாவுடன் ஒரு பொழுது

கவிஞர் கலாப்ரியா எளிதில் அணுகப்படக்கூடியவராகவும் மென்மையாகப் பேசுபவராகவும் இருக்கிறார். இன்று நடந்த கவிதைப் பயிலரங்கில் அவருடன் பேசினேன். ‘பழைய கணக்கு’ நூலைப் படித்துக் கருத்து கூறுவதாகச் சொல்லியிருக்கிறார்.

இன்று பல ‘கவிஞர்கள்’ கண்டெடுக்கப்பட்டார்கள். 13 வயது முதல் 70 வயது வரை பலர் தாங்கள் கவிதை எழுதக் கூடியவர்கள் என்பதைக் கண்டுகொண்டார்கள்.

‘நிழல்’ என்னும் தலைப்பில் எழுதச்சொன்னார். நான் எழுதிய சில ‘கவிதைகள்’ ( அப்படி இல்லை என்றாலும் மன்னித்துக்கொள்ளுங்கள் ).

1. நிழல்- நான் இல்லாத நான்

2. நான் பெரியவன்
நான் சிறியவன்
நான் பெரியவன்
நான் இல்லை

3. நிழல் – என்னை நானே பார்த்து பயந்த உருவம்.

4. உன் சமூகம் உனக்கு முன்னால் செல்லும்
சில சமயம் பின்னால்

5. அடுத்த வீட்டுக்காரனின்
அகோரப் பணப்பசியால்
என் வீட்டுப் பிள்ளைகள்
நிழலாய் ஆயினர்
(சிங்கைப புகை மூட்டம் பற்றியது )

6. மனித இனத்தின் சமத்துவத்தை உணர்த்தும் ஒன்றே ஒன்று

கலாப்ரியா 1,4,5 கவிதைகளைப் பாராட்டினார்.

நாங்களும் கவிஞர் ஆயிட்டோம்ல !

%d bloggers like this: