எதிர்கால கேள்வித்தாள்

விரைவில் வரவிருக்கும் தமிழ்க் கேள்வித்தாள். 7-ம் வகுப்பு.

7ம் வகுப்புத் தமிழ்த் தேர்வுத்தாளில் விரைவில் வரவிருக்கும் கேள்வியை முந்தித் தருகிறோம்:


‘லாலாக்கு டோல் டப்பி மா, கண்ணே கங்கம்மா உன்இடுப்பச் சுத்தித் திரும்பிப் பாரம்மா’


1. மேற்சொன்ன குறளில் தளை தட்டும் பகுதிகள் யாவை?
2. ‘லாலாக்க்கு’ என்பதில் எந்த உருவக அணி தென்படுகிறது?
3. திரும்பிப் பாரம்மா என்று சொல்லாமல், கவிஞர் ‘இடுப்பச் சுத்தித் திரும்பிப் பாரம்மா’ என்று சொல்வதில் உள்ள பொருள் நயம் யாது?
4. இந்தப் பாடலில் நடித்த நடிகைகுப் பதிலாக, நயந்தாரா நடித்திருந்தால் நீட் தேர்வு விலக்குவதற்கான சாத்தியம் ஏற்பட்டிருக்குமா?
5. தன் இடுப்பைத் தானே சுற்றிப் பார்க்க முடியாத நடிகைகளுக்கு, சமூக நீதியின் அடிப்படையில் என்ன சலுகைகள் கொடுக்கலாம்?
6. மேற்ச்சொன்ன பாடல் வரிக்கு ஒப்பாகக் கலைஞர் கவிதைகள் வரிசையில் உள்ள ஏதேனும் கவிதை வரிகளை எழுதவும்.
7. மேற்கண்ட பாடல் வரிக்கும், ‘ராஜா கைய வெச்சா ராங்கா போனதில்ல’ பாடல் வரிக்கும் உள்ள பொருள், இலக்கண ஒற்றுமைகள் யாவை?
8. ‘உளியின் ஓசை’ படத்தில் வரும் ஏதாவது ஒரு பாடல் வரிக்கும் மேற்சொன்ன பாடல் வரிக்கும் சித்தாந்த ரீதியான தொடர்பு தென்படுகிறதா? விளக்கவும்.
9. ‘இடுப்பு’ என்னும் சொல் இடம்பெறும் மற்ற பாடல்கள் யாவை? ஆங்கிலப் பாடல்களாக இருந்தாலும் எழுதலாம். ஹிந்தி மட்டும் கூடாது.
10. ‘மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா’ செய்யுள் வரியையும், ‘ரெண்டுல நீ ஒண்ணத் தொடு மாமா’ என்கிற சங்க இலக்கியச் செய்யுள் வரியையும் மேற்சொன்ன பாடல் வரியுடன் சேர்த்து ‘ எகத்தாள தேச உருவக அணி’ தொனிக்க ஒரு செய்யுள் எழுதவும்.
11. உங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போடும்படியாக செல்ஃபி எடுத்து vidiyal_textbookchief at gmail dot com என்கிற முகவரிக்கு அனுப்பவும்.


பி.கு.: மறக்காமல் ‘விடியல்’ என்று ஹேஷ்ட்டேக் போட்டுப் பதில் எழுதவும்.

நெஞ்சு பொறுக்குதில்லையே

வருத்தம் தணியட்டும் என்று காத்திருந்தேன். இன்று எழுதுகிறேன்.

வேறெந்த நாட்டிலும், மாநிலத்திலும் காலமானவர்களை இப்படி அவதூறு செய்ய மாட்டார்கள். நடிகர் விவேக் என்னும் உன்னதமான கலைஞனை, அவர் காலமானவுடன், நீத்தார் கடனின் ஒவ்வொரு அங்கமாக ஊடகங்களில் காட்டுகிறார்கள். விட்டால் பூத உடல் எரிவதையுமே கூட காட்டுவார்கள் போல.

காலமானவர்களுக்கு மரியாதை இல்லையா? இப்படித்தான் அல்லோல கல்லோலப் படுத்தி, பூத உடலை எல்லாக் கோணங்களிலும் விடாமல் படம் எடுத்து, அவரே எழுந்து வந்து ‘போதும் கொஞ்சம் நிறுத்தறீங்களா?’ என்று கேட்கும் வரை படம் எடுத்துக்கொண்டே இருப்பதா? உடலுக்கு மரியாதை இல்லையா? என்ன மாதிரியான கொடுமையான சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம்?

எந்தப் பிரபலம் காலமானாலும் இப்படியே கூத்தடிப்பது என்பது என்ன மாதிரியான பத்திரிக்கை தர்மம்? கர்மம். வேறு எந்த நாட்டிலாவது இப்படி ஆடுகிறார்களா? காலமானவர்களை மரியாதையுடன் பெட்டியில் வைத்து, பெட்டிக்குத்தான் மாலை முதலியன செய்கிறார்கள். குடும்பத்தின் தனிமையை மதித்து, அவர்களை விட்டு விலகி நிற்கிறார்கள். எதற்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பாருங்கள், சிங்கப்பூரைப் பாருங்கள் என்று குதிக்கும் எந்த ஊடகமும் இந்த விஷயத்தில் அந்த நாடுகளைப் பார்ப்பதில்லை.

எந்தப் பிரபலத்தின் சாவையும் விட்டு வைக்காமல் அங்குலம் அங்குலமாகக் காட்டிப் பணம் ஈட்டும் கயமை தமிழகத்தில் என்றாவது தீருமா? இவ்வாறு செய்யாத நேர்மையான ஊடகம் ஏதாவது ஒன்று உண்டா தமிழகத்தில்?

இதில் கல் தோன்றி மண்தோன்றாக் காலம் என்று பெருமை பீற்றல் வேறு?

என்ன பகுத்தறிவோ, கண்றாவியோ..சே.. குமட்டுகிறது தமிழகக் காட்சி ஊடகங்களைக் கண்டு..

ஜெயலலிதா இருந்திருந்தால்..

ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த ரேடியோ இருந்திருக்குமா?

இன்று மாலை 4:30 மணி. ரேடியோ ஒன் அலைவரிசை (94.3).

நெறியாளர் மனோஜ் : ‘ஜெயலலிதா இருந்திருந்தால் எடப்பாடி பழநிச்சாமி நடத்தும் ஆட்சியைப் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்திருப்பார்’ என்று அமைச்சர் உதயகுமார் சொல்றார். இப்படி ஒரு அமைச்சர் இருக்கார்னு இன்னிக்கி தெரிஞ்சுக்கிட்டோம். ஆமாம், இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல? ஜெயலலிதா இருந்த வரைக்கும் எடப்பாடி பழநிச்சாமியே யாருன்னு தெரியல.’

பாடல் ஒலிபரப்பாகிறது.

நெறியாளர் மனோஜ்: ‘எம்.ஜி.ஆர்.சிலைக்கு ஆரஞ்சு பெயிண்ட் அடிச்சிருக்காங்க. அது காவி இல்ல, ஆரஞ்சுதான்னு அதை நிறுவின ஓ.ஸி.குமார் வாலண்டியரா சொல்றார். ஏங்க, காவி தமிழ் நாட்டுல வர்றதால என்ன களேபரம் வருதுன்னு தெரியாதா? நீங்களே பாதி காவி தானே?’

பாரத அரசிடம் அனுமதி, உரிமம் பெற்று நடத்தப்படும் தனியார் வானொலியில் இவ்வாறான பேச்சுக்கள் விதிமீறல் அன்றோ? மெதுவாக, நகைச்சுவை என்னும் பெயரில் விஷம் சிறிது சிறிதாக ஏற்றப்படுகிறது. அரசுகள் விழித்துக் கொள்ள வேண்டும்.

சரி. நெறியாளர் கேட்ட கேள்விக்கான எனது பதில்: ஜெயலலிதா இருந்திருந்தால் ரேடியோ ஒன் இன்றோடு நிறுத்தப்பட்டிருக்கும். வக்கீல் விஜயனுக்கு நடந்தது நினைவில் கொள்வது நன்று.

ரேடியோ ஒன் மட்டுமன்று. சீமான், கமலஹாசன், பாரதிராஜா என்று கிருமிகள் சினிமாவிற்குள் மட்டுமே இருந்திருக்கும்.

முதல்வர் பழநிச்சாமி @CMOTamilNadu செயல்பட வேண்டிய நேரம் வந்துள்ளது. ஜெயலலிதா இருந்திருந்தாலே தேவலாம் என்று தேச விரோதக் கும்பல்கள் நினைக்கும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டும்.

வாழிய நற்றமிழ், வாழ்க நற்றமிழர்

வாழிய பாரத மணித்திரு நாடு.

வந்தே மாதரம்.

தமிழகம் மறந்த முன்னோடி

‘தமிழகத்தை நான் தான் தூக்கி நிறுத்தினேன், எங்கள் கட்சி தான் நிறுத்தியது’ என்று பலரும் கதைக்கக் கேட்டிருக்கலாம். ஆனால் உண்மையில் தமிழகத்தில் தொழிற்புரட்சி ஏற்படக் காரணமானவர்களில் முதலாமவர் காமராஜர். இரண்டாமவர் மறைந்த ஜனாதிபதி வெங்கட்ராமன்.

‘எப்ப வருவாரோ?’ என்று கேட்கவைக்கும் மாமனிதர் வெங்கட்ராமன். இன்று தமிழகத்தில் SIPCOT தொழிற்பேட்டைகள் இயங்கக் காரணமானவர், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், திருச்சி பாரத மிகுமின் நிறுவனம், ராணிப்பேட்டை தொழில் பூங்கா, திருச்சி ராணுவத தளவாடத் தொழிற்சாலை என்று பலவற்றையும் நிறுவக் காரணமாக இருந்தவர் என்று அறிகிறோம். 1957-67 தமிழகத்தைல் தொழில், மின்சாரம், உழைப்பாளர் நலன், போக்குவரத்து மற்றும் வணிகவரித்துறை அமைச்சராகத் திகழ்ந்துள்ளார்.

அப்துல் கலாமை விண்வெளி நிறுவனத்தில் இருந்து ஏவுகணைப் பிரிவிற்கு மாற்றக் காரணமாக இருந்தார். அதன் மூலம் அக்னி முதலிய ஏவுகணைகளை பாரதம் ஏவியது நினைவில் இருக்கலாம்.

பின்னர் மத்திய அரசில் திட்டமிடல் துறை உறுப்பினராக இருந்தவர், இந்திரா காந்தியின் அமைச்சரவையில் மத்திய நிதி மந்திரியானர். பின்னர் ஜனாதிபதியானார். அவர் பதவி ஓய்வு பெற்றுத் தமிழகம் திரும்பிய போது அவருக்கு அன்றைய தமிழக அரசு தனி பங்களாவை ஒதுக்கியது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா பிராமணர் அதனால் வெங்கட்ராமன் என்றொரு பிராமணருக்குத் தனி பங்களா ஒதுக்குகிறார் என்று சொல்லி அதனைத் திராவிடர் கழகம் எதிர்த்துப் பகுத்தறிவைக் காட்டிக் கொண்டது.

ஆர்.வெங்கட்ராமன் தமிழகத் தொழில் துறைக்கு வந்த கதையை அவரே விவரிக்கிறார். அவரது 104வது பிறந்த நாளில் 15 மணித்துகளுக்கான அவரது  நேர்காணலைக் காண்போம்.

தம்பட்டம் 1

தினத்தந்தி நிருபர் வந்திருந்தபோது சொன்னார் “தம்பி, இங்கிலீஷ்ல இந்தியாவுல முதலா வந்தீங்களே, தமிழ்ல வந்திருந்தீங்கன்னா நிறைய ஸ்காலர்ஷிப் கிடைக்குமே. தமிழ் நாட்டு அரசு தமிழ்ல முதல்ல வந்தா ஸ்காலர்ஷிப் தராங்களே” என்றார்.

மாணவர்களே, இன்று கொஞ்சம் சுய சரிதை. பயன்படும் என்று எண்ணுகிறேன்.
1988ல் நடுவணரசுப் பாடத்திட்டத்தில் (CBSE) பத்தாம் வகுப்புத் தேர்வில் நான் அகில இந்திய அளவில் ஆங்கிலத்தில் முதலாவதாக வந்தேன். ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி என்று போட்டோவெல்லாம் வந்தது. பேட்டியெடுத்தார்கள். தூர்தர்ஷன் பேட்டி கண்டது. (இப்ப நிறுத்தறியா இல்லியா என்று சொல்வது புரிகிறது. நிறுத்திக்குவோம்).
விஷயம் இதுவன்று.
தினத்தந்தி நிருபர் வந்திருந்தபோது சொன்னார் “தம்பி, இங்கிலீஷ்ல இந்தியாவுல முதலா வந்தீங்களே, தமிழ்ல வந்திருந்தீங்கன்னா நிறைய ஸ்காலர்ஷிப் கிடைக்குமே. தமிழ் நாட்டு அரசு தமிழ்ல முதல்ல வந்தா ஸ்காலர்ஷிப் தராங்களே” என்றார்.
தூக்கிவாரிப் போட்டது. “ஏன் இங்கிலீஷ்க்கு தர மாட்டாங்களா? நான் தமிழ் மாணவன் தானே? இதால தமிழ் நாட்டுக்குப் பெருமை இல்லையா?” 16 வயதில் உலகம் புரியாமல் கேட்டேன்.
நான் தெரிந்துகொண்டது: தமிழில் முதல் மதிப்பெண் எடுத்தால் மாநில அரசு கல்வி உதவித்தொகை வழங்கும். வேறு எந்த மொழியில் இந்திய அளவில் முதலிடம் வகித்தாலும், தமிழ் நாட்டு மாணவனேயாகிலும் மாநில அரசு கண்டுகொள்ளாது. அதைப் போலவே மாநில அரசு நடத்தும் தேர்வுகளில் தமிழில் அதிக மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பலன்கள் அதிகம். மற்ற மொழிப் பாடங்களில் கிடையாது.
இது என்ன கொடுமை என்று எண்ணியபோது ராஜீவ் காந்தி ஆபத்பாந்தவனாக வந்தார். டில்லிக்கு அழைத்துச் சிறப்புச் செய்தார். மத்திய மந்திரி தினேஷ் சிங் விருது வழங்கினார். CBSE என் கல்லூரிப் படிப்பு வரை ஊக்கத்தொகை வழங்கியது. ஹிந்து நாளிதழ் ரூ 1000 அளித்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஈராண்டுகளுக்கு மாதம் ரூ 110 அளித்தது. அன்னாட்களில் அவை மிகப்பெரிய தொகை.
பின்னர் தெரிந்துகொண்டது : அகில இந்திய அளவில் தமிழில் முதல் இடம் பெற்றது சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவர். என்னைவிட ஒரு மதிப்பெண் அதிகம் பெற்றிருந்தார்.
இப்ப என்ன சொல்ல வர்ற ? அதானே கேட்கிறீர்கள்?
நான் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மூன்றையும் பயின்றேன். எந்தவொரு மொழியினாலும் பிறிதொரு மொழி பாதிப்படையவில்லை. ஹிந்தியால் தமிழோ, தமிழால் ஆங்கிலமோ கெடவில்லை. மாறாக ஒரு மொழி இன்னொன்றுக்கு உதவியது என்றே சொல்வேன். ஒரு மொழியின் வாயிலாகவே பிறிதொரு மொழியை நாம் அறிந்துகொள்ள முடியும். நான்காவதாக சம்ஸ்க்ருதம் பயில வாய்ப்பிருந்திருந்தால் அதையும் செய்திருப்பேன் என்றே எண்ணுகிறேன்.
இளம் வயதில் எத்தனை மொழிகளைக் கற்க வாய்ப்புள்ளதோ அத்தனையையும் கற்றுக் கொள்ளுங்கள்.
பள்ளி முடிந்து, கல்லூரி முடிந்து பம்பாயில் Voltas கம்பெனியில் பொறியாளராகப் பணியாற்றிய போது கற்றுக் கொண்ட மொழிகள் பற்றி இன்னொரு தரம் சொல்கிறேன்.
(தொடரும்) #மொழி

பன்மொழி கற்போம் வாரீர்

மூன்று மொழிகள் கற்கவேண்டுமென்றால் ஹிந்தி தான் படிக்க வேண்டும் என்னும் அவசியமில்லை. வேறு இந்திய மொழிகளில் எதையாவது படியுங்கள். ஆனால், இந்திய மொழிகளுள் எதைக் கற்றால் நமக்குப் பயன் அதிகம் என்று பார்த்தால் ஹிந்தியே முன்னால் நிற்கிறது. பாரதம் முழுமைக்குமான மொழியாக ஹிந்தி உள்ளது. பாரதத்தை விடுத்து வெளி நாடுகளுக்குச் சென்றாலும் அங்கும் இந்தியர் கூட்டங்கள் என்றால் பல மாநிலத்தவரும் பேசிக்கொள்வது ஹிந்தியே. அதில் தமிழர்கள் தனித்து விடப்படுவதை தினமும் பார்த்து வருகிறேன்.

மாணவர்களே, தற்போது தமிழ்மொழிக்குப் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது போன்று தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பேசிவருவதை நீங்கள் கண்டிருக்கலாம்.

ஒரு மொழியில் பூரண தேர்ச்சி பெற்றவர்களால் பிறிதொரு மொழியை வெறுக்கவியலாது. மாறாக, தேர்ச்சி பெற்ற மொழியின் வழி மற்ற மொழிகளையும் அறிந்துகொள்ள தீவிர முனைப்பே ஏற்படும். அவற்றில் உள்ள செய்திகளை அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்படுவது பூரணமான கல்வியின் அறிகுறி.

நான் ஆங்கில வழியில் படித்தேன். தமிழ் இரண்டாம் மொழி. இந்தியும் பயின்றேன். பிற்காலத்தில் மராத்தி கற்றுக் கொண்டு பேச முடிந்தது. ஜப்பானிய மொழியில் பேசினால் புரியும். 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஓரளவிற்கு எழுதியதைப் படிக்கவும் முடிந்தது. (தற்போது பழக்கம் விட்டுப் போய்விட்டது). ஈராண்டுகள் முன்பு சீனம் பயில முயன்றேன். ரொம்பவும் கடினம். முடியவில்லை. விட்டுவிட்டேன். பல மொழிகளை அறிந்ததால் நான் பெற்ற பலன்கள் ஏராளம்.

ஆனாலும் தமிழ் தவிர இன்ன பிற மொழிகளைப் பயின்றதால் எனது தமிழறிவு மழுங்கிவிடவில்லை. தமிழில் இரு நூல்கள் எழுதினேன். ஆங்கிலத்தில் ஒன்று.

பல மொழிகள் தெரிவதால் மொழிகளின் சிறப்பையும் அழகையும் உணரமுடிகிறது. சுய புராணம் நிற்க.

எனது காலஞ்சென்ற பெரியப்பா ஸ்ரீ.உ.வே.இராமபத்திராச்சாரியார் அவர்கள், தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். கம்பனில் ஊறியவர். 18 நூல்கள் எழுதியுள்ளார். சம்ஸ்க்ருதத்தில் போதிய பாண்டித்யம் பெற்றவர். ஆங்கிலத்தைப் பட்டறிவால் அறிந்துகொண்டவர். மணிப்பிரவாளத்தைத் தனது சொந்த முயற்சியால் தெளிந்தவர்.

தனது இராமாயண உபன்யாசத்தில் வால்மீகி, கம்பன், ஆழ்வார்கள், ஆங்கில உரையாசிரியர்களின் கருத்துகள் முதலியவற்றை ஒப்பிட்டுப் பேசி வந்த அவர், துளசி ராமாயணம் புரியவேண்டும் என்பதற்காகத் தனது 55வது வயதில் இன்னொரு ஆசிரியரிடம் ஹிந்தி கற்றுக் கொண்டார். அதன் பின்னர் தனது உரைகளில் துளசி, கபீர் தாசர் என்று அவர்களையும் கொண்டு வந்தார். ‘மிதிலையில் மூவர்’ என்னும் தலைப்பில் வால்மீகி, கம்பர், துளசிதாசர் காட்டும் மிதிலை நிகழ்வுகளை அருமையாகச் சித்தரிப்பார். பின்னர் ‘திரிவேணி இராமாயணம்’ என்றும் ஒப்பாய்வு உரைகளை நிகழ்த்தினார்.

இவை போதாதென்று, தியாகையர் கிருதிகள் புரிய வேண்டும் என்பதால் அவ்வப்போது தெலுங்கு பேசும் வைஷ்ணவப் பெரியவர்களிடம் பேசி, தெலுங்கு கீர்த்தனைகளின் பொருளை உள்வாங்கிக் கொண்டார். தியாகராஜ கீர்த்தனைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை அவர் நீண்ட நாட்கள் படித்துக் கொண்டிருந்தார்.

தனது இறுதி நாட்கள் வரை சம்ஸ்க்ருதத்தில் முனைவர் பட்டம் வாங்கவில்லை என்கிற ஏக்கம் இருந்தது தெரியும். அவருக்கு அதற்கான நேரம் இருக்கவில்லை. இறுதிவரை வால்மீகி, நாராயண பட்டத்ரி, கம்பன், ஆழ்வார்கள் என்றே அமரரானார்.

‘செந்தமிழும் வடகலையும் நவின்ற நாவர்’ என்று திருமங்கையாழ்வார் தேரழுந்தூர்க்காரர்களைப் பற்றிச் சொன்னதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார் அப்பெரியவர்.

மூன்று மொழிகள் கற்கவேண்டுமென்றால் ஹிந்தி தான் படிக்க வேண்டும் என்னும் அவசியமில்லை. வேறு இந்திய மொழிகளில் எதையாவது படியுங்கள். ஆனால், இந்திய மொழிகளுள் எதைக் கற்றால் நமக்குப் பயன் அதிகம் என்று பார்த்தால் ஹிந்தியே முன்னால் நிற்கிறது. பாரதம் முழுமைக்குமான மொழியாக ஹிந்தி உள்ளது. பாரதத்தை விடுத்து வெளி நாடுகளுக்குச் சென்றாலும் அங்கும் இந்தியர் கூட்டங்கள் என்றால் பல மாநிலத்தவரும் பேசிக்கொள்வது ஹிந்தியே. அதில் தமிழர்கள் தனித்து விடப்படுவதை தினமும் பார்த்து வருகிறேன்.

தனித்து நிற்பதால் தாழ்மையுணர்ச்சி ஏறபடுகிறது. இல்லாததை எல்லாம் கற்பனை செய்ய வைக்கிறது. இதில் இருந்து விடுபடுவது மாணவர்களாகிய உங்களுக்கு நல்லது. அதற்கு மூன்றாவது மொழியாகக் ஹிந்தியை வாசியுங்கள்.

மூன்றாவதாக இந்திய மொழியே வேண்டாம் என்றால், வழி இருக்குமாமால் சீனம் பயிலலாம். என்னுடைய விருப்பம் ஜாப்பானிய மொழி. தமிழுடன் பல வகைகளில் ஒத்திருப்பதாக எனது சிற்றறிவிற்குப் படுகிறது.

ஆக, மொழி வெறி ஆகாது. மொழியின் பால் தூய காதல் இருப்பின், மற்ற மொழிகளை வெறுக்கவியலாது. தனது தாயிடம் அன்பு செலுத்தும் குழந்தை, பிறிதொரு தாயை வெறுப்பதுண்டோ ?

கேள்விகள் இருப்பின் கேளுங்கள். பதில் அளிக்கிறேன்.

#TNNEEDSHINDI

சிங்கப்பூர் இலக்கியம் – என் பார்வை

இத்தனையையும் தாண்டி சிங்கப்பூரின் இலக்கியத் தரம் இறங்கியே உள்ளது என்றால் அதற்கு எட்டரைக் கோடி மக்களில் இருந்து சரியான எழுத்தாளர்கள் வரவில்லை என்று சொல்வது சரியா அல்லது சிங்கப்பூரில் உள்ள சில லட்சம் தமிழர்களில் உள்ள சில நூறு வாசகர்களைக் குறை சொல்வதா? பரிமாறும் சோறு சரியில்லை, சோறாக்குபவன் சரியில்லையெனில் உண்பவனைக் குறை காண்பதா?

‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் – சிங்கப்பூர் கிளை’ என்று போட்டிருக்கலாம் என்று தமிழக எழுத்தாளரொருவர் ஒட்டுமொத்த சிங்கப்பூர் இலக்கியக் கழகங்களின் தரத்தையும் சேதப்படுத்தும் வண்ணம் எழுதியுள்ளதை நண்பர் ஒருவரின் பதிவில் கண்டேன். தமிழக எழுத்தாளரின் பதிவில் என்னால் எழுத இயலவில்லை. எனக்கு அனுமதியில்லை. ஆகவே தனிப்பதிவு.

முதலில் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் என்ற ஒன்று சிங்கப்பூரில் இல்லை என்றே நினைக்கிறேன். விஷ்ணுபுரத்தை சிங்கப்பூரில் உள்ள எவ்வளவு பேர் வாசித்தார்கள் என்று தெரியவில்லை. இரட்டைப் படையில் இருக்கலாம். ( நான் வாசித்தேன், ஆய்வுக் கட்டுரை எழுதினேன் என்பது எனது தனிப்பட்ட அனுபவம்). சில பகுதிகளைத் தவிர, விஷ்ணுபுரம் சிறந்த நாவல் என்பது என் எண்ணம். எழுத்தாளர் ஜெயமோகனிடமும் இதையே தெரிவித்திருந்தேன்.

மாலன் ஒருமுறை சிங்கப்பூர் வந்திருந்தபோது சிங்கப்பூர் இலக்கியம் வளரவும், சிங்கப்பூரில் இருந்து இன்னமும் சிறப்பான சிறுகதைகள் வரவும் வாய்ப்பு குறைவு என்று சொன்னார். காரணம் இலக்கியம் என்பது வாழ்வாதாரத்தை வேண்டி மக்கள் அல்லல் படும் போது எழுவது. சிங்கப்பூரில் அம்மாதிரியாக, மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் வாழ்வாதாரத்துக்கும் பெருத்த அல்லலுற வேண்டிய தேவை இருக்கவில்லை. எனவே அவர்கள் அத்தேவைக்கான போராட்டத்தை இலக்கியமாக வடிக்க வாய்ப்பு குறைவு என்று சொல்லியிருந்தார். 2010ம் ஆண்டு என்று நினைவு. தேசிய நூலகத்தில் நடந்த கூட்டமொன்றில் இதைத் தெரிவித்திருந்தார். நான் அப்போதே இதைப் பதிவும் செய்திருந்தேன்.

பேருந்துகள் குறித்த நேரத்திற்கு வராமல் அதனால் ஏற்படும் அல்லல்கள், எம்.ஆர்.டி. வண்டி தினமும் காலதாமதமாக வருவதால் ஏற்படும் மக்கள் பிரச்சினைகள், அரசாங்கம் மக்களின் தேவைகளை நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள் பல மைல்கள் நடந்தே சென்று குடிநீர் கொணர்வது, பெண்கள் இரவில் தனியாக வரும் போது அவர்கள் சந்திக்கும் இன்னல்கள், சாதி ரீதியிலான கொடுமைகள், அரசாங்க அதிகாரிகளின் மெத்தனம் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், கடை நிலையில் உள்ள நன்றாகப் படிக்கும் மாணவன் போதிய நிதி வசதி இல்லாததால் மேற்கொண்டு கல்வியைத் தொடர முடியாமல் போவது என்பது போன்ற ஏதாவது ஒரு பிரச்னை இருந்தால் அதை வைத்து இலக்கியம் வளர்க்கிறேன் பேர்வழி என்று ஒப்பாரிக் காவியம் செய்யலாம். விருதுகள் வாங்கலாம்.

ஆனால், மேற்சொன்ன எதுவும் நடக்கவில்லையென்றால் என்னதான் இலக்கியம் படைப்பது? தினமும் எம்.ஆர்.டி. ரயில் குறித்த நேரத்தில் இயங்குகிறது, ஒரு வேளை ஒரு மணி நேரம் பழுதானால் நிறுவனத்தின் தலைவருக்கு வேலை போய்விடுகிறது அல்லது நிறுவனம் பெருத்த தண்டனைக்கு உள்ளாகிறது, மின் தட்டுப்பாடு இல்லை, ஒரு மின் நிறுவனத்தின் மீது அதிருப்தி என்றால் அடுத்த நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் பெற்றுக் கொள்ளலாம், வானில் இருந்து விழும் ஒவ்வொரு மழைத்துளியும் சேமிக்கப்படுகிறது, அமைச்சர்களையும், எம்.பி.க்களையும் எளிதில் சந்தித்துப் பேசலாம், அரசு நிறுவனங்களில் ஊழல் இல்லை, அரசு அலுவலகங்களில் குறித்த நேரத்தில் வேலைகள் நடைபெறும் என்று இருந்தால் எப்படித்தான் இலக்கியம் செய்வது?

இருக்க வீடில்லை என்று குடிசைகளில் வாழ வேண்டிய பிரஜைகள் இல்லை. அனைவருக்கும் வீடுகள் கொடுத்துவிட்டார்கள். பிரஜைகளுக்கு அரசுப் பள்ளிக் கல்வி அனேகமாக இலவசமாக உள்ளது. போராட்டம் கரகாட்டம் என்று ஜல்லியடிக்க நேரமில்லை, வழியுமில்லை, தேவையுமில்லை. அப்புறம் இலக்கியம் என்று உலகத் தரத்தில் ஒப்பாரிக் காவியம் படைக்க மக்களால் எப்படித்தான் இயலும்?

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தைத் ‘தமிழ் மொழி மாதம்’ என்று வகுத்து, அம்மாதம் முழுவதும் தமிழ் மொழி வளர்வதற்கான நிகழ்வுகள் அனைத்தையும் செய்து வரும் தேசம் சிங்கப்பூர். தீவு முழுவதும் தமிழ் விழாக்கள், வாசிப்புப் பட்டறைகள், பயிலரங்குகள் என்று ஊரே விழாக் கோலம். விழா என்றதும் போஸ்டரெல்லாம் கிடையாது, வெறும் அறிவிப்புகள், பள்ளி கல்லூரிகளில் பரப்புரைகள், உணவகங்களில் அறிவிப்புப் பதாகைகள், ஒளிவழியில் ஓரிரு அறிவிப்புகள், இலக்கிய வட்டங்களில் செய்திகள். அவ்வளவே.

‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு’ என்று இருந்தால் அப்புறம் இலக்கியம் வழியாக எதற்கான தீர்வைத் தேடுவது?

‘தமிழின் வளர்ச்சிக்குத் தமிழ் நாடு செய்ய வேண்டியதனைத்தையும் சிங்கப்பூர் செய்துவருகிறது. எங்களால் இதற்கு மேல் செய்ய முடியாது. முடிந்தவரை தமிழை வாழும் மொழியாக வைத்திருக்கிறோம்’ என்று தெரிவித்திருந்தார் தனது பெயரை வெளியிட விரும்பாத சிங்கப்பூர்ப் பேராசிரியர் ஒருவர்.

யூனிகோட் முறையில் இணையத்தில் / கணினியில் தமிழில் எழுதுபவர்கள் / வாசிப்பவர்கள் சிங்கப்பூருக்கு நெஞ்சார நன்றி கூற வேண்டும். யூனிகோட் முறையில் தமிழ் எழுத்துரு உருவாகப் பெரிய காரணம் சிங்கப்பூர். infitt என்று தேடிப்பாருங்கள். இணையவழித் தமிழுக்குச் சிங்கப்பூர் மற்ற நாடுகளுடன் இணைந்து செய்துள்ள உதவிகள் தெரியவரும். இத்தனைக்கும் தமிழர் எண்ணிக்கை குறைவாக உள்ள தேசம்.

இதெல்லாம் போகட்டும். பேட்டைக்குப் பேட்டை நூலகம் வைத்துள்ளார்கள். எந்த நூலகத்திலும் இரவு 9 மணி வரை நூல் எடுக்கலாம். நாள் முழுவதும் திரும்ப ஒப்படைக்கலாம். அதிகாரத்துவ நான்கு மொழிகளிலும் நூல்கள் கொட்டிக் கிடக்கின்றன. விடுமுறை என்றால் மட்டும் என்றில்லாமல், வேலை நாட்களிலும் மாலை நேரங்களில் நூலகத்தில் பிள்ளைகளைக் காணலாம். தனியாகச் செயலி கொண்டு நூல்களைப் படிக்கவும் உதவுகிறது நூலக வாரியம். அதன் சேவைகளை முழுவதும் பயன்படுத்தியவன் இதை எழுதிக்கொண்டிருக்கிறான்.

மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும், தமிழில் நல்ல நூல்கள் வெளியாக வேண்டும், தமிழ் வாழும் மொழியாக இருக்க வேண்டும் என்பதில் சிங்கப்பூர் வாசகர்கள் / எழுத்தாளர்கள் அக்கறை காட்டி வருகிறார்கள். தமிழில் பேசவே தேவை இல்லாத சூழலில், பேசாமலே இருந்தால் மொழியின் பயன்பாடு குறைந்து விடுமே என்கிற அக்கறையில் ‘தாய் மொழிச் சேவைகள்’ என்று தனியாக ஒரு பிரிவையும் நூலக வாரியம் நடத்துகிறது.

இத்தனையையும் தாண்டி சிங்கப்பூரின் இலக்கியத் தரம் இறங்கியே உள்ளது என்றால் அதற்கு எட்டரைக் கோடி மக்களில் இருந்து சரியான எழுத்தாளர்கள் வரவில்லை என்று சொல்வது சரியா அல்லது சிங்கப்பூரில் உள்ள சில லட்சம் தமிழர்களில் உள்ள சில நூறு வாசகர்களைக் குறை சொல்வதா? பரிமாறும் சோறு சரியில்லை, சோறாக்குபவன் சரியில்லையெனில் உண்பவனைக் குறை காண்பதா?

உண்மையில், தமிழகத்தில் இருந்து வெளியாகும் போராட்ட இலக்கியம், அழுகாச்சி இலக்கியம், எதிர்மறை இலக்கியம், இடது சாரி இலக்கியம் முதலியவைகளால் நவீன சிங்கப்பூரர்களை உள்ளிழுக்க முடியவில்லை. அவர்களின் வாழ்வில் இந்த அழுகாச்சிகளை எந்த விதத்திலும் பொருத்திப் பார்க்க முடியவில்லை. அதுவும் மில்லினியல்ஸ் எனப்படும் இணைய இளையர்கள் மத்தியில் தமிழ் நாட்டின் அதிர்ச்சி + அழுகை இலக்கியம் எடுபடவில்லை. இது நான் கண்டது.

எனவே தமிழக எழுத்தாளரின் கவலை நியாயமானதே. சிங்கப்பூரின் இலக்கியத் தரம் அதலபாதாளத்திலேயே உள்ளது. ஏனெனில் தமிழகத்தில் இருந்து வெளியாகும் அழுமூஞ்சி இலக்கியங்கள் அங்கு எடுபடவில்லை. சிங்கப்பூரை மையமாக வைத்து எழுதப்படும் எழுத்தில் தமிழகத்தின் தாக்கம் இருப்பதால் அவ்வெழுத்தில் எனக்கு ஒவ்வாமை உண்டு. ஆனாலும் அவ்வகையான தாக்கங்களில் இருந்து வெளிப்பட்டு, மீண்டு, சிங்கப்பூருக்கேயான எழுத்தைப் பல எழுத்தாள நண்பர்கள் செய்துகொண்டெ இருக்கிறார்கள். சித்துராஜ் பொன்ராஜ், மாதங்கி, ஜெயந்தி சங்கர், அழகுநிலா, ஷாநவாஸ் போன்ற, சிங்கப்பூரை மையமாக வைத்து எழுதும் தற்கால எழுத்தாளர்களால் சிங்கைத் தமிழ் இலக்கியம் சிறப்புறும். இவர்களைத்தவிர இன்னும் பல முன்னோடி எழுத்தாளர்கள் இன்னமும் இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் தற்கால வாசகனைப் பூரணமாகச் சென்றடைய முடியவில்லை என்பதையும் நான் கண்டுள்ளேன்.

ஆக, சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் என்றொரு இயக்கம் உள்ளது. அது தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. அதற்கான வாசகர்கள் உள்ளூரில் உள்ளனர். சிங்கப்பூரைக் கருவாகக் கொண்ட எழுத்துக்களை அவ்வாசகர்கள் வாசித்துக் கொண்டேயிருக்கின்றனர். அவர்களுக்கு ஒப்பாரி இலக்கியம் தேவையில்லை. சிங்கப்பூரின் இலக்கியம் அங்கிருந்தே உருவாகட்டும். மற்ற நாட்டு மாரடிக்கும் அழுகைகள் அங்கு வேண்டாம். அதற்கான தேவையும் அங்கு இருக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

சிங்கப்பூரில் வளர்ந்துவரும் தமிழ் எழுத்தாளர்கள் உள்ளனர். தேடிப்பிடித்து வாசிக்கும் தேர்ந்த வாசகர்களும் உள்ளனர். நான் அறிந்தவரையில் இவர்களில்  சிலர் ஒன்று சேர்ந்து கூட்டு வாசிப்பும் நடத்துவதுண்டு. ஜெயமோகனின் மஹாபாரதத்தைக் கூட்டு வாசிப்பு முறையில் அனுபவித்தவர்களை நான் அறிவேன்.

சில மாதங்களுக்கு முன் வாரந்தோறும் நூலகம் செல்லும் (பள்ளிக்குச் செல்லும்) என்  மகனிடம் அவன் தமிழ் நூல்களைத் தேர்ந்தெடுப்பதில்லையே என்று வருத்தப்பட்டேன். ‘Show me a Harry Potter equivalent, Rick Riordan equivalent in Tamil’ என்றான்.

இதைத் தமிழக எழுத்தாளரின் நையாண்டிக்கான பதிலாக எடுத்துக் கொண்டேன்.

முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்

ஶ்ரீவைஷ்ணவத்துடனும் நெருங்கிய உறவு கொண்டவர்கள் அம்மக்கள். கொங்குப் பிராட்டி, கொங்கிலாச்சான் என்று சுமார் 1000 ஆண்டுகள் இராமானுஜ சம்பிரதாயத் தொடர்புடையவர்கள் அவர்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களே,
‘எப்படியாவது கொங்கு மக்களை அவமானப்படுத்த வேண்டும். மத மாற்றத்திற்குக் கடைசித் தடையாக உள்ளவர்கள் கொங்கு பிரதேச மக்கள். என்ன கொடுத்தாலும் மாற மறுக்கிறார்கள். இன்னும் கண்ணன் கூட்டம், சிவன் கூட்டம் என்று வாரம் தவறாமல் ஏதாவது விழாவைக் கொண்டாடிக்கொண்டே இருக்கிறார்கள்,’ என்கிற எண்ணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
 
சிவராத்ரி அன்று திருச்செங்கோடு சென்று அர்த்த நாரீஸ்வரருக்குக் கட்டளைகளை நடத்திவிட்டு வந்துள்ளார் உடன் பணியாற்றும் கொங்கு நாட்டு நண்பர். அந்த அளவுக்கு ஆன்மீகப் பற்றுக் கொண்டவர்கள் அம்மக்கள்.
 
ஶ்ரீவைஷ்ணவத்துடனும் நெருங்கிய உறவு கொண்டவர்கள் அம்மக்கள். கொங்குப் பிராட்டி, கொங்கிலாச்சான் என்று சுமார் 1000 ஆண்டுகள் இராமானுஜ சம்பிரதாயத் தொடர்புடையவர்கள் அவர்கள்.
 
இந்த மக்கள் சம்பிரதாயப் பற்றுடன் இருக்கும் வரை மதமாற்றம் நிகழ வாய்ப்பில்லை. எனவே இவர்களின் சம்பிரதாயப் பற்றையும், அவர்கள் கொண்டுள்ள ஆன்மீக, மத நம்பிக்கைகளையும் இழிவு படுத்த வேண்டும், அவர்களை அவர்களின் சம்பிரதாயத்தின் மீது கொண்ட நம்பிக்கையை, மரியாதையைக் குலைக்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டுக் கூட்டுச் சதியாகப் பெருமாள் முருகன் போன்ற எழுத்துலகச் சதிகாரர்களை ஊக்குவித்து, கொங்கு வட்டார மக்களை இழிவுபடுத்திப் பார்த்தன இடதுசாரி ஊடகங்கள், மற்றும் இடதுசாரி, மதமாற்றச் சக்திகளிடம் உணவு வாங்கி உண்ணும் அரசியல் வியாதிகள்.
 
இந்தப் பிராந்திய மக்கள் பெரும்பாலும் அதிமுக சார்பாக இருப்பதால் அவர்களை மேலும் இழிவு படுத்த வேண்டும், அத்துடன் தேசியச் சிந்தனை உள்ள பாஜகவுடன் சேர்ந்திருப்பதால் மேலும் அவமானப் படுத்த வேண்டும் என்பதற்காகவும் மேற்சொன்ன சக்திகள் ஊடகப் பண்ணையார்களிடம் பணம் பெற்று அவதூறுப் பிரச்சாரம் செய்கின்றன.
 
பொள்ளாச்சி விவகாரம் கண்டிக்கத்தக்கது. அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கைதுகள் நடந்துள்ளன. சி.பி.ஐ. என்றும் சொல்கிறார்கள். இந்த நேரத்தில் எதற்காகப் போராட்டம்? யாரை எதிர்த்துப் போராட்டம்?
 
இதே வியாபரிகள் சில நாட்களுக்கு முன் பொது இடத்தில் ஆணும் பெண்ணும் அந்தரங்கச் செயல்களில் ஈடுபடுவது அவர்களது உரிமை என்றனர். திடீரென்று எங்கிருது வந்தது மானம்? விருப்பத்துடன் திருமணம் இன்றி ‘லிவ் இன் ரிலேஷன்’ கொள்ளலாம் என்று ‘முற்போக்கு’ நீதி மன்றம் கூறியவுடன் வரவேற்று அறிக்கை விட்ட கயவர்கள் இன்று மய்யம் என்ற பெயரில் போராட்டம் என்று ஜல்லியடிக்கிறார்கள். யாரை ஏமாற்றுகிறது இந்தக் கூட்டம்?
 
ஆனால் ஒன்று. ஈரோட்டுப் பாதை என்று சொல்லிச் சொல்லியே வளர்ந்தவர்கள் இவர்கள். ‘காப்பிக்கடையில் விருப்பப்பட்டதை வாங்கி உண்பது போல பெண்கள் தங்கள் துணையைத் தேடிக்கொள்ளலாம்’ என்று முழங்கிய கயவர் தலைவரைத் தமிழர் தலைவர் என்று கொள்பவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
 
பொள்ளாச்சி நிகழ்வு அராஜகம் தான். கூப்பாடு, கதறல் தேவை தான். ஆனால், இதே கூப்பாடும், கதறலும் எல்லா நேரங்களிலும் வேண்டாமா? எங்கே போயினர் இவர்கள் அனைவரும்?
 
ராஜீவ் காந்தியையும் 17 அப்பாவித் தமிழர்களையும் கொன்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வெட்கமின்றிச் சொல்லும் நயவஞ்சகர்கள், கடத்தல்காரன் வீரப்பனைப் போராளி என்று சொல்லும் பச்சோந்திகள், நுங்கம்பாக்கம் கொலையை நியாயப்படுத்திய நரிகள், காஞ்சி ஸ்வாமிகள் விஷயத்தில் மிஷனரிகளிடம் பணம் பெற்று நடித்த ஊடக வியாபாரிகள், தேசத் துரோகிகளுக்கு வக்காலத்து வாங்கும் விதமாகப் பாக்கிஸ்தானின் மீதான தாக்குதலை இழிவுபடுத்தும் படுபாவிகள், தம்பரம் ‘கருணை இல்லம்’ என்ற பெயரில் நடந்த அக்கிரமத்தைக் கண்டுகொள்ளாத நடு நிலையற்ற நடுவர்கள்- இவர்கள் அனைவரும் சேர்ந்து சம்பிரதாயம் காக்கும் கொங்கு மக்களை இழிவுபடுத்துகிறார்கள்.
 
கே.என்.சிவராமன் என்னும் ஊடகவியலாளர் கோயம்புத்தூர் ஈஷா சிவராத்ரி நிகழ்வையும் பொள்ளாச்சி நிகழ்வையும் தொடர்பு படுத்துகிறார். இது என்ன மாதிரியான மன நிலை? கடும் வெறுப்பு, சுடர் விடாத அறிவால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை, பிரகாசிக்காத எழுத்துக்கள், உள்ளத்தில் பதிந்து கிடக்கும் தமிழ்ச் சூழ்நிலை கொடுத்த வெறுப்புப் பாலால் விளைந்த விஷத் தன்மை கொண்ட உள்ளம் என்பதைத் தவிர வேறு எப்படிப் பார்ப்பது?
 
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் தமிழகமாக இருந்த பிரதேசம், தீராவிடக் கூச்சல் காரணமாக ஏற்பட்டுள்ள பாலை நில மிகுதியால் ஆப்கானிஸ்தானை விடக் கீழே சென்றுகொண்டிருக்கிறது என்பது நிதர்ஸனம்.
 
முதல்வர் Edappadi K Palaniswami அவர்களே,ஜெயலலிதாஇருந்திருந்தால் பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட கயவர்களைஎன்ன செய்திருப்பார் என்று எண்ணிப் பாருங்கள்.அவர்களுடன் சேர்த்து அவர்களுக்கு உதவியவர்களைஎன்ன செய்திருப்பார் என்றும் எண்ணிப் பாருங்கள்.இவற்றுக்குக்கெல்லாம் ஒத்து ஊதிக்கொண்டிருக்கும் ஊடக வியாபரிகள்,மனித உரிமைக் காவலர்கள் -இவர்களுக்கெல்லாம் என்ன நடந்திருக்கும் என்றும் சற்று எண்ணிப் பாருங்கள்.நீங்கள் அடுத்த ஜெயலலிதாவாக ஆக வேண்டுமென்றால், அவர் செய்திருக்கக்கூடிய செயல்களைச் செய்யுங்கள்.சான்றோர்கள் நடந்த தமிழ் நாட்டை,விஷக்கிருமிகளிடமிருந்து மீட்டுத் தாருங்கள்.
 
சிறுவர்கள் பெண்கள் தொடர்பாக நிகழ்ந்துள்ள அனைத்து நிகழ்வுகளிலும் இதேஅணுகுமுறையைக் கையாளுங்கள்.
 
தமிழ்நாடு ஆப்கானிஸ்தானாக மாறாமல் காத்துத் தாருங்கள்.
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு.
வந்தே மாதரம்.

கதைல கொஞ்சம் கதை வேணும்

கதைல கொஞ்சம் கதை வேணும்

‘நீ தமிழ்ப் புஸ்தகங்களை ஏன் படிக்க மாட்டேங்கற?’ மத்திய அரசுப் பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு பயிலும் என் மகன் பரத்தைக் கேட்டேன்.

‘இல்லையே. டெக்ஸ்ட் புக் படிக்கறேனே’ போனில் இருந்து தலை தூக்காமலே பதில் சொன்னான்.

‘அதில்லை. லைப்ரரில வாரத்துக்கு 2 புஸ்தகம் வாங்கிப் படிக்கற. எல்லாம் இங்கிலீஷ். ஆனா, நாலு வருஷத்துல எவ்வளவு தமிழ்க் கதைப் புஸ்தகத்தைப் படிச்சிருப்பே?’ நான்.

‘ஒண்ணே ஒண்ணு’ உண்மையாகப் பதிலளித்தான். அதுவும் ‘எஸ்.ராமகிருஷ்ணன் குழந்தைகளுக்கான நாவல் ஒன்றை எழுதியிருந்தார், அதைப் படித்தே ஆக வேண்டும் என்று நான் வற்புறுத்தியதால் பாதியளவு படித்திருந்தான். ஆனால், ஆங்கில நாவல்கள் சுமார் 100 வாசித்திருக்கிறான்.

பல முறை தமிழ்க் கதைப் புத்தகங்களைப் படிப்பது பற்றி அவனிடம் பேசியிருக்கிறேன். தமிழ் நூல்கள் அவனைக் கவரவில்லை என்று தெரிந்திருந்தும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் என் பெரிய மகன் ( இவனது அண்ணன்) சொன்னது “Show me an equivalent of Harry Potter or Eragon. I will definitely read Tamil books.” பொன்னியின் செல்வனைப் படித்திருந்தவன் பேசிய பேச்சு அது.

பரத்: சொன்னா கோச்சுக்கக் கூடாது. தமிழ் புக்ஸ் இண்றஸ்டிங்கா இல்ல. அதான் காரணம்.

நான்: எதாவது உதாரணம் சொல்லேன். How could you generalise?

பரத்: ஸ்கூல் புக்ஸ்லேர்ந்தே சொல்றேன். இங்கிலிஷ் புக்கையும் தமிழையும் கம்பேர் பண்ணி சொல்றேன். ஒகேவா?

நான்: சரிதான். But the comparison should be fair.

பரத்: இங்கிலீஷ்ல Non-detailedல H.H.Munro, O Henry, R.K.Narayan இவங்களோட ஸ்டோரீஸ்லாம் வர்றது. அதுல ஒரு டெப்த் இருக்கு. ஆனா தமிழ்ல அப்பிடி இல்ல.

நான்: இன்னும் டீட்டெயில் தேவை.

பரத்: The Open Window. Saki( Munro) எழுதினது. ஒரு ஆள் வீடு பார்க்கப் போறான். அங்க ஒரு பொண்ணு அவங்கிட்ட பேய்க்கதை சொல்றா. ஜன்னல் வழியா வரும்ங்கறா. அவ அத்தையும் அதையே சொல்றா. அவன் வெளில பார்க்கறான். செத்துப் போனதாச் சொன்ன்ன மூணு பேரும், நாயும் வந்திண்டிருக்கு. ஆள் அலறி அடிச்சுண்டு ஓடறான். வந்தவங்க கேக்கறாங்க – ஒரு ஆள் ஓடினானே ஏன்னு? அதுக்கு அந்த பொண்ணு சொல்றது – அவன் நாயைப் பார்த்து ஓடியிருக்கான்.  முன்னாடி ஒரு தடவை வெறி நாய்கள் சிலது சேர்ந்து இவனைத் துரத்திண்டு வந்துதாம். ஒரு ராத்திரி முழுக்க சுடுகாட்டுல ஒரு புத குழில விழுந்து கிடந்தானாம். அதனால பயமாம்.’ இது தான் கதை. இதுல சொல்லாம சொல்றது என்னன்னா அந்தப் பொண்ணுக்கு க்ஷணப் பொழுதுல கதையை இட்டுக் கட்டிச் சொல்ற பழக்கம் உண்டுங்கறதுதான்.

கதைல எல்லாமே வெளிப்படையா இருக்கப்படாது. நாமளும் கொஞ்சம் ஊகிக்கணும். அதுதான் சரி. அதே மாதிரி ஆர்.கே.நாராயணனோட ‘The Green Blazer’, ரவீந்திர நாத தாகூரோட ‘A fest for rats’, ஓ ஹென்றியோட ‘The Cop and the Anthem’ இப்படி பல சுவாரஸ்யமான கதைகள் இங்கிலீஷ் Non-detailல இருக்கு. கதைகள்ல ஒரு ட்விஸ்ட், நிறைய ஹூமன் எமோஷன்ஸ், ஸர்ப்ரைஸ் எல்லாம் இருக்கு. இதப் படிக்கறதே ஜாலியா இருக்கும்.

நான்: தமிழ்ல ?

பரத்: ஒரு கதை வர்றது. மரம் பேசற மாதிரி இருக்கும். ஆனா ஒரே உபதேசமா இருக்கும். மரம் பேசறதுன்னா First Personல தானே பேசணும்? இங்க அப்பிடி ஆரம்பிச்சு Third Personல கண்டின்யூ ஆறது. ஒரே அக்யூசேஷன். கதை கதையா இருக்கணும். மாரல் இருக்கட்டும். ஆனா, மாரல் மட்டுமே கதை இல்லையே.

நான்: இன்னொரு கதை இருக்கா தமிழ்ல?

பரத்: இருக்கு. அது இன்னும் நன்னாயிருக்காது. ஒரு சூபி பரத்தடில இருக்கற சோகமான பணக்காரனப் பார்க்கறார். ஏன் சோகமா இருக்கேன்னு கேக்கறர். என் பணத்தையெல்லா யாராவது எடுத்துண்டு போயிடுவாளோன்னு பயமா இருக்கு, அதால சோகமா இருக்கேங்கறான். உடனே அவர் அந்தப் பனத்தை எடுத்துண்டு ஓடறார். பணக்காரன் துரத்தறான். சூபி மரத்தடியில பணத்தப் பொட்டுட்டு ஒளிஞ்சுக்கறார். ‘பணம் கிடைச்சுடுத்து, நான் சந்தோஷமா இருக்கேன்’ அப்பிடின்னு பணக்காரன் சொல்றான். சூபி வெளில வந்து ‘பார்த்தியா, வேணுங்கற அளவுக்கு மட்டுமே பணம் இருந்தா சந்தோஷமா இருக்கலாம். நான் அப்பிடித்தான் இருக்கேன்னு சொல்றார். இதுதான் கதை.

நான்: நல்ல விஷயம் தானே இருக்கு கதைல?

பரத்: பணக்காரர் ஓடும் போது ‘என் பணம் போயிடுத்தே’ந்னு கத்திண்டே பயந்துண்டே ஓடறார் இல்லியா? அந்த எமோஷன்ஸ் கடைசி வரைக்கும் Carry-forward ஆச்சா? இல்லையே. உடனேயே ‘நான் சந்தோஷமா இருக்கேன்’ங்கறார் அவர்.  ஒரு கண்டினியூட்டி இல்லை கதைல. அறிவுரை சொல்லியாகணும்னே ஏதோ எழுதின மாதிரி இருக்கு.

நான்: அப்ப, எப்படித்தான் எழுதணும்ங்கற?

பரத்: என்னப்பா இது? எங்களுக்கு மாரல் சொல்லிண்டே இருக்கற கதையெல்லாம் வேண்டாம். கதைல கற்பனை இருக்கணும். நல்ல ஆதர்ஸ் எழுதினதா இருக்கணும். தமிழ்ப் பாடப் புஸ்தகத்துல ஏதோ இவாளே இமேஜின் பண்ணிண்டு எழுதின மாதிரி, ஏதோ எழுதணுமேன்னு எழுதின மாதிரி தெரியறது.

நான்: இங்கிலிஷ் பாடப் புஸ்தகம் CBSEயோடது. தமிழ்ப் பாடப் புஸ்தகம் தமிழ் நாடு கவர்மெண்டோடது. அதால வித்தியாசம் இருக்கலாமோ?

பரத்: இருக்கலாம். எங்க கிளாஸ்ல ஹிந்தி ஸ்டூடண்ட்ஸ் இருக்கா. அவாளுக்கெல்லாம் நல்ல ஸ்டாண்டர்ட் புக்ஸ் இருக்கு. எங்களோட செகண்ட் லாங்வேஜ் புக் ( தமிழ்), தேர்ட் லாங்வேஜ் ஹிந்தி புக் லெவல்ல இருக்கு. நாங்க படிக்கற தேர்ட் லாங்வேஜ் புக் இப்ப மூணாங்கிளாஸ் ஹிந்தி பசங்களோட செகண்ட் லாங்வேஜ் புக். Eighth standard children’s second language book should not be like a third standards’s second language, right?

நான்: அப்ப என்னதான் பண்றது?

பரத்: நல்ல எழுத்தாளர்களோட கதைகள் எல்லாம் பாடப் புஸ்தகத்துல இருக்கணும். மாரல் சொல்லியே ஆகணும்னு கட்டாயம் இல்லை. நல்ல கதையா இருந்தா நாங்களே படிச்சுப்போம். அப்புறம் நாங்கள்ளாம் அன்னிக்கி இப்பிடி இருந்தோம்னு சொல்லிண்டே இருக்கற பாடங்கள் அதிகம் வேண்டாம். அவ்ளோதான்’

சம்மட்டி அடி. அவன் சொன்ன கதைகளையும் வாசித்துப் பார்த்தேன். உண்மைதான்.

குறைந்தது 3000 ஆண்டுகளாகத் தொடர்ந்து வாழ்ந்து வருகிற, கிட்டத்தட்ட எப்போதுமே வழங்கி வருகிற எழுத்து வடிவங்களை உடைய ஒரு மொழியில் இக்காலக் குழந்தைகளைக் கவரும் விதமாகக் கதைகள் இல்லை என்பது பெருங்குறையே.

கல்வியாளர்கள், ஆசிரியர்கள், அரசு – கொஞ்சம் இந்த விஷயத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள்.  குழந்தைகளுக்கான தமிழ் எழுத்தாளர்களையும் சேர்த்துத்தான்.

CBSE புஸ்தகங்கள் சரியானவை என்று சொல்லவில்லை. ஆனால், பாட நூல் கழகம் வெளியிடும் நூலை மட்டுமே பயன்படுத்த வேண்டுமா அல்லது துணைப்பாடத்திற்காக வேறு கதை / கட்டுரைத் தொகுப்புகளின் துணையை நாடலாமா என்று கல்வியாளர்கள் / அரசு கொஞ்சம் பேசி முடிவெடுங்கள். பிள்ளைகளைக் கற்பனைத் திறனற்ற மந்தைகளாக்காதீர்கள் என்பதே என் வேண்டுகோள்.

மேலும் விவரங்களுக்கு இந்தக் கதைகளைப் படித்துப் பாருங்கள்:

  1. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், வகுப்பு 8 – ‘மரத்தின் வேண்டுகோள்’ (பக் 95)
  2. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், வகுப்பு 8 – ‘மகிழ்ச்சிக்கான வழி’ (பக் 43)
  3. Orient Black Swan Literature Reader – Trail of the Green Blazer – R.K.Narayan
  4. Orient Black Swan Literature Reader – The Open Window – Saki
  5. Orient Black Swan Literature Reader – The Cop and the Anthem – O Henry
  6. Orient Black Swan Literature Reader – A feast for rats – Rabindranath Tagore

 

குழந்தைகளைத் தெய்வம் தான் காக்க வேண்டும்

தெய்வம் தான் தமிழகக் குழந்தைகளைக் காக்க வேண்டும்.

2017-ஜூன்
10ம் வகுப்புத் தேர்வில் அந்தக் குழந்தை 500ற்கு 480+ எடுத்திருந்தாள். தமிழகத்தின் நகராட்சி சார்ந்த ஊர். ‘என்ன படிக்கலாம்?’ என்று கேட்டிருந்தாள். அவளுக்கு அறிவியலில் நாட்டம் இல்லை என்று சொல்லியிருந்தாள்.
வணிகவியல், சமூகவியல் படிக்க அறிவுறுத்தினேன். பின்னர் சி.ஏ. ஏ.சி.எஸ். (அ) முனைவர் பட்டப் படிப்புகள் பயில வாய்ப்பு என்று 2 மணி நேரம் சொல்லியிருந்தேன். மொழிகளில் அதிக நாட்டம் இருந்ததால் ‘தமிழ் படி, நல்ல தமிழாசிரியர்கள் கிடைப்பதில்லை. ஆராய்ச்சிக்கும் வாய்ப்புள்ளது’ என்றும் சொல்லியிருந்தேன். தமிழோடு நெருங்கிய தொடர்புடைய குடும்பம் அது என்பதால் இயல்பாகவே ரத்தத்தில் தமிழ் உள்ள பெண் அவள்.
பள்ளிக்குச் சென்றவளிடம் தலைமை ஆசிரியர்,’ 10வதுல ஸ்கூல் பர்ஸ்ட் வந்துட்டு காமர்ஸ் போறியா? பயாலஜி குரூப் போ. படிச்சு ஸ்கூலுக்கு ரேங்க் எடுத்துக் குடு’ என்று சொல்ல, குழந்தையும் சரியென்று தலையாட்டிவிட்டது.
கெமிஸ்றி புரியவில்லை, பிசிக்ஸ் ஆசிரியருக்குச் சொல்லித் தரத் தெரியவில்லை->புரியவில்லை,தமிழும் கணிதமும் மட்டும் விரும்பிப் படித்தாள்.
+1ல் சரியாகப் பயிலாததால் ஆசிரியர்களிடம் திட்டு. ’10வதுல எப்படி மார்க் வாங்கின?லக்கா?’என்பது போன்ற கேலிப் பேச்சுக்கள்.
சொல்லமுடியாமல் தவித்துள்ள குழந்தைக்கு அடிக்கடி தலைவலி வந்துள்ளது. ஓட்டை மருத்துவர்கள் அனாசின் முதல் அமிர்தாஞ்சன் வரைகொடுத்துள்ளார்கள்.மைக்ரேன் என்று சொல்லி அதற்கும் மருந்துகள்.
தலைவலி குறையவில்லை.
யோகாவிற்கு அனுப்பலாம் என்று முடிவாகி, ஶ்ரீஶ்ரீ யோகாமையத்தில் சேர்ந்தாள்.அந்த மையத்தின் தலைவி குழந்தையைப் பூரணமாக ஆராய்ந்து, இவள் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறாள் என்று தோன்றுகிறது எனச் சொல்ல, அடுத்து அக்கு பிரஷர் மையம். சிகிச்சை பலனின்றி மன நல மருத்துவர்.
தீர ஆராய்ந்த மருத்துவர் குழந்தைக்கு உடல் உபாதைஒன்றுமில்லை. மனம் சார்ந்த அழுத்தம் என்று விளக்கியுள்ளார்.அதுவரையாரிடமும் பேசாத அப்பெண் குழந்தை,மருத்துவரிடம் பள்ளி, படிப்பு, தேர்வு, இவை சார்ந்த அழுத்தங்கள் என்று சொல்லியுள்ளது.
‘உங்களுக்குக் குழந்தை முக்கியமென்றால் பாடத்தைத் திணிக்காதீர்கள்’ என்னும் அறிவுரையுடன்,விளையாட்டு,பொழுதுபோக்கு, விருப்பமான பாடம்,இசை-என்று இருக்கும்படிச் சொல்லியுள்ளார் மருத்துவர்.
குடும்பம் பெரும் கவலையில் உள்ளது.
ஆசிரியர்களே/பள்ளித் தாளாளர்களே/பெற்றோரே:
  1. குழந்தைகள் இன்னது படிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டால் அதில் தயவு செய்து குறுக்கிடாதீர்கள்.
  2. முடிந்தால், உங்களுக்குத் தெரிந்தால் வழி காட்டுங்கள்.
  3. உங்கள் பள்ளி மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டிப் பிள்ளைகளைப் பலியாக்காதீர்கள்.
தமிழ் நாட்டுப் பிள்ளைகள் அபிமன்யூவைப் போல் ஒரு வியூகத்தில் சிக்கியுள்ளார்கள். எல்லாத் திசைகளில் இருந்தும் தாக்குதல்கள். வெளிவர வழி தெரியாமல் பிள்ளைகள் திணறுகிறார்கள். பள்ளிகள் தங்கள் சுய லாபத்திற்காகவும், பெற்றோர் தத்தமது சுய பெருமைக்காகவும் பிள்ளைகளின் ரத்தத்தையுறிஞ்சுகிறார்கள்.
2018 – மே
குழந்தையை ஒரு வாரமாகப் பள்ளிக்கு அனுப்பவில்லை என்று அவளது தாய் சொன்னார். தலைவலி குறைந்தபாடில்லை. வேறு ஊருக்குச் சென்று வரலாமே என்று பேசிப்பார்த்தேன்.
‘அடுத்த வாரம் வீக்லீ டெஸ்ட் இருக்கே. மார்க் வரல்லேன்னா?’ என்கிறாள் குழந்தை.
தெய்வம்தான் துணைநிற்க வேண்டும். வேறொன்றும் சொல்வதற்கில்லை.
%d bloggers like this: