http://epaper.dinamani.com/892493/Dinamani-Chennai/01-08-2016#page/13/3
ஆந்திர கிராமத்தில் வசிக்கும் வயதான பிராம்மணத் தம்பதிகள் பற்றிய மிக உணர்வுபூர்வமான கதை.
வயோதிகத்தில் அந்தத் தம்பதிகளுக்குள் ஏற்படும் சின்னச் சின்ன சம்பாஷணைகள், பிணக்குகள், மறைந்திருந்து அவ்வப்போது வெளிப்படும் அன்பு, காதல், சில தியாகங்கள், வெளி நாட்டில் இருக்கும் தம் பிள்ளைகளையும், பேரன் பேத்திகளையும் எண்ணி பிரியத்தில் ஏங்கும் நிலை என்று கதை நீள்கிறது.
படத்தில் நான்கு பாத்திரங்கள். நாயகனும் நாயகியும் தவிர ஒரு பசுமாடும் அதன் கன்றுக்குட்டியுமே அந்தப் பாத்திரங்கள். எஸ்.பி.பியும் லக்ஷ்மியும் ந்டிப்பில் மிக உயர்ந்து நிற்கிறார்கள்.
படத்தின் முடிவு இந்தியப் பெண்களின் மகோன்னத மனநிலையை உணர்த்துவது போல் உள்ளது.
இக்காலத்தில் இப்படி ஒரு படம் வந்துள்ளது நல்ல விஷயமே. ஆனால் தமிழ் நாட்டில் வராது என்பது நிதர்ஸனம்.
கவுண்டர்கள் வாழ்க்கை முறை, அவர்களது வேளாண்மை குறித்த புரிதல்கள், கொங்கு மண்டல சாதி அடுக்குகள், வெகு நாட்கள் கழித்துக் கேட்கும் கொங்கு மண்டல வட்டார மொழி – இவை அனைத்தும் சேர்ந்த நல்ல படைப்பு ‘ஆளண்டாப் பட்சி’ என்னும் இந்த நாவல்.
பெருமாள் முருகன் கொங்கு மண்டல வார்த்தையாடல்களை மனக்கண் முன் கொண்டு வருகிறார். விறு விறுவென்று முன்னேறும் இந்த நாவல், குடும்பம் உடைவதால் கொங்கு மண்டல வேளாணமைக் குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்களை வேகம் குறையாமல் காண்பிக்கிறது.
நான் சேலத்தில் சில ஆண்டுகள் இருந்து படித்தவன். வேளாண்மைத் தொழில் செய்யும் சில கவுண்டர் குடும்பங்களை அறிவேன். அவர்களது கடின உழைப்பை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன். அந்தப் பழைய நினைவுகளை இந்த நாவல் மீட்டுக் கொண்டுவந்தது.
நாவலின் பெயர்ப்பொருத்தம் அபாரம். தமிழ் மொழியின் அழகே அதன் வட்டார வழக்குகள் தான் என்பது என் எண்ணம். உங்களுக்குத் தமிழின் வட்டார வழக்குகளில் விருப்பம் இருந்தால் இந்த நாவல் உங்களை மகிழ்விக்கும்.
பெரியார் பற்றிய ஒரு பேச்சு கதைக்கு ஓடடாமல் வருகிறது. திணிக்கப்பட்ட ஒன்று என்று தெரிகிறது. போனால் போகட்டும். சாதி, ஆசிரியரின் ஆழ்மனதில் உறைந்துகிடப்பதைக் கதை முழுவதும் உணர முடிகிறது. வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்பது சொல்லாமல் சொல்லப்படுகிறது. நல்ல விஷயம் தான்
பி.கு. : ஆசிரியரின் அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அவர் தமிழ் எழுத்தாளர் என்கிற முறையிலும், கொங்கு வடடார எழுத்தின் ஒரு பிரதிநிதி என்னும் அளவிலும் இந்த நாவலை நான் விரும்புகிறேன்.
மஹாமஹோபாத்யாய ஶ்ரீ.உ.வே. கருணாநிதி ஸ்வாமி சன்னிதியில் அடியேன் அசட்டு அம்மாஞ்சி அனேக தெண்டன் சமர்ப்பித்த விஞ்ஞாபனம். உபய க்ஷேமம்.
மன்னிக்கவும். ‘ஸ்வாமி’ என்று போட்டது தவறு தான். அது தமிழ் இல்லை. ஆகையால் ‘சுவாமி’ என்று போடலாம் என்று பார்த்தால் அது சுப்பிரமணிய சுவாமியை நினைவு படுத்துவது போல உள்ளது. எனவே ‘ஸ்வாமி’ தான். வேறு வழி இல்லை. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.
மறுபடியும் மன்னிக்கவும். ‘உ.வே’ என்று போட்டது தவறா இல்லையா என்று தெரியவில்லை. ‘உபய வேதாந்த’ என்பதன் சுருக்கம் அது. சமஸ்கிருத வேதாந்தம் தமிழ் வேதாந்தம் என்று இரண்டு வேதாந்தங்களிலும் சிறந்தவர்களை அப்படிச் சொல்வது வழக்கம். ஆனால் தாங்களோ மிகப்பெரியவர். தங்களுக்கு எவ்வளவு மொழிகளில் பாண்டித்யம் என்று அளவிட முடியாது. எனவே ’N வே’ ‘where N tends to Infinity’ என்று வைத்துக்கொள்வோம். சரி தானே?
அதிருக்கட்டும். சமஸ்கிருதம் வேண்டாம் என்கிறீர்களாமே. ராமானுசர் பற்றி எழுதுகிறீர்கள் என்று சொன்னார்கள். ராமானுஜன் என்பது சமஸ்கிருதம். ஆமாம், ராமானுசர் எத்தனை தமிழ் நூல்கள் எழுதினார்? அவர் எழுதியதெல்லாம் சமஸ்கிருதம் தானே? நீங்கள் தான் அந்தத் தொடர் எழுதுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம்.
இல்லை இல்லை. யாரோ எழுதிக்கொடுத்து நீங்கள் பெயர் போட்டுக்கொள்கிறீர்கள் என்கிற பொருளில் நான் சொல்லவில்லை. வயதானதால் உங்களால் எழுத முடியாதே என்பதால் சொல்கிறேன். அவர் சொன்னதெல்லாம் சமஸ்கிருதத்தில் இருப்பதால் உங்களுக்கு எப்படிப் புரிகிறது?
ஆனால் ஒன்று. உங்களுடன் பெரியாரும் அண்ணாவும் அடிக்கடி கனவில் வந்து உரையாடுவார்கள். ஒருவேளை அவர்கள் சொல்லியிருக்கலாம். ஏனெனில் ‘அண்ணா அன்றே சொன்னார்..’ என்று சொல்லிவிட்டால் ஒரு பயல் கேள்வி கேட்க முடியாது இல்லையா?
சரி போகட்டும். நீங்கள் காலையில் யோகாசனம் செய்கிறீர்கள் என்று படித்தேன். யோகம் என்பதும் ஆசனம் என்பதும் சமஸ்கிருதம் அல்லவா? நீங்கள் நியாயப்படி பார்த்தால் காலையில் சிலம்பம் சுற்றியிருக்க வேண்டும். எழுந்து நிற்க வேண்டாம். அமர்ந்தபடியே சுற்றலாம். எதற்குச் சொல்கிறேன் என்றால் யோகாசனம் செய்யச் சொல்லி ஆர்.எஸ்.எஸ். உங்களை அவர்கள் வழிக்குக் கொண்டுவந்து விடுவார்கள். எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கள். மன்னிக்கவும். சாக்கிரதையாக இருங்கள்.
இன்னொரு விஷயம். இல்லை, இன்னொரு செய்தி. ரூபாய் நோட்டில் இந்தியில் எழுதியுள்ளார்கள். எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். மெல்ல மெல்ல இந்தியை உங்களிடமும் திணிக்கிறார்கள். ஒன்று செய்யலாம். அந்த இந்தி எழுத்தின் மேல் தார் பூசிவிடலாம். தெரிந்த கலை தானே. இல்லாவிட்டால் டாலர் நோட்டு மட்டுமே பயன்படுத்துங்கள். சேமிப்பில் உள்ளதை எடுத்த மாதிரியும் இருக்கும்; இந்தியை யாரும் திணிக்கவும் முடியாது. என்ன இருந்தாலும் ஆங்கிலம் நம் பாட்டன் மொழி அல்லவா? எப்படி அடியேனின் பகுத்தறிவு? எல்லாம் நீங்கள் போட்ட பிச்சை.
ஸ்டாலின் என்னும் பெயரை எப்படித் தமிழில் எழுதுவது என்று மட்டும் கொஞ்சம் சொல்லிவிடுங்கள். ‘சுடாலின்’ என்று எழுதினால் என்னவோ போல் இருக்கிறது. சரி. ரொம்ப யோசிக்க வேண்டாம். ‘அண்ணா கனவில் சொன்னார். ஸ்டாலின் என்பது தமிழ் தான்,’ என்று ஒரு போடு போட்டுவிடுங்கள். கனவில் கருத்து வருவதுதான் பகுத்தறிவு ஆயிற்றே.
இன்னொரு விஷயம். தாம்பரத்தில் ஒரு மாதா கோவில் உள்ளது. தமிழக, திராவிட இனம் சார்ந்த கலை அம்சங்களுடன் அது பெரிய கூம்பு கோபுரமும் அதன் மேல் சிலுவையும் இருக்கும். அப்படி இருப்பது பகுத்தறிவும் கூட. ஆனால் சமீப காலமாக அங்கு பிற்போக்கு பாசிச இந்துத்வ முறைப்படி தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரம், மணி முதலியன வைத்துள்ளார்கள். இது எத்தனை கொடூரம்? எந்த வழிபாட்டு முறைகளை நீங்கள் ஒழிக்க முற்பட்டீர்களோ அவையே இன்று மாதா கோவில்களிலும் தென்படுகின்றன. இதற்குப் பின்னும் ஆர்.எஸ்.எஸ். இருக்கலாம். தேர்தலில் உங்களுக்கு ஆதரவளித்த பேராயர்களிடம் சொல்லி வையுங்கள்.
அது இருக்கட்டும். ‘ரகுராம் ராஜன்’ விவகாரத்தில் நீங்கள் இன்னமும் போராட்டத்தில் குதிக்காதது ஏன்? அவர் தமிழர் மாதிரிதான் தெரிகிறார். ப.சிதம்பரம் கூட அவருக்குக் குரல் கொடுக்கிறார். அவரது பெயரில் ‘ராம்’ இருப்பதால் நீங்கள் இன்னமும் போராட்டத்தில் குதிக்கவில்லையா? மோதி அரசு அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கவில்லை. எதற்கும் இருக்கட்டும். நீங்கள் ஒரு போராட்டம் அறிவியுங்கள். ஒரு அரை மணி நேரம் கடற்கரையில் அமர்ந்தது போலவும் இருக்கும். போராட்டம் நடத்தினது போலவும் இருக்கும். வீரமணியும் சும்மாதான் இருக்கிறார். அவர் வந்து பழச்சாறு கொடுத்து உங்கள் அரை மணி நேர கால வரையற்ற சாகும்வரை உண்ணா விரதத்தை முடித்து வைப்பார். மன்னிக்கவும். ‘விரதம்’ வட மொழி. ‘நோன்பு’ சரியாக இருக்குமா?
‘ஆயுர்வேதம்’ என்றொரு முறையைக் கொண்டுவரப் பார்க்கிறார்கள். பெயரிலேயே ‘வேதம்’ இருக்கிறது. நமக்கு ஆகாது. ‘ஆயுர்’ என்பதும் வடமொழி தான். எனவே இதுவும் சமஸ்கிருதத் திணிப்பே. உடனே போராட்டம் துவங்குங்கள். கொஞ்சம் விட்டால் வை.கோ. முந்திக்கொண்டு விடுவார். பாரதியாரை விடுங்கள். ‘வேதம் வளர்த்த தமிழ் நாடு’ என்று சொல்லிவிட்டார் என்பதால் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கட்டாயமா என்ன? வள்ளுவர் கூட ‘கள் உண்ணாமை’ என்று ஒரு அதிகாரம் வைத்தார். அவர் பெயரைச் சொல்லிக்கொண்டே நீங்கள் மது விற்பனை செய்யவில்லையா என்ன?
‘சித்த மருத்துவம்’ தமிழர் முறை என்று சொல்கிறார்கள். ஆனால் ‘சித்த’ என்பது வடமொழியிலும் வருகிறது என்கிறார்கள். எதற்கும் தமிழறிஞர் வீரமணியைக் கேட்டுவிடுங்கள். அல்லது இருக்கவே இருக்கிறது ‘கனவு’ வழி. அண்ணா, பெரியார் யாராவது கனவில் வருவார்கள். கேட்டுப் பாருங்கள். இல்லையென்றால் சில ‘சித்த சுவாதீனம்’ இல்லாதவர்கள் இதைப் பற்றி எழுதுவார்கள்.
‘திருமங்கையாழ்வார்’ என்று ஒரு பழைய ஆள் இருந்தார். இவர் கள்ளர் மரபினர். ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாசுரங்களை அவர் பாடியுள்ளார். 9-ம் நூற்றாண்டுக்காரர். எனவே பெரியார் வழி, அண்ணா வழி நடக்க அவருக்கு வாய்ப்பில்லை. அதனால்தான் ‘செந்தமிழும் வடகலையும் நவின்ற நாவர்..’ என்று தேரழுந்தூர்ப் பாசுரத்தில் சொல்கிறார். தமிழையும் சமஸ்கிருதத்தையும் சரளமாகப் பேசிய மக்கள் இருந்த ஊர் என்னும் பொருளில் சொல்கிறார்.
எதற்குச் சொல்கிறேன் என்றால் ‘ஆழ்வார்களை மீட்டெடுப்போம்’ என்று போராட்டம் துவங்கலாம். திருமங்கையாழ்வார், ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலால் இப்படி எழுதினார் என்று வீரமணியிடம் ஒரு வார்த்தை சொல்லுங்கள். பொங்கி எழுந்து அவரும் வந்து விடுவார். வயதான காலத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அவரும் குழம்பியுள்ளார். கொஞ்சம் பார்த்துச் செய்யுங்கள்.
‘கச்சத் தீவை மீட்டெடுப்போம்’ என்று ஒரு நல்ல காமெடி நாடகம் நடத்துவது போல ‘ஆழ்வார்களை மீட்டெடுப்போம்’ என்று சொன்னால் கொஞ்ச காலம் காலட்சேபம் ஓடும். ‘காலட்சேபம்’ தமிழ் இல்லை தான். ‘பிழைப்பு’ என்று சொல்வது ரொம்பவும் ஒரு மாதிரி இருக்கிறது.
தொல்காப்பியர் வடமொழி பற்றிச் சொல்கிறார். அவ்வையார் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்கிறார். பிதா, தெய்வம் எல்லாம் சமஸ்கிருதம் என்று கூட தெரியாத அளவிற்கு ஆர்.எஸ்.எஸ். அவர்களையும் மாற்றிவிட்டது. ‘தொல்காப்பியத்தை மீட்போம்’, ‘அவ்வையைக் காப்போம்’ என்றும் துவங்கலாம். கச்சத்தீவு மாதிரி இவையும் ‘விளங்கும்’. உங்களுக்கும் இன்னும் 2-3 ஆண்டுகளுக்கு பிழைப்பு ஓடும். பிழைப்பதற்கு சொல்லியா தரவேண்டும் ?
வடிவேலுவும் இப்போது இல்லை. சந்தானம், பரோட்டா சூரி எல்லாம் சகிக்கவில்லை. நீங்கள் தான் ஒரே கதி. எங்கள் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போட்டுவிடாதீர்கள். அவ்வளவு தான்.
உங்களை நகைச்சுவைக்கு என்றும் நம்பியுள்ள,
அசட்டு அம்மாஞ்சி.
முதலமைச்சர் அவர்களுக்கு,
வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
சில விஷயங்கள் பற்றிப் பேசலாம் என்று நினைக்கிறேன். கடந்த பல முறை கடிதங்கள் எழுதியிருக்கிறேன். நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. போகட்டும்.
நான் கொஞ்சம் பழைய ஆள். இன்னும் கூட மின் துறை அமைச்சர் யார் என்றால் பண்ருட்டி ராமச்சந்திரன் என்பேன். அற நிலையத்துறை அமைச்சர் சவுந்தரராஜன் என்பேன். அவர்கள் எம்.ஜி.ஆரின் அமைச்சர்கள். இன்றும் நினைவில் உள்ளார்கள். அவர்கள் செயல்பாடு இன்றும் நினைவில் கொள்ளும்படி இருந்தது.
உங்கள் அமைச்சர்கள் யார் என்று தெரிய அவர்களைக் கொஞ்சம் பேசச் சொல்லுங்கள். அந்தந்த துறைகளில் சிறந்தவர்களைப் பணியில் அமர்த்துங்கள். உதாரணமாக : முன்னாள் காவல் தலைவர் நட்ராஜ் அவர்களை உள்துறை அமைச்சராக்கலாம். சட்டமும் தெரிந்தவர்.
“எங்கள் நிதி அமைச்சர் யார்? அவர் நிதி சம்பாதிப்பதைத் தவிர அவருக்கும் அதற்கும் என்ன தொடர்பு? கேப்பிடல் அக்கவுண்ட் டெபிசிட் என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும் தான். ஆனால் நான் அவ்வளவுக்கெல்லாம் ஆசைப்படவில்லை. இந்த வருடம் நிதி ஆதாரங்கள் என்ன? வரவு எவ்வளவு? செலவு எவ்வளவு ஆகலாம்? துண்டு விழுந்தால் எப்படி ஈடு கட்டுவது? என்பது போன்ற அடிப்படை அறிவு இருந்தால் மட்டுமே போதும் என்கிற நிலைக்கு வந்துவிட்டேன். கொஞ்சமாவது எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாகப் போடுங்கள்,” என்று சொல்லலாம் என்று என் அருகில் நின்று யாரோ சொன்ன மாதிரி இருந்தது. நான் சொல்லவில்லை. இருந்தாலும், கொஞம் கணக்கு வழக்கு தெரிந்தவர்களைப் போடலாம். சி.ஏ. படித்த பலர் தனியார் துறைகளில் மின்னுகின்றனர். அவர்களைப் பயன் படுத்தலாம்.
“கல்வி அமைச்சர் என்பவர் ரொம்பப் படித்திருக்க வேண்டும் என்றெல்லாம் நான் கேட்கவில்லை. காமராஜும் கக்கனும் படித்தவர்களா என்ன? அதெல்லாம் வேண்டாம். ஆனால் தெளிவாகப் பேசுவார்கள். கொள்கையில் நெறியாய் இருப்பார்கள். அவ்வளவு நெறி இல்லாவிட்டாலும் கூட, கொஞ்சம் படிப்பு பற்றித் தெரிந்தவர்களாக இருந்தால் நல்லது. கல்லூரி, பள்ளிகளுக்குச் சென்று நாலு வார்த்தை பேச முடிந்தால் நல்லது.”
இதையும் நான் சொல்லவில்லை. பக்கத்தில் அரூப ரூபத்தில் யாரோ சொல்கிறார்கள். எனக்குத் தோன்றுவது: ஓய்வு பெற்ற பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் உள்ளனர். கல்விக்கு உகந்தவர்கள். முடிந்தால் வெளி நாடுகளில் நல்ல பல்கலைகளில் பணிபுரியும் தமிழர்களைக் கொண்டு வரலாம். புதிய எண்ணங்கள் வர வழி பிறக்கும்.
மின் துறையும் அப்படியே. ஓய்வு பெற்ற, நிறைய பணி அனுபவம் உள்ள பொதுத்துறைத் தலைவர்களும், தனியார் துறையில் பெரிய பதவிகளில் இருந்தவர்களும் கிடைப்பர்.
“தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது தான். அதற்காக நடுப்பகலிலும், சாலை ஒரங்களிலும் அமைச்சர்கள் உங்களைப் பார்த்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது அவ்வளவு நன்றாக இல்லை. தினம் ஒருமுறை செய்தால் போதும் என்று நீங்கள் சொல்லிவிட்டால் நல்லது.”
ஐயையோ, இதையும் நான் சொல்லவில்லை. பக்கத்தில் இருந்த அரூப ரூபம் சொன்னது. வீதியில் சேவிப்பது பெருமாளுக்கும் ஆச்சாரியர்களுக்கும் மட்டுமே. அப்படி அமைச்சர்கள் சேவித்தே ஆக வேண்டும் என்றால், கோவில்களுக்குச் செல்லச் சொல்லுங்கள். தி.மு.க. உறுப்பினர்கள் தான் பகலில் கோவிலுக்குப் போக மாட்டார்கள். உங்கள் கட்சிக்கு என்ன? பகலில் போனால் தவறில்லை அல்லவா?
எம்.எல்.ஏ.க்கள் வேஷ்டி தான் கட்ட வேண்டும் என்பதெல்லாம் இல்லை. பேண்ட் போட்டாலும் நன்றாகவே இருக்கும். பெரியவர்களைப் பார்க்கப் போகும் போது வேஷ்டி அணிந்து செல்வது வழக்கம். ஆமாம். அப்படி ஒரூ வழக்கம் இருந்தது உண்மைதான். அதனாலோ என்னவோ வேஷ்டி கட்டியவுடன் விழுந்து கும்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்..
“உங்கள் அமைச்சர்கள் பத்திரிக்கையாளர்களையெல்லாம் சந்திக்க வேண்டும் என்று நான் அதிகப் பிரசங்கித்தனமாகக் கேட்க மாட்டேன். ஆனால் நீங்கள் சந்தியுங்கள். அதுவும் ராஜ்தீப் சர்தேசாய், பர்க்கா தத் முதலிய பெரிய பண்டிதர்களிடம் பேசுங்கள். ரெண்டு போடு போட்டால்தான் சரிப்படுவார்கள். தமிழ் நாட்டுப் பத்திரிக்கைகள் போல் அடங்கி இல்லாமல் ரொம்ப பேசுகிறார்கள். ஒருமுறை தோட்டத்திற்கு வரச் சொல்லுங்கள். எல்லாம் சரியாகிவிடும். உங்களுக்குத் தெரியாதது இல்லை. வக்கீல் விஜயன் விஷயத்தில் நீங்கள் ‘கவனிக்காததா’?” கடைசி வரி சத்தியமாக நான் இல்லை. அதே அரூப ரூபம் தான்.
சிங்கப்பூர், தோக்கியோ, அமெரிக்கா என்று உருப்படாத ஊர்களில் வாழ்ந்துள்ளேன். ஊர் முழுக்க ஒரு விளம்பரத் தட்டி கூட இல்லை. என்ன அரசாங்கம் நடக்கிறதோ என்னவோ. யார் பிரதமர் என்று இணையத்தைப் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஆனால் ஒன்று. ஊர்கள் நன்றாக இருக்கின்றன. சென்னையிலும் இப்படி ஊர் முழுக்க தட்டிகளே இல்லாமல் இருக்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன். அப்புறம் முதல்வர் யார் என்று தெரியாமல் போய்விடும். இலவசமாக டி.வி, கணிணி என்று கொடுத்துவிட்டதால் மக்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர வழி இல்லாமல் போய்விட்டது. அதனால் வீட்டுக்கு ஒரு தட்டி என்று இல்லாமல் தெருவுக்கு ஒன்று என்று இருக்கலாம் என்று தோன்றுகிறது. என்ன நினைக்கிறீர்கள்?
ஒருமுறை நியூயார்க் நகரின் எம்பயர் ஸ்டேட் கட்டடம் அருகில் தெருவில் சில போலீசார் தென்பட்டனர். சரவண பவன் சென்றுகொண்டிருந்த நான் என்னவென்று விசாரித்தேன். மூன்று நிமிடம் கழித்து சொல்வதாகச் சொன்னார்கள். ‘வி.ஐ.பி. மூவ்மண்ட்’ என்று மட்டும் சொன்னார்கள். இரண்டு கார்கள் சென்றன. கருப்பு நிறத்தில் பெரிய கார் சென்றது. பின்னர் இரு கார்கள் சென்றன. ரொம்ப உற்றுப் பார்த்தேன். கருப்புக் காரில் ஒபாமாவும் அவரது மனைவியும் தெரிந்தனர். சரியாக மூன்று நிமிடம் கழித்து போக்குவரத்து துவங்கியது.
இதை எதற்குச் சொல்கிறேன் என்று நினைக்கலாம். ‘நம்மூரில் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?’ என்கிற எண்ணம் வந்தது. அதனால் சொல்கிறேன். மனது ஆசைப்படுகிறது. ஆசை தானே, படட்டுமே என்று விட்டுவிட்டேன்.
உங்கள் நல்ல மனதுக்கு உங்களுக்கு ஒரு குறையும் வராது. ஆனால் கொஞ்சம் வீட்டை விட்டு வெளியே வாருங்கள். காலாற நடந்த மாதிரியும் இருக்கும், மக்களுக்கு நீங்கள் சென்னையில் தான் இருக்கிறீர்கள் என்றும் தெரியும்.
மதுக்கடைகளை மூடப்போவதாகக் கேள்விப்பட்டேன். அந்தக் கட்டடங்களை சிறிய நூலகங்களாக்குங்கள். இதுவரை மது விற்ற பாவம் போகும். ‘ஐயன் படிப்பகம்’ என்று கலைஞர் பல கட்டடங்கள் கட்டியிருந்தார். ( நீங்கள் நம்பத்தான் வேண்டும். கலைஞர் தான், அவரே தான்). அந்தக் கட்டடங்களிலும் படிப்பகங்கள் செயல்படட்டும். கடலைப் பார்த்து நிற்கும் திருவள்ளுவர் திரும்பி நாட்டைப் பார்ப்பார்.
போகும்போது எதையும் கொண்டு போகப்போவதில்லை. நீங்கள் தெரியாதவர் இல்லை. ஆகவே உடல் நல்ல நிலையில் இருக்கும்போதே நல்ல விஷயங்களைச் செய்துவிடுங்கள். ஒரு நாளுக்கு ஒரு நல்ல காரியம் என்று வைத்துக்கொள்ளுங்கள் – மக்களுக்கு, வேறு யாருக்கும் அல்ல.
எம்.ஜி.ஆரும் காமராசரும் இன்றும் வாழ்வது அதனால் தான்.
நன்றி
அசட்டு அம்மாஞ்சி.
I was getting ready to sleep on the iron chairs arranged in the form of a cot in the reception area of Madras Medical Mission Hospital as my mom was in the ICU for an ailment. The lights were being dimmed and then I heard a quaint voice in Tamil Neenga night list receipt vaangitteengalaa? Have you got the receipt for staying for the night?
More than the question, his Tamil interested me. I could see he was from the north east. The writer in me woke-up and began a conversation with him.
He was Sanjay Roy from Assam who was fluent in Bengali, Assamaese, Hindi, English and now, Tamil. Having been a security guard in Chennai for the last four years, his natural affinity for languages made him learn Tamil. And here he was, talking to me in a slow yet steady Tamil. He spoke better than many of the TV announcers.
What I learnt from him that night :
My final question to him: How did you learn Tamil so fast?
He said,’Indian language thaane sir, rumba easy. Interest venum, avlodhan’ It is another Indian language and hence it is very easy to learn. You should have an interest to learn the language.
Only if the Tamil chauvinists were like Sanjay !
ஒரு முறை கலைஞர் ,’பாபனாசம் பண்ணையார் காரில் போவார், காப்பி குடிப்பார்’ என்று மூப்பனாரை விமர்சித்தார்.
திராவிடம், மொழி வெறி, சாதி பேசும் அரசியல் அழிய, மங்க வேண்டும். தேசீயம் வளர வேண்டும்; எல்லாத் தரப்பு மக்களையும் அரவணைக்கும் தலைவர்கள் உருப்பெற வேண்டும். இதற்கான நல்ல தொடக்கம் வானதி ஸ்ரீநிவாசன் போன்ற, வாக்கில் நேர்மையும், பண்பில் சிறப்பும் கொண்ட தலைவர்கள் தமிழக அரசியல் களத்தில் இறங்குவது.
தமிழக அரசியல் பற்றி ஏன் கட்டுரைகள் எழுதுவதில்லை என்று வெங்கடேஷ் சாரி என்னும் வாசகர் கேட்டுள்ளார்.
அன்புள்ள திரு.வெங்கடேஷ் சாரி, வணக்கம்.
எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. வெறும் புகழுரைகளையும், சாதிப் பெருமிதங்களையுமே தமிழக அரசியல் முன் வைக்கிறது. பல நேரங்களில் மத அடிப்படையில், வேறு பிரிவுகள் அடிப்படையில் அணிகள் பிரிகின்றன. உண்மையான அறிவுப்பூர்வமான வாதங்களும், கொள்கை அடிப்படையிலான விவாதங்களும் எழுவதில்லை. செய்திக் கட்டுரை எழுத்தாளர்களும் அரசியல் சரி நிலை சார்ந்தே எழுதுகிறார்கள்; உண்மை நிலையை எழுதுவதில்லை.
உதாரணமாக: இலங்கைப் பிரச்சினை பற்றி எந்த ஒரு அரசியல் தலைவரும் உருப்படியாகப்பேசுவதில்லை. ஏனெனில் யாருக்கும் முழுமையான வரலாற்று அறிதல் இல்லை. நான் இலங்கைப் பிரச்சினை குறித்து 8 நூல்களை வாங்கி, படித்து. மதிப்புரை எழுதி, அதன் பின்னர் அந்தப் பிரச்சினை குறித்துக் கருத்துக் கூறினேன். மேற்சொன்ன எந்த நூலையும் படிக்காமல், பொதுப்படையான, மொண்ணையான கருத்துக்களையே பேசிவரும் தமிழக வாசிப்பாளர்கள் வசைமொழி துவங்குகிறார்கள். இதில் அறிவுபூர்வமான விவாதம் நிகழ வாய்ப்பில்லை.
சாதி ஒழிப்பு பற்றி வாய் கிழிபவர்கள் தங்கள் குடும்பங்களில் திருமணங்களின் போது சாதி பார்க்கிறார்கள். அல்லது தங்களை விட உயர்ந்ததாகக் கருதப்படுகிற சாதியில் பெண் / ஆண் தேடுகிறார்கள்.
ஏதாவது ஒரு விஷயத்தில் அறிவுப்பூர்வமாக எழுதினால் சாதி அடிப்படையில் வசை பாடுகிறார்கள்; மாற்று விவாதக் களம் தமிழக வாசிப்பாளர்களிடையே இல்லை என்பதே வருந்தத்தக்க உண்மை.
இந்த நிலையில், தமிழக அரசியலாளர்களின் தரம் உலகம் அறிந்த ஒன்று. சாதி இல்லை என்று சொல்லி ஆனாலும் சாதி அடிப்படையிலேயே செயல்படும் வீரர்கள் அவர்கள் ( இடதுசாரிகள், பா.ஜ.க. ஓரளவிற்கு விதிவிலக்கு). வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலேயே தமிழக மக்களை வைத்திருந்து அவர்களிடமிருந்து உணர்வுபூர்வமான எதிர்வினைகளையே தூண்டி , தூபம் போட்டு, அந்தத் தீயில் குளிர் காய்பவர்கள் அவர்கள். அவர்களுடன் எனக்கு ஒட்டோ உறவோ இல்லை; எனவே அவர்கள் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை, எனவே சொல்வதில்லை.
இவை எப்போது மாறும்? தற்போதைக்கு இல்லை. 40 ஆண்டுகால அரசியலின் பிடியில் சிக்கிய தமிழகக் கல்வித்துறை வழி பயின்ற சமூகம் நடை தளர்ந்து விழும். அப்போது தேச நலனில் அக்கறை கொண்ட தலைமை உருவாகிக் கல்வித்துறையைத் திசை திருப்பும்;. அப்போது புதிய சிந்தனை கொண்ட, தானாகச் சிந்திக்கக் கூடிய சமூகம் உயிர்ப்பெறும்.
இது நடக்குமா? நடக்கும். அதற்கு திராவிடம், மொழி வெறி, சாதி பேசும் அரசியல் அழிய, மங்க வேண்டும். தேசீயம் வளர வேண்டும்; எல்லாத் தரப்பு மக்களையும் அரவணைக்கும் தலைவர்கள் உருப்பெற வேண்டும். இதற்கான நல்ல தொடக்கம் வானதி ஸ்ரீநிவாசன் போன்ற, வாக்கில் நேர்மையும், பண்பில் சிறப்பும் கொண்ட தலைவர்கள் தமிழக அரசியல் களத்தில் இறங்குவது. இல. கணேசன் போன்ற பண்பாளர்கள் தேர்தலில் நிற்பது நல்லது. அரசவையில் பண்பான பேச்சு கேட்பதற்குக் கிடைக்கும்.
முன் ஒரு காலத்தில் இராஜாஜி முதல்வராக இருந்த போது, கம்யூனிஸ்ட் கட்சியில் கோபாலன் எதிர் அணியில் இருந்தார். அரசவையில் கண்ணியம் குறையாத ஆனால் மக்கள் நலம் குறித்த ஆழமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. தற்போது சபை பெஞ்சு தட்டும் மாடுகள் கூட்டத்தின் தொழுவமாக இருக்கின்றது.
ஆனால் தற்போது நல்ல அறிகுறிகள் தெரிகின்றன. தொலைக்காட்சி விவாதங்களில் தற்போதைய அரசியலின் முகம் தெரியத் துவங்குகிறது. சமீபத்தில் சீமான், வைகோ, ஒரு இடதுசாரி பேச்சாளர் முதலியோர் என்ன தரத்தில் பேசினார்கள் என்பதை நாடு கண்டது. திராவிடக் கட்சிகளின் பேச்சு நாகரீகத்தின் லட்சணம் நாடு அறிந்ததே. கலைஞர், இந்திரா காந்தியைப் பற்றிப் பேசியதும் பின்னர் ‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என்று கெஞ்சியதும், காமராசரை அவரது நிறம் பற்றிப் பேசியதும், சமீபத்தில் பெரியார் வழியில் வந்த ஈ.வெ.கெ.எஸ்.இளங்கோவன் மிக மிகத் தாழ்ந்து பேசியதும் மக்கள் மனதில் நிற்கிறது. இதற்கு சமூக ஊடகங்கள் அளப்பரிய சேவை செய்கின்றன.
இவை அனைத்தும் மக்களைச் சென்று சேர்கின்றன. சுமார் 10 ஆண்டுகளில் இந்த மாற்றங்கள் தேர்தலில் எதிரொலிக்கலாம்.ஆனால் அதற்கு மேற்சொன்ன வானதி, கணேசன், நல்லகண்ணு முதலான பெரியவர்களின் பேச்சுக்களையும், கருத்துக்களையும் பற்றி வேண்டுமானல் எழுதலாமே தவிர, மற்ற யாரைப் பற்றியும் பேசிப் பயனில்லை.
எனவே நடிகர்-அரசியல்வாதிகள் பற்றியும், மக்களை உணர்ச்சிக்கொந்தளிப்பில் ஆழ்த்தும் ‘பெரியவர்கள்’ பற்றியும் அவர்களது அரசியல் பற்றியும் பேசுவதாக இல்லை.
நீங்கள் மசாலா தோசை பற்றிப் பேசுகிறீர்கள் என்றால் இப்படிப் பேசலாம். ‘மசாலா என்பது தமிழ்ச் சொல் அல்ல. சாலா என்பது இந்தி. மச்சான் என்னும் பொருள்படும். ‘ம’ என்பது மலையாளத்தைக் குறிக்கிறது. தோசை என்பது தமிழாக இருந்தாலும், அதற்கு மலையாளமுன் இந்தியும் சேர்ந்த அடைமொழி தேவைப்படும் அளவிற்கு
எல்லாவற்றிற்கும் ஒரு யூனிபார்ம் இருக்கிறது. இவரிவர் இப்படி இப்படித்தான் உடை, அலங்காரத்துடன் இருக்க வேண்டும் என்று இருக்கிறது.
தேர்தல் வருகிறது. அதனால் முற்போக்குவாதிகள், பேச்சாளர்கள் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்னும் கேள்வி உங்கள் மனதில் இருப்பது தெரிகிறது. முடிந்தவரை உங்களை முற்போக்குவாதியாக ஆக்க கங்கணம் கட்டிக்கொண்டு எழுதுகிறேன்.
பெண்ணாக இருந்தால் தலையைப் பரத்திவைத்து, இந்துவாக இருந்தாலும் பொட்டில்லாமல் இருக்க வேண்டும். ஆண்களாக இருந்தால் வாராத தலையும் குறுந்தாடியுமாக இருக்க வேண்டும். கருப்புக் கலரில் சோடா புட்டி கண்ணாடி அணிந்திருந்தால் இன்னும் விசேஷம். இப்படி நீங்கள் பொது விழாக்களில் காட்சியளித்தால் உங்களை முற்போக்காளர்கள் என்று கண்டுகொள்ளலாம். இதெல்லாம் இல்லை, வெள்ளையும் சொள்ளையுமாகவும் மீசை, தாடி முதலான அலங்காரங்கள் இல்லாமலும் இருப்பேன், ஆனாலும் முற்போக்கு என்று அறியப்பட வேண்டும் என்றால் நீங்கள் ஹிந்து நாளிதழ் தொடர்பில் இருக்க வேண்டும்.
தீவிர முற்போக்கு என்று அறியப்படவேண்டும் என்றால் கருப்புக் கலரில் துண்டு அல்லது கருப்பு சட்டை அணிந்திருக்க வேண்டும். ஒரு வாக்கியம் பேசி முடித்தபின் ‘பார்ப்பான் ஒழிக’ என்று ஒருமுறை சொல்லவேண்டும். ‘பார்ப்பனீயம்’ என்கிற பதப் பிரயோகம் மிக அவசியம். 30 நிமிடப் பேச்சில் 10 முறை ‘பார்ப்பனீயம்’ வர வேண்டும்.
உதாரணமாக நீங்கள் மசாலா தோசை பற்றிப் பேசுகிறீர்கள் என்றால் இப்படிப் பேசலாம். ‘மசாலா என்பது தமிழ்ச் சொல் அல்ல. சாலா என்பது இந்தி. மச்சான் என்னும் பொருள்படும். ‘ம’ என்பது மலையாளத்தைக் குறிக்கிறது. தோசை என்பது தமிழாக இருந்தாலும், அதற்கு மலையாளமுன் இந்தியும் சேர்ந்த அடைமொழி தேவைப்படும் அளவிற்கு இந்த பார்ப்பன ஏகாதிபத்தியம் இன்று நம்மைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. இதெல்லாம் பார்ப்பனீயத்தின் அடக்குமுறை வழிகள்’ என்று சொன்னால் பேச்சு எடுபடும்.
மசாலா தோசைக்கும் பார்ப்பனீயத்திற்கும் என்ன தொடர்பு என்று கேல்வி கேட்கும் அளவிற்கு யாருக்கும் மண்டைகுள் மசாலா இருக்காது. அப்படி யாராவது அந்தக் கூட்டத்தில் இருந்தால், கேள்வி கேட்டால், இருக்கவே இருக்கிறது தெளிந்த பதில் :’ இது ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளின் கேள்வி. ஆர்.எஸ்.எஸ். காவி பயங்கரவாதம் தமிழகத்தில் வேறூன்ற ஒரு நாளும் அனுமதிக்க மாட்டோம் என்று அண்ணா அன்றே சொன்னார்’ என்று ஒரு போடு போட்டால் ஒரு பயல் வாய் திறக்க மாட்டான்.
இடதுசாரி என்று அறியப்பட வேண்டும் என்றால் அதற்கும் வழிமுறைகள் உள்ளன. முதலில் தலையில் எண்ணெய் இருக்கக்கூடாது. மூச்சுக்கு முன்னூறு நடவை ‘செங்கொடி’, ‘புரட்சி’, ‘லெனின்’, ‘மார்க்ஸ்’ என்று ஜபம் செய்யவேண்டும். மன்னிக்கவும். ஜெபம் அல்ல. செபம். மறந்தும் ‘ஸ்டாலின்’ பெயர் வரக் கூடாது. வந்தால் உங்களை ‘தி.மு.க.’ என்று எண்ண வழி பிறந்துவிடும். தி.மு.க.விலேயே யாரும் அவர் பெயரைச் சொல்வது கிடையாது. 60 வயதானாலும் ‘இளைய தளபதி’ தான். ‘மார்க்ஸ்’ ஜெபம் முடிந்தவுடன், காங்கிரஸை முதலில் சாட வேண்டும். ஒரு நிமிடம் மட்டும் தான் சாடலாம். பின்னர் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். என்று நிறைய கத்த வேண்டி இருக்கிறது. பேச்சு யாருக்கும் புரியக்கூடாது, ஆனால் தமிழில்தான் பேசுகிறார் என்று தெரியவேண்டும்.
உதாரணமாக: காவி பயங்கரவாதம் பற்றி மார்க்ஸ் சொன்னாரே, மாவோ சொன்னாரே, காஸ்ட்ரோ சொன்னாரே, செ குவேரா சொன்னாரே அப்போதெல்லாம் வாய் மூடி இருந்த மோடி அரசு, நாங்கள் சொல்லும்போது மட்டும் வாய் திறபப்து ஏன்? வள்ளுவர் சொன்ன ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பதைத் தானே எங்கள் புரட்சிவீரர் லெனின் சொன்னார்? ஆகவே சொல்கிறோம் – இந்திய ஏகாதிபத்தியம் முடிய வேண்டும்; இலங்கையில் வாடும் மீன்களுக்கு இரை வேண்டும். இவை கிடைக்கும் வரை போராடுவோம்.’
அதாவது, எல்லா இடங்களுக்கும் சென்று வர வேண்டும், ஆனால் எதுவும் தெளிவாக இருக்கக் கூடாது. இது கம்யூனிசத்தின் முதல் பாடம். இரண்டு வாக்கியங்களுக்கு ஒரு முறை ‘லெனின்’, ‘மாவோ’ என்று இருக்க வேண்டும். அவ்வளவுதான். இனிமேல் நீங்கள் தான் சார் இடதுசாரி. மறந்தே போய்விட்டேன். ‘அவர் சொன்னாரே, இவர் சொன்னாரே’ என்றுதான் சொல்லவேண்டுமே தவிர என்ன சொன்னார் என்று சொல்லக்கூடாது. ஏனென்றால் பின்னர் நமக்குத் தோன்றியதைச் சேர்த்து ‘லெனின் சொன்னார்’ என்று சொல்லிக்கொள்ளலாம். லெனினிடம் கேட்கவா போகிறார்கள்?
தி.மு.க. பேச்சாளர் என்றால் ஒரே தகுதி இருந்தால் போதும். ‘மாநில சுயாட்சி’. இந்தத் தாரக மந்திரம், மன்னிக்கவும், முக்கிய சொல், உங்கள் பேச்சில் முழுவதும் இடம்பெறுமாறு இருக்க வெண்டும். ‘ஊழல்’ என்னும் சொல் வரக்கூடாது; கேட்பவர்கள் தி.மு.க. பற்றிப் பேசுவதாக நினைத்துக்கொள்வார்கள். ‘ராணியைப் பதவி இறக்குவோம்’ என்றும் சொல்லலாம். எதற்கும் ‘தமிழகத்தில்’ என்று சேர்த்துச் சொல்லவும். யாராவது ‘தில்லி’ என்று நினைக்கக் கூடாது. இது தவிர கனிமொழி, ராசா, பகுத்தறிவு, அண்ணா இதெல்லாம் வரக்கூடாது. ஓட்டு வாங்க எது பயன்படுமோ அதை மட்டும் தான் சொல்லவேண்டும். முடிக்கும் போது, ‘நாங்கள் இறைவனுக்கு எதிர் இல்ல; இறையீயத்திற்குத் தான் எதிர்’ என்று சொல்ல வேண்டும். உங்களுக்குப் புரியாவிட்டாலும் பரவாயில்லை. கேட்பவர்களுக்கும் புரியாது. எனவே குழப்பமில்லை.
தி.மு.க. பேச்சாளர் என்றால் இன்னொரு கடமையும் இருக்கிறது. அது ‘பார்ப்பனீயம்’ பற்றியது. ‘நாங்கள் பார்ப்பனீயத்துக்குத் தான் எதிர்; பார்ப்பனர்களுக்கு அல்ல’ என்று சொல்ல வேண்டும். இது உங்களுக்குப் புரியாவிட்டாலும் பரவாயில்லை. இதுவரைக்கும் சொன்னவர்கள் யாரும் புரிந்தா சொன்னார்கள்? ஆனால் இதைச் சொல்ல வேண்டியது கடமை, ஒரு சாங்கியம், சடங்கு. பகுத்தறிவு சாங்கியங்களில் இதுவும் ஒன்று.
பொதுவாக யாரும் கேட்க மாட்டார்கள். அப்படி யாராவது ஆர்.எஸ்.எஸ். காரன் கேட்டால் என்ன செய்வது? சோ, தந்தி டி.வி. இப்படி யாராவது புறம்போக்குகள் கேட்பார்கள். ஆ..பக்கங்கள் என்று ஒரு வம்புக்காரன் இருக்கிறான். அவன் கேட்பான். அதற்காக இதற்கு ஒரு பகுத்தறிவு விளக்கம் வைத்துக்கொள்ளுங்கள்.
‘பார்ப்பனீயம் என்பது பார்ப்பனன் + ஈயம் என்று பிரிக்க வேண்டும். அதாவது ஈயத்தில் ஒரு வகை அது. இந்த ஈயம் கொஞ்சம் பள பளவென்று இருக்கும். நீங்கள் பேசினால் பதில் பேசாது. பொதுவாக ‘ஏ ஐயிரே..!’ என்றால் பதில் சொல்லாமல் வாய் மூடிப் போகும். இது சுமார் 50 வருடங்களுக்கு முன்பு ஈரோடில் ஒரு சமூக விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உலோகம் Brahmin Lead என்று ஆங்கிலத்தில் அறியப்படும். BrPB என்பது இதன் கெமிக்கல் பெயர். மெண்டலீவ் பீரியாடிக் டேபிளில் இடம் அளிக்காமல் பார்ப்பன ஐரோப்பிய விஞ்ஞானிகள் சதி செய்து விட்டார்கள். எனவே இது தமிழ் பீரியாடிக் டேபிளில் மட்டும் இடம் பெற்றுள்ளது. நியாயமாகப் பார்த்தால் இதற்கு நோபல் பரிசு அளித்திருக்க வேண்டும். ஆனால் ஐரோப்பிய ஆங்கிலேய பார்ப்பன சதியாளர்கள் தலையீட்டால் ஈரோட்டுத் தமிழனுக்கு இந்த விருது அளிக்கப்படவில்லை.’
இப்படி ஒரு விளக்கம் தயார் செய்து கொள்ளவும். கொஞ்சம் டெக்னிக்கல் வார்த்தைகள் சேர்த்துக்கொண்டால் தமிழர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். இன்னும் முக்கியமான சடங்கு ஒன்று உள்ளது. ரம்ஜான், கிறிஸ்துமஸ், ஈஸ்டர், புத்த ஜெயந்தி, மகாவீரர் ஜெயந்தி, ஒபாமா ஜெயந்தி என்று எல்லா நாட்களுக்கும் ஒரு வாழ்த்துச் செய்தி தயாராக இருக்க வேண்டும். தீபாவளி, பிள்ளையார் சதுர்த்தி முதலியன இந்தியப் பண்டிகைகள் இல்லை என்பதாலும், செவ்வாய்க் கிரக மாந்தர்கள் மட்டுமே கொண்டாடுவதாலும் அவற்றிற்கு வாழ்த்து தெரிவிக்கக்கூடாது. அது பகுத்தறிவுக்கொள்கையின் தற்கால விதி.
நீங்கள் அ.தி.மு.க பேச்சாளர் என்றால் முதலில் நீங்கள் அன்று அந்தக் கட்சியில் இருக்கிறீர்களா என்று பார்த்துக் கொள்ளவும். பேசிக்கொண்டிருக்கும் போது அவ்வப்போது சென்னையில் இருந்து ஏதாவது அறிக்கை வந்துள்ளதா என்று ஜெயா டி.வி.யைப் பார்த்தபடியே பேச வேண்டும். எந்த நேரத்திலும் ‘கட்சி விரோத நடவடிக்கை’க்காக நீங்கள் நீக்கப்பட்டிருக்கலாம். நீங்கள் வாங்கும் மாமூல் போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் போகவில்லை என்று பொருள் கொண்டு அமைதியாக ஊருக்குப் போய் கோழிப் பண்ணை வைத்துப் பிழைத்துக்கொள்ளவேண்டும். மாறாக தி.மு.க. பக்கம் போவது போல் தெரிந்தால் அப்புறம் உங்கள் மனைவி உங்களை போட்டோவில்தான் பார்க்க முடியும். அது இதய தெய்வப் பகுத்தறிவுப் பாதை.
இதையும் தாண்டி நீங்கள் கட்சியில் இன்னும் இருந்தால், கைவசம் சில நூறு ஸ்டிக்கர்கள் வைத்திருக்கவேண்டும். அது அக்கட்சியின் அடிப்படைத் தகுதி. ஸ்டிக்கர் இல்லாததால் கட்சியில் இருந்து நீக்கம் என்று சொல்ல முடியாததால் ‘கட்சி விரோத செயல்’ என்று சொல்லி நீக்குவார்கள். அடிக்கடி உங்கள் சட்டைப் பையைத் தொட்டுப் பார்க்கவும். கைவசம் ஸ்டிக்கர் எண்ணிக்கை தெரிந்திருக்க வேண்டும்.
காங்கிரஸ் பேச்சாளராக இருக்க ஒரு அடிப்படைத் தகுதி வேண்டும். நீங்கள் இந்தி பேசுபவராக இருக்க வேண்டும். ஓய்வு பெற்ற பம்பாய் நடிகையாக இருத்தல் அவசியம். இரு வாக்கியங்களுக்கிடையில் ‘மேலிடம்’ என்கிற பதப் பிரயோகம் இருக்க வேண்டும். மற்றபடி பேச ஒன்றும் இருக்காது. சத்திய மூர்த்தி பவனில் தினமும் நடக்கும் கைகலப்புகளில் ஏடுபட்டு ஆனாலும் அடி வாங்காமல் இருக்க வேண்டும்.
தே.மு.தி.க. பேச்சாளர் எனில்.. சரி. சரி. அப்படி இருக்க வாய்ப்பில்லை. அக்கட்சியில் பேசுவது ஒருவர் தான். உங்களுக்குப் பேச வாய்ப்பிருக்காது. பேச வேண்டும் என்றாலும் என்ன பேசுவது என்றெல்லாம் தெரியாது. எப்போது யாருடன் நண்பராக, யாருடன் எதிரியாக இருப்பது என்பது அக்கட்சியின் தலைவர்களுக்கே தெரியாத நிலையில் நீங்கள் பேசுவது சரியாக இருக்காது. ஆனால் ஒன்று. உங்கள் தலைவரின் கை படும் தூரத்தில் இல்லாமல் இருப்பது உங்கள் உடம்புக்கு நல்லது.
ம.தி.மு.க. பேச்சாளராக இருந்தால்.. மன்னிக்கவும். அந்தக் கட்சியில் பேசுவது ஒருவர் தான். ஏனெனில் அங்கு இருப்பது ஒருவர் தான். ஒரு கட்சி ஒரு உறுப்பினர் ஒரு தலைவர் ஒரு பேச்சாளர் – அனைத்தையும் செய்யும் ஒருவர் மட்டுமே உள்ள அக்கட்சிக்கு அறிவுரை சொல்ல எனக்குத் தகுதியில்லை.
பா.ம.க. பேச்சளர் எனில் முதலில் எத்தனை மரம் வெட்டினீர்கள் என்று கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். கணக்கில் வீக் என்றால் பா.ம.க. உங்களுக்கு ஏற்ற இடம் அல்ல.
பா.ஜ.க. பேச்சாளர் என்றால் ? நல்ல கேள்வி. அங்கு பேச்சாளர்கள் பலர் உள்ளனர். தமிழ்நாட்டில் தான் யாரும் இல்லை. இருப்பவர்கள் நாகரீகம், மரியாதை என்று பிற்போக்குத் தனமாக இருக்கிறார்கள். இராமாயணம், மஹாபாரதம் என்றெல்லாம் பேசுகிறார்கள். இப்போதைக்கு விளங்கப்போவதில்லை. எனவே அக்கட்சியின் பேச்சாளராக ஆக முயல வேண்டாம். ஆனாலும் உங்களை யாரும் முற்போக்குவாதிகள் என்று சொல்லப்போவதில்லை. பண்டாரப் பரதேசிகள், காவிகள் என்று அடைமொழிகள் கிடைக்கும். இது உங்களுக்குத் தேவையா?
பார்த்து சூதனமாக நடந்துகொள்ளுங்கள்.
நன்றி
அசட்டு அம்மாஞ்சி
‘டேய் உன் பேர் என்னடா?’
‘…ஆ .. ஆமருவி சார்’
‘என்னடா இழுத்து பதில் சொல்ற? ‘ பளார் என்று ஒரு அறை.
‘இ..இல்ல சார். பே..பேச்சு அப்பிடித்தான்.’
‘என்ன பேர் சொன்ன?’
‘ஆ…ஆமருவி சார்’
‘என்னாடா புனைபேரெல்லாம் சொல்ற?’
‘இ..இல்லா நி…நி.. நிஜப் பேரே அதான் சார்.’
‘டேய், இவன் நாமம் போட்டிருக்காண்டா..நீ என்ன எப்.சி.யா ?’
‘ஆமாம் சார்.’ பளார் பளார் என்று இரு அறைகள்.
‘டேய் எப்.சி.ன்னா என்ன பெரிய புடுங்கியா? தே**** மகனே. இந்தா தம் அடி’
பின்னர் பல அறைகள். சில உதைகள், பல வசவுகள் என்று நாள் முடியும். புகழ் பெற்ற ஒரு அரசுப் பொறியியல் கல்லூரியில் ‘ராகிங்’ என்ற பெயரில் நடந்த கட்டற்ற வன்முறை.
1990ல் மீண்டும் மீண்டும் எனக்கு நடந்த நிழல் நாடகம் இது. சாதி அடிப்படையில் ஒதுக்கீடு பெற்ற சிலர் அரங்கேற்றிய தினப்படி சேவை இது. தட்டிக் கேட்க யாருமில்லை. யாருக்கும் தைரியம் இல்லை. அப்போதைய மண்டல் கமிஷன் வன்முறைகள் வேறு தீயைத் தூபம் போட்டு நெய் விட்டு வளர்த்தன.
‘மண்டல் கமிஷன் தேவையா இல்லையா டா?’
‘வேண்டாம் சார். அது தேவை இல்லை’
‘என்ன எப்.சி.ன்னு திமிரா? மவனே, போடுடா ரெண்டு’ இரண்டு அறைகள்.
‘ஏண்டா மண்டல் கமிஷன் வேண்டாம், நாயே’
‘இல்லை சார், தமிழ் நாட்டுல 50 சதவிகிதத்துக்கு மேலயே இருக்கு. 69 இருக்கு. மண்டல் வெறும் அம்பது தான் வேணம்னு சொல்லுது’
‘அப்டியா சொல்ற? என்ன மச்சான், திக்குவாய் ஏதோ சொல்லுது?’
மண்டல் கமிஷன் என்ன சொல்கிறது என்பதே தெரியாமல், அல்லது தெரிந்துகொள்ள அறிவில்லாமல் வெறும் ஆட்டு மந்தைக் கூட்டங்களாய் அரசுப் பொறியியல் கல்லூரிகளில் நுழைந்த பல பிள்ளைகள் நடத்திய வன்முறை வெறியாட்டங்கள் 25 ஆண்டுகள் கழிந்தும் மனதில் வடுவாய் நின்றுவிட்டது. இப்போது நினைத்தாலும் உடலில், முதுகுத் தண்டில் பெரும் அதிர்ச்சி ஏற்படுகிறது. இவை அனைத்தும் பெரும் பணக்கார இடை நிலைச் சாதி சார்ந்தவர்கள்.
சாதி அடிப்படை இட ஒதுக்கீடு தேவை இல்லையா? அந்தப் பிள்ளைகள் அதைப் பயன் படுத்தி வளரவில்லையா? என்று கேட்கலாம். வளர்ந்தார்கள். பலர் மிகவும் கீழிருந்து வந்தவர்கள். பனை மரம் ஏறும் ஒரு தொழிலாளியின் மகனும் என்னுடன் படித்தார். ஆங்கிலம் விடுங்கள், தமிழில் எழுதத் தெரியாத பண்ணை வேலையாளரின் மகனும் படித்தார். இவர்கள் தங்கள் நிலை உணர்ந்து ஊன்றிப் படித்து இன்று அமெரிக்காவில் நல்ல நிலையில் உள்ளனர்.
சாதி அடிப்படியில் வந்ததால் இவர்கள் படிக்கவில்லை. அவர்களின் சாதி அவர்களுக்குப் படிக்க ஊக்கம் அளிக்கவில்லை. ஆனால் அவர்களின் வறுமை அவர்களை விரட்டியது, படிப்பில் ஊக்கம் கொள்ள வைத்தது. தங்கள் தாய் தந்தையரின் அயராத உழைப்பு இவர்கள் கண் முன் நின்று இவர்களை ஆற்றுப்படுத்தியது.
இட ஒதுக்கீடு வழங்குங்கள், ஆனால் பொருளாதாரம் பார்த்து வழங்குங்கள். சாதி அடிப்படை வேண்டாம். சாதியை வாழ வைக்காதீர்கள்.
விஜயராகவாச்சாரியார் சாலையில் இருந்தும், அப்பு முதலியார் தெருவில் இருந்தும் சாரியாரையும் முதலியாரையும் நீக்க மட்டுமே உங்கள் பகுத்தறிவுக் கழகங்களால் முடிந்துள்ளது. சாரியாரை வெட்டினால் விஜயராகவன் தெரு என்று இருக்க வேண்டுமே தவிர விஜயராகவா தெரு இன்று இருக்கக்கூடாது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத ஆட்சியாளர்களையே உங்கள் பகுத்தறிவு அரசுகள் உருவாக்கின.
தெருக்களில் மட்டுமே சாதிகளை வெட்ட முடிந்த உங்கள் முற்போக்குகளால் இன்று தெருக்களில் சாதிப் பெயரில் வெட்டிக்கொள்கிறார்கள். அடிப்படை மானுட அறத்தைப் போதிக்காமல் வெறும் வார்த்தை ஜாலங்களை மட்டுமே அரசியல் மேடைகளில் முழங்கினீர்கள். எதுகை மோனையுடன் பேசுவதே சமூக நீதி என்று நம்ப வைத்தீர்கள். எதற்கெடுத்தாலும் பார்ப்பன ஆதிக்கம் என்று புரளி பேசி சாதி என்னும் புற்று நோயை மறைத்தீர்கள்.
கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் சாதி வேண்டாம்; பொருளாதாரம் மட்டுமே பாருங்கள். சாதியில்லாத சமுதாயம் உருவாகும்.
இன்று ஓட்டுப் பொறுக்கும் உங்களுக்கு இது காதில் விழாது. ஆனால் நாளை நீங்கள் நெஞ்சு வலி வந்து, மருத்துவமனையில் சேரும் போது உணர்வீர்கள்.
ஆனால் அப்போது காலம் கடந்திருக்கும். உங்கள் காலம் முடிவுக்கு வந்திருக்கும்.