மாற்றான் வானில் ஒளிரும் தாரகைகள்

இக்கட்டுரை உங்களுக்கு உகக்காமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அல்லது உகக்காதது போன்று பாவனை செய்துகொள்வத்ற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன. வெளியில் பேசாத சமுதாயத்தின் உள்ளக்கிடக்கையை அறிந்து எழுதுவதாகவே இதனைச் செய்கிறேன்.

‘நீ மார்க் வாங்காம, சாதாரணமா ஏனோதானோன்னு எதையோ படிச்சா கரண்டி ஆபீஸ்தான். சாதாரண படிப்புக்கு பிராமணனுக்கு இங்க ஒண்ணும் கெடைக்காது. நீ பார்த்துண்டே இருக்கறச்சே, உன்ன விட மார்க் கம்மியா வாங்கினவன் மேல போயிண்டே இருப்பான். கவர்மெண்டுல வேலைக்கி சிங்கியடிக்கணும். அதுனால முட்டி, மோதி எண்ட்ரன்ஸ்ல நன்னா பண்ணி நல்ல கவர்மெண்ட் இஞ்சினியரிங் காலேஜ் போனா உனக்கு நல்லது. கேப்பிடேஷன் ஃபீ எல்லாம் என்னால் முடியாது. உன் எதிர்காலம் உன் கையில. அவ்ளோதான் சொல்லிட்டேன்’ 80, 90களில் நெய்வேலியில் கீழ்நடுத்தர பிராமணக் குடும்பங்களில் அனேகமாகத் தினமும் புழங்கிய சொற்கள் இவை. அடிக்கடி கேட்டவை.

30 ஆண்டுகள் கழித்து, தற்போது இவற்றை நான் சொல்வதில்லை. ஏனெனில் யதார்த்தம் ரத்தத்தில் ஊறி, மரபணுக்களில் ஏறிவிட்டது. அரசு வேலை என்பது சாதாரண பேச்சுகளில் கூட இல்லை. அனேகமாக ராணுவம், நிதி, அன்னிய தேச உறவுகள் என்பதற்கு மட்டும் அரசு என்ன சொல்கிறது என்று கவனிக்கிறேன். மற்ற எதற்கும் அரசின் எந்தச் சலுகையையோ, கொள்கையையோ அல்லது அவற்றுக்கான அறிவிப்புகளையோ எதிர்பார்ப்பதும் இல்லை, காதில் வாங்கிக் கொள்வதும் இல்லை.

தற்போது பல பிராமணக் குடும்பங்களில் நுழைவுத் தேர்வுகளுக்கான தயாரிப்புகள் 8ம் வகுப்பில் இருந்தே துவங்கிவிடுகின்றன. அரசு சலுகை, அரசு சார்ந்த கல்லூரி / வேலை வாய்ப்பு எதிலும் ஏதோ ஒரு இடம் என்பதைக் கூட எதிர்பார்க்காத, அப்படி ஒன்று உள்ளது என்கிற பிரக்ஞையே கூட இல்லாத சமூகமாக மாறியுள்ள தமிழ் பிராமணச் சூழலைக் காண்கிறேன்.போட்டிகள், நுழைவுத்தேர்வுகள் முதலியவையே வாழ்க்கையின் நிதர்ஸனங்கள் என்பதை நன்கு உணர்ந்துகொண்டு அதற்கான வேலைகளில் இவர்கள் இறங்கிப் பல காலம் ஆகிவிட்டது.

யாரைக் கேட்டாலும் அவர்கள் குடும்பத்தில் குறைந்தது ஒருவர் அமெரிக்காவின் ஏதோ ஒரு பல்கலையில் ஏதோ ஒரு பிரிவில் தலைவராக இருக்கிறார், அல்லது உயர் தொழில் நுட்பத்தில் சிறந்த நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கிறார், அல்லது மருத்துவத்தில் ஏதோ ஒரு நாட்டில் பரிமளிக்கிறார். பலர் சிறு நிறுவனங்களை நடத்துகின்றனர். நான் அறிந்த சிலர் அமெரிக்க அரசியல் தளத்தில் உள்ளனர். பள்ளியில் என் சீனியர் இன்று அமெரிக்க மாகாணம் ஒன்றின் தலைவருக்குத் தொழில் நுட்ப ஆலோசகர். அனேகமாகத் தேர்தலிலும் நிற்பார் என்றும் பேச்சு.

பாரதத்தில் சந்திக்கும் தமிழ் பிராமணர்கள் இவ்விடத்தில் அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்பதை ஒரு குறையாகக் கூடச் சொல்வதில்லை. ஏனெனில் அவர்களின் பார்வையில் அந்த வாய்ப்புகள் இருப்பதே தெரிவதில்லை. அவற்றைத் தெரிந்துகொள்வதற்கான முயற்சிகளிலும் இறங்குவதில்லை. குறை சொன்னது எனது தலைமுறையோடு போய் விட்டது போல. அப்போதும் 69% இருந்தது.

நாடு விட்டுப் போனவர்கள் சென்ற இடங்களில் கலாச்சாரத் தூதுவர்களாகவே உள்ளனர். இசை, நாட்டியம் என்று செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். வெளி நாடுகளில் இலக்கியச் சூழலில் மட்டும் ஓரளவு பின்தங்கியே உள்ளனர். அதிலும் தமிழ் நாட்டுப் பாரம்பர்யம் தொடர்கிறது என்பதை என் சொந்த அனுபவங்களால் அறிவேன். அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் என்று மூன்று நாடுகளில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அங்குள்ள நிலைமை என்னவென்று அறிந்தே இதை எழுதுகிறேன்.

பிராமணர்களை ஒதுக்கினால் அவர்கள் வீறு கொண்டு எழப் போவதில்லை. இட ஒதுக்கீடு கேட்டுப் போராடப் போவதில்லை. சண்டை பிடிக்கவும் போவதில்லை. வாய்ப்பு தராத இடங்களை உதசீனப்படுத்திவிட்டுப் புறப்பட்டுவிடுவார்கள், உதாசீனப்படுத்த வேண்டும் என்கிற எண்ணமே இல்லாமல் ஓரிரு தலைமுறைகளில் பலதையும் புறக்கணிக்கத் துவங்கிவிடுவர். உதா: சிபிஎஸ்ஈ பள்ளிகளில் பயிலும் பலரும் தமிழகக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதில்லை. அவர்களை ஒதுக்குவதால் அவர்களுக்கு நஷ்டமில்லை.

அவ்வப்போது திருப்பித் தாக்குவது போலத் தோன்றும்படியாகச் சில குரல்கள் எழும். ஆனால், அதுவும் பொருட்படுத்தப்படமுடியாத ஒன்றாகவே கரையும். உதா: எஸ்.வி.சேகர். சேகர் முதலியோர் தமிழ் பிராமணர்களின் குரலன்று. தமிழ் பிராமணர்கள் பேசுவ்தில்லை. பேச்சுச் சுரைக்காய் வாழ்க்கைக் கறிக்கு உதவாது என்பதை இவர்கள் அறிந்தே உள்ளனர்.

இது ஏதோ ‘மேட்டிமைவாதம்’ என்று திராவிடீய-போஸ்ட் மார்டனிஸ்ட்-லிபரல் மந்தைகள் போல் இருமைக் (binary) குட்டைகளில் உழலும் எருமைகள் போல் சிந்திக்காமல், மேற்கூறிய கருத்துகளை உற்றுப் பார்ப்போம்.ஜெயமோகன் சொல்வது போல இவர்கள் கலாச்சாரத்தைத் தாங்கியவர்களாக இருந்துள்ளனர். தமிழ்ச் சமூகத்தில் இருந்து பிராமணர்களின் வெளியேற்றம் தமிழ்கத்தின் கலை, கலாச்சாரம் முதலியவற்றின் இறங்குமுகத்திற்கான நிமித்தங்களில் முக்கியமான ஒன்று.

இந்த purgeஐத் தடுத்து நிறுத்த முடியுமா? என்கிற கேள்விக்குத் தற்போது விடை ‘இல்லை’ என்பதே. இது நடைபெறுகிறது உண்மைதானா என்றும் பார்க்க, 30 ஆண்டுகட்கு முந்தைய மயிலாப்பூர், திருவல்லிக்கேணியையும் அவற்றின் தற்போதைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும். 60 ஆண்டுகட்கு முந்தைய தஞ்சை அக்கிரஹாரங்கள், அவை தற்போது இருக்கும் நிலை. இந்த ஒப்பீடு போதுமானதாக இருக்கும். தஞ்சையில் NIA செய்துள்ள கைதுகள் ஏன் என்பதையும் இத்துடன் சேர்த்துப் பார்த்தால் ஒரு முழுமையான சித்திரம் கிட்டும்.அமெரிக்கக் கோவில்களில் உற்சவங்களின் எண்ணிக்கை கூடியுள்ளதையும் கணக்கில் கொள்வோம்.

இடஒதுக்கீடு, ஊடகத்தில், அரசியலில், அரசுத் துறைகளில், நீதித் துறையில் வெளிப்படையான பாரபட்சம் என்று எத்தகைய இடைஞ்சல்கள் இருந்தாலும், அந்த இடைஞ்சல்களுக்குப் பாரதத்தின், தமிழகத்தின் அரசுகள் வழிசெய்து கொடுத்தாலும், பெற்ற தாயும், பிறந்த பொன் நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே என்கிற எண்ணம் மேலோங்க, நாட்டைப் பழிக்காமல், ‘எழுதிச் செல்லும் விதியின் கை, எழுது எழுதி மேற்செல்லும்’ என்னும் சூத்திரத்தின் படி தத்தமது நிகழுலகின் மௌன சாட்சிகளாகச் செயலாற்றி வருகின்றனர் தமிழ் பிராமணர்கள்.

தாரகை

தற்போது ஓய்வு பெற்றுவிட்டவரும், கொண்டாடப் படத்தக்க பொறியாளருமான எனது முன்னாள் மேலாளர், தனது மகனின் கல்விக்காகப் பல வெளி நாட்டு வேலைகளைப் புறந்தள்ளிவிட்டு பாரதத்திலேயே இருந்து, நிர்வாகத்தில் பல படி நிலைகள் கீழேயே தன்னை இருத்திக் கொண்டார். மகன் (ராமன்) ஐந்தாண்டுகள் அசுரத்தனமாகத் தயார் செய்து, ஐஐடிக்களில் நல்ல பொறியியல் துறைகளில் நுழையத் தேர்வானான். ஆனால், இயற்பியலே தனது தேர்வு என்பதால், சென்னையை விட்டுத் தொலைவில் உள்ள ஒரு ஐஐடியில் கடினமான ஐந்தாண்டு எம்.எஸ்.சி பயின்றான்.

கணினித்துறை எப்படி உள்ளது என்று தெரிந்துகொள்ள, கலிஃபோர்னியாவில் வேலையில் இருந்தான். ஒரு நாள் வேலையை உதறிவிட்டு, உலகின் சிறந்த வானியல் இயற்பியல் விஞ்ஞானியிடம் உதவியாளனாகச் சேர்ந்தான். ஈராண்டுகள் பணிக்குப்ப்பின், அவரது பாராட்டுடனும், பரிந்துரையுடனும் உலகின் பிரமிக்கத்தக்க அறிவியல் பல்கலைக்கழகத்தில் வானியல் துறையில், சூரியனில் இருந்து உமிழப்படும் சிலவகைக் காந்தக் கதிர்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளான். தற்போது அங்கேயே பணியாற்றவும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.

ராமனை அவனது 8ம் வகுப்பு முதல் நான் அறிவேன். தன் தந்தையைப் போலவே கடின உழைப்பாளி. தமிழக அரசின் எந்தச் சலுகையும் கிட்டாதவன். எதிர்பார்க்காதவன் என்றும் சொல்லலாம். சில ஆண்டுகளில் ஏதாவது ஒரு கண்டுபிடிப்பைச் செய்யவும் வழி உண்டு. தனது கல்வியின் தரத்தாலும், ஐரோப்பிய ஆராய்ச்சிப் பல்கலைகளில் அவனுக்குள்ள வரவேற்புகளாலும் அவன் தமிழகத்தில், ஏன் பாரதத்தில் உள்ள எந்தப் பல்கலையிலும் பணியாற்றப்போவதில்லை.

தற்போது இஸ்ரேலியப் பல்கலையிலும் ஆராய்ச்சி செய்ய அழைப்பு வந்துள்ளது. எண்ணிப் பார்க்க முடியாத வசதிகள். (வசதிகள் எனில் பணம் அன்று.) தாய்ப் பல்கலையில் வேலையில் இருந்தாலோ, உலகின் முன்னணி வானியல் சாஸ்திர நிபுணர்களுடன் தோளோடு தோள் பணியாற்றும் வாய்ப்புகள். Spoilt for choices என்பது போல் உள்ளது அவனது நிலை.

ஒருவேளை அவன் ‘அண்ணா பல்கலையில் பணி செய்ய விருப்பம்’ என்று வருகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். இஸ்ரேலிய வானியல் ஆராய்ச்சிக்கூடத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை நாம் அவனுக்குக் கொடுப்போமா? அவனது தகுதிகளில் நாம் முதலில் தேடப்போவது அவனது சாதியைத் தவிர வேறென்ன? அவனை வெளிநாட்டு ஆராய்ச்சிப் பல்கலைக்கு விட்டுக்கொடுப்பதால் நமக்கு லாபம் இல்லை என்றாலும், அவன் வெளியில் பணியாற்றினாலே அவனால் உலகிற்கு லாபம் கிட்டும். ராமன் எஃபக்ட் – 2 என்று நாளை ஒரு கண்டுபிடிப்பு வந்தால் பெருமையடித்துக்கொள்ள மட்டும் நமக்கு உரிமை உண்டு.

இன்னும் எத்தனை நட்சத்திரங்களை மாற்றான் வானில் ஒளி விச அனுமதிக்கப் போகிறோம் ?

சிந்திப்போம்.

(பெயர் மாற்றப்பட்டுள்ளது)

ராக்கெட்

யார் என்ன சொன்னாலும்,கிஞ்சித்தும் காதில் போட்டுக் கொள்ளாமல் போய்க்கொண்டேயிருக்கிறார்கள்.

முன்னர் அரசு வேலையென்றால் பின்னர் அது மறுக்கப்பட்டவுடன் வங்கிகளிலும்,வடக்கே தனியார் நிறுவனங்களிலும் பெருமளவில் நுழைந்தார்கள்.பின்னர் அரசு வங்கிகளில் இல்லைஎன்று ஆனவுடன்,தனியார் வங்கிகள். இன்னொரு குழு பெருமளவில் வெளி நாடு சென்றது.காரணம் கல்வி.அந்த நேரத்தில் வந்து சேர்ந்த ஐ.டி.துறைபெருமளவில் கைகொடுத்தது.இன்று உலகெங்கிலும் பரவியுள்ளார்கள்.

போகும் இடங்களில் எல்லாம் தங்களைநிறுவிக்கொண்டேஇருக்கிறார்கள்.வெறி,வேகம் என்றெல்லாம் இல்லை.எப்போதும் செய்வதையே,இன்னும் கொஞ்சம் முனைப்புடனும்,ஊக்கத்துடனும் செய்துகொண்டேயிருக்கிறார்கள்.செய்யச் செய்ய மேலேறிக்கொண்டேயிருக்கிறார்கள்.
போகும் இடங்களில் எல்லாம் கலைகளில் ஈடுபடுகிறார்கள்.ஏதோவொரு சங்கீதம்,நாட்டியம்,வாத்யம் என்று தொடர்ந்து செயலாற்றிக்கொண்டேஇருக்கிறார்கள்.எந்த நாட்டிலும் இந்தியச் சங்கீதக் குழுவென்றால் ஓரிருவராவது தென்படுவர்.ஏதோவொரு விதத்தில் செயலாற்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.நுண் கலைகளையும் தங்களுடன் மேலெடுத்துச் சென்றுகொண்டேயிருக்கிறார்கள்.
இதில் தங்களுக்குள் சண்டை,பொறாமையென்று எல்லாமும் உண்டு. ஆனாலும் கலை,கோவில்,பண்பாடு என்றால் எல்லாநாடுகளிலும் ஒன்றுகூடிவிடுகிறார்கள்.

தற்போதெல்லாம் தங்களுக்குத் தாய் நாட்டில் இழைக்கப்படுவதாகக் கூறப்படும் எந்த அநீதியைப் பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்வதில்லையென்று தோன்றுகிறது.ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு மாதிரி எதிர்ப்பு இருக்கும்.இப்போது வேறொரு மாதிரி.அவ்வளவுதான் என்கிற நினைப்பாக இருக்கலாமென்று நினைக்கிறேன்.எதையும் மாற்றவியலாது,எனவே,அதற்காக
எதற்கும் தயாராகவும்,எந்த நிலையிலும் கையைஊன்றிக் கொண்டு மேலெழும்பவும் தயாராக இருக்கிறார்கள்.புதியதாகவொரு தேர்வு வருகிறதென்றால்,ஈராண்டுகளுக்கு முன்னர் திட்டமிடத் துவங்குகிறார்கள்.புதிய வாய்ப்புகள் தோன்றும் பட்சத்தில் அதைப் பற்றிய விழிப்புணர்வையேற்படுத்திக் கொண்டு,அவற்றுக்கான தயாரிப்புகளில் இறங்குகிறார்கள்.குறிப்பாகக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.

இவர்களில் பெரும்பாலோர் தற்போதைய பள்ளிக் கல்வியை நம்பாதவர்களாகத் தென்படுகின்றனர். பள்ளியென்று பெயருக்கு ஒன்றில் போட்டு,பின்னர் அத்தனைத் தேர்வுகளுக்கும் உதவும் பயிற்சி மையங்களில் சேர்க்கின்றனர்.வீடுகளில் அவற்றைப் பற்றிய பேச்சாகவேயுள்ளதைக் காண முடிகிறது.

இவர்கள் தங்களுக்குள் அதிகம் அரசியல் பேசிக்கொள்வதில்லை.முக்கியமாகப் பெரும்பாலானோர் சமூக ஊடகங்களில் இல்லை.அதையொரு அழுக்காகவேயெண்ணுகின்றனர்.பேஸ்புக்கை,இந்தக் குழுவில் உள்ள பெரும்பாலோர் பெரும் தீட்டு போலவேபார்க்கின்றனர்.’நான் அதில் எல்லாம் இல்லை.எதாயிருந்தாலும் மெயில் அனுப்புங்கோ’என்று சொல்பவர்களாக இருக்கின்றனர்.
இவர்களைப் பின்பற்றி,இன்னும் சில குழுக்களும் இப்படியேசெய்ய முனைவதைக் காண முடிகிறது.

வேகமாக மாறிவரும் உலகில் தங்களையின்னமும் மேம்மடுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இன்னும் சில சமூகங்களிலும் பரவி வருவதைக் காண முடிகிறது.இந்தப்போக்கு நாடு என்னும் அளவில் நன்மையளிக்கும் செயல்பாடே.

எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல்,கலை,பண்பாடு,கல்வி என்று மேம்பாடான செயல்களில் எல்லாச் சமூகங்களும் ஈடுபட வேண்டும்.அதுவேஅனைவர்க்கும் நன்மையளிப்பதாக அமையும்.

‘வாழிய செந்தமிழ்,வாழ்க நற்றமிழர்,வாழிய பாரத மணித்திரு நாடு.’

ஐயங்கார் பூணல் இருக்கா ?

தலை ஆவணி அவிட்டம்
தலை ஆவணி அவிட்டம்
avani avittam
ஆவணி அவிட்டம் சிங்கப்பூர்

தலைப்பில் உள்ள கேள்வியைக் கேட்க நேர்ந்தால் நீங்கள் சிங்கப்பூரில் இருக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளவும்.அதுவும் ஆவணி மாதம் ஸ்ரவண நட்சத்திரம் அன்று ( ‘ரக்ஷா-பந்தன்’ என்றால் நமக்குப் புரியலாம் ). ஸ்மார்த்தர்களுக்கும், வைஷ்ணவர்களுக்கும் தத்துவத்தில் மட்டும் அல்ல பூணூலில் கூட வித்யாசம் உள்ளது. வைஷ்ணவர்கள் பூணூல் கொஞ்சம் தடிமனாக இருக்கும்.

வேதக் கல்வி துவங்கும் நேரத்தைக் குறிப்பது இது. ஒவ்வொரு வருடமும் வேதம் பயிலத் துவங்கும் நாள் இது.

பிரும்மாவிற்கு வேதம் கிடைத்த நாள் என்றும் சொல்கிறார்கள். வேதத்தின் பிறந்த நாள் என்று சொல்லலாம் போல் தெரிகிறது. 

ஆனால் தற்போது வெறுமெனே பூணூல் மாற்றிக் கொள்ளும் ஒரு நிகழ்வாக இந்தியாவில் மாறியுள்ளது. இருப்பினும் சிங்கையில் முறையாக இன்று வேதாரம்பம் என்று கொண்டாடப்பட்டு, புதிய பூணூல் அணிந்தபின் வேத பாடம் துவங்கியது.

மிகவும் சிரத்தையாக நடந்தது இன்று. வாத்தியார்கள் ரயில் வண்டியைப் பிடிக்க ஓட வில்லை. நிறுத்தி, நிதானமாக, உச்சரிப்புக்கள் சரியாக ஒரு மணி நேரம் நடந்த நிகழ்வு. மொத்தம் மூன்று கோஷ்டிகள். காலை 6 மணிக்கு , 8 மணிக்கு,  9 மணிக்கு என்று மூன்று. அது தவிர உப-நயனம் ஆன முதல் வருடம் நடக்கும் ‘தலை ஆவணி அவிட்டம்’ ( இதற்கும் திரைப்பட நடிகருக்கும் தொடர்பில்லை) கொண்டாடப் பல குழந்தைகள் வந்திருந்தனர்.  ( படம் மேலே ).

வேதக் கல்வி பற்றிச் சொன்னேன். பழைய காலத்தில் கல்வித்திட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு பருவங்களாகக் கொண்டிருந்தனர். செமெஸ்டர் என்று நாம் அறிவது அது தான். முதல் செமெஸ்டர் ஐந்து மாதங்கள் கொண்டது. அதற்கு ‘உபாகர்மம்’ என்று பெயர். இரண்டாவது செமெஸ்டர் ஏழு மாதங்கள் கொண்டது. அதற்கு ‘உத்ஸர்ஜனம்’ என்று பெயர். 

இன்று ‘யஜுர்-உபாகர்மம்’ துவங்கும் நாள். அதாவது யஜுர் வேதக் கல்வி துவங்கும் நாள். அடுத்த ஐந்து மாதங்கள் வேதம் பயில வேண்டும். பின்னர் ‘உத்ஸர்ஜனம்’ என்று வேதக் கல்வியை விட்டு விட வேண்டும். அதாவது வேதம் தவிர்த்து மற்ற கல்விகள் கற்கத் துவங்க வேன்டும். மஹாபாரதத்தில் துரோணர் முதலான முனிவர்கள் வில் வித்தையைக் கற்றுக் கொடுத்தது இப்படி ‘உத்ஸர்ஜன’ காலத்தில் அவ்வித்யைகளைக் கற்றுக் கொண்டபடியால் தான்.

ஒரு மாதிரியாக ‘சகல-கலா-பண்டிதர்களாக’ ஆக்குவதற்காக அக்காலத்தில் கல்வி முறை இருந்துள்ளது. 

நாளை முதல் வெற்றுப் பாடம் தான் – அதான் ஸார் – வயிற்றுப் பாடம், ஆபீஸ் வேலை. வெறும் சோற்றுக் கல்வி என்று ஆன பின் வேறு என்ன செய்வது ?

 சென்ற ஆண்டு நடந்த ஆவணி அவிட்டம் பற்றி நான் எழுதிய பதிவு இதோ.

சில நீதிகள் ..

தர்ம வாசிஷ்டம் கூறுவது :

நன்கு கற்றறிந்த பிராமணன், சிறுவர், குருவுடன் தங்கிப்பயிலும் மாணவர், பெற்றோர் வீட்டிற்கு திரும்ப வந்துவிட்ட விதவைப் பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள், அரசனின் ஊழியர்,வேலை ஆட்களின் மனைவி – இவர்களிடம் எப்போதும் வரி வசூல் செய்யக் கூடாது.

மஹா பாரதம் –உத்தியோக பர்வம் – விதுர நீதி கூறுவது :

கல்வி அறிவு நிறைய இருந்தும் அனுஷ்டானம் இல்லாத பிராமணனை விட கல்வி அறிவு இல்லாத ஒரு பாமரனே சிறந்தவன்.

திருடன், கொடுமையானவன், குடிகாரன்,கருக்க்கலைப்பு ஏற்படுத்துபவன்,பிரம்மச்சரியத்தை மீறும் மாணவன்,தன்னுடைய வேத அறிவை விற்பவன்  – இவர்கள் மிகவும் நெருங்கியவர்களாக இருந்தாலும்,தண்ணீர் பெறவும் அருகதை அற்றவர்கள்.

மனு தர்ம சாஸ்திரம் கூறுவது :

திருட்டின் தன்மை அறிந்து திருடுகிற சூத்திரனுக்கு அந்த திருட்டுக்கு உண்டான தண்டனையைப் போல் 8 மடங்கு தண்டனை விதிக்க வேண்டும்.அதே குற்றத்தைச் செய்யும் பிராமணனுக்கு 64 மடங்கு அல்லது 100 மடங்கு அல்லது 128 மடங்கு வரையிலும் தண்டனை விதிக்கலாம்.ஏனென்றால் திருட்டினால் வரும் தோஷத்தை பிராமணன் அறிந்திருக்க வேண்டும்.

————————————————————————————————————————————————–

இவைகளுக்கு மேல் நான் சொல்ல ஒன்றும் இல்லை.

%d bloggers like this: