சிதம்பரம் தீக்ஷிதர்கள் விவகாரம்

சிதம்பரம் தீக்ஷிதர்கள் வழக்கில் கருத்துக் கூறியுள்ள ‘பெரியவர்கள்’ வழக்கம் போல் பழைய பல்லவியையே பாடியுள்ளனர். அதான் சார் ‘பார்ப்பன ஏகாதிபத்தியம்’ இன்ன பிற. இது உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்புக்குப் பின்னும் அப்படியே பேசியுள்ளனர்.

சரி, என்னதான் இவர்கள் பிரச்சனை ? தீக்ஷிதர்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியா அல்லது நடராஜர் கோவில் முன்னேற வேண்டுமே என்று தவறுதலாக ஏதாவது அக்கறை வந்து விட்டதா ? அல்லது தமிழ் நாட்டில் உள்ள எல்லாக் கோவில்களையும் செம்மையாக உயர்த்தி விட்டோமே அது போல் சிதம்பரம் கோவிலையும் செம்மைப் படுத்த வேண்டும் என்று இந்து சமய அற நிலையத்துறைக்கு அக்கறை வந்துவிட்டதா என்றெல்லாம் நீங்கள் குழம்ப வேண்டாம்.

அது எப்படி பார்ப்பான் ஒரு கோவிலுக்கு ஏகோபித்த உரிமை கொண்டாடுவது என்ற ‘செக்யூலர்’ செக்கு மாட்டுச் சிந்தனை. வேறொன்றுமில்லை.

இதில் விசேஷம் என்னவென்றால் தீக்ஷிதர்கள் பார்ப்பனர்கள் என்று கருதப்படுவதில்லை. இவர்கள் மற்ற ப்ராம்மணர்களுடன் திருமணம் முதலிய உறவுகள் வைத்துக்கொள்வதில்லை. 3000 குடும்பங்கள் என்று அக்காலத்தில் இருந்துள்ளனர். தற்போது 350 குடும்பங்களே உள்ளனர். இருந்தும் மற்ற அந்தணக் குடும்பங்களுடன் அவர்கள் உறவுகளில் இல்லை.

இன்னொன்றும் கவனிக்க வேண்டும். மற்ற ப்ராம்மணர்களும் சிதம்பரம் கோவிலுக்குள் பூசை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. சிதம்பரம் மட்டும் அல்ல. வேறு எந்தப் பாரம்பரியக் கோவிலிலும் கூட தீக்ஷை பெற்றவர்களே பூசை செய்ய முடியும். அதற்காக ஆகம சாஸ்திரங்களில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

தீக்ஷிதர்களை விடுங்கள். ஒரு பெருமாள் கோவில் பட்டாச்சாரியாரை எடுத்துக்கொண்டால் கூட அவரும் தன் குடும்பத்தில் வேறொரு பட்டாச்சாரியார் குடும்பத்தில் தான் திருமண சம்பந்தம் செய்துகொள்வாரேயொழிய மற்ற அந்தணக் குடும்பங்களில் செய்துகொள்ள மாட்டார். இதுஅவர்களுக்குள் உள்ள கட்டுப்பாடு.

இன்னொரு விஷயம். கோவிலில் மிகப் பெரிய செலவில் கும்பாபிஷேகங்கள் நடத்தும் பெரிய தனவந்தர்கள் கூட, அந்தணர்களாக இருப்பினும், கோவிலில் கர்ப்பக்கிருகத்துள் செல்லத் தடை உள்ளது. ஏனெனில் அவர்கள் தீக்ஷை பெறவில்லை என்பதே அது. தீக்ஷை பெற சாதி முக்கியமில்லை. ஆசார அனுஷ்டானங்கள் அவசியம். இது பற்றிப் பேசினால் அதற்கு என்று ஒர் தனிப் பதிவு போட வேண்டும்.

சிதம்பரம் கோவிலுக்கு வருவோம்.

தீக்ஷிதர்களிடமிருந்து கோவிலைப் பிடுங்க வேண்டும் என்று அரசாங்கங்கள் பல முறை முயன்றுள்ளன. ஆங்கில அரசு காலம் தொட்டே இந்த முயற்சிகள் நடந்துள்ளன. அக்காலம் தொட்டே வழக்குகள் மூலம் அரசு கோவிலை எடுத்துக்கொள்ளப் பார்தது. முதல் வழக்கு 1885-ல் போடப்பட்டதாக அறிகிறேன். அந்தத் தீர்ப்பு தீக்ஷிதர்களுக்கு எதிராக அமைந்தது. பின்னர் 1925-ல் இந்து அறநிலையத் துறை அமைக்கப்பட்டது. அது கோவிலைத் தன் ஆளுமையில் கொண்டுவர முயற்சி செய்தது. சில அதிகாரங்கள் அரசிடம் இருக்கும் என்று அறிவித்தது. பின்னர் 1951-ல் அரசு தனியார் கோவில்களை அரசுடைமையாக்க முயற்சி செய்தது. தீக்ஷிதர்கள் எதிர்த்தனர். 1959-ல் சென்னை உயர் நீதிமன்றம் தீக்ஷிதர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. அரசு எடுக்க முடியாது என்றும் தீக்ஷிதர்கள் தனியான அமைப்பினர் என்றும் அரசு எடுத்துக்கொள்வது மக்களின் வழிபாட்டுச் சுதந்திரத்தில் கை வைப்பது போன்றது, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அறிவித்தது. கோவில் தப்பியது.

அரசு விடவில்லை. 1982-ல் மீண்டும் எடுக்க முயற்சி. 2009-ல் தி.மு.க. அரசு மீண்டும் எடுக்க முயற்சி. தீக்ஷிதர்கள் வழக்கு தொடர்ந்தனர். 2009-ல் சென்னை உயர்நீதி மன்றம் தீக்ஷிதர்களுக்கு எதிராகத் தீர்ப்பளித்தது. ஆனால் இது 1952-ல் தில்லி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இருந்தது. எங்காவது மாநில நீதிமன்றம் தில்லி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்க முடியுமா ? தமிழ் நாட்டில் எதுவும் நடக்கும். ஆனால் 2014-ல் தில்லி உச்ச நீதி மன்றம் 2009 சென்னை நீதி மன்றத்தைக் கடுமையாகச் சாடி ஒரு தீர்ப்பளித்தது. ‘நீதிமன்ற ஒழுங்கீனம்’  (Judicial Indiscipline ) என்று கடிந்துகொண்டு கோவிலை அரசின் பிடியிலிருந்து விடுவித்தது.

இதில் பார்ப்பன சூழ்ச்சி எங்கே வந்தது ?

இது ஒரு நல்ல தீர்ப்பு. இதை ஒட்டி இன்னும் பல வழக்குகள் தொடரப்போவதாகத் தெரிவிதுள்ளார் திரு.சுப்பிரமணியம் சுவாமி. தெய்வம் நின்று தீர்ப்பு சொல்லும் என்று புரிகிறது.

இது ஏன் ஒரு நல்ல தீர்ப்பு ? ஒரு ஆழ்வார் மங்களாசாஸனம் செய்த கோவிலுடன் நெருங்கிய தொடர்புடையவர்களுடன் அருகில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் ஒன்றை என்னால் ஆணித்தரமாகக் கூற முடியும்.

அரசு கோவிலில் இருந்து வெளியேறினால் கோவிலுக்கு நல்லது. ஏன் ?

  • கோவிலின் ‘ஈ.ஓ’ என்ற பெயரில் குப்பை கொட்டும் (உண்மையிலேயே குப்பை தான் ) ‘நல்லவர்’களுக்கு அவர்களது வாகனங்களுக்குப் பெட்ரோல் போட பணம் தர வேண்டியதில்லை.
  • தேர்த் திருவிழா மற்றும் உற்சவங்களுக்கு உள்ளூர் எம்.எல்.ஏ.க்களுக்கு ‘அழைப்பு’ தந்து அவர்களது பரிவாரங்களுக்கு ‘அழ’ வேண்டியதில்லை.
  • கோவிலில் பாழ் பட்டுக் கிடக்கும் குளத்தைக் கண்டு கொள்ளாத ‘அற’ நிலையத் துறை, நல்லவர்கள் கூடி குளம் வெட்டி நீர் நிறைந்த பின் மீன் ஏலம் விட மட்டும் வரும் போது பொங்கி எழுந்து இரத்த அழுத்தத்தை ஏற்றிக்கொள்ள வேண்டியதில்லை.
  • கோவிலில் ஒரு சின்ன மர வேலை செய்ய வேண்டும் என்றால் கூட கோவிலின் மரத்தை வெட்ட வனத்துறை முதல் உலக வங்கி வரை சென்று ‘அழ’ வேண்டியதில்லை.
  • வருடாந்திர உற்சவ அழைப்பிதழ்களில் எம்.எல்.ஏ, ஈ.ஓ. முதலான பேர்வழிகளின் திரு நாமத்தைப் போட வேண்டியதில்லை.
  • உற்சவ மூர்த்திக்கு இணையாக இவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டியதில்லை.

சரி. அப்படியென்றால் சிதம்பரம் கோவிலில் நிதி முறைகேடு முதலியன நடைபெறவில்லையா ? என்ற கேள்வி எழுவது இயற்கையே.

சான்றோர் குழு ஒன்று அமைக்கப்பட்டு அது கோவிலின் வரவு செலவுகளைக் கவனித்துக்கொண்டிருக்கிறது. அதன் வரவு செலவுக் கணக்கை ஆண்டுதோறும் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று இருந்தால் போதாதா ? வருமான வரி கட்ட வேண்டும் என்பது போன்ற கோட்பாடுகள் இருந்தால் போதுமே ? தணிக்கை செய்தால் போதாதா ?

இது போகட்டும். தீக்ஷிதர்களின் சாதி விஷயம் வருவோம். ‘தில்லை வாழ் அந்தணர்கள்’ என்று கொண்டாடப்பட்ட இவர்கள் ஸ்மார்த்த பிராம்மணர்களா என்றால் இல்லையாம். இவர்கள் ஆதி சைவர்களாம். இப்படி ஒரு புத்தகம் கூறுகிறது. ‘திராவிட இயக்கம்’ கவனத்திற்கு.

ஆனால் ஒன்று. தீட்சிதர்கள் சிதம்பரம் கோவிலைக் காக்க பல தியாகங்கள் செய்துள்ளனராம். 13-ம் நூற்றாண்டில் கோவிலுக்குள்ளேயே வைத்து கொல்லப்பட்டனர். அவர்கள் பல சிலைகளைக் கோவிலுக்குள் மறைத்து வைத்துத் தங்கள் உயிரைக்கொடுத்துக் காப்பாற்றினர் என்று சமூக ஆய்வாளர் அரவிந்தன் நீலகண்டன் கூறுகிறார். பின்னர் ஆங்கில அகழ்வாராய்ச்சியாளர்கள் அந்தச் சிலைகளைக் கண்டுபிடித்துள்ளனர் என்று ஜாப் தாமஸ் என்பவர் எழுதிய ‘Thiruvenkaadu Bronzes; ( திருவெண்காடு வெண்கலங்கள் ) என்ற நூலில் இருப்பதாகக் கூறுகிறார் அவர்.

ஆக திராவிட இயக்கங்கள் தீக்ஷிதர்களை ஆதரித்தால் யாருடைய கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்று அறிந்துகொள்ள சிதம்பரம் நடராசர் அருள் புரிவாராக.

என்ன ? மற்ற மதங்களின் வழிபாட்டுத் தளங்களா ? அவற்றையும் அரசு எடுத்துக்கொள்ள வேண்டுமா ? என்ன சார், அது மதச்சார்பின்மை இல்லயே ?

வழுக்கி விழுந்தவர்கள்

மோடி திருச்சி வந்ததால் பா.ஜ.க.விற்கு என்ன பலனோ தெரியாது. ஆனால் நமக்கு, சாதாரண மக்களுக்கு, ஒரு நல்ல பலன் கிடைத்துள்ளது.  சிலரது முகமூடிகள் கிழிந்துள்ளன. சிலர் கீழே விழுந்துள்ளார்கள். சிலரது உண்மை சுயரூபங்கள் தெரியத் துவங்கியுள்ளது. ஆனால் அதில் சில வருத்தங்கள் எனக்கு.

மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே ஆர்ப்பரித்து எழுந்த ‘முற்போக்கு’ வியாபாரிகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது முகங்களைக் காட்டத் துவங்கினர்.

இது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் என்றாலும், ஒரு மனிதரது வீழ்ச்சி என்னை ரொம்பவும் துக்கம் கொள்ள வைத்தது. அவர் எழுத்தாளர் ஞாநி அவர்கள். 2G விஷயத்தில் மிகச் சரியாக அலசி உண்மை பேசியவர் ஞாநி. 1988 லேயே கூடங்குளம் அணு உலைக்கு எதிராகக் கோஷம் எழுப்பியவர் ; அன்றிலிருந்து இன்றுவரை அந்நிலையில் இருந்து வழுவாது போராடிவருபவர் ; அந்த இயக்கம் கிறித்தவப் பாதிரியார்கள் வசம் போய் தேசத்ரோக நடவடிக்கை என்னும் அளவில் அவர்கள் செயல்படத் துவங்கியபோதும் தன் நேர்மையான அணுகுமுறையால் தனியாகத் தெரிந்தவர் ஞாநி. ( அணு உலை வேண்டும் என்பதே என் கருத்து. 13,000 கோடி ரூபாயை எள்ளும் தண்ணீருமாக ஆக்க நாம் என்ன அவ்வளவு பெரிய வல்லரசா ? )

அவரது பேச்சுக்களில் ஒரு அறம் இருக்கும். சென்றமுறை அவர் சிங்கை வந்திருந்தபோது சுமார் இரண்டரை மணி நேரம் அவருடன் பல விஷயங்கள் குறித்துப் பேசி இருக்கிறேன். மிகவும் வெளிப்படையான மனிதர். எளிதில் அணுகிவிடக் கூடியவர். எல்லா விஷயங்களிலும் ஒரு தீர்மானமான கருத்து உண்டு அவரிடம். அவற்றில் ஒரு நேர்மையும் ஒரு அவசரம் இல்லாமையும் இருந்தது கண்டிருக்கிறேன். அந்த சந்திப்பு பற்றி இங்கே பதிவிட்டிருக்கிறேன்.

ஆனால், நேற்று மோதி பேசத் துவங்கியதும் முகநூலில் (Facebook) பதிவுகள் போடத் துவங்கிவிட்டார். மோதி ஹிந்தியில் பேசுகிறார், ப.ஜ.க.ஹிந்தி திணிப்பு, பாசிசம் என்கிற ரீதியில் அள்ளித் தெளித்த கோலமாக இருந்தது அவரது பதிவுகள். ஒரு சமயம் பதிவிடுவது ஞாநியா அல்லது வீரமணியா என்று குழம்பும் அளவு இருந்தது நிலைமை.  அப்பதிவுகளில் சில :

ஞாநி சங்கரன்”Modi opens his mouth and Trichy and speaks in ….Hindi. so, if BJP under modi comes to power they will be shameless in imposing hindi. modi knows english. that is the link language promised for the south india by Nehru. but he chooses to speak in hindi. and poor h.raja keeps blinking listening to modi and wondering how to translate this hindi. by speaking in hindi, in one single stroke modi has dug the grave for his party in tamilnadu.i still hope that someone on the dais would tell him to switch over to english. all TN bjp leaders must be feeling like on a mass harakiri.and what they dont understad is speaking few tamil lines written down in hindi will not wash. every north indian leader does that as a ritual. but most of them speak in english if they know english but for BJP using few tamil lines is only tokenism and the real agenda is only hindi. bjp is known for using tokenism with minorities also but the real agenda is hindutva at any cost.”

ஞாநி சங்கரன் “I write in both languages depending on the issue. Since modi Ian all India nuisance, I write about him in English.”

பதிவுகளில் உள்ள அவசரம் என்ன? காழ்ப்புணர்ச்சி என்ன? யாரையோ மகிழ்விக்கச் செய்யும் ஒரு செயல் போல் பட்டது எனக்கு.

ஹிந்தியில் பேசிவிட்டால்தான் என்ன? தமிழ் மொழிமாற்று தான் நடந்ததே. அல்லது ஆங்கிலத்தில் பேசாததால் மோதியின் செய்தி எல்லா மக்களிடமும் போய்ச்சேராதே என்ற கவலையா ?

மோதியைக் கொள்கை ரீதியாக எதிர்ப்பது ஒரு தரம். ஆனால் நாலாந்தர திராவிடர் கழக பாணியில் விமர்சிப்பது அழகா?

மோதி என்ன பேசினார் என்பதைப்பற்றி ஒன்றுமே இல்லை. அவர் தேச ஒற்றுமை, ராணுவ வீரர் மறைவு, இளைஞர் எழுச்சி, வந்தே மாதரம் என்று தேசிய மொழி பேசினார். ஆனால் ஞாநி, வீரமணியின் ஆங்கில ஒலிபரப்பி போல் மிகக் குறுகிய வட்டத்திற்குள் தன்னைச் சுருக்கிக்கொண்டு மோடி தூஷனை, ஹிந்தி அரக்கி ஒழிக என்ற ரீதியில் எழுதியது  ,”அடடே, இவரா இப்படிப் பேசுகிறார்?” என்று நினைக்க வைத்தது. என்ன ஒரு வீழ்ச்சி !

வழுக்கி விழுந்தவர்கள் பட்டியலில் ஞாநி அவர்களைச் சேர்க்க மனம் வரவில்லை. ஆனால் உண்மை வேறாக உள்ளதே !

கமல் சார் ப்ளீஸ் வேண்டாம் ..

Image

உலக நாயகன், பகுத்தறிவுப் பகலவன், காதல் இளவரசன் – இப்படிப் பல முகங்களைக்   கொண்ட தமிழ்த் தாயின் தவப்புதல்வன் கமலஹாசன் ( மன்னிக்கவும் கமல் சார் என்று  தமிழில் அறியப்படுபவர் ), நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது மேதாவிலாசத்தையும், “முற்போக்கு”க் கருத்துக்களையும் ( இந்து மத எதிர்ப்பு என்று புரிந்துகொள்ளவும் ) தெரிவித்து வருபவர் என்பது  நாம் அறிந்ததே.

நாம் அறியாத கமல் ஒருவர் உள்ளார். அவர் தான் தானே திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம், திரை இசை, பாடல் என்று அனைத்திலும் புகுந்து விளையாடுவதாக நம்மை நம்ப வைத்துள்ள கமல். அல்லது அவ்வாறு மற்றவர் அனைவரும் சொல்லுமாறு செய்யக்கூடிய திறமை உடைய மகான் என்று கூறலாமா?  மகான் வேண்டாம். அது இந்து மதத் தொடர்புடைய தொடர். அறிஞர் என்று கூறலாம். தமிழுக்குத் தமிழும் ஆயிற்று, பகுத்தறிவுக்குப் பகுத்தறிவும் ஆயிற்று.

ஆதோவ் கீர்த்தனாரம்பத்திலே … இப்படிப்பட்ட கமல், பல மிருகங்களை ( மன்னிக்கவும் திறமைகளை ) தன்னுள் வைத்துள்ளவராக நாம் நம்பும் கமல், தமிழ் சினிமாவையே ஒரு உயரத்துக்குக் கொண்டு போகத்துடிக்கும் ஒருவர், உலக வரலாற்றிலேயே எடுக்கமுடியாத கதைகளையும் சாத்தியமிலாத உத்திகளையும் புகுத்தித் தமிழ் நாட்டு சினிமாவை உலகம் என்ன சூரியக் குடும்பத்தைவிட அதிக உயரத்தில் கொண்டு செல்லத் துடிக்கும் ஒரு கலைப் பொக்கிஷம், தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்ட கதைகளையும் வழிமுறைகளையும் கையாண்ட அவர் எடுத்த படங்கள் அனைத்தும் காப்பி என்று அறிந்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? வேண்டாம் என்னை அடிக்க வராதீர்கள்.

நான் என்ன செய்வேன். பி.ஆர்.மகாதேவன் என்பவர் எழுதிய “கமலின் கலைப்படங்கள்” என்ற நூலைப் படித்தேன். அதன் விளைவு தான் இது.

‘அன்பே சிவம்’  படம் பார்த்தீர்கள் தானே? வியந்தீர்கள் தானே?  இப்படி கூட ஒரு கதை செய்ய முடியுமா என்று சொக்கிபோனீர்கள்  தானே ! வேண்டும் வேண்டும் உங்களுக்கு வேண்டும். அது “ Planes, Trains and Automobiles” என்ற படத்தின் காப்பியம். எனக்கு என்ன தெரியும்  நான் என்ன உலக நாயகனா என்ன பல உலகப் படங்களைப் பார்ப்பதற்கு?

“விருமாண்டி” பார்த்து அழுதீர்கள் தானே ? இருவழிகளில் ஒரே கதையைச் சொல்வது புதிய பாணி என்று தானே நினைத்தீர்கள்? கமலைக் கட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது தானே ? வேண்டுமையா உங்களுக்கு. “Rushmon” என்னும் படத்தின் காப்பியாம் அது.

அது போகட்டும் தேவர் சாதிக்கும் பறையர் எனப்படும் தலித் சாதிக்கும் தான் தென் மாவட்டங்களில் தகராறு. ஆனால் தேவருக்கும் நாயக்கருக்கும் தகராறு மாதிரி கொண்டு சென்று பல பிரச்சினைகளில் இருந்து பகுத்தறிவுடன் தப்பியுள்ளார். நாயக்கர் சாதி தென் மாவட்டங்களில் மிகவும் சிறுபான்மை இனம். அவர்கள் தேவருடன் மோத மாட்டார்கள்.  இது பற்றியும் ஆசிரியர் எழுதியுள்ளார்.

காப்பி அடிப்பது இருக்கட்டும். அதில் என்ன கொடுமை என்றால் இந்தப்  படங்களில் இருக்கும் ஓட்டைகள் பல. இவற்றை மிகத் தெளிவான முறையில் காட்சிக்குக்காட்சி புட்டுப் புட்டு வைத்துள்ளார் மகாதேவன். எந்த இடங்களில் எல்லாம் முனைந்து இந்து மத தூஷனை  நடந்துள்ளது என்றும், “முற்போக்கு” சொல்ல வந்து வழுக்கி விழுந்த இடங்கள் என்ன, அதி புத்திசாலி என்று நிரூபிக்கத் துவங்கி அடி சறுக்கி விழுந்த நிகழ்வுகள் எங்கே ? என்று பக்கம் பக்கமாய் எழுதியுள்ளார் ஆசிரியர்.

‘பஞ்சதந்திரம்’, ‘ஔவை ஷண்முகி ‘ முதலானவை ஆங்கிலப் படங்களின் காப்பி என்று நாம் அறிந்துள்ளோம். இவை பற்றி You Tube மூலமே அறிந்துகொள்ளலாம் தான். ஆனால் இவைகள் வடிகட்டின மசாலா என்பதால்தானோ என்னவோ ஆசிரியர் இவற்றைப்பற்றிஎல்லாம் எழுதவில்லை.

ஆனால் “குணா”, “குருதிப்புனல்” முதலானவைகளில் லாஜிக்கில் பல ஓட்டைகள் உள்ளன என்பது வெளிப்படை. இவ்வளவு ஆராய்ச்சி செய்யும் ஒரு நடிகர் இதில் போய் கோட்டை விடலாமா என்று நம் மனம் சொன்னாலும் கழலின் ஜால்ரா சத்தத்தின் மிகுதியால் நம் மனமே இவற்றை ஏற்க மறுக்கிறது.

‘நம்மவர் ‘-The Principal, ‘மகளிர் மட்டும்’ –   Nine To Five, ‘குணா’ –  Tie me up, tie me down, ‘வேட்டையாடு விளையாடு’ – Murder of Memories,   ”நள தமயந்தி’ – Green Card, ‘சதி லீலாவதி’ – She Devil என்று பட்டியல் நீள்கிறது.   நமது மன உளைச்சல் கூடுகிறது.

குற்றம் சொல்லலாம் சார், நீங்கள் கதை எழுதிப் பாருங்கள் என்று கேட்கிறீர்களா?  அதற்கும் ஆசிரியர் ஒவ்வொரு படத்துக்கும் புதிய கதையும் எழுதியுள்ளார். தான் எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று. பல கதைகள் நன்றாகவே உள்ளளன. “குருதிப்புனல்”,  “ஹே ராம்” முதலான கதைகளுக்கு மாற்றாக அவர் எழுதியுள்ள கதைகள் நன்றாகவே உள்ளன. கமல் சார் கவனிப்பாராக. உங்களுக்கு ஒரு நல்ல கதாசிரியர் கிடைத்துள்ளார்.

கம்பர் காப்பி அடிக்கவில்லையா ? என்று கேட்கலாம். அவர் மூலக்கதையை மாறவில்லை. தான் புதியதாக ஒரு கதையை உருவாக்கவில்லை. வடமொழி மூலத்தைத் தமிழில் தந்தார் அதுவும் தமிழுக்கே உண்டான பண்புகளுடன் – “பிறன் இல் விழையாமை’ என்ற வள்ளுவர் கூற்று வலியுறுத்தப்படுகிறது.

மணி ரத்தினமும் தான் பல மகாபாரதக் கதைகளைக் காப்பி அடித்தும் உல்டா செய்தும் படம் எடுக்கிறார். ஆனால் அவரிடம் ஒரு நேர்மை இருக்கிறது. கதை தனது என்று அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் கமல் சார் கதை தொடங்கி அனைத்தும் தனதே என்னும்போது “அட அவனா நீயி” என்று எண்ணத் தோன்றுகிறது தானே !

ஆனால் ஒன்று இத்தனை செய்தாலும் அவர் தமிழ் நாட்டின் ஒரு கலைஞன். அந்த அளவில் அவரை வாழ்த்துவோம்.

ஒரே ஒரு வேண்டுகோள் : இனிமே இந்த மாதிரி “சுட்ட” கதை வேண்டாம் சார். நமக்கு மத்தது வரல்லே. நடிக்க மட்டும் வருது. அதோடு விட்டுடுங்களேன், ப்ளீஸ் !

பூ விற்ற காசும் பகுத்தறிவும்..

அலட்சியம், அவநம்பிக்கை, நேர்மையின்மை, அரசாங்கத்தின் மெத்தனப் போக்கு, ஆட்சியாளர்களின் எதேச்சாதிகாரம்,அதிகாரிகளின் நியாயமற்ற நடவடிக்கைகள், ஊழல், பொறுக்கியெடுத்த கயவர்கள் அரசின் ஆட்சிப்பணிகளில் குறுக்கிடுதல் – இப்படியே பார்த்துப் பார்த்துப் பழகிவிட்ட நமக்கு மோடியின் நிர்வாகத் தெளிவு, ஆட்சியில் ஊழலின்மை, முன்னேற்றம் என்பது பற்றிய பேச்சே எப்போதும் பேசுதல், நம்பிக்கை, எதிர்காலம் பற்றிய ஒரு புரிதல் கலந்த அணுகுமுறை, சாதி சார்ந்த அரசியல் செய்யாமல் இருத்தல் — இவற்றை எல்லாம் பார்த்தால் சற்று வியப்பாகத்தான் இருக்கும். அதனாலேயே ஆங்கில ஊடகங்களால் பழிவாங்கப்படுகிறார் மோடி.

மோடி பற்றி வசை பாடும் வானம்பாடிகள் என்ன கூறுகிறார்கள் ? அவர் ஊழல் செய்தார் என்றா ? அவர் பணம் சுருட்டினார் என்றா ? குடும்ப அரசியல் செய்கிறார் என்றா ? இல்லை.

இவை அனைத்தும் இல்லாமல் அரசு புரிகிறார் என்பதால்தான் அவர் மீது குற்றச்சாட்டு.

குற்றம் சாட்டுபவர்கள் யார் ? மகாத்மா காந்தியும், காமராஜருமா ? இல்லையே ? குற்றம் சாட்டுபவருக்கும் அவ்வாறு செய்ய ஒரு அருகதை வேண்டாமா ?

மின்சார நிர்வாகத்தில் இந்தியா எங்களிடம் கற்க வேண்டும் என்கிறார். தவறு என்ன ? குஜராத்தின் மின் நிலையங்கள் உற்பத்தித் திறன் (Plant Load Factor) இந்திய சராசரியை விட உயர்ந்தே உள்ளதே ! மின் மிகு மாநிலமாக உள்ளதே ( கடந்த பத்து ஆண்டுகளில் ). அது ஒரு தவறா?

இடது சாரி சார்ந்த கருத்தாக்கங்கள் இருக்கலாம், அரசுகள் வரலாம், காங்கிரஸ் போன்ற இடதும் வலதும் இல்லாத ஒரு குழப்ப அரசும் வரலாம் ஆனால் தேசிய நலன் கருதியினும் ஒரு வலது அரசு வரக்கூடாது என்பது ஓர் தேசத் துரோக எண்ணம்.

அவரது பொருளியலைப் பற்றியும், நிர்வாகத் திறன் பற்றியும் ஆட்சியில் உள்ள நேர்மை பற்றியும் சிங்கபூர் மற்றும் மேற்கத்திய நாடுகளின் அரசுகள் வழங்கியுள்ள நற்சான்றுகள் பல. ராஜீவ் காந்தி அறக்கட்டளை சோனியா காந்தியினால் நடத்தப்படுகிறது.அது முதற்கொண்டு குஜராத் மிகச்சிறந்த மாநிலம் என்று விருது வழங்கியுள்ளது. அது தவிர ஐக்கிய நாடுகள் சபையும்.

இது எதுவுமே போதவில்லை என்றால், கீழே உள்ள இணைய தளத்தைப் பார்க்கவும்.
http://www.gujaratindia.com/state-profile/awards.htm

ஆனால் மோடி மோசமானவர்,  இந்து மத அடிப்படைவாதி,  ஆதிக்க குணம் கொண்டவர், சிறுபான்மையினரின் எதிரி என்று  கூறுபவர்கள் அவர் ஆங்கில மீடியாவின் பாகற்காய் என்பதால் தான்

. இவர் அமெரிக்க, சீன மற்றும் ஜப்பானிய தொழில நிறுவனங்களின் நண்பன். அமெரிக்காவின் அறிவுஜீவிகளின் போலி மதச்சார்பின்மையின் எதீர்வினை. இந்திய இடது சாரி அறிவுஜீவிகளின் வாழ்வாதாரம் என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம்.

இப்படிப்பட்ட ஒரு மனிதர் அமெரிக்காவிற்கு வரக்கூடது. சமீப காலத்தில் அவரது வீடியோ பேச்சு கூட ஒளிபரப்பாகக்கூடது என்பது அமெரிக்க பல்கலைக்கழகங்களின் தீர்மானம்.

ஆனால் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் அவரை வந்து சந்திக்கிறார்கள். குஜராத்தில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய உதவ வேண்டுகிறார்கள்.

நேற்று அமெரிக்க கார் நிறுவனம் போர்ட் ( Ford ) குஜராத்தில் ஒரு கார் தொழிற்சாலை  துவங்க ஒப்பந்தம் போட்டுள்ளார்கள்.

ஆக இந்த மோடி எதீர்ப்பும் நமது பகுத்தறிவு போலத்தான் போலே. கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு இரவில் ஊர் அடங்கினபிறகு சாமி கும்பிடுவது போல்  வெளியில் மோடி எதிர்ப்பு ; உள்ளே அவரது மாநிலத்தில் முதலீடு.

பூ விற்ற காசு மணக்குமா நாய் விற்ற காசு குரைக்குமா?

அஞ்சா நெஞ்சரே, கவலை வேண்டாம்!

மத்திய அரசில் இருந்து விலகுவது பற்றி தன்னிடம் விவாதிக்கப்படவில்லை என்று அழகிரி வருத்தம் தெரிவித்துள்ளார். கவலை வேண்டாம் தலைவரே ! மிரட்டுவதும் பல்டி அடிப்பதும் நமக்கு புதுசா என்ன? ஒரு வாரம் பொறுங்கள். கனிமொழி மீது மீண்டும் விசாரணை துவங்கும். அப்போது ‘மதவாத ஹிந்துத்வா சக்திகளை’ விலக்கி, மதச்சார்பின்மையை நிலை நிறுத்த தியாகச் செம்மல் அன்னை சோனியா அவர்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம் உண்டாகும்.

அப்போது மீண்டும் மத்திய மந்திரி பதவி கிடைக்கும். நீங்களும் மதுரையில் ஓய்வு எடுக்கலாம்.

காலம் விரைவில் மாறும், உங்கள் கவலைகள் எல்லாம் தீரும்.

%d bloggers like this: