நெஞ்சு பொறுக்குதில்லையே

மாணவர்களே, உங்களை அரசியல் பக்கம் திருப்ப எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், தேச துரோகி ஒருவனது ஈடச் செயல் கண்டு, கொதித்து, அவனை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்பதற்காக இன்று இதைப் பற்றி எழுதுகிறேன்.

அவன், இவன் என்று ஏக வசனத்தில் எழுதுவது இதுவே முதல் முறை. அவனுக்கு என்னை விட ஒரு வயது அதிகம். அவ்வளவு தான். ஆகையால் அவன் என்றால் தவறீல்லை.

ஒருவேளை படித்தவனாக இருந்தால், அறிவாளியாக இருந்தால், சரஸ்வதி கடாக்ஷம் பெற்றவனாக இருந்தால், வயதில் குறைந்தவனாயினும் மரியாதை செய்ய வேண்டும். அதுவும் இவனுக்கு வரவில்லை. சரஸ்வதியும் அவனைக் கண்டு ஓடி ஒளிந்துகொண்டாள்.

ஆனால், ஊர்ப்பட்ட சொத்து உள்ளது, எல்லாம் அப்பாவும், அம்மாவும், பாட்டியும் சேர்ந்து ஊரை அடித்து உலையில் போட்டு அடித்த கொள்ளையால் வந்த பணம். அது கொடுக்கும் திமிர் மட்டுமே உள்ள, சாதாரண அறிவு கூட அற்ற, சுய புத்தி வேலை செய்யாத, எடுப்பார் கைப்பிள்ளையாகவே ஆள் மட்டும் வளர்ந்துவிட்ட ஒரு பணக்கார தடித் தாண்டவராயன் என்பதால் அவனை ‘அவன்’ என்று சொல்வது தவறில்லை.

அவன் என்ன செய்துள்ளான் என்பதைப் படத்தைப் பார்த்தாலே தெரியும். இன்று #yogaday2019. உலகெங்கிலும் உள்ள நாடுகள் யோகாவைக் கொண்டாடுகின்ற்ன. இஸ்லாமிய நாடுகள், கிறித்தவ நாடுகள், பவுத்த, ஷிண்டோ, கடவுள் இல்லை நாடுகள் கூட யோகாவைக் கொண்டாடி, இன்று தத்தமது நாடுகளில் நடந்துள்ள் யோக உற்சவங்களைக் குறித்துப் படங்களை வெளியிட்டுள்ளன.

உலக அளவில், பிரதமர் மோதியின் முயற்சியால் யோகாவும், அதனால் பாரதமும் பெரும் புகழாரத்துடன் போற்றப்படுகின்றன.

@rahulgandhi on Yoga Dayஆனால், இந்த நாட்டில் பிறந்து, இந்த நாட்டை ஆள வேண்டும் என்று தகுத்திக்கு மீறி ஆசைப்பட்ட அந்த முழு முட்டாள், இந்த நாட்டையும், நாட்டக் காக்கத் தம் உயிரையே தரத்துணிந்துள்ள வீரர்களையும், அவர்களுக்கு உற்ற துணையாக நின்று தேசத்தைக் காக்கும் நாய்களையும் இழிவு படுத்தும் விதமாக ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளான். ராணுவ நாய்களும், வீரர்களும் யோகா செய்யும் படத்தை வெளியிட்டு, ‘இதுவே புதிய பாரதம்’ என்று கேலியாக வெளியிட்டுள்ளான்.

பிறந்த நாட்டின் புனிதத்தையும் மதிக்கத் திராணியில்லை, நாட்டைக் காக்கும் வீரர்களையும் மதிக்க வக்கில்லை, ராணுவ வீரர்களுக்கு உறுதுணையாக நின்று பாரதத்தைக் காக்கும் நாய்களின் சேவையையும் தெரிந்துகொள்ளும் அளவிற்கு அறிவில்லை. இப்படி எந்தத் தகுதியும் அற்ற ஒரு அரை வேக்காடு தேசத்தை ஆள வேண்டும் என்று தேர்தலின் போது கத்திய கத்து இன்னமும் காதில் ஒலிக்கிறது.

பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் நற்றவ வானினும் நனி சிறந்ததுவே என்றான் பாரதி.

தேசத்தையும் மதிக்கத் தெரியாது, ராணுவத்தையும் போற்றத் தெரியாது. அப்புறம் என்ன கண்றாவிக்கு நாட்டை ஆளத் துடிக்க வேண்டும்?

தேசத்தை இழிவு படுத்துவதைப் பார்த்துக் கொண்டு வாளாவிருப்பதெப்படி? இவன் ஏதோ அரைகுறைக் கல்வி சீமானோ, முழுப் பைத்தியம் கமலஹாசனோ அல்லன். மதவெறி பிடித்த ஒவ்வாசியும் அல்லன். காஷ்மீரத்தின் தீவிரவாதியும் அல்லன். ஆனால், இந்த தேசத்தின் விடுதலைக்காக சுமார் எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்த நேருவின் கொள்ளுப் பேரன் ராகுல் காந்தி.

நேருவின் கொள்கைகள் பலது தவறானவை தான். ஆனால் தேசத்தின் பாதுகாவலர்களை அவர் இங்ஙனம் சித்தரிப்பதைச் சகித்துக் கொண்டிருக்க மாட்டார். இந்திரா காந்தி இதைக் கண்டிருந்தால் வெகுண்டெழுந்திருப்பார்.

காங்கிரஸ் அழியக் கூடாது, ஆனால் இந்தக் குடும்பத்தின் பிடியில் இருந்து கட்சி காப்பாற்றப் பட வேண்டும். காங்கிரஸ்காரர்கள் யாராகிலும் உப்பிட்டுச் சோறுண்ணுபவர்களாக இருந்தால், பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கை அழைத்து அவரிடம் காங்கிரசை ஒப்படைக்கச் செய்ய வேண்டும்.

தேசத்தையும், ராணுவத்தையும் மதிக்கத் தெரியாத முழு மூடர்கள் பாங்காக் சென்று பூரண ஞானம் அடைந்து வரலாம். காமராஜர் வளர்த்த காங்கிரஸ் இன்று தேச துரோகக் கபோதிகளின் கையில் உள்ளது. பச்சை தேசத் துரோக கம்யூனிஸ்டுகள், படு அயோக்கிய சிகாமணி திராவிடக் குஞ்சுகள் கூட செய்யமாட்டாத ஒரு இழிச்செயலை ச் செய்துள்ளான் ராகுல்.

இந்திரா காந்தியின் பேரன் தானா என்று கேட்கவைத்துள்ளான் அவன்.

ராகுல் காந்தி காங்கிரஸின் சாபக்கேடு, தேசத்தின் அவமானம்.

ராகுல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – வெளிப்படையாக, தொலைக்காட்சி ஊடகங்கள் முன்னிலையில், ராணுவத்தையும், நாய்களையும் குறிப்பிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும். முடிந்தால் ராணுவ வீரர் ஒருவரையும் அவர் பழக்கியுள்ள நாய் ஒன்றையும் அழைத்து இருவர் காலிலும் விழுந்து தனது பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்துகொள்ள வேண்டும்.

தேச நலனில் அக்கறை கொண்ட காங்கிரஸ்காரர்கள் புடவை கட்டிக் கொண்டு சப்பைக் கட்டு கட்டி நபும்ஸகர்களாக இல்லாமல், ராகுல் காந்தியை இவ்வாறு மன்னிப்பு கேட்க வற்புறுத்த வேண்டும்.

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு.
வந்தே மாதரம்.

ராகுல் காந்திக்கு சில சனி தோஷ பரிகாரங்கள்

captஏழரை சனி, அஷ்டமத்து சனி என்று சனி பல வகைப்படும். இதில் ஏதாவது ஒன்று வந்து நம்மை எட்டிப் பார்த்தாலே நம் கதி அதோகதி தான். முழுசாகக் கூட பார்க்க வேண்டாம். ஒன்றரைக் கண் பார்வையை போதுமானது. நாம் சைக்கிளில் போனாலே ஹெல்மட் போடாத வழக்கு வந்து சேரும். அவ்வளவு சக்தி அந்த சர்வ வல்லமை பொருந்திய சனி பகவானுக்கு உண்டு.

அப்படியாகப்பட்ட சனி பகவானின் பார்வையின் தீக்ஷண்யம் இவ்வாறு இருக்க, இந்த சனி பகவானின் பல உருவங்களும் ஒரு சேர நம்மைப் பார்த்தால் ? நினைத்துப்பார்க்கவே முடியவில்லை அல்லவா ?

அப்படிப்பட்ட சூழலில் உள்ளவர் தான் திருவாளர் ராகுல் காந்தி. பல வகைப்பட்ட சனி கிரகங்கள் ஒரு சேர அவரைப் பார்க்கின்றன.

இவரைப் பார்க்கும் சனிக் கிரகங்கள் என்ன ? அதற்கான பரிகாரங்கள் என்ன ?

முதலாமவர் மணி சங்கர் ஐயர். இவரால் அனுகூலம் என்பது ஒரு கடுகளவு கூட என்றைக்கும் இருந்ததில்லை. இவரை நாம் பார்க்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. இவரது பார்வை ஒரு துளி கூட நம் மீது படாமல் இழுத்துப் போர்த்திக்கொண்டு இருக்க வேண்டும். இவரது பழைய தொகுதியான மயிலாடுதுறையை இவர் சிங்கப்பூராக மாற்றியமைத்த விந்தையை இன்னும் அந்த ஊர் மக்கள் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார்கள். இவ்வளவு பராக்கிரமம் வாய்ந்த சர்வ சக்திகளின் இருப்பிடமான இந்த சனி பகவான் திறந்த வாய் மூட மாட்டார்.  ஒவ்வொரு முறை இவர் வாய் திறந்தாலும் ஒரே களேபரம் தான். அவருக்கு அல்ல. அவரது கட்சிக்கு.  சமீபத்தில் ‘சாய் வாலா’ – ‘தேனீர் விற்பவர்’ என்று மோதியை இவர் போற்றிப் புகழ்ந்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கவிருந்த ஒரு சில தேனீர் கடைக்காரர்களும் இப்போது மோதி பக்கம் சென்றுவிட்டனர் – ‘ஓஹோ, மோதி நம்ம ஆளு போல’ என்று நினைத்துக்கொண்டு.

பரிகாரம் : மணி சங்கரரை ஆப்கானிஸ்தானுக்குத் தூதராக அனுப்பலாம். தாலிபான்களை தற்கொலை செய்து கொள்ள வைக்க ஒரே வழி இது தான். (ஒபாமா கவனிப்பாராக).

திக் விஜை சிங் : இந்த சனி பகவான் தற்போது சற்று வீரியம் குறைந்து காணப்படுகிறார். மணி சங்கர சனி பகவானின் தீக்ஷண்யம் சற்று அதிகமாக இருப்பதால் இவரது சக்தி கொஞ்சம் குறைந்து காணப்படுகிறது. இருந்தாலும் இவர் சாதரணமானவர் அல்லர். இவரது வீரியம் வாய் வழியாக அவ்வப்போது வெளிப்பட்டு,காங்கிரஸின் வாய்ப்பைப் பாதிக்கும். சமீபத்தில் உ.பி.யில் இந்த சனி பகவான் ராகுலின் கூடவே இருந்து பெரிய பள்ளம் தோண்டினார். பள்ளம் தோண்டும் கலையில் சாமர்த்தியர் இந்த சனி பகவான்.

பரிகாரம் : இலங்கைக்கு இந்திய தூதராக இவரை அனுப்பலாம். அல்லது இரண்டு வருடம் இலங்கை அரசிற்கு இவரைக் கடன் கொடுக்கலாம். இராஜபஷே இந்து மகா சமுத்திரத்தில் தானாகவே மூழ்கினார் என்று விரைவில் செய்தி வந்தால் ஆச்சரியப்பட வேண்டாம். திக் விஜையாரது பராக்கிரமம் அவ்வளவு பெரியது. ராகுல் கவனிப்பாராக.

ப.சிதம்பரம் : இந்த சனீஸ்வரர் எது சொன்னாலும் தீமையே பயக்கும். இவருக்கு அனுகூலப் பார்வை என்று ஒன்று இல்லவே இல்லை. உதாரணமாக ‘பங்குச் சந்தை நன்றாக உள்ளது’  என்று அவர் சொன்னால் அதே தினம் வரலாறு காணாத வீழ்ச்சி பங்குச்சந்தையில் ஏற்படும். ‘இந்தியப் பொருளாதாரம் மேலே உயர்கிறது’ என்று இவர் சொன்னால் அன்றே உலக வங்கி இந்தியாவைப் பற்றி அபாயகரமான ஒரு செய்தியை வெளியிடும். அவ்வளவு வாக்கு சக்தி இவருக்கு ( வாக்கு என்றதும் நினைவுக்கு வருகிறது – இவர் நிற்கும் தேர்தல்கள் இரண்டு முறை வாக்குகள் எண்ண வேண்டும்).

பரிகாரம் : சீனாவிற்கு ‘பொருளாதார’ அறிவுரை கூற இவரை அனுப்பலாம். சீனாவை அடக்க இதை விட்டால் வேறு வழி இல்லை. ஒரு மாததில் சீனா கடன் கேட்டு இந்தியாவிடம் கை ஏந்தும் நிலைக்குக் கொண்டு வந்து விடுவார் இந்த சனி பகவான்.

சஷி தரூர் – இந்த சனி பகவான் நல்லவர். சொந்த சோகங்கள் இவரை வாட்டுன்றன. ஆனால் இவரும் வாக்கு ஸ்தானத்தில் பலம் பொருந்தியவர். எனவே கொஞ்ச நாளைக்கு இவரால் கஷ்டம் இல்லை. அதே சமயம் பலனும் இல்லை.

பரிகாரம் : மீண்டும் ஐக்கிய நாடுகள் சபைக்கே அனுப்பி விடலாம். சத்தம் கொஞ்சம் குறையும்.

வீர்ப்ப மொய்லி : இந்த சனி பகவான் சொன்னால் தான் செய்வார். நல்லவர் தான். ஆனால் ரொம்பவும் அழுச்சாட்டியம் செய்து பின்னர் ஒத்துக்கொள்வார். இவரால் பயன் இல்லை. ஆனால் உபத்திரவங்கள் ரொம்பவும் அதிகம். ‘ரிலையன்ஸ்’ என்று எங்கே எழுதி இருந்தாலும் அங்கே அவரைப் பார்க்கலாம்.

பரிகாரம் : வட கொரியா அனுப்பலாம். வேலையும் இருக்காது; பேசுவதற்கும் வாய்பில்லை.

ரேணுகா சௌதிரி – இவர் பெண்பால் சனி பகவான். ரொம்ப பராக்கிரமம் பொருந்தியவர். பேசிப் பேசியே சாவடிப்பார். ஆனால் கடைசிவரை நம்மை ஆதரித்துப் பேசுகிறாரா, எதிர்க்கிறாரா என்றே தெரியாது. ஆனால் பேசிக்கொண்டே இருப்பார். அடிக்கடி சிரிப்பார். காரணம் தெரியாது ( அவருக்கும் )

பரிகாரம் : தமிழ் நாட்டின் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கலாம். காங்கிரசின் பல கோஷ்டிகள் வேஷ்டியைக் கிழித்துக்கொண்டு சண்டை போடும் போது இவர் இருப்பதால் குறைந்தபட்சம் வேஷ்டியாவது கிழியாமல் இருக்கும். மேலும் இவர் சென்னைக்கு வந்து ‘சத்திய மூர்த்தி பவனில்’ பேசத் துவங்கினால் வேறு யாரும் பேச முடியாது. வாசன் கோஷ்டி, தங்க பாலு கோஷ்டி,  சிதம்பரம் கோஷ்டி, கார்த்தி கோஷ்டி, கலைஞர் கோஷ்டி ( ஆம் இருப்பதிலேயே கலைஞர் கோஷ்டி தான் பெரியது) என்று பல கோஷ்டிகள் இருப்பதால் இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சோனியாவின் பிறந்த தினத்தைக் கொண்டாடவேண்டிய ஒரு தேசியக் கடமை இருப்பதால் ரேணுகா சனி அம்மையார் தான் சரியான தேர்வாக இருப்பார்.

கபில் சிபல் – இந்த சனி பகவானாரும் வாக்கிற்கு ( பேச்சு ) அதிபதி. இவரால் பேசாமல் இருக்கவே முடியாது. பல் தேய்க்க வாய் திறந்தாலே பேசத் துவங்கிவிடுவார். ஆனால் எப்பொழுதும் ‘ஜீரோ’, ‘ஜீரோ’ என்று ஒரு மந்திரம் மாதிரி சொல்லிக்கொண்டிருப்பார். தற்போது கூட 62,000 கோடி என்பது வெறும் ‘ஜீரோ’ என்று கண்டுபிடித்தார். உலகமே வியந்தது.

பரிகாரம் : பல பஞ்சாங்கங்களையும் தேடிவிட்டேன். பரிகாரம் தெரியவில்லை.

இவ்வளவு சனி பகவாங்கள் இருந்தாலும் ராகுல் தினமும் தன்னைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்வதால் அந்த சனி தோஷமும் அவருக்கு தினமும் ஏற்படுகிறது. எனவே அவர் கண்ணாடி பார்க்காமல் இருப்பது நல்லது. ‘சொந்த சனி’க்குப் பரிகாரம் இல்லை என்று பாம்பு பஞ்சாங்கத்தில் போட்டிருக்கிறது.

இதன் பிறகு ‘தாய் சனி’, ‘மாப்பிள்ளை சனி’ என்று இரண்டு சனி பகவாங்கள் உள்ளனர். இவற்றின் செயல்பாடுகள் வெளியில் தெரியாது. ஆனால் சிறிது காலம் கழித்து பலன்கள் தெரிய வரும். இவற்றிற்கும் பரிகாரம் இல்லை. இவை அஷ்டமத்து சனிகள். காலைச் சுற்றிய பாம்புகள் மாதிரி கடிக்காமல் விடாது.

ஆனால் இவ்வளவு சனிதோஷங்கள் இருந்தாலும், அவரை ஒன்றும் செய்யாதபடி இருக்க ஒரு சர்வ சனி தோஷ நிவாரண மந்த்ரம் ஒன்று உள்ளது. இதனை தினமும் மூன்று முறை மனம் ஒன்றி ஜபித்தால் இரண்டு மாதத்தில் பலன் தெரியும்.

“சனீஸ்வராய வித்மஹே சகல கஷ்டாய தீமஹே

தன்னோ விஜய காந்தப் ப்ரசோ தயா ஆது”

இந்த மந்திரத்தைப் பராயணம் பண்ணும்போது நாக்கை மடித்துக் கொண்டு செய்ய வேண்டும். அதே சமயம், மேலே உள்ள படத்தில் உள்ளது போல், முஷ்டியை உயர்த்திக்கொண்டும் இருக்க வேண்டும்.அது ரொம்பவும் முக்கியம்.

%d bloggers like this: