வாசகர் வட்டத்தில் ஜெயமோகனுடன் கலந்துரையாடல்

சிங்கப்பூர் வாசகர் வட்ட நிகழ்வுக்காக எழுத்தாளர் ஜெயமோகன் வந்திருந்தார். 02-மார்ச்-2014 அன்று அங் மோ கியோ நூலகத்தில் வாசகர் வட்ட நண்பர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடலில் ஜெயமோகனின் வெளிப்படையான, உடனுக்குடனான பதில்கள் இந்தக் காணொளியில். மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது இந்தக் காணொளிப்பதிவு.

மகாபாரதம், தமிழ் எழுத்தாளர்கள், தமிழரின் இன்றைய நிலை, தமிழ்ச் சமயங்கள், தமிழகத்தில் எழுத்துச் சுதந்திரம், சங்க இலக்கியம், கல்வியின் இன்றைய நிலை என்று பல முனைகளில் கேள்விகள் எழுந்தன. அத்தனைக்கும் சளைக்காமல் பதில் சொல்கிறார் ஜெயமோகன்.

எழுத்தாளர் மாலனுடன் ஒரு சந்திப்பு

Image

நேற்று எழுத்தாளர் மாலனுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக மாலனின் “தப்புக்கணக்கு” சிறுகதை இடம் பெற்றுள்ளது. அதைப்பற்றிய ஒரு கலந்துரையாடலுக்காக திரு.மாலன் சிங்கை தேசிய நூலகம் வந்திருந்தார்.

“தப்புக்கணக்கு” கதையை பாலு மகேந்திரா ஒரு குறும்படமாக எடுத்திருந்தார். அது திரையிடப்பட்டது. பின்னர் அது தொடர்பாகவும் இன்ன பிற விஷயங்கள் பற்றியும் பேச்சு நடந்தது. அவற்றின் சாராம்சம் கீழே ( சாராம்சம் என்பது தமிழ் அல்ல என்போர் அதன் தமிழ் வடிவத்தைத் தெரியப்படுத்துங்கள் )

சிங்கப்பூரில் இருந்து சிறந்த, பலதரப்பட்ட தமிழ்க் கதைகள் வருவதில்லை. அதற்கான காரணம் அவர்களுக்கு நடைமுறை வாழ்க்கைச் சிக்கல் ஏதும் இல்லை – மின்சாரம், தண்ணீர், பாதுகாப்பு முதலியன வாழ்க்கையின் ஒரு யதார்த்தமாகவே இருப்பதால் அவை சார்ந்த எந்த ஒரு சிக்கலும் போராட்டமும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கையில் கதை இருப்பதில்லை.

படிப்பு, அதன் மூலம் வேலை, அதன் மூலம் பணம் , அதன் மூலம் வசதியான வீடு என்று படிப்பைப் பணமாக்கும் ஒரு மனப்பான்மையை வளர்த்து இருக்கிறோம். அதனால் தமிழை யாரும் ஒரு கலை  மொழியாகக் காண்பதில்லை. அதில் எழுதுவது குறைந்துள்ளது.

பேச்சு “தப்புக்கணக்கு” பற்றி திரும்பியது. ஒரு தாத்தா பாட்டி தன் பேரன் பேத்திகளிடம் காட்டும் சுதந்திர உணர்வு பெற்றோர்களால் காட்ட முடிவதில்லை என்று திரும்பியது. அதற்ககு மாலன்,” ஒரு COMMITMENT, பொறுப்பு இல்லாமல் இருப்பதனால் இருக்கலாம்”, என்றார். அதாவது குழந்தை தன்னிச்சையாக வளர்வது பெற்றோருக்கு பின்னர் சில சிக்கல்கள் ஏற்படுத்தலாம். அதுவே தாத்தா பாட்டிக்கு இல்லை. குழந்தை நாளை தோற்றால் தாத்தா பொறுப்பேற்கப் போவதில்லை. இந்த விளக்கம் யதார்த்தமாக இருந்தது.

புதிய வார்த்தைகளைத் தமிழில் சேர்க்க வேண்டிய தேவை இல்லை. அரிசி என்பதை ஆங்கிலேயர் ‘Rice’ என்று தன்னில் சேர்த்துக்கொண்டார்கள். அதுபோல் கட்டுமரம் போன்றவை. இதனால் ஆங்கிலம் வளர்ந்தது. தமிழும் இப்படி வளர வேண்டும்.

வீட்டிற்கு வேலி அமைக்கலாம். நிலத்திற்கு வெளி அமைக்கலாம். வானத்திற்கு? இந்தோனேஷியப் புகை சிங்கையைத் தாக்கவில்லையா?

பலர் கேள்விகள் எழுப்பிஇருந்தார்கள்.  நான் எழுப்பிய சில கேள்விகள்:

தமிழ் எழுத்தாளர்கள் தொடக்கம் முதல் ஏதாவது ஒரு “ism”, கட்சி சார்ந்தே பேசுகிறார்களே? தனித்துவமாகச் செயல்படுவதில்லையே, ஏன் ?

தமிழ் எழுத்தாளர்கள் எழுதத் துவங்கிய உடனேயே மின்னியல் பொறியியல் முதல் அணு ஆராய்ச்சி வரை  எல்லாம்  தெரிந்தது போல் பேசுவது ஏன் ?

“IPL” முதலான தேவையில்லாத விஷயங்கள் பற்றி அங்கலாய்க்கும் தமிழ் நாட்டு ஊடகங்கள், எழுத்தாளர்கள், உத்தரக்காண்ட் பற்றி வாய் திறக்காததேன் ?

தமிழ் நாட்டின் உண்மையான் வரலாறு எப்போது எழு தப்படும்? பல இனக்குழுக்கள் / சாதிக் குழுக்கள் தாங்களே ஆண்ட பரம்பரை என்று மார்தட்டிக்கொள்கிறார்கள். ஆகவே உண்மையாக ஆண்டவர்கள் யார்? அந்த வரலாற்றை ‘புதிய தலைமுறை” எழுதலாமே ?

அமைதியான முறையிலும் ஆழமாகவும் பதில் அளித்தார் திரு.மாலன்.

ஆங்கிலத்தில் சொல்வது போல் “அவரது இனம் பெருகட்டும்” ( Let his tribe increase ).

அடிப்படை வசதிகளை நோக்கிப் பல நாடுகள் பயணிக்கும் வேளையில் அறிவு

Image

அடிப்படை வசதிகளை நோக்கிப் பல நாடுகள் பயணிக்கும் வேளையில் அறிவு பூர்வமாக நாட்டை நகர்த்துவது பற்றி யோசிக்கிறது சிங்கப்பூர்.

தேசீய நூலக வாரியம் உலக அளவில் ஆகச் சிறந்த ஒரு நூலக நிர்வாகம் என்பது நாம் அறிந்ததே.

Read Singapore என்ற பெயரில் இந்த ஆண்டின் வாசிப்பு அனுபவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முனைந்துள்ளது சிங்கை அரசு. Nurturing a nation of Readers – வாசிக்கும் ஒரு நாட்டைப் பேணுதல் என்பது நோக்கம்.

இவ்வாண்டின் தலைப்பு “ஒரே வானம்”. ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் என்று நான்கு அங்கீகரிக்கப்பட்ட மொழி ஆசிரியர் படைப்புகள் இடம் பெரும்.

இந்த ஆண்டு தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆக இவ்வருடம் அவர் எழுதியுள்ள நூல்கள் பற்றிய ஆய்வுகள், கலந்துரையாடல்கள், நேர் காணல்கள் ஆகியன இருக்கும்.

ஜெயமோகன் படைப்புகள் வாசிக்க தனி உணர்வு வேண்டும். வாசித்தபின் ஏற்ப்படும் உணர்வு தனி. ஆனால் வாசிக்கும்போது நிகழும் உணர்வுகள் – அவை தனி. அனுபவித்தால் தான் தெரியும்.

வாசகர்களே, முடிந்தவரை ஜெயமோகன் நூல்களைப் படித்துத் தயாராகிக் கொள்ளுங்கள். எழுத்தாளரைச்  சந்திக்கும்முன் அவரது அலைவரிசைக்குத் தயாராகிக்கொள்ளுங்கள்.

%d bloggers like this: