Sri Vaishnava Brahmins of Tamil Nadu – review

Sri Vaishnava Brahmins of Tamil Nadu
Sri Vaishnava Brahmins of Tamil Nadu

வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் இராஜகோபாலன் தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை நூலாக வடித்துள்ளார். நூலின் பெயர் ‘Sri Vaishnava Brahmins of Tamil Nadu’ (தமிழக ஶ்ரீவைஷ்ணவ அந்தணர்கள்). முனைவர் பட்டம் 1993லும்  நூல் வடிவம் 2014லிலும்  நிகழ்ந்துள்ளன.

தமிழகத்தில் வைஷ்ணவத்தின் துவக்கம் எப்போது நடந்தது, அதற்கான புறச்சான்றுகள் யாவை, பின்னர் நடந்த பிற மதங்களின் தாக்கங்கள், ஆதி சங்கரரின் அத்வைத சித்தாந்தம், சைவ நெறி, ஆழ்வார்களின் காலங்கள்ள், ஆழ்வார்கள் காட்டிய வைஷ்ணவ நெறி, பின்னர் தோன்றிய ஶ்ரீவைஷ்ணவம், அதற்குக் காரணமான ஶ்ரீமத் இராமானுஜர் என்னும் உடையவர், அவர் ஏற்படுத்திய சீர்திருத்தங்கள், பின்னர் தோன்றிய ஆச்சார்யர்களான வேதாந்த தேசிகர் மற்றும் மணவாள மாமுநிகள், இந்த இருவரும் செய்த செயற்கரிய செயல்கள், இவர்களுக்குப்பின்னர் தோன்றிய கலை வேறுபாடுகள், அதனால் தொடுக்கப்பட்ட வழக்குகள், ஶ்ரீவைஷ்ணவ மடங்கள், அவை ஆற்றியுள்ள அரும்பணிகள், ஶ்ரீவைஷ்ணவ சமுதாயத்தில் தோன்றிய அரசியல் வல்லுனர்கள், எழுத்தாளர்கள், நீதிபதிகள், கலைஞர்கள், ஶ்ரீவைஷ்ணவர்களின் தற்போதைய நிலை, இதற்குக் காரணமான திராவிட இயக்கம் மற்றும் அதன் தலைவர்கள், இடஒதுக்கீடும் அதன் தாக்கங்களும், இடஒதுக்கீட்டை ஶ்ரீவைஷ்ணவ அந்தணர்கள் சமாளித்த விதம், தற்காலத்தில் ஶ்ரீவைஷ்ணவர்கள் குடியேறியுள்ள இடங்கள், ஆற்றும் பணிகள் என்று ஒரு களஞ்சியத்தை நூல் வடிவில் அளித்துள்ளார் ஆசிரியர்.

வரலாற்றை மட்டும் காட்டாமல், ஒவ்வொரு நிகழ்விற்குமான காரணிகள், அக்காரணிகளைச் சுட்டும் பிற ஆசிரியர்களின் நூல்கள் என்று பெரும் உழைப்பைத் தந்துள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு பக்கத்திற்கும் மேற்கோள்கள், அவற்றுக்கான சுட்டிகள், ஆதாரங்கள் என்று சுமார் பத்தாண்டு உழைப்பு தெளிவாகத் தெரிகிறது. நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

நூலின் சிறப்பம்சம்: இந்த ஆராய்ச்சிக்குப் பயன்பட்ட பிற நூல்கள், ஆராய்ச்சி அறிக்கைகள் முதலியன. இந்தத் தொகுப்பில் 136 நூல்கள் மற்றும் அறிக்கைகள் சுட்டப்பட்டுள்ளன. இவை தவிரவும் பல பத்திரிக்கைச் செய்திகளும் காட்டப்பட்டுள்ளன.

நூல் வேண்டுவோர் ஆசிரியரைப் பின்வரும் அலைபேசியில் தொடர்புகொள்ளலாம்: +91-94440-14584.

பி.கு.: ஆசிரியர் 83 வயது முதியவர். எனவே இந்திய மாலை நேரங்களில் அழைக்கவும்.

உயர் திரு இராம கோபாலன் ஜி அவர்களுக்கு

வீடு திரும்புபவர்கள் எந்த சாதிக்குள் சேர்த்துக்கொள்வீர்கள் ? தலித்தாக வெளியேறி மீண்டும் உள்ளே வருபவரை தேவர சாதியில் சேர்ப்பது உங்களால் முடியுமா ?

உயர் திரு இராம கோபாலன் ஜி அவர்களுக்கு ,

அசட்டு அம்மாஞ்சி எழுதிக் கொள்வது.

சமீபத்தில் ‘வீடு திரும்புதல்’ நிகழ்ச்சி ஒன்றிற்கான அழைப்பிதழ் பார்த்தேன். உங்கள் இந்து முன்னணி வெளியீடு என்று அறிந்துகொண்டேன்.

இந்து தர்மத்தை விட்டு விலகியவர்களை மீண்டும் உள்ளே அழைப்பது நல்லது தான். ஆனால் சில கேள்விகள் எழுகின்றன. தீர்க்க முடியுமானால் செய்யுங்கள்.

வீடு திரும்புபவர்கள் எந்த சாதிக்குள் சேர்த்துக்கொள்வீர்கள் ? தலித்தாக வெளியேறி மீண்டும் உள்ளே வருபவரை தேவர சாதியில் சேர்ப்பது உங்களால் முடியுமா ?

வீடு திரும்பி தேவரான தலித்தை தேனி மாவட்டத்தில் கோவில் தேர் இழுக்க விடுவார்களா ?

வீடு திரும்புபவர்கள் பிராமணர்களாக விரும்ப மாட்டார்கள். ஆவதால் அரசாங்கப் பலன் ஒன்றும் இல்லை என்பதால் சொல்கிறேன். ஒரு வேளை அப்படி விரும்பினால் அவர்களுக்கு உபநயனம் செய்துவிக்க இராமானுசர் தயாரா ?

பிராமணராக உருமாறும் தலித்தை எந்தக் கலையில் சேர்ப்பது ? தென்கலை ஐயங்காராக ஆனால்  முதல் தீர்த்தம் கொடுக்க இப்போது உள்ள தென்கலையார் ஒப்புக்கொளார்களா ? அவர்கள் வடகலையாரையே கோவில் உள்ளே விட யோசிக்கிறார்களே, அதனால் கேட்கிறேன்.

ஒருவேளை பிள்ளைமாராக அவர்கள் மாறினால் எட்டு வீட்டுப் பிள்ளைமார் வகையறாவில் சேர முடியுமா ? அதிலும் தின்னவேலிப் பிள்ளைமாராக முடியுமா ?

வீடு திரும்புபவர்கள் செட்டியாராகச சேர்ந்தால் எந்தச் செட்டி? மஞ்சள் பூச்சா, நாட்டுக்கோட்டையா? இல்லை வேறு ஏதாவதா ?

அவர்கள் கௌண்டர்களாக வழி உண்டா?  வேளாளக் கௌண்டரா, வீர சைவக் கௌண்டரா ?

இன்னும் எவ்வளவோ சாதிகள் உள்ளன. அதில் எல்லாம் எத்தனையோ உட்பிரிவுகள் உள்ளன. உள்ளே கொண்டுவந்து சரியான உட்பிரிவில் சேர்ப்பது ரொம்ப கஷ்டம். பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆசை காட்டி மதம் மாற்றப்பட்டவர்களை மீண்டும் அழைப்பது நல்லதே. ஆனால் அவர்களை என்னவாக அழைப்பது என்பது ரொம்ப பெரிய சமாச்சாரம். சூதனமாக நடந்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் இந்துக்களே என்று ஆர்.எஸ்.எஸ். சொல்லி வருகிறது. ஆக அவர்கள் கிறித்தவர்களாக, இசுலாமியர்களாக இருந்தாலும் அவர்களும் இந்துக்கள் தானே ? அப்போது வீடு திரும்புதல் எப்படி சாத்தியமாகும் ?

ரொம்பவும் குழப்பமாக இருக்கிறது.

நன்றி
அசட்டு அம்மாஞ்சி

குளியல்

குளிக்கறதா வாணாமா ?

ஒவ்வொரு தபா சவாரி போக சொல்ல இதே ரோதனை தான். போன வருஷம் வரிக்கும் அம்மா இருக்க சொல்ல, ‘ சவாரி போற, நல்லா குளிச்சிட்டு ரீஜன்டா போ’ ன்னு சொல்லும்.

அது சரி இப்போ குளிக்கறதா வாணாமா ? குளிக்காம போனா கால் டாக்ஸி கெளம்பாதா என்னா ? இல்ல சவாரி தான் ஏற மாட்டானா ?

காலைல அஞ்சு மணிக்கி அடையாறு போய் கஷ்டமர பிக்கப் பண்ணினு, அப்டியே மாம்பலத்துல கஷ்டமரோட அண்ணனையும் இட்டுகினு சுண்ணாம்பு கொளத்தூர் போய்வரணும். நல்ல சவாரி தான். ஆனா குளிக்கணுமா ?

குளிக்காட்டா இன்னா ஆவும் ? ஒடம்பு சுத்தம் இருக்காது. அது சரி. மெட்றாஸ் வெய்யில்லே குளிச்சா என்ன குளிக்காட்டா என்ன ? ஒரு வழியா சவாரி போய் வந்து பொறவு குளிக்கலாம்.

அட இன்னாபா காலங்காலைல அடையாறுல இம்மாங்கூட்டம் ? மூணாவது தெருதானே சொன்னாங்க ? ஆங்.. அதோ அந்த தனி ஊடு தான். பார்ட்டி பெரிய பார்ட்டியா இருக்கும் போல. அடையாறுல தனி ஊடு வெச்சிருக்காங்கன்னா பெரிய கைதானே.

அட அய்யிரா ? ஏதோ விசேஷம் போல. தார்பாச்சி வேட்டி கட்டியிருக்காங்களே. அம்மிணியும் மடிசார் கட்டி வராங்க. நல்ல சகுனம் தான்.

ஆறு மணிக்கு மாம்பலத்துல என்ன கூட்டம் ? இந்த ஊர்ல எல்லாருமே மாம்பலத்துலதான் இருக்காங்களோ ?

‘இன்னா சார், குளிக்கலையான்னு கேக்கறீங்களா ? ஆமாம் சார். விடிகாலைல தண்ணி வர்ல. அதான் குளிக்கல. வேணும்னா சென்ட் அடிக்கட்டுமா சார் ?’

அட ராமா. இவுங்களுக்கும் தெரிஞ்சு போச்சே.

‘இன்னும் அரை மணி தான் சார். தாம்பரம் வந்துடும். பொறவு கால் மணில சுண்ணாம்பு கொளத்தூர் போயிடலாம் சார்’.

இன்னா கண்றாவிடா இது ? அண்ணனும் தம்பியும் என்ன பேசிக்கறானுங்க ? நல்ல விஷயத்துக்குப் போறானுங்க. ஏதோ கெரப்பிரவேசம் போல. ஆனா புது ஊடு கட்டினவங்களப்பத்தி இப்பிடி பேசுறாங்களே.

‘இதான் சார் அந்த தெரு. அதோ தெரிது பாருங்க அது தான் சார் அந்த ப்ளாட்டு. வாழை மரமெல்லாம் கட்டியிருக்காங்களே ’

அண்ணனும் தம்பியும் வீட்டுக்குள்ள போயிட்டாங்க. கொஞ்சம் காத்தாட வெளில நிக்கலாம்.

இந்த அய்யமார் வீட்டுக்கெல்லாம் போகக்கூடாது. வெளிலயே நின்னுக்கணும். எதுனா சொல்லுவானுவ. நமக்கு புரியாது. சாடையா சொல்லுவானுவ. வெளங்காத பயலுவ. அதான் எல்லா பேரும் அமெரிக்கா போயிட்டனுவ. ஒருவேள வெள்ளக்காரங்கிட்ட தீட்டு பாப்பானுங்களோ ?

ரெண்டு பேரும் என்ன பேச்சு பேசினாங்க காருக்குள்ள? ஏதோ இந்த வீட்டுக்காரங்க கடன் வாங்கினாங்களாம். ஆனா இப்ப வீடு வாங்கறாங்களாம். ஏக பொகச்சல் போல.

அட என்னப்பா ? போன வேகத்துல திரும்பி வராங்க. பின்னால ஓடி வார அம்மிணி இவுங்க போலவே இருக்கே. ஒரு வேள அக்கா, தம்பியா இருக்கலாம். ஆனா அழுவுது ?

‘வந்தவாள வாங்கோன்னு சொல்ல வக்கில்ல. அப்புறம் எதுக்குக் கூப்ட?’

‘இல்லடா கண்ணு தெரியல்லே. யார் வந்திருக்கான்னு புரியல்ல. வரச்சொல்லிட்டு வாங்கோன்னு சொல்ல மாட்டேனா?’

‘ஆமா ஆமா. கண்ணு தெரியாது, காது கேக்காது. பணம் வந்திருக்கோனோ, அதான் கண்ண மறைக்கறது’.

‘அட நாராயணா ! நான் தான் பாக்கல்லே, பின்னாடி நின்னுண்டிருந்தேன்னு சொல்றேனோனோ ? இவ்வளவு தூரம் வந்துட்டு இப்பிடிப் பேசாதேடா’.

‘இப்போ நாங்கள்லாம் உங்களுக்கு வேண்டாம். பணம் வந்துடுத்து. அடையார்லேர்ந்து வரோம். வந்தவாள வாங்கோன்னு சொன்னா பெருமை கொறஞ்சுடுமா ? இருக்கட்டும்.’

‘தோ பார்ரா, நான் முடியாம இருக்கேன். ஏதோ பிள்ளை வாங்கியிருக்கான் வீடு. வந்து ஆசீர்வாதம் பண்ணுவியா இப்பிடி  விடுவிடுன்னு போனா நன்னா இல்லே.’

‘எது நன்னா இருக்கு, எது நன்னா இல்லன்னு அவா அவாளுக்குத் தெரியும். நாங்க வறோம்’.

‘டே வேண்டாம்டா. எங்க சம்மந்தில்லாம் வந்திருக்காடா. எல்லாரும் பாக்கறாடா. அக்காவாத்துக்கு வரதுக்கு எதுக்குடா வரவேற்பெல்லாம்? நான் தான் பாக்கல்லேன்னு சொல்றேனே’.

‘உங்க சம்மபந்திக்கு முன்னாடி எங்கள அவமானப் படுத்தணும்னே தானே இப்பிடிப் பண்ணினே நீயும் அத்திம்பேரும். நன்னா இருங்கோளேன், யாருக்கு வேணும் உங்க மரியாத எல்லாம்.’

உள்ள போனவங்கள வான்னு கூப்பிடல போல. அந்தம்மா கண்ணு தெரியலேங்குது. இவுனுங்க கத்திட்டு வந்துட்டாங்க. கொஞ்ச நேரம் நல்ல காத்துல நிக்க முடியுதா ? என்ன பொழப்பு இது ?

‘என்னா சார் ? ரேடியோவா சார். யாரோ அய்யிரு சாமி பேசறாருங்க. வெக்கவா சார்?’

‘வேளுக்குடி கிருஷ்ணன் என்னமா சொல்றார் ? விசிஷ்டாத்வைத தத்வ ரத்னாகரம்னு பட்டம் குடுக்கலாம். உடம்பு வேற, ஆத்மா வேற. சுகம், துக்கம், சோகம், சம்ஸ்காரம், மரியாதை, அவமரியாதை எல்லாம் உடம்புக்குதான், ஆத்மாவுக்கு இல்லை. உடம்பு சாஸ்வதம் இல்லை. ஆத்மா தான் சாஸ்வதம். ஆகையால இந்த உலகத்துல நடக்கற காரியங்களால பாதிப்படையாம ‘ஸ்திதப் ப்ரக்ஞன்’ அப்பிடிங்கற ஸ்தானத்த நாம எல்லாரும் அடையணும்’ அடாடா என்ன வியாக்யானம். என்ன ஸ்பஷ்டம்?’

ஒண்ணும் பலன் இல்ல. குளிக்க வாணாம்னு முடிவு பண்ணிட்டேன்.

இராமானுசர் வந்திருந்த போது

கோபுர வாசல் சுவர்
கோபுர வாசல் சுவர்

என்ன அப்படியே நின்றுவிட்டீர்கள் ? மதிலைப் பார்த்து மலைத்துவிட்டீர்களா ? உள்ளே போங்கள். இன்னும் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன.

பிராகாரம்
பிராகாரம்

இது 1000 ஆண்டுகள் முன்பு இராமானுசர் நடந்து சென்ற பிராகாரம். வேதாந்த தேசிகரும் பிள்ளை லோகாச்சாரியாரும் நின்று கண்ணீர் மல்க வழிபட்ட சன்னிதிகள். இந்தத் தூண்களில் இராமானுசரின் கை பட்டிருக்கும். இதோ இந்தத் தூணில் சாய்ந்தபடியே கூரத்தாழ்வானின் ‘கண் போன கதையை’ இராமானுசர் கேட்டிருப்பார். அவர் உகுத்த கண்ணீரின் உப்பு இந்தத் தாழ்வாரங்களில் இன்னும் ஒரு சிறு படிமமாவது இருக்கும்.

குதிரை மண்டபம்
குதிரை மண்டபம்

இதோ இந்தக் குதிரைகளை, மண்டபத்தின் கற் சங்கிலிகளை இராமானுசர் பார்த்து வியந்திருப்பார். இந்த இடத்தில் நின்று நெடுஞ்சாண் கட்டையாகக் கீழே விழுந்து சேவித்துத் தனது அஞ்சலிகளை இராமானுசர் வரதனுக்குச் செய்திருப்பார். நீங்களும் அந்த இடத்தில் விழுந்து வணங்குங்கள். அவர் உடல் ஸ்பரிசம் பட்ட ஏதோ ஒரு மணல் துகள் உங்கள் உடலில் ஒட்டட்டும். அது போதும் கடைத்தேறுவதற்கு.

அதோ திருக்கச்சி நம்பிகள் என்ற வேளாள மரபில் உதித்த வைணவரிடம் இராமானுசர் அடிபணிந்து தெண்டன் சமர்ப்பிக்கிறார். கோவில் பிராகாரத்தில் இருவரும் ஒன்றாக விழுந்து சேவிக்கிறார்கள் பாருங்கள்.

புரந்தர தாசர்
புரந்தர தாசர்

இவர் யார் என்று பார்க்கிறீர்களா ? புரந்தர தாஸராக இருக்கலாம். அல்லது வேறு யாரோ அடியாராக இருக்கலாம். இக்கோவிலுக்குக் கைங்கர்யம் செய்த பல நூற்றுக் கணக்கான கைங்கர்ய பரர்களில் ஒருவராக இருக்கலாம். அவரையும் வணங்கிக் கொள்ளுங்கள்.

அட, அதோ கவிதார்க்கிக சிம்மம் என்று அழைக்கப்பட்ட வேதாந்த தேசிகர் வருகிறாரே ! அவரைப் பின் தொடர்ந்து ஒரு சீடர் குழாம் வருகிறதே ! ஏதோ வார்த்தை சொல்லியபடி வருகிறார் பாருங்கள். கருட தண்டகம் அல்லது வரதராஜ பஞ்சாசத்தாக இருக்கலாம். அவரே அருளிச்செய்த சுலோகங்களை அவரே சொல்லி வரும் அழகு என்ன அழகு !

அங்கே புஷ்கரணியின் அருகில் அரச உடையில் தோன்றுபவர்கள் யார் ? குலோத்துங்க சோழனும், விக்ரம சோழனும் ஒன்றாக வருகிறார்கள் பாருங்கள். அவர்கள் கட்டிய கோவில் அல்லவா இது ? இதோ இந்த மாபெரும் மதிள் சுவர் விக்ரம சோழன் கட்டியது அல்லவா ! அதைப் பார்க்கத்தான் வருகிறானோ அரசன் !

இல்லை இல்லை, அத்திகிரி வரதரை சேவிக்க வந்திருப்பார்கள்.

நீரின் அடியில் உறங்கும் அத்திகிரி வரதர் வெளியே வர இன்னும் பல ஆண்டுகள் உள்ளனவே ! 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தானே வருவார் அவர் ? அதுவரை இங்கேயே இருப்பார்களோ மன்னர்கள் ? இருக்கலாம். அவர்கள் கட்டிய கோவில். வேண்டியமட்டும் இருக்கலாம்.

சுவர்களிலும் தரையிலும் எழுதிக்கொண்டிருக்கிறார்களே இந்தக் கல் தச்சர்களும் கல்வெட்டெழுத்தாளர்களும் கோவிலின் வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் பாருங்கள். சோழர்கள் பற்றியும், பின்னர் வந்த பல்லவர்கள் பற்றியும் எழுதிக்
கொண்டிருக்கிறார்கள்.

நன்றாக உற்றுப் பாருங்கள் கருங்கல் சுவர்களை. தமிழில் வட்டெழுத்து, தெலுங்கு எழுத்து என்று பல வகையான எழுத்துக்கள் தெரியும். தெலுங்கு எழுத்துக்கள் கிருஷ்ணதேவராயர் செய்த உபயங்கள் பற்றியவை .

அன்னியருக்கு அஞ்சி நீள் உயர் சுவர்
அன்னியருக்கு அஞ்சி நீள் உயர் சுவர்

‘நீள் மதிள் அரங்கம்’ என்று கேட்டிருப்பீர்கள். இங்கு பாருங்கள். எவ்வளவு பெரிய மதிள் சுவர் ! அன்னியப் படை எடுப்புக்கு அஞ்சி எழுப்பப்பட்டவை இவை.

மேளச்சத்தம் கேட்கிறதே. அத்துடன் தியப்பிரபந்த பாரயண கோஷ்டியும் வருகிறது பாருங்கள். என்ன வேகமாகப் வரதராஜப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார் ! சற்று விலகி நின்று சேவியுங்கள். இராமானுசரும் தேசிகரும்
ஒன்றாக நின்றவண்ணம் சேவிக்கிறார்கள் பாருங்கள். அவர்கள் அருகில் பவ்யமாக நின்று கொண்டிருக்கும் மணவாள மாமுனிகளைப் பாருங்கள். இரு நூறு ஆண்டு கால இடைவெளி இவர்களுக்குள் இருந்தாலும் வரதன் இவர்களுக்கு ஒருவனே.

ஆச்சாரியார்கள் ‘திரி தண்டம்’ ( மூன்று கழிகள் ) ஏந்தியுள்ளனர் பாருங்கள். ஜீவாத்மா, பரமாத்மா, ஜடப்பொருள் மூன்றும் உண்மை என்று எடுத்துரைக்கும் விசிஷ்டாத்வைத சித்தாந்தம் இந்த மூவரின் கைகளிலும் ஒளிரும் திரி தண்டத்தால் உணர்த்தப் படுகிறது. இப்படி இருக்க இவர்களுக்குள் வேற்றுமை என்ன ?

மூவரும் ஒன்றாக சூக்ஷ்ம சொருபமாக நின்று பெருமாளைச் சேவிக்கிறார்கள் பாருங்கள்.

சூக்ஷ்ம சொரூபமா ? என்ன பேச்சு இது ?

இராமானுசர் யார் தோளின் மீதோ கை வைத்தபடி செல்கிறாரே, அவர் யார் தெரிகிறதா ? நல்ல கட்டுமஸ்தான உடல் வாகு, கரிய நிறம் ஆனால் உடல் மொழியில் பவ்யம், மரியாதை. அவர் தான் மல்லர் குலத்தவரான உறங்காவில்லி தாஸர். ஸ்ரீவைஷ்ணவனுக்கு ஜாதி வித்யாஸம் இல்லை என்று பறை சாற்றிய இராமானுசர் அவ்வாறே ஒரு மல்லனைத் தனது பிரதான சீடனாகக் கொண்டிருந்தார் என்று கேட்டிருப்பீர்கள். இதோ நேரே பார்க்கிறீர்கள்.

வயதான திருக்கச்சி நம்பிகள் என்ற வைணவரை இராமானுசர் வணங்கினாரே, அதைப் பார்த்தீர்கள் தானே ? நம்பிகள் வரதராஜன் என்ற பேரருளாளனின் சன்னிதிக்குள் சென்று அவருக்கு ஆலவட்டம் வீசுகிறார் பாருங்கள். இதில் என்ன வியப்பு என்கிறீர்களா ? அவர் எண்ணெய் வியாபாரம் செய்யும் வணிகர் குலத்தில் பிறந்தவர். இதைக் கருவறைக்கு வெளியில் இருந்து சேவித்தவர் ஒரு அந்தணர். அவர் இராமானுசர். முன்னவருக்குப் பின்னவர் சீடர். இது  வைணவம்.

தங்க விமானம்
தங்க விமானம்

என்ன தங்கம் போல் மிளிர்கிறதே என்று பார்க்கிறீர்களா ? ஆம், தங்க முலாம் பூசப்பட்ட விமானம் தான் அது. விமானத்துக்குத் தங்கம் பூசியாகி விட்டது. ஆனால் உள்ளங்களில் தான் இன்னும் அழுக்கு உள்ளது. இல்லாவிட்டால் வைணவர்களுக்குள்ளேயே இவ்வளவு பேதம் பார்ப்பார்களா ?  சரி, எழுந்திருங்கள்.

என்ன நினைவு இது ? என்ன அருகில் யாரையும் காணோம் ? இவ்வளவு நேரம் கூட நின்று யார் பேசியது ? நான் கண்ணில் கண்ட காட்சிகள் எங்கே ? இராமானுசர் எங்கே? தேசிகர் எங்கே ? திருக்கச்சி நம்பிகள் எங்கே ? மணவாள மாமுனிகளும் தேசிகரும் ஒன்றாக நின்று பெருமாளைச் சேவிக்கிறார்களா ? அதுவும் கலை பேதம் மிகுந்த காஞ்சீபுரத்தில் இரு கலைகளையும் ஒன்று சேர விட்டுவிடுவார்களா ? எந்த நூற்றாண்டு இது ?

திடுக்கிட்டு எழுந்தேன். வரதனை சேவிக்கக் கைகளை ஊன்றிக் கீழே குனிந்திருந்தேன். அப்படியே எவ்வளவு நேரம் இருந்தேனோ தெரியவில்லை.

மெள்ள எழுந்து முன்னம் இருந்த சன்னிதியை நோக்கினேன்.

கூப்பிய கையுடன் நின்றுகொண்டிருந்தார் கருடாழ்வார், சிலை வடிவில்.

ஒருவேளை கூட இருந்து பேசியது அவரோ ?

கோவிலுக்குக் கிளம்பும்போதே மனைவி சொன்னாள்,” கொஞ்சம் பொங்கல் சாப்பிட்டுவிட்டுப் போங்கள்”, என்று. நான் தான் அவசரமாகக் கிளம்பி வந்து, பசி மயக்கத்தில் இப்போது தென்கலையாரும் வடகலையாரும் ஒன்றாகப் பிரபந்தம்
சேவிப்பது போல் அதுவும் கஞ்சீபுரத்தில் சேவிப்பது போல், ஐயங்கார்களுக்கு ஜாதி வித்யாசம் இல்லை என்றெல்லாம்…

சே, என்ன ஒரு ஹலூசினேஷன்.

Christianity and Caste – book review

Brahmin Christians should adhere to the following :

  1. Should not eat out of the hands of Velala and Nadar christians
  2. Should not eat beef, fish and eggs in public
  3. Should sport a sacred thread
  4. Should Apply sandal paste on their forehead
  5. Should employ only upper caste Christians as their servants
  6. Should not eat or drink in public view.
  7. Should not be seen consuming alcohol.
  8. While on travel should eat and drink from behind a screen.
christianity and casteism
christianity and casteism

The above are the injunctions prescribed to Hindu Brahmin converts  who have become christian priests. And who prescribed these ?  Rev. Roberto de Nobili an Italian missionary in AD 1609. Don’t be surprised at the term ‘brahmin-christian’. These improbable classes did exist during the origins of Christianity in India and continue till date.

These and many more of such shocking truths are made evident by Prof. Sivasubramanian, the Marxist scholar and researcher in his Tamil book ‘கிறித்தவமும் சாதியும் ‘ ( ‘Christianity and Caste’)

You might think that the very purpose of getting converted to Christianity has been defeated if one still is a brahmin even after becoming a christian. That is precisely the case. Caste system has reigned supreme in Christianity in India, as it had been reigning supreme in Hinduism then and now. Caste has been a major classification even in Christianity. While seemingly opposing the caste system in Hinduism, christian missionaries have covertly and overtly converted hindus en-masse on caste grounds.

Prof. Sivasubramanian has done pioneering work in this regard. He exposes the depths of caste classification in Christianity and provides clinching evidence that spans 500 years of documentation. He is un-biased and objective and never deviates from the main point – Casteism and Christianity.

He compares the caste system in Hinduism and Christianity and concludes that caste behaves in the same manner, irrespective of the religion it is associated with.

He takes the case of a village called ‘Vadakkankulam’ in South Tamil Nadu, India and traces the history of the village church and the changes that happen to the church as time advances. We are treated to many pages of amazing evidence of the different caste based discrimination that was prevalent in the parish, how each community fought with the other on caste basis irrespective of the fact that Christianity was not supposed to have helped the cause of caste system, how different communities filed cases against one another and the case details and in the end, the stupidity of all that.

Vellala Christians file a case against Nadar Christians asking  Nadars not be seated in a particular place inside the church. Sakkiliar Christians appeal to the Fench / British authorities alleging discrimination by the Parish priest. Pillaimar Christians file a case against Nadar Christians asking them not to use their street. Prof. Sivam quotes as evidence many such cases and also provides detailed judgments to substantiate the prevalence of caste system in Christianity in India.

The learned prof also provides some interesting details on the methods used by the missionaries for conversion of caste hindus like the brahmins. He particularly quotes De Nobili, the Italian missionary who wore a sacred thread like the hindu brahmins. While hindu brahmins wore three threads across their body, De Nobili wore five – three to signify the father, son and the holy ghost and two more to signify Jesus’s body and soul. He ate out of the hands of upper caste converts, was vegetarian and sported a sandal paste on his forehead like caste hindus. Additionally he wore ochre robes and had a stick with a flag ( the stick is called ‘dhandam’ in Hindu ascetic order ). In every way, he wanted to resemble a brahminical sanyasi ( holy man) and thereby attract hindu brahmins into his fold.

De Nobili went further ahead and created a fifth Veda in addition to the four Hindu sacred texts. He called that ‘Yeasu Sura Vedam’. He wrote in Sanskrit so that Hindu Brahmins would get converted based on that feature as well.

Prof. Sivam’s book is a worthy read for anyone interested in the early origins of Christianity in South Tamil Nadu, India.

If you are encountered with a story that Christianity didn’t practice caste system and un-touchability, offer this book as answer.

The English translation of this book is available as ‘The crusade against caste domination in the holy family church at Vadakkankulam’ by Dr.Balasubramanian.

Curd rice and pickle mean software and finance ?

Ram continued thus :

‘Bharat Ram cannot be a comic artist for the simple reason that he would need to earn his
living. And being a comic artist, a tambrahm cannot earn his living unless he is enormously wealthy’, he paused.

‘What has wealth got to do here ? Suppose I don’t bequeath anything to him, should he not be a comic artist ?’, I said, and added ,’ not only tambrahm, anybody that needs to live on comics alone without being wealthy would suffer. Is that not so?’

‘Not really. A tambrahm in that situation will suffer more than anybody else. And that is the essence of being a tambrahm’, he said with a vicious smile.

I waited for him to continue though I knew he was on the right path.

‘Saar, the very quality of a tambrahm is to be jealous all his life. And if a tambrahm has a
special quality that the rest of them don’t have, then 99% of the time the gifted tambrahm
would be destroyed just by being ridiculed and stymied by the rest of the crowd. What matters to a tambrahm is conformance. He expects the entire crowd to look, act and behave in the same manner. If one deviates citing special quality, he would be pulled down and trampled. And that would happen to the comic genius’, he said.

I didn’t like what he said for that was true.

Tambrahms want to look and behave alike. They have similar intelligence and are tuned to work in similar manner because they have similar up-bringing. A well to do tambrahm and an poor tambrahm have these similar characteristics. And they all have similar urge to overcome hazards and come out on top. And the means they adopt to do that are also similar. And so they conform to expected behaviour.

So, when a tambrahm has an unique trait and tends to behave in a peculiar fashion and hence does not conform to herd behavioural standards, he is trampled and crushed. So there this comic artist stuff for Bharath Ram would not be agreed in the community for tambrahms are expected by the tambrahm society to be either a software engineer or a finance professional and hence be in the US.

Probably software and finance are the byproducts of thayir sadham and mangai urukai ( curd rice and mango pickle ) – or so it seems.

Ram continued further.

( to be continued )

Cartoonist as a cartoon character in govt ?

I tried to continue after Ram’s bouncer on R.K.Laxman. I thought for a few seconds and hit on this.

‘Ram, what would R.K.Laxman do in Tamil nadu govt ? Where would he fit in? He is an artist, a cartoonist. What does a cartoonist do in a government job ? Normally government consists of cartoon characters and not the cartoonist himself’, I said triumphantly.

My reasoning was, being a cartoonist needed creativity and genius but being a cartoon character didn’t .

‘Saar, government has cartoon characters because people like Laxman are not part of it. Laxman is not part of it because he is not allowed to be part of it’, Ram said.

‘Who stops Laxman from being part of the government? Why does he need only to be a government employee? Why does he not play a role in the government itself by taking a part in the political system that creates the government?’, I said, admiring myself in the process.

‘Saar, you are being smart but not practical. When Laxman cannot even be a simple civil servant because he is excluded, how do you expect him to get elected and be in the government ?’, Ram said with logical cynicism.

‘You have a point. But if he would not join the government, he should not complain. He needs to fight in the street and dirty his hands, for he has been in his comfort zone for far too long’, I suggested, though not being convinced myself.

‘So Saar, that is why Laxman wants to go to America where they don’t scan his body to locate his thread but scan his head to see if he has a brain’, Ram said.

I wished I had said that. But I still continued.

‘Ram, your Laxman cannot escape from motherland just because he is being excluded. Should he not do his duty ?’, I said though I myself felt very feeble.

‘Saar, Laxman wants to play his role. But he is ridiculed and riled for what he is. People who are not what he is made of, rile him and reduce him to a piece of paper. So he escapes to America so that he can lead his peaceful life with curd rice and mango pickle’, said Ram in a boisterous manner.

Curd rice and mango pickle are staple diet of tambrahms. Give him the world and he would say it is not complete without the curd rice and pickle combination. True blue tambrahms love curd rice with un-ripe mango that is soaked in salted water. Salted lemon pieces could substitute mango, but that would be an exception than a rule.

I didn’t have an option but to agree with Ram. And I continued thus :

‘Ram, how does Bharat Ram’s career choice as a comic artist fit into the scheme of things here?’, I asked as a matter of fact.

Ram stared at his iPhone for a while and then started to answer.

( to be continued )

சிலை திருட்டும் திராவிடக் கட்சிகளும்

‘சிறையில் இருக்கும் தெய்வங்கள் சந்தோஷப்படும்’ பதிவின் விளைவு இன்னொரு கேள்வி. அதற்கு எனது பதில் இதோ.

கே : சிலை திருட்டுக்கும் திராவிடக் கட்சிகளுக்கும் என்ன தொடர்பு ? வட மாநிலங்களில் திராவிடக் கட்சிகளா ஆட்சி செய்தன ? அங்கிருந்தும் சிலைகள் திருடப்படவில்லையா ?

தி.க.வும், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சிலை திருட்டு செய்தன என்று நான் சொல்லவில்லை. ஆனால் சிலைகள் திருட்டு நடைபெற வழிகோலின என்பது உண்மையே. ‘திராவிடக் கட்சிகள்’ என்று சொல்வது ஒரு குறியீடு மட்டுமே என்று
புரிந்துகொள்ள வேண்டும்.

விடுதலை வேள்வி நடைபெற்ற போது, காங்கிரஸ் கட்சியின் ஆளுமையை உடைக்க ஆங்கிலேயர் பயன்படுத்திய ஆயுதம் ‘நீதிக் கட்சி’ என்னும் பெரும் பணக்காரர்கள் கட்சி. பிராமணர் அல்லாத பெரிய ஜமீந்தார்கள், செல்வந்தர்கள் முதலியோரைத் தூண்டிவிட்டு இந்திய மக்கள் மீது காங்கிரஸ் கட்சியின் பிடியைத் தளர்த்த ஆங்கிலேய அரசு பெரு முயற்சி செய்து வெற்றியும் கண்டது. பிராமணர் அரசு அலுவலகங்களில் பெரும்பான்மை இடங்களில் பணியில் இருந்ததை சுட்டிக் காட்டி மற்றையோருக்கும் அப்பணிகளில் இடம் வேண்டும் என்று குரல் கொடுக்க வைத்தனர்
ஆங்கிலேயர்.

இப்பணியில் தெலுங்கு பேசும் ஜமீந்தார்கள் மிகப் பெரும்பான்மை அளவில் மனமுவந்து பங்கேற்றனர். அவர்களில் பனகல் அரசர் என்பாரும் உண்டு. பணம் உள்ளது, சொத்து உள்ளது, ஓரளவு கல்வியும் உள்ளது ஆனால் அரசுப்
பதவிகளில் இடம் இல்லை என்பது அப்பணக்காரர்களுக்கு ஒரு கௌரவப் பிரச்சனையாகத்தான் இருந்தது. அந்தக் குமுறலில் ஆங்கிலேயர் எண்ணெய் ஊற்ற, தீ நன்றாக எரிந்தது. அக்கட்சியில் இருந்த பலரில் ஈ.வெ.ராமசாமிப் பெரியாரும் ஒருவர். இவர் காங்கிரஸில் இருந்து வெளியேறி நீதிக் கட்சியில் சேர்ந்தார்.

கட்சி ஆரம்பித்தால் போதுமா ? செயல்பட வேண்டாமா ? அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு கேட்டுத் துவங்கினார்கள். வெள்ளை அரசும் ஊக்குவித்தது. பிராமணர் அல்லாதோர் அனைவரையும் ஈர்க்கும் விதமாக ‘பிராமண எதிர்ப்பு’ என்னும்
ஆயுதம் எடுத்தார்கள். கூட்டம் சேரத் துவங்கியது. ஆனாலும் காங்கிரஸ் பலம் குறையவில்லை. பிராமண எதிர்ப்பை அதிகமாக்கினார்கள். அதற்காக புராணங்களையும் இதிகாஸங்களையும் பழிக்கத் துவங்கினர். மக்கள் கவனம் அவர்கள்
பால் கொஞ்சம் திரும்பியது. இதிகாஸ எதிர்ப்பை ‘இந்து மத’ எதிர்ப்பு என்கிற அளவில் கொண்டு செல்லத் திட்டம் வகுக்கப் பட்டது. அதற்கு அம்மதத்தின் தர்மகர்த்தாக்களான பிராமணர்களையும் அவர்கள் சார்ந்த ஆசாரவாதத்தையும் கடுமையாகத் தாக்கினார்கள். நல்ல பலன் கிடைத்தது. ஆனால் கடவுள்களை இழிவு படுத்த முனையவில்லை.

இடையில் பெரியார் நீதிக் கட்சியில் இருந்து விலகினார். தன்பக்கம் அதிக கவனம் ஈர்க்க தெய்வங்களை வசைபாடத் துவங்கினார். மெள்ள பலன் தெரியத் துவங்கியது. சினிமா கால் ஊன்றிய காலம் அது. அண்ணாதுரை, கருணாநிதி முதலான வசனகர்த்தாக்கள் தலை தூக்கினார்கள். சமூக சீர்திருத்தம் என்ற போர்வையில் சனாதன தர்மமும்,
அவைகளின் களஞ்சியங்களான கோவில்களும் குறிவைக்கப்பட்டன.

பிராமண ஆசாரவாதம் குலைய அவர்கள் சார்ந்த கோவில்கள் அழிய வேண்டும். கோவில்கள் அழிய அக்கோவில் தெய்வங்கள் சிறுமை படுத்தப்பட வேண்டும். எனவே ஸ்ரீரங்கம், சிதம்பரம், மதுரை முதலிய கோவில்கள், அதன் தெய்வங்கள் வசை பாடப்பட்டன.

ருசி கண்ட பூனை சும்மா இல்லை. வினாயகர், இராமர் சிலைகள், படங்கள் இழிவுபடுத்தப்பட்டன. சிலைகளை இழிவு படுத்தினால் பாதகம் ஒன்றும் இல்லை என்னும் செய்தி பரப்பப்பட்டது. சிலைகளை அவமதிப்பது ‘முற்போக்கு’ என்று
அறியப்பட்டது. சிலைத் திருட்டுக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

கோவில் அறங்காவலர் குழுக்களில் இறை நம்பிக்கை இல்லை என்று பறைசாற்றிய கட்சிக்காரர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் கோவில்களையும், அதன் சொத்துக்களையும் சேர்த்து அழித்தனர் அல்லது அழிப்பதைத் தடுக்காமல் நின்றனர்.

கல்விக் கூடங்களில் ஆன்மீக வகுப்புக்கள் நிறுத்தப்பட்டன. தமிழையும் ஆன்மீகத்தையும் பிரித்துப் போட்டனர். தமிழ் உயிர் வெளியேறிய வெற்று உடலானது. தமிழ் சடலமானது.

இவை தமிழக அளவில்.

இந்திய அளவில் சுதந்திரம் கிடைத்த நேரம். நேருவின் ஆளுமையில் புதிய கல்விக் கொள்கை பரப்பப்பட்டது. ‘செக்யூலரிஸம்’ என்ற போர்வையில் சம்பிரதாயம், பரம்பரியம் பின் தள்ளப்பட்டன. அதற்கு இடதுசாரிக் கல்வியாளர்கள்
துணை புரிந்தனர். கல்விக்கழகங்களில் இடதுசாரிச் சிந்தனை பரவியது. இடதுசாரி போல் பேசுவது அறிவுஜீவித்தனம் என்று கொள்ளப்பட்டது. வல்லபாய் பட்டேல் சோமனாதர் ஆலயத்தைப் புதுப்பிக்க முயன்றதற்கு நேரு மறைமுகமாக
எதிர்ப்பு தெரிவித்தார். புராதன மடங்களின் ஆளுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அது பட்டேலின் முயற்சியால் கைவிடப்பட்டது. ( அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்ட போதே இந்த முயற்சி நடந்தது. ஆனால் காஞ்சி
பரமாச்சாரியார் அனைத்து மடங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து மாநாடு நடத்தி அவர்களுக்கு நேருவின் எண்ணத்தைப் புரிய வைத்தார். அவரது சில முயற்சிகள் காரணமாக சில ஷரத்துக்கள் மாற்றப்பட்டன. இன்று இந்தியப் புராதன மடங்கள் தங்களின் நித்திய நியமங்கள் தொடர முடிகிறதென்றால் பரமாச்சாரியார் காரணம்.)

ஆக பாரதப் பண்பாட்டை இழிவு படுத்துவது அரசு ஆதரவுடன் நடந்தேறியது. அவ்வாறு செய்வது மேதாவித்தனம் என்றும் பறை சாற்றப்பட்டது. பல மேதாவிகள் கல்வியாளர்கள் என்ற பெயரில் வலம் வந்தனர். இப்படிப்பட்ட கல்வி
நிலையங்களில் பயின்ற மாணவர்கள் கோவில்களை வெறும் கற்கூடங்களாகப் பார்க்கப் பழக்கப் படுத்தப்பட்டனர். இவை பற்றி ஆராய்ச்சி என்ற பெயரில் கட்டுரைகள் எழுதுவதும் சொற்பொழிவாற்றுவதும் அறிவுஜீவித்தனம் என்று கொள்ளப்பட்டது. இந்திய வரலாற்று ஆய்வகம் ( Indian Council of Historical Research ) என்னும் அரசு
நிறுவனம் சார்பில் பல புத்தகங்கள் எழுதப்பெற்றன. அனைவரும் இடது சாரி ஆய்வாளர்கள். ( இவர்களின் இந்திய வரலாறு பற்றிய ஆய்வுகள் பல 60 வருடங்களாக இன்னமும் எழுதப்படுகின்றன என்று தெரிவிக்கிறார் திரு. அருண் ஷௌரி.)

இவற்றால் நல்ல பலன் கிடைத்தது. கோவில்கள் கலைக் குறியீடுகளாகவும், தெய்வச் சிலைகள் அடக்குமுறைச் சின்னங்களாகவும் கண்டனர் புதிய கல்விக் கொள்கையில் பயின்ற மாணவர்கள். சிலைகளில் இருந்து தெய்வத் தன்மை நீக்கம் கண்டது இவர்கள் பார்வையில். கல்வியில் இருந்து அற நெறி வகுப்புக்கள் நீக்கம் கண்டன. இந்திய அளவிலும் அற அழிப்பு நடைமுறைப் படுத்தப்பட்டது.

இந்தப் பன்முனைத் தாக்குதலால் கோவில்கள் அழிவதும், சிலைகள் காணாமல் போவதும் பெரிய விஷயமாகப் பார்க்கப்படவில்லை. பல ஊர்களில் பல நூற்றாண்டுத் தேர்கள் திடீர் என்று எரிந்து அழிந்தன. விசாரணை நடைபெறவில்லை ( தேரழுந்தூர் தேர் உதாரணம் ).

படிப்படியாகப் பண்பாட்டுச் சிதைவை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மக்கள் பழக்கப்படுத்தப் பட்டனர். தெய்வச் சிலைகள் தெய்வத் தன்மை இழந்தன. மனிதர்களின் சிலைகள் உயிர் பெற்று வணங்கப் பட்டன. அது பகுத்தறிவு என்று கொள்ளப்பட்டது. சில தலைவர்களுக்கு அவர்கள் உயிருடன் இருக்கையிலேயே சிலைகள் வைத்தனர்.

வரலாறு படிப்படியாக அழிந்தது. முகலாய, இஸ்லாமிய மன்னர்கள் அழித்த பின்னும் மிச்சம் இருந்த வரலாறு, மக்களாட்சியின் மன்னர்களால் மறைமுகமாக அழிக்கப்பட்டது. அது முற்போக்கு என்று சொல்லபட்டது. மத மாற்றம் செய்யும் குழுக்களும் இவர்களுடன் சேர்ந்து செயல் பட்டன. இதனைத் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சியும், இந்திய அளவில் இடதுசாரித் தாக்கம் கொண்ட காங்கிரஸ் அரசுகளும் செய்தன.

விளைவு திவ்யதேசப் பெருமான்கள் கடத்தல் மூலம் வெளிநாட்டு செல்வந்தர்களிடம் சென்று சேர்ந்தனர்.

—————————————————————————————————————-

தொடர்புடைய பிற பதிவுகள் :

‘சிறையில் இருக்கும் தெய்வங்கள் சந்தோஷப்படும்’

‘பெருமாளைக் காக்கலாம் வாருங்கள்’

‘ஆள் தேடிக்கொண்டிருக்கிறார் பெருமாள்’

ஈ.வெ.பெரியாழ்வார் வாழ்க

குலசேகர ஆழ்வார் அரங்கனைப் பற்றி ஒரு பாசுரம் பாடினார்.

“திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும் கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே”

ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாளைக் கண்களால் ஸேவிக்கும் நாள் எந்த நாளோ ? என்று கேட்பது போல் பாடியுள்ளார் ஆழ்வார்.

இன்னொரு பாடல் உண்டு. அது திருமலைத் தெய்வத்தைப் பற்றியது :

“செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே ”

‘திருமலையில் உன் கோவில் வாசலில் ஒரு படியாக இருந்து உன் பவள வாய் அழகைக் காண வேண்டும்’ என்று ஆழ்வார் வேண்டுகிறார்.

ஆழ்வார்களை அப்படியே கொஞ்ச நேரம் விட்டுவிட்டு நேரடியாக விஷயத்திற்கு வருவோம்.

என்னை வாழ வைத்தவர் பெரியார். ஆம். உண்மை தான். என் தற்போதைய வாழ்க்கைக்குக் காரணம் பெரியார்.

இங்கு நான் பெரியார் என்பது ஈரோடு வெங்கட்ட ராமசாமி நாயக்கர் என்னும் பெரியாரைத்தான் சொல்கிறேன். அவர் மட்டும் இல்லை எனில் நான் நல்ல நிலையில் இருந்திருக்க முடியாது. என் சுயமரியாதையை இழந்து நின்றிருப்பேன்.
ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. நான் மட்டும் அல்ல, இன்னும் பலர் இன்று நல்ல முறையில் வாழக் காரணம் பெரியார் தான். நாளை பலரும் நல்ல வாழ்க்கை அடையக் காரணமும் அவரே தான்.

நினைத்துப் பாருங்கள். 70 ஆண்டுகளுக்கு முன் இருந்த பிராமண சமூகம் எப்படி இருந்தது ? உட்பூசல்களும், வடிகட்டிய மூட நம்பிக்கைகளும், அரசு வேலை அல்லது அடுப்படி வேலை என்கிற வட்டத்துக்குள் மட்டுமே இருந்த சமூகமாக இருந்தது அது. கணவனை இழந்த அச்சமூகப் பெண்கள் இருந்த நிலை என்ன ? இன்று அந்த சமூகம் இருக்கும் நிலை என்ன ? பிராமணர்களை ஒன்றுபடுத்தியது பெரியார். உட்பூசல்களால் பிளவுபட்டிருந்த சமூகம் ஓரளவு ஒன்றானது.

தற்போது யானைக்கு எந்த ‘திருமண்’ போடுவது என்று எந்த வாசுதேவாச்சாரியாரும் கோர்ட்டுக்குப் போவதில்லை. இரண்டு காரணங்கள் : ஒன்று, யானைகள் இல்லை. இரண்டு, கோர்ட்டுக்குப் போக வேண்டியவர்கள் அமெரிக்கா போய்விட்டார்கள். இரண்டாவதற்கான காரணம் பெரியார்.

எண்ணிப் பார்க்க வேண்டும் பிராமணர்கள். இன்று பன்னாட்டு வங்கிகளிலும், ஆப்பிள், கூகிள், நாஸா முதலான நிறுவனங்களில் நல்ல நிலையில் இருக்கும் இவர்கள், பெரியார் இல்லாதிருந்தால் என்ன நிலையில் இருந்திருப்பார்கள் ? தமிழக அரசு நிறுவனம் அல்லது அலுவலகம் ஏதாவதில் எழுத்தர் பணி செய்துகொண்டிருப்பார்கள். அல்லது புரோகிதம் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள். இந்த உலகளாவிய பரந்த நிலை கிடைத்திருக்குமா ?

பெரியார் இருந்ததால் கல்வியில் அவர்கள் 100க்கு 110 மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அந்த உத்வேகம் யார் கொடுத்தது ? யாரால் அமைந்தது அந்த உந்து சக்தி ? பெரியாரை மறக்கலாமா ?

ஆங்கிலத்தில் ‘Complacency’ என்று சொல்வர்கள். ‘Comfort Zone’ என்னும் வளையத்திற்குள் இருந்துகொண்டு சுகமாக இருந்திருப்பார்கள் அல்லவா ? ஆனால் பிராமணர்களின் அந்த ‘Comfort Zone’ஐ உடைத்தெறிந்தவர் பெரியார்.

யாருமே வழிபடாத பிள்ளையாரை உடைத்து, அதனால் வீதிக்கு ஒரு பிள்ளையார் கோவில் ஏற்படுத்த உத்வேகம் அளித்தவரை மறக்கலாமா ? நன்றி மறக்கலாமா ? மறப்பீர்களா ? மறப்பீர்களா ? (‘அம்மா’ பணியில் வாசிக்கவும்)

பாம்பை அடிக்காமல் விட்டுவிட வேண்டும் என்று சொல்லி அதனால் பாம்புகளை வாழவைத்த அந்த மகானை மறக்கலாமா ? ஆனால், பாம்பை விட்டு உங்களை அடிக்கச் சொன்னதால் தானே நீங்கள் வேறு மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் சென்று வாழ்க்கையில் வேறூன்றினீர்கள் ? அந்த மகானின் உபகாரத்தை மறக்கலாமா ?

யார் கதையும் வேண்டாம். என் தந்தையார் தனது சாதியின் காரணமாக அலுவலகத்தில் மேலே செல்ல முடியாமல் ஒரே இடத்தில் சில பத்து ஆண்டுகள் ஸ்திரமாக இருந்ததால் தானே நானும் என் தம்பியும் ஒரே பள்ளீயில் ஸ்திரத்தன்மையுடன் படித்தோம். மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த பலருக்கு நல்ல கல்லூரிகள் கிடைக்கக் கண்டு,
அதனால் மிகுந்த பொறுமையைக் கையாளும் மனவுறுதியை அளித்த மகானை மறக்க முடியுமா ?

அவர் ஆசீர்வாதம் இல்லை என்றால் கடந்த 20 ஆண்டுகளில் ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கா என்று இந்த கீழ் மத்தியதர வகுப்பைச் சார்ந்த நான் சென்று பணிபுரிந்திருக்க முடியுமா ?

ஒன்றும் வேண்டாம். வெறும் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே கற்றிருக்க வேண்டிய எனக்கு, இன்று ஹிந்தி, ஓரளவு மராட்டி, ஜப்பானிய மொழி என்று பரிச்சயம் ஏற்பட்டு இருக்க முடியுமா ? குமாஸ்தா வேலை செய்திருக்க வேண்டிய நான் இன்று கணிப்பொறியில் எழுதுகிறேன். காரணம் யார் ? அந்த மகான் அல்லவா ?

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்றே கற்றும் பழகியும் வந்த நான், பள்ளியிறுதியாண்டு முடிந்தபின் ‘சாதி என்பது என்ன?’ என்பதை உணர்த்திய அந்தப் பகலவனை மறக்க முடியுமா ? கண் திறந்தவரை தூஷிக்கலாமா என்ன ?

பிட்ஸ்பெர்க் ஸ்ரீநிவாசர் கோவிலுக்குச் செல்லும்போதெல்லாம் பெரியாரை நினைக்க வேண்டாமா ? டெக்ஸாசில் மீனாட்சியைத் தரிசிக்கும் போதெல்லாம் ராமசாமியாரை எண்ண வேண்டாமா ? அவர் இல்லை என்றால் அமெரிக்கர்கள் ஸ்ரீநிவாசரையும் மீனாட்சியையும் கண்டிருப்பார்களா ? அல்லது ஸ்ரீனிவாசப் பெருமாள் அமெரிக்கா பார்த்திருப்பாரா ?

இந்த ஏப்ரல் மாதம் டெக்ஸாஸ் ( டல்லாஸ் ) போயிருந்தபோது அவ்வூர்ப் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர உற்சவம் நடந்து கொண்டிருந்தது. நான்கு பேர் பஞ்சகச்சம் உடுத்தி ஆழ்வார் பாசுரம் ஸேவித்துக் கொண்டிருந்தனர். அமெரிக்காவில் ஆழ்வார் பாசுரம் ஒலிக்கச்செய்வது சுலபமா ? சர்க்கரைப் பொங்கலுடன் புளியோதரையும் கிடைத்தது. அன்னமிட்டவரை நான் மறக்கலாமா ?

109-வது திவ்யதேசமாக அமெரிக்காவை ஆக்கியவரை மறக்கலாமா ?

வைக்கம் என்னும் ஊர் இருக்கிறது என்பதை உலகுக்குக் காட்டிய உத்தமர் அல்லவா அவர் !

இதெல்லாம் போகட்டும். ‘காங்கிரஸ் ஒழியவேண்டும்’ என்று தீர்க்க தரிசனத்துடன் ஆசீர்வாதம் செய்த மகான் அல்லவா அவர் ! இப்போது அது நிறைவேறியுள்ளதே. அவரைப் பாராட்ட மனம் இல்லையே உங்களுக்கு !

அவருக்கு இருந்த நகைச்சுவை உணர்வு யாருக்கு உண்டு ? கடவுள் இல்லை என்று சொன்னார். ஆனால் அதே சமயம் அனைவரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்றும் சொன்னார். சிரிக்காமல் சொன்னார். பூசாரிகளை ஏசினார். ஆனால் அனைவரும் பூசாரிகள் ஆக வேண்டும் என்றும் சொன்னார். இன்றும் அதே நிலை தான் அவரது வழி வந்தவர்களும் கையாள்கிறார்கள். ஒரே விஷயத்தில் இரண்டு நிலைகள் எடுப்பதில் குருவுக்கு சிஷ்யன் சளைத்தவன் இல்லை என்று உணர்த்துகிறார்கள். அந்தக் குருவை மறக்கலாமா ? மன்னிக்கவும். ‘குரு’ என்பது வடமொழி. ஆகவே ‘டீச்சர்’ என்று தமிழ்ப்
படுத்திப் படிக்கவும்.

‘பறைச்சி இரவிக்கை போடுவதால் தான் துணிப்பஞ்சம் வந்தது’ என்று அரிய உண்மையைக் கண்டுபிடித்தார். நோபல் பரிசுக்குரிய அந்தக் கண்டுபிடிப்பைப் பாராட்ட வேண்டாம், தூஷிக்காமல் இருக்கலாமே ஸார்,

ஆனால் ஒன்று. ‘தி.மு.க. வை ‘கண்ணீர்த்துளிகள்’, ‘கூத்தாடிகள் கழகம்’ என்று ஒளிவு மறைவில்லாமல் சொன்னார். அந்த நேர்மை எனக்குப் பிடிக்கும். இதையும் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

திருக்குறள் பற்றி அவர் செய்யாத அர்ச்சனை இல்லை. அப்படித் தமிழ் வளர்த்தார்.

அது போகட்டும். கண்ணகியை ‘தே**யாள்’ என்று வாழ்த்தினார். என்னே உயர்ந்த மரபு !

எது எப்படியோ, எனக்கும் இன்னும் பலருக்கும் நல்ல வாழ்க்கை அமைய உதவினார். அவர் தமிழைத் திட்டியதால் எனக்கு ஆழமாகத் தமிழ் படிக்க ஆர்வம் பிறந்தது. இராமனையும் கம்பனையும் வசை பாடியதால் நான் அவர்களில் ஆழ்ந்தேன்.
ஹிந்தியை எதிர்த்ததால் அதைப் பேசக்கற்றுக் கொண்டேன். ‘பூணூலை அறுப்பேன்’ என்று சொன்னதால் அது பற்றியும் ஆன்மீகம் பற்றியும் மேலும் படிக்கத் துவங்கினேன்.

அவர் ஒழிக்க நினைத்த அனைத்தும் தழைத்தோங்கியது – காங்கிரஸ் தவிர.

இத்தனை நையாண்டி செய்தாலும் அவரிடம் எனக்குப் பிடித்தது சில உண்டு.

நேர்மை. மனதில் இருந்ததை மறைக்கமல் அப்படியே பேசும் பாங்கு. இறுதி வரை தனது நம்பிக்கையில் உறுதி.

அவர் கடவுள், வேதம், புராணம் குறித்துச் சொன்னது எதுவும் புதிதல்ல. அனைத்தும் ‘ஸார்வாகம்’ என்னும் பிரிவில் உள்ள இந்திய ஞான மரபே. ஆகவே ‘ஸார்வாகர்’ களின் ஒரு அவதார முனிவராகவே அவரை நான் பார்க்கிறேன்.

விபீஷணனைக் கண்காணிக்க ரங்கநாதனாக தெற்கு பார்த்துப் பள்ளிகொண்டுள்ளார் பெருமாள். ஸ்ரீரங்கம் ரங்கநாதரைப் பீரங்கி கொண்டு பிளக்க வேண்டும் என்று சொன்னவர் இன்று அதே கோவிலுக்கு முன்னர் பதிமூன்றாவது ஆழ்வாராக
நின்றுகொண்டிருக்கிறார். பூலோக வைகுண்டத்தில் பெருமாளை ஸேவித்தபடியே இருக்க எல்லாருக்கும் கொடுப்பினை இருக்காது. கோவிலுக்கு உள்ளே செல்ல அரசு காசு கேட்கிறது. செலவும் மிச்சம், புண்ணியமும் லாபம் என்று வாசலிலேயே நிற்கிறார்.

கட்டுரையின் துவக்கத்தில் படித்த குலசேகர ஆழ்வாரின் வேண்டுதல் என்ன ? கோவில் வாசலில் கல்லாய், படியாய் இருக்க வேண்டும் என்று வேண்டுகிறார். அவருக்குக் கிடைக்கவில்லை; இவருக்குக் கிடைத்துள்ளது அந்த பாக்கியம்.

எனவே ஆழ்வாரான பெரியார் திருவடிகளில் தெண்டனிட்டு வணங்குகிறேன்.

பி.கு: பிராமணர்கள் என்ற பிரிவினர் இந்திய சமூகத்தில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்தார்கள். இப்போது அனைவரும் வைசியரே. அனைவரும் ஏதாவது தொழில் மட்டுமே செய்கிறார்கள் – ஒன்று பொருளை விற்கிறார்கள் அல்லது அறிவை விற்கிறார்கள். இரண்டும் இல்லாதவர்கள் அரசியலில் சேர்கிறார்கள். எனவே இக்கட்டுரையில் ‘பிராமணர்கள்’ என்ற சொல்லை ‘மூதாதையர் பிராமணர்களாக இருந்தவர்கள்’ என்ற பொருளில் புரிந்துகொள்ளவும்.

வைணவம் – இராமானுசன் எனும் சம தர்மன்

வைணவம் மீது சாமானிய மக்கள் கவனம் திரும்பியதைச் சென்ற அத்யாயங்களில் கண்டோம். அந்தக் கவனத்தை ஒரு தேர்ந்த நவீன நிர்வாகத் திறன் உள்ள நிறுவனத்தின் தலைவர் போல் ஆற்றுப்படுத்தி வைணவம் ஒரு மாபெரும் எழுச்சியுடன் மேலோங்க வழி வகுத்தவர் இராமானுசர். இவரது காலம் கி.பி.1017-1137.  நீண்ட ஆயுள் வாய்க்கப்பெற்ற அவர் முதலாம் இராசேந்திரன் துவங்கி இரண்டாம் குலோத்துங்கன் காலம் வரை வாழ்ந்துள்ளார். இந்நீண்ட ஆயுளில் செயற்கரிய செயல்கள் செய்து வைணவம் தழைக்கச் செய்தார் இராமானுசர்.

இராமானுசரின் தத்துவம் விசித்டாத்வைதம். இது சங்கரரின் அத்வைதத்தில் இருந்து வேறுபட்டது. இந்தத் தத்துவத்துக்கும்  ஜைன, பௌத்தத் தத்துவங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் மிகவும் சுவாரசியமானவை. ஆனால் கொஞ்சம் ஆழமானவை. இவை பற்றித் தனியான ஒரு பதிவில் காண்போம். தற்போது இராமானுசர் மற்றும் அவரது வழிமுறைகள் பற்றி மட்டும் பார்ப்போம்.

இராமானுசரின் சம காலத்தவரான கருட வாகன பண்டிதர் என்பவர் எழுதியுள்ள ‘திவ்ய சூரி சரிதம்’ என்னும் நூல் அக்கால நிகழ்வுகளைப் பட்டியலிடுகிறது. அவற்றிலிருந்தும் இராமானுசரின் பிற்காலத்தில் தோன்றிய மற்ற வைணவ ஆச்சாரியர்களான பிள்ளை லோகாச் சாரியார், வேதாந்த தேசிகர் முதலியோர் உரைகளின் வாயிலாகப் பல விவரங்கள் அறிகிறோம்.

வேளாண்மை சாராத மற்ற தொழிலாளர்களைத் தன் வயம் ஈர்த்தது வைணவம் என்று சென்ற பதிவுகளில் பார்த்தோம். இவை ஆழ்வார்கள் காலமான கி.பி. ஆறு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுகள் வரை மட்டும் நிகழவில்லை. அதற்குப் பின் வந்த இராமானுசர் இந்த மாற்றங்களை முன் நகர்த்திச் சென்றார்.

வைதீக அத்வைத மரபில் தோன்றிய அவர் பிறப்பால் அத்வைதி. கல்வி கற்கும் போது அத்வைதத்தின் தத்துவம் சரியல்ல என்று உணர்ந்தார். அவரது ஞானத்தின் அடிப்படையில் அவரது அத்வைத குருவிடம் வாதிட்டார். அவரிடமிருந்து வெளியேறி ஞானத் தேடலில் ஈடுபட்டார். சாதி அடிப்படையிலான வேறுபாடுகள் உண்மை இல்லை என்று உணர்ந்தார்.

ஆழ்வார் பாசுரங்களின் அர்த்தங்களை உணர்ந்த அவர் சாதி வேறுபாடுகள் களைய வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். பொருளியல் நோக்கில் ஆராயும் மார்க்சீய எழுத்தாளர்கள், இந்த ஒருங்கிணைப்பு முயற்சி உற்பத்திப் பெருக்கத்திற்கான ஒரு ஆட்கொணர்வு என்று கூறுகிறார்கள். அவர்களைச் சொல்லிப் பயனில்லை. எதையுமே எதிர்மறையாகப் பார்த்தே பழகி விட்டவர்கள் அவர்கள்.

இராமானுசர் திருக்கச்சி நம்பி என்னும் வைசிய ( வாணிக ) குலத்தவரைக் குருவாகக் கொண்டார். அவரிடமிருந்து வைணவத் தத்துவங்களைக் கற்க விழைந்தார். திருக்கச்சி நம்பி முதலில் தயங்கினார். இராமானுசர் அவருக்குத் தைரியம் ஊட்டி, வேதத்தின் உட்பொருளை அறியாது வெற்று ஆசாரங்களைப் பறை சாற்றும் மக்கள் குங்குமம் சுமக்கும் கழுதைகள் போன்றவர்கள் என்று எடுத்துரைத்து அவரிடம் வேதாந்தப் பாடங்கள் பயின்றார்.

பிறிதொரு முறை பெரிய நம்பி என்னும் மற்றோர் ஆச்சாரியாரிடம் மேலும் பாடம் கற்க விழைந்தார். ஆனால் பெரிய நம்பியை ஜாதிப் பிரஷ்டம் செய்து வைத்திருந்தார்கள். ஏனெனில் அவர் மாரநேரி நம்பி என்னும் நான்காம் வர்ணத்தவருக்கு ஈமக் கிரியைகள் செய்திருந்தார். இதுபற்றிய விவாதத்தில் சாதியைப் பற்றிய சுவையான விளக்கம் வருகிறது. பெரிய நம்பி கூறுவது போல் அமைந்துள்ள பகுதி இது :

“இராமாயணத்தில் ஜடாயு என்னும் கழுகிற்கு ஈமக் கிரியைகள் செய்த இராமனை வணங்கலாம் என்றால், பணிப்பெண்ணின் மகனான விதுரனுக்கு தனது சிறிய தந்தை என்ற அந்தஸ்து கொடுத்து தருமன் அந்திமச் சடங்குகள் செய்வது சரி என்றால் நான் செய்தது ஒன்றும் தவறு இல்லை”.

திருக்கோஷ்டியூர் என்னும் ஊரில் இருந்த திருக்கோஷ்டியூர் நம்பி என்ற பெரியவரிடமிருந்து வைணவ தத்துவ ரகசியங்களைக் கற்று அவற்றை யாரிடமும் கூறக் கூடாது என்ற சத்தியத்தை மீறி அனைவருக்கும் உபதேசித்தார். அதிர்ந்து போன திருக்கோஷ்டியூர் நம்பி ,”ஆச்சாரிய அவமரியாதை உனக்கு நரகம் அளிக்கும்”, என்று கூறியபோது,” நான் ஒருவன் நரகம் அனுபவித்துவிட்டுப் போகிறேன். இதனால் பல ஆயிரம் பேர் இறைவனை அடைவர்”, என்று கூறி அக்காலத்தில் மாபெரும் புரட்சி செய்தார்.

இராமானுசர் தனது வாதத் திறமையால் பலரையும் வைணவத்தின் பால் ஈர்த்துக்கொண்டிருந்தார். சைவ அரசன் குலோத்துங்கன் அவரைக் கொல்ல சதி செய்து தனது அரசவைக்கு வரவழைத்தான். ஆனால் அவரது சீடரான கூரத்தாழ்வார் இராமானுசரின் காவி உடை தரித்துச் சென்று தனது கண்களை இழந்தார்.  இராமானுசர் திருவரங்கத்திலிருந்து கிளம்பி கர்நாடக மாநிலம் சென்றார். செல்லும் வழியில் தொண்டனூர் என்னும் ஊரில் ஒரு ஏரி அமைத்தார் ( இன்றும் உள்ளது ). மேலே சென்று மேல்கோட்டை என்னும் இடத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் தங்கினார். அவ்விடத்தில் இருந்த அத்வைத சமயம் சார்ந்தவர்களை வாதத்தில் வென்று வைணவராக்கினார். இவ்வூரில் இருந்த தாழ்ந்த குல மக்களை ‘திருக்குலத்தார்’ என்று அழைத்து அவர்களுக்கு உபநயனம் என்னும் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி செய்து அவர்களை வைணவராக்கினார். இவ்வாறு வைணவ சமயம் வளரக் காரணமானார். தனது அடியார் குழாத்தில் சாதி வேறுபாடு இல்லாமல் அனைவரையும் சேர்த்துக்கொண்டார். வில்லி தாசன் என்ற மல் யுத்த செய்பவரே அவரது பிரதான சீடரானார். உறங்காவில்லி தாசர் என்று அவருக்குப் பெயரிட்டார்.

இஸ்லாமியப் படை எடுப்பு  துவங்கிய காலம் அது. தில்லி இஸ்லாமிய மன்னனின் மகள் பிபிலகிமார் என்பவள் மேல்கோட்டை பெருமாளைத் தன் பிரியமான பொருளாகக் கருதி எடுத்துச் சென்றுவிட்டாள். அதனால் இராமானுசர் தில்லி சென்று மன்னனிடம் பேசி ‘செல்லப் பிள்ளை’ என்னும் பெயருடைய பெருமாள் விக்ரஹத்தைத் திருப்பிக் கொணர்ந்தார். மனம் உடைந்த முகமதிய இளவரசி தானும் கிளம்பி மேல் கோட்டை வந்து விட்டாள். பல வருடங்கள் வாழ்ந்து மேல்கோட்டையிலேயே இறந்தாள். அவள் பக்தியை மெச்சி இராமானுசர் ‘துலுக்க நாச்சியார்’ என்று ஏற்படுத்தி பெருமாள் கோவிலில் அவளுக்கு ஒரு சன்னிதியையும் அமைத்தார்.

பன்னிரண்டு வருடங்கள் கழித்துத் திருவரங்கம் திரும்பிய இராமானுசர் திருவரங்கக் கோவிலில் அன்றாட ஒழுக்கங்கள், உற்சவங்களை நெறிப்படுத்தி ‘கோவில் ஒழுகு’ என்று ஒரு கோட்பாட்டைக் கொண்டுவந்தார். திருவரங்கத்திலேயே துலுக்க நாச்சியாருக்கு ஒரு சந்நிதியும் அமைத்தார் ( இன்றும் உள்ளது ). வருடத்தில் ஒரு நாள் ரங்கநாதர் லுங்கி அணிந்து நாச்சியாருக்கு சேவை சாதிக்கிறார். அன்று அவருக்கு ரொட்டியும் வெண்ணெய்யும் தளிகை சமர்ப்பிக்கப்படுகிறது. இது முகமதிய மன்னர்களிடமிருந்து ஒரு பாதுகாப்பிற்காக என்று சில நோக்கர்கள் கூறுகிறார்கள். இப்படியும் அவர் வைணவத்தை வளர்த்தார் என்று கருத இடமுள்ளது.

இதில் நாம் கவனிக்க வேண்டியது ஒன்று உள்ளது. இஸ்லாமிய அரசைத் திருப்திப்படுத்த அவ்வாறு செய்தார் என்று கொண்டால் கூட, அதற்காக மாற்று மத இளவரசியைத் திருமாலின் மனைவியாக ஒப்புக்கொள்ள மிகப்பெரிய மனது இருந்திருக்க வேண்டும். இதற்கு அக்காலத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய எதிர்ப்புகளை நினைத்துப்பார்க்கவே வியப்பாக உள்ளது. சாதி சமரசம் தாண்டி, மிலேச்ச மதம் என்று கருத்தப்பட்ட ஒரு வெளி நாட்டு  மதம் சார்ந்த பெண்ணைத் தெய்வமாகக் கருதுவது என்பது முன்னெப்போதும் நிகழாத ஒன்றே.

இராமானுசர் செய்துள்ள மிகப் பெரிய சாதனை வைணவக் கோவில்களை ‘வைகானஸம்’ என்னும், ஆகம முறையிலிருந்து ‘பாஞ்சராத்ரம்’ என்னும் முறைக்கு மாற்றியது எனலாம். ஆகமம் என்பது கோவில் கட்டும் முறை, பூஜை விதிகள், வேத பாராயண விதிமுறைகள் முதலியன அடங்கும். வைகானசம் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்டது. ஆனால் பாஞ்சராத்ரம் என்னும் புதிய முறையில் கோவிலுக்குள் சாதீய முறைகள் தளர்த்தப்பட்டன. ஆழ்வார்கள், சமயப் பெரியவர்கள் முதலியோருக்குக் கோவிலுள் சந்நிதிகள் வைக்கலாம் என்பது போன்ற சமத்துவக் குறிப்புக்கள் பாஞ்சராத்ரத்தில் இடம் பெற்றன. இதன் மூலம் பல சாதிகளையும் சார்ந்த ஆழ்வார்கள் பின்னர் வந்த இராமானுசர், மணவாள மாமுனி, வேதாந்த தேசிகர் முதலியோருக்குக் கோவில்களுள் சந்நிதிகள் ஏற்பட வாய்ப்புக் கிடைத்தது. ( பாஞ்சராத்ரம் என்பது மகா விஷ்ணு ஐந்து இரவுகளில் உபதேசித்த வழிமுறை என்றும் கூறுவர் ).

தனது காலம் முடிவதற்குள் விசிஷ்டாத்வைதம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்று 74 மடங்களை அமைத்தார். அவர்களுக்கு சிம்ஹாசநாதிபதிகள் என்று பெயர். அவர்களில் அந்தணரும் பிறரும் இருந்தனர். இவர்களை ‘சாத்திய முதலிகள்”, “சாத்தாத முதலிகள்” என்று மக்கள் அறிந்தனர். ( சாத்துதல் – பூணூல் அணிந்திருப்பது ). இவர்களுக்குள் வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் தாஸ்ய நாமம் அளித்தார்.

சாத்திய முதலிகள் சிலர்: கூரத்தாழ்வார், மாடபூசி ஆழ்வார், சேட்லூர் சிறியாழ்வார், நெய்யுண்டாழ்வார். சாத்தாத முதலிகள் சிலர் : பட்டர்பிரான்தாசர், பிள்ளை உறங்காவில்லி தாசர், வானமாமலை தாசர்.

ஸ்ரீ ரங்கத்தில் பெருமாள் கோவிலுக்குக் கணக்கெழுத ஒரு வேளாளரை அமர்த்தி அவருக்கு சடகோப தாசன் என்று பெயரிட்டு கோவிலுக்குள் சமதர்மம் நிலை நாட்டினார்.

இராமானுசரின் வாழ்க்கையில் வியக்கத்தக்க பல நிகழ்வுகள் நடந்துள்ளன. அவை அனைத்தும் சாதி வேறுபாட்டின் அடிப்படையை அசைப்பதாகவே உள்ளன.

இராமானுசர் காலத்தில் தென்கலை, வடகலை என்ற பிரிவு இல்லை.

இராமானுசர் வரலாறே ‘தர்க்க வாதம்’ என்னும் பகுத்தறிவு வாதங்களின் கலவை என்றே கூறலாம். இருபதாம் நூற்றாண்டில் தாங்கள் நிகழ்த்தியதாகக் கூறும் பல சம தர்ம சமூக மாற்ற நிகழ்வுகளை ஆயிரம் ஆண்டுகள் முன்பே தனது கோட்பாடுகளாக நிறுவியவர் இராமானுசர். அவரைப்பற்றியும் அவரது செயல்கள் பற்றியும் வெளியே தெரிந்தால் தங்களது ‘பகுத்தறிவுப் பறை சாற்றல்கள்” சந்தி சிரிக்கும் என்பதால் இவை நமது கண்ணில் படாமலே மறைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்துகொள்ள பெரிய பகுத்தறிவெல்லாம் தேவை இல்லை.

விசிட்டாத்வைத தத்துவம் பற்றியும் அது மற்ற தத்துவங்களிலிருந்து எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பது பற்றியும் அடுத்த பதிவில் காணலாம்.

%d bloggers like this: