குளியல்

குளிக்கறதா வாணாமா ?

ஒவ்வொரு தபா சவாரி போக சொல்ல இதே ரோதனை தான். போன வருஷம் வரிக்கும் அம்மா இருக்க சொல்ல, ‘ சவாரி போற, நல்லா குளிச்சிட்டு ரீஜன்டா போ’ ன்னு சொல்லும்.

அது சரி இப்போ குளிக்கறதா வாணாமா ? குளிக்காம போனா கால் டாக்ஸி கெளம்பாதா என்னா ? இல்ல சவாரி தான் ஏற மாட்டானா ?

காலைல அஞ்சு மணிக்கி அடையாறு போய் கஷ்டமர பிக்கப் பண்ணினு, அப்டியே மாம்பலத்துல கஷ்டமரோட அண்ணனையும் இட்டுகினு சுண்ணாம்பு கொளத்தூர் போய்வரணும். நல்ல சவாரி தான். ஆனா குளிக்கணுமா ?

குளிக்காட்டா இன்னா ஆவும் ? ஒடம்பு சுத்தம் இருக்காது. அது சரி. மெட்றாஸ் வெய்யில்லே குளிச்சா என்ன குளிக்காட்டா என்ன ? ஒரு வழியா சவாரி போய் வந்து பொறவு குளிக்கலாம்.

அட இன்னாபா காலங்காலைல அடையாறுல இம்மாங்கூட்டம் ? மூணாவது தெருதானே சொன்னாங்க ? ஆங்.. அதோ அந்த தனி ஊடு தான். பார்ட்டி பெரிய பார்ட்டியா இருக்கும் போல. அடையாறுல தனி ஊடு வெச்சிருக்காங்கன்னா பெரிய கைதானே.

அட அய்யிரா ? ஏதோ விசேஷம் போல. தார்பாச்சி வேட்டி கட்டியிருக்காங்களே. அம்மிணியும் மடிசார் கட்டி வராங்க. நல்ல சகுனம் தான்.

ஆறு மணிக்கு மாம்பலத்துல என்ன கூட்டம் ? இந்த ஊர்ல எல்லாருமே மாம்பலத்துலதான் இருக்காங்களோ ?

‘இன்னா சார், குளிக்கலையான்னு கேக்கறீங்களா ? ஆமாம் சார். விடிகாலைல தண்ணி வர்ல. அதான் குளிக்கல. வேணும்னா சென்ட் அடிக்கட்டுமா சார் ?’

அட ராமா. இவுங்களுக்கும் தெரிஞ்சு போச்சே.

‘இன்னும் அரை மணி தான் சார். தாம்பரம் வந்துடும். பொறவு கால் மணில சுண்ணாம்பு கொளத்தூர் போயிடலாம் சார்’.

இன்னா கண்றாவிடா இது ? அண்ணனும் தம்பியும் என்ன பேசிக்கறானுங்க ? நல்ல விஷயத்துக்குப் போறானுங்க. ஏதோ கெரப்பிரவேசம் போல. ஆனா புது ஊடு கட்டினவங்களப்பத்தி இப்பிடி பேசுறாங்களே.

‘இதான் சார் அந்த தெரு. அதோ தெரிது பாருங்க அது தான் சார் அந்த ப்ளாட்டு. வாழை மரமெல்லாம் கட்டியிருக்காங்களே ’

அண்ணனும் தம்பியும் வீட்டுக்குள்ள போயிட்டாங்க. கொஞ்சம் காத்தாட வெளில நிக்கலாம்.

இந்த அய்யமார் வீட்டுக்கெல்லாம் போகக்கூடாது. வெளிலயே நின்னுக்கணும். எதுனா சொல்லுவானுவ. நமக்கு புரியாது. சாடையா சொல்லுவானுவ. வெளங்காத பயலுவ. அதான் எல்லா பேரும் அமெரிக்கா போயிட்டனுவ. ஒருவேள வெள்ளக்காரங்கிட்ட தீட்டு பாப்பானுங்களோ ?

ரெண்டு பேரும் என்ன பேச்சு பேசினாங்க காருக்குள்ள? ஏதோ இந்த வீட்டுக்காரங்க கடன் வாங்கினாங்களாம். ஆனா இப்ப வீடு வாங்கறாங்களாம். ஏக பொகச்சல் போல.

அட என்னப்பா ? போன வேகத்துல திரும்பி வராங்க. பின்னால ஓடி வார அம்மிணி இவுங்க போலவே இருக்கே. ஒரு வேள அக்கா, தம்பியா இருக்கலாம். ஆனா அழுவுது ?

‘வந்தவாள வாங்கோன்னு சொல்ல வக்கில்ல. அப்புறம் எதுக்குக் கூப்ட?’

‘இல்லடா கண்ணு தெரியல்லே. யார் வந்திருக்கான்னு புரியல்ல. வரச்சொல்லிட்டு வாங்கோன்னு சொல்ல மாட்டேனா?’

‘ஆமா ஆமா. கண்ணு தெரியாது, காது கேக்காது. பணம் வந்திருக்கோனோ, அதான் கண்ண மறைக்கறது’.

‘அட நாராயணா ! நான் தான் பாக்கல்லே, பின்னாடி நின்னுண்டிருந்தேன்னு சொல்றேனோனோ ? இவ்வளவு தூரம் வந்துட்டு இப்பிடிப் பேசாதேடா’.

‘இப்போ நாங்கள்லாம் உங்களுக்கு வேண்டாம். பணம் வந்துடுத்து. அடையார்லேர்ந்து வரோம். வந்தவாள வாங்கோன்னு சொன்னா பெருமை கொறஞ்சுடுமா ? இருக்கட்டும்.’

‘தோ பார்ரா, நான் முடியாம இருக்கேன். ஏதோ பிள்ளை வாங்கியிருக்கான் வீடு. வந்து ஆசீர்வாதம் பண்ணுவியா இப்பிடி  விடுவிடுன்னு போனா நன்னா இல்லே.’

‘எது நன்னா இருக்கு, எது நன்னா இல்லன்னு அவா அவாளுக்குத் தெரியும். நாங்க வறோம்’.

‘டே வேண்டாம்டா. எங்க சம்மந்தில்லாம் வந்திருக்காடா. எல்லாரும் பாக்கறாடா. அக்காவாத்துக்கு வரதுக்கு எதுக்குடா வரவேற்பெல்லாம்? நான் தான் பாக்கல்லேன்னு சொல்றேனே’.

‘உங்க சம்மபந்திக்கு முன்னாடி எங்கள அவமானப் படுத்தணும்னே தானே இப்பிடிப் பண்ணினே நீயும் அத்திம்பேரும். நன்னா இருங்கோளேன், யாருக்கு வேணும் உங்க மரியாத எல்லாம்.’

உள்ள போனவங்கள வான்னு கூப்பிடல போல. அந்தம்மா கண்ணு தெரியலேங்குது. இவுனுங்க கத்திட்டு வந்துட்டாங்க. கொஞ்ச நேரம் நல்ல காத்துல நிக்க முடியுதா ? என்ன பொழப்பு இது ?

‘என்னா சார் ? ரேடியோவா சார். யாரோ அய்யிரு சாமி பேசறாருங்க. வெக்கவா சார்?’

‘வேளுக்குடி கிருஷ்ணன் என்னமா சொல்றார் ? விசிஷ்டாத்வைத தத்வ ரத்னாகரம்னு பட்டம் குடுக்கலாம். உடம்பு வேற, ஆத்மா வேற. சுகம், துக்கம், சோகம், சம்ஸ்காரம், மரியாதை, அவமரியாதை எல்லாம் உடம்புக்குதான், ஆத்மாவுக்கு இல்லை. உடம்பு சாஸ்வதம் இல்லை. ஆத்மா தான் சாஸ்வதம். ஆகையால இந்த உலகத்துல நடக்கற காரியங்களால பாதிப்படையாம ‘ஸ்திதப் ப்ரக்ஞன்’ அப்பிடிங்கற ஸ்தானத்த நாம எல்லாரும் அடையணும்’ அடாடா என்ன வியாக்யானம். என்ன ஸ்பஷ்டம்?’

ஒண்ணும் பலன் இல்ல. குளிக்க வாணாம்னு முடிவு பண்ணிட்டேன்.

Why R.K.Laxman can’t get a govt job ?

‘What is Bharat going to do?’, Ram asked anxiously.

‘He wants to become a comic artist’, I said. ‘What ! Comics ? Why not an engineer?’, he exploded in surprise.

Bharat chipped in, ‘Because I want to write comics. If you want to become engineer, you become one’, he said and jumped off to play with his Lego pieces.

‘Oh no, you need to guide your child,Saar’, said Ram,’he wants to write comics ! How will he earn?’, he asked anxiously.

That is the basic problem. The instinct to safeguard livelihood so that once can eat one’s meal without having to starve. That is the primordial fear in any Tambrahm’s psyche. Tambrahm is an acronym for brahmins who are from the southern state of Tamil Nadu in India. The fear of survival, the fear as to from where the next meal would come, has been deeply entrenched in their psyche that this class of people have perfected the art of fearing livelihood.

And that makes them perfectly selfish. Let me continue with the conversation.

‘What is the problem in earning ?’, I asked as if not knowing what he meant.

‘What Saar, you don’t know the issues that we have to face in getting good colleges?’, he said. By ‘good colleges’ he meant good engineering schools run by the Government of India. These schools are rated high in the world and a graduate from one of these schools is bound to get an US visa either to study or work in the US. Most of the technical and software sector workers of Indian origin in the US would have been from many of these schools of excellence.

I tried to feign ignorance. So I said,’ What is the problem in getting into colleges? There are many now-a-days. And I need to see  what the child wants to do in life. Why thrust my opinion on him?’, I asked, for sure knowing that he would explode in explanation.

As expected he exploded.

‘Saar, have you acquired huge wealth ? Have you brought large swathes of land in Bangalore and Chennai that you can sell them to get into a college? How do you encourage your child to become a comic artist ?’. He couldn’t believe what he had heard.

He was mentioning the practice of the NRIs ( Indians that are not resident in India ) who buy land in the metro cities of India in the hope that once they decide to retire, they could sell land holdings to earn a post retirement livelihood. But he mentioned this in the context of planning a career for my kid.

‘Ram, I am not rich. But I don’t think I need to force any career option on the child. Let him choose his path. Any way, it is too early even to discuss about this with him’, I said.

‘So, Saar, please don’t allow him to choose such ridiculous jobs as being a comic artist. Make him an engineer and send him to the US. That is where we, tambrahms need to be in’, he pontificated.

That is the other problem with the tambrahms. If you are not in America, you are neither a Tam nor a Brahm – that is what they think. Therefore even during the first birth day of the child, tambrahm parents start dreaming about an American livelihood and IIT education for the child. Not knowing any of these, the child would be fast asleep in his bassinet.

I continued my talk with Ram. ‘So don’t you like R.K.Laxman’s cartoons ? Have you not enjoyed Madhan’s cartoons in Ananda Vikatan? Are they not brahmins ?’ I thought I had conquered Ram.

‘Saar, Laxman and Madhan are good, no doubt. They are brahmins, no doubt. But Ananda Vikatan and Times of India don’t have job reservation. That is why they got a job there. Suppose the Tamil Nadu government calls for a cartoonists’ position, do you think Madhan and Laxman would have got the job ?’

I had no answer.

But I continued in a different direction.

( to be continued )

IMG_0028.JPG

Why R.K.Laxman can't get a govt job ?

‘What is Bharat going to do?’, Ram asked anxiously.

‘He wants to become a comic artist’, I said. ‘What ! Comics ? Why not an engineer?’, he exploded in surprise.

Bharat chipped in, ‘Because I want to write comics. If you want to become engineer, you become one’, he said and jumped off to play with his Lego pieces.

‘Oh no, you need to guide your child,Saar’, said Ram,’he wants to write comics ! How will he earn?’, he asked anxiously.

That is the basic problem. The instinct to safeguard livelihood so that once can eat one’s meal without having to starve. That is the primordial fear in any Tambrahm’s psyche. Tambrahm is an acronym for brahmins who are from the southern state of Tamil Nadu in India. The fear of survival, the fear as to from where the next meal would come, has been deeply entrenched in their psyche that this class of people have perfected the art of fearing livelihood.

And that makes them perfectly selfish. Let me continue with the conversation.

‘What is the problem in earning ?’, I asked as if not knowing what he meant.

‘What Saar, you don’t know the issues that we have to face in getting good colleges?’, he said. By ‘good colleges’ he meant good engineering schools run by the Government of India. These schools are rated high in the world and a graduate from one of these schools is bound to get an US visa either to study or work in the US. Most of the technical and software sector workers of Indian origin in the US would have been from many of these schools of excellence.

I tried to feign ignorance. So I said,’ What is the problem in getting into colleges? There are many now-a-days. And I need to see  what the child wants to do in life. Why thrust my opinion on him?’, I asked, for sure knowing that he would explode in explanation.

As expected he exploded.

‘Saar, have you acquired huge wealth ? Have you brought large swathes of land in Bangalore and Chennai that you can sell them to get into a college? How do you encourage your child to become a comic artist ?’. He couldn’t believe what he had heard.

He was mentioning the practice of the NRIs ( Indians that are not resident in India ) who buy land in the metro cities of India in the hope that once they decide to retire, they could sell land holdings to earn a post retirement livelihood. But he mentioned this in the context of planning a career for my kid.

‘Ram, I am not rich. But I don’t think I need to force any career option on the child. Let him choose his path. Any way, it is too early even to discuss about this with him’, I said.

‘So, Saar, please don’t allow him to choose such ridiculous jobs as being a comic artist. Make him an engineer and send him to the US. That is where we, tambrahms need to be in’, he pontificated.

That is the other problem with the tambrahms. If you are not in America, you are neither a Tam nor a Brahm – that is what they think. Therefore even during the first birth day of the child, tambrahm parents start dreaming about an American livelihood and IIT education for the child. Not knowing any of these, the child would be fast asleep in his bassinet.

I continued my talk with Ram. ‘So don’t you like R.K.Laxman’s cartoons ? Have you not enjoyed Madhan’s cartoons in Ananda Vikatan? Are they not brahmins ?’ I thought I had conquered Ram.

‘Saar, Laxman and Madhan are good, no doubt. They are brahmins, no doubt. But Ananda Vikatan and Times of India don’t have job reservation. That is why they got a job there. Suppose the Tamil Nadu government calls for a cartoonists’ position, do you think Madhan and Laxman would have got the job ?’

I had no answer.

But I continued in a different direction.

( to be continued )

IMG_0028.JPG

நான் இராமானுசன் பகுதி 12

ஸரீரம் அஸக்தமாக இருப்பதாகவே நானும் உணர்ந்தேன். ரொம்ப நாழிகை வார்த்தை சொல்லியாகிவிட்டது. தத்துவ விசாரம், பாரத ஞான மரபுத் தேடல்கள் என்றால் நேரம் போவதே தெரிவதில்லை.

கூட்டம் கலைந்தது. மீண்டும் அடுத்த பௌர்ணமி அன்று ஸதஸ் * வைத்துக் கொள்ளலாம் என்று பலரும் அபிப்ராயப்பட்டனர். எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. அதனால் ஒரு அறிவிப்பு செய்தேன்..

‘அடுத்த ஸதஸில் நாம் பாரத ஞான ஸம்பிரதாயத்தை மேலும் ஆராய்வோம். அது வரை பண்டிதர்கள் நமது மடத்திலேயே தங்கியிருந்து மடத்தின் ஓலைச் சேகரிப்பு பண்டாரத்தில் இருந்து வேண்டிய ஓலைச் சுவடிகளைப் பார்த்துக்கொள்ளலாம். பொது மக்களும் தங்கள் சந்தேகங்களை முன்னமேயே தெரிவிக்கலாம். பண்டிதர்கள் அவை குறித்தும் தயாராவார்கள். யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகள் மற்றும் அவரது பரிவாரத்தினர் ஸ்ரீரங்கத்திலேயே தங்கி இருக்கலாம்’.

ஸ்ரௌதிகள் தான் அருகில் உள்ள மற்ற திவ்ய தேசங்களுக்குச் சென்று வர விருப்பம் தெரிவித்தார்.

சாயங்கால அனுஷ்டானங்கள் முடிந்து அவற்றின் பின் ஸ்ரம பரிகாரம் செய்துகொண்டிருந்த போது கூரத்தாழ்வார் வந்திருந்தார்.

‘தேவரீர் ரொம்பவும் வருத்திக்கொள்கிறது. இந்த விவாதங்கள் இப்போது முடியப்போவதில்லை. சற்று ஓய்வாக இருக்கப் பிரார்த்திக்கிறேன்’, என்று சொன்னார்.

‘சொல்வது சரிதான். ஆனால் ஆசார்யன் என்று ஒரு ஸ்தானம் வைத்துக்கொண்டு வழி சொல்லாமல் இருந்தால் எப்படி ? வேண்டிய மட்டும் அனைவரும் என்னிடமிருந்து வேண்டியதை எடுத்துக்கொள்ளட்டும். அதற்கு நானே தடையாக் இருக்க முடியாதே கூரா..நாளை கருட சேவை. அரங்கன் கருட வாகனத்தில் எழுந்தருளப் போகிறான். இந்த வருஷம் நான் சேவிக்கிறேன். அடுத்த வருஷம் எப்படியோ. எனவே இருக்கும் போதே முடிந்தவரை எல்லார் சந்தேகங்களையும் தீர்த்துவிட வேண்டும்’, என்று சொன்னேன்.

கூரன் விழுந்து ஸேவித்துச் சென்றார்.

நெடு நேரம் உறக்கம் வரவில்லை. பழைய நினைவுகள் வந்து சென்றன. அத்வைத ஸித்தாந்தத்தின் உயர்வு நான் கண்டு வியந்த ஒன்று தான். ஆதி சங்கரர் பௌத்த தத்துவத்தைஉம் தரிசனத்தையும் ஆழக் கற்று அதன் அடிப்படையிலேயே பௌத்த மதஸ்தருடன் வாதிட்டு பௌத்தர்களை வீழ்த்தினார். அவரது ‘விவேக சூடாமணி’ யில் பௌத்த மத கோப்புகள் உள்ளன. ‘சங்கர பாஷ்யம்’ பௌத்த ஸம்பிரதாயத்தை அதன் வழியிலேயே சென்று சாய்த்தது. இவரை ‘பிரஸன்ன பௌத்தர்’ என்றே அன்றைய அந்தணர்கள் அழைத்தனர்.

இளம் வயதில் என் முதல் ஆச்சார்யர் யாதவப் ப்ரகாஸர் அத்வைதியே. பெரும் ஞானஸ்தர். ஆனால் கொஞ்சம் முன்கோபி. ஆச்சாரிய நிந்தனை கூடாது தான். ஆனால் அவரது எண்ணங்கள் சரியானவை அல்ல. தனது கருத்துக்கள் மட்டுமே சரியானவை என்பதில் அவர் உறுதியாயிருந்தார். ஆனால் நமது ஸம்பிரதாயம் எப்போதுமே வாதம், பிரதிவாதம், ஞான விசாரம் முதலியனவற்றை ஆதரித்தே வந்துள்ளன. ஒருபோதும் ஒரே கருத்தே முழுமை, உண்மை என்பது தவறு. உண்மை என்று தோன்றுவது சிறிது காலம் கழித்து உண்மை இல்லை என்று நிரூபணமாகும். பிறிதொரு தத்துவம் தோன்றும். பின்னர் அதுவும் மறையும். ஆனால் பிரும்மம் ஒன்று மட்டுமே மாறாது. இதுவே நமது பாரத சம்பிரதாயம்.

இன்று நடந்த ஸம்பாஷணைகள் மனதில் தோன்றின. ‘மீமாம்ஸை’ பற்றிக் கவனம் திரும்பியது. ஸ்ரௌதிகள் ‘ மோக்ஷம் பெற மீமாம்ஸங்களில் உள்ள வேள்விகள் தேவை இல்லையா?’ என்று கேட்டிருந்தார். இந்த ஒரு கேள்வியே அவரது அத்வைத ஸம்ப்ரதாயத்தை ஆட்டுவதாய் இருக்கிறது. அத்வைதிக்கு மீமாம்ஸை எதற்கு ? மீமாம்ஸையில் எந்தெந்த பலன் வேண்டி எந்தெந்த யாகம் செய்ய வேண்டும் என்று இருக்கிறது. எல்லாமே வேள்விகள் தான். மனிதனுக்கு என்ன தேவை என்றாலும் ஏதாவது ஒரு வேள்வி செய்தால் அந்த வேள்விக்குரிய தெய்வம் பிரத
யட்சம் ஆகும். அந்தந்த பலன்களை அளிக்கும். தெய்வங்களும் யாகத்துக்குக் கட்டுப்பட்டவை. அப்பலன்கள் ‘அபூர்வம்’ என்று அழைக்கப்படும். அபூர்வம்’ என்பது ‘பூர்வம் இல்லாதது’, ‘ முன்னே இல்லாதது’ என்று அர்த்தப்படும். ஆக, பலன்கள் வேண்டி செய்ய வேண்டிய யாகங்களைச் செய்தால் அந்தந்த தெய்வங்கள் அபூர்வமான பலன்களை அளிக்கும். இதுவே மீமாம்ஸையின் சாரம்.

இதற்கும் அத்வைதத்திற்கும் சம்பந்தம் என்ன ? ஒரு அத்வைதிக்கு தெய்வங்களே தேவை இல்லையே. எல்லாம் ஒரே பிரம்மத்தின் பிம்பங்கள் என்றால், அந்த பிரம்மத்தை அடைய வேண்டியது தான் ஒரே இலக்கு என்றால், மீமாம்ஸையில் கூறியுள்ள தெய்வங்களும் அவற்றிற்கான பலன்களும் ஏன் ? ஆக, ஒரு அத்வைதி வேள்விகளும், யாகங்களும் செய்ய வேண்டியது ஏன் ? அவச்யமே இல்லையே. எனவே மீமாம்ஸை இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன அவர்களுக்கு ?

இந்த தெய்வங்கள் எல்லாம் தேவை என்றால் அப்புறம் அத்வைதம் என்ன ? ஓருண்மை என்ன ?  ஏகான்ம வாதம் என்ன ? அதெப்படி தத்துவம் ஒன்றாகவும் வழிமுறை வேறாகவும் இருக்க முடியும் ? தத்துவம் என்னவென்றால் ஓருண்மை, இரண்டில்லாதது என்பது. ஆனால் நடைமுறையோ பல தெய்வ வழிபாடு, இவ்வுலகத் தேவைகளுக்காகப் பல தெய்வ வேண்டுதல்கள், அதற்காக மீமாம்ஸை வேறு வேண்டுமாம்.

மீமாம்ஸை சொல்வது என்ன ? கர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் – இவை தானே மீமாம்ஸைகளில் உள்ளவை ? செயல், அதன் மூலம் பொருள், அப்பொருள் கொண்டு இன்பம் பின்னர் வீடு பேறு. இவை அனைத்தையும் அடைய வேள்விகள் என்னென்ன ? அவற்றின் தெய்வங்கள் யாவர் ? வேள்விகளின் போது ஓதவேண்டிய மந்திரங்கள் என்ன ? பலன்கள் என்ன ? இவை தானே பூர்வ மாமாம்ஸை என்பது ?

செயல்கள் அவற்றின், மூலம் நாம் அடையும் பலன்கள் – இவற்றை வலியுறுத்துவதால் இதன் பெயர் கூட ‘கர்ம மாமாம்ஸை’ என்று வழங்கப்படுகிறதே. பலன்கள் இந்த உலகத்தில் கிடைப்பதால் அந்தப் பலன்களும் மாயை தானோ ? மாயை என்பதால் அந்தப் பலன்களே தேவை இல்லையே. பலன்கள் தேவை இல்லை என்றால் அவற்றிற்கான தெய்வங்கள் தேவை இல்லை,வேள்விகள் தேவையே இல்லையே. இவை எதுவுமே தேவை இல்லை என்றால் பூர்வ மீமாம்ஸையே தேவை இல்லையே.

மீமாம்ஸையில் பிரும்மத்திற்கே ஏற்றம் இல்லை. அத்வைதியானால் மீமாம்ஸகராக இருக்க முடியாது; மீமாம்ஸகரானால் அத்வைதியாக இருக்க முடியாது. நிலைமை இப்படி இருக்க, அத்வைதிகள் மீமாம்ஸை பின்னர் செல்வது ஏன் ?

அடிப்படையே ஆட்டம் காண்கிறதே !

இப்படியே பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை.

கூரன் வந்து எழுப்பியவுடன் தான் பொழுது விடிந்து இருப்பதை உணர்ந்தேன்.

————————————————————————————

ஸதஸ் — கூட்டம், சபை, வாதம் நடக்கும் இடமும் வாதமும்.

நான் இராமானுசன் பகுதி 11

‘நான் இராமானுசன்- பகுதி 10′

‘நான் இராமானுசன்- பகுதி 9′

நான் இராமானுசன்- பகுதி 8′

‘நான் இராமானுசன்- பகுதி 7′

நான் இராமானுசன்- பகுதி 6′

‘நான் இராமானுசன்- பகுதி 5′

நான் இராமானுசன்- பகுதி 4′

‘நான் இராமானுசன்- பகுதி 3′

‘நான் இராமானுசன்- பகுதி 2′

நான் இராமானுசன்- பகுதி 1′

‘நான் இராமானுசன்- ஒரு துவக்கம்’

 

ஆண்டாள் – ஒரு பார்வை

வைணவ சிந்தனையில் ஆகச் சிறந்த பங்காற்றியவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் பன்னிருவர். இவர்களில் ஒரு பெண்ணும் உண்டு. இவர்கள் இராமானுசர் காலத்திற்கு முற்பட்டவர்கள். சங்கம் மருவிய காலம் முடிந்து பக்தி இயக்கக் காலமே ஆழ்வார்களின் காலம்.  ஆழ்வார்களின் பங்களிப்பைக் காணும் முன் ஆண்டாளைப் பற்றியும் அக்கால நடைமுறை வழக்கங்கள் பற்றியும் சிறிது ஆராய்வோம்.

மார்கழி மாதம் முழுவதும் வைணவர்களுக்குப் புனிதமானதே. திருமாலும் தான் மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன் என்று கூறுகிறார். பகுத்தறிவாளர் உடனே இறைவன் எல்லா மாதங்களுக்கும் பொதுவானவனாகத்தானே இருக்க வேண்டும் என்று குரல் எழுப்பலாம். மார்கழி மாதம் முழுவதும் இறை தொடர்பான எண்ணங்களுடனே இருந்து சில நோன்புகள் பூண்டு விரதம் முதலியவற்றைப் பேணுவது என்றும் அம்மாதத்தில் திருமணம் முதலிய சமூக நிகழ்வுகள் நடவாமல் மக்கள் மனம் முழுவதும் இறை பற்றியே இருக்க வேண்டும் என்ற நோக்கமே இதன் அடிப்படை என்று கொள்ள முடிகிறது.

இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும் இறைத் தொடர்பான சிந்தனைகளுடனே அம்மாதம் முழுதும் செலவிடுகின்றனர் என்பதும் நோக்கத்தக்கது. கிறித்தவர்களுக்கும் ‘லென்ட்’ (Lent) என்று நோன்பு இருக்கும் மாதம் உள்ளது என்று அறிகிறேன். ஆக மாதம் முழுவதும் நோன்பிருப்பது மனித சமூகம் முழுவதுமே இருக்கும் ஒரு பழக்கம் என்பதும் இறை தொடர்பான எண்ணங்கள் வளர இம்மாதிரி நோன்புகள் பயன்படுகின்றன என்பதும் வெளிப்படை.

நோன்பிற்கும் ஆண்டாளுக்கும் என்ன தொடர்பு ?

ஆண்டாள் இயற்றிய ‘திருப்பாவை’ என்னும் முப்பது பாசுரங்கள் மார்கழி மாதம் முழுவதும் வைணவர்களால் பாடப்படுகின்றன. அப்பாடல் வரிகளின் மூலம் ஆண்டாள் தனது தோழிகளைத் துயில் எழுப்புவது பற்றியும், நோன்பிருந்து இறைவனை அடையவேண்டியது பற்றியும் கூறுவதை அறிகிறோம். இவை மட்டும் அல்லாமல் அக்கால வாழ்க்கை முறை பற்றியும், சில இயற்க்கை நிகழ்வுகள் பற்றியும் நாம் தெரிந்துகொள்கிறோம். பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து நாம் ‘அறிவியல்’ பூர்வமாகக் ‘கண்டுபிடித்தவை’ என்று பறை சாற்றிக்கொள்ளும் சில உண்மைகளும் ஒரு சாதாரண நிகழ்வு போல் ஆண்டாளால் பதிவு செய்யப் படுகிறது. ( “ஆழி மழைக் கண்ணா..” என்று தொடங்கும் பாசுரத்தில் மழை பொழியும் காரணம் தெரிவிக்கப்படுகிறது. கடலில் இருந்து நீர் ஆவியாகி, மேகமாகி மலைகளில் முட்டுவதால் மழை பொழிகிறது என்ற பொருளில் அமைந்துள்ளது இப்பாசுரம்)

ஆண்டாள் காலத்திற்குக் குறைந்தது ஆயிரம் ஆண்டுள் முன்பு ( கி,மு.200 -300) தமிழ் மக்கள் இனக்குழுக்களாக இருந்த நேரத்தில் ( சங்க காலம் துவங்குவதற்கு முன் என்று கொள்ளலாம்) ‘பாவை நோன்பு’  என்ற ஒரு தொன்மையான வணக்க முறை இருந்துள்ளது. அப்போது தாய் வழிச் சமூகமாக இருந்துள்ளதால், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த பாவை நோன்பும் பெண்கள் கடை பிடிப்பதாகவே காட்டப்படுகிறது. இது குறித்துச் சங்கப் பாடல்களும் தெரிவிக்கின்றன.

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இந்த வணக்க முறைகள் வேளாண் பயிர் சிறந்த முறையில் விளைய வேண்டும், வெள்ளம் முதலிய இயற்கை நிகழ்வுகள் வந்து பயிர்களை அழிக்காமல் இருக்க வேண்டும் என்று அந்தந்த நிலங்களின் தெய்வங்களிடம் வேண்டுவதாக அமைந்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையாக இவை பெண்கள் செய்யும் சடங்காகவே நிகழ்ந்துள்ளது. பெண்களே ‘வளர்ச்சி’, ‘ உற்பத்தி’ முதலியனவற்றிற்குக் குறியீடாக வைக்கப்பட்டிருந்தனர் என்றும் உணர முடிகிறது. . ‘இந்திர விழா’ என்று தொல்காப்பியம் அழைக்கும் மருத நிலம் தொடர்பான விழாவும் இந்த நோன்பு வகைகளில் ஒன்றே.

இந்த விழாக்களில் சிறப்பானது ‘பசுவன்’ என்று மண்ணினால் பசு மற்றும் அதன் கன்று போன்ற பிம்பங்கள் செய்து அதற்குத் தினமும் தானியங்கள், புல் முதலியன படைத்து வழிபடுவது. முப்பது நாட்களுக்குப் பின் அந்தப் பசுவன் வடிவத்தை ஒரு சிறுமியின் மடியில் அமர்த்தி வழிபட்டுப் பின்னர் நீர் நிலைகளில் கரைப்பது என்று இருந்தது. அப்போது பாடி ஆடும் மகளிர் நீர் நிலைகள் நிரம்ப வேண்டும், தானியங்கள் நிறைய விளைய வேண்டும் என்ற பொருள் படும்படிப் பாடுகிறார்கள் என்று இந்திர விழா குறித்த குறிப்புகள் கூறுகின்றன.

பெண்கள் தொடர்பு படுத்தியே இவ்வகை நோன்புகள் இருந்தன என்பது ‘பரிபாடல்’, ‘அக நானூறு’ முதலிய நூல்களில் இருந்து தெரிவதாக ‘ வைணவமும் ஆழ்வார்களும்’ என்னும் நூலில் திரு.தேவராஜன் தெரிவிக்கிறார். தற்காலத்தில் கூட ‘ஔவையார் நோன்பு’, ‘ காரடையான் நோன்பு’, ‘வர லக்ஷ்மி விரதம்’ முதலிய நோன்புகள் பெண்கள் பற்றியதாகவே  உள்ளது நோக்கத்தக்கது. இன்றைய காலத்தில் கூட மதுரை மாவட்டங்களில் அம்மன் கோவில் திரு விழாக்களின் போது ‘முளைப்பாரி’ எடுப்பது என்னும் நோன்பு நடக்கிறது. திருவிழா நடக்கும் பத்து நாட்களும் பெண்கள் தானியச் சட்டிகளுக்கு பூசை செய்து, பயிர் சிறிது முளை விட்டதும் பத்தாம் நாள் அதனை எடுத்துக்கொண்டு ஊர் முழுவதும் வலம் வந்து ஆற்றில் கரைப்பது என்று உள்ளதையும் நோக்க வேண்டும்.

இந்த வகையான நோன்புகளும் அவை தொடர்பான வழிபாட்டு முறைகளும் ‘தாந்திரீகம்’ என்னும் சங்க கால வழிபாட்டு முறைகளாம். இந்தத் தாந்திரீக முறைகள் ‘பாஞ்ச ராத்ரம்’ என்னும் இராமானுசர் வகுத்த ஆகம முறையில் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன என்ற கருத்தும் நிலவுகிறது.

சங்க கால நோன்பு முறை போன்றே ஆண்டாளும் பிற கன்னிப்பெண்கள் புடை சூழப் பாவை நோன்பு இருந்து திருமாலை வழிபடுவது என்று பொருள் படும்படித் திருப்பாவையில் பாடுகிறாள். திருப்பாவை என்பதே ‘பாவை’ என்ற நோன்பின் அடியொற்றியே அமைந்துள்ளது நோக்கத்தக்கது.

“… நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ..” என்னுமிடத்தில் தாங்கள் ‘பாவை’ உருவ பிம்பங்களுக்குச்  செய்யும் சடங்குகளைக் கேட்பீர்களோ என்று கூறிவது நோக்கத்தக்கது.

ஆண்டாளின் பாடல்களிலும் வேளாண்மை குறித்த நிகழ்வுகளும் அதற்குத் தேவையான அமைப்புகளும் இடம் பெற்றுள்ளன. நாங்கள் நோன்பு நோற்கிறோம், எங்களுக்கு நல்ல மழை தாருங்கள், பயிர்கள் செழிக்கட்டும், பால் வளம் பெருகட்டும் போன்ற வேண்டுதல்கள் தெரிகின்றன.

ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மழை பெய்து அதனால் நீர் நிலைகள் நிரம்பி இருக்கும் வளம் கொழிக்கும் நேரம் அது.  மழை பற்றியும், நீர் நிலைகள் பற்றியும் பல இடங்களில் தனது நோன்பின் நோக்கம் பற்றியும் ஆண்டாள் கூறுகிறாள். சில பின் வருவன :

“தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ..”
“மாரி மழை முழைஞ்சில்..”
“சர மழை போல் வாழ உலகினில் பெய்திடாய்..”

ஆநிரைகள் வளத்தின் அடையாளம். ஆண்டாள் அவை பற்றியும் பாடுகிறாள். அவை:

“வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் ..”
“கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு ..”
“கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து..”
“கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் ..”

மேலே சொன்ன பயன்கள் கிட்ட பாவை நோன்பு நோற்கிறார்கள். அதன் செயல் வடிவம் என்ன ? பின் வருபவை அவை :

“வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்…”

நெய், பால் முதலியன உண்ணாதிருத்தல், விடியற்காலமே எழுந்து நீராடுதல், மை தீட்டிக்கொள்ளாதிருத்தல், மலர் சூட்டிக்கொள்ளாதிருத்தல், செய்யக் கூடாதனவற்றைச் செய்யாதிருத்தல், தீமை தரும் சொற்களைச் சொல்லாதிருத்தல் ( புறங்கூறாமை என்றும் ஒரு ஆசிரியர் கூறுகிறார் ) முதலியன நோன்பின்  அடையாளங்கள் போலே.

வைணவ பக்தி முறையில் சில ஆழ்வார்களும் தங்களைப் பெண்ணாகப் பாவித்து திருமாலை நோக்கிப் பாடல்கள் இயற்றியுள்ளார்கள். பெரியாழ்வார் தன்னை யசோதையாக நினைத்து ஒரு தாய் தனது குழந்தையை நடத்தும் விதமாகக் கண்ணனைப் பாடி இருக்கிறார். திருமங்கை ஆழ்வார் தன்னைப் ‘பரகால நாயகி’ என்ற பெண் நிலையிலும், நம்மாழ்வார் தன்னைப் ‘பராங்குச நாயகி’ என்னும் நிலையிலும் உருவகித்து, திருமாலைக் காதலனாகப் பாவித்துப் பாடல்கள் புனைந்துள்ளனர். இவ்வகை ஆழ்வார் பாடல்கள் ‘நாயக நாயகி பாவம்’ என்னும் வைணவ உறவு நிலையைக் குறிப்பன.

இவை ஆணின் உடலில் உள்ள பெண் தன்மையை எழுப்பும் ‘குண்டலினி’ யோக முறையின் கீழ் நிலையை உணர்த்துகின்றன என்று பேரா.தோத்தாத்திரி தெரிவிக்கிறார்.

பக்தி இயக்க காலத்தில் ஆண்டாளின் நோன்பு நிகழ்வுகள் அவை சங்க காலத் தமிழ் மக்களின் நோன்பு வகைகளை ஒத்து அமைந்துள்ளன என்று காண்பது வியப்பளிக்கிறது. இந்த மாதிரியான நோன்புகளை சங்க காலம் முடிந்து சுமார் ஆயிரம் ஆண்டுகள் கழித்து ஆண்டாள் மேற்கொண்டாள் என்று நினைக்கும்போது கால அளவுகளைத் தாண்டிய ஒரு உன்னதமான கலாச்சாரத் தொடர்பு  பிரமிக்க வைக்கிறது.

பெண் விடுதலை, பெண் அடிமைத்தனம் என்று நமது பண்டைய வணக்க முறைகளைப் பழிக்கும் ‘முற்போக்காளர்கள்’, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாடல் இயற்றிய ஒரு பெண்ணைத் தெய்வமாகவே நினைத்து வழிபட்டுள்ள உயர்ந்த பண்பாட்டைப் பற்றிப் பேசாமல் இருப்பது புரிந்துகொள்ளக் கூடியதே.

வைணவம் காட்டும் உறவு நிலைகள்

இராமானுசரது வைணவ சித்தாந்தம் வழி இறைவனுக்கும் ( பரமாத்மாவுக்கும் ) உயிரினங்களுக்கும் (ஜீவான்மாக்களுக்கும்) இடையே உள்ள உறவு நிலை சிறப்பானது. பல மதங்களில் உள்ளது போல் இறைவனைக் காப்பவனாக மட்டுமே விசிட்டாத்வைதம் பார்ப்பதில்லை . இறைவனுக்கும் உயிரினங்களுக்கும் உள்ள உறவு ஒன்பது வகைப்படும் என்று கூறுகிறது. இதனை ‘நவ வித சம்பந்தம்’ என்று சம்ஸ்க்ருதம் கூறுகிறது.

  1. காப்பவன் – காக்கப்படுபவன் ( ரக்ஷ்ய – ரஷ்யக சம்பந்தம் )
  2. தந்தை/தாய் – மகன் (பிதா – புத்திர சம்பந்தம் )
  3. ஆண்டான் – அடிமை (சேஷ – சேஷி சம்பந்தம் )
  4. கணவன் – மனைவி (பர்த்ரு – பார்யா சம்பந்தம் )
  5. அறிபவன் – அறியப்படுபவன் ( ஞாத்ரு – ஞேய சம்பந்தம் )
  6. உடையவன் – உடைமை (ஸ்வ – ஸ்வாமி சம்பந்தம் )
  7. உயிர் – உடல் (சரீர – சரீரி சம்பந்தம் )
  8. தாங்குபவன் – தாங்கப்படுபவன் (ஆதார ஆதேய சம்பந்தம் )
  9. அனுபவிப்பவன் – அனுபவிக்கப்படுபவன் (போக்த்ரு – போக்ய சம்பந்தம்)

இந்த உறவு நிலைகளை ஆழ்வார்களின் பாசுரங்களில் காணலாம்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் ஆழ்வார்கள் இராமானுசருக்கு முந்நூறு ஆண்டுகள் முற்பட்டவர்கள். இராமானுசர் விசிஷ்டாத்வைதம் என்று ஒரு முறையை நெறிப்படுத்தும் முன்பே அத்தத்துவத்தின் கூறுகளை ஆழ்வார் பாசுரங்களில் காண்கிறோம். இது ஒரு வியப்பே.

காப்பவன் – காக்கப்படுபவன் ( ரக்ஷ்ய – ரஷ்யக சம்பந்தம் )

“வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளா காதலநோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட் டம்மாநீ ஆளா வுனதருளே பார்ப்ப னடியேனே”

மருத்துவன் வாளால் அறுத்துச் சுடுவது நோயாளனுக்கு நன்மை செய்யத்தான். அதுபோல் இறைவன் நமக்குச் சில சமயங்களில் சோதனைகள் தருவதும் நம்மைத் திருத்திப் பணி கொள்வதற்காக மேற்கொள்ளும் ரட்சகக் காரியமே என்று குலசேகர  ஆழ்வார் கூறுகிறார்.

தந்தை/தாய் – மகன் (பிதா – புத்திர சம்பந்தம் )

நம்மாழ்வார் பாசுரம் பின்வருமாறு :

“என்னப்பன் எனக்காய் இகுளாய்  என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்…”

இந்தப் பாசுரத்தில் இறைவனை தாய் என்றும் தந்தை என்றும் அழைக்கிறார்.

ஆண்டான் – அடிமை (சேஷ – சேஷி சம்பந்தம் )

இந்த ஆண்டான் அடிமை உறவு நிலை குறித்துப் பல ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள் என்றாலும் திருக்குடந்தை என்னும் கும்பகோணம் பாசுரத்தில் நம்மாழ்வார் பாடுவது அருமையானது. இறைவனை ‘ஆரா அமுதே’ என்று அழைப்பது தமிழின் அழகையும் உணர்த்துகிறது. ( வைணவர்களில் ‘ஆராவமுதன்’ என்று குழந்தைகளுக்குப் பெயரிடுவது சில காலம் முன்பு வரை பிரபலம். அப்பெயர் மருவிப் பல சமயம், ‘ஆராமுது’ என்றும் ‘ஆமுடு’ என்றும்  அழைக்கப்படுவது வேடிக்கை.)

பாசுரம் இங்கே:

“வாரா வருவாய் வருமென் மாயா மாயா மூர்த்தியாய்
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊரா உனக்காட் படும் அடியேன் இன்னம் உழல்வேனோ”

இப்பாசுரத்தில் ‘ஆண்டாய்’ என்பதால் ஆண்டான் தன்மையும் ‘உனக்காட்படும்’ ( உன்னுடைய ஆளுமைக்கு உட்படும் ) என்பதால் அடிமைத்தனத்தையும் ஆழ்வார் காட்டுகிறார்.

கணவன் – மனைவி (பர்த்ரு – பார்யா சம்பந்தம் )

கணவன் மனைவி நிலையில் திருமாலுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைக் குறிக்கும் விதமாக குலசேகராழ்வார் பாசுரம் :

“கண்டா ரிகழனவே காதலன்றான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியாக் குலமகள்போல்
விண்டோய் மதில்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மா நீ
கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே”

குலமகள் கணவனைக் கை விடாமல் எந்நிலையிலும் அவனுடன் இருப்பாள் என்னும்போது ஆழ்வார் தன்னை மனைவியாகவும் திருமாலைக் கணவனாகவும் கொண்டு பாடுகிறார்.

அறிபவன் – அறியப்படுபவன் ( ஞாத்ரு – ஞேய சம்பந்தம் )

“பெயரும் கருங்கடலே நோக்குமாறு ஒண்பூ
உயரும் கதிரவனே நோக்கும் – உயிரும்
தருமனையே நோக்கும்மொண் தாமரையால் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு”

பொய்கையாழ்வார் பாசுரம் கூறுவது : ஆறுகள் கடலை நோக்கி ஓடுவதும், தாமரைப்பூ பகலவனை நோக்கி மலர்வதும், உயிர்கள் எமனையே நோக்கிக் கிட்டுவதும் ( கிடைக்கப்பெறுவதும்) எப்படி இயல்பாக நிகழ்கின்றனவோ அப்படியே ஞானம் என்பதும் திருமாலைப் பற்றி அல்லாது வேறு எதைப் பற்றி உண்டாவதும் அல்ல. எனவே அறியப்படும் பொருள் திருமாலே. அறிபவர்கள் நாம்.

உடையவன் – உடைமை (ஸ்வ – ஸ்வாமி சம்பந்தம் )

“தொக்கிலங்கி ஆறெல்லாம் பரந்தொடித் தொடுகடலே
புக்கன்றிப் புறம் நிற்க மாட்டாத மற்றவைபோல்
மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மா! உன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன் காண் புண்ணியனே”

கடல் உடையது. ஆறுகள் கடலின் உடைமை. கடலைச் சேர்ந்து தான் ஆறுகள் சிறப்புப் பெறுகின்றன. அதுபோல் தலைவனாகிய திருமாலைச் சேர்ந்தே நாம் சிறப்படையே இயலும் என்று இறைவனை உடையவன் என்றும் நம்மை அவனது உடைமை என்றும் கூறுகிறார் குலசேகர ஆழ்வார்.

உயிர் – உடல் (சரீர – சரீரி சம்பந்தம் )

“திடவிசும் பெரிவெளி நீர்நில மிவைமிசைபடர்பொருள் முழுவது மாயவை யவைதொரும் உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்”

என்னும் நம்மாழ்வார் பாசுரத்தில் “உலகில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் உடலில் உயிர் உறைவது போல் இறைவன் மறைந்திருந்து எல்லாவற்றிலும் நிறைந்திருப்பவன்”  என்று உயிர் – உடல் உறவை விளக்குகிறார்.

தாங்குபவன் – தாங்கப்படுபவன் (ஆதார ஆதேய சம்பந்தம் )

குலசேகர ஆழ்வார் பாசுரம் ஒன்று இந்த உறவை விளக்குகிறது.

“எங்கும் போய் உய்கேன் உன் இணையடியே யல்லால்
எங்கும்போய்க் கரைகாணாது எறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்புஏறும் மாப்பறவை போன்றேனே”

எங்கும் கடலாக உள்ளது. ஆகவே பறவை நான்கு திசைகளிலும் பறக்க முடியவில்லை. திரும்பவும் எப்படி கடலில் உள்ள மரக்கலத்தில் வந்து அப்பறவை சேருமோ அப்படி உன் பாதங்களில் என்னைத் தாங்குபவனாகிய உன்னிடம் நான் சரண் அடைந்து கிடக்கிறேன் என்று ஆழ்வார் இறைவனைத் தாங்குபவனாகவும் தன்னைத் தாங்கப்படுபவராகவும் கூறுகிறார்.

அனுபவிப்பவன் – அனுபவிக்கப்படுபவன் (போக்த்ரு – போக்ய சம்பந்தம்)

உயிர்களை உண்ணப்படும் பொருளாகவும் இறைவனை உண்பவனாகவும் கொள்வது இந்த உறவு நிலையின் விளக்கம். இந்த உறவு நிலையை  விளக்கும் விதமாக நம்மாழ்வாரும் குலசேகரரும் பலவாறு பாடியுள்ளார்கள்.

நம்மாழ்வாரின் “வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில்..” என்று தொடங்கும் பாசுரமும் குலசேகரரின் “நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் …” என்று தொடங்கும் பாசுரமும் விளக்குகின்றன.

உறவு நிலை சரி. ‘நாராயணா’ என்பதன் பொருள் என்ன ? வைணவர்கள் யார் ? அவர்களுக்கு மிக முக்கியமான ‘மூன்று’ என்ன ? அடுத்த பதிவில் பார்ப்போம்.

வைணவ லட்சணம்

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற வழக்கு நாம் அறிந்ததே. அதுபோல் ஒரு வைணவனின் அக லட்சணங்கள் அவனது நடத்தையில், புறத்தில் தெரியும் என்று கொண்டால் அவை என்ன என்ன என்று நாம் அறிந்துகொள்ள இராமானுசர் வழி வந்த சில ஆச்சாரியார்களின் வியாக்கியானங்கள் நமக்கு வழி செய்யும். அவர்களின் உரைகளில் பல புதிய அருமையான உவமைகள் அடங்கி இருக்கும். படிக்கவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

இவ்விடத்தில் லட்சணங்கள் என்பது புற அடையாளங்கள் என்பது மட்டும் அல்ல; ஒரு வைணவன் நடந்துகொள்ள வேண்டிய முறை என்றும் அறிந்துகொள்ளவேண்டும்.

இராமானுசர்  வழி வந்த ஆச்சாரியார்கள் பலர் இராமானுசர் மற்றும் அவருக்கு முன்பிருந்த ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு விளக்கங்கள் அளித்துள்ளனர். அவை ‘வியாக்கியானம்’ என்ற பிரிவில் அடங்கும். அவை தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் கலந்த ‘மணிப்பிரவாள’ நடையில் அமைந்திருக்கும். இந்த மொழி நடை தற்போது வழக்கொழிந்து விட்டது. இதனை அறிந்தவர்கள் இன்று வெகு சிலரே. வைணவ குரு பரம்பரை விளக்கமும் இந்த நடையிலேயே அமைந்துள்ளது.

சிலவற்றைப் பார்ப்போம்.

வைணவப் பண்பாடு என்பது என்ன? ஒருவரிடம் வைணவத்துவம் அமைந்துள்ளது என்று எப்படிக் கண்டுகொள்வது என்று நஞ்சீயர் என்ற ஒரு ஆச்சாரியாரிடம் கேட்கப்பட்டது. அவரது பதிலை மணிப்பிரவாள நடையில் அவரது வாக்கிலேயே தருகிறேன்:

“பிறர் அனர்த்தம் கண்டால் ஐயோ என்று இரங்குவான் ஆகில், அவன் நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு என்று இருக்க அடுக்கும், இத்தனையும் வேண்டும் பட்டிடுவானுக்கு என்று இருந்தான் ஆகில், அவன் நமக்குப் பகவத் சம்பந்தம் இல்லை என்று இருக்க அடுக்கும்”

தமிழில் : “மற்றவனது துன்பம் கண்டவுடன் மனம் இரங்குபவன் இறைத் தொடர்புள்ள வைணவன்.அவர் நிலை கண்டு இரங்காதவன் வைணவன் அல்லன்”.

இதற்கு ஒரு சமீப கால உதாரணம் ஒன்றும் உண்டு. மகாத்மா காந்திக்குப் பிடித்தமான “வைஷ்ணவ ஜனதோ ..” என்ற பாடல் நாம் அனைவரும் அறிந்ததே. அதன் ஆரம்ப வரிகளின் பொருளைக் அமரர் கல்கி அவர்கள் தனது ‘தியாக பூமி’ நூலில் இப்படிக் கூறுகிறார்:

“எவன் பிறருடைய துக்கத்தைத் தன்னுடைய துக்கமாகக் கருதுவானோ, கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி புரிந்து விட்டு அதைப் பற்றி மனத்தில் கர்வம் கொள்ளாமலும் இருப்பானோ, அவனே உண்மையான வைஷ்ணவன்.”

சற்று பின்னே சென்று வைஷ்ணவ குருபரம்பரை நிகழ்வு ஒன்றைக் காண்போம். இராமானுசரது சீடர் குழாமில் ‘பராசர பட்டர்’ என்றொரு அறிஞர் இருந்தார். அவரது சீடர் ஒருவர்,  அனந்தாழ்வான் என்னும் இன்னொரு ஆச்சாரியாரை அணுகி “வைஷ்ணவன் என்பவன் எப்படி இருப்பான்?” என்று கேட்கிறார். அதற்கு அவர் பதில் மிகவும் விளக்கமானது; அதே சமயம் எளிதானது.

அனந்தாழ்வான் கூறுகிறார்: “வைஷ்ணவன் கொக்கைப் போல் இருப்பான்; கோழிபோல் இருப்பான்; உப்பைப்போல் இருப்பான்; உம்மைப்போல் இருப்பான்” என்று ஒரு சூத்திரம் போல் வரையறுக்கிறார்.

ஒரு கொக்கு தனக்குத் தேவையான நீருள்ள இடங்களின் அருகில் வசிக்கும்.அதுபோல் வைணவன் தனக்குத் தோதான பகவத் பாகவத சந்நிதிகளின் அருகில் வசிப்பான். கோவில்கள், மடங்கள் இவற்றின் அருகில் வாசிப்பான். ( ஸ்ரீரங்கம் நினைவில் கொள்ளத் தக்கது).

மேலும் கொக்கு தனக்கு விருப்பமான ஆறுகளைத் தேடிப்போக அதற்குத் தேவையாக இரண்டு சிறகுகள் பெற்றிருக்கும். அதுபோல் வைணவன் தனக்குத் தேவையான வீடுபேறு அடைய ஞானம், அனுஷ்டானம் என்ற இரண்டு சிறகுகளைப் பெற்றிருப்பான். ஞானம் மட்டும் இருந்து அது  காட்டும் வழியில் செல்லும் அனுஷ்டானம் இல்லாவிட்டால் பயன் இல்லை என்பதை இது உணர்த்துகிறது. வள்ளுவரும் ‘நிற்க அதற்குத் தக’ என்று கூறுவது இவ்விடம் நோக்கத்தக்கது.

கொக்கு வெண்மை ந
றம் உடையது. அதுபோல் வைணவன் உள்ளும் புறமும் சுத்த சுவாபவம் கொண்டவனாக இருக்க வேண்டும். “உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்ற வள்ளலாரின் வாக்கு நோக்கத் தக்கது.

கொக்கு தன் வாய்க்கு அடங்காததை விடுத்து , கொள்ளும் அளவே உண்ணும். அதுபோல் வைணவன் பல விஷயங்கள் கற்றாலும், அறிந்துகொண்டாலும் தனக்குத் தேவையானதை மட்டுமே கொள்வான். தனக்குத் தேவையான மீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கின் தன்மை கொண்டவன் வைணவன் என்றும் கொள்ளலாம். 

அதுபோல் வைணவன் கோழி போல் இருப்பான் என்பதும் நோக்கத்தக்கது. கோழியானது குப்பையைச் சீய்த்துச் சீயத்துத் தனக்கு இரை இல்லாததைத் தள்ளிவிட்டு தனக்குச் சாரமான தானியங்களை மட்டுமே கொள்ளும். அது போல் வைணவன் பிறரிடம் உள்ள குற்றங்களைத் தள்ளிவிட்டு நல்லதையே கொள்வான்.

இதுவரை சரி. வைணவன் உப்பைப்போல் இருப்பான் என்பது எவ்வகையில் பொருந்தும்? அனந்தாழ்வான் கூறுகிறார்: உப்பு தான் உருமாறி அழிந்து உணவுகளுக்கு சுவை அளிக்கும்.வைணவன் தன்னை மறைத்துப் பிறருக்குப் பயன்படுபவனாக இருப்பான். அகம் அழிந்திருத்தல் என்று இதனைக் கொள்ளலாம்.

இவ்வாறு விளக்கம் பெற்ற அந்த வைணவரை அனந்தாழ்வான் உணவு உண்ணும் சாலைக்கு அழைத்துச் சென்றார். அவரை அங்குள்ள பந்தியில் முன்னே அமரச் செய்தார். வைணவர் தயங்கினார். பின்னர் பந்தியின் நடுவில் வேறொருவரை எழுப்பி அமரச்செய்தார். மறுபடியும் அந்த வைணவ சீடர் தயங்கினார். பின்னர் அவரைப் பந்தியின் இறுதியில் அமரச் சொன்னார். வைணவரும் மனமுவந்து அமர்ந்தார்.

அப்போது அனந்தாழ்வான் ” ‘வைணவன் உம்மைப் போல் இருப்பான்’ என்று நாம் சொன்னது இதுதான். அடியார்க்கு அடியாராகவும், அகங்காரம் அற்ற நிலையிலும் நீர் உள்ளீர். எனவே நீரே ஒரு வைணவருக்கு உதாரணம். எனவே வைணவன் உம்மைப்போல் இருப்பான் என்பது சரியே” என்று உவப்புடன் அருளியுள்ளார்.

இந்த ‘அடியார்க்கும் அடியார்’, ‘தொண்டர் அடிப்பொடி’, ‘ அடியேன்’ , ‘ தாசன்’ முதலான வார்த்தைகள் வைஷ்ணவ பரிபாஷையில் அதிக அளவில் அமைந்துள்ளன. தற்கால திருமண ஆழைப்பிதழ்களில் கூட ‘அடியேன் தாசன்’, ‘ அனந்தமான தெண்டன் சமர்ப்பித்த விக்யாபனம்’ போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் இருப்பதைக் காணலாம்.

வைணவம் – தத்துவ தரிசனம்

விசிட்டாத்வைத தத்துவத்திற்குள் புகும் முன் அதன் சமகால அல்லது சற்று முற்கால தத்துவங்கள் நிலை பற்றி சிறிது பார்ப்போம்.

மேலே செல்லும் முன்பு பின்வருவதை நினைவில் கொள்ள வேண்டும்.

பக்தி மார்க்க சமயங்களான சைவமும் வைணவமும் வேதத்தை முதலாக வைத்தன. ஜைனமும், பௌத்தமும் வேதத்தை மறுத்தன. கடவுள் மறுப்பை ஆதரித்தன.  இவை இவற்றுக்கிடையே உள்ள முக்கிய சித்தாந்த ரீதியான வேறுபாடு.

உலகம் இரண்டு வகையாகப் பார்க்கப்பட்டது. ஒன்று – இவ்வுலகம் ஜடப் பொருட்களால் ஆனது. ஆகவே இவ்வுலகத்தைப் பொருள் ரீதியாகவே பார்க்க வேண்டும். இது பொருள் முதல் வாதம். இரண்டாவது – இவ்வுலகம் கருத்து ரீதியானது. ஒரு கருத்தை ( Philosophy, சித்தாந்தம்) முன் வைத்து இவ்வுலகத்தை அணுக வேண்டும். இது கருத்து முதல்வாதம். இவை இரண்டின் மூலமாகவும் நாம் நமது வைணவப் புரிதலை அணுகுவோம்.

சமணம் கூறுவது :

உலகம் இரண்டு தெளிவான பிரிவுகளை உடையது. உடல், உயிர். அவர்கள் உயிரை சீவன் என்றும் உடலை அசீவன் என்றும் அழைத்தனர். இவை இரண்டுமே அழிவில்லாதவை என்று வாதிட்டனர். சீவன் ஆத்மா என்று அழைக்கப்பட்டது. அது ஒன்றல்ல, பல என்றனர். ஒவ்வொறு ஆன்மாவும் ஏற்கும் பொருளின் அமைப்பையும் அளவையும் கொண்டுள்ளது என்றனர். எறும்பின் ஆன்மா யானையின் ஆன்மாவை விட சிறியது என்பது அவர்கள் தத்துவம். இவ்வான்மாக்கள் உலகத்துடன் தொடர்பு கொள்ளும்போது அல்லல் படுகின்றன என்றனர். இதைப் புரிந்துகொள்வது ஞானம் என்றனர். சீவன் என்பது அறிவுள்ளது. அது அசீவனுடன் தொடர்பு கொள்ளும்போது கெட்டழிகிறது ; இதனைத் தவிர்த்துப் பரிபூரண அறிவைப் பெற வேண்டும். அதுவே முக்தி. இது தவிர கடவுள் என்பது இல்லை என்றனர்.

பௌத்தம் மூன்று உண்மைகள் பற்றிப் பேசுகிறது. முதல் உண்மை – புலன்களால் உண்டாகும் பற்றுகள் துன்பம் தருவன. இரண்டாவது உண்மை – துன்பம் விளைவதற்குக் காரணமானவற்றை உணர்வது. மூன்றாவது உண்மை – துன்பத்திலிருந்தும் அதன் காரணத்திலிருந்தும் விடுதலை அடைவதை அறிவது. இந்த மூன்றும் அறிந்து கடை பிடித்தால் துன்பமற்ற நிர்வாண நிலை அடையலாம். இதற்கு வேதம், கடவுள் முதலியன தேவை இல்லை.

பௌத்தம் கூறுவது :

இவ்வுலக நிகழ்ச்சிகள் எல்லாம் மூன்று தன்மைகளை உடையன. ஒன்று- நித்யம் – எல்லாம் மாறும் தன்மை கொண்டவை; எனவே நிலை அற்றவை. இரண்டு – துக்கம் – உலகம் துன்ப மயமானது. மூன்று – அநாத்மம் – இவ்வுலகில் ‘யான்’ என்று அழைக்க ஒன்றும் இல்லை. எனவே ஆன்மா என்பதே இல்லை.இது  புத்தர் கூறியது.

ஆனால் பின்னர் வந்த மகாயானம், ஹீனயானம், தேரவாதம் முதலிய பௌத்த சமயங்கள் மக்களைக் குழப்பின. “தோற்றமும் இல்லை, முடிவும் இல்லை, நிலைத்தலும் இல்லை, நிலையாமையும் இல்லை, ஒருமையும் இல்லை, பன்மையும் இல்லை, உருவாவதும் இல்லை, அழிவதும் இல்லை. எல்லாமும் சூன்யமே. சூன்யம் எல்லை அற்றது. சூன்யம் மட்டுமே உள்ளது என்று போதித்தன.

இவை போதாதென்று உலகாயதம் என்னும் கருத்தும் நிலவியது. உலகாயதர்கள் ஐம்பூதங்களின் சேர்க்கையால் உலகில் நிகழ்வுகள் உள்ளன. கண்ணால் காணப்படும் பொருட்கள் மட்டுமே உண்மை. மற்றதெல்லாம் பொய் என்றனர். எனவே கடவுள், ஆத்மா, வேதம் முதலியன பொய் என்றனர். இதற்கு சார்வாகம் என்று ஒரு பெயரும் உண்டு.

‘சுவை ஒளி ஓசை உரு நாற்றம் இவ்வைநதின்
வகை தெரிவான் கட்டே உலகு” என்ற திருக்குறளும் இதன்படியே உள்ளதாக சில அறிஞர்கள் கூறுவர்.

இந்நிலையில் ஆதி சங்கரரின் அத்வைத வேதாந்தம் வேறு பரிணாமம் அளித்தது.

சங்கரர் வேதாந்த வாதி. ( வேதாந்தம் = வேதத்தின் அந்தம், இறுதி ). வைதீக மரபைச் சார்ந்தவர். இவரது தத்துவம் அத்வைதம் ( அ + த்வைதம் ) – இரண்டில்லாதது என்பது பொருள். பிரம்மம் ஒன்றே. அது குற்றமில்லாதது. அது மட்டுமே உள்ளது. உலகம், உயிர்கள், ஜடப்பொருட்கள் எல்லாம் அந்த பிரும்மத்தின் பிம்பம், வெறும் தோற்றம். ஆகவே இவ்வுலகம், மனிதன், ஜடப்பொருட்கள் முதலியன வெறும் மாயை. இதுவே அவரது அத்வைத சித்தாந்தம்.

இது ஏற்றம் பெறக் காரணம் மன்னனும் அவனுடன் இருந்த உயர்குடி மக்களும். ஒரே ஒரு தலைவன் என்பதும், அவன் குற்றமிலாதவன் என்பதும் பிரும்மத்தை மட்டுமின்றி மன்னனையும் குறிப்பதாக இருந்தது. மன்னன் சிறப்பானவன். அவன் தவிர அனைவரும், அனைத்தும் சிறப்பிலாதவர்கள், முக்கியத்துவம் அற்றவர்கள் என்னும் விதமாக சமூகப் பார்வை கொண்டு பார்க்கப்பட்டது அத்வைதம். ஆனால் இது கை வினைஞர்கள், சிறு நில விவசாயிகள் முதலியோரிடம் எடுபடவில்லை.

அத்துடன் இவ்வுலகமும் இதன் பொருள்களும் உயிரினங்களும் மாயை என்பது மக்களுக்கு வியப்பளித்தது எனலாம். உலகமும், உயிர்களும், செல்வம் முதலியனவும் தோற்றம் என்றால் அதற்காக உழைக்க வேண்டிய அவசியம் என்ன? இத்தனை பாடுபட்டாலும் பண்ணையில் உழைத்தாலும் வரும் பொருளோ குறைவு. அதுவும் மாயை, உண்மை இல்லை என்று கொள்ள வேண்டும். ஆனால் பெருநிலக் கிழார்கள் நம் உழைப்பினால் நல்ல நிலையில் உள்ளனர்; அருசுவை உணவு கொள்கின்றனர்; சம்போகங்கள் நிறைந்த வாழ்க்கை வாழ்கின்றனர்; அவை உண்மை இல்லையா? அதுவும் மாயையா? என்பது போன்ற குழப்பங்களில் சாதாரண மக்கள் ஆழ்ந்தனர் என்று நினைக்க இடமுள்ளது.

இதற்கு மாற்றாக வந்தது இராமானுசரின் விசிட்டாத்வைதம் ( விசிட்டம் + த்வைதம் ).இது பிரும்மத்தை ஒப்புக்கொள்கிறது. ஆனால் அது ஒன்று மட்டுமே மற்றதெல்லாம் மாயை என்பதை ஒப்புக்கொள்ளவில்லை. இதன் சித்தாந்தம் பிரும்மம் ஒன்று. அது பரமாத்மா என்றும் அறியப்படுகிறது. மற்றவை அனைத்தும் ஜீவன்கள். அவை ஜீவாத்மா. மரம், விலங்கு, மனிதன் அனைத்தும் ஒன்றே. ஏனெனில் அவற்றுள்  உள்ள ஜீவாத்மா ஒரே குணமும் அளவும் கொண்டது. ஒரு விலங்கின் உள்ளே உள்ள ஆத்மாவும் மனிதனின் உள்ளே இருக்கும் ஆத்மாவும் ஒன்றே. அதனதன் பூர்வ ஜென்ம பலன்களால் அவை ஒரு தோற்றம் கொண்டு ஏதோ ஒரு உடலில் உள்ளன. எனவே ஆத்மா அளவில் ஒன்றிற்கும் மற்றொன்றிற்கும் வேறுபாடில்லை.

உதாரணமாக “எனது புத்தகம்” என்கிறோம். இங்கு “எனது” என்பது நமது உடலைக் குறிக்கிறது. “எனது கை” என்னும் போதும் “எனது” என்பது நமது உடலைக் குறிக்கிறது. அதுபோல, “எனது உடல்” என்னும்போது “எனது” என்பது எதைக் குறிக்கிறது ? அதுதான் “ஜீவாத்மா” என்னும் நமது ஆத்மாவைக் குறிக்கிறது. ஆக நான் என்பது உடல் அல்ல. ‘நான்’ வேறு ; உடல் வேறு என்று அறிவுறுத்தியது.அதுபோல் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு ஆன்மா உள்ளது. அவை அனைத்து ஒரே அளவிலானது.  ஆன்மா அளவில் வேறுபாடுகள் இல்லை; அந்தணன் ஆன்மாவும், பண்ணை அடிமை ஆன்மாவும், ஒரு மண் பாண்டத்தின் ஆன்மாவும் ஒன்றே என்பதே இராமானுச சித்தாந்தம்.

இதற்கு ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு உதாரணம் உண்டு. ‘ததிபாண்டன்’ என்னும் பானை செய்யும் தொழிலாளி கண்ணனிடத்தில் மிக்க பக்தி உடையவன். இறை நினைவாகவே பானைகள் செய்து வாழ்ந்து வந்தான். இறக்கும் சமயம் இறைவனிடம் அவன் தனக்கு மட்டும் மோட்சம் தேவை இல்லை என்றும் தனது பானைக்கும் மோட்சம் வேண்டும் என்றும் கேட்டான் என்று ஒரு கதை உண்டு. ஆக உயிரில்லாத ஒரு மண் பானைக்கும் ஒரு ஆத்மா இருப்பதாகக் கூறுவது வைணவத்தின் ஊடாக உள்ள விசிட்டாத்வைதம்.

இராமானுசர் ஆன்மா, பிரும்மம் முதலிய நிலைப்பாடுகளை ஒப்புக்கொள்வதால் கருத்து முதல் வாதியாகவும், உலகமும் உண்மை என்று ஒப்புக்கொள்வதால் பொருள்முதல்வாதியாகவும் ஒருசேரத் திகழ்ந்தார் என்றும் கருதலாம். எனவே கருத்துமுதல்வாதம் சார்ந்தவர்களையும் (அத்வைத மதத்தினர் , சைவர் ), பொருள்முதல்வாதம் சார்ந்தவர்களையும் (பௌத்தர், ஜைனர் ) முதலியோரை வைணவத்தின் பால் ஈர்த்தார் என்றும் கருத இடம் உள்ளது.

இராமானுசர் மேலும் கூறுவது – நமது உடல் நமது உயிரின்( ஆன்மாவின்) வீடு. அதுபோல் நமது ஆன்மா பிரும்மமான பரமாத்மாவின் வீடு. எனவே பிரும்மமும் உண்மை; உலகமும் உண்மை; ஜீவாத்மாவும் உண்மை. இதனை ‘த்ரயம்’ என்று வைணவம் கூறுகிறது. இதில் மாயை என்பதற்கு இடமே இல்லை. இவை சாதாரண மனிதனுக்குப் புரிவதாக இருந்தது.

இராமானுசரது இந்தக் கொள்கையைச் சற்று ஆராய்வோம். சாதி வேறுபாடுகளால், அடக்கு முறைகளால் பிளவு பட்டிருந்த ஒரு சமுதாயம். அந்த முறைகளை ஊக்குவிக்கும் அளவில் இருந்த சோழ, பாண்டிய அரசுகள். சமூகத்தின் அதிகாரத் தளங்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த பெருவாரியான மக்கள். இந்தச் சூழ்நிலையில் இவை அனைத்தையும் உடைத்தெறியும் நோக்கில் ஒரு புதிய சித்தாந்தம். அத்துடன் அது வைதீக மதத்தைச் சார்ந்தும் இருந்தது. இந்த சித்தாந்தத்தில் சேர எந்த ஒரு அங்கீகாரமும் தேவை இல்லை. அந்தணனாக இருக்க வேண்டாம், நாளும் மூன்று முறை அனல் ஓம்பும் சடங்கு செய்ய வேண்டாம், ஏழை-செல்வந்தன் வேறுபாடு இல்லை, பழைய குல அடையாளங்கள் மறைந்துவிடும், புதிய அடையாளமான ‘வைஷ்ணவன்’ என்ற ஒரே அடையாளம் கிட்டும் என்பது போன்ற திடீர் சமத்துவ நிலை மக்களை ஒரு பெரும் புயல் போலத் தாக்கியது. மக்கள் பெருமளவில் வைணவராயினர்.

இந்தப்பெரும் அதிர்ச்சி மன்னனையும் ஆட்கொண்டது. அவன் இராமானுசரைக் கொல்ல முனைந்தான். அவர் தப்பினார். இதுவும் ஒரு அடக்குமுறையை எதிர்க்கும் மனோபாவமாகக் கருத்தப்பட்டு வைணவத்தின் புகழ், ஈர்ப்பு அதிகரித்தது என்று கருத இடமுள்ளது.

பானை செய்பவரும், வேதம் ஓதுபவரும், சிறு வினைஞர்களும்  ஒன்றே என்ற சமத்துவம் பெரும் புரட்சி சித்தாந்தமாகக் கிளம்பியது. அதற்கு ஏற்ப இராமானுசரும் பிள்ளை உறங்காவில்லி தாசர் போன்ற மல்லர் குலத்தைச் சார்ந்த ஒருவரைத் தன் பிரதான சீடராக வைத்துக்கொண்டது, பானை செய்யும் குலத்தைச் சார்ந்த திருப்பாணாழ்வார், வேளாளர் குலத்தின் நம்மாழ்வார், கள்ளர் மரபின் திருமங்கை ஆழ்வார் முதலியோரை மதுரகவி, பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் முதலான அந்தணர் குல ஆழ்வார்களையும் ஒன்றாக கோவிலுக்குள் அமர்த்த ‘பாஞ்சராத்ரம்’ என்ற வழிமுறையைக் கொண்டுவந்தது  போன்றவை  பலரை ஈர்த்திருக்கக் கூடும் என்று நம்ப இடம் உள்ளது.

ஜீவாத்மா தன் பக்தியினால், நற்செய்கைகளால் பரமாத்மாவை அடைய முடியும், அதற்கு பக்தி ஒன்றைத் தவிர வேறு ஒரு தகுதியும் தேவை இல்லை, எனவே மன்னனாயினும், பண்ணைத் தொழிலாளியாயினும்  பக்தியின் மூலம் இறைவனை அடைந்தது சமத்துவம் காணலாம் என்னும் தத்துவம் அதுவரை இருந்த அனுமானங்களை எல்லாம் அசைத்துப் பார்த்தது என்று நம்ப முடிகிறது.

இதனாலெல்லாம் நாம் அறிவது இதுதான் : விசிட்டாத்வைதம் என்னும் இராமானுச சித்தாந்தம் வைதீக சித்தாந்தமாக இருந்துகொண்டே தத்துவ அளவிலும் சமூக அளவிலும் மக்களிடம் ஒரு குழப்பமில்லாத மன நிலையையும் அனைவரையும் ஒன்றுபடுத்தும் ஒரு வழியாகவும் அனைவரும் ஒன்றே என்ற உயரிய கருத்தையும் பறை சாற்றுவதாக இருந்ததால் அக்காலத்தில் சாதாரண மக்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றது என்று கருதலாம்.

Why I am not a genius

“Therefore Justice Sivasamy Iyer became such a great judge of his times by studying under the street light” – thus concluded the English Teacher at school.

This has not been the first time that I had been sermonized thus. The same teacher had taught about Einstein, Edison, Jefferson, Washington, Lincoln and the hordes of other leaders that occupied my limited repository of world leaders who had been magnificent in their times. And there was this common thread in their tales – they all had attained greatness by studying under the street lights in their respective places.

Having been educated on the virtues of studying under the street light, it dawned upon me that the street light is an easy way to stardom in ones’ own field of choice. Then the obvious questions cropped up thus :

Why doesn’t every body start studying under the street light if that was a surefire way to superlative significance ?

Why don’t the schools of the world just push their imbecile idiots that masquerade as students under the street lights after having known that all great stalwarts were created under such lights during the different periods in history ? A back of the envelope calculation of 20 streets multiplies by 10 street lights multiplied by 2 students per streetlight led me to this astounding figure of 400 super intellectuals that could solve all the world’s problems in a jiffy – I prided myself on my discovery of a sure fire solution to world’s problems. This thought I kept contemplating on for a very long time that many a time I was about to shout this ‘Eureka’-ish discovery in front of the whole class. But somehow I though the better of it and kept the great idea to myself.

On an occasion I even wrote this piece of native intelligence on a piece of paper and was about to mail it to the Prime Minister but had to beat a hasty retreat when the post man said I would would have to affix an One Rupee Stamp on the envelope as the letter had to travel all the way to Delhi from Neyveli. One Rupee was a luxury that could fetch me two number of hard bound 220 page maths class work note book ( un-ruled ). For a long time I thought about the economics of mathematics and kept quiet.

But there were occasions when I let the cycle bell of the postman disturb my solitude on quiet saturday afternoons when the he brought me the invitation from the Prime Minister to attend the Republic Day Parade at New Delhi in appreciation of my rather brilliant discovery of a solution to this great intellectual deficit in the country. But my bliss would only be disheveled by the postman carrying the annual report of some defunct company that was already in the red for the last many years. Oh, my. What a wastage of national resources – a 200 page report on why the company didn’t do well. If only they stopped writing such annual reports and printing and despatching them through post they could save the company many thousands of rupees. Again a brilliant thought and some day I had to write this to the company. But there was this economic burden of affixing a stamp of 15 paise on the envelope. Where do i go for that princely sum ?

While solving the intellectual deficit of the country was of primary importance to me, there was another aspect that troubled me very much – that of becoming a stalwart myself. And the quick and easy way was to get myself educated under the street light. Sounded like a brilliant idea as I thought it would be good to test the hypotheses on myself while I strove hard to earn my One Rupee for purchasing the stamp.

The thought that I was going to become a student of great erudition and intellect, overnight, without much efforts, just by being under the street light sifting away the pages of the book seemed to evoke a sense of great satisfaction in me. I was going to compensate all my lost marks in the different tests in just one go. That very thought brought me great peace and a sense of having arrived.

So, I embarked on this journey towards the culvert on the opposite side of the road in front of our house upon which shone the street light. The night was dark and the street light was bright and the setting was perfect. And I surreptitiously sat on the culvert and opened the Biology book whereupon came over Babu looking suspiciously at me.

He was probably surprised at my nocturnal activity that was actually his domain. But being my friend he accepted my presence his his area of influence. Just to make sure and ascertain his approval, I just called him by his name –  Babu. He came rushing at me and started licking my toe while wagging vigorously his curved tail. He used to do that whenever he was happy.

Thus started this nocturnal education. Things seemed to go on well for about a week or so when the whole effort was called into question by R-mami, the wife of V-mama, who stayed in the house adjoining the culvert.

“Why do you want to spend your time in the nights sitting on the culvert?”, asked R-mami. She was obviously perturbed by the fact that there was some human presence on the culvert when it was time for the world to sleep.

“No mami, I am studying”, I tried my best to answer.

Not convinced she probed further,” But why on the culvert ?”

“No mami,I am studying under the light”, I try to manage.

“But why here? Does your house not have lights ?”, she asks, her inquisitiveness knew no bounds.

“Yes mami, there is light but there is no street inside the house”, I said wondering why doesn’t mami understand the reason for the street light study.

She didn’t seem to understand, I thought. So I explained further by talking about Justice Sivasami Iyer, Washington etc.

“I appreciate your sentiments. But why in the middle of the night ?”, she asked again.

“Because street lights don’t glow during the day”, I tried to justify.

“But what about the snakes that usually crawl underneath at this time of the hour? It is already 10:00 PM”, she retorted.

A piece of quick thinking and I regained my composure and said , ” Mami, I am reading biology and hence a snake would be useful”, I replied triumphantly.

“So if you read about Paris, would you go to France?”, asked Mami.

Not a bad idea, I thought. But then felt a shiver down my spine as I suddenly remembered the geography class on the same day where we studied about the Amazon forests.

“But mami, I am just trying out a new idea in education , a rather old idea but has been forgotten now”, I tried to reason.

R-mami has never been one to give up. “If you keep pestering, i will have to inform your Appa”, she said.

Well that was s real problem. I was not sure how Appa would take to myself taking to the street to get enlightened. Not that he would be averse to my being enlightened but to the place and time that I had chosen for that purpose.

Not wishing to continue the dialog with R-mami that was clearly going against me, I was contemplating an honorable exit when a savior arrived in the form of Deng, my bro. Not that he was particularly interested in this nocturnal enlightenment of the academic kind but he was more outside of our house than the inside, having been a person whose friends circle was open to many species of the four legged kind as well encompassing the canine and bovine assortments.

His arrival helped divert attention from me and R-mami began her inquisition of Deng. Never one to disappoint, Deng continued his retorts with catchy phrases and well thought-out one liners that helped keep R-mami at bay.

R-mami ended this bilateral negotiation with a deadline “I should not see you on the culvert tomorrow”.

I began to worry about my ambition of becoming a Washington or Lincoln being discarded to the dustbins of history and the conspiracy that was being hatched by R-Mami. Deng whispered thr V-mama, her husband, had the habit of smoking on the culvert in the dead of night and that was the reason for her belligerence. Those were the days when elders felt embarrassed to smoke in the public.

Again Deng came to my rescue and said that we could call our friends Kuppu, Satish and Jeyakumar to join us in our nightly education. “Having company would ward off venomous reptiles”, he said in general. R-mami was visibly upset and rushed in uttering something that sounded like “Appa”.

After a week of cajoling, Kuppu and Satish agreed to come over while Jeyakumar didn’t need any. The idea of beccming ‘enlightened’ seemed to have fascinated them and they arrived with hordes of books. A table and four chairs were arranged to be placed under the light and we began our ‘study’.

Time seemed to pass but enlightenment didn’t seem to dawn for when I started with Biology, Kuppu began to read out aloud his Englsh lessons and Satish History resulting in a situation that seemed to resemble the parliament where everybody spoke at the same time.

We came to an agreement that we would need to refrain from reading aloud and thus help the cause. This seemed to work a little but resulted in Kuppu and myself dozing off in the middle.

And there was trouble from an un-expected quarter as well. During his nightly rounds on patrol, the local policeman Ramu was attracted by this grouping and came to visit us. Having learned about our enlightened vision on getting erudite, he began to relate a story of his brother who had similar ambitions and spent time under the street light and lost his speech in the process. The rumour was that a female ghost ( mohini as she was known ) had enamoured him and that resulted in his having lost his speech. That rendered us speechless.

Babu seemed to have understood this and began to bark at nothing in particular and the nocturnal cabinet was dissolved with no notice.

And now you know why I am not a genius, don’t you ?

%d bloggers like this: