டி.ஸி.எஸ். நிறுவன பெண் ஊழியர் பாலியல் வன்முறையில் இறந்துள்ளார். சில மிருகங்கள் செய்துள்ள அட்டூழியம் இது.
- இந்த மிருகங்களுக்கு மரண தண்டனை விதித்தால் அது நிறைவேற்றப்பட வேண்டுமா கூடாதா ?
- இந்த மிருகங்களுக்கு மனித உரிமைகள் உண்டா இல்லையா ?
- இவர்களின் சமுதாய, பொருளாதாரப் பின்னணியைப் பார்த்துப் பின்னரே தான் அவர்களை தண்டிக்க வேண்டுமா ?
- மென்பொருள் எழுதும் அமெரிக்க ஆதிக்கம் உள்ள ஒரு நிறுவனத்தில் பணி புரிந்ததால் அந்தப் பெண்ணிற்கு வாழ உரிமை கிடையாதா ? கம்ரேடுகள் என்ன சொல்கிறார்கள் ?
- அருந்ததி ராய், ஞானி, ராம்சந்திர குஹா, கருணாநிதி, ‘பேராசிரியர்’ கனிமொழி, என்.ராம் போன்ற தலை சிறந்த முற்போக்கு ‘சிந்தனையாளர்கள்’ என்ன திருவாய் மலர்ந்து அருள்கிறார்கள் ? குற்றவாளிகளைத் தண்டிக்கலாமா கூடாதா ?
வழக்கம் போல் வாய் மூடி மௌனியாக இருக்க உங்களுக்கு லெனின், ஸ்டாலின், மாவோ, சே குவேரா முதலிய தெய்வங்கள் அருள் புரிய வேண்டுகிறேன்.