‘சுயம் அறிதல்’ என்னும் தலைப்பில் ‘நியூ யார்க்’ அருங்காட்சியகத்தில் என் ‘அறிதல்’ அனுபவத்த சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தில் நான் பகிர்ந்துகொண்டபோது எடுத்த ஒரு ஒளிப்பதிவு.
Tag: New York
பெருமாளுக்கு என்ன ராகம் உகந்தது ?
நியூ யார்க் நகர அருங்காட்சியகத்தில் நான் கண்ட பெருமாளுக்கு என்று சில பாசுரங்கள் பாடினேன். அப்பாடல்களை நல்ல ராகத்தில் நல்ல குரல் வளம் உடைய எனது நண்பரின் மகள் பாடி அதனை நியூ யார்க் அருங்காட்சியகத்தில் ஒலி பரப்பலாம் என்று ஒரு சிறு முயற்சி செய்கிறோம். எனவே பின்னால் வரும் பாசுரங்கள் என்ன ராகத்தில் அமையலாம் என்று இசை ஞானம் உள்ளவர்கள் சொன்னால் உபயோகமாக இருக்கும்.
பாசுரங்கள் இதோ :
தேமருவு பொழிலிடத்து மலாந்த போதைத் தேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும்,
பூமருவி யினி தமர்ந்து பொறியி லார்ந்த அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,
ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக் கின்றே சென்று,
நீமருவி யஞ்சாதே நின்றோர் மாது நின்நயந்தாள் என்றிறையே இயம்பிக் காணே.
——————-
தந்தை காலில் பெருவி லங்கு தாளவிழ, நள்ளிருட்கண் வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற வூர்போலும்,
முந்தி வானம் மழைபொழியும் மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று மனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரே
———————-
திருவுக் கும்திரு வாகிய செல்வா தெய்வத் துக்கர சேசெய்ய கண்ணா,
உருவச் செஞ்சுட ராழிவல் லானே உலகுண் டவொரு வா.திரு மார்பா,
ஒருவற் காற்றியுய் யும்வகை யென்றால் உடனின் றைவரென் னுள்புகுந்து, ஒழியா
தருவித் தின்றிட அஞ்சிநின் னடைந்தேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
———————
ஆடியாடி யகம்கரைந்து, இசை பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும்
நாடிநாடி நரசிங்காவென்று, வாடிவாடு மிவ்வாணுதலெ
——————–
செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்திருவடியி னிணைவருட முனிவ ரேத்த,
வங்கமலி தடங்கடலுள் அனந்த னென்னும் வரியரவி னணைத்துயின்ற மாயோன் காண்மின்,
எங்குமலி நிறைபுகழ்நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அங்கமலத் தயனனையார் பயிலும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
———–
“சாணிலும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத் தன்மை
காணுதி விரைவின்”
பெருமாளைக் காக்க வாருங்கள்
நியூ யார்க் அருங்காட்சியகத்தில் பெருமாள் சேவை கிடைத்த விதம் பற்றி இங்கே எழுதி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்தப் பெருமாள் பற்றி இன்னும் சில விஷயங்கள் பேசலாம் என்று இந்தப் பதிவு.
என்ன பயன் என்று கேட்கிறீர்களா? நீங்கள் யாராவது இந்தப் பெருமாள் எந்த ஊர் என்று தெரிவிக்கலாம். 50-60 ஆண்டுகளில் தமிழ் நாட்டின் ஏதோ ஒரு கிராமத்தின் கோவில் உடைக்கப்பட்டு பெருமாள் சிலை திருடு போயிருக்கலாம். அதைக் காவல் துறை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம். அல்லது உங்கள் கிராமத்தை விட்டே நீங்களோ உங்கள் பெற்றோரோ வெளியேறி அந்தத் திருட்டு உங்களால் மறக்கப்பட்டிருக்கலாம். அப்படி நடந்திருந்தால் அதனை மீண்டும் நினைவு படுத்திப் பாருங்கள். உங்கள் உற்றார் உறவினர் யாராவது இந்த மாதிரியான கிராமங்களில் இருந்தால் அவர்களிடம் பகிருங்கள். அவர்களுக்கு நினைவிருக்கலாம்.
இப்படி எல்லாம் செய்து இப்பெருமாள் எந்த ஊர்க்காரர் என்று தெரிந்தால் எந்த ஊரிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டார் என்று தெரிந்தால் அரசு மூலம் ஏதாவது செய்ய முடியுமா என்று முயன்று பார்க்கலாம். நான் மத்திய அரசைச் சொல்கிறேன்.
பல ஊர்களில் பெருமாள் உற்சவர் விக்ரகம் புன்முறுவல் பூத்தபடி இருக்காது. வெகு சில ஊர்களில் மட்டுமே இவ்வாறு அமையும். எங்கள் தேரழுந்தூர்ப் பெருமாள் சிரித்தபடி இருக்கிறார். நியூ யார்க் அருங்காட்சியகப் பெருமாளும் புன்முறுவல் பூத்தபடியே இருக்கிறார். ஆக புன்முறுவல் சிரிப்பு கொண்ட உற்சவ மூர்த்திகள் எந்தெந்த ஊர்களில் இருந்தன என்று விசாரிக்கலாம்.
காஞ்சீபுரம், ஸ்ரீரங்கம், திருமலை முதலிய ஊர்களில் உள்ள உற்சவர் விக்ரஹங்கள் முகங்களில் தழும்புகள் இருக்கும். ‘அம்மை வடு’ என்று சொல்வது உண்டு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல ஆயிரம் முறைகள் திருமஞ்சனம் என்னும் அபிஷேகங்கள் நடந்துள்ளபடியால் அவ்வாறு ஆவது உண்டு.
ஆனால் நியூ யார்க் பெருமாள் அப்படி இல்லை. கி.பி. 10ம் நூற்றாண்டு என்று எழுதி வைத்துள்ளார்கள். ஒன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு அவருக்கு அவ்வளவாக திருமஞ்சனங்கள் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். அல்லது புதைந்த நிலையில் பல நூறு ஆண்டுகள் இருந்து, பின்னர் கண்டெடுக்கப்பட்டு / திருடப்பட்டு அமெரிக்க செல்வந்தருக்கு விற்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது பல நூறு ஆண்டுகளாகவே கோவிலில் இருந்தும் வழிபாடுகள் இல்லாமல் இருந்திருக்க வேண்டும் ; கிராமத்தில் வேலை இல்லாமல் ஊர் மக்கள் கிராமத்தைக் காலி செய்தவுடன் பெருமாள் திருடப்பட்டிருக்க வேண்டும். இந்த ஏதாவது ஒரு காரணத்தால் அவர் இன்னும் சற்று இளமையாகவே தெரிகிறார்.
இளமையாகத் தெரிந்தாலும் முகம் ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒருவித சமன்பாட்டுடன் தெரிகிறது. ‘அபயஹஸ்தம்’ என்னும் அருள் வழங்கும் கையில் ரேகைகள் தெரியவில்லை. வழவழப்பாக இருக்கிறது. எனவே மிகப் பழமையானவர் தான்.
பெருமாளின் இடது நெற்றியில் ஒரு காயம் காணப்படுகிறது. அது சிலையை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்தும் / கடத்தும் போது ஏற்பட்டிருக்கலாம். அல்லது ஏற்கெனவே காயம் இருந்தால் ‘பின்னம்’ என்று சொல்லி கோவிலிலேயே ஓரமாக வைத்து விடுவர்கள் அப்படி உங்களுக்குத் தெரிந்த எந்தக் கோவிலிலாவது நடந்ததா என்று ஆராயலாம்.
பெருமாளின் பின்சேவை ( பின்புறம் )யில் சடை முடி தெரிகிறது. ஒருவேளை இவரது பெயர் ‘சௌரிராஜன்’ என்று இருந்திருக்கலாம். எனவே ‘சௌரிராஜப் பெருமாள்’ கோவில்களில் ஏதாவது சிலைகள் திருடப்பட்டனவா என்று நீங்கள் ஆராயலாம்.
பெருமாளின் பெயர் ‘கேசவன்’ என்று கூட இருக்கலாம். ‘கேசம்’ என்றால் தலை முடி என்று பொருள். ‘ஆதி கேசவன்’, ‘கேசவன்’ என்ற பெயர்களில் உள்ள பெருமாள் கோவில்களில் ஏதாவது திருட்டு நடந்துள்ளதா என்று ஆராயலாம்.
அவரது இரண்டு கைகளிலும் சிற்பங்கள் தென்படுகின்றன. அவவை ‘நாக பாச’மாக இருக்கலாம். நாக பாசம் உள்ள உற்சவ மூர்த்திகள் எந்தெந்த ஊர்களில் இருந்தன என்று கணக்கிட்டால் சில துப்புகள் கிடைக்க வழியுண்டு. அவை மகாலக்ஷ்மி போலவும் தெரிகின்றன. அதை வைத்தும் தேடலாம்.
புறப்பாடு செய்வதற்கு ஏற்றபடி பீடத்தில் வளையங்கள் தெரிகின்றன. இவை எல்லா ஊர்களிலும் இல்லை. இதையும் தேடுவதற்கு ஒரு விஷயமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவை எல்லாம் நம் கையில் உள்ள ஆயுதங்கள். செய்தியைப் பரப்பிப் பாருங்கள். ஏதாவது ஊருக்கு ஸ்வாமி தரிசனம் செய்யச் செல்லும் போது அங்குள்ள பெரியவர்களிடம் 50-60 ஆண்டுகளில் பெருமாள் சிலை திருட்டு ஏதாவது ஏற்பட்டதா என்று கேட்டுப் பாருங்கள். முக்கியமாக ஸ்தபதிகள், அர்ச்சகர்கள் முதலியோருக்குத் தெரிந்திருக்கலாம். யாருக்காவது பொறி தட்டலாம். அதன் மூலம் சிலை திருட்டை நிரூபித்துப் பின்னர் நியூ யார்க் அருங்காட்சியகத்திற்கு அரசு மூலம் எழுதலாம்.
ஏதாவது செய்வோம். நம்மால் முடிந்ததைச் செய்வோம் வாருங்கள்.
சிறையில் இருக்கும் தெய்வங்கள் சந்தோஷப்படும்
நியூ யார்க் அருங்காட்சியகம் சென்றிருக்க வேண்டாம் தான். என்னதான் இருக்கிறது என்று பார்த்துவரச் சென்றேன். சிட்டி வங்கி ஊழியன் என்பதால் இலவசமாக அனுமதி அளித்தார்கள்.
எகிப்திலிருந்து வந்திருந்த பல பண்டைய மன்னர்களின் மம்மி உருவங்கள், சமாதிக் கல்லறைகள் முதலியன தாண்டி சீன வரலாற்றுப பொருட்கள் கடந்து இந்தியக் கலைப் பொருட்கள் இருந்த இடம் நோக்கித் திரும்பினேன். அந்த அறை இருட்டாக இருந்தது. உள்ளே மனித நடமாட்டம் இல்லை. ஆனாலும் பேச்சுக்குரல் கேட்டமாதிரி இருந்தது. இருக்கட்டும் என்று உள்ளே சென்றேன்.
உள்ளே நுழைந்தவுடன் வரலாற்றில் கால் வைத்தது போல் இருந்தது. அறை இருளில் சில இடங்களில் மட்டும் ஒளியூட்டல் இருந்தது. ஒளியூட்டப்பட்ட இடங்களில் எல்லாம் அழகு திருமேனிகள். செப்புச் சிலைகள் அல்லது வெண்கலச் சிலைகள். எல்லாம் சோழர் கால வார்ப்புகள்.
பார்த்த முகமாக இருக்கிறதே என்று அருகில் சென்றேன். திருஞானசம்பந்தர் திரு உருவம். அம்மையிடம் ஞானப்பால் குடித்த அந்தக் குழந்தை இன்று அமெரிக்காவில் குளிரூட்டப்பட்ட அறையில் ஆடை இல்லாமல் நின்ற திருக்கோலம். தவக்கோலம் பூண்ட திருமேனியின் இன்றைய கோலம் அலங்கோலம். சிரித்த முகம். இடது கையில் பாலாடை என்னும் பால் புகட்டும் பாத்திரம் போல் தெரிந்தது. ‘செம்மொழி எல்லாம் வளர்த்த நீங்கள் இந்தப் பால யோகியை மறந்தீரே’, என்று கேட்டது போல் இருந்தது. கன்னத்தில் ஓர் அறை விழுந்த மாதிரி இருந்தது.
பால சன்னியாசிக்கு அருளமுதம் ஊட்ட வேண்டி அன்னை பார்வதியும் அருகிலேயே இருந்தாள். கி.பி. 10ம் நூற்றாண்டைச் சார்ந்த அவள் அபிராமி பட்டர் தற்போது தமிழகத்தில் இல்லாததால் அமெரிக்கா வந்துவிட்டேன் என்றாள்.
அம்மை இருந்தால் அப்பன் இல்லாமலா? அமெரிக்கர்கள் விஷயம் தெரியாதவர்களா என்ன ? அருகிலேயே அம்மையையும் அப்பனையும் சேர்த்தியாக அமர வைத்துள்ளனர். பெற்றோர் இருந்தால் பிள்ளை வேண்டாமா ? முருகனும் இருக்கிறான் இருவருக்கும் இடையில்.
அட, மூத்த மகன் இல்லையா என்றால் அவன் சற்று தள்ளி நிற்கிறான். என்ன இருந்தாலும் இளைய பிள்ளை செல்லப் பிள்ளை அல்லவா ? யாரோ ஒரு மகானுபாவன் 10 சென்ட் நாணயம் வைத்துச் சென்றிருக்கிறான். அதற்கு சந்தோஷப்பட்டுப புன்னகையுடன் நிற்கிறான் கணபதி.
தெய்வங்கள் இருந்தால் அடியார் இருக்கமாட்டாரா ? தலையாலேயே ஊர்ந்து கைலாயம் சென்ற அம்மையாருக்கு அமெரிக்கா எம்மாத்திரம் ? அவரும் இருக்கிறார்.
இவர்கள் அனைவரையும் கவனித்தபடி நின்ற திருக்கோலத்தில் இருக்கிறார் எம்பெருமான் நாராயணன்.
‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’, சங்கோடும் சக்கரத்தோடும் அபய ஹஸ்தத்தோடும் சாந்த மூர்த்தியாய் நிற்கிறான் தனியாக. மூன்று வேளை ஆராதனமும், பகல் பத்து, இராப்பத்து உற்சவங்களும், வருடாந்திர உற்சவங்களும் காணாமல், ஒரு வேளை கூட அமுது இன்றி இன்னும் நின்றுகொண்டிருக்கிறான் எம்பெருமான்.
வார்ப்பில் தெரிகிறது இவன் எங்கள் ஊர்ப்பக்கம் தான் என்று. பிற்கால சோழர் வார்ப்பு. பிரயோக சக்கரம் உபயோகத்திற்குத தயாராகத தெரிகிறது. ஆனால் என்ன ஊர் என்று தெரியவில்லை. ஏதோ ஒரு திவ்ய தேசமாக இருக்கலாம். ஏதோ திவ்யதேசத்தில் நல்ல நிலையில் இருந்திருக்க வேண்டும் இவர். சிலையின் கீழ் உற்சவங்களின் போது புறப்பாடு செய்யப் பயன்படும் வகையில் பீடம் அமைந்துள்ளது.
வேலைக்காக பட்டாச்சாரியார்களும் சாப்ட்வேர் எழுத அமெரிக்கா போனதால் பெருமாளும் அவர்களைத் தேடிக்கொண்டு நியூ யார்க் வந்து விட்டானோ என்று நினைத்தேன். ஆனால் பெருமாள் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அதே மௌனம் தான். ஏதோ கோபம் போலும் தெரிந்தது.
கோவில் ஒழுகில் இராமானுசர் என்ன உற்சவங்கள் செய்யப்பட வேண்டும் என்று சொன்னாரோ அவற்றில் ஒன்று கூட இல்லாமல், ஒரு வேளை தளிகை கூட இல்லாமல் தனியாகப் பல நூறு ஆண்டுகளாக நின்றுகொண்டிருப்பதால் கோபம் வராமல் என்ன செய்யும் ? என்றும் நினைத்தேன். ஆனால் மனம் தாளவில்லை. ஒரு காரியம் செய்தேன்.
ஆவது ஆகட்டும் என்று பெருமாள் அருகில் நின்றுகொண்டேன். கையைக் கூப்பிக்கொண்டு தேரழுந்தூர் பாசுரங்கள் ( ‘தேமருவு பொழிலிடத்து.., செங்கமலத் திருமகளும் புவியும்…, திருவுக்கும் திருவாகிய செல்வா.., தந்தை காலில் பெருவிலங்கு தாளவிழ … ) பாடி னேன். கண் திறந்த போது என்னைச் சுற்றி ஒரு சிறு கூட்டம். சீனர்கள், அமெரிக்கர்கள் என்று 7-8 பேர் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தனர். ஏதோ ஒரு பழியைத துடைத்த பெருமிதம் எனக்கு. பெருமாளைப் பார்த்தேன். புன்முறுவல் போல் தெரிந்தது. எந்த நூற்றாண்டில் இவர் இப்பாசுரங்கள் கேட்டாரோ தெரியவில்லை. 21-ம் நூற்றாண்டில் கேட்டுவிட்டார். நானும் ஆழ்வாரானேன். அமெரிக்காவும் திவ்யதேசமாகியது.
கூட்டம் என்னையே பார்த்தது. நான் பெருமாளைப் பார்த்தேன். ‘என்னால் உன்னைப பாரதம் கொண்டு செல்ல முடியாது. கையாலாகாத பாவி நான். என்னால் முடிந்தது பாசுரம் பாடுவது தான். எனவே என்னை மன்னித்தருள்வீர் பெருமாளே’, என்று வேண்டியபடி நின்றிருந்தேன். ஒரு அமெரிக்கர் படம் எடுத்தார்.
கூட்டம் ஒரே இடத்தில் இருப்பது பார்த்த அருங்காட்சியக அதிகாரி ஒருவர் விசாரிக்க வந்தார். அதற்குள் நான் ‘யோக நரசிம்மர்’ சந்நிதிக்குச் சென்று விட்டேன். ஆமாம் அவரும் இங்கு தவக்கோலத்தில் இருக்கிறார். கம்ப இராமாயணத்தில் இரணிய வதைப் படலத்தில் இருந்து ‘சாணிலும் உளன் ஓர் அணுவைச சத கூரிட்ட கோணிலும் உளன்..’ என்ற பாடலையும், ‘ஆடியாடி அகம் கரைந்து ..’ என்ற திருவல்லிக்கேணி பாசுரத்தையும் பாடினேன். அதிகாரியும் பார்த்தபடி நின்றிருந்தார்.
விட்டு வைப்பானேன் என்று சிவன் பார்வதி அமர்ந்த கோலத்தில் இருக்கும் இடம் சென்று ‘பொன்னார் மேனியனே..’ பதிகம் பாடினேன். அதிகாரி ஒன்றும் சொல்லவில்லை.
அந்த அதிகாரியிடம் கர்நாடகாவில் இருந்து வந்துள்ள ஒரு திருமால் சிலையில் சக்கரம் இடம் மாறியுள்ளதை சுட்டிக் காட்டினேன். அந்தச் சிலையையும் வெண்கலப் பெருமாள் சிலையையும் ஒப்பிட்டுக்காட்டி விளக்கினேன். அவர் குறித்துக் கொண்டார். ‘I am not an authority on these sculptures. But as you are a native of India, I take note of this and would make a report to the authorities’, என்று எழுதிச் சென்றார்.
அனாலும் பெருமாளின் இந்த இழி நிலை மனதை விட்டு நீங்க வில்லை. மீண்டும் ஒரு முறை வலம் வந்து பல படங்கள் எடுத்தேன். இதைக் காண்பவர்கள் யாராகிலும் உங்கள் ஊரில் பெருமாள் சிலைகள் 50 வருடங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளதா என்று சரி பார்க்க வேண்டுகிறேன். இந்தச் சிலையை John D.Rockfeller ( ராக் பெலலர் ) என்னும் அமெரிக்க பெருஞ்செல்வந்தர் இவ்வருங்காட்சியகத்திற்கு வழங்கியுள்ளார். அவருக்கு எப்படி கிடைத்தது என்று தெரியவில்லை. நம்மூரில் பெருமாளை விற்றவர் யார் என்று பார்த்தால் 40 ஆண்டுகளுக்குள் பதவியில் இருந்தவர்களில் யாராவது ஒருவராக இருப்பார்கள்.
40 வருட திராவிடக் கட்சிகளின் அழிச்சாட்டியத்தில் நமது பாரம்பரியம் கொள்ளை போனது. நமது வரலாறு நம் கண் முன்னே மெள்ள மூழ்கி அழிந்தது. நாம் மௌன சாட்சிகளாக இருந்தோம். வரலாறு அழிக்கப்பட்ட போது வேறு பக்கம் பார்த்தோம். ஒன்றும் நடவாதது போல் சினிமாவில் மூழ்கி இருந்தோம். சரோஜா தேவியும் தேவிகாவும் நமது இச்சைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானவர்களாக இருந்தனர். எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் காதல் செய்ய விட்டு நமது சுய இச்சைகளை நிவர்த்தித்துக் கொண்டோம். ஆண்மை இழந்து நிற்பதை ஒரு பெருமையாகப் பேசினோம். அதற்கு ‘பகுத்தறிவு’ என்று பெயர் வைத்தோம். அல்லது ‘முற்போக்கு’ என்று முட்டாக்குப் போட்டு மூலையில் முடங்கினோம். ஆங்கிலக் கல்வி பயின்று அடிமாடுகளாக நிற்பதை ‘செக்யூலரிசம்’ என்று பெருமையாக மார்தட்டிக் கொண்டோம்.
ஜெயமாலாக்களின் மேனி வனப்பின் சூடு தணியும் முன்னர் சில சிலுக்குகளுக்குத் தாவினோம். ‘நேத்து ராத்திரி அம்மா’வைப பிள்ளைகள் முனகியபடி பாடக் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தோம். வடிவேலுவின் உடல் சேட்டைகளையும் வட்டார வழக்கையும் நாம் பயன் படுத்துவதை ஒரு பெருமையாகப் பறை சாற்றினோம். நமீதாவின் உடலை அளவு எடுத்துக்கொண்டிருந்த போது அளவில்லாத நமது கலைச் செல்வங்கள் கொள்ளை போனது தெரியவில்லை. நயன்தாராவின் தொடர்புகளை ஆராய்ந்த போது நமது முன்னோருடன் நமக்கிருந்த தொடர்புகளை சிலைகள் திருட்டின் மூலம் இழந்தோம். சிம்ரனின் திருமணத்தில் நமக்கிருந்த அக்கறை சிலைகள் திருடுபோவதைத தடுப்பதில் இல்லை. குஷ்பூவிற்குக் கோவில் கட்டும் மும்முரத்தில் நமக்குக் காமாக்ஷியம்மன் கோவில் களவு போனது தெரியவில்லை. தமன்னாவின் கொள்ளை அழகால் நமது திருமால்கள் கொள்ளை போனது தெரிந்தும் வாய் மூடி இருந்தோம்.
‘கோமளவல்லி’ தாயார் நிலை தெரியாமல் ‘கோச்சடையான்’ பற்றிக் கவலை கொண்டோம். பெருமாளின் விஸ்வரூப தரிசனம் பாராமல் ‘விஸ்வரூபம்’ பிரச்சினை பற்றி அங்கலாய்த்தோம். 40 ஆண்டுகளாக மெதுவாக நபும்சகத் தன்மை ஊறப் பெற்றோம்.
இந்தக் காமாக்ஷிகளும், திருமால்களும் நியூ யார்க்கில் அடைக்கலம் தேடினர். இன்று நான் அவர்களை சந்தித்தேன். ஆறுதல் கூறிப பதிகம் பாடினேன்.
தமிழ் தெரிந்தவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் : நியூ யார்க் வரும் போது உங்கள் மதம், சாதி முதலியன தூர வைத்துவிட்டு சென்ட்ரல் பார்க் அருகில் இருக்கும் இந்த அருங்காட்சியகம் வாருங்கள். நமது தெய்வங்கள் முன்னர் சிறிது நேரம் நின்று மௌனமாக ஒரு பாசுரமோ பதிகமோ பாடுங்கள்.
சிறையில் இருக்கும் தெய்வங்கள் சந்தோஷப்படும்.
Why New York Rocks
New York amazes every time. The energy and the spirit of being on the move amazes me. I have seen this energy in Mumbai. But New York is special in that the city is without pretensions. People walk and speak fast and seem to hurry up even to the cafeteria. You get a sense of the world coming to an imminent end and hence push the food as fast as you can.
This does not stop with the cafeteria. The rush to the subway – the underground train network – is equally fast. People don’t walk; they sprint even on walkways. And the energy is contagious. You get on soon and start sprinting.
And I sprinted to ‘The Strand’ book store, one of the oldest and grandest that boasts of an 18 miles book line up. And boy, it was worth the sprinting. It sure had the 18 mile book line.

The book store starts from the outside. There are $1, $2 books on sale. They are the used books and are some of the books are too good to ignore. I spent 30 mins ogling at this treasure trove. There were books from 1920 to 2014. I was so mesmerized by this impressive lineup that I forgot to get into the store. I made a note of the books I needed to buy and stepped into the store.
Inside the store, it was magical realism at work. Virginia Wolf , Thoreau, Malala and many others stared at me from their books. I moved to the second floor that had books on the art and architecture.
I stepped into the third floor and entered a Victorian hall, or so I thought. The air smelt of ancient books. The aroma of Victorian vintage was in the air. And then I saw shelves and shelves of classics that date back 100 years. From Shakespeare to Milton to Frost to Hardy to Edgar Allan Poe to Shelly, everybody was there, stacked in the form of leather bound and hard bound books. Many books were signed copies as well. Religion, Philosophy, Economics, Poetry, Literature and Medicine lined the walls in the form of yellowing books.

I was unable to take my eyes off many of those masterpieces. I took many of those and tried to smell them – a practice from childhood days. I seemed to feel the age of the book. In many handwritten notes of the erstwhile owners of the books, I tried to live their lives and feel their feelings. The ageing books transported me to times unknown. In the book by Churchill, I felt world war two happening. I thought I faintly heard bombs falling over London.
In a copy on Jewish Holocaust, I saw the shivering handwriting of one Mrs.Rosenthal saying ‘Gift to my grand children Robin and Mathew dtd 29 Nov, 1973’. I was one year old then. I just imagined the number of times the book would have been read by then. If Mrs.Rosenthal had grandchildren in 1973, where would she be now ? Why did Robin and Mathew give up this treasured copy ? I was feeling history in my hand in the form of an ageing book. There were old copies of first person accounts of holocaust survivors and their flight to freedom in America and elsewhere. I never knew that so many books on holocaust existed.
I opened a 1903 edition of ‘History of Westminster Abbey’. I had indeed opened history. I was looking into the very page where the original owner would have looked in more than 100 years ago. I felt a presence near me. Probably the rightful owner was also looking into the page, standing beside me. I read a couple of pages and returned the book to its place.

There were many elderly people who were particularly interested in historical books. I saw a 70 year old gentlemen who, with a walking aid, was trying to reach out to a higher shelf to lay hands on some vintage book. What inspires this man, to braze the cold , walk with an aid and come to a book store, of all places, to try and get a vintage book ? The undying passion for books probably grows with age. The more addicted to books you are when young, even more addicted you would be, when older, so I thought. I helped him reach the book that he wanted and that turned out to be ‘Nixon’s Defense Papers’. ‘Nixon didn’t get justice, my son’, he said and walked to the counter to check the book out.

I was astonished to see whole racks of books devoted to Nixon, Abe and Kennedy. How many authors have analysed the lives and times of the past Presidents?, I thought. While some focused on Jacqueline Kennedy and her affiliations, there were others that spoke about the ‘Cuban Missile Crisis’. ‘The Killing..’ series on Kennedy and Abe was all over the place.
Much to the consternation of the wife in Singapore and emboldened by her absence in New York, I splurged on some rare topics and bought a bundle that included a comparison of Marx, Darwin and Wagner. Under the garb of buying for children, I made with quite a lot.
I shall write more on the books that I had bought in the series of reviews that I plan to write.
If you are in New York, never board the return flight before a visit to The Strand.
Did you have similar experience in The Strand or in any other book store ? Do share your experiences.