ராஜீவ் காந்தி சட்டம்

Imageஅன்று என் அத்தை வீட்டில் எல்லாரும் ஊருக்குச் சென்று இருந்தனர். பூட்டு போட்ட வீட்டைப் பூட்டோடு பெயர்த்துக்கொண்டு சென்று விடுவது நெய்வெலியில் வழக்கம் என்பதால் என்னை இரவுக் காவலுக்கு அவர்கள் வீட்டில் படுக்கச் சொல்லி இருந்தனர். கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். செமெஸ்டர் விடுமுறை.

காலை எழுந்து வானோலி கேட்பது வழக்கம். அந்த வருடம் பொதுத் தேர்தல் நடப்பதால் ஒரே விறுவிறுப்பு. அப்போதைய தி.மு.க. அரசை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று வீட்டுக்கு அனுப்[பி இருந்த நேரம்.

ஆறு மணி ஆங்கிலச் செய்தி இடியாய் இறங்கியது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்று வானொலி அமைதியாக அலறியது. கால்கள் வலுவிழப்பது போல் இருந்தது. அப்படியே தரையில் அமர்ந்து கொண்டேன். சொல்லப்போனால் வெறி கொண்டு தரையை அறைந்தேன் என்று சொல்லலாம். அந்த வருடம் வி.பி.சிங் அடித்த கூத்துக்கள் எல்லாம் முடிந்து ஒரு மாதிரி நிலையான ஆட்சி அமையும் என்று ஆவலோடு எதிர்பார்த்த நேரம்.

எனக்கு இலங்கைப் பிரச்சினையுடன் பல ஆண்டுகளாகவே தொடர்பிருந்தது. நண்பன் ஒருவன் ஊரை விட்டு இலங்கைக்கு ஓடி, போராடினான். பிறகு அவனைப்பற்றி எந்தத் தகவலும் இல்லை.

அத்துடன் நெய்வெலி அருகில் விருத்தாசலம் பகுதியில் சில (PLOT, EPRLF) முதலிய அமைப்பினருக்கு இந்திய அரசு பயிற்சி அளித்துவந்தது என்று பேசிக்கொண்டனர். 1987-ல் இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தம் எற்பட்டது. இது பற்றி எல்லாம் தினமும் வானொலியில் கேட்பது உண்டு. அமைதிப் படையினருக்காக சென்னை வானொலி சிறப்பு ஒலிபரப்பு எல்லாம் செய்யும். அந்த நாட்களில் அவற்றைக் கேட்பது வழக்கம்.

என் நெருங்கிய நண்பர் புலி ஆதரவாளர். அவர்கள் வீட்டில் அப்போதெல்லாம் புலிகள் படங்கள் கொண்ட காலெண்டர்கள் இருக்கும். தி.க.வைச் சேர்ந்த அவனுடன் சேர்ந்து கொண்டு நெய்வெலியை அடுத்துள்ள சொரத்தூர் என்னும் கிராமத்தில் இருந்த இலங்கை அகதிகள் முகாமுக்குச் சென்று துணி மணிகள் கொடுத்துள்ளேன்.

ஆனால் அமைதி ஒப்பந்தம் முறிந்ததற்குப் புலிகள் காரணம் என்று தெரிந்து ரொம்பவும் வேதனைப்ப்பட்டேன். அவனும் தான். ஒரு வரி விடாமல் ‘தி ஹிந்து’ படிப்பது வழக்கம். ஜி.பார்த்தசாரதி, ஜெ.என்.தீக்ஷித் முதலிய தூதர்கள் பேச்சுக்கள் முழுவதும் படித்து அவற்றைப் பற்றி விவாதிப்பது அப்போதைய ஒரு செயலாக இருந்தது.

ஒப்பந்தம் தோல்வி அடையப் புலிகள் காரணமாயினர். இந்தியப் படையினரைக் கொன்றனர்.

வரதராஜ பெருமாள் என்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வட மாகாண முதலமைச்சரை அரசு நடத்த விடாமல் இடையூறு செய்தனர். அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

1990-ல் சென்னையில் பொறியியல் நுழைவுத் தேர்வு எழுதச் சென்றேன் என்று நினைவு. அப்போது புலிகள் சென்னையில் ஒரு வீட்டில் புகுந்து மற்ற ஒரு தமிழ்க்குழுவைச் சேர்ந்த சிலரைப் பட்டப் பகலில் கொன்றனர். இது என் மனதில் கடும் பாதிப்பை எற்படுத்தியது. அதனை அப்போதைய தி.மு.க. அரசு மூடி மழுப்பியது.

பின்னர் 91-ல் ராஜீவ் கொல்லப்பட்டதும் நான் தரையை அறைந்தபடி அமர்ந்திருந்ததும்.

எங்கள் சேலம் பொறியியல் கல்லூரியில் இலங்கை கோட்டா என்று ஒன்று உண்டு. 4-5 இலங்கைத் தமிழர்கள் ஒவ்வொரு வருடமும் சேர்ந்து படிப்பர். அவர்களுடன் பேச்சுக்கொடுக்கும் போது தான் புலிகளின் உண்மை சொரூபம் தெரிய வந்தது – அவர்கள் பணம் வசூல் செய்வது, புலம் பெயர்ந்தோரின் உறவினர்களை மிரட்டிப் பணம் பறிப்பது, 10 வயதுப்பிள்ளைகளை மனித குண்டுகளாக ஆக்குவது முதலியன. அவர்களில் ஒரு நண்பரும் புலியே. தப்பித்து வந்து அகதியாகி எங்களுடன் கல்லூரியில் படித்தார். இப்[போது நல்ல நிலையில் இருக்கிறார்.

பின்னர் ராஜீவ் கொலையாளிகள் பிடிபட்டனர் / இறந்தனர். வழக்கு நடந்தது.

நேற்று இந்தியத் தலைமை நீதி மன்றம் மூன்று பேரைத் தூக்கிலிருந்து தப்பிவித்துள்ளது.

ராஜீவ் கொலை மன்னிக்க முடியாதது.

வீரம் என்ற போர்வையில் மிகவும் கோழைத்தனமாக நிகழ்த்தப்பட்ட ஒரு வெறிச் செயல் இது என்பது உண்மையே. பாதுகாவல் இல்லாத ஒரு மனிதனை, பெண்களைக் கருவியாகக் கொண்டு கொலை செய்தார்கள். அத்துடன் சேர்ந்து 29 தமிழர்களும் இறந்தனர். இந்த அட்டூழியத்துக்குத் துணை போனவர்கள் தான் இந்த மூவரும்.

அவரது அகால மரணத்தால் இந்தியா அடுத்த பத்து ஆண்டுகள் நிலையற்ற ஆட்சியைச் சந்திக்க நேர்ந்தது. ஆனால் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபின் மறு பேச்சுக்கே இடமில்லை. அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டியது தான்.

என் மனதில் தோன்றுவது இது. குற்றவாளிகள் மூன்று பேரும் தங்கள் ஆயுள் தண்டனைக் காலத்தை முடித்து விட்டனர். அதைக்கடந்தும் சிறையில் இருந்துள்ளனர். எனவே, தண்டனைக் காலம் தவிர அவர்கள் சிறையில் இருந்த காலத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். நீதியின் படி நடக்கும் ஒரு சமூகம் என்று நாம் நம்மைச் சொல்லிக் கொள்வோமேயானால் இதனை ஆதரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதனால் வழக்குகள் விரைவாக நடத்தப்படவும், முடிவுகள் காலம் தாழ்த்தாமல் எடுக்கப்படவும் ஒரு வழி பிறக்கும்.

இதற்கு ‘ராஜீவ் காந்தி சட்டம்’ என்று பெயர் வைக்கலாம். அவர் பெயரில் நல்லது நடக்கட்டும்.

என் புது வருஷ ஞானம்

இன்று கலியுக வருஷம் 5114, விஜய வருஷம், மார்கழி மாதம் 17ம் நாள், தஷிணாயனம் கலந்த அமாவாசையில் ஹேமந்த ருதுவில் பூராடம் மற்றும் மூலம் நட்சத்திரங்கள் கூடின தினத்தில் வடக்கே மற்றும் வட கிழக்கே சூலமும் உள்ள ஒரு நாளில் ஆங்கில வருஷம் 2014 வந்துள்ளது எனப்தைத் தவிர வேறு ஒன்றும் புதியதாகத் தெரியவில்லை.

என் பகுத்தறிவினால் அறியக்கூடியது அவ்வளவு தான் போல.

ஜனவரி முதல் நாள் என்பது என்னவென்று சங்க இலக்கியங்களில் நான் அறிந்தவரை துழாவிப் பார்த்தேன். 

கம்பன் ஏதாவது சொல்லியிருப்பானோ என்றும் தேடினேன்.

வள்ளுவர், இளங்கோ என்று யாராவது ஏதாவது சொல்லி இருப்பார்களோ என்றும் பார்த்தேன்.

அப்படி ஒன்றும் அவர்கள் சொல்லவில்லை.

இவர்கள் யாருக்குமே தெரியாமல் ஒரு ஒப்புயர்வற்ற நிகழ்வு ஆண்டு தோறும் நடக்கிறது. அது நமது தமிழையும் தமிழ் தேசீயத்தையும் காக்கவே பிறப்பெடுத்துள்ள ‘தமிழ்த் தலைவர்கள்’ மட்டுமே தெரிந்து வைத்துள்ள ஒன்று போலத் தெரிகிறது.

அது எப்படி கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்க் குடியின் த்லையாய பழம் பெரும் புலவர்களுக்குத் தெரியாததெல்லாம் நமது ‘தமிழ்த்’ தலைவர்களுகு மட்டும் புலப்படுகிறது என்று யோசித்தேன்.

நாள் முழுக்க அமர்ந்து யோசித்தேன்.

‘தமிழ்த் தலைவர்’ பெருமை சொல்லவும் அரிதே என்று உணர்ந்துகொண்டேன்.

உங்களுக்கும் அந்த பூரண ஞானம் பொலிய எல்லாம் வல்ல பகுத்தறிவை வேண்டுகிறேன்.

காஞ்சி வழக்கு – என் அனுமானத்தின் காரணங்கள்

காஞ்சி வழக்கு பற்றிய சென்ற பதிவில் மத மாற்றுக்காரர்களின் உலகளாவிய இயக்கங்களின் மறைமுகக் கை இருக்கலாம் என்று கண்டோம். அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றியும் கண்டோம்.

ஆனால் இதற்கெல்லாம் அடிப்படை உண்டா என்று கேட்கலாம். என்னுடைய அலசல் அக்காலத்தில் நடந்த நிகழ்வுகளின் ஒரு தொகுப்பை அவற்றின் கால அளவையும் நிகழ்ந்த நேரத்தையும் கருத்தில் கொண்டு எழுப்பப்பட்ட அனுமானங்கள் என்று தெரிவித்திருந்தேன்.

ஆனால் நான் இந்த அனுமானத்திற்கு வரக் காரணங்கள் என்ன ?

வழக்கு பதிவு செய்யப்பட்ட விதமும், வழக்கு நடத்தப்பட்ட அழகும் அன்றைய அரசின் இவ்வழக்கு பற்றிய கருத்துக்களும், காவல் துறை மற்றும் ஊடகங்களின் நடத்தையுமே என் அனுமானத்திற்குக் காரணங்கள்.

வழக்கு பதிவு செய்யும் முன்னரே ஜெயேந்திரரைக் கைது செய்வதே முக்கியம் என்பது போல் செயல்பட்டது அரசு. அன்றைய முதலமைச்சரும் முந்தைய நாள் வரை காஞ்சி மடத்துடன் இழைந்துகொண்டிருந்தார். திடீரென்று தீபாவளி நாள் அன்று ஜெயேந்திரர் கைது செய்யப் பட்டார். அது வரை அவரே எல்லாத் தொலைக் காட்சிகளிலும் தீபாவளி அன்று நற்செய்தி வழங்கி வந்தார். இந்துமதம் என்றாலே காஞ்சி சங்கராச்சாரியார் என்ற அளவில் இருந்தது அன்று.

தீபாவளி நாள் அன்று அதிரடி முறையில் அவர் கைது செய்யப்படவேண்டிய தேவை என்ன ? தீபாவளி என்பது பாரதத்தின் அனைத்து இந்து சம்பிரதாய மக்களும் புனிதம் என்று கருதும் நாள். எனவே அன்று அந்த சமயத்தின் முக்கியத் தலைவரைக் கைது செய்து யாருக்கு என்ன செய்தி அனுப்பப்பட்டது என்று எண்ணத் தோன்றுவது இயற்கையே. ஆக, யாருக்கு என்ன செய்தி அனுப்பப்பட்டது ?

அப்போது என்ன கதைகள் பேசப்பட்டன ? அவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து நேபாளத்திற்கு ஹெலிகாப்டரில் தப்ப இருந்தார் என்ற செய்தி பரப்பப் பட்டது. ஆந்திராவிலிருந்து நேபாளத்திற்குப் பறக்க இதுவரை ஹெலிகாப்டர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது பிறந்த குழந்தைக்குக் கூட தெரியும்.

ஜெயேந்திரர் காஞ்சிபுரம் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டார். ஆனால் அதற்கு முன்னரே ‘நக்கீரன்’ என்னும் நாலாந்தர ஏட்டின் உதவித் தலைமை ஆசிரியர் நீதிமன்றத்திற்குள் அமர்ந்திருந்தார். அது எப்படி? அவருக்கு இந்தத் தகவல் எப்படி முன்னரே தெரிந்தது ?

வழக்கில் ஜெயேந்திரரைக் கைது செய்த பிரேம்குமார் என்ற காவல்துறை ஆய்வாளரின் மைத்துனர் இந்த உதவி ஆசிரியர் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

கைது செய்து சிறையில் அடைத்தனர். பிணையில் வெளியே விடாமல் இருக்க ஆன மட்டும் முயன்றனர். அரசின் அத்துனைத் துறையும் இதின் பயன் படுத்தப்பட்டன. முதல்வர் நேரடியாக இந்த வழக்கில் ஈடுபட்டார். பிரேம்குமாருடன் நேரடியாக அனைவரும் பார்க்கும் வண்ணம் தனது ஹெலிகாப்டர் அருகில் நின்று பேசினார். அன்று மாலையே இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் மிகவும் அதிரடி முறையில் பரமாச்சாரியாரின் அதிஷ்டானத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அப்போது பிரேம்குமார் காலில் காலணி (ஷூ ) அணிந்திருந்தார். விஜயேந்திரர் தான் பூசை முடித்து வருவதாகக் கூறினார். ஆனாலும் விடாப்பிடியாக பரமாச்சாரியாரின் அதிஷ்டானத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். ஏன் இவ்வளவு அவசரம் ?

ஜெயேந்திரர் மீது அசைக்க முடியாத சாட்சியங்கள் இருப்பதாக அன்றைய முதல்வர் தமிழக சட்டப் பேரவையில் அறிவித்தார் (Clinching Evidence).  ஆனால் அந்த சாட்சி என்ன ஆனது என்று தெரியவில்லை. ஒரு தனி வழக்கு பற்றி முதல்வர் சட்டசபையில் அறிவிக்க வேண்டியது ஏன் ? யாரைத் திருப்திப் படுத்த ?

சரி, அசைக்க முடியாத சாட்சி என்ன ?

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் இருந்து 50 இலட்சம் பணம் எடுத்து அது கொலையாளிகளுக்குக் கொடுக்கப்பட்டது என்பதே அது. இந்தக் காரணம் காட்டியே காஞ்சி முதல் சென்னை உயர் நீதிமன்றம் வரை பிணை (bail)  மறுக்கப்பட்டது.  டெல்லியில் தலைமை நீதிமன்றம் முன் இந்த சாட்சி பற்றிக் கேள்வி எழுந்தது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கணக்குப் புத்தகம் கேட்கப்பட்டது. அரசு தரப்பில் அப்படி ஒரு கணக்கு இல்லை என்று கூறப்பட்டது.

அன்று வரை எந்தக் கணக்கு முக்கிய சாட்சியாகக் காண்பிக்கப்பட்டதோ அதுவே இல்லை என்று அரசே கூறியது. நீதி மன்றம் கொதிப்படைந்தது.

பின்னர் அரசு அது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கணக்கு இல்லை என்றும் அது இந்தியன் வங்கிக் கணக்கு என்றும் கூறியது. நீதிமன்றம் கணக்குப் புத்தகப் கேட்டது. அதில் 50 இலட்சம் எடுக்கப்படவில்லை என்றும் அந்தத் தேதியில் 50 இலட்சம் வைப்பு செலுத்தப் பட்டது என்றும் தெளிவாகியது. மடத்தின் ஒரு நிலம் விற்ற வகையில் பெற்ற பணம் வங்கியில் செலுத்தப்பட்டது.

ஒரு க்ரெடிட் , டெபிட் ( Credit / Debit ) வித்யாசம் கூடவா அரசிற்குத் தெரியவில்லை ? நம்ப முடியவில்லை.

இல்லாத ஒரு வங்கிக் கணக்கை இருக்கிறது என்று அரசு துணிந்து பொய் கூறியது. பணம்  செலுத்தியதை எடுக்கப்பட்டது என்று மேலும் துணிந்து பொய் கூறியது. இதெல்லம் ஒரு குற்றத்தை நிரூபிக்க அல்ல; ஜெயேந்திரருக்குப் பிணை மறுக்க.

அவரைச் சிறையில் நீண்ட காலம் வைப்பதால் யாருக்குப் பயன் என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை.

அவரைச் சிறையில் வைத்து விசாரணை என்ற பெயரில் சட்ட விரோதமாக மயக்க மருந்து கொடுத்துப் பல கேள்விகள் கேட்டது காவல் துறை. அதனைப் பதிவு செய்து அதனைத் தொலைக் காட்சிகளுக்கும் அளித்தது. ஆனால் யார் அதனை அளித்தனர் என்று தெரியவில்லை என்று தொலைக்காட்சி நிலையங்கள் தெரிவித்தன. இருந்தும் அந்த ‘விசாரணையை’ ஒளி பரப்பித் தங்கள் ‘தர்ம’த்தை நிலை நாட்டின. இவையும் யாருக்காக என்று தெரியவில்லை.

ஜெயேந்திரருக்கு டெல்லி உச்ச நீதிமன்றம் பிணை அளித்து விடுவித்தது. அந்த ஆணையில் தமிழக அரசைக் கடுமையாகச் சாடியது உச்ச நீதி மன்றம். புதிய சாட்சிகள் ஒன்றும் இல்லை, வழக்கை நடத்த முயற்சி செய்யாமல் ஜெயேந்திரரைச் சிறையில் வைக்கவே அரசு விரும்புகிறது என்று நீதிமன்றம் சாடியது.

ஜெயேந்திரர் வெளியே வந்த சில மணி நேரங்களிலேயே விஜயேந்திரக் கைது செய்தது தமிழக அரசு மீண்டும் வேறு புதிய சாட்சிகள் இல்லாமலே.

இந்திய ராணுவத்தில் பெரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின் தன் வாழ்நாளைக் காஞ்சி மடத்தின் சேவையில் கழிக்க நினைத்து அதில் தொண்டூழியம் செய்துவந்த சுந்தரேசையர் என்பவரைக் ‘குண்டர்’ சட்டத்தில் கைது  செய்தது அரசு. பின்னர் அதற்கும் நீதி மன்றம் செல்ல வேண்டியிருந்தது. வழக்கமாகக் குற்றம் செய்யும் குற்றவாளிகளை நடத்துவது போல் இவரை நடத்தியதை நீதிமன்றம் விரும்பவில்லை.

அத்துடன் இல்லாமல் மடத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியது அரசு. மடத்தின் கீழே பல பாட சாலைகள், பசுக் காப்பகங்கள், மருத்துவனமனைகள் முதலியன நடந்து வந்தன. இவை அனைத்தும் பாதிக்கப்பட்டன.

இதற்கும் நீதி மன்றம் செல்ல வேண்டியதாக இருந்தது. அந்தத் தீர்ப்பில் அரசின் நடவடிக்கை நீதிக்கு எதிரானது என்று நீதிமன்றம் தெரிவித்தது. (“Action for freezing the accounts of the Mutts is ultra vires, illegal and liable to be set aside”).

தெரிந்தே நீதி மன்றத்தில் பொய் சொல்வது ஒரு அரசின் வேலையா ? இவ்வளவு தூரம் மெனக்கெட்டு பொய் கூறி, நீதி மன்றத்திடம் வாங்கிக் கட்டிகொண்டது யாருக்காக ?

இந்த நேரத்தில் ஊடகங்களின் செயல்பாடு பற்றிப் பேசாமலிருப்பதே நல்லது. கொல்கொத்தாவின் சோனாகாச்சியில் நடைபெறும் தொழிலுக்கும் ஊடகங்களின் செயல்பாட்டிற்கும் பெரிய வித்யாசம் இல்லை.

ஒரே ஒரு உதாரணம் மட்டும் பார்ப்போம். ‘காலச்சுவடு’ என்னும் ஒரு இலக்கியப் பத்திரிகை. அந்நேரத்தில் அதில் வெளிவந்த ஒரு கட்டுரையில் ஒரு சிறிய பகுதி இது. மேலும் நான் சொல்ல வேண்டியது ஒன்றும் இல்லை.

“கேட்டுக்கொண்டிருந்த நான் சொன்னேன்: “சார், நீங்கள் ஜெயேந்திரரைத் தவறாக நினைக்கக் கூடாது. அவர் எல்லோரையும்தான் சட்டையை அவிழ்க்கச் சொல்கிறார். ஆண்களிடம் வெளியில் வைத்துக் கேட்பார். பெண்களிடம் உள்ளே வைத்துக் கேட்பார். அவ்வளவுதான் வித்தியாசம்.” ( நன்றி : தமிழ் ஹிந்து )

காலச்சுவடு என்பது முற்போக்கு இலக்கியச் சூழலில் உள்ள ஒரு பத்திரிக்கை. இதுவே இப்படிச் செயல்பட்டது. மற்றவை பற்றிப் பேசவேண்டியதில்லை.

பத்திரிக்கை தர்மம் என்று கொடி பிடிப்பவர்கள் அப்போது எங்கே போனார்கள் ? யாரைத் திருப்திப் படுத்த இந்தச் செயல்பாடு ?

விஜயேந்திரரையும் ஒரு முன்னாள் நடிகையையும் தொடர்பு படுத்தியும் பத்திரிக்கைகள் பேசின. பெண் உரிமைக்காரர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு சுற்றுலா சென்றார்கள் என்று நாம் நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். ‘ஜன நாயக மாதர் சங்கம்’, ‘தேசியப் பெண்கள் ஆணையம்’ முதலியன அப்போது தோன்றவில்லையா ? அல்லது அந்தக் பெண் நடிகை பெண்ணே இல்லையா ?

எதற்காக இந்த அளவு வீழ வேண்டும் பத்திரிக்கைகளும், ஊடகமும், அரசும் ?

என்னிடம் பதில்கள் இல்லை. அனுமானம் மட்டுமே. விடை தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்.

ஆனால் ஒன்று நிச்சயம்.  வழக்கிலிருந்து ஜெயேந்திரர், விஜயெந்திரர் விடுதலை ஆனார்கள் என்றாலும் மடத்தின் பெருமையும் ஆளுமையும் குறைந்தது என்பது உண்மை. துறவியரின் பெருமையும் அவ்வாறே.

இனி ஜெயேந்திரர் சமூக சீர்திருத்தங்களில் அவ்வளவு தீவிரமாக ஈடுபடுவாரா என்பது சந்தேகமே. அவரது உடல் நலமும் இடம் கொடுக்காது. மன உரமும் தளர்ந்திருக்கும். பழையபடி காஞ்சி மடம் ‘ப்ராம்மணர்களின்’ கூடாரமாகலாம். ‘நமக்கேன் வம்பு’ என்று அவர்கள் பார்வை உள் நோக்கித் திரும்பலாம். இவை எதிர்பார்க்கக் கூடியவை.

காஞ்சி மடத்தின் இந்தப் போக்கினாலும் பெருமை வீழ்ச்சியாலும் பயன் அடையப்போவது யார் என்பதை அறிந்துகொள்ளப் பெரிய பகுத்தறிவெல்லாம் தேவை இல்லை.

வைணவம் – தத்துவ தரிசனம்

விசிட்டாத்வைத தத்துவத்திற்குள் புகும் முன் அதன் சமகால அல்லது சற்று முற்கால தத்துவங்கள் நிலை பற்றி சிறிது பார்ப்போம்.

மேலே செல்லும் முன்பு பின்வருவதை நினைவில் கொள்ள வேண்டும்.

பக்தி மார்க்க சமயங்களான சைவமும் வைணவமும் வேதத்தை முதலாக வைத்தன. ஜைனமும், பௌத்தமும் வேதத்தை மறுத்தன. கடவுள் மறுப்பை ஆதரித்தன.  இவை இவற்றுக்கிடையே உள்ள முக்கிய சித்தாந்த ரீதியான வேறுபாடு.

உலகம் இரண்டு வகையாகப் பார்க்கப்பட்டது. ஒன்று – இவ்வுலகம் ஜடப் பொருட்களால் ஆனது. ஆகவே இவ்வுலகத்தைப் பொருள் ரீதியாகவே பார்க்க வேண்டும். இது பொருள் முதல் வாதம். இரண்டாவது – இவ்வுலகம் கருத்து ரீதியானது. ஒரு கருத்தை ( Philosophy, சித்தாந்தம்) முன் வைத்து இவ்வுலகத்தை அணுக வேண்டும். இது கருத்து முதல்வாதம். இவை இரண்டின் மூலமாகவும் நாம் நமது வைணவப் புரிதலை அணுகுவோம்.

சமணம் கூறுவது :

உலகம் இரண்டு தெளிவான பிரிவுகளை உடையது. உடல், உயிர். அவர்கள் உயிரை சீவன் என்றும் உடலை அசீவன் என்றும் அழைத்தனர். இவை இரண்டுமே அழிவில்லாதவை என்று வாதிட்டனர். சீவன் ஆத்மா என்று அழைக்கப்பட்டது. அது ஒன்றல்ல, பல என்றனர். ஒவ்வொறு ஆன்மாவும் ஏற்கும் பொருளின் அமைப்பையும் அளவையும் கொண்டுள்ளது என்றனர். எறும்பின் ஆன்மா யானையின் ஆன்மாவை விட சிறியது என்பது அவர்கள் தத்துவம். இவ்வான்மாக்கள் உலகத்துடன் தொடர்பு கொள்ளும்போது அல்லல் படுகின்றன என்றனர். இதைப் புரிந்துகொள்வது ஞானம் என்றனர். சீவன் என்பது அறிவுள்ளது. அது அசீவனுடன் தொடர்பு கொள்ளும்போது கெட்டழிகிறது ; இதனைத் தவிர்த்துப் பரிபூரண அறிவைப் பெற வேண்டும். அதுவே முக்தி. இது தவிர கடவுள் என்பது இல்லை என்றனர்.

பௌத்தம் மூன்று உண்மைகள் பற்றிப் பேசுகிறது. முதல் உண்மை – புலன்களால் உண்டாகும் பற்றுகள் துன்பம் தருவன. இரண்டாவது உண்மை – துன்பம் விளைவதற்குக் காரணமானவற்றை உணர்வது. மூன்றாவது உண்மை – துன்பத்திலிருந்தும் அதன் காரணத்திலிருந்தும் விடுதலை அடைவதை அறிவது. இந்த மூன்றும் அறிந்து கடை பிடித்தால் துன்பமற்ற நிர்வாண நிலை அடையலாம். இதற்கு வேதம், கடவுள் முதலியன தேவை இல்லை.

பௌத்தம் கூறுவது :

இவ்வுலக நிகழ்ச்சிகள் எல்லாம் மூன்று தன்மைகளை உடையன. ஒன்று- நித்யம் – எல்லாம் மாறும் தன்மை கொண்டவை; எனவே நிலை அற்றவை. இரண்டு – துக்கம் – உலகம் துன்ப மயமானது. மூன்று – அநாத்மம் – இவ்வுலகில் ‘யான்’ என்று அழைக்க ஒன்றும் இல்லை. எனவே ஆன்மா என்பதே இல்லை.இது  புத்தர் கூறியது.

ஆனால் பின்னர் வந்த மகாயானம், ஹீனயானம், தேரவாதம் முதலிய பௌத்த சமயங்கள் மக்களைக் குழப்பின. “தோற்றமும் இல்லை, முடிவும் இல்லை, நிலைத்தலும் இல்லை, நிலையாமையும் இல்லை, ஒருமையும் இல்லை, பன்மையும் இல்லை, உருவாவதும் இல்லை, அழிவதும் இல்லை. எல்லாமும் சூன்யமே. சூன்யம் எல்லை அற்றது. சூன்யம் மட்டுமே உள்ளது என்று போதித்தன.

இவை போதாதென்று உலகாயதம் என்னும் கருத்தும் நிலவியது. உலகாயதர்கள் ஐம்பூதங்களின் சேர்க்கையால் உலகில் நிகழ்வுகள் உள்ளன. கண்ணால் காணப்படும் பொருட்கள் மட்டுமே உண்மை. மற்றதெல்லாம் பொய் என்றனர். எனவே கடவுள், ஆத்மா, வேதம் முதலியன பொய் என்றனர். இதற்கு சார்வாகம் என்று ஒரு பெயரும் உண்டு.

‘சுவை ஒளி ஓசை உரு நாற்றம் இவ்வைநதின்
வகை தெரிவான் கட்டே உலகு” என்ற திருக்குறளும் இதன்படியே உள்ளதாக சில அறிஞர்கள் கூறுவர்.

இந்நிலையில் ஆதி சங்கரரின் அத்வைத வேதாந்தம் வேறு பரிணாமம் அளித்தது.

சங்கரர் வேதாந்த வாதி. ( வேதாந்தம் = வேதத்தின் அந்தம், இறுதி ). வைதீக மரபைச் சார்ந்தவர். இவரது தத்துவம் அத்வைதம் ( அ + த்வைதம் ) – இரண்டில்லாதது என்பது பொருள். பிரம்மம் ஒன்றே. அது குற்றமில்லாதது. அது மட்டுமே உள்ளது. உலகம், உயிர்கள், ஜடப்பொருட்கள் எல்லாம் அந்த பிரும்மத்தின் பிம்பம், வெறும் தோற்றம். ஆகவே இவ்வுலகம், மனிதன், ஜடப்பொருட்கள் முதலியன வெறும் மாயை. இதுவே அவரது அத்வைத சித்தாந்தம்.

இது ஏற்றம் பெறக் காரணம் மன்னனும் அவனுடன் இருந்த உயர்குடி மக்களும். ஒரே ஒரு தலைவன் என்பதும், அவன் குற்றமிலாதவன் என்பதும் பிரும்மத்தை மட்டுமின்றி மன்னனையும் குறிப்பதாக இருந்தது. மன்னன் சிறப்பானவன். அவன் தவிர அனைவரும், அனைத்தும் சிறப்பிலாதவர்கள், முக்கியத்துவம் அற்றவர்கள் என்னும் விதமாக சமூகப் பார்வை கொண்டு பார்க்கப்பட்டது அத்வைதம். ஆனால் இது கை வினைஞர்கள், சிறு நில விவசாயிகள் முதலியோரிடம் எடுபடவில்லை.

அத்துடன் இவ்வுலகமும் இதன் பொருள்களும் உயிரினங்களும் மாயை என்பது மக்களுக்கு வியப்பளித்தது எனலாம். உலகமும், உயிர்களும், செல்வம் முதலியனவும் தோற்றம் என்றால் அதற்காக உழைக்க வேண்டிய அவசியம் என்ன? இத்தனை பாடுபட்டாலும் பண்ணையில் உழைத்தாலும் வரும் பொருளோ குறைவு. அதுவும் மாயை, உண்மை இல்லை என்று கொள்ள வேண்டும். ஆனால் பெருநிலக் கிழார்கள் நம் உழைப்பினால் நல்ல நிலையில் உள்ளனர்; அருசுவை உணவு கொள்கின்றனர்; சம்போகங்கள் நிறைந்த வாழ்க்கை வாழ்கின்றனர்; அவை உண்மை இல்லையா? அதுவும் மாயையா? என்பது போன்ற குழப்பங்களில் சாதாரண மக்கள் ஆழ்ந்தனர் என்று நினைக்க இடமுள்ளது.

இதற்கு மாற்றாக வந்தது இராமானுசரின் விசிட்டாத்வைதம் ( விசிட்டம் + த்வைதம் ).இது பிரும்மத்தை ஒப்புக்கொள்கிறது. ஆனால் அது ஒன்று மட்டுமே மற்றதெல்லாம் மாயை என்பதை ஒப்புக்கொள்ளவில்லை. இதன் சித்தாந்தம் பிரும்மம் ஒன்று. அது பரமாத்மா என்றும் அறியப்படுகிறது. மற்றவை அனைத்தும் ஜீவன்கள். அவை ஜீவாத்மா. மரம், விலங்கு, மனிதன் அனைத்தும் ஒன்றே. ஏனெனில் அவற்றுள்  உள்ள ஜீவாத்மா ஒரே குணமும் அளவும் கொண்டது. ஒரு விலங்கின் உள்ளே உள்ள ஆத்மாவும் மனிதனின் உள்ளே இருக்கும் ஆத்மாவும் ஒன்றே. அதனதன் பூர்வ ஜென்ம பலன்களால் அவை ஒரு தோற்றம் கொண்டு ஏதோ ஒரு உடலில் உள்ளன. எனவே ஆத்மா அளவில் ஒன்றிற்கும் மற்றொன்றிற்கும் வேறுபாடில்லை.

உதாரணமாக “எனது புத்தகம்” என்கிறோம். இங்கு “எனது” என்பது நமது உடலைக் குறிக்கிறது. “எனது கை” என்னும் போதும் “எனது” என்பது நமது உடலைக் குறிக்கிறது. அதுபோல, “எனது உடல்” என்னும்போது “எனது” என்பது எதைக் குறிக்கிறது ? அதுதான் “ஜீவாத்மா” என்னும் நமது ஆத்மாவைக் குறிக்கிறது. ஆக நான் என்பது உடல் அல்ல. ‘நான்’ வேறு ; உடல் வேறு என்று அறிவுறுத்தியது.அதுபோல் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு ஆன்மா உள்ளது. அவை அனைத்து ஒரே அளவிலானது.  ஆன்மா அளவில் வேறுபாடுகள் இல்லை; அந்தணன் ஆன்மாவும், பண்ணை அடிமை ஆன்மாவும், ஒரு மண் பாண்டத்தின் ஆன்மாவும் ஒன்றே என்பதே இராமானுச சித்தாந்தம்.

இதற்கு ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு உதாரணம் உண்டு. ‘ததிபாண்டன்’ என்னும் பானை செய்யும் தொழிலாளி கண்ணனிடத்தில் மிக்க பக்தி உடையவன். இறை நினைவாகவே பானைகள் செய்து வாழ்ந்து வந்தான். இறக்கும் சமயம் இறைவனிடம் அவன் தனக்கு மட்டும் மோட்சம் தேவை இல்லை என்றும் தனது பானைக்கும் மோட்சம் வேண்டும் என்றும் கேட்டான் என்று ஒரு கதை உண்டு. ஆக உயிரில்லாத ஒரு மண் பானைக்கும் ஒரு ஆத்மா இருப்பதாகக் கூறுவது வைணவத்தின் ஊடாக உள்ள விசிட்டாத்வைதம்.

இராமானுசர் ஆன்மா, பிரும்மம் முதலிய நிலைப்பாடுகளை ஒப்புக்கொள்வதால் கருத்து முதல் வாதியாகவும், உலகமும் உண்மை என்று ஒப்புக்கொள்வதால் பொருள்முதல்வாதியாகவும் ஒருசேரத் திகழ்ந்தார் என்றும் கருதலாம். எனவே கருத்துமுதல்வாதம் சார்ந்தவர்களையும் (அத்வைத மதத்தினர் , சைவர் ), பொருள்முதல்வாதம் சார்ந்தவர்களையும் (பௌத்தர், ஜைனர் ) முதலியோரை வைணவத்தின் பால் ஈர்த்தார் என்றும் கருத இடம் உள்ளது.

இராமானுசர் மேலும் கூறுவது – நமது உடல் நமது உயிரின்( ஆன்மாவின்) வீடு. அதுபோல் நமது ஆன்மா பிரும்மமான பரமாத்மாவின் வீடு. எனவே பிரும்மமும் உண்மை; உலகமும் உண்மை; ஜீவாத்மாவும் உண்மை. இதனை ‘த்ரயம்’ என்று வைணவம் கூறுகிறது. இதில் மாயை என்பதற்கு இடமே இல்லை. இவை சாதாரண மனிதனுக்குப் புரிவதாக இருந்தது.

இராமானுசரது இந்தக் கொள்கையைச் சற்று ஆராய்வோம். சாதி வேறுபாடுகளால், அடக்கு முறைகளால் பிளவு பட்டிருந்த ஒரு சமுதாயம். அந்த முறைகளை ஊக்குவிக்கும் அளவில் இருந்த சோழ, பாண்டிய அரசுகள். சமூகத்தின் அதிகாரத் தளங்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த பெருவாரியான மக்கள். இந்தச் சூழ்நிலையில் இவை அனைத்தையும் உடைத்தெறியும் நோக்கில் ஒரு புதிய சித்தாந்தம். அத்துடன் அது வைதீக மதத்தைச் சார்ந்தும் இருந்தது. இந்த சித்தாந்தத்தில் சேர எந்த ஒரு அங்கீகாரமும் தேவை இல்லை. அந்தணனாக இருக்க வேண்டாம், நாளும் மூன்று முறை அனல் ஓம்பும் சடங்கு செய்ய வேண்டாம், ஏழை-செல்வந்தன் வேறுபாடு இல்லை, பழைய குல அடையாளங்கள் மறைந்துவிடும், புதிய அடையாளமான ‘வைஷ்ணவன்’ என்ற ஒரே அடையாளம் கிட்டும் என்பது போன்ற திடீர் சமத்துவ நிலை மக்களை ஒரு பெரும் புயல் போலத் தாக்கியது. மக்கள் பெருமளவில் வைணவராயினர்.

இந்தப்பெரும் அதிர்ச்சி மன்னனையும் ஆட்கொண்டது. அவன் இராமானுசரைக் கொல்ல முனைந்தான். அவர் தப்பினார். இதுவும் ஒரு அடக்குமுறையை எதிர்க்கும் மனோபாவமாகக் கருத்தப்பட்டு வைணவத்தின் புகழ், ஈர்ப்பு அதிகரித்தது என்று கருத இடமுள்ளது.

பானை செய்பவரும், வேதம் ஓதுபவரும், சிறு வினைஞர்களும்  ஒன்றே என்ற சமத்துவம் பெரும் புரட்சி சித்தாந்தமாகக் கிளம்பியது. அதற்கு ஏற்ப இராமானுசரும் பிள்ளை உறங்காவில்லி தாசர் போன்ற மல்லர் குலத்தைச் சார்ந்த ஒருவரைத் தன் பிரதான சீடராக வைத்துக்கொண்டது, பானை செய்யும் குலத்தைச் சார்ந்த திருப்பாணாழ்வார், வேளாளர் குலத்தின் நம்மாழ்வார், கள்ளர் மரபின் திருமங்கை ஆழ்வார் முதலியோரை மதுரகவி, பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் முதலான அந்தணர் குல ஆழ்வார்களையும் ஒன்றாக கோவிலுக்குள் அமர்த்த ‘பாஞ்சராத்ரம்’ என்ற வழிமுறையைக் கொண்டுவந்தது  போன்றவை  பலரை ஈர்த்திருக்கக் கூடும் என்று நம்ப இடம் உள்ளது.

ஜீவாத்மா தன் பக்தியினால், நற்செய்கைகளால் பரமாத்மாவை அடைய முடியும், அதற்கு பக்தி ஒன்றைத் தவிர வேறு ஒரு தகுதியும் தேவை இல்லை, எனவே மன்னனாயினும், பண்ணைத் தொழிலாளியாயினும்  பக்தியின் மூலம் இறைவனை அடைந்தது சமத்துவம் காணலாம் என்னும் தத்துவம் அதுவரை இருந்த அனுமானங்களை எல்லாம் அசைத்துப் பார்த்தது என்று நம்ப முடிகிறது.

இதனாலெல்லாம் நாம் அறிவது இதுதான் : விசிட்டாத்வைதம் என்னும் இராமானுச சித்தாந்தம் வைதீக சித்தாந்தமாக இருந்துகொண்டே தத்துவ அளவிலும் சமூக அளவிலும் மக்களிடம் ஒரு குழப்பமில்லாத மன நிலையையும் அனைவரையும் ஒன்றுபடுத்தும் ஒரு வழியாகவும் அனைவரும் ஒன்றே என்ற உயரிய கருத்தையும் பறை சாற்றுவதாக இருந்ததால் அக்காலத்தில் சாதாரண மக்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றது என்று கருதலாம்.

Reserve Bank – outsource thyself

Mortgaging the country doesn’t mean squandering her wealth in overt and covert ways alone. Behind the facade of Modi-Rahul engagements and the sound bites accompanying these, there are different forces in action to silently siphon off the country’s wealth.

So the modus operandi is like this. Create as much din as possible to keep the media occupied and focussed on the din. For that create newer controversies invloving the popular folks so that the nation would be hooked to the media following these. And when the nation is not looking, make policy decisions in the back room and silently hand over the country to the vultures. This has been repeatedly happening for some time now.

Look at the following:

The whole of the country follows the Modi – Rahul spat. The English electronic media goes behind its normal business – going after rape incidents and similar such events and makes the people look in that direction. And the ‘National’ English media debates on whose catch phrase is better – Modis’ or Rahuls’ and also contains ‘erudite’ articles by left oriented leaders pontificating on the New Fatherland (China).

And the RBI makes an announcement of foreign banks in its order :

1. Issues directive to foreign banks in India to open zero balance accounts for retail customers under the guise of making banking accessible to rural folks.

2. Asks those foreign banks not to insist on minimum balances ( currently they are in the range of Rs 25,000 daily average )

So far so good. Having put up the appearance of being ‘stringent’ on foreign banks, they make the not-so-publicized announcements :

1. The global banks can open local head quartered subsidiaries.

“So what ?”, one might ask. But these “local” foreign banks, once established, can take over other local banks. And the RBI says this in a specific clause. This is reported in The Wall Street Journal Asia of 28-October-2013.

And the paper says that RBI has given the idea that the foreign banks could convert their existing Indian branches into local banks and over a period of time would be allowed to take over other Indian banks.

The RBI further has assured “near national treatment” to all these foreign banks.

So, in the near future, you could be seeing Barclays Bank in Usilampatti offering Crop Loans to dhothi-only clad farmers. And mind this – the loan officers would be the ultra modern girls operating out of air-conditioned branches.

And what if the farmer doesn’t pay his loan on time due to ,say a drought ? Send in anti-socials for debt collection ?

Better disband the RBI and outsource that function to the MAS ( Monetary Authority of Singapore ).

These guys are so watchful that they initiated audit of the loans that the Indian banks in Singapore provided to businesses when it was reported that the banks were slightly over leveraged in terms of the loans provided to some Indian companies about whom some adverse press reports had emerged. Such is the attention to detail that is used by MAS.

Another case in point is that the MAS does not allow expansion of foreign bank branches and ATMs like how it allows the country’s own banks DBS and OCBC. There is a strict cap on the number of branches that can be opened.

Either RBI learns its lessons or take help from MAS.

And the national media NDTV and CNN-IBN focus on Tendulkar’s retirement and Shilpa Shetty’s pregnancy while The Hindu speaks about the “rise of communalism” in the BJP ruled states.

Singapore musings

Frankly, Singapore does not have peers. It is a wonder that which did not have the possibility to exist in the first place. And its existence still in the comity of nations that too as a developed nation in a matter of 25 years simply too good to be true. But the city state has overcome all known obstacles and continues to exist and excel among its much much bigger neighbors.

I think a sparrow does not have any possibility of flying given its anti-flight attributes. But it flies and that too rapidly. Singapore is one such. With no possibility to even exist, it flourishes.

Can this be sustained ? Can Singapore compete with India and China and still flourish in the coming decades ? These questions are being openly debated by its erudite ministers and well read public.

Recently there was a discussion in the local TV when older Singaporeans seemed to question some of the policies of the government. Some controversial topics were also discussed. But then came the Law Minsiter Shanmugam’s turn to reply. He simply amazes every time. The manner in which he answered the questions, the tone, the voice and the details – these minsters are a class apart. He made an interesting point that while there were countries whose politicians chose to become one to make money, Singapore’s politicians don’t need to make money from politics. And that justifies their higher pays.

Not only Mr.Shanmugam. There are others too. Singapore’s Finance Minister Tharman Shanmugaratnam is one such. He was considered to head the IMF last year while later on Christine Lagarde was chosen. Currently he has been awarded the best finance minister award by Euromoney for his push towards increasing the productivity of the people and thereby reducing the dependency on foreign workers.

A nation that is blessed with the best and bright leaders is indeed a rarity these days. Singapore is one such..

But there is bad news on economic front. No, not because of something that Singapore did but because of global factors. And that is the increasing inflation. With inflation on the rise and forecast to be on the rise until the end of this year, there is an increasingly felt trepidation about the increase in living costs.

Singapore seems to have  a perennial problem – that of a shortage of employees. That which started during the developmental years of the 60s has continued. And that is because of the country’s aspiration to stay on top of its peers. However, to assuage the local feelings and apparently to placate some sections, there has been a drastic reduction in the number of foreign workers. Many such workers’ work passes are either not being renewed or new workers are not being admitted. And there are visible signs of even routine tasks getting delayed due to this.

One only hopes that this self imposed reduction is done away with asap.

The dragon is roaming around

The Chinese are at it again. Like their gas and oil companies, their copper companies are on a global buying spree. This time again they are after the copper mines in Latin America.

The deals are at least a billion dollars worth each and every time. And the companies are state run companies that have official sanction for all kinds of malpractices all the world over.

The Wall Street Journal reports that in 2013 alone, the Chinese companies have signed up $ 1billion worth of copper mines in Peru while the comparable deal value in 2012 was $660 million.

The country imports 3.4 tons of copper while consuming 30% of the worlds’ Copper produce.
So what is interesting to note is that worldwide copper prices are softening and hence the assets that China is accumulating by way of owning copper mines are enormous.

And the dangerous part is that there are no new copper mines that are going to open up in the near future. Anything that becomes a monopoly, that too in the hands of China, is not good for the world.

With the U.S fighting its own internal wars between its Republicans and Democrats and Obama not really being able to exert the U.S.s “power” so to say, we are increasing heading towards a world that is being gobbled up in parts by China by way of its acquisition of the worlds’ fuel and mineral resources.

The Chinese are already in the Indian Ocean area exploring the ocean bed for resources. They are at loggerheads with almost every country in the South China Sea for its reserves of Hydro Carbons and have already gobbled up most of the African republics ( if you could call them so ) and thus ensured that they get oil at priority rates by helping every dictator with slush funds disguised as “payments for services rendered “.

The are in Sri Lanka having built a deep water port for them where they have been provided free boarding and lodging for their oil carrying ships.

This does not augur well for the stability of the world powers that too democratic ones that have to overcome every known opposition and stumbling block in their country to do at least a fraction of what China does overseas.

The only choice to check this is the U.S. But they are more concerned about overhearing what people talk about in their homes while leaving the real issues to address themselves.

இரண்டாவது ராமானுசர் ..

Image

ஜூலை 08, 1939 — மதுரையில் வைத்தியநாத ஐயர் என்பவர்  ஐந்து தலித்துகள் ( அவர்களில் ஒருவர் கக்கன் – பின்னாளில் தமிழக அமைச்சரானார்  ) ஒரு நாடார் இன நபர் முதலியவர்களை அழைத்துக்கொண்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றார். தலித்துக்களின் ஆலயப் பிரவேசம் என்று கொண்டாடப்பட்டது. இதனைதத் தொடர்ந்து பல ஊர்களிலும் ஆலயப் பிரவேசம் நடந்தது.

vaidyanatha iyr

அதன் பின்னர் வைத்தியநாத ஐயர் ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்டார். பல வழக்குகள் போடப்பட்டன. மனம் தளராமல் அவர் மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவில், பழனி முருகன் கோவில் என்று பல கோவில்களிலும் தலித் ஆலயப்பிரவேசம் செய்தார்.

ஜூலை 22, 1939 – அன்றைய தமிழகத்தின் முதல்வர் ராஜாஜி “Madras Temple Entry and Indemnity Act” என்று ஒரு அவசரச் சட்டம் கொண்டுவந்தார். அதன்மூலம் அனைவரும் கோவிலுக்குள் நுழையலாம் என்று அமைந்தது.

இவை அந்தக் கால கட்டத்தில் மிகப்பெரிய சமூக மாற்றங்கள். இவற்றைச் செய்ய மிகுந்த மனத்துணிவு வேண்டும். ராமானுசர் சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு தாழ்த்தப்பட்ட மக்களை “திருக்குலத்தார்” என்று நாம கரணம் செய்து அவர்களுக்குப் பஞ்ச சம்ஸ்காரம் என்ற இறைச் சடங்குகள் செய்து அவர்களை வைணவராக்கினார். அவர்கள் இன்றும் மைசூர் பகுதியில் வைஷ்ணவர்களாக உள்ளனர்.

ராமானுசருக்குப்பிறகு மிகப் பெரிய சமூக மாற்றம் என்றால் அது ராஜாஜி செய்த “அனைவரும் கோவில் நுழைய உரிமை” எனும் சட்டம் என்று கொள்ளலாம்.

இதை எல்லாம் இப்போது எழுத வேண்டிய கட்டாயம் என்ன என்ற கேள்வி நியாயமானதே. சாதிப் பிளவுகளால் தற்போது தமிழகம் கண்டு வரும் வன்முறை அரங்கேற்றங்கள், தலித்துகளுக்கு இன்னமும் மற்ற சாதியினரால் இழைக்கப்படும் கொடுமைகள் போன்றவை இதை  எழுதத் தூண்டின.

வாலண்டைன்ஸ் டே, மதர்ஸ் டே என்றே அறிந்துள்ள சமூகம் ஜூலை 8 என்ன நாள் என்றால் திங்கட் கிழமை என்று வேண்டுமாநால் சொல்லும்.

சமூக மேம்பாடு என்றாலே ஏதோ பெரியார் , அண்ணா என்று முழங்கும் இன்றைய சமூகத்திற்கு முன்னர் நடந்தது என்ன என்பதை நினைவு படுத்த வேண்டியுள்ளது.

இவை எந்த அரசுப் பாடப் புத்தகத்திலும் இடம் பெறாதவை. இவை பற்றி சமுதாயம் அறிந்தால் அரசியலார் ஒரு சமூகத்தை கை காட்டிப் பிழைப்பு நடத்த முடியாது. அதனால் இவை மக்கள் கண்களில் இருந்து மறைக்கப்படும்.

அது தான் பகுத்தறிவு.

அடிப்படை வசதிகளை நோக்கிப் பல நாடுகள் பயணிக்கும் வேளையில் அறிவு

Image

அடிப்படை வசதிகளை நோக்கிப் பல நாடுகள் பயணிக்கும் வேளையில் அறிவு பூர்வமாக நாட்டை நகர்த்துவது பற்றி யோசிக்கிறது சிங்கப்பூர்.

தேசீய நூலக வாரியம் உலக அளவில் ஆகச் சிறந்த ஒரு நூலக நிர்வாகம் என்பது நாம் அறிந்ததே.

Read Singapore என்ற பெயரில் இந்த ஆண்டின் வாசிப்பு அனுபவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முனைந்துள்ளது சிங்கை அரசு. Nurturing a nation of Readers – வாசிக்கும் ஒரு நாட்டைப் பேணுதல் என்பது நோக்கம்.

இவ்வாண்டின் தலைப்பு “ஒரே வானம்”. ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் என்று நான்கு அங்கீகரிக்கப்பட்ட மொழி ஆசிரியர் படைப்புகள் இடம் பெரும்.

இந்த ஆண்டு தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆக இவ்வருடம் அவர் எழுதியுள்ள நூல்கள் பற்றிய ஆய்வுகள், கலந்துரையாடல்கள், நேர் காணல்கள் ஆகியன இருக்கும்.

ஜெயமோகன் படைப்புகள் வாசிக்க தனி உணர்வு வேண்டும். வாசித்தபின் ஏற்ப்படும் உணர்வு தனி. ஆனால் வாசிக்கும்போது நிகழும் உணர்வுகள் – அவை தனி. அனுபவித்தால் தான் தெரியும்.

வாசகர்களே, முடிந்தவரை ஜெயமோகன் நூல்களைப் படித்துத் தயாராகிக் கொள்ளுங்கள். எழுத்தாளரைச்  சந்திக்கும்முன் அவரது அலைவரிசைக்குத் தயாராகிக்கொள்ளுங்கள்.

பெரியார் வழியில் தமிழ் வளர்ப்பது எப்படி?

நம் அனைவருக்கும் தெரியும் தமிழர் தந்தை யார் என்று. நாம் தமிழர்களாய் நிமிர்ந்து நிற்பது ஏன், யாரால் என்றால் தமிழ் நாட்டில் பிறந்த பிள்ளை கூட சொல்லும் “பகுத்தறிவுப் பகலவன்”  பெரியாரினால் தான் என்று.  அந்த அளவுக்குப் பெரியார் பால் ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறோம்.

ஆனால் தமிழர் தந்தை தமிழ் பற்றி சொன்னவை என்ன ? பகுத்தறிவு வேலை செய்தது. அதனால் அவர் தமிழ் பற்றி என்ன சொன்னார் என்று சிறிது ஆராய்ச்சி செய்தால் சற்று அதிர்ச்சி தான்.

தமிழைப் பற்றி மிகவும் கீழ்த்தரமான எண்ணங்கள் கொண்டிருந்தார் பெரியார் என்பது தான் உண்மை. ஆனாலும் திராவிட ஆட்சியாளர்களும் கல்வியாளர்களும் ஏன் இவற்றை மறைத்துப் பேசுகிறார்கள் ?  உண்மையை வெளிப்படையாகப் பேசினால் என்ன ?

நீங்களே படியுங்கள். பின்னர் கருத்து உருவாக்கிக் கொள்ளுங்கள் அல்லது விவாதத்திற்கு வாருங்கள்.

———————-

விடுதலை — 27.11.1943

தமிழ் ஒன்றுக்கும் பயன்படாது

” தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது. தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்ப தை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனு பவப் புலவர் பாடியுள்ளார் ”

விடுதலை  – 16.3.1967

தமிழின் பெயரால் பிழைப்பு

” நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள். அவர்கள் துடிதுடிப்புத்தான், ‘தமிழைக் காக்க வேண்டும்’; ‘தமிழுக்கு உழைப்பேன்’, ‘தமிழுக் காக உயிர் விடுவேன்’ என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக்கூடாது ”

‘தாய்ப் பால் பைத்தியம்’ நூலில் தந்தை பெரியார்.

தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம் .

” ..தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ, வளர் வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? தாய்ப்பால் சிறந்தது என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால் தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தமற்ற வள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும். தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?

இப்படிப்பட்ட இந்தத் தாய்ப்பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை, காலில் நடப்பதைத் தவிர உழைப்புக்கு – காரிய த்துக்கு பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும் படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின் றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.

இன்றைய தினம்கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப்பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க் கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைப வர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப் பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன் “

%d bloggers like this: