The side that is not spoken about, generally.

பாரதியார் பிறந்த நாளில் ஓர் அனுபவம்.

‘நீங்கள் எழுதியுள்ள ராமகிருஷ்ணனின் மகள் நான். என் தந்தையாரைப் போன்றவர்களை நினைவு கொள்வதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என்னும் நினைப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது’ என்று உள்பெட்டியில் ஒரு தகவல் வந்திருந்தது. ஒரு நொடி மெய்சிலிர்த்தது உண்மை.

மனதில் எத்தனை வருத்தம் இருந்தால் இப்படி எழுதியிருப்பார் பாருங்கள். எத்தனை பெரிய மனிதரை இன்று யாருக்குமே தெரியவில்லை என்னும் அந்த வருத்தம் மிகக் கொடுமையானது.

ஒரு வகையில், நாம் அனைவருமே குற்றவாளிகள் தான். தல என்று உருகுகிறோம். தளபதி என்று பிதற்றி வழிகிறோம். சூப்பர் ஸ்டார் என்று பயித்தியக்கார ஆட்டம் ஆடுகிறோம். உலக நாயகன் என்று உன்மத்த நிலைக்குச் செல்கிறோம். வாழும் பெரியார் என்கிறோம். நிரந்தர முதல்வர் என்று குதூகலிக்கிறோம்.

ஆனால், உண்மையிலேயே தல, தளபது, சூப்பர் ஸ்டார், உலக நாயகன் என்று கொண்டாடப்பட வேண்டியவர்கள் யார் ? தியாகி ராமகிருஷ்ணன், தியாகி தேவராஜன், தியாகி பத்மாசனி அம்மாள், தியாகி லட்சுமண ஐயர் போன்றவர்களே.

நிஜமான தியாகிகளைப் போற்றுவோம். #ஜெய்ஹிந்த்#பாரதியார்

Leave a comment