The side that is not spoken about, generally.

“இன்னாபா, மூணு விரல் காமிக்கறே ?”, நண்பர் நக்கலாக விசாரித்தார்.

நான் பிராணாயாமம் செஞ்சதை அவர் இப்படி கேட்டார்.

மூணு விரல் விஷயம் பத்திப் பார்ப்போம்.

பெரியவங்கள்ளாம் 3 விரல் காண்பிச்சு பெரிய விஷயங்கள்லாம் சொல்லிருக்காங்க.

இந்த விரல் யோகாவுலே பயன் படுகிறது.

3 விரல் இப்பிடி வெச்சுப்பாங்க

ஆள் கட்டி விரல் வளைந்து நிமிர்ந்து நிற்கும் கட்டை விரல் தொட வேண்டும்.

நடு விரல், மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் விலகி இருக்க வேண்டும்.

இதுக்கு சின் முத்திரை என்று பெயர்.

இங்கு பெருவிரல் ( கட்டை விரல் ) இறைவனை(பரமாத்மா) க் குறிக்கிறது.

ஆள் காட்டி விரல் ஜீவாத்மாவைக் குறிக்கிறது.

நடுவிரல் ஆணவத்தையும், மோதிர விரல் கன்மத்தையும் , சுண்டு விரல் மாயையையும் குறிக்கிறது.

அதாவது :

பரமாத்மா மேல் நோக்கி நிமிர்ந்து நிற்கிறது. ஜீவாத்மா பரமாத்மாவை 
அடைய வேண்டுமானால், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றையும் விட  வேண்டும் என்பது அர்த்தம்.

யோகிகள் எல்லாம் இப்படித்தான் உபதேசம் செய்வாங்க. 


இறைவன் குரு வடிவாக இருந்து உபதேசம் செய்யும்போது காண்பிச்ச முத்திரைனும் சொல்லுவாங்க ( தக்ஷிணாமூர்த்தி உருவில் சிவ பெருமான் சின் முத்திரை காண்பித்து மௌன உபதேசம் செய்தான் என்பது நம்பிக்கை).

ஆனா இதெல்லாம் பகுத்தறிவில்லாத இந்து மதத்துலே தானே.

பின்னே இவர் ஏன் சின் முத்திரை காண்பிகிறார் ?


One response

  1. R. Jagannathan Avatar
    R. Jagannathan

    Super photo and query at the end! – R. J.

    Like

Leave a comment