பூணல், கல்யாணம், சீமந்தம் – சிறு குறிப்பு

ஒரு திங்கள் கிழமை காலை, ஒரே நேரத்தில் அடையாறிலும், தாம்பரத்திலும் முஹூர்த்தம் வைத்தால் மனுஷன் எப்படிப் போவது ?

பிரியமான சொந்தங்கள் / நண்பர்கள் / வாசகர்களே, வணக்கம். 

பூணல் போடுங்கள், அமோகமாக இருக்கட்டும் பிள்ளைகள். கல்யாணம் பண்ணுங்கள். சதாபிஷேகம் பண்ணிக்கொள்ளுங்கள். எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஆனால், எல்லா பூணலையும் ஏப்ரலில் இருந்து ஜூலைக்குள் போட்டே ஆக வேண்டுமா ? இந்த மூன்று மாதத்தை விட்டால் பூணல் போட வேறு மாதமே கிடைக்காதா ? அதென்ன சார் எல்லாரும் இந்த மூன்று மாசத்திற்குள்ளேயே போட்டுக் கொண்டே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கிறீர்கள் ? தலை ஆவணி அவிட்டத்திற்கான ஏற்பாடா ? 

கல்யாணமும் அப்படியே. திங்கள் முதல் வெள்ளி வரை கல்யாண வைபோகமாகவே இருக்கிறது. சனி, ஞாயிறு ஈ காக்காய் இல்லை. ஒரு கல்யாணம், சீமந்தம் ஒன்றும் இல்லை. சொல்லி வைத்த மாதிரி திங்கள் காலை முஹூர்த்தம் என்கிறார்கள். போனோம் என்று பேர் பண்ணிவிட்டு ஆஃபீஸ் போகலாம் என்றால் 9:00 மணிக்கு மேல் முகூர்த்தம் என்கிறார்கள். ராகு காலம் முடிய வேண்டுமாம். அதற்கு மேல் கல்யாணத்தில் பங்கு பெற்று ஆஃபீஸ் போக முடியுமா ? போனால் அங்குள்ள ராகு காலம் விடுமா ? 

சரி. அப்படியே போகலாம் என்றாலும் சென்னை டிராஃபிக் விடுமா? திங்கள் காலை தான் ‘ஆமருவி எங்கே ? எங்கே ?’ என்று ஆலாய்ப் பறக்கும் ஃபோன் கால்கள். மிச்ச நாள்களில் சீந்துவார் இல்லை. 

ஒரு திங்கள் கிழமை காலை, ஒரே நேரத்தில் அடையாறிலும், தாம்பரத்திலும் முஹூர்த்தம் வைத்தால் மனுஷன் எப்படிப் போவது ? ஆஃபீஸ் அவசரத்தில் எது கல்யாணம், எது பூணல், எது சீமந்தம் என்று தெரியாமல், பூணல் முஹூர்த்தத்திற்கு புடவை வேஷ்டியும், சீமந்தத்திற்கு நாலு முழம் வேஷ்டியும், கல்யாணத்திற்கு அலாரம் டைம்பீசுமாக கிஃப்ட் கொடுத்து அசடு வழிய வேண்டியதாக இருக்கிறது. 

இத்தனைக்கும் எல்லா பத்திரிக்கையும் வாட்ஸப்பில் அனுப்பி, ‘பத்திர்க்கைய நீங்க பார்க்கவே இல்லியே?’, ‘பார்த்தீங்க, ஆனா பதில் போடல்லியே” ரெண்டு டிக் மார்க் வரல்லியே’ என்று ஃபோன் கால் வேறு. 

மனுஷன் திங்கள் காலை ஆஃபீஸ் பிரச்னையை நினைப்பானா, இல்லை சீமந்தம், மணையில் வைத்துப் பாடுவது, காசி யாத்திரை பார்ப்பது என்று போவானா? இப்படியெல்லாம் போனால் காசி யாத்திரை போக வேண்டியது தான். 

நிஜமாகவே புரியவில்லை ஸ்வாமி. எப்படி இத்தனை கல்யாணங்களையும், பூணல்களையும், சதாபிஷேகங்களையும் சமாளிப்பது ? 

இப்படிக்கு,
ஒரு கல்யாண மண்டபத்தில் காத்திருக்கும்,
அசட்டு அம்மாஞ்சி ஆமருவி.
03-05-2023 

விடுதலை – பாகம் – 1 – சினிமா விமர்சனம்

விடுதலை – பாகம் 1 – திரை விமர்சனம். ( வசவுகள் துவங்கலாம் ). குறிப்பாகப் பெண்கள் மீது பாலியல் வன்முறை. பெண்களை, அதிலும் தலித் பெண்களை மட்டும் இப்படி எப்போதுமே அவமானப்படுதுதும் விதமாகவே சித்தரிப்பதை எந்த முற்போக்கு பெண்கள் சங்கமும் கண்டிப்பதில்லை.

இதை வாசித்துவிட்டு என்னை வசவுகளால் குளிப்பாட்டலாம். ஆனால், யாராவது சொல்லியாக வேண்டும். நான் சொல்கிறேன்.

விடுதலை என்னும் சினிமாவைப் பற்றி இனிமேல் யாரும் எதுவும் சொல்வதற்கில்லை என்று ஆகிவிட்டது. தமிழில் வந்துள்ள சமூகப் படங்களில் இதைப் போல் ஒன்று இல்லை, சமூக நீதியைப் பறை சாற்றுகிறது, தமிழ் மக்களின் போராட்ட உணர்வைக் காட்டுகிறது, உண்மைக் கதை, தமிழ்த் தேசியத்தின் மறைக்கப்பட்ட பார்வை — இப்படியே பல விமர்சனங்களைக் கண்டேன்.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையின் மேல் பல வகைகளில் கட்டப்பட்ட கதையே விடுதலை என்றும் வாசித்தேன். ஜெயமோகனே இதனைத் தெளிவுபடுத்தினார். ‘கதை மட்டுமே என்னுடையது. மற்றபடி படம் வெற்றிமாறனுடையது மட்டுமே.’ ஜெயமோகனை சங்கி என்றும், பாட்டாளி மக்களின் பகைவன் என்றும் வசைபாடும் கூட்டமும் ‘இது ஜெயமோகனின் படம் இல்லை. அவரது அரசியல் எதுவும் இல்லை. இது தமிழ்ப் பழங்குடிகளின் அழித்தொழிப்பு பற்றிய கதை தான். நல்லவேளை ஜெயமோகன் இதில் இல்லை’ என்று சாட்சியம் அளித்தார்கள்.

கொஞ்சம் குழப்பத்தில் இத்திரைப்படத்தைப் பார்த்தேன்.

கொஞ்சம் தமிழர் விடுதலைப் படை, கொஞ்சம் தமிழரசன், கொஞ்சம் வீரப்பன், கொஞ்சம் தமிழ்த் தேசியம், கொஞ்சம் போராட்ட சூழியல், கொஞ்சம் கார்ப்பரேட் எதிர்ப்பு என்று கலப்படமாக இருந்தது விடுதலை – பாகம் 1.

எல்லாம் கொஞ்சம் தானா ? இல்லை. அரசாங்க, போலீஸ் எதிர்ப்பு ரொம்ப அதிகம். அளவுக்கு அதிகம். அதுவும் போலீஸ் எதிர்ப்பு, போலீஸ் அராஜகம் என்று வயிற்றைப் பிரட்டும் வரை கொடுத்துள்ளார்கள்.

இவை மட்டும் தானா ? இல்லை. மலைவாழ் பெண்களின் சித்தரிப்பு. எப்போதும் அவர்களிடம் அத்துமீறும் காவல் துறையினர். எப்போதும் அவர்களைக் கற்பழித்துக் கொண்டே இருக்கும் காவல் அதிகாரிகள். எப்போதும் அவர்களை நிர்வாணமாகவே நிற்கவைத்து அடிக்கும் காவல் அதிகாரிகள்.

பெண்களைக் கொடுமைப்படுத்தினார்கள் என்பதை எத்தனையோ குறியீடுகள் மூலம் சொல்லலாம். சினிமா எடுப்பவர்களுக்குக் குறீயீடா தெரியாது ? ஜெய்பீம் படத்தில் பாமகவைச் சுட்டும் விதமாக குரு என்றொரு பாத்திரம், பின்னர் அக்னிக் கலசம். அவ்வளவுதான். அக்கட்சியைச் சொல்லியாகிவிட்டது. பாமக கூட்டம் நடப்பதைப் போல் ஏன் ஒரு காட்சி வைக்கவில்லை ? அதே போல் அசட்டு வக்கீல் ஒருவரைக் காட்ட, பிராமணர் போல் தோற்றம் அளிக்கும் ( உருவம் + மொழி + சிவ நாம உச்சாடனம் ). அப்பாத்திரம் தேவை இல்லாத ஒன்று என்றாலும், பிராமணர்களை எப்படியாவது இழிவு படுத்த வேண்டாமா ? சொருகு ஒரு கேரக்டரை. யார் கேட்கப் போகிறார்கள். அந்தப் பாத்திரக் குறியீடு என்ன ? உயர்குடி வக்கீல்கள் அந்தப் போராட்டத்திற்கு ஊக்கம் அளிக்கவில்லை என்று எப்படிச் சொல்வது ? ஒரு அசட்டு வக்கீல் வைத்தால் போயிற்று.

ஆனால், தலித் மீதான வன்முறை என்றால் கண்டிப்பாக கற்பழிப்பு, வன்கொடுமை காட்டப்பட வேண்டும். அதுவும் அதீத வன்முறையுடன். இவை நடக்கவில்லை என்பதால் அல்ல. இவற்றை இப்படிக் காட்டினால் மட்டுமே தமிழ்ச் சமூகம் நம்பும் என்கிற ஒரு டெம்ப்ளேட் போல்.

பல டெம்பிளேட்கள் உள்ளன. பிராமணன் என்றால் ஸ்திரீ-லோலனாக இருக்க வேண்டும், குயுக்தியுடன் செயல்பட வேண்டும், சிண்டு முடிந்துவிட வேண்டும், பண பலத்திற்கு முன் அடிபணிந்து நிற்க வேண்டும், கெட்ட எண்ணம் கொண்டவனாகவும் இருக்க வேண்டும். சாதி பார்ப்பவனாக இருந்தே ஆக வேண்டும். இந்த டெம்ப்ளேட் மாறினால் அவன் பிராமணன் ஆகமாட்டான். உதா: தளபதி படத்தில் சாருஹாசன். திரௌபதி படத்தில் பத்திரப் பதிவு அலுவலர். தேவர் மகன் படத்தில் மதன் பாப்.

அதே போல், அதீத வன்முறை காட்டாமல் தலித் விஷயங்கள் பேச முடியாது என்பது சட்டம். ஒன்று கதாபாத்திரம் அதீத கோபத்துடன் இருக்கும். பார்க்கும் எவருடனும் சண்டையிடும். சட்டத்தை மீறும். ஏனெனில், சமூகக் காரணங்கள். கமலஹாசன் சொல்வது போல ‘சமூகக் கோபம்’. Therefore justified. இந்த வன்முறையைக் கையாள, அரசு, காவல்துறை மூலம் அதீத வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும். அதில் குறிப்பாகப் பெண்கள் மீது பாலியல் வன்முறை. பெண்களை, அதிலும் தலித் பெண்களை மட்டும் இப்படி எப்போதுமே அவமானப்படுதுதும் விதமாகவே சித்தரிப்பதை எந்த முற்போக்கு பெண்கள் சங்கமும் கண்டிப்பதில்லை. 70 வயதான கவர்னர், தன் பேத்தி வயதுள்ள ஒரு பெண் பத்திரிக்கையாளரைக் கன்னத்தில் தட்டினார் என்பதால் வெகுண்டெழும் மாதர் சங்கங்கள், பெண்ணீய இயக்கங்கள் தலித் பெண்கள் இப்படி காட்டப்படுவதைக் கண்டுகொள்வதில்லை என்பதைக் காட்டிலும் இம்மாதிரியான காட்சிப்படுத்தல்களைச் சிலாகித்துக் கொண்டாடுவது என்ன முற்போக்கோ தெரியவில்லை.

வெற்றிமாறன் கையாளும் உத்தி அருமையானது. கதையை ஒரு நாவலில் / சிறுகதையில் இருந்து எடுப்பார். பின்னர் அனேகமாக அனைத்து விதமான தேச எதிர்ப்புக் குழுக்களின் சொல்லாடல்களையும் சேர்த்துக் கதம்பமாக ஆக்கி, பிழியப் பிழிய அழுது அரற்றி, கோபம் கொப்புளிக்க அரசை எதிர்க்கத் தூண்டும் விதமாக மக்களை உசுப்பேற்ற ஒரு திரைக்கதையை எழுதுவார். இயக்கம் வெகு சிரத்தையாக இருக்கும். காட்சிகள் தத்ரூபமாகவும், குரூர ரசம் சொட்டும் விதமாகவும் இருக்கும். படம் பிய்த்துக் கொண்டு ஓடும்.

ஏய்ப்புகள், சுரண்டல்கள் நடக்கவில்லையா என்று கேட்கலாம் ? அவற்றைக் காட்டக் கூடாதா என்றும் கேட்கலாம். நடந்தன. நடக்கின்றன. காட்ட வேண்டும். ஆனால், எதைக் காட்டுவது ? எப்படிக் காட்டுவது ?

விருமாண்டி திரைப்படத்தில் நாயக்கர் சமூகத்திற்கும் தேவர் சமூகத்திற்கும் பிரச்னை என்பது போல கமலஹாசன் எடுத்திருப்பார். ஆனால், ஒரு முறையாவ்து நாயக்கர் சமூகப் பெண்ணை இம்மாதிரி காண்பித்திருக்க முடியுமா ? இல்லை, தேவர் பெண்ணை ? கதை ஓட்டம் அப்படி இல்லையே எனலாம். ஆனால், இடை நிலை சாதிப் பெண்கள் யாரையாவது இம்மாதிரி நிர்வாணமாக அடி வாங்கி, பாலியல் வன்கொடுமை நிகழ்ந்து, கொல்லப்பட்டு என்று காட்டியிருக்கிறார்களா ? அவர்களுக்கு நடக்கவில்லை என்று கருதினால் கூட, அவர்களை அவமானப்படுத்துவது போல் எதையும் செய்ய மாட்டார்கள். ( உண்மையில் தென் மாவட்டங்களில் பிரச்னை தலித்துகளுக்கும் தேவர்களுக்கும் தான். ஆனால், அவ்விடத்தில் தலித்துகளைக் காட்ட முடியாது என்பதால் நாயக்கர்களை காட்டினார் கமலஹாசன். ‘கமலின் கலப்படங்கள்’ என்றொரு நூல் உள்ளது. வாசித்துப் பாருங்கள்.)

ஆனால், பட்டியல் இனப் பெண்கள் என்றால், ஆதிவாசிப் பெண்கள் என்றால் பாலியல் வன்கொடுமை, நிர்வாணம், அடிதடி இத்யாதி. உண்மையில் தலித் இயக்கங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது இதை எதிர்த்துத்தான் என்பேன். இப்படிக் காட்டுவதால் அரசியல் உரிமைகள், ஆதாயங்கள் உண்டு என்பதால் வாய்மூடி மௌனியாக தலித் இயக்கங்கள் இருந்தால், இதே டெம்பிளேட் கசக்கத் துவங்கும். அளவுக்கு மிஞ்சினால்..diminishng value.

விடுதலை சினிமாவிற்கு வருவோம்.

வெற்றிமாறன் நல்ல கதை சொல்லி. சந்தேகமே இல்லை. இந்தப் படத்தில் இயற்கைக் காட்சிகள் அபாரம். நகைச்சுவை நடிகராகவே அறியப்பட்ட சூரியின் குணச்சித்திர நடிப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஒரு நகைச்சுவை நடிகர் இம்மாதிரி நடிக்க முடியும் என்பதை அனுமானித்து, அவரை அந்த வேடத்தை ஏற்கச் சொல்லி நடிக்கவும் வைத்து, பெரும் வெற்றி கண்டுள்ள வெற்றி மாறன் பாராட்டுக்கு உரியவர்.

தமிழர் விடுதலைப் படையின் தமிழரசனின் கதை, கலியபெருமாளின் கதை என்றால் பொன்பரப்பி கிராமத்தில் தமிழரசன் என்ன செய்தார், அவருக்கு என்ன நடந்தது என்பதையும் காட்ட வேண்டும். அத்துடன் மார்க்ஸீய லெனினீய இடது சாரி இயக்கங்களிடையே நடந்த பிரச்னைகள், ஒரு குழுவிற்கு எதிராக மற்றொன்று செயல்பட்டது ஏன், ஈழப் போரை மனதில் கொண்டு இந்த இயக்கங்கள் இடதுசாரிச் சிந்தனைகளில் இருந்து விலகி, தமிழ்த் தேசிய நோக்கில் சென்று சீரழிந்த கதை என்று முழுவதையும் சொல்ல வேண்டும்.

விடுதலை பாகம் 2 வருகிறது என்கிறார்கள். அதில் எப்படிச் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

படத்தின் மற்றுமொரு மைல்கல் – இளையராஜாவின் பாடல் மற்றும் இசை. இசை தேவன் இளையராஜா. வேறென்ன சொல்ல ?

தமிழகத்துப் புராதனக் கோவில் ஒன்றைச் சிதைத்து அதன்மேல் அமைதிமார்க்க மசூதி கட்டிய நிகழ்வு – குறிப்புகள்

இன்று இந்த அட்டூழியத்துக்குக் காரணமான, இஸ்லாமிய வெறியனும் கொள்ளைக்காரனுமான மீர் ஜூம்லாவின் இறந்ததினம். (31 மார்ச் 1663, பிஹார்); ஆகவே, கொண்டாடுகிறேன்…

தமிழகத்துப் புராதனக் கோவில் ஒன்றைச் சிதைத்து அதன்மேல் அமைதிமார்க்க மசூதி கட்டிய நிகழ்வு – குறிப்புகள்

மாளாபுரம் கோவில் திருப்பணி

மாளாபுரம் கோவில் திருப்பணி – ஒரு பார்வை

சனிக்கிழமை (25-03-2023) பாபநாசம் அருகே உள்ள மாளாபுரம் என்னும் அழகிய கிராமத்திற்குச் சென்றிருந்தேன். உ.வே.சா. பிறந்த உத்தமதானபுரம் இவ்வூருக்கு அருகில் அமைந்துள்ளது.

மாளாபுரம் முன்னர் திருமால்புரம் என்று இருந்துள்ளது. பின்ன மால்புரம் என்று ஆகி, தற்போது மாளாபுரம் என்று புழங்கிவருகிறது. சின்னஞ்சிறிய அக்கிரஹாரம் அமைந்துள்ள ஊரில் அமைதி ததும்பும் சூழல். எங்கும் தென்னை மரங்கள் நிறைந்து, குளம் கூட உள்ளது. முக்கியமாகக் குளத்தில் நீர் உள்ளது. மக்கள் அவசரமில்லாத ஒரு வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர்.

அந்த ஊரில் புதுக்கோட்டை மன்னர் 600 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அக்கிரஹாரம் அமைத்தார். சிவன் கோவில் ஒன்றும், லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவில் ஒன்றுமாக நிர்மாணித்தார். அக்கிரஹாரத்தாரும், ஊர் மக்களும் கோவிலைக் கவனித்துக் கொண்டனர்.

காலப்போக்கில் எல்லா அக்கிரஹாரங்களையும் போல் மாளாபுரம் அக்கிரஹாரமும் குன்றத் துவங்கியது. பெயரளவில் இன்னும் உள்ளது என்றாலும், கோவில் பாழானது.

பெருமாள், லலிதா என்றொரு பக்தையின் கனவில் தோன்றித் தன் கோவிலைப் புதுப்பிக்க உத்தரவிட்டார். லலிதா பிற வேலைகளில் இருந்ததால் முயலவில்லை. பின்னர் மீண்டும் அதே கனவு வரவே, அவர் தன் குடும்ப ஜோதிடரைத் தொடர்புகொண்டார். அவரது வழிகாட்டுதலின் பேரில் தனியொருவராகக் கோவிலைக் கட்டத் துவங்கினார்.

ஊர்க்காரர்கள் பலர் வெளியூர்களில் இருந்தாலும், ஓரளவு உபகாரமாக இருந்துள்ளனர். இந்து சமய அற நிலையத் துறையின் உத்தரவைப் பெற்ற லலிதா, கோவில் கட்டும் பணியில் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துள்ளார்.

நான் சென்ற போது மாலை 5:30 மணி. அந்தி சாயும் நேரத்தில் அந்தக் கிராமத்தின் அமைதி என்னைப் பெரிதும் ஆட்கொண்டது. வாகன இரைச்சல்கள் இல்லாத, கிளிகள், குருவிகள் கத்தும் சூழலைக் கண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்று மாளாபுரம் உணர வைத்தது.

கோவில் கட்டுவதுடன் நிற்காமல், ஊரில் உள்ள குழந்தைகளுக்குப் பஜனையும் சொல்லிக் கொடுத்துள்ளார் லலிதா அம்மையார். இந்த மாதிரியான வேற்றுலக நிகழ்வுகளில் மூழ்கியிருந்த போது ஓய்வு பெற்ற தாசில்தார் அம்மையார் ஒருவர் வந்து அறிமுகம் ஆனார். ‘நல்ல விஷயம் பண்றா லலிதா. நீங்கள்ளாரும் உறுதுணையா இருங்க’ என்று சொன்னவர், ‘We can’t take a pie when we leave this place’ என்று சொல்லிச் சென்றது ஏதோ சித்தர் வாக்கு போல் மனதில் ரீங்காகரம் இட்டவண்ணம் இருந்தது.

லலிதா அம்மையார் பல போராட்டங்களுக்கு இடையில் கோவில் நிர்மாணம் செய்து வருகிறார். கோபுர வேலைகள் பாதியில் உள்ளன. த்வஜஸ்தம்பம் முடியும் நிலையில் உள்ளது. மடப்பள்ளி வேலைகள் துவங்கியுள்ளன. சக்கரத்தாழ்வார் சன்னிதியும், ஆண்டாள் சன்னிதியும் துவங்கவுள்ளன. கூடிய விரைவில் சம்ப்ரோக்‌ஷனம் நடத்த முயன்றுவருகிறார் லலிதா அம்மையார்.

கோவிலில் எடுத்த சில படங்களை வெளியிடுகிறேன். கோவில் தொடர்பாக மேலதிகத் தகவல்கள் வேண்டுமெனில் லலிதா அம்மையாரைத் தொடர்புகொள்ளுங்கள். (+91-99520-58324). ஆ..பக்கங்கள் ஆமருவி மூலம் தெரிந்துகொண்டேன் என்று சொல்லுங்கள். எனக்கும் கொஞ்சம் புண்ணியம் வரட்டுமே.

சில படங்கள்

இந்தக் கோவில் பற்றிய எனது முந்தைய பதிவு இங்கே.

நடமாடும் காந்தி உரையாடல் பாகம் 2

கே: என்ன சார் இது ? அப்ப, கொள்கை இல்லைங்கறீங்களா ?

ப: ஹை, நான் எப்ப அப்டி சொன்னேன்? கொள்கை இல்லைன்னு சொல்லலை, இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன். ரெண்டுக்கும் வித்யாசம் இருக்கு இல்லியா ?

  • கே: ‘கமல் சார், போன வாரம் வந்திருந்தப்ப வேற கேள்வி கேக்கவே விடாம பதிலால திணற அடிச்சுட்டீங்க. இந்த வாரமாவது எதாவது கேள்வி கேட்கலாம்னு நினைக்கறேன்…’
  • ப: ‘கேள்வி கேக்க வேண்டியவங்களையே நீங்க கேக்கறதில்ல. ஆனா, எந்தக் கேள்விக்கும், கேள்வியே இல்லாம பதில் சொல்ற என்ன மட்டும் கேள்வி கேக்கறது என்ன நியாயம்னு நான் கேள்வி கேப்பேண்னு நினைக்கமாட்டீங்கன்னு நான் பதில் சொல்வேன்னு நினைக்கறீங்களா ?’
  • கே: பிரமாதம் சார். ஒண்ணும் புரியல. நல்ல ஃபார்ம்ல இருக்கீங்க. இப்ப கேக்க ஆரம்பிக்கட்டுமா?
  • ப: அப்ப இன்னும் கேக்கவே இல்லியா ? கேள்வி கேட்க வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இந்த நாட்டுல இருக்கு. ஆனா, கேக்காம இருக்கீங்க பாருங்க.. அதுனால தான் கோட்சே இன்னிக்கி ஆட்சி நடத்தறாருன்னு நான் சொல்வேன்னு நீங்க நினைக்கலாம். 
  • கே: ரொம்ப சரியாச் சொன்னீங்க. அப்ப நீங்க கோட்சே பிறந்த நாள் அன்னிக்கி பாராட்டினீங்களே ?
  • ப: ஹா ஹா.. மாட்டிவிடற மாதிரி கேட்டா நாங்க மாட்டிக்காம பதில் சொல்லுவோம். இது பால பாடம். நான் மத்திய ஆட்சியாளரச் சொன்னேன்ன்னு விளக்கிச் சொல்லுவேன்னு நினைக்கறீங்களா ?
  • கே: ஆக, நீங்க மாநில ஆட்சியாளரச் சொல்லல.. அதானே ?
  • ப: உங்க கேள்வியிலயே அதானி வாராரு பாருங்க. அதுதான் இந்த ஆட்சியாளர்களோட லட்சணம். கேள்வி பதில் கூட அதானி இல்லாமல் கேக்க முடியல இந்தக் காந்தி பிறந்த தேசத்துலன்னு நினைக்கற போது அந்தப் பொக்கை வாய்க் கிழவனோட பரிதாப நிலைய நினைச்சுக் கண்ணிர் உகுக்கற அவல நிலல இந்த நாடு இருக்கற நிலைய எண்ணி..ம்ம் ஹூம் ம்ம்
  • கே: அழாதீங்க கமல் சார். அடுத்த பாரதப் பிரதமர் உங்க ஆதரவு பெற்ற தமிழகத் தலைவர் தானே. அவர் ஏற்கெனவே தேசிய அரசியல்ல இருக்காரு பாருங்க.. அதால அவர் பிரதமர் ஆனப்புறம் சரி பண்ணிடலாம்.
  • ப: யாரு ? அவர் தேசிய அரசியல்ல இருக்காறா? யார் சொன்னா ? எப்பலேர்ந்து ?
  • கே: அட, பிறந்த நாள் விழாவுல அவரே சொன்னாரே, கேக்கலியா நீங்க ?
  • ப: ஓ அவரே சொன்னாரா? அப்ப சரியாத்தான் இருக்கும்னு சொல்ல வேண்டிய நிலைல நான் இருக்கேங்கறத நினைக்கற போது எங்கப்பா சிவாஜி என் காதோட சொன்னது நினைவுக்கு வருது.. அவர் என்ன சொன்னாருன்னா..
  • கே: சரி சரி, வேற கேள்விக்குப் போகலாம். மாற்றம் எப்போதும் உங்க வாழ்க்கைல இருந்துக்கிட்டே இருக்குமா ?
  • ப: என்ன கேக்க வர்றீங்கன்னு புரியாதுனு நினைக்காதீங்க. எதுவும் மாறும். ஆனா மாறாதது ஒண்ணுதான். அந்த ஒண்ணைத்தான் தேடிக்கிட்டே இருக்கேன்னு நீங்க புரிஞ்சுக்கிட்டீங்ன்னு தெரியும்னாலும் நீங்க விடாம அதையே கேட்பீங்கங்கறதால மேல ஒண்ணும் சொல்லாம, அடுத்த கேள்விக்குப் போங்க..
  • கே: ரொம்ப சரி. இப்ப என்ன நேரம் ஆகுது ?
  • ப: என்னவாவது கேட்டு, நான் நேரடியா டக்குனு பதில் சொல்லிடுவேன்னு நினைக்கறீங்கன்னு புரியாம இல்லைன்னு உங்களுக்கே தெரியுங்கறது எனக்கும் தெரிஞ்சாலும், நான் இப்ப நாலு மணி ஆக மூணு மணி நேரம் இருக்குன்னு சொல்லுவேன்னு நீங்க நினைச்சீங்கன்னா அது உண்மைதான்.
  • கே: எனக்கு நேரம் சரியில்ல. நாக்குல சனி. போகட்டும். உங்க கட்சி பத்தி..
  • ப: அதான் போன வாரமே சொன்னேனே. காந்தியப் பார்க்கவிடற கட்சி நம்ம கட்சி. புரிஞ்சுதா ? நேரடியா சொல்லிட்டேன் பார்த்தீங்களான்னு கேப்பேன்னு நினைச்சீங்கன்னா அது உங்க தவறுன்னு சொல்ல மாட்டேன்.
  • கே: என்ன கண்றாவி சார் இது. உங்க பேர் என்ன ? 
  • ப: அப்பா வெச்ச பேரச் சொல்லுவேன்னு நீங்க நினைப்பீங்கன்னு தெரியுங்கறது எனக்கும் புரிஞ்சிருக்கும்னு நீங்க நினைக்கலாம். ஆனா, அப்பா வெச்ச பேரைக் காட்டிலும் ‘பேர் சொல்லும் பிள்ளை’யா வளர்ந்தவன்ங்கறதாலயும், சகலகலா வல்லவனா இருக்கேன்னு பலரும் சொன்னத மனசுல வெச்சுக்கிட்டு தசாவதார வேலைகள் செஞ்சதால, மன்மத லீலைகள் பத்தின ஆராய்ச்சி அவதானிப்புல இதுக்கு மேலயும் சொல்றதுக்கு இருக்குன்னா அதுக்கு தேவர் மகனா இருக்கணும்ங்கற கணக்கெல்லாம் இல்லைங்கறதால சிங்காரவேலனுக்கு வேண்டிக்கலாம்னு களத்தூர்ல கண்ணம்மா வாக்குல பிறந்தவங்கற முறைல..
  • கே: என்ன கேக்கறதுன்னே தெரியல கமல் சார். தலை ரொம்ப கேரா இருக்கு..
  • ப: தலைல கேர் இல்லைன்னா, ஹேர் போயிரும்.. ஹெ ஹெ இப்பிடித்தான் ஒரு முறை சீமான் கிட்ட பேசிக்கிட்டிருந்த போது..
  • கே: ஓ.. அவர்கிட்டயும் பழக்கம் இருக்கா ? 
  • ப: குழப்பம் இல்லாம இருக்கணும்னு குழப்பத்துலயே இருக்கறவங்ககிட்ட பழக்கம் வெச்சுக்கறது நம்ம வழக்கம் தானேன்னு நீங்க நினைக்கலாம்னு நான் சொன்னா நீங்க ஏத்துப்பீங்களான்னு கேட்டா, அதுக்கு ஜெயமோகன் என்ன பதில் சொல்வார்னு எதிர்பார்க்கற ஒரு சாதாரண வாசகனா நான் ஓங்கிச் சொல்றது அந்த ஒரு விஷயம் தான்.
  • கே: என்ன விஷயம் ?
  • ப: விஷமமா கேள்வி கேக்கறீங்களேன்னு நான் கேட்பேன்னு நினைச்சா நான் பொறுப்பு இல்லைன்னு நீங்க நினைக்க வாய்ப்பு உண்டுங்கறது எனக்குத் தெரியுதுங்கறத மொத்தத் தமிழ்ச் சமுதாயமும் ஏத்துக்கும்னு எனக்குத் தெரியும்ங்கறதப் பத்தி நீங்க சொல்லப் போறதில்லைன்னு எனக்குத் தோணுதுன்னு நினைக்கறேன்னு வெச்சுக்குங்களேன் பரவாயில்லை.
  • கே: வாணி, சரிகால்லாம் ஏன் விலகினாங்கன்னு இப்ப புரியுதுங்க. அத்தோட, மய்யமே ஏன் குவியத்துக்குள்ள போயிட்டுதுன்னும் இப்ப புரிஞ்சு போச்சுன்னு நினைக்கறேன்னு தோணுது… சே. வியாதி தொத்திக்கிச்சே..
  • ப: இதுக்கும் நான் பதில் சொல்லணும்னு தோணாதுன்னு எனக்குத் தோணுதுன்னு வெச்சுக்கலாம்.
  • கே: சரிங்க, அடுத்து என்ன ?
  • ப: பிக் பாஸ் தான். எலெக்‌ஷனுக்கு ஒரு வருஷம் இருக்கே. அதுவரைக்கும் கலெக்‌ஷன் வாணாமா ? எப்டி நம்ம டைமிங்.. ஹெ ஹெ.
  • கே:  அடுத்த எலெக்‌ஷன் சமயத்துல சந்திக்கலாம். கொள்கை ரீதியா பேசுவோம்.
  • ப: இல்லாதத பத்தியெல்லாம் நாம் பேசறதில்லைங்கறது உங்களுக்குத் தெரியாதான்னு நான் கேட்க மாட்டேன். 
  • கே: என்ன சார் இது ? அப்ப, கொள்கை இல்லைங்கறீங்களா ?
  • ப: ஹை, நான் எப்ப அப்டி சொன்னேன்? கொள்கை இல்லைன்னு சொல்லலை, இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன். ரெண்டுக்கும் வித்யாசம் இருக்கு இல்லியா ?
  • கே: அதானே பார்த்தேன். எங்க நேரடியா பதில் சொல்லிடுவீங்களோன்னு பயந்துட்டேன். 
  • ப: பயப்படாதீங்க. எனக்கு பயம்னாலே பயம். காலை பயம், மாலை பயம், இரவு பகல் எப்போதும் பயம் .. அடடே, இத பிக் பாஸ்ல சொன்னா எடுக்கும் போல இருக்கே..
  • கே: ஐயா சார். உங்களுக்குப் புண்ணியமா போகும். பக்கத்துல பஸ் ஸ்டாண்ட எங்க இருக்குன்னு சொல்லுங்க…
  • ப: வளையோசை கல கலன்னு சொல்லிக்கிட்டே கதவைத் திறந்து. உன்னால் முடியும் தம்பீன்னு ஓடினீங்கன்னா, ஆளவந்தான் தெருவுல திரும்பி அவ்வை..
  • கே: வேண்டாம் சார். நான் ஆட்டோ பிடிச்சே போயிடறேன். மறுபடியும் துவங்கிடாதீங்க. 
  • ப: துவக்கம்ங்கறது தமுக்கம் மைதானத்துல.. சரி சரி. ஓடாதீங்க. விழுந்துடப்போறீங்க..

Godse Gandhi – ek Yudh review

Marathi plays have been bold. ‘Me Nathuram Godse Boltoye’ was one such.

In the same lines, yet another stage play with the name ‘Godse@Gandhi.com’- that deals with Godse’s reasoning of his killing Gandhi – has been made into a movie.

And this movie resembles its play version in full.

While seeking to paint the point of view from Godse’s perspective, the dialogues get repetitive with Godse accusing Gandhi of being against Hindus. Repetition makes the narrative irritating.

Gandhi’s much spoken about abstinence and his imposition of the same on his co-ashramites also becomes a point of discussion. Whether Gandhiji acceded to the request of his follower or not forms the second climax of the movie.

The idea of making Gandhiji and his assassin talk to each other and get to know each other’s points of view is an interesting angle to view from. However theatrical performance by the characters – Nehru, Kripalani, Patel and Ambedkar – spoil the movie quite a lot.

A welcome attempt that could have been better with tighter narration and better choice of actors.

சென்னை புத்தகக் கண்காட்சி – என் அனுபவம்

அடுத்த புத்தகக் கண்காட்சிக்குள் ‘மோடி அரசின் கார்ப்பரேட் சனாதனத் திணிப்புகள் – கழுகுப் பார்வை’ என்னும் தலைப்பில் நூல் எழுதினால் அடையாறில் வீடு வாங்கலாம். அத்தனை பதிப்பகங்கள் வெளியிடும் என்று நேரில் தெரிந்து கொண்டேன்.#chennaibookfair

சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘தண்ணீர்’ கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். தொகுப்பில் எனது கட்டுரை ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

வேறு இரண்டு நூல்களும் வெளியீடு கண்டன.

அமைப்பாளர்கள் ஒரே ‘தோழர்’ மயம். புலிப் பணத்தில் இயங்கும் தேசவிரோதக் கட்சியொன்றின் ஏதோ அணியின் பொறுப்பாளரும் வந்திருந்தார் என்பது அவர்கள் பேசிக்கொண்டதில் தெரிந்தது.

பெண் தோழர் ஆண் தோழரைத் தோழர் என விளிக்க, ஆண் தோழர் பெண் தோழரைத் தோழர் என விளிக்க, எங்கெங்கு காணினும் தோழரடா என்னும் அந்தச் சம தர்ம சமுதாயக் கனவு கண்ணெதிரில் நனவானதை உணர்ந்தேன்.

சூழல் ஒவ்வாமை. அரங்கில் இருந்து வெளியேறி, கண்காட்சி அரங்கில் நுழைந்தேன்.

அடடா.. என்னே காட்சி ! தோழர் தவிர, புலித் தம்பி, நீலத் தம்பி, கறுப்புத் தம்பிகள், சிவப்புத் தம்பி தங்கைகள், கண் பட்ட இடமெல்லாம் சு.வெ.யின் ‘வேள்பாரி’ நூல் என பொதுவுடமைப் பின்புலத்தில் தமிழ்த் தேசிய நிறம் மிளிர்ந்த பதாகையில் அம்பேத்கரியத்தில் ஊறி உப்பிய ராமசாமி நாயக்கரீயப் பாவனைகள் பரந்து தெரிந்தன.

இரண்டில் மூன்று கடைகள் இவ்வகையிலானவை.

உ.வே.சா. நூல் நிலையப் பதிப்பகக் கடை ஒரு ஓரத்தில் யாருமற்ற தனிமையில் நின்றிருந்தது. ‘என் ஆசிரியப்பிரான்’ வாங்கினேன்.

விஜயபாரதம் தற்போது ‘பிரசுரம்’ என்கிற பெயரில் துயில்கொண்டிருந்தது. ஆங்காங்கே வெற்றிடம். ஆயினும் பல நூல்கள் இல்லை. மா.வெ.எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ் பற்றிப் பசும்பொன் தேவர்’ எனும் நூல் வாங்கினேன்.

சுவாசம் பதிப்பகத்தில் ஹரன் பிரசன்னா வழக்கம் போல் படு பிசியாக யாருக்கோ நேர்காணல் கொடுத்துக் கொண்டிருந்தார். ஓரிரு மணித்துளிகள் பேசிவிட்டு, சுதாகர் கஸ்தூரி, ஜெயமோகன், எழுதிய சில நூல்களை வாங்கினேன். பிரசன்னா மிகச்சிறப்பாகச் செயல்படுகிறார் என்று என் எழுத்தாள நண்பர்கள் கூறியிருந்தனர். அதை அவரிடம் தெரிவித்தேன்.

பாலம் கல்யாணசுந்தரம் அவர்கள் தேமே என்று கால் நீட்டி அமர்ந்திருந்தார். அவரை விழுந்து வணங்கி, அவர் கையால் அவரைப் பற்றி எஸ்.ஜி.சூர்யா எழுதிய நூலை வாங்கினேன்.

சின்மயா மிஷன் அலுவலர் ‘உப-நிஷத்’ புஸ்தகம் எல்லாம் இருக்கு. பாருங்கோ என்றார். கடையில் அவரும், சின்மயானந்தரும் மட்டும் இருந்தனர். ‘ஹிந்து’ ஸ்டாலில் நாலைந்து பேர் திருப்பதி காஃபி டேபிள் புஸ்தகம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கண்காட்சிக்கு மாணவர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். அவர்களுடன் பெற்றோரும். அரங்க ஏற்பாடுகள், வசதிகள் நன்றாக இருந்தன.

நான்கு முறை அனைத்து அரங்குகளையும் சுற்றி வந்தேன். பெயர் குறிப்பிட விரும்பாத அரங்கு ஒன்றில் தொகுப்பாசிரியர் ஒருவர் ‘இவர் தான் ஆமருவி. நான் சொன்னேனே, அந்த கட்டுரை எழுதினது இவர் தான்’ என்று என்னை ஒரு பதிப்பாளரிடம் அறிமுகம் செய்தார். வேஷ்டி, ஜிப்பாவில் பக்கவாட்டில் மட்டுமே தெரிந்த என்னை நேரில் காண எழுந்து வந்த அவர், கைகொடுத்துப் பின் நெற்றியைப் பார்த்ததும் வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.

அடுத்த புத்தகக் கண்காட்சிக்குள் ‘மோடி அரசின் கார்ப்பரேட் சனாதனத் திணிப்புகள் – கழுகுப் பார்வை’ என்னும் தலைப்பில் நூல் எழுதினால் அடையாறில் வீடு வாங்கலாம். அத்தனை பதிப்பகங்கள் வெளியிடும் என்று நேரில் தெரிந்து கொண்டேன்.

#சென்னைபுத்தகக்கண்காட்சி#Chennaibookfair

கம்பன் பார்வைகள் – மலை, மழை கடவுளர்கள்

கங்கை பிறந்த இடம் இமயமலை. பொதுவாகவே பிறந்த இடத்தைத் தந்தையாகவும், சென்று சேரும் இடத்தைக் கணவனாகவும் கொள்ளுதல் மரபு. அவ்வகையில் இமயமலை கங்கையின் தந்தை.

போங்க சார். ஆத்மாங்கறீங்க. உயிர் உள்ளதுக்கு மட்டும் இல்ல, உயிர் இல்லாததுக்கும் ஆத்மா இருக்குன்னு நம்பணும்கறீங்க. கொஞ்சம் கூட பகுத்தறிவா இல்லையே..

விசிட்டாத்வைதம் சொல்லும் ஜீவாத்ம, பரமாத்ம, ஜடப்பொருள் ஆகிய மூன்றும் உண்மைகளே என்பதை ஒப்புக்கொள்ள சிறிது பண்பாட்டுப் பயிற்சி தேவை. கம்பன் வழியில் முயன்று பார்ப்போம். 

கோசல நாட்டில் மழை வளம் எப்படி உள்ளது என்பதைக் கம்பன் சொல்வது : 

பம்பி மேகம் பரந்தது, பானுவால்

நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்;

அம்பின் ஆற்றதும் என்று அகன்குன்றின்மேல்

இம்பர் வாரி எழுந்தது போன்றதே

சிவபெருமானுக்கு மாமன் முறை கொண்ட இமயமலை, கதிரவனின் வெப்பக் கதிர்களால் அனல் போல் ஆனது என்று மேகங்கள் கருதின. எனவே இமயமலையைக் குளிர்விக்க எண்ணி, மலையின் மீது கடலைப் போல் விரிந்து நின்றன என்கிறான் கம்பன். 

கங்கை பிறந்த இடம் இமயமலை. பொதுவாகவே பிறந்த இடத்தைத் தந்தையாகவும், சென்று சேரும் இடத்தைக் கணவனாகவும் கொள்ளுதல் மரபு. அவ்வகையில் இமயமலை கங்கையின் தந்தை. 

கங்கையைத் தலையில் கொண்டவன் சிவபெருமான். ஆகவே இமயமலை சிவபெருமானின் மாமனார் ( மாமன்) நிலை பெறுகிறது. 

மனைவி மீது உள்ள மோகத்தால், மருமகன் மாமனைத் தாங்கிப் பிடிப்பது என்கிற உலகியல் நிலையின் படி பார்த்தால், இமயமலை சூரியனின் வெப்பத்தால் உஷ்ணம் அடைவதைக் கண்ட மருமகன் சிவபெருமான், உடனே அதைத் தணிக்க எண்ணி இமய மலை மீது வெண்மேகங்கள் உருவில் கடல் போல் விரிந்தான் என்று வியாக்கியானம் விரிகிறது. 

உடல் முழுதும் வெண்ணீறு அணிந்தவன் சிவபெருமான். ஆகவே வெண்மேகங்கள் சிவனைக் குறிக்கின்றன. ஆனால், வெண்மேகங்களால் குளிர்விக்க இயலாது. அவை கரிய நிறம் உடையனவாக வேண்டும். அதாவது நீர் கொண்டனவாக இருக்க வேண்டும். நீர் உண்ட மேகங்கள்  கரிய நிறம் கொண்டு,  திருமாலின் நிறத்தை  ஒத்து நிற்கும். ‘கார் மேனிச் செங்கண்’ ,’ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து’ – ஆண்டாள் வரிகள் நினைவிற்கு வரலாம்.

அருள் மற்றும் வள்ளல் தன்மை மழை வடிவில் காட்டப்படுகிறது. கருமேகம் மழையாகப் பொழிந்தபின் இல்லாமல் ஆகும். தனக்கென நீரை வைத்துக் கொள்ளாமல் முழுவதும் கொட்டித் தீர்த்துவிடும். நாராயணன் அவ்வகையானவன் என்பதைக் குறிக்கும் விதமாக இருப்பதாக வியாக்கியானம்.

மழை எவ்வாறு பொழிய வேண்டும் என்பதை ஆண்டாள் ‘ வாழ உலகினில் பெய்திடாய்’ என்று சொல்கிறாள். உலகம் உய்யுமாறு மழை வேண்டும் என்கிறாள் ‘ஆழி மழைக் கண்ணா’ பாசுரத்தில். 

அழிக்கும் கடவுள் சிவ பெருமான். அவன் மழையாகப் பொழியாத வெண்மேகமாக உள்ளான். காக்கும் கடவுள் திருமால். அவன் கரிய மேகமாகக் காட்டப்படுகிறான். 

ஆனால், மேகங்கள் ஒன்றே. அவை வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு உருவம் கொள்கின்றன. வெண்மேகம் கரிய மேகமாக ஆகிறது. அவற்றைப் போன்றே, பரப்பிரும்மம் சிவபெருமான் உருவில் அழித்தல் தொழிலையும், திருமால் உருவில் காத்தல் தொழிலையும் செய்கின்றது. 

‘ஏகம் ஸத். விப்ர: பஹுதா வதந்தி’ என்னும் ஆதி வாக்கியம் இவ்விடத்தில் நோக்கத்தக்கது.

‘தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே’ என்னும் ஆழ்வார் பாசுரத்தையும் இவ்விடத்தில் ஒப்பு நோக்கின் சுவை பெருகும். 

முதல் வரியை மீண்டும் வாசியுங்கள்.

அறம் நிலையாத் துறை பதிகம்

இந்து அறம் நிலையாத் துறை அவலங்கள்

Temple Chariot Uthiramerur

Temple Chariot Uthiramerur

In the splendidly governed state of Tamil Nadu, that too in the most egalitarian #Dravidian Model of Governance ( don’t try searching for the meaning, you wouldn’t find it), this is the picture of the temple chariot at Uthiramerur.

Dilapidated Temple Chariot at Uthiramerur

Some how, the temple doesn’t come under the dysfunctional Hindu Religious Endowment Board of the state government. Had it been under govt control, these wooden parts would’ve been smuggled out of the country and would probably be an antique piece at some home in the western world.

Now, where is the collective conscience of the people of the state?

The temple has inscriptions that date back to 800 CE and speak of democratically elected village bodies. These inscriptions are often showcased to emphasise the antiquity of democracy in Tamil Nadu.

And the temple chariot lies in ruins, battered by weather and the general apathy of temple trustees and devotees.

%d bloggers like this: