Science for an Indian boy

Science for a Tambrahm boy. May be applicable for many others too. #KVPY #IISc #IISER

Younger son gets IISc Bangalore to pursue Science as a result of his score in KVPY exam. Govt of India is funding his education till PhD. Period.

So, is this for trumpeting a family victory ? Certainly not.

I could have written this in Tamil, got a few hundred reads and moved on. But I wanted this to reach a wider audience and hence have chosen English.

It was an arduous journey for the last four years. Young Bharatram spent the last four years in complete isolation and had to prepare for the entrance exam. Neither did he attend any family function nor could he spend some time on the ground playing his favourite sport, football.

Let me tell you the complete story.

I got transferred to India just because the then young Bharatram was interested in doing science at IISc Bangalore only. Add an element of Swami Vivekananda, Sir CV Raman, Tata, Homi Bhabha and you get the picture, right ?

So, from 2019 onwards his preparations began. I enrolled him, apart from regular school, with a local institute that taught higher physics and mathematics. No compulsion from my end, though. Bharat’s aim was to clear the KVPY.

He chose Biology stream at school though he wasn’t particularly interested in the subject. Reason : KVPY SA stream had biology and that was a scoring subject for the exam. On his own, he completed his Class XII biology text ( NCERT ) while he was in class XI. Reason : KVPY SA had Class XII biology content yet held during Class XI and he had to master the subject before the school taught him.

Covid intervened. He spent most of his awake time in front of the computer, either attending some lecture on PCM ( Physics, Chemistry, Mathematics ) or some online class from School or some lecture session from the coaching institute.

He didn’t play, he didn’t watch movies, he didn’t socialise. He studied. Diligently. For four long years.

In the meanwhile, KVPY was postponed twice for some reason or the other. He got some more time to prepare. When it actually happened, he cleared the exam scoring an All India Rank under 250.

Then government scrapped KVPY and proposed yet another exam for the subsequent years. No clarity on what would happen to those who had cleared KVPY. So, in confusion over his future, he started preparing for JEE, yet another arduous journey.

Repeat the online classes, periodic tests, worksheets, past-year question papers, mock-tests et al, in addition to the school’s own testing schedule.

Now that IISc has decided to admit him, his wait for JEE Advanced result is over.

So, what is the moral of the story ?

For a child interested in science to get into one of the prestigious institutes of the land, he has to sacrifice his childhood. Though I had persuaded him to stop his JEE preparations ( as KVPY rank was good enough for IISc / IISER), he couldn’t stop himself.

As a parent, I had tried to stop his torture, in all sincerity. But Bharat’s refrain would be on the lines of : What if KVPY score is not considered ? Logic couldn’t win over his worry. So, tried reasoning thus : Why not IISER ? Answer : But CV Raman didn’t work in IISER.

I am not able to compensate for his lost childhood. The system is such that if he doesn’t remain on top, he is discarded. Having been through this system myself, I know the harsh reality. However, I am pained to see the same torture on my son too.

He was interested in playing the violin, was attending online violin classes as well. But the current competition has drained the creative energy out of him.

Entrance Exams Yes. But such ordeal, No.

I am not an academician nor am I an academic policy maker. As a parent, I see thousand other Bharathrams spending their childhoods, toiling for attending these exams. And, if the child is from the cursed ‘forward-community’, then the troubles are multiplied.

To rephrase Poet Bharathy, ‘என்று தணியும் இந்தக் கொடுமையின் வேகம்’ ?

I know I could be trolled for sounding elitist or castigated for intending to point against reservation or for speaking up against the ordeal of the entrance exams.

Nevertheless, fact remains that nothing can be done to reclaim Bharathram’s childhood.

கல் மண்டபம் – நூல் வாசிப்பனுபவம்

EWS தேவப்படும் பிராம்மணர்கள் உள்ளனரா ? சவுண்டிப் பாப்பான், மட்டை தூக்கும் பாப்பான், பிராம்மணார்த்தப் பாப்பான், பரிஜாரகன், உபாத்யாயன். இவர்களுக்குத் தேவை EWS. #BookReview

பிராம்மணர்களுக்கு EWS – Economically Weaker Section – அடிப்படையில் இடஒதுக்கீடு தேவையா ?

‘பிராம்மணர்கள் சமூகத்தில் மேல் மட்டத்தில் உள்ளனர். அவர்களுக்கு மட்டுமே ஐ.ஐ.டி.யில் இடம் கிடைக்கிறது. அனேகமாக அனைத்து நிறுவனங்களிலும் தலைமைப் பதவியில் உள்ளனர். சமூக நீதி அடிப்படையில் EWS முறை வசதி குறைந்த முன்னேறிய வகுப்பினருக்கு என்றாலும், அதில் பல ஜாதியினர் இருந்தாலும், இந்த 10% இட ஒதுக்கிடு பிராம்மணர்களுக்கு மட்டுமே பயன்படுகிறது. ஆகவே இது சமூக நீதிக்கு எதிரானது’ என்பதான கருத்து மழைகளில் நீங்கள் நனைந்திருக்கலாம். இப்படிப் பேசாத ஊடகமே இல்லை என்னும்படியாகவே தற்காலச் சமூகம் உள்ளது.

ஆனால், நிதர்ஸனம் யாது ? பஞ்சத்துக்குப் பிச்சை எடுக்கும் பிராம்மணர்கள் இல்லையா ? எல்லா பிராம்மணர்களுமே அண்ணா நகரில் பங்களாவும், அமெரிக்காவில் வேலையுமாகவே உள்ளனரா ? இதைப் பற்றி எந்த எழுத்தாளருக்காவது அக்கறை இருந்துள்ளதா ?

இருந்துள்ளது என்பேன். அதைப் பற்றி எழுதும் துணிவும், உழைப்பும் உள்ள பெண் எழுத்தாளர் இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ?

வழக்கறிஞர் சுமதி அந்த எழுத்தாளர். அவர் எழுதிய ‘கல் மண்டபம்’ என்னும் நூல் சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது.

கதை சவுண்டி பிராம்மணர்களைப் பற்றியது. அபர காரியங்கள் பண்ணி வைக்கும் வாத்யார்கள், பாடை கட்டி, தோள் தூக்கி, சுடுகாடு கொண்டு சென்று அங்கும் காரியங்கள் செய்து, பத்து நாள் காரியங்களை விடாமல் செய்து வைக்கும் பார்ப்பனர்களைப் பற்றிய நாவல் ‘கல் மண்டபம்’.

ஶ்ரீரங்கத்தில் இருந்து சென்னைக்கு வரும் வேத விற்பன்னர் ஒருவர் தன் தொழிலை விட்டுவிட்டுப் பரிஜாரகராக ஆகிறார். ஏன் அவ்வாறு ஆனார் ? ஒரு வைராக்யம் காரணமாக அப்படி ஆகிறார். காட்டுத் தனமாக உழைக்கிறார். பணம் கொட்டுகிறது. ஆனால், மனைவி மனதளவில் விலகுகிறாள். அவரது பிள்ளைகள் என்ன ஆனார்கள் ? அப்பிள்ளைகளில் ஒருவனான தேசு என்கிற வேதாந்த தேசிகன் என்ன ஆகிறான் ? வாழ்க்கை அவனை எவ்விதம் சுழற்றி அடிக்கிறது ? அவனுக்குக் குடும்பம் ஏற்பட்டதா ? அவர்கள் என்ன ஆனார்கள் ? என்பனவற்றைப் பற்றிப் பேசும் நாவல் இது.

தேசுவின் வாழ்க்கை மூலம் வாசகர்கள் கண்டடைவன:

  • பிராம்மணார்த்தம் சாப்பிடும் வழக்கம், சாப்பிடுபவர்கள் பற்றிய தெளிவு
  • சவுண்டிப் பிராம்மணன் வாழ்க்கை முறை
  • சவுண்டிப் பிராம்மணன் உட்கொள்ளும் லாகிரி, போதை வஸ்துக்கள்
  • அந்திம சம்ஸ்காரம் பண்ணி வைக்கும் பிராம்மணன் போதைக்கு அடிமையாவது ஏன்?
  • அவ்வகையான பார்ப்பனர்களின் குடும்ப வாழ்க்கை நிகழ்வுகள்
  • திவசம் முதலிய நிகழ்வுகள் நடக்கும் ‘தீர்த்த கட்டம்’ போன்ற இடங்களில் உள்ள ஊழல்
  • சாவு வீடுகளில் செயல்படும் பிராம்மணர்களிடம் உள்ள சுரண்டல்கள்

சுரண்டல் இல்லாத இடமே இல்லை என்னும்படியாக ‘விஷ்ணு தீர்த்தம்’ என்னும் காரிய இடத்தில் நடக்கும் பிழைப்புச் சண்டைகள், மனித மனங்களின் கீழ்மை, சில நேரங்களில் எதிர்பாராத இடங்களில் ஏற்படும் திடீர் மன உச்சம் கொள்ள வைக்கும் மனிதர்களின் செயல்கள் மற்றும் எண்ணங்கள் என்று நாவல் மனதை நெருடும் விதமாகச் சுழன்று செல்கிறது.

சமூகத்தில் இவ்வகையான பிராமணர்களும் இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் ‘கல் மண்டபம்’, ‘விடுதலை’, ‘விசாரணை’, ‘அசுரன்’, ‘பரி ஏறும் பெருமாள்’ முதலிய திரைப்படங்கள் வரிசையில் இடம் பெற வேண்டிய ஒன்று. ஆனால் என்ன, இதை எந்த இயக்குநரும் படமாக்க முன்வர மாட்டார்.

இந்த நாவலை இலக்கியத் தர வரிசைகள் எதிலும் நான் கண்டதில்லை. நாவலில் இலக்கியத் தரம் உள்ளதா என்று முற்போக்கு எழுத்தாளர்கள், விமர்சகர்கள் ஆராயலாம். நான் முற்போக்கு இல்லை. பிராமணர்களில் ஒரு வகையினரின் யதார்த்த வாழ்வின் அவல நிலையைச் சொல்லும் இந்த நாவல், பின் நவீனத்துவம், ஊசி நவீனத்துவம் என்கிற ஜல்லிகள் எதுவும் இல்லாமல், நேரடியான கதையாகவும், பிராம்மண அவல வாழ்வின் நிதர்ஸனத்தைச் சொல்லும் ஒரு ஆவணமாகவும் பார்க்கப்பட வேண்டும். குறிப்பாகப் பிராம்மணர்களால்.

நாவலை வாசித்தபின், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் குளக்கரையில் தினமும் காலையில் சவுண்டி, பிராம்மணார்த்தம், திவசம் முதலியவற்றிற்காகக் காத்து நிற்கும் வயோதிக பிராமணர்களில் தேசு இருக்கிறாரா என்று தேடிக்கொண்டிருக்கிறேன். கூடவே ஒரு ஓரமாகக் கல்யாணி நிற்கிறாரா என்றும்.

நாவலில் பல முக்கியமான இடங்களில் ஆழ்வார் பாசுரங்கள் கையாளப்பட்டுள்ளது அருமை.

யார் வாசித்தாலும் வாசிக்காவிட்டாலும், பிராமணர்கள் இந்த நாவலை வாசிக்க வேண்டும். திவசம், உபாத்யாயம் என்று வரும் வாத்யார்கள், எடுபிடிகள் என்று அவர்களுக்கு தக்ஷணை விஷயத்தில் கஞ்சத்தனம் கேவலத்திலும் கேவலம் என்கிற எண்ணம், உயர் மத்திய தர பிராம்மணர்களுக்கு ஏற்படும்.

முதல் வரியை வாசிக்கவும்.

நாவல் : கல் மண்டபம். ஆசிரியர் : வழக்கறிஞர் சுமதி. வாசன் பதிப்பகம். விலை ரூ 260.

அவிநாசி கோவில் தாக்குதல்

வாசகர்களுக்கு வணக்கம். 

நேற்றும் இன்றும் மனம் ஒரு நிலையில் இல்லை. சொற்களில் நிதானம் தவறியிருந்தால் மன்னிக்கவும்.

‘செப்டம்பர் 11ற்குப் பதிலாக உலகம் டிசம்பர் 13 பற்றிப் பேசியிருக்கும்’ என்றார் அத்வானி. 

இந்தியப் பாராளுமன்றத் தாக்குதல் பற்றிப் பேசும் போது இதைச் சொன்னார். ‘பயங்கரவாதிகள் உள்ளே வந்திருந்தால், பாரதத்தின் நிர்வாகத் தலைமையும் எதிரணித் தலைமையும், அனேகமாக எல்லா உறுப்பினர்களும் மறைந்திருப்பர்’ என்றார் அத்வானி. 

அது போன்ற நிகழ்வே அவிநாசிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மீதான தாக்குதலும். 

தெய்வத் திரூவுருக்களைச் சேதப்படுத்திய கயவனிடம் வெடிப்பொருட்கள் இருந்திருந்தால் ? ஆயிரம் ஆண்டுப் பழமை உள்ள கோவில், இறைத் திருமேனிகள், சிற்பங்கள், நம் பண்பாட்டுச் சின்னங்கள், கோடிக்கணக்கான மக்களின் ஆதர்ச நம்பிக்கைத் தூண்கள், நம் தமிழகத்தின் / பாரதத்தின் மானம் – எல்லாம் காணாமல் ஆகியிருக்கும். 

ஒருவேளை மேற்சொன்னவாறு நடந்திருந்தால் அதன் விளைவுகள் ? 

கயவனுக்கு மனநிலை சரியில்லை என்கிறது அரசு. மனநிலை சரியில்லாதவன் கோவில் சாத்தப்படும் முன் கோவிலுக்குள் ஒளிந்துகொண்டது எங்ஙனம் ? முருகப் பெருமானின் வேலைப் பிடுங்கி உண்டியலைப் பெயர்த்துள்ளான் என்கிறது செய்தி. மனநிலை சரி இல்லாதவன் செய்யும் செயலா இது? 63 நாயன்மார்களின் வஸ்திரங்களைக் களைந்து அவமானப்படுத்தியுள்ளான். பின்னர் கோவில் கோபுரத்தில் ஏறி ஒளிந்துகொண்டுள்ளான். மனநிலை சரியில்லாதவன் செய்யும் செயலா இது ?  

சிசிடிவி இயங்கவில்லை என்று அரசு சொல்வது வெட்கக்கேடு. ஆயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்களை மீட்டதாக அமைச்சர் பெருமை பேசுகிறார். கேவலம் சிசிடிவி வேலை செய்கிறதா என்று பார்க்க அதிகாரிகளுக்கு வக்கில்லை. பணம் இல்லை என்று சொல்ல முடியாது. இன்னோவா கார் வாங்க பணம் இருந்ததா ?  

கோவிலைப் பாதுகாக்க வக்கில்லாத அறம் நிலையாத் துறை இதற்குப் பின்னரும் கோவிலை வைத்துக்கொண்டிருப்பது என்ன லட்சணம் ? நிலத்தைத்தான் பாதுகாக்க திராணி இல்லை. கோவிலையே பாதுகாக்க வக்கில்லை. அப்புறம் என்ன இந்து அற நிலையத் துறை ஜம்பம் ? இதற்கு செயல் அலுவலர் ஒரு கேடு. அவருக்கு மேல் ஜேசி, பாசி என்று சீட்டு தேய்க்க என்றே அதிகாரிகள். துறைக்கு ஒரு அமைச்சர் வேறு. கேட்டால் இரண்டாண்டு ஆட்சி, காட்சி என்று எதுகை மோனையில் பேசும் அரசு. 

கோவிலில் ஆள் உள்ளதா என்று பார்த்து வரக் காவல்காரர் இல்லையா ? இரவு கோவிலுக்குள் சப்தம் எழுந்தால் கூடத் தெரியாத அளவிற்கா காவலர்கள் உள்ளனர் ? என்ன கருமம் பிடித்த அரசு அலுவலகம் இது ? 

கண்ட கழிசடைகளையும் அதிகாரத்தில் இருத்தினால் வெளியில் சொல்லக் கூசும் அளவிற்குச் செயல்படுகிறார்கள். 

கோவிலின் செயல் அலுவலர் சோற்றில் உப்பிட்டுத்தான் உண்கிறாரா ? அவருக்கு மேலே உள்ள அதிகாரிகள் இரண்டு முழம் கயிறு வாங்கிக் கொள்ளலாம். வெட்கக்கேடு. 

மக்களின் நிலை அதைவிடக் கொடுமை. எடுத்ததற்கெல்லாம் கடை அடைப்பு, தர்ணா. ஊருக்குப் பெயரே கோவில் பெருமானின் பெயர் தான். ஆனால் ஊரே கப்சிப். 

அரசியல்வாதிகள் ( அண்ணாமலை தவிர ) புடவை வாங்கச் சென்றுள்ளனர் போல. பிறிதொரு மதத்தின் சிறு குடில் சேதப்பட்டால் கூட கொந்தளிக்கும் ஜந்துக்கள் வாய்திறக்கவில்லை. இந்து முன்னணியின் காடேஸ்வரன், ஹிந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் தவிர யாருமே பேசவில்லை என்று நினைக்கிறேன். 

தெருவுக்குத் தெரு நிற்கும் சிலையின் மீது பறவை எச்சமிட்டால் கூட கொதித்து எழும் ஊடகங்கள் – வீட்டில் இழவு போல மௌனம். என்ன ஒரு வெட்கம் கெட்ட பிழைப்பு இது ?  

சே..
–ஆமருவி 

அவிநாசி கோவில் சிதைவுகள்

பூணல், கல்யாணம், சீமந்தம் – சிறு குறிப்பு

ஒரு திங்கள் கிழமை காலை, ஒரே நேரத்தில் அடையாறிலும், தாம்பரத்திலும் முஹூர்த்தம் வைத்தால் மனுஷன் எப்படிப் போவது ?

பிரியமான சொந்தங்கள் / நண்பர்கள் / வாசகர்களே, வணக்கம். 

பூணல் போடுங்கள், அமோகமாக இருக்கட்டும் பிள்ளைகள். கல்யாணம் பண்ணுங்கள். சதாபிஷேகம் பண்ணிக்கொள்ளுங்கள். எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஆனால், எல்லா பூணலையும் ஏப்ரலில் இருந்து ஜூலைக்குள் போட்டே ஆக வேண்டுமா ? இந்த மூன்று மாதத்தை விட்டால் பூணல் போட வேறு மாதமே கிடைக்காதா ? அதென்ன சார் எல்லாரும் இந்த மூன்று மாசத்திற்குள்ளேயே போட்டுக் கொண்டே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கிறீர்கள் ? தலை ஆவணி அவிட்டத்திற்கான ஏற்பாடா ? 

கல்யாணமும் அப்படியே. திங்கள் முதல் வெள்ளி வரை கல்யாண வைபோகமாகவே இருக்கிறது. சனி, ஞாயிறு ஈ காக்காய் இல்லை. ஒரு கல்யாணம், சீமந்தம் ஒன்றும் இல்லை. சொல்லி வைத்த மாதிரி திங்கள் காலை முஹூர்த்தம் என்கிறார்கள். போனோம் என்று பேர் பண்ணிவிட்டு ஆஃபீஸ் போகலாம் என்றால் 9:00 மணிக்கு மேல் முகூர்த்தம் என்கிறார்கள். ராகு காலம் முடிய வேண்டுமாம். அதற்கு மேல் கல்யாணத்தில் பங்கு பெற்று ஆஃபீஸ் போக முடியுமா ? போனால் அங்குள்ள ராகு காலம் விடுமா ? 

சரி. அப்படியே போகலாம் என்றாலும் சென்னை டிராஃபிக் விடுமா? திங்கள் காலை தான் ‘ஆமருவி எங்கே ? எங்கே ?’ என்று ஆலாய்ப் பறக்கும் ஃபோன் கால்கள். மிச்ச நாள்களில் சீந்துவார் இல்லை. 

ஒரு திங்கள் கிழமை காலை, ஒரே நேரத்தில் அடையாறிலும், தாம்பரத்திலும் முஹூர்த்தம் வைத்தால் மனுஷன் எப்படிப் போவது ? ஆஃபீஸ் அவசரத்தில் எது கல்யாணம், எது பூணல், எது சீமந்தம் என்று தெரியாமல், பூணல் முஹூர்த்தத்திற்கு புடவை வேஷ்டியும், சீமந்தத்திற்கு நாலு முழம் வேஷ்டியும், கல்யாணத்திற்கு அலாரம் டைம்பீசுமாக கிஃப்ட் கொடுத்து அசடு வழிய வேண்டியதாக இருக்கிறது. 

இத்தனைக்கும் எல்லா பத்திரிக்கையும் வாட்ஸப்பில் அனுப்பி, ‘பத்திர்க்கைய நீங்க பார்க்கவே இல்லியே?’, ‘பார்த்தீங்க, ஆனா பதில் போடல்லியே” ரெண்டு டிக் மார்க் வரல்லியே’ என்று ஃபோன் கால் வேறு. 

மனுஷன் திங்கள் காலை ஆஃபீஸ் பிரச்னையை நினைப்பானா, இல்லை சீமந்தம், மணையில் வைத்துப் பாடுவது, காசி யாத்திரை பார்ப்பது என்று போவானா? இப்படியெல்லாம் போனால் காசி யாத்திரை போக வேண்டியது தான். 

நிஜமாகவே புரியவில்லை ஸ்வாமி. எப்படி இத்தனை கல்யாணங்களையும், பூணல்களையும், சதாபிஷேகங்களையும் சமாளிப்பது ? 

இப்படிக்கு,
ஒரு கல்யாண மண்டபத்தில் காத்திருக்கும்,
அசட்டு அம்மாஞ்சி ஆமருவி.
03-05-2023 

Chennai Story aka Kerala Story

‘Kerala Story’ கதை பொய் என்று பினரயி விஜயன், சஷி தரூர் சொல்லியிருக்கிறார்கள். பொய்யாக இருக்கக் கூடாதா என்று பலர் நினைக்கிறார்கள். 

‘Kerala Story’ கதை பொய் என்று பினரயி விஜயன், சஷி தரூர் சொல்லியிருக்கிறார்கள். பொய்யாக இருக்கக் கூடாதா என்று பலர் நினைக்கிறார்கள். 

இப்படி ஒன்று நடக்காமல் இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று ஆதங்கப்பட்ட 70 வயது ஶ்ரீனிவாசனை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அவரைப் பற்றிக் கேள்விப்பட்டது 2017ல். கதை நடந்தது 2015ல். 

ஶ்ரீனிவாசன் முற்போக்கான வக்கீல். முற்போக்கு என்றவுடன் அவர் ஐயங்காராக இருக்க வேண்டும் என்பது விதி. நல்ல ப்ராக்டீஸ். நல்ல வருமானம். சென்னையில் சொந்த வீடு ( தனி வீடு). கார். 

தன் ஒரே மகள் சௌஜன்யாவை, ஐயங்கார் வழக்கம் போல், மாடர்னாக வளர்த்தார். நல்ல கல்வி. மென்பொருள் வேலை. பெங்களூரு போவேன் என்று அடம். அம்மா ஒத்துக்கொள்ளவில்லை. ஶ்ரீனிவாசன் தலையீட்டால் சௌஜன்யா பெங்களூரு சென்றாள். 

ஒரே ஒரு முறை தீபாவளிக்கு வந்து சென்றாள். பின்னர் வேலை வேலை என்று ஒன்றரை வருஷம் வீட்டிற்கு வரவில்லை. ஸ்கைப் வீடியோ மூலம் மகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 2016ல் ஒருமுறை பெங்களூரு சென்று வந்த ஶ்ரீனிவாசன், சௌஜன்யாவை அவளது அலுவலகத்தில் சந்தித்தார். ‘ஏம்மா நெத்திக்கு இட்டுக்கறதில்லையா?’ என்று கேட்டுள்ளார்.

ஒரு விடியற்காலை பெட்டியும் கையுமாக வந்து சேர்ந்தாள் சௌஜன்யா, எட்டு மாத கர்ப்பத்துடன். கல்யாணம் ? நடந்துள்ளது. கல்யாண ஃபோட்டோவில் சௌஜன்யா நெற்றியில் ஒன்றும் இல்லை. பையன் லட்சணமாகத் தான் இருந்தான், பாழ் நெற்றியுடன்.

சௌஜன்யா வேலைபார்த்த பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தின் வாசலில் தினமும் ராயல் என்ஃபீல்ட் பைக்கில் வந்து சந்தித்துள்ளான் மற்றொரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த சுகுமாரன். நட்பு, காதல், உயர் மத்திய காண்டோமினியத்தில் சேர்ந்து வாழ்தல், ‘திருமணம்’. நிற்க. 

ஆன் சைட் அசைன்மென்ட் என்று துபாய் சென்ற சுகுமாரன் காணாமல் ஆனான். ஈமெயில், தொலைபேசி எதிலும் பதில் இல்லை. சௌஜன்யாவிற்கு மூன்றுமாதம். 

சுகுமாரனின் கம்பெனிக்குச் சென்று விசாரித்தால் சுகுமாரன் போலி என்பது தெரிந்தது. சுகுமாரனின் பாஸ்போர்ட் நகல் கொண்டு விசாரித்ததில், பாஸ்போர்ட்டும் போலி என்பதையும் தெரிந்துகொண்டாள். அவனது புல்லட் வண்டி வேறொருவன் பெயரில் இருந்துள்ளது. ஒரு வருடம் முன்னால் காணாமல் போய்விட்டது என்றான் அவன். ‘திரௌபதி’ திரைப்படக் கதை போல் தோன்றும்.

மேலும் விபரமாக எழுதமுடியாது. எனவே கதைச் சுருக்கம் இதோ : 

வண்டியும் சுகுமாரனுடையது இல்லை. வேலையும் சுகுமாரனுடையது இல்லை. சுகுமாரன் பெயரில் வாடகைக்கு இருந்த வீட்டிற்கும் சுகுமாரன் வாடகை செலுத்துவதில்லை. ஏன், சுகுமாரனே சுகுமாரன் இல்லை. 

வண்டி, வீட்டு வாடகை, போலி வேலை அமைப்புகள் எல்லாமே ஒரு அமைப்பு செய்து தருவது. அந்த அமைப்பு இம்மாதிரி பல சுகுமார்களை உருவாக்கியுள்ளது. தற்சமயம் சுகுமாரன் பாலகுமாரன் என்கிற அவதாரத்தில் பிறிதொரு சௌஜன்யாவையோ, ஜெனிஃபரையோ பாழாக்கிக் கொண்டிருக்கலாம். 

ஃபிளாஷ்பேக் முற்றும். 

2017 : சௌஜன்யா தகதகவென்று ஜொலிக்கும் ஆண் குழந்தைக்குத் தாய். யாராவது தத்து எடுத்துக் கொள்வார்களா என்று தேடிக்கொண்டிருந்தார்கள். 

2023 : ஶ்ரீனிவாசன் குடும்பம் சென்னையில் தட்டுப்படவில்லை. சௌஜன்யா எங்கிருக்கிறாளோ தெரியவில்லை. 

பி.கு.: பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

விடுதலை – பாகம் – 1 – சினிமா விமர்சனம்

விடுதலை – பாகம் 1 – திரை விமர்சனம். ( வசவுகள் துவங்கலாம் ). குறிப்பாகப் பெண்கள் மீது பாலியல் வன்முறை. பெண்களை, அதிலும் தலித் பெண்களை மட்டும் இப்படி எப்போதுமே அவமானப்படுதுதும் விதமாகவே சித்தரிப்பதை எந்த முற்போக்கு பெண்கள் சங்கமும் கண்டிப்பதில்லை.

இதை வாசித்துவிட்டு என்னை வசவுகளால் குளிப்பாட்டலாம். ஆனால், யாராவது சொல்லியாக வேண்டும். நான் சொல்கிறேன்.

விடுதலை என்னும் சினிமாவைப் பற்றி இனிமேல் யாரும் எதுவும் சொல்வதற்கில்லை என்று ஆகிவிட்டது. தமிழில் வந்துள்ள சமூகப் படங்களில் இதைப் போல் ஒன்று இல்லை, சமூக நீதியைப் பறை சாற்றுகிறது, தமிழ் மக்களின் போராட்ட உணர்வைக் காட்டுகிறது, உண்மைக் கதை, தமிழ்த் தேசியத்தின் மறைக்கப்பட்ட பார்வை — இப்படியே பல விமர்சனங்களைக் கண்டேன்.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையின் மேல் பல வகைகளில் கட்டப்பட்ட கதையே விடுதலை என்றும் வாசித்தேன். ஜெயமோகனே இதனைத் தெளிவுபடுத்தினார். ‘கதை மட்டுமே என்னுடையது. மற்றபடி படம் வெற்றிமாறனுடையது மட்டுமே.’ ஜெயமோகனை சங்கி என்றும், பாட்டாளி மக்களின் பகைவன் என்றும் வசைபாடும் கூட்டமும் ‘இது ஜெயமோகனின் படம் இல்லை. அவரது அரசியல் எதுவும் இல்லை. இது தமிழ்ப் பழங்குடிகளின் அழித்தொழிப்பு பற்றிய கதை தான். நல்லவேளை ஜெயமோகன் இதில் இல்லை’ என்று சாட்சியம் அளித்தார்கள்.

கொஞ்சம் குழப்பத்தில் இத்திரைப்படத்தைப் பார்த்தேன்.

கொஞ்சம் தமிழர் விடுதலைப் படை, கொஞ்சம் தமிழரசன், கொஞ்சம் வீரப்பன், கொஞ்சம் தமிழ்த் தேசியம், கொஞ்சம் போராட்ட சூழியல், கொஞ்சம் கார்ப்பரேட் எதிர்ப்பு என்று கலப்படமாக இருந்தது விடுதலை – பாகம் 1.

எல்லாம் கொஞ்சம் தானா ? இல்லை. அரசாங்க, போலீஸ் எதிர்ப்பு ரொம்ப அதிகம். அளவுக்கு அதிகம். அதுவும் போலீஸ் எதிர்ப்பு, போலீஸ் அராஜகம் என்று வயிற்றைப் பிரட்டும் வரை கொடுத்துள்ளார்கள்.

இவை மட்டும் தானா ? இல்லை. மலைவாழ் பெண்களின் சித்தரிப்பு. எப்போதும் அவர்களிடம் அத்துமீறும் காவல் துறையினர். எப்போதும் அவர்களைக் கற்பழித்துக் கொண்டே இருக்கும் காவல் அதிகாரிகள். எப்போதும் அவர்களை நிர்வாணமாகவே நிற்கவைத்து அடிக்கும் காவல் அதிகாரிகள்.

பெண்களைக் கொடுமைப்படுத்தினார்கள் என்பதை எத்தனையோ குறியீடுகள் மூலம் சொல்லலாம். சினிமா எடுப்பவர்களுக்குக் குறீயீடா தெரியாது ? ஜெய்பீம் படத்தில் பாமகவைச் சுட்டும் விதமாக குரு என்றொரு பாத்திரம், பின்னர் அக்னிக் கலசம். அவ்வளவுதான். அக்கட்சியைச் சொல்லியாகிவிட்டது. பாமக கூட்டம் நடப்பதைப் போல் ஏன் ஒரு காட்சி வைக்கவில்லை ? அதே போல் அசட்டு வக்கீல் ஒருவரைக் காட்ட, பிராமணர் போல் தோற்றம் அளிக்கும் ( உருவம் + மொழி + சிவ நாம உச்சாடனம் ). அப்பாத்திரம் தேவை இல்லாத ஒன்று என்றாலும், பிராமணர்களை எப்படியாவது இழிவு படுத்த வேண்டாமா ? சொருகு ஒரு கேரக்டரை. யார் கேட்கப் போகிறார்கள். அந்தப் பாத்திரக் குறியீடு என்ன ? உயர்குடி வக்கீல்கள் அந்தப் போராட்டத்திற்கு ஊக்கம் அளிக்கவில்லை என்று எப்படிச் சொல்வது ? ஒரு அசட்டு வக்கீல் வைத்தால் போயிற்று.

ஆனால், தலித் மீதான வன்முறை என்றால் கண்டிப்பாக கற்பழிப்பு, வன்கொடுமை காட்டப்பட வேண்டும். அதுவும் அதீத வன்முறையுடன். இவை நடக்கவில்லை என்பதால் அல்ல. இவற்றை இப்படிக் காட்டினால் மட்டுமே தமிழ்ச் சமூகம் நம்பும் என்கிற ஒரு டெம்ப்ளேட் போல்.

பல டெம்பிளேட்கள் உள்ளன. பிராமணன் என்றால் ஸ்திரீ-லோலனாக இருக்க வேண்டும், குயுக்தியுடன் செயல்பட வேண்டும், சிண்டு முடிந்துவிட வேண்டும், பண பலத்திற்கு முன் அடிபணிந்து நிற்க வேண்டும், கெட்ட எண்ணம் கொண்டவனாகவும் இருக்க வேண்டும். சாதி பார்ப்பவனாக இருந்தே ஆக வேண்டும். இந்த டெம்ப்ளேட் மாறினால் அவன் பிராமணன் ஆகமாட்டான். உதா: தளபதி படத்தில் சாருஹாசன். திரௌபதி படத்தில் பத்திரப் பதிவு அலுவலர். தேவர் மகன் படத்தில் மதன் பாப்.

அதே போல், அதீத வன்முறை காட்டாமல் தலித் விஷயங்கள் பேச முடியாது என்பது சட்டம். ஒன்று கதாபாத்திரம் அதீத கோபத்துடன் இருக்கும். பார்க்கும் எவருடனும் சண்டையிடும். சட்டத்தை மீறும். ஏனெனில், சமூகக் காரணங்கள். கமலஹாசன் சொல்வது போல ‘சமூகக் கோபம்’. Therefore justified. இந்த வன்முறையைக் கையாள, அரசு, காவல்துறை மூலம் அதீத வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும். அதில் குறிப்பாகப் பெண்கள் மீது பாலியல் வன்முறை. பெண்களை, அதிலும் தலித் பெண்களை மட்டும் இப்படி எப்போதுமே அவமானப்படுதுதும் விதமாகவே சித்தரிப்பதை எந்த முற்போக்கு பெண்கள் சங்கமும் கண்டிப்பதில்லை. 70 வயதான கவர்னர், தன் பேத்தி வயதுள்ள ஒரு பெண் பத்திரிக்கையாளரைக் கன்னத்தில் தட்டினார் என்பதால் வெகுண்டெழும் மாதர் சங்கங்கள், பெண்ணீய இயக்கங்கள் தலித் பெண்கள் இப்படி காட்டப்படுவதைக் கண்டுகொள்வதில்லை என்பதைக் காட்டிலும் இம்மாதிரியான காட்சிப்படுத்தல்களைச் சிலாகித்துக் கொண்டாடுவது என்ன முற்போக்கோ தெரியவில்லை.

வெற்றிமாறன் கையாளும் உத்தி அருமையானது. கதையை ஒரு நாவலில் / சிறுகதையில் இருந்து எடுப்பார். பின்னர் அனேகமாக அனைத்து விதமான தேச எதிர்ப்புக் குழுக்களின் சொல்லாடல்களையும் சேர்த்துக் கதம்பமாக ஆக்கி, பிழியப் பிழிய அழுது அரற்றி, கோபம் கொப்புளிக்க அரசை எதிர்க்கத் தூண்டும் விதமாக மக்களை உசுப்பேற்ற ஒரு திரைக்கதையை எழுதுவார். இயக்கம் வெகு சிரத்தையாக இருக்கும். காட்சிகள் தத்ரூபமாகவும், குரூர ரசம் சொட்டும் விதமாகவும் இருக்கும். படம் பிய்த்துக் கொண்டு ஓடும்.

ஏய்ப்புகள், சுரண்டல்கள் நடக்கவில்லையா என்று கேட்கலாம் ? அவற்றைக் காட்டக் கூடாதா என்றும் கேட்கலாம். நடந்தன. நடக்கின்றன. காட்ட வேண்டும். ஆனால், எதைக் காட்டுவது ? எப்படிக் காட்டுவது ?

விருமாண்டி திரைப்படத்தில் நாயக்கர் சமூகத்திற்கும் தேவர் சமூகத்திற்கும் பிரச்னை என்பது போல கமலஹாசன் எடுத்திருப்பார். ஆனால், ஒரு முறையாவ்து நாயக்கர் சமூகப் பெண்ணை இம்மாதிரி காண்பித்திருக்க முடியுமா ? இல்லை, தேவர் பெண்ணை ? கதை ஓட்டம் அப்படி இல்லையே எனலாம். ஆனால், இடை நிலை சாதிப் பெண்கள் யாரையாவது இம்மாதிரி நிர்வாணமாக அடி வாங்கி, பாலியல் வன்கொடுமை நிகழ்ந்து, கொல்லப்பட்டு என்று காட்டியிருக்கிறார்களா ? அவர்களுக்கு நடக்கவில்லை என்று கருதினால் கூட, அவர்களை அவமானப்படுத்துவது போல் எதையும் செய்ய மாட்டார்கள். ( உண்மையில் தென் மாவட்டங்களில் பிரச்னை தலித்துகளுக்கும் தேவர்களுக்கும் தான். ஆனால், அவ்விடத்தில் தலித்துகளைக் காட்ட முடியாது என்பதால் நாயக்கர்களை காட்டினார் கமலஹாசன். ‘கமலின் கலப்படங்கள்’ என்றொரு நூல் உள்ளது. வாசித்துப் பாருங்கள்.)

ஆனால், பட்டியல் இனப் பெண்கள் என்றால், ஆதிவாசிப் பெண்கள் என்றால் பாலியல் வன்கொடுமை, நிர்வாணம், அடிதடி இத்யாதி. உண்மையில் தலித் இயக்கங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது இதை எதிர்த்துத்தான் என்பேன். இப்படிக் காட்டுவதால் அரசியல் உரிமைகள், ஆதாயங்கள் உண்டு என்பதால் வாய்மூடி மௌனியாக தலித் இயக்கங்கள் இருந்தால், இதே டெம்பிளேட் கசக்கத் துவங்கும். அளவுக்கு மிஞ்சினால்..diminishng value.

விடுதலை சினிமாவிற்கு வருவோம்.

வெற்றிமாறன் நல்ல கதை சொல்லி. சந்தேகமே இல்லை. இந்தப் படத்தில் இயற்கைக் காட்சிகள் அபாரம். நகைச்சுவை நடிகராகவே அறியப்பட்ட சூரியின் குணச்சித்திர நடிப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஒரு நகைச்சுவை நடிகர் இம்மாதிரி நடிக்க முடியும் என்பதை அனுமானித்து, அவரை அந்த வேடத்தை ஏற்கச் சொல்லி நடிக்கவும் வைத்து, பெரும் வெற்றி கண்டுள்ள வெற்றி மாறன் பாராட்டுக்கு உரியவர்.

தமிழர் விடுதலைப் படையின் தமிழரசனின் கதை, கலியபெருமாளின் கதை என்றால் பொன்பரப்பி கிராமத்தில் தமிழரசன் என்ன செய்தார், அவருக்கு என்ன நடந்தது என்பதையும் காட்ட வேண்டும். அத்துடன் மார்க்ஸீய லெனினீய இடது சாரி இயக்கங்களிடையே நடந்த பிரச்னைகள், ஒரு குழுவிற்கு எதிராக மற்றொன்று செயல்பட்டது ஏன், ஈழப் போரை மனதில் கொண்டு இந்த இயக்கங்கள் இடதுசாரிச் சிந்தனைகளில் இருந்து விலகி, தமிழ்த் தேசிய நோக்கில் சென்று சீரழிந்த கதை என்று முழுவதையும் சொல்ல வேண்டும்.

விடுதலை பாகம் 2 வருகிறது என்கிறார்கள். அதில் எப்படிச் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

படத்தின் மற்றுமொரு மைல்கல் – இளையராஜாவின் பாடல் மற்றும் இசை. இசை தேவன் இளையராஜா. வேறென்ன சொல்ல ?

தமிழகத்துப் புராதனக் கோவில் ஒன்றைச் சிதைத்து அதன்மேல் அமைதிமார்க்க மசூதி கட்டிய நிகழ்வு – குறிப்புகள்

இன்று இந்த அட்டூழியத்துக்குக் காரணமான, இஸ்லாமிய வெறியனும் கொள்ளைக்காரனுமான மீர் ஜூம்லாவின் இறந்ததினம். (31 மார்ச் 1663, பிஹார்); ஆகவே, கொண்டாடுகிறேன்…

தமிழகத்துப் புராதனக் கோவில் ஒன்றைச் சிதைத்து அதன்மேல் அமைதிமார்க்க மசூதி கட்டிய நிகழ்வு – குறிப்புகள்

மாளாபுரம் கோவில் திருப்பணி

மாளாபுரம் கோவில் திருப்பணி – ஒரு பார்வை

சனிக்கிழமை (25-03-2023) பாபநாசம் அருகே உள்ள மாளாபுரம் என்னும் அழகிய கிராமத்திற்குச் சென்றிருந்தேன். உ.வே.சா. பிறந்த உத்தமதானபுரம் இவ்வூருக்கு அருகில் அமைந்துள்ளது.

மாளாபுரம் முன்னர் திருமால்புரம் என்று இருந்துள்ளது. பின்ன மால்புரம் என்று ஆகி, தற்போது மாளாபுரம் என்று புழங்கிவருகிறது. சின்னஞ்சிறிய அக்கிரஹாரம் அமைந்துள்ள ஊரில் அமைதி ததும்பும் சூழல். எங்கும் தென்னை மரங்கள் நிறைந்து, குளம் கூட உள்ளது. முக்கியமாகக் குளத்தில் நீர் உள்ளது. மக்கள் அவசரமில்லாத ஒரு வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர்.

அந்த ஊரில் புதுக்கோட்டை மன்னர் 600 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அக்கிரஹாரம் அமைத்தார். சிவன் கோவில் ஒன்றும், லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவில் ஒன்றுமாக நிர்மாணித்தார். அக்கிரஹாரத்தாரும், ஊர் மக்களும் கோவிலைக் கவனித்துக் கொண்டனர்.

காலப்போக்கில் எல்லா அக்கிரஹாரங்களையும் போல் மாளாபுரம் அக்கிரஹாரமும் குன்றத் துவங்கியது. பெயரளவில் இன்னும் உள்ளது என்றாலும், கோவில் பாழானது.

பெருமாள், லலிதா என்றொரு பக்தையின் கனவில் தோன்றித் தன் கோவிலைப் புதுப்பிக்க உத்தரவிட்டார். லலிதா பிற வேலைகளில் இருந்ததால் முயலவில்லை. பின்னர் மீண்டும் அதே கனவு வரவே, அவர் தன் குடும்ப ஜோதிடரைத் தொடர்புகொண்டார். அவரது வழிகாட்டுதலின் பேரில் தனியொருவராகக் கோவிலைக் கட்டத் துவங்கினார்.

ஊர்க்காரர்கள் பலர் வெளியூர்களில் இருந்தாலும், ஓரளவு உபகாரமாக இருந்துள்ளனர். இந்து சமய அற நிலையத் துறையின் உத்தரவைப் பெற்ற லலிதா, கோவில் கட்டும் பணியில் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துள்ளார்.

நான் சென்ற போது மாலை 5:30 மணி. அந்தி சாயும் நேரத்தில் அந்தக் கிராமத்தின் அமைதி என்னைப் பெரிதும் ஆட்கொண்டது. வாகன இரைச்சல்கள் இல்லாத, கிளிகள், குருவிகள் கத்தும் சூழலைக் கண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்று மாளாபுரம் உணர வைத்தது.

கோவில் கட்டுவதுடன் நிற்காமல், ஊரில் உள்ள குழந்தைகளுக்குப் பஜனையும் சொல்லிக் கொடுத்துள்ளார் லலிதா அம்மையார். இந்த மாதிரியான வேற்றுலக நிகழ்வுகளில் மூழ்கியிருந்த போது ஓய்வு பெற்ற தாசில்தார் அம்மையார் ஒருவர் வந்து அறிமுகம் ஆனார். ‘நல்ல விஷயம் பண்றா லலிதா. நீங்கள்ளாரும் உறுதுணையா இருங்க’ என்று சொன்னவர், ‘We can’t take a pie when we leave this place’ என்று சொல்லிச் சென்றது ஏதோ சித்தர் வாக்கு போல் மனதில் ரீங்காகரம் இட்டவண்ணம் இருந்தது.

லலிதா அம்மையார் பல போராட்டங்களுக்கு இடையில் கோவில் நிர்மாணம் செய்து வருகிறார். கோபுர வேலைகள் பாதியில் உள்ளன. த்வஜஸ்தம்பம் முடியும் நிலையில் உள்ளது. மடப்பள்ளி வேலைகள் துவங்கியுள்ளன. சக்கரத்தாழ்வார் சன்னிதியும், ஆண்டாள் சன்னிதியும் துவங்கவுள்ளன. கூடிய விரைவில் சம்ப்ரோக்‌ஷனம் நடத்த முயன்றுவருகிறார் லலிதா அம்மையார்.

கோவிலில் எடுத்த சில படங்களை வெளியிடுகிறேன். கோவில் தொடர்பாக மேலதிகத் தகவல்கள் வேண்டுமெனில் லலிதா அம்மையாரைத் தொடர்புகொள்ளுங்கள். (+91-99520-58324). ஆ..பக்கங்கள் ஆமருவி மூலம் தெரிந்துகொண்டேன் என்று சொல்லுங்கள். எனக்கும் கொஞ்சம் புண்ணியம் வரட்டுமே.

சில படங்கள்

இந்தக் கோவில் பற்றிய எனது முந்தைய பதிவு இங்கே.

நடமாடும் காந்தி உரையாடல் பாகம் 2

கே: என்ன சார் இது ? அப்ப, கொள்கை இல்லைங்கறீங்களா ?

ப: ஹை, நான் எப்ப அப்டி சொன்னேன்? கொள்கை இல்லைன்னு சொல்லலை, இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன். ரெண்டுக்கும் வித்யாசம் இருக்கு இல்லியா ?

  • கே: ‘கமல் சார், போன வாரம் வந்திருந்தப்ப வேற கேள்வி கேக்கவே விடாம பதிலால திணற அடிச்சுட்டீங்க. இந்த வாரமாவது எதாவது கேள்வி கேட்கலாம்னு நினைக்கறேன்…’
  • ப: ‘கேள்வி கேக்க வேண்டியவங்களையே நீங்க கேக்கறதில்ல. ஆனா, எந்தக் கேள்விக்கும், கேள்வியே இல்லாம பதில் சொல்ற என்ன மட்டும் கேள்வி கேக்கறது என்ன நியாயம்னு நான் கேள்வி கேப்பேண்னு நினைக்கமாட்டீங்கன்னு நான் பதில் சொல்வேன்னு நினைக்கறீங்களா ?’
  • கே: பிரமாதம் சார். ஒண்ணும் புரியல. நல்ல ஃபார்ம்ல இருக்கீங்க. இப்ப கேக்க ஆரம்பிக்கட்டுமா?
  • ப: அப்ப இன்னும் கேக்கவே இல்லியா ? கேள்வி கேட்க வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இந்த நாட்டுல இருக்கு. ஆனா, கேக்காம இருக்கீங்க பாருங்க.. அதுனால தான் கோட்சே இன்னிக்கி ஆட்சி நடத்தறாருன்னு நான் சொல்வேன்னு நீங்க நினைக்கலாம். 
  • கே: ரொம்ப சரியாச் சொன்னீங்க. அப்ப நீங்க கோட்சே பிறந்த நாள் அன்னிக்கி பாராட்டினீங்களே ?
  • ப: ஹா ஹா.. மாட்டிவிடற மாதிரி கேட்டா நாங்க மாட்டிக்காம பதில் சொல்லுவோம். இது பால பாடம். நான் மத்திய ஆட்சியாளரச் சொன்னேன்ன்னு விளக்கிச் சொல்லுவேன்னு நினைக்கறீங்களா ?
  • கே: ஆக, நீங்க மாநில ஆட்சியாளரச் சொல்லல.. அதானே ?
  • ப: உங்க கேள்வியிலயே அதானி வாராரு பாருங்க. அதுதான் இந்த ஆட்சியாளர்களோட லட்சணம். கேள்வி பதில் கூட அதானி இல்லாமல் கேக்க முடியல இந்தக் காந்தி பிறந்த தேசத்துலன்னு நினைக்கற போது அந்தப் பொக்கை வாய்க் கிழவனோட பரிதாப நிலைய நினைச்சுக் கண்ணிர் உகுக்கற அவல நிலல இந்த நாடு இருக்கற நிலைய எண்ணி..ம்ம் ஹூம் ம்ம்
  • கே: அழாதீங்க கமல் சார். அடுத்த பாரதப் பிரதமர் உங்க ஆதரவு பெற்ற தமிழகத் தலைவர் தானே. அவர் ஏற்கெனவே தேசிய அரசியல்ல இருக்காரு பாருங்க.. அதால அவர் பிரதமர் ஆனப்புறம் சரி பண்ணிடலாம்.
  • ப: யாரு ? அவர் தேசிய அரசியல்ல இருக்காறா? யார் சொன்னா ? எப்பலேர்ந்து ?
  • கே: அட, பிறந்த நாள் விழாவுல அவரே சொன்னாரே, கேக்கலியா நீங்க ?
  • ப: ஓ அவரே சொன்னாரா? அப்ப சரியாத்தான் இருக்கும்னு சொல்ல வேண்டிய நிலைல நான் இருக்கேங்கறத நினைக்கற போது எங்கப்பா சிவாஜி என் காதோட சொன்னது நினைவுக்கு வருது.. அவர் என்ன சொன்னாருன்னா..
  • கே: சரி சரி, வேற கேள்விக்குப் போகலாம். மாற்றம் எப்போதும் உங்க வாழ்க்கைல இருந்துக்கிட்டே இருக்குமா ?
  • ப: என்ன கேக்க வர்றீங்கன்னு புரியாதுனு நினைக்காதீங்க. எதுவும் மாறும். ஆனா மாறாதது ஒண்ணுதான். அந்த ஒண்ணைத்தான் தேடிக்கிட்டே இருக்கேன்னு நீங்க புரிஞ்சுக்கிட்டீங்ன்னு தெரியும்னாலும் நீங்க விடாம அதையே கேட்பீங்கங்கறதால மேல ஒண்ணும் சொல்லாம, அடுத்த கேள்விக்குப் போங்க..
  • கே: ரொம்ப சரி. இப்ப என்ன நேரம் ஆகுது ?
  • ப: என்னவாவது கேட்டு, நான் நேரடியா டக்குனு பதில் சொல்லிடுவேன்னு நினைக்கறீங்கன்னு புரியாம இல்லைன்னு உங்களுக்கே தெரியுங்கறது எனக்கும் தெரிஞ்சாலும், நான் இப்ப நாலு மணி ஆக மூணு மணி நேரம் இருக்குன்னு சொல்லுவேன்னு நீங்க நினைச்சீங்கன்னா அது உண்மைதான்.
  • கே: எனக்கு நேரம் சரியில்ல. நாக்குல சனி. போகட்டும். உங்க கட்சி பத்தி..
  • ப: அதான் போன வாரமே சொன்னேனே. காந்தியப் பார்க்கவிடற கட்சி நம்ம கட்சி. புரிஞ்சுதா ? நேரடியா சொல்லிட்டேன் பார்த்தீங்களான்னு கேப்பேன்னு நினைச்சீங்கன்னா அது உங்க தவறுன்னு சொல்ல மாட்டேன்.
  • கே: என்ன கண்றாவி சார் இது. உங்க பேர் என்ன ? 
  • ப: அப்பா வெச்ச பேரச் சொல்லுவேன்னு நீங்க நினைப்பீங்கன்னு தெரியுங்கறது எனக்கும் புரிஞ்சிருக்கும்னு நீங்க நினைக்கலாம். ஆனா, அப்பா வெச்ச பேரைக் காட்டிலும் ‘பேர் சொல்லும் பிள்ளை’யா வளர்ந்தவன்ங்கறதாலயும், சகலகலா வல்லவனா இருக்கேன்னு பலரும் சொன்னத மனசுல வெச்சுக்கிட்டு தசாவதார வேலைகள் செஞ்சதால, மன்மத லீலைகள் பத்தின ஆராய்ச்சி அவதானிப்புல இதுக்கு மேலயும் சொல்றதுக்கு இருக்குன்னா அதுக்கு தேவர் மகனா இருக்கணும்ங்கற கணக்கெல்லாம் இல்லைங்கறதால சிங்காரவேலனுக்கு வேண்டிக்கலாம்னு களத்தூர்ல கண்ணம்மா வாக்குல பிறந்தவங்கற முறைல..
  • கே: என்ன கேக்கறதுன்னே தெரியல கமல் சார். தலை ரொம்ப கேரா இருக்கு..
  • ப: தலைல கேர் இல்லைன்னா, ஹேர் போயிரும்.. ஹெ ஹெ இப்பிடித்தான் ஒரு முறை சீமான் கிட்ட பேசிக்கிட்டிருந்த போது..
  • கே: ஓ.. அவர்கிட்டயும் பழக்கம் இருக்கா ? 
  • ப: குழப்பம் இல்லாம இருக்கணும்னு குழப்பத்துலயே இருக்கறவங்ககிட்ட பழக்கம் வெச்சுக்கறது நம்ம வழக்கம் தானேன்னு நீங்க நினைக்கலாம்னு நான் சொன்னா நீங்க ஏத்துப்பீங்களான்னு கேட்டா, அதுக்கு ஜெயமோகன் என்ன பதில் சொல்வார்னு எதிர்பார்க்கற ஒரு சாதாரண வாசகனா நான் ஓங்கிச் சொல்றது அந்த ஒரு விஷயம் தான்.
  • கே: என்ன விஷயம் ?
  • ப: விஷமமா கேள்வி கேக்கறீங்களேன்னு நான் கேட்பேன்னு நினைச்சா நான் பொறுப்பு இல்லைன்னு நீங்க நினைக்க வாய்ப்பு உண்டுங்கறது எனக்குத் தெரியுதுங்கறத மொத்தத் தமிழ்ச் சமுதாயமும் ஏத்துக்கும்னு எனக்குத் தெரியும்ங்கறதப் பத்தி நீங்க சொல்லப் போறதில்லைன்னு எனக்குத் தோணுதுன்னு நினைக்கறேன்னு வெச்சுக்குங்களேன் பரவாயில்லை.
  • கே: வாணி, சரிகால்லாம் ஏன் விலகினாங்கன்னு இப்ப புரியுதுங்க. அத்தோட, மய்யமே ஏன் குவியத்துக்குள்ள போயிட்டுதுன்னும் இப்ப புரிஞ்சு போச்சுன்னு நினைக்கறேன்னு தோணுது… சே. வியாதி தொத்திக்கிச்சே..
  • ப: இதுக்கும் நான் பதில் சொல்லணும்னு தோணாதுன்னு எனக்குத் தோணுதுன்னு வெச்சுக்கலாம்.
  • கே: சரிங்க, அடுத்து என்ன ?
  • ப: பிக் பாஸ் தான். எலெக்‌ஷனுக்கு ஒரு வருஷம் இருக்கே. அதுவரைக்கும் கலெக்‌ஷன் வாணாமா ? எப்டி நம்ம டைமிங்.. ஹெ ஹெ.
  • கே:  அடுத்த எலெக்‌ஷன் சமயத்துல சந்திக்கலாம். கொள்கை ரீதியா பேசுவோம்.
  • ப: இல்லாதத பத்தியெல்லாம் நாம் பேசறதில்லைங்கறது உங்களுக்குத் தெரியாதான்னு நான் கேட்க மாட்டேன். 
  • கே: என்ன சார் இது ? அப்ப, கொள்கை இல்லைங்கறீங்களா ?
  • ப: ஹை, நான் எப்ப அப்டி சொன்னேன்? கொள்கை இல்லைன்னு சொல்லலை, இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன். ரெண்டுக்கும் வித்யாசம் இருக்கு இல்லியா ?
  • கே: அதானே பார்த்தேன். எங்க நேரடியா பதில் சொல்லிடுவீங்களோன்னு பயந்துட்டேன். 
  • ப: பயப்படாதீங்க. எனக்கு பயம்னாலே பயம். காலை பயம், மாலை பயம், இரவு பகல் எப்போதும் பயம் .. அடடே, இத பிக் பாஸ்ல சொன்னா எடுக்கும் போல இருக்கே..
  • கே: ஐயா சார். உங்களுக்குப் புண்ணியமா போகும். பக்கத்துல பஸ் ஸ்டாண்ட எங்க இருக்குன்னு சொல்லுங்க…
  • ப: வளையோசை கல கலன்னு சொல்லிக்கிட்டே கதவைத் திறந்து. உன்னால் முடியும் தம்பீன்னு ஓடினீங்கன்னா, ஆளவந்தான் தெருவுல திரும்பி அவ்வை..
  • கே: வேண்டாம் சார். நான் ஆட்டோ பிடிச்சே போயிடறேன். மறுபடியும் துவங்கிடாதீங்க. 
  • ப: துவக்கம்ங்கறது தமுக்கம் மைதானத்துல.. சரி சரி. ஓடாதீங்க. விழுந்துடப்போறீங்க..

நடமாடும் காந்தியுடன் ஓர் உரையாடல் – கப்ஸா டைம்ஸ் – 1

கப்ஸா டைம்ஸ் நாளிதழில் இன்னிக்கி கமல் ஸார் நம்மோட இருக்கார்.  அவர்கிட்ட நம்ம சந்தேகங்களக் கேக்கலாம். 

கே: கடைசில அங்க போய் சேர்ந்துட்டீங்களே..

ப: அங்க, இங்க, எல்லாம் ஒண்ணு தான். அங்கேருந்து பார்த்தா, இங்க அங்க மாதிரி தெரியும். சரி, இங்கேர்ந்து பார்க்கலாம்னு பார்த்தா, அங்க இங்க மாதிரி தெரியும். ஆனா, அங்க, இங்க எல்லாம் திங்க தான்னு புரியும் போது நமக்குள்ள ஏற்படற புரிதல், அதனை அவதானிப்பதால் கிடைக்கும் அற உணர்வு இதெல்லாம் அனுபவிச்சுப் பார்த்தா மட்டுமே தெரியும். கேள்வி கேக்கறது சுலபம். பதில் சொல்றது கஷ்டம். ஆனா, கஷ்டமான கேள்வி கேட்டு, சுலபமான பதில் பெறலாம்னு நினைச்சா, அதைவிடக் கஷ்டமான சுலபம் வேறொண்ணும் இருக்க முடியாதுன்னு நான் எம்.ஜி.ஆர். மடியில ஏறி விளையாடினப்ப அவர் சொன்னார். அது இன்னும் என் காதுல ஒலிச்சுக்கிட்டே இருக்கு.  

கே: நான் இன்னும் கேள்வி கேக்கவே துவங்கல்லையே..

ப: கேள்வி கேட்டவுடன் மட்டுமே பதில் தர வேண்டும் என்பது ஒற்றை இந்துத்துவ மன நிலைன்னு நண்பரும் எழுத்தாளருமான ஜெயமோகன் சொல்லியிருக்கறத நீங்க படிச்சிருக்க மாட்டீங்கன்னு நினைக்கல்ல, ஆனால் அப்பிடித்தான் நடந்திருக்கும்னு நம்ப வேண்டிய நிலைல இன்னிக்கி நம்ம நாடு இருக்குன்னு நீங்க புரிஞ்சுக்கணும். இதையே ஹென்றி டேவிட் துரோ இப்பிடிச் சொல்றார்..

கே: அது போகட்டுங்க. யாரோ என்னவோ சொல்லிட்டுப் போகட்டும். நீங்க என்ன சொல்றீங்க ?

ப: எதைப் பத்தி ?

கே: அதான், நான் கேள்வி கேக்கறதுக்குள்ளயே நீங்க பதில் சொல்ல ஆரம்பிச்சா எனக்கு கேள்வியே மறந்து போகுது. அதால..

ப: அப்ப, கேள்வி கேட்ட உடனே பதில் சொல்லணும்னு எதிர்பார்ப்பீங்க போல இருக்கே. காந்தி சொன்னதக் கேட்டு காந்தி நடக்கணும்னு சொல்றவங்க கூட்டத்தோட எனக்கு எந்த ஒட்டோ உறவோ கிடையாதுன்னு வெண்முரசு விழாவிலயே நான் சொல்லிட்டேன்னு ராஹுல் காந்தி சொன்னத நீங்க மறந்திருக்கலாம். ஆனா, நான் மறக்கற மாதிரியான சூழ்நிலைல இல்லேங்கறத எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் தன்னோட ஃபேஸ்புக் பக்கத்துல சொல்லியிருப்பார்னு தெரியாதா உங்களுக்கு ?

கே: சரி, தெரியாம கேட்டுட்டேன். முகநூல்னு சொல்லாம ஃபேஸ்புக்னு சொல்றீங்களே, இதுல குறீயீடு எதாவது..

ப: சபாஷ். எனக்கு நூல் பிடிக்காதுன்னு உலகத் தமிழர்களுக்குக் குறியீடு மூலமா சொல்றதுக்கு வாய்ப்பு குடுத்தீங்க. அதுக்கு நன்றி. நான் எந்த நூல் பத்தி சொல்றேன்னு உங்களுக்குப் புரியும்னு நினைக்கறேன். ஒருத்தர் மட்டுமே போட்டுக்கலாம்னு இருக்கற நூல் எனக்குப் பிடிக்கறதில்ல. அதால நூல் எல்லாமே பிடிக்காதுன்னு சொல்ற அளவுக்கு எனக்குப் பரிணாமப் பின்னடைவு ஏற்படாம இருக்கறதுக்கு எங்கப்பா சிவாஜிதான் காரணம்னு உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். 

கே: மன்னிச்சுக்குங்க. காந்தி பத்தி சொல்ல ஆரம்பிச்சு நூல்ல போய் முடிஞ்சுடுச்சு. காந்தி..

ப: காந்திக்கு நூலுக்கும் சம்பந்தம் இருக்கே. நானே பம்மல் கே சம்பந்தம்னு படத்துல நடிச்சிருக்கேனே. ஆனா, அதே நேரத்துல காந்தி பத்தியும் ஹே ராம் படம் எடுத்து, இந்தியாவோட முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து தான்னு சொல்ல வர்றதுக்கு முன்னாடி, பெங்காலி, மராத்தி, ஹிந்தி, தமிழ், இங்கிலீஷ்னு படம் முழுக்க பேசி சொல்ல வந்தத சொல்லாம விட்டுட்டேன்னு எனக்கு வருத்தம் உண்டுங்கறது காந்தியோட கொள்ளுப்பேரன் கோபாலகிருஷ்ண காந்திக்குத் தெரியும்னு எத்தனை பேருக்குத் தெரியும்கறதப்பத்தி நான் கவலைப்படமாட்டேன்னு நீங்க நினைக்காம இருக்கறது தான் காந்தி காட்டின வழின்னு எனக்குத் தெரியும்.

கே: கொஞ்ச நேரமா எதோ பேசறோம்னு தெரியுது. ஆனா, என்ன கேள்வி, என்ன பதில், எந்தக் கேள்விக்கு எந்த பதில், கேள்வி யார் கேக்கறாங்க, பதில் யார் சொல்றாங்கன்னு புரியறதுல ஒரு குழப்பம் இருக்கும் போல தெரியுதுன்னு தோணுது.. சே, உங்கள மாதிரியே பேசத் துவங்கிட்டேன்…

ப: ஆங். அதுதான் காந்தியோட மகிமை. காந்தி பத்திப் பேசறவங்க எல்லாருமே காந்தி தான். காந்தி கையெழுத்து புரியாதுன்னு சொல்லுவாங்க. ஆனா, காந்தி பத்தி பேசறவங்க என்ன பேசறாங்கன்ன்னு கேக்கறவங்களுக்கும் புரியாதுன்னு மட்டும் நினைக்காதீங்க, பேசறவங்களுக்கும் புரியாதுன்னு எனக்குப் புரிஞ்சதாலதான், நானுமே கூட காந்திதான்னு நினைக்க வேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலை ஏற்பட்டிருக்குன்னு நினைக்க இடம் இருக்கற மாதிரி இந்த நாட்டு ஒற்றை இந்துத்துவா வழில பயணப்பட யத்தனிக்குதுன்னு நீங்க நினைக்கலாம். 

கே: சாரிங்க. நான் அப்படியெல்லாம் புரியாம நினைக்கறதில்லை. ஆனா, அடுத்த கேள்வி என்ன கேக்கறதுன்னு தெரியல..

ப: இதுக்கு என்ன பதில் சொல்லச் சொல்றீங்க? பதிலே இல்லாத கேள்விகள் இந்த நாட்டுல இருக்குங்கற சமூகக் கோவம் எனக்கு உண்டுங்கற மாதிரி, கேள்வியே இல்லாத பதில்களும் கூட இந்தச் சமூகத்துல உலவி வருதுன்னு நினைக்கவேண்டிய காலகட்டம் வந்துட்டதேன்னுதான் பெரியார் வேதனைப்பட்டார்னு எனக்குத் தெரியும். ஆனா, அதே வேதனை காந்தியும் பட்டார்னு உங்களுக்குத் தெரியுமா ? 

கே: ஒரு டீ குடிச்சுட்டு வந்துடறேன். தலையெல்லாம் கிர்ருனு சுத்துது..

ப: குடிப்பினும் குடியாத் தகையவே குடியால் குடிக்கப்படாத குடின்னு மலையாளத்துல எழுத்தச்சன் எழுதி வெச்சிருக்காருன்னு நேத்துதேன் பினரயி விஜயன் சொன்னார். எவ்வளவு பொருத்தமா இருக்கு பாருங்க. ஆனா, அந்த டீ குடிக்கறேன்னீங்களே, அதுக்குப் பின்னால இருக்கற மனிதக் கழிவிரகத்தின் ஒட்டுமொத்த வினியோகஸ்த உரிமை யார் கிட்ட இருக்குன்னு நினைச்சுப் பார்த்துட்டு, பின்னால டீ குடிச்சுட்டு வாங்க.

கே: வேணாம் கமல் சார். டீயே வேணாம். அடுத்த கேள்வி.. ஈரோடு இடைத் தேர்தல்..

ப: என்ன கேக்கப் போறீங்கன்னு தெரியும். நீங்க ஏன் ஷாமியானால இருந்தீங்கன்னு தானே ? அதான் இல்ல. ஈரோடு எனக்கு தாத்தா வீடு இல்லியா ? எங்க பகலவன் வீட்டுத் திண்ணை இருக்க, ஷாமியானா நமக்கு எடுபடுமா ? அதுவும் நாம யாருக்காக போனோம் ? தாத்தாவோட பேரன் எனக்கு அண்ணன். அந்த அண்ணனோட தம்பியா அண்ணன் வீட்டுக்குப் போகக் கூடாதா என்ன ? அதான் போனேன். இதப் பொறுக்காத ஃபாசிஸ ஒற்றைப்படை ஆட்சியாளர்கள் இருக்கற வரைக்கும் நான் நூல் எதிரியாகவே தான் இருப்பேன்னு மீண்டும் உங்கள் வழியா அறிவிக்க வைக்காதீங்கன்னு கேட்டுக்கறேன். 

கே: நம்ம கட்சி என்ன ஆச்சு ? எங்க இருக்கு ?

ப: காந்தி எந்தக் கட்சியோ அதுவே நம்ம கட்சி. ஏன்னா, நானே காந்தி தானே ? நீங்க கூட காந்தி தான். இந்த நாட்டுல எல்லாருமே காந்தி தான். ஆனா ஒரே ஒரு கோட்சே தான். அது யாருன்னு உங்களுக்கும் தெரியும்னு எனக்குத் தெரியும். காந்திக் கட்சி நம்ம கட்சி. 

கே: ஆனா, காந்திக் கட்சி காங்கிரஸ் கட்சி இல்லையா ? மக்கள் நீதி மய்யம் என்ன ஆச்சு கமல் சார் ?

ப : உங்க கேள்வியில விஷமம் இருக்குன்னு எனக்குத் தெரியாதுன்னு நினைக்கறீங்க. நீதி மய்யம் போய் அதுக்கு சுய்யன், அதிர்ஸம், எள்ளுருண்டை எல்லாம் பண்ணி அனுப்பி வெச்சாச்சுன்னு உங்களுக்குத் தெரியாத மாதிரியே கேக்கறீங்க பாருங்க, அது தான் ஒற்றை இந்துத்துவ எதிர்ப்பு அரசியல்ல எங்களோட நிலைப்பாடுன்னு தெரியாத வரைக்கும் காந்தியார் இருந்த தேசத்துகு நல்லதில்லை. புரிஞ்சுதா ? 

கே: ஆஹா. பிரமாதமா புரிஞ்சுட்டுது. அடுத்த உங்க பயணம் எங்க ?

ப: அடுத்து, காந்தி அழைச்சிருக்கார். பாரத் சோடோ யாத்ரான்னு வெளி நாடுகள்ல இருக்கற இந்தியர்கள் மத்தியில நடை பயணம் போகலாம்னு. 

கே: அப்ப, காந்தி காந்தின்னு சொன்னதெல்லாம் ராஹுல் காந்தியத் தானா ?

ப: நான் தான் முன்னாலேயே சொன்னேனே. . நாம எல்லாருமே காந்தி தான். அந்த ஒரு கோட்சேவத் தவிர எல்லாருமே காந்தி தான். அதுனால யாரோ ஒரு காந்தி கூட்ட்பிட்ட உடனே போயிடறேன். ஒரு ரகசியம் சொல்றேன். கூப்பிட்ட உடனே இல்ல. கூப்பிட மாட்டாங்களான்னு போயிருவேன். ஈரோடுக்குப் போகல்லியா ? கூப்பிட்டா போனேன் ?

கே: அப்ப, மக்கள் நீதி மய்யம் ?

ப: இல்லாத கடவுள நம்பாறதில்லைன்னு உங்களுக்குத் தெரியும். ஆனா, மக்கள் நீதி மய்யம் இல்லைன்னு அர்த்தமில்ல. இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கறேன். 

கே: அதுக்கு என்ன அர்த்தம் ?

ப: பழமொழி சொன்னா அனுபவிக்கணும். ஆராயக் கூடாது. 

கே: என்னது ? மக்கள் நீதி மய்யம் பழசாயிருச்சா ?

ப: ஹிந்து மதம் கூடதான் பழசு. ஆனா நீங்க இன்னும் இந்து மதத்த வெச்சுக்கலியா ? அதுபோலதான், மய்யம் பழசானாலும் புதுசானாலும் அது எப்பவும் இருக்கும். இதயத்துல அதுக்கு எடம் உண்டு.

கே: இதயத்துல எடமா ? யாரோட இதயத்துல ? 

ப: காந்தியோட இதயத்துல. ஏன்னா நீங்க, நான் எல்லாருமே காந்தி தானே ? 

கே: எத்தனை நாளா இப்பிடி ஆகியிருச்சு ? ஏன் இப்பிடி ஒரு மாதிரி பேசறீங்க ?

ப: ஒரு நிமிஷம். கெஜ்ரிவால் அழைக்கறார். சொல்லுங்க ஜி. வந்துடறேன். காந்தி குல்லா இருந்தா போதும். அதப் போட்டுக்கிட்டு எதப் பேசினாலும் எடுபடும். நம்ம ஹிந்து ராம் கூட வருவாரு. அவரு குல்லா போட்டுக்க மாட்டார். வாசகர்களுக்கு மட்டும் தான் போடுவார். நாங்க ரெண்டு பேரும் வந்து உங்க கட்சி கூட்டத்த நடத்திக் கொடுக்கறோம். பாவம் சிசோடியா வேற உள்ள இருக்காரு. உங்ககிட்ட கட்சி இருக்கு. எங்க கட்சில நான் மட்டும் இருக்கேன். பொருத்தம் நல்லா வருது. எதுக்கும் வைகோவையும் கேட்டுப் பார்க்கறேன்.. 

கே: கெஜ்ரிவால் பேசினாரா ? என்ன விஷயம் ?

ப: அவர் கட்சில எல்லாரும் உள்ள போயிட்டாங்களாம். எங்க கட்சில எல்லாரும் வெளில போயிட்டாங்க. வாங்களேன், காத்தாட நடந்துட்டு வரலாம்னு சொன்னாரு. அதான் போயிட்டு வரலாம்னு பார்க்கறேன்.

கே: அப்ப பாரத் சோடோ யாத்ரா ?

ப: காந்தி கூப்பிட்டா நான் போயிருவேன். இப்ப கெஜ்ரிவால் எனக்கு காந்தி. யார் மூலமா எனக்கு காந்தி வருதோ, அவங்கள்ளாம் எனக்குக் காந்தி தான். இப்ப நீங்க எனக்கு அம்பது காந்தி கொடுத்தீங்கன்னா, நீங்களும் எனக்கு காந்தி தான். ஹா ஹா..  

கே: ரொம்ப தேங்க்ஸ்ங்க. நேரம் ஆயிட்டுது. கடைசியா ஒரே ஒரு கேள்வி. உங்க தேர்தல் செலவுக் கணக்கு என்ன ஆச்சுது ? 2021 தேர்தல் முடிஞ்ச உடனே முதல்வரப் பார்த்தீங்களே, கணக்கு வழக்கு எல்லாம் சரியா சொன்னீங்களா ?

ப: கணக்கா ? அதுவும் காந்தி தான். காந்தி பத்தின கணக்கு தானே ? அதான் காந்தின்னு சொன்னேன். காந்தி கணக்கு. புரிஞ்சுதா?   

கே: ரொம்ப சாரி சார். தலை சுத்துது. பக்கத்துல எதாவது நல்ல ஆஸ்பத்திரி இருக்கா ?

ப: கீழ்ப்பாக்கத்துக்குப் போகணும்னா கொஞ்ச தூரம் போகணும். முடியல்லேன்னா பக்கத்துல இங்க எங்கியோதான் மய்யம் கட்சி ஆஃபீஸ் இருக்கு. ஒரு தரம் போய்ப் பாருங்களேன். நானே போய் ரொம்ப நாளாச்சு. அங்க யாராச்சு இருந்தா வந்து பார்க்கச் சொல்லுங்க.

அடுத்த முறை, இன்னொரு பிரபலத்துடன் நமது கப்ஸா டைம்ஸ் நாழிதழ் நேரகாணலில் சந்திப்போம்.

—ஆமருவி

%d bloggers like this: