The side that is not spoken about, generally.

22-March-2013

 இலங்கையில் நடந்தது இனப் படுகொலை தான் என்று இந்தியா கூறிவிட்டது.அமெரிக்காவும் கூறிவிட்டது. இதனால் ராஜ பக்ஷே மனம் உடைந்து போய் தமிழ் ஈழம் அமைக்க உத்தரவிட்டு விட்டார். ஸ்டாலின் துவக்கி வைக்க, வைகோ வாழ்த்துப்பாட, கனிமொழி குத்து விளக்கேற்ற, திருமா மேளம் கொட்ட தமிழ் ஈழம் இனிதே துவங்கியது.பாலாறும் தேனாறும் ஓடத் துவங்கின. 

தமிழ் நாட்டில் எப்போதும் போல் மக்கள் குத்து விளக்கு ஒளியில் குத்துப்பாட்டு கேட்டபடி மனம் மகிழ்ந்து ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே இனிதான ஈழம் அடைந்து விட்டோம் என்று சங்கே முழங்கு.

Leave a comment