சாப்பிட மட்டுமே வாய் திறப்பார் பிரதமர் என்று இறுமாந்திருந்த எதிர்க்கட்சியினரே, சற்று பொறுங்கள். இன்று பார்த்தீர்களா எம் பிரதமர் வாய் திறந்து பேசியதை? 2G விசாரணைக் குழு முன்பு வர மாட்டேன் என்று எவ்வளவு ஆணித்தரமாகக் கூறியுள்ளார் பார்த்தீர்களா? வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஆ.ராசா விசாரணைக் குழு முன்பு அழையுங்கள் என்று கெஞ்சுகிறார். அவர்கள் அழைப்பதில்லை. பிரதமர் போக மாட்டேன் என்று கூறுகிறார்.
ஆனால் பிரதமர் நல்லவர், கை சுத்தமானவர், நேர்மையானவர் என்று எல்லாரும் இன்னமும் நம்ப வேண்டும்.
“நந்தவனத்தில் ஓர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி
நந்தவனத்தில் ஓர் ஆண்டி ”
என்று மகாத்மா காந்தியும் பாரதியாரும் மேல் உலகத்தில் பாடிக்கொண்டிருப்பதாகக் கேள்வி.
Leave a comment