The side that is not spoken about, generally.

naan raamaanusanஇறையருளும் குருவருளும் ஒருங்கே இணைந்ததால் ‘நான் இராமானுசன்’ நூல் வெளியீடு இன்று இனிதே நடந்தேறியது. ஸ்ரீபெரும்பூதூர் ஜீயர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல ஆன்றோர்கள் பேசினர். பெரியவர் ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீ, ஸ்தாணுமாலயன், சதுர்வேதி சுவாமி, திரு.கலாநிதி முதலானோர் பேசிய சிலர்.

கலாநிதி அவர்கள் வெளியிட, திரு தடா.பெரியசாமி நூலைப் பெற்றுக்கொண்டார். பெரியசாமி அவர்கள் தலித் மாணவர்கள் நலனுக்காக ஆற்றி வரும் சேவைகள் பற்றி எழுத ஒரு தனி பதிவு வேண்டும்.

வெயிலையும் பொருட்படுத்தாமல் வந்திருந்த வாசக சொந்தங்களுக்கு என் வந்தனங்கள். முக நூல் வழியாக மட்டுமே தொடர்பில் உள்ள பல நண்பர்களை நேரில் சந்திக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

சிங்கங்கள் கர்ஜித்த அந்த விழாவில் இந்த எலியும் பேசியது. அதன் காணொளி இங்கே.

One response

  1. exerji Avatar

    அருமை!

    Like

Leave a comment