The side that is not spoken about, generally.

இராமனுக்கும் அனுமனுக்கும் ஒரே அளவுகோல்.

இராமன் ஏகபத்தினி விரதன். எனவே இரு மாதர் நினைவு கூடாது. அனுமன் நைஷ்டிக பிரம்மச்சாரி. எனவே பெண் நினைவே கூடாது. தலைவனுக்கும் தொண்டனுக்கும் உள்ள ஒற்றுமையைப் பாருங்கள்.

கம்பராமாயணத்தில் –

‘நினைவாலும் மாதர் நலம் பேணாது வளர்ந்தீர்.. ‘ என்று அனுமனைப் பற்றி ஜாம்பவான் சொல்கிறார்.

‘இந்த, இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும்தொடேன் ‘ என்று இராமன் சொன்னதை சீதை நினைவுபடுத்துகிறாள். அதுவும் அனுமனிடம்.

கருத்தெல்லாம் சொல்ல வரவில்லை. தினமும் காலையில் கம்பராமாயணத்தில் ஜாம்பவான் செய்த அனுமன் துதி சொல்வது வழக்கம். அப்படிச் சொல்லும்போது திடீரென்று இந்த ஒற்றுமை மனதில் தோனறியது. எழுதினேன். அவ்வளவுதான்.

விருப்பம் இருப்பவர்கள் ‘மேலை விரிஞ்சன் வீயினும்வீயா மிகை நாளிர்;’ என்று துவங்கும் கிஷ்கிந்தா காண்ட கம்பராமாயணப் பாடலைப் படித்துப்பாருங்கள். தமிழ் சும்மா துள்ளி விளையாடும். உங்களுக்கு #மகிழ்ச்சி ஏற்படும்.

பி.கு: என் பெரியப்பா அமரர்.முனைவர் இராமபத்திராச்சாரியார் தனது இராமாயண உபன்யாசங்களில் இந்தப் பாடலை அச்சடித்து விநியோகிப்பார். பிள்ளைகளுக்கு இப்பாடல் ஒப்புவித்தல் போட்டி நடத்துவார். அப்படித்தான் நான் கற்றுக்கொண்டேன்.

#கம்பன்டா #மகிழ்ச்சி

Leave a comment