The side that is not spoken about, generally.

அரசியல் பதிவிற்கு மன்னிக்கவும். கோவை வன்முறை குமட்டுகிறது.

சேலம் ஆடிட்டர் ரமேஷ் துவங்கி இந்த வார சசிகுமார் வரையிலான பலிதானங்கள் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. அவற்றை துப்பு துலக்க முதுகெலும்பில்லாத துறைகள் உண்டென்பது உண்மை தான். அத்துறைகளை முடுக்கி விட அடிப்படை மானுட அறம் இல்லாத மாநில அரசும் இருக்கிறதென்பதும் உண்மைதான். அவை தமிழகத்தின் நிதர்சனங்கள். 40 ஆண்டுகால அதார்மீக அரசுகளின் செயல்பாட்டின் விளைவு இது.

‘ஆம்பூர் வன்முறையில் ஊடகங்கள் என்ன செய்தன?’ என்று கேட்பது நியாயமானதே. ஊடகங்கள் விலைபோய் 40 வருடங்கள் ஆகிவிட்டன என்பது தெரியாதா? காஷ்மீரத்தில் நடந்த தாக்குதல் பற்றி தமிழக ஊடகங்களின் செயல்பாட்டை நாம் அறியவில்லையா? தேச துரோகச் செயலாளர்களின் கைப்பாவையாகவும், அறிவை மயக்கும் சினிமா மோகினியின் அடிமையாகவும் அவை மாறியது நாம் அறியாததா?

ஆனால் அதற்காக வன்முறையில் ஈடுபடுவதும், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிப்பதும் நமது பாரத பண்பாடல்ல. கம்யூனிச, திராவிட போலி பகுத்தறிவுவாத இயக்கங்களின் செயல்பாட்டை ஒற்றியே நடப்பதென்றால் ‘வசுதா ஏவம் குடும்பகம்’ என்பதெல்லாம் என்ன? வங்காளத்தில் கம்யூனிஸ்டுகள் இத்தனை ஆண்டுகள் செய்ததற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? விநாயகர் சிலைக்கு அவமரியாதை செய்தவர்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

‘கேரளத்தில் இயக்க ஆட்கள் மீதான வன்முறையைத் தற்போதைய கம்யூனிச அரசு நடத்தவில்லையா?’ என்று கேட்பதும் நியாயமானதே. ஆனால் கம்யூனிஸ்டுகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? உலகெங்கிலும் அவர்களது சரித்திரம் வன்முறை தவிர்த்த வேறென்ன? ஜனநாயக முறையில் அவர்களைப் பதவியிறக்கம் செய்வதே இப்போது செய்ய வேண்டியது. ‘அவர்களைப் போல் இருப்பேன்’ என்பதில் என்ன பொருள் இருக்கிறது?

‘வன்முறையாளர்கள் எங்கள் இயக்கங்களைச் சார்ந்தவர்கள் அல்லர்’ என்று கைவிரித்து தப்பிக்கலாம். ஆனால் அங்கு பாரத மாதா கோஷங்கள் எழுப்பப்பட்டனவே. அதுவும் வெளியாட்கள் வேலை என்றால் இந்த ஊர்வலத்தை நடத்திய இயக்கங்கள் அதற்குப் பொறுப்பேற்று வன்முறையாளர்களை அடையாளம் காட்ட வேண்டும். ஒருவேளை அவர்கள் இயக்கங்களின் உறுப்பினர்கள் என்றால் அவர்களை விலக்கி வைத்து, காவல் துறை நடவடிக்கை எடுக்க ஏது செய்ய வேண்டும்.

பா.ஜ.க.வின் தேசிய தலைமை செயல்பட்டு, மாநில அரசின் சட்ட ஒழுங்கு நிலை பற்றி வெள்ளை அறிக்கை கோர வேண்டும். மாநிலத் தலைவர்கள் இனியாவது செயல்பட வேண்டும்.

இது எதுவும் நடக்கவில்லை என்றால் கட்சியைக் கலைத்துவிட்டு பசுமாடு வளர்க்கலாம். புண்ணியமாவது கிடைக்கும்.

‘வந்தே மாதரம் என்போம். எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.’ – பாரதி.

2 responses

  1. nparamasivam1951 Avatar
    nparamasivam1951

    உங்கள் அரசியல் பதிவு நன்றாக, ஆணித்தரமாக உள்ளது. இடை இடையே இது போல் அரசியல் பதிவுகள் தேவையே.

    Like

  2. ஆர்யத்தமிழன் Avatar
    ஆர்யத்தமிழன்

    உங்களை நினைத்து வருந்துகிறேன்

    Like

Leave a comment