வாஞ்சிநாதன் பற்றிய கீழ்த்தரமான கட்டுரை வெளியிட்டதற்கு தி ஹிந்து வருத்தம் தெரிவித்துள்ளது (அ) தெரிவிப்பது போல் எழுதியுள்ளது.
கட்டுரையை வாசித்தேன். தகவல் பிழைகள் இருப்பதை மூன்றாம் வகுப்புப் பிள்ளை கூட கண்டுகொள்ளும் அளவில் உள்ளது கட்டுரை. எழுத்தில் கிஞ்சித்தும் தரம் என்பது இல்லை. முரசொலியைப் படிக்கிறோமா என்று எண்ணத் தோன்றியது. தி ஹிந்துவில் தரம் இறங்கியுள்ளது பற்றிப் பலமுறை எழுதி இருந்தாலும், இம்மாதிரி அடிப்படைத் தகவல்களைக் கூட சரி பார்க்காமல் எழுதியிருப்பது, அதிர்ச்சியே. முன்னொரு முறை நாலாந்தர நக்கீரனில் ‘ஜெயலலிதா பசு மாமிசம் சாப்பிட்டார்’ என்பதாக வந்த கட்டுரையை ஆங்கில தி ஹிந்து மொழிபெயர்த்து வெளியிட்டது. அந்தப் பாரம்பரியம் தொடர்கிறது போல் தெரிகிறது. தமிழ் ஹிந்து ‘தி நக்கீரன்’ என்று பெயர் மாற்றிக்கொள்ளலாம்.
ஆங்கில தி ஹிந்து சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது போல் படுகிறது. எடிடோரியல், ஓப்பன் பேஜ், பேட்டி முதலியவற்றை விலக்கி வைத்துப் பார்த்தால், முன்னேற்றம் தெரிகிறது. புதிய எழுத்தாளர்கள் தென்படுகிறார்கள்.ஆனால் ஆங்கிலத்தின் தரம் குறைந்துள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. புதிய எழுத்தாளர்கள் , செய்தியாளர்கள் தங்கள் கட்டுரைகளில் ‘ஆராய்ச்சி’ என்பதே இல்லாமல் பார்த்துக் கொள்வது ‘சிறப்பாக’ உள்ளது. வெறும் தகவல்களைச் சொல்வதற்கு மேல் இவர்கள் வேறொன்றையும் செய்வதில்லை. மாத்ருபூதம் என்பார் எழுதும் நகைச்சுவைப் பகுதி அவ்வப்போது கிச்சு கிச்சு மூட்டுகிறது. மற்றபடி பரத்வாஜ் ரங்கன் எழுதும் சினிமா விமர்சனம், வாராந்திர நூல் விமர்சனங்கள் மற்ற நாளிதழ்களை விட நன்றாக உள்ளன. நூல்கள் பெரும்பாலும் தேச துரோக இடது சாரி நூல்கள் என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இதையெல்லாம் யாராவது ஹிந்துவில் பணிபுரிபவர்கள் மேலிடத்திற்கு எடுத்துச் சொல்லலாம். ஆனால் இடதுசாரிகளின் காதுகள் மார்க்ஸ்-ஈயத்தால் அடைக்கப்பட்டவை என்பதால் பலன் இருக்குமா என்று தெரியவில்லை. சங்கை ஊதிப் பார்க்கலாம். அவ்வளவுதான்.
ஹிந்துவில் ‘பிசினஸ் லைன்’ நல்ல கட்டுரைகளைத் தாங்கி வருகிறது. மீடியாக்ரிட்டி இன்னமும் அண்டவில்லை.
முக்கியமாக ஹிந்துவின் ஐ-பேட் செயலி சிறப்பாக உள்ளது. எடிட்டோரியல், ஓப்பன் பேஜ், பேட்டிகள் முதலியவை நம் கண்ணில் படாமல் இருக்க செயலியில் வழி உள்ளதா என்று தெரியவில்லை. தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், துக்ளக், வலம் முதலியவை ஹிந்துவின் ஐபேட் செயலி போல் செய்துகொள்வது நல்லது.
ஒரு காலத்தில் ‘ஹிந்து’வில் பணியாற்றவேண்டும் என்று விரும்பியிருந்தேன். இன்னமும் விரும்புகிறேன். ஆனால் கொள்கை ரீதியில் முடியமா என்று தெரியவில்லை.
Needless to reiterate, The Hindu is always pusillanimously submissive to keep Kazhagms and Leftist Comrades in good humor to safeguard its own commercial interests. Recently Mr N Ram paid excessive encomiums on Murasoli which is known for its canard spreading and venom spitting articles. Even during emergency, save Indian Express, Dinamani and Thuglak , all other journals had been keeping their nine orifices shut out of fear and apprehensions of losing advertisement business from the then Indira Government. The fourth estate should be foremost in voicing the opinions of level-headed intellectuals sans bias or prejudice. But unfortunately it is not so in Indian Print or TV Media.
They are either dilly dallying or shilly shallying in expressing their views on matters of national interest.
LikeLike
Eversince Mr. Ram took over the Hindu Group, the standard of the paper started deteriorated as he is more left oriented and anything positive news about BJP emanated, the paper publish the news in a corner of the last page. As the paper publishes some useful news and articles, readers are still hooked to the Hindu. Santhanam
LikeLike
Very true
LikeLike
I stopped reading The Hindu four years back. I have no intention to touch it again. So are my friends too. In such a scenario, I wonder as to how a writer of your caliber want to work in The Hindu. Unimaginable
LikeLike