கம்பராமாயணத்தில் பட்டாபிஷேகம் யாருக்கு நடந்தது ?
‘அரியணை அனுமன் தாங்க
அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க
இருவரும் கவரி பற்ற
விரை செறி குழலி ஓங்க
வெண்ணை ஊர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி
வசிட்டனே புனைந்தான் மௌலி’
கவரி விசுவதைக் கூட விடாமல் சொல்லும் கம்பன், பட்டாபிஷேக நாயகன் இராமனை இப்பாடலில் குறிப்பிடவில்லை. பட்டாபிஷேகம் யாருக்கு என்று கூட குறிப்பிடவில்லை. ஏனெனில் பட்டாபிஷேகம் இராமனுக்கானது அல்ல. அது அறத்திற்கானது. அதனால் தான் இராமனைப் பற்றிக் குறிப்பிடாமல், அரியணையை, தருமத்தின் தனிமை தீர்த்தவனான அனுமன் தாங்குகிறான்.
ஆக, கம்பராமாயணத்தில் இறுதியில் நடக்கும் பட்டாபிஷேகம் அறத்திற்கான பட்டாபிஷேகம்.
பேரா.சொ.சொ.மீ. அவர்களின் சொற்பொழிவில் இந்த வாரம் கேட்டது.
வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
அருமை தேரழந்தூராரே .தீபாவளி வாழ்த்துகள்!
LikeLike
நன்றி ஐயா
LikeLike
Glald to say that I was student of Shri S.S.M. Sundaram.
LikeLike
You are fortunate sir
LikeLike
Good interpretation
LikeLike