காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ஸ்ரீமத் இராமானுஜர், ஆதிசங்கர பகவத்பாதர், பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் படங்களைச் சேதப்படுத்திய பெரியாரிய, நாஸிச முழு மூடர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சமூக நீதி என்று பெரியாரிஸ்ட்டுகள் முழங்குவதற்கு 1000 ஆண்டுகட்கு முன்னரே அதைச் செயல் படுத்தியவர் ஸ்ரீமத் இராமானுஜர்.
செக்யுலர் காஞ்சி ரயில் நிலையத்தில் அவ்வூர் தொடர்புள்ள சனாதன தர்மப் பெரியவர்களின் படங்கள் இருக்க கூடாது என்றால், வேளாங்கண்ணி ரயில் நிலையம் தேவாலயம் போன்ற அமைப்பில் உள்ளது செக்யுலரிஸத்தில் எந்த அதிகாரத்தில் உள்ளது?
தஞ்சை ரயில் நிலையத்தில் உள்ள பெரிய கோவில் ஓவியங்களை என்ன செய்வது? நமது வரலாற்றை விட்டுக்கொடுத்து, ஆண்மை நீங்கிய செக்யூலரிஸப் போர்வையால் நாம் இழக்கப்போவது இன்னும் எத்தனை?
சரி. செக்யுலர் ரயில் நிலையத்தில் ஹிந்து தர்மம் வேண்டாம். ஆனால், ஹிந்து தர்மக் கோவில்களில் செக்யுலர் அரசுக்கு என்ன வேலை? இதில் எங்குள்ளது பகுத்தறிவு ?
போகட்டும். பூலோக வைகுண்டமான திருவரங்கக் கோவில் முன் ஈ.வெ.ரா. சிலை இருப்பது என்ன ‘இஸம்’? நாஸிசம் தவிர வேறென்ன?
தார் பூசும் கலாச்சாரத்தைத் துவங்கியது தி.க. மற்றும் தி,மு.க. ஹிந்தி எழுத்துக்களின் மீது தார் பூசினார்கள், ஹிந்தி வளர்ந்தது. தற்போது சனாதனப் பெரியோர்களின் படங்களின் மீது தார் பூசியுள்ளார்கள். சனாதன தர்மம் தழைக்கும்.
நமது நாட்டில் மிச்சமிருப்பது நமது கலாச்சாரமும் வரலாறுமே. வேளாங்கண்ணி மாதாவை நினைவுபடுத்த அவ்வூர் ரயில் நிலையம் தேவாலய வடிவில் இருப்பது சரியே. அது போல் ஒவ்வொரு ஊரின் வரலாற்றையும் நினைவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு ரயில் நிலையமும் அமைக்கப்பட வேண்டும்.
இன்னும் ஒருபடி மேலே போய், ஒவ்வொரு ஆழ்வாரின் / நாயன்மாரின் பிறந்த ஊரிலும் அவர்களது உருவத்துடன் கூடிய பெயர்ப்பலகை வைக்க ரயில்வே அமைச்சு முன் வர வேண்டும். இவர்கள் இல்லாவிட்டால் இன்று நாம் எழுதும் தமிழ் இல்லை.
பல இன, மொழி, மத மக்கள் வாழும் பரந்த நமது பாரத தேசத்தில், இம்மாதிரியாகச் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் நிகழ்வுகளை மாநில / மத்திய அரசுகள் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
நல்லது நடக்கும் என்று நம்புவோம்.