The side that is not spoken about, generally.

‘கற்றுக் கறவைக் கணங்கள்’ என்னும் பாசுரத்தில் ‘புற்று அரவு அல் குல் புனமயிலே’ என்னும் பிரயோகமும், ‘முகில் வண்ணன்’ என்னும் சொல்லும் உற்று நோக்கத்தக்கன.

பாவை நோன்பை மேற்கொள்ளும் பெண்ணை மயிலுடன் ஒப்பிடுகிறாள் ஆண்டாள். அரவம் ( பாம்பு ), மயில் என எதிரிகள் இரண்டையும் ஒன்றாக, ஒரே பெண்ணிடம் கூறியிருப்பது ஒரு சுவை.

மயிலுடன் ஒப்பிட்டதுடன் நிற்கவில்லை. மயிலுக்குப் பிடித்த மழை மேகங்களின் நிறத்தில் உள்ளவன் கண்ணன் என்பதை உணர்த்தும் பொருட்டு, ‘முகில் வண்ணன்’ என்கிறாள் ஆண்டாள்.

கருமுகிலைக் கண்டதும் மயில் மகிழ்ச்சியுடன் எழுந்து ஆட வேண்டியதாகையால், மயிலைப் போன்ற அப்பெண் முகில் வண்ணக் கண்ணனின் அனுபவம் பெற உடனே உறக்கம் நீங்கி எழுந்திருக்க வேண்டும் என்பது சொல்லாமல் உணர்த்தப்படுகிறது .

#ஆண்டாள் #திருப்பாவை

Leave a comment