The side that is not spoken about, generally.

சிங்கப்பூர் சங்கப்பலகை வாசகர் வட்டத்தின் 12வது அமர்விற்கு அழைக்கிறேன். செப்டம்பர் 29, மாலை 4:30-7:30, விக்டோரியா தெரு தேசிய நூலகத்தில் நடக்கிறது.

‘தமிழிலக்கியங்கள் காட்டும் இந்திய அறிதல் முறைகள்’ என்னும் தலைப்பில் எழுத்தாளர், சிந்தனையாளர் திரு.அரவிந்தன் நீலகண்டன் சிறப்புரை ஆற்றுகிறார். இவர் ‘உடையும் இந்தியா’, ‘இந்திய அறிதல் முறைகள்’, ‘ஆழி பெரிது’ முதலிய பல ஆராய்ச்சிக் களஞ்சியங்களைப் படைத்திருக்கிறார். ஸ்வராஜ்யா என்னும் நாளேட்டில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

பின்னர் சிலை மீட்பாளரும், இந்தியத் தொல்லியல் வல்லுனருமான திரு. விஜயகுமார் அவர்கள் எழுதிய ‘The Idol Thief’ என்னும் நூல் வெளியாகிறது. உண்மை நிகழ்வுகளைக் கொண்டுள்ள இந்த நூல், விஜயகுமார் நமது சிலைகளை மீட்டுக் கொடுக்க எடுத்துக்கொண்டுள்ள முயற்சிகளையும், சிலைக் கடத்தல் தொடர்பாக, இவரது முயற்சியால் கைதாகியுள்ள உலகச் சிலைக் கடத்தல் புள்ளிகள் பற்றியும் விவரிக்கிறது. உலக அளவில் பெரும் வெற்றி பெற்ற இந்த நூல், தற்போது சிங்கையில் வெளியாவது சங்கப்பலகைக்குப் பெருமையே.

பின்னர் நூல் ஆய்வுகள், பேச்சாளர்களுடன் கலந்துரையாடல் என்று அறிவுப் பிரவாக நிகழ்வுகள் பல நடைபெற உள்ளன.

நாள்: செப் 29, சனிக்கிழமை, மாலை 4:30 – 7:30

இடம்: தேசிய நூலகம், விக்டோரியா தெரு.

தவறாது வந்து தமிழ்ச்சுவை பருக அழைக்கிறேன்.

 

 

Leave a comment