முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களே,
‘எப்படியாவது கொங்கு மக்களை அவமானப்படுத்த வேண்டும். மத மாற்றத்திற்குக் கடைசித் தடையாக உள்ளவர்கள் கொங்கு பிரதேச மக்கள். என்ன கொடுத்தாலும் மாற மறுக்கிறார்கள். இன்னும் கண்ணன் கூட்டம், சிவன் கூட்டம் என்று வாரம் தவறாமல் ஏதாவது விழாவைக் கொண்டாடிக்கொண்டே இருக்கிறார்கள்,’ என்கிற எண்ணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
சிவராத்ரி அன்று திருச்செங்கோடு சென்று அர்த்த நாரீஸ்வரருக்குக் கட்டளைகளை நடத்திவிட்டு வந்துள்ளார் உடன் பணியாற்றும் கொங்கு நாட்டு நண்பர். அந்த அளவுக்கு ஆன்மீகப் பற்றுக் கொண்டவர்கள் அம்மக்கள்.
ஶ்ரீவைஷ்ணவத்துடனும் நெருங்கிய உறவு கொண்டவர்கள் அம்மக்கள். கொங்குப் பிராட்டி, கொங்கிலாச்சான் என்று சுமார் 1000 ஆண்டுகள் இராமானுஜ சம்பிரதாயத் தொடர்புடையவர்கள் அவர்கள்.
இந்த மக்கள் சம்பிரதாயப் பற்றுடன் இருக்கும் வரை மதமாற்றம் நிகழ வாய்ப்பில்லை. எனவே இவர்களின் சம்பிரதாயப் பற்றையும், அவர்கள் கொண்டுள்ள ஆன்மீக, மத நம்பிக்கைகளையும் இழிவு படுத்த வேண்டும், அவர்களை அவர்களின் சம்பிரதாயத்தின் மீது கொண்ட நம்பிக்கையை, மரியாதையைக் குலைக்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டுக் கூட்டுச் சதியாகப் பெருமாள் முருகன் போன்ற எழுத்துலகச் சதிகாரர்களை ஊக்குவித்து, கொங்கு வட்டார மக்களை இழிவுபடுத்திப் பார்த்தன இடதுசாரி ஊடகங்கள், மற்றும் இடதுசாரி, மதமாற்றச் சக்திகளிடம் உணவு வாங்கி உண்ணும் அரசியல் வியாதிகள்.
இந்தப் பிராந்திய மக்கள் பெரும்பாலும் அதிமுக சார்பாக இருப்பதால் அவர்களை மேலும் இழிவு படுத்த வேண்டும், அத்துடன் தேசியச் சிந்தனை உள்ள பாஜகவுடன் சேர்ந்திருப்பதால் மேலும் அவமானப் படுத்த வேண்டும் என்பதற்காகவும் மேற்சொன்ன சக்திகள் ஊடகப் பண்ணையார்களிடம் பணம் பெற்று அவதூறுப் பிரச்சாரம் செய்கின்றன.
பொள்ளாச்சி விவகாரம் கண்டிக்கத்தக்கது. அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கைதுகள் நடந்துள்ளன. சி.பி.ஐ. என்றும் சொல்கிறார்கள். இந்த நேரத்தில் எதற்காகப் போராட்டம்? யாரை எதிர்த்துப் போராட்டம்?
இதே வியாபரிகள் சில நாட்களுக்கு முன் பொது இடத்தில் ஆணும் பெண்ணும் அந்தரங்கச் செயல்களில் ஈடுபடுவது அவர்களது உரிமை என்றனர். திடீரென்று எங்கிருது வந்தது மானம்? விருப்பத்துடன் திருமணம் இன்றி ‘லிவ் இன் ரிலேஷன்’ கொள்ளலாம் என்று ‘முற்போக்கு’ நீதி மன்றம் கூறியவுடன் வரவேற்று அறிக்கை விட்ட கயவர்கள் இன்று மய்யம் என்ற பெயரில் போராட்டம் என்று ஜல்லியடிக்கிறார்கள். யாரை ஏமாற்றுகிறது இந்தக் கூட்டம்?
ஆனால் ஒன்று. ஈரோட்டுப் பாதை என்று சொல்லிச் சொல்லியே வளர்ந்தவர்கள் இவர்கள். ‘காப்பிக்கடையில் விருப்பப்பட்டதை வாங்கி உண்பது போல பெண்கள் தங்கள் துணையைத் தேடிக்கொள்ளலாம்’ என்று முழங்கிய கயவர் தலைவரைத் தமிழர் தலைவர் என்று கொள்பவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
பொள்ளாச்சி நிகழ்வு அராஜகம் தான். கூப்பாடு, கதறல் தேவை தான். ஆனால், இதே கூப்பாடும், கதறலும் எல்லா நேரங்களிலும் வேண்டாமா? எங்கே போயினர் இவர்கள் அனைவரும்?
ராஜீவ் காந்தியையும் 17 அப்பாவித் தமிழர்களையும் கொன்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வெட்கமின்றிச் சொல்லும் நயவஞ்சகர்கள், கடத்தல்காரன் வீரப்பனைப் போராளி என்று சொல்லும் பச்சோந்திகள், நுங்கம்பாக்கம் கொலையை நியாயப்படுத்திய நரிகள், காஞ்சி ஸ்வாமிகள் விஷயத்தில் மிஷனரிகளிடம் பணம் பெற்று நடித்த ஊடக வியாபாரிகள், தேசத் துரோகிகளுக்கு வக்காலத்து வாங்கும் விதமாகப் பாக்கிஸ்தானின் மீதான தாக்குதலை இழிவுபடுத்தும் படுபாவிகள், தம்பரம் ‘கருணை இல்லம்’ என்ற பெயரில் நடந்த அக்கிரமத்தைக் கண்டுகொள்ளாத நடு நிலையற்ற நடுவர்கள்- இவர்கள் அனைவரும் சேர்ந்து சம்பிரதாயம் காக்கும் கொங்கு மக்களை இழிவுபடுத்துகிறார்கள்.
கே.என்.சிவராமன் என்னும் ஊடகவியலாளர் கோயம்புத்தூர் ஈஷா சிவராத்ரி நிகழ்வையும் பொள்ளாச்சி நிகழ்வையும் தொடர்பு படுத்துகிறார். இது என்ன மாதிரியான மன நிலை? கடும் வெறுப்பு, சுடர் விடாத அறிவால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை, பிரகாசிக்காத எழுத்துக்கள், உள்ளத்தில் பதிந்து கிடக்கும் தமிழ்ச் சூழ்நிலை கொடுத்த வெறுப்புப் பாலால் விளைந்த விஷத் தன்மை கொண்ட உள்ளம் என்பதைத் தவிர வேறு எப்படிப் பார்ப்பது?
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் தமிழகமாக இருந்த பிரதேசம், தீராவிடக் கூச்சல் காரணமாக ஏற்பட்டுள்ள பாலை நில மிகுதியால் ஆப்கானிஸ்தானை விடக் கீழே சென்றுகொண்டிருக்கிறது என்பது நிதர்ஸனம்.
முதல்வர் Edappadi K Palaniswami அவர்களே,ஜெயலலிதாஇருந்திருந்தால் பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட கயவர்களைஎன்ன செய்திருப்பார் என்று எண்ணிப் பாருங்கள்.அவர்களுடன் சேர்த்து அவர்களுக்கு உதவியவர்களைஎன்ன செய்திருப்பார் என்றும் எண்ணிப் பாருங்கள்.இவற்றுக்குக்கெல்லாம் ஒத்து ஊதிக்கொண்டிருக்கும் ஊடக வியாபரிகள்,மனித உரிமைக் காவலர்கள் -இவர்களுக்கெல்லாம் என்ன நடந்திருக்கும் என்றும் சற்று எண்ணிப் பாருங்கள்.நீங்கள் அடுத்த ஜெயலலிதாவாக ஆக வேண்டுமென்றால், அவர் செய்திருக்கக்கூடிய செயல்களைச் செய்யுங்கள்.சான்றோர்கள் நடந்த தமிழ் நாட்டை,விஷக்கிருமிகளிடமிருந்து மீட்டுத் தாருங்கள்.
சிறுவர்கள் பெண்கள் தொடர்பாக நிகழ்ந்துள்ள அனைத்து நிகழ்வுகளிலும் இதேஅணுகுமுறையைக் கையாளுங்கள்.
தமிழ்நாடு ஆப்கானிஸ்தானாக மாறாமல் காத்துத் தாருங்கள்.
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு.
வந்தே மாதரம்.
Your observation and caution are timely Mr Amaruvi. You did sharply shear the ulterior motives and diabolical designs of leftists, pseudo-secularists and anti-nationals with appropriate events of the recent past and caution TN Government to exercise utmost vigilance over such sordid skunks and put an end to their nefarious activities.
LikeLike