The side that is not spoken about, generally.

‘என்னடா கார்த்தால நாலு மணிக்கு கூப்டிருக்கே?’ வாட்ஸப்ல் மிஸ்டு கால் கண்டு 7 மணிக்கு அழைத்தேன்.


‘ஒரு ஹெல்ப் வேணும்’ என்றான் முரளி சிகாகோவில் இருந்து. குரலில் கொஞ்சம் அவசரம் தெரிந்தது.


‘ஜூலைல மாமனாருக்கு சதாபிஷேகம் வெச்சிருந்தோம்’ என்று துவங்கினான்.


‘வரப்போறயா? வா வா. பார்த்து ரொம்ப நாளாச்சு’ என்றேன். 25 வருஷங்களுக்கு முன்னர் பம்பாயில் என் ரூம் மேட்.


‘இல்ல இப்பவே வரேன்… அதான் ஹெல்ப் வேணும்’ என்றான் மணிரத்னம் பாணியில்.
காத்திருந்தேன்.

‘சதாபிஷேகம் நடக்காது. மாமனார் போயிட்டார். கொஞ்ச நாள்ல மாமியாரும் போயிட்டா’ என்றான் குரலில் தடுமாற்றத்துடன்.


காத்திருந்தேன்.


‘மாமியார் பாடிய மார்ச்சுவரில ரெண்டு மூணு நாள் வெக்கணும். ஒய்ஃப் இந்தியா வந்திருக்கா. மச்சினன் எல்லாம் இந்தியாவுக்கு வந்துண்டிருக்கா. அது வரைக்கும் எடம் வேணும். உனக்கு யாரையவது தெரியுமா?’ என்றான்.


‘ஹோட்டலில் ரூம் போட்டு வை, பேயிங் கெஸ்ட் அரேஞ்ச் பண்ண முடியுமா?’ என்பது போல் இதுவும் ஆகிவிட்டது.


என்ன கொடுமை இது? இரண்டு மாதத்தில் சதாபிஷேகம். இப்போது இருவருமே இல்லை.


‘என்னடா பேச்சே இல்லை?’ அவன் கேட்டதில் நியாயம் இருந்தது.


‘கோவிட் ?’ என்றேன்.


‘தெரியல. டெஸ்ட் எடுத்திருக்காங்க. முடியுமா?’ என்றான்.


‘கோவிட் இல்லேன்னா முயற்சி பண்ணலாம்’ என்று அடுத்த செயல்கள் பற்றி யோசித்தேன்.


ஆபத்பாந்தவன் சங்கம் தான். மருத்துவச்சேவையில் உள்ள ஸ்வயம்சேவக் ஒருவரை அழைத்து உதவி வேண்டினேன். பொறுமையாகக் கேட்ட அவர் ‘அவங்களக் கவலைப் பட வேண்டாம்னு சொல்லுங்க’ என்றார்.


தெய்வாதீனமாகக் கோவிட் இல்லை.


யார் யாரையோ பிடித்து, எங்கெல்லாமோ சொல்லி, இரண்டு நாட்கள் மார்ச்சுவரியில் காத்து, நேற்று கரையேறினார் கிருஷ்ணனின் மாமியார்.


முன்களப் பணியாளர்கள் என்பவர்கள் இந்தச் சங்கிலியில் உள்ள அனைவருமே தான். மார்ச்சுவரி ஊழியர்கள், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், குப்பை அள்ளுபவர்கள், காவல் துறையினர் என்று நேரடி மருத்துவம் சாராத இத்தனைப் பிணைப்புகள் உள்ள சங்கிலி அது.


அந்தச் சங்கிலிக்கு வணக்கம்.

3 responses

  1. Ushasedhadri Avatar
    Ushasedhadri

    🙏

    Like

  2. Ravichandran R Avatar
    Ravichandran R

    இது மாதிரியான நேரத்தில்…..இதுபோன்ற…பணியாளர்களின்….பங்களிப்பு…எவ்வளவு மதிப்பு வாய்ந்தது….என்று…அந்த இக்கட்டை அனுபவித்தவர்கள் மட்டுமே அறிவர்!

    Like

    1. Amaruvi's Aphorisms Avatar

      True. It was a troublesome experience

      On Sun, May 30, 2021, 5:23 PM Amaruvi's Aphorisms wrote:

      >

      Like

Leave a reply to Amaruvi’s Aphorisms Cancel reply