6ம் வகுப்பிற்கான விடியல் அறிவியல் + விடியாத கணித + சமூக அறிவியல் வினாத்தாள். நன்றி : படாத பாடு படுத்தும் தீராவிடப் பங்கு நூல் நிறுவனம்.
1. விஞ்ஞான ஊழல் என்றால் என்ன? சர்க்காரியாவுக்கும் சர்க்கரைக்கும் என்ன தொடர்பு ?
2. ஒரு எறும்பு ஒரு சர்க்கரைத் துகளை உண்ண 2 மணி நேரம் ஆகும் எனில், ஒரு மூட்டையில் உள்ள சர்க்கரையை உண்ண 10 எறும்புகளுக்கு எத்தனை நாட்களாகும் ?
3. கரையான் கூட்டம் ஒரு சர்க்கரைப் பையை உண்ண ஒரு வாரம் ஆகுமெனில், நாலாயிரம் சர்க்கரைப் பைகளை உண்ண எத்தனை நாட்களாகும்? அத்தனை பைகளையும் ஒரு மாதத்தில் உண்டுவிட்டால் கரையான் கூட்டத்தில் எத்தனை கரையான்கள் இருக்கும்?
4. சாதாரண மீனாலேயே உயிர் வாழ முடியாத, எப்போதும் நின்றுகொண்டேயிருக்கும் நதி ஒன்றில் ஒரே ஒரு முதலை வாழ்கிறது என்பதைக் கொண்டு நாம் என்ன புரிந்துகொள்ள வேண்டும்?
5. உண்டு செரிப்பதற்கு 3 மணி நேரம் ஆகும் எனில், அரை மணி நேரம் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதில் உள்ள அறிவியல் கோட்பாடு யாது?
6. ரயில் ஓடாத போது தண்டவாளத்தில் தலை வைத்தால் தலைக்குள் இருப்பது என்ன ?
7. ‘வரும் ஆனா வராது’ என்பதற்கும் ‘விலையைக் குறைப்பேன். ஆனால் தேதி சொல்ல மாட்டேன்’ என்பதற்கும் உள்ள ஒற்றுமைகள் யாவை ?
8. காலஞ்சென்ற தலைவர்களின் நினைவிடங்களில், அவர்கள் பிறந்த, இறந்த நாட்களில் ஏற்படும் பகுத்தறிவு அறிவியல் மாற்றங்கள் யாவை?
9. மே 7, 2021 முதல் அணில்கள் பல்கிப்பெருகியதற்கான காராணங்கள் யாவை?
10. கேள்வி எழுதியவருக்கே கேள்வி புரியவில்லை என்பதால் இந்தக் கேள்விக்கான விடையை ‘பகுத்தறிவு’ என்று எழுதவும். எழுதாவிட்டாலும் மதிப்பெண் உண்டு.
பிகு: பதில்கள் அனைத்திலும் #அவியல் என்று குறிப்பிட்டு எழுதவும்.
Smashing Satire !!! But the persons implicitly referred to would remain preposterously intransigent and incorrigible and keep hoodwinking the gullible masses. What can not be cured has to be endured. That is the horrible situation TN is in for over 5 decades.
LikeLike
சார், பாத்து ‘போஸ்ட்’ பண்ணுங்க…யாரோட ஆட்சின்னு பாத்து ….போஸ்ட் …பண்ணுங்க!
LikeLike