‘மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு செய்ய கூடுதல் கட்டணம்’ என்று பஹுத்-அறிவு விடியல் அரசு அறிவித்துள்ளதாம்.
உண்மையெனில், அவ்வறிவு இல்லாததால், அசட்டு அம்மாஞ்சியின் கேள்விகள்:
1. நாட்களுக்கு மங்கலம் உண்டு என்று விடியல் நம்புகிறதா?
2. ஆடிப்பெருக்கன்று பதிவு செய்யும் மாற்று மதத்தினருக்கும் அதிகக் கட்டணம் உண்டா? உண்டெனில் அவர்களும் மங்கலத்தை நம்புகிறார்கள் என்று கொள்ளலாமா?
3. மங்கலம் இந்து மத மங்கலம் மட்டுமா? ஈத், கிறிஸ்துமஸ் முதலியவை மங்கலம் கொண்டவையா? இல்லை என்று சொல்ல அரசுக்குத் திராணி உண்டா?
4. மங்கல நாள் அன்று அதிகக் கட்டணம் சரி எனில், சாதாரண நாட்களில் குறைந்த கட்டணம் உண்டா?5. அமங்கலமான நாட்களில் பதிவு செய்தால் இலவசமா?
6. அமங்கல நாளில், ராகு காலத்தில் பதிந்தால், அரசு பணம் கொடுக்குமா?
7. விடியற்காலை, பிரும்ம முஹூர்த்தத்தில் பதிந்தால் கட்டணம் எவ்வளவு?
8. ராகு காலம், குளிகை என்று பகுத்தறிவு அரசு, பஞ்சாங்கம் வெளியிடுமா?
9. சார்பதிவாளராக இந்து அல்லாதவர் இருந்தால் அவரும் இதனைக் கடைப்பிடிப்பாரா? ஆமெனில், மத சுதந்திரத்தில் தலையிடுவதாக ஆகாதா?
10. பேரறிஞர் பிறந்தநாள், முத்தமிழ் வித்தகர் பிறந்த நாள் முதலானவை நல்ல நாட்களா? அன்று பத்திரப் பதிவுக்கு என்ன செலவு? அந்த நாட்களில் பிரதமை வந்தால் என்ன செய்வது?
11. அஸ்வினி முதலான நட்சத்திரங்களைத் தொகுத்து, எந்தெந்த நட்சத்திரங்களுக்கு என்ன கட்டணம் என்றும் சொல்லுமா #பகுத்தறிவு அரசு?
12. பத்திரப் பதிவு செய்பவர் நட்சத்திரமும், அன்றைய நட்சத்திரமும் பார்த்து, யோகமும் ஒத்து இருந்தால், கட்டணம் யாது?
13. பதிவு செய்பவர் ஜாதகமும் கொண்டு வர வேண்டுமா?
14. பதிவு செய்பவர் ஜாதகத்துடன் பஞ்சாங்கமும் கொண்டுவர வேண்டுமா? ஆமெனில் திருக்கணிதமா, பாம்பு பஞ்சாங்கமா?
15. பதிவு அலுவலகத்தில் பிள்ளையார் கோவில் உண்டா? தேங்காய் உடைத்து, அர்ச்சனை செய்ய அனைத்து சாதி அர்ச்சகர்கள் பணியில் இருப்பார்களா?
16. பதிவு அலுவலகங்கள் ‘அருள்மிகு மஹாகணபதி பத்திரப் பதிவு அலுவலகம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்படுமா?
17. பதிவு அலுவலகத்தில் உள்ள பிள்ளையார் கோவில்களில் வசூல் பெருகினால், இந்து அறம் நிலையாத்துறை எடுத்துக் கொள்ளுமா?
18. இ.அ.நி. துறை, பத்திரப் பதிவு அலுவலகத்தையும் எடுத்துக் கொள்ளுமா?
19. அப்படி எடுத்துக் கொண்டால், அரசு நியமனம் பெற்ற அர்ச்சகர்கள் சார் பதிவாளர்களாகப் பணியில் அமர்த்தப்படுவார்களா?
விடியல் #பகுத்தறிவு விடையளித்தால் திடலுக்குப் புண்ணியமாகப் போகும்.
உங்களுக்கு கிண்டல் ஜாஸ்தி தான்! ஆனாலும்..உங்கள் சந்தேகங்கள்…..சரியென்றே நினைக்கிறேன்! அவர்களின்…திருமுகத்தை….இதுபோன்ற தருணங்களில்தான்…..தோலுரித்துக் காட்ட வேண்டும்!
LikeLike