தென்காசியில் இருந்த அந்த இளைஞன் தீக்ஷை வைத்திருந்தான்.
பெண் குழந்தை பிறந்து இறந்த விஷயம் தெரியாமல் வேலையாக இருந்த அவனிடம் தந்தையார் ‘புண்யாகவாசனம் பண்ணனும். ஊருக்கு வா’ என்று அழைக்கிறார்.’இப்போ என்னால எங்குமே வர முடியாது. புண்யாகவாசனமாம், புண்யாகவாசனம்’
‘அப்படிச் சொல்லலாமா? உனக்குக் குழந்த செத்துப் போனதுக்கு, குழந்தைக்கு அப்பா நீ தான் புண்யாகவாசனம் பண்ணனும். ஊருக்கு வா”அப்படியா. நானும் செத்துப் போயிட்டேன்னு நினைச்சு, எனக்கும் சேர்த்து அதையும் நீங்களே பண்ணிடுங்கோ’
‘எதுக்குடா இப்பிடி அபசகுனமா சொல்லற? ஊருக்கு வா. வந்து தீக்ஷைய க்ஷவரம் ப்ண்ணிக்க வேணும்’
‘அப்பா, நான் இதைக் கர்ப்ப தீக்ஷையாக வளர்க்கவில்லை. இந்த வெள்ளைக்காரன்களை நம் பாரத நாட்டை விட்டே துரத்தி, நம் பாரத தேசம் சுதந்திரம் அடையவே வளர்த்த சுப தீக்ஷை. அந்தக் காரியம் நிறைவேறும் வரையில் இதனை எடுக்கப் போவதில்லை. இது சத்தியம்’
அந்த மகன் வீர வாஞ்சிநாதன்.
நூல்: வீர வாஞ்சி. ஆசிரியர்: ரகமி. ரூ: 100.
நூல் வேண்டுவோர் இந்த எண்ணில் அழைக்கவும்: நரசிம்மன் +91-63812-30158 நூல் விலையில் ஒரு பகுதி, காணிக்கையாக, ஆசிரியரின் மனைவிக்குச் சென்று சேர்கிறது.